அத்தியாயம் – 5
அவன் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்த ஜெயாவின் மனம் சொல்லமுடியாத ஒரு உணர்வில் சிக்கித்தவிக்க, ‘இது என்ன மனசு இப்படி அடிச்சுக்குது..’ என்று யோசித்தவளுக்கு அதற்கான காரணம் புரியவே இல்லை..
அவன் சென்றதும் கடைக்காரப் பெரியவர் வந்துவிட, “என்னம்மா ரொம்ப லெட் பண்ணிட்டேனா..?” என்றவர் புன்னகையோடு கேட்க, “ஐயோ அதெல்லாம் இல்லப்பா..” என்றாள் ஜெயா..
“சரிப்பா நாங்க கிளம்பறோம்..” என்ற ஜெயா சொல்ல, “இனிமேல் கொஞ்சம் கவனமாக இருங்க அப்பா..” என்றாள் ருக்மணி.. இருவரின் அக்கறையும் அவரின் உள்ளத்தைத் தொட்டது..
“நீங்க இருவரும் ஒரு நிமிஷம் நில்லுங்க..” என்றவர் கடையின் உள்ளே சென்றார்.. அவர் செல்வதை பார்த்த ஜெயா, ”எதுக்கு இப்போ உள்ளே போறாரு..” என்றவள் கேள்வியாக புருவம் உயர்த்திட, “எனக்கு என்ன தெரியும்..” என்று உதட்டைப் பிதுக்கினாள் ருக்மணி..
அதற்குள் உள்ளே சென்றவர் திரும்பி வந்து, “உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குமா.. எனக்கு பெண் குழந்தை இல்ல..” என்றவர் சொல்ல, “எங்களை உங்களோட பொண்ணாக நினைச்சுகோங்க..” என்றாள் ஜெயா வேகமாக..
அவள் சொன்னதைக் கேட்டு அவரின் உதட்டில் புன்னகை அரும்பிட, “இருவரும் கையை நீட்டுங்க..” என்று சொல்ல, “எதுக்குப்பா..” என்று புரியாமல் கேட்டாள் ருக்மணி..
“அப்பா சொன்னால் கேட்கணும்..” என்றவர் கண்டிப்போடு சொல்ல, “சரிப்பா..” என்ற ருக்மணி அவரின் முன்னே கையை நீட்டினாள்.. அவளின் கையில் ஒரு டைரியும், பேனாவையும் கொடுத்தார்.. ருக்மணி அதை சந்தோசமாக வாங்கிக் கொண்டாள்..
அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே, “அப்பா எனக்கு என்ன கொடுக்க போறீங்க..” என்று உரிமையோடு கேட்டாள் ஜெயா..
சிலநொடி முன்னே அறிமுகமான அந்த பெரியவர், அடுத்த சிலநொடியில் தோழியர் இருவருக்கும் தந்தையாக மாறிப்போனார்..
அவளின் கையிலும் அவர் ஒரு டைரியும் பேனாவைக் கொடுக்க, “இது என்னப்பா இருவருக்கும் ஒரே மாதிரி கொடுக்கிறீங்க..” என்று ருக்மணி அந்த பெரியவரிடம் விளக்கம் கேட்டாள்..
அவளின் கேள்வியில் அவர் வாய்விட்டுச் சிரிக்க, “என்னப்பா சிரிக்கிறீங்க..” என்று ருக்மணி அவரிடம் கேட்டாள்.. ஜெயாவோ அவரை புரியாத பார்வை பார்த்தாள்..
“இந்த பேனாவும், டைரியும் ஒருவரோட வாழ்க்கையை புரட்டிப்போடும்.. இந்த இரண்டு பொருளையும் உபயோகிக்கும் பொழுது ரொம்பவே கவனமாக இருக்கணும்..” என்றவர் சொல்ல அவர்கள் இருவரும் அதை பொறுமையுடன் கேட்டனர்..
“இந்த டைரி ஒருவரின் குணத்தை நமக்கு வெளிச்சம் போட்டு கட்டும் வல்லமை படைத்தது.. இந்த பேனாவை விளையாட்டாக நினைக்கக்கூடாது.. ஒருவரோட உயிரை எடுக்கும் வலிமை இதனிடம் இருக்கிறது..” என்றவர் தொடர்ந்து,
“நீங்க இருவரும் ரொம்ப குழப்பத்தில் இருக்கும் பொழுது டைரி எழுங்க.. அது உங்களோட மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியை போலவே..” என்றவர் சொல்ல,
“இதில் இத்தனை இருக்கா..” என்று ருக்மணி யோசித்தாள்.. ஜெயாவோ, ‘இது நம்ம வாழ்க்கைக்கு எப்பொழுதாவது பயன்படலாம்..’ என்ற நினைவில் அவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்தாள்..
“ஒவ்வொரு முறை பேனாவை எடுக்கும் பொழுதும் கவனம்.. நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒருவரோட நன்மையையும், இன்னொருவரின் தீமையும் அடங்கி இருக்கு..” என்றவர் வாழ்க்கையைப் பற்றி தெளிவாகக் கூறினார்..
“இந்த டைரியும், பேனாவும் உங்களுக்கு அப்பா கொடுக்கும் பரிசு..” என்றவர் சொல்ல, “தேங்க்ஸ்பா..” என்ற இருவரும் அவரிடம் இருந்து விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார்கள்..
அங்கிருந்து வெளியே சென்ற மறுநொடியே, “ஜெயா எனக்கு ரொம்ப பசிக்குது வா நம்ம முதலில் போய் சாப்பிட்டுவிட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்..” என்றாள் ருக்மணி..
“சரி ருக்கு.. ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்..” என்ற ஜெயாவும் அவளோடு இணைந்து நடந்தாள்..
சிறிதுநேரம் மெளனமாக செல்ல, “ஜெயா நான் ஒன்று கேட்பேன்..” என்றவள் சொல்ல, “என்ன வேண்டும் கேளு.. என்னால் முடிந்தால் வாங்கித் தரேன்..” என்றாள் ஜெயா புன்னகையோடு..
“எனக்கு ஒரு கவிதை மட்டும் எழுதிக்கொடு..” என்றவள் சொல்ல அவளை வினோதமாக பார்த்தாள் ஜெயா..
அவளின் பார்வையின் பொருள் அறிந்த ருக்மணியோ, “முதல் எதிரி என்ற தலைப்பில் எழுதிக்கொடு..” என்றாள்..
அவள் சொன்ன தலைப்பைக் கேட்ட ஜெயாவிற்கு சிரிப்பு வந்துவிட, “இது என்னடி இப்படியொரு தலைப்பு சொல்ற..” என்று அவளிடமே விளக்கமும் கேட்டாள்..
“நான்தானே உன்னோட முதல் எதிரி.. அப்போ அந்த தலைப்பில்தான் எனக்கு கவிதை வேண்டும்..” என்றவள் ஜெயாவின் கையில் அவளோட புத்தகத்தை கொடுத்து, “இதோட லாஸ்ட் பெஜ்ஜில் எழுதிகொடு.. இப்பொழுதே..” என்று அடம்பிடித்தாள்..
“ஏய் என்னடி இப்படி திடீரென கேட்டால் நான் என்ன எழுதுவது..?” என்று பாவமாகக் கேட்டாள் ஜெயா..
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. எனக்கு இப்பொழுதே ஒரு கவிதை எழுதிக்கொடு..” என்று குழந்தை போல அடம்பித்தாள் ருக்மணி..
‘இனி சொன்னாலும் என்ன சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள்..’ என்று அவளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்த ஜெயா, “சரி எழுதி தருகிறேன்.. சரியான அடமென்ட்..” என்று சொல்லிவிட்டு பேனாவை கையில் எடுத்தாள்..
“நான் சூரியனாக இருந்தால் நிலாவான
நீயே எனக்கு முதல் எதிரி..
நான் தீயென இருந்தால் நீரான
நீயே எனக்கு முதல் எதிரி..
நான் கீரியாக இருந்தால் பாம்பே
நீயே எனக்கு முதல் எதிரி..
என் உயிர் தோழியான நீதானடி
எனக்கு முதல் எதிரியே..
தோழி என்றால் தூண்டுகோல்..
நீ தூண்டிவிட்ட தீபம் இன்று
சுடரென மாறி ஜோதியாக ஜொலிக்க
தோழியான நீதான் காரணம்..
எல்லோருக்கும் முதல் எதிரி
தோழியாக கிடைத்தால் போதுமடி..
வாழ்க்கையில் பயணத்தில் கிடைக்குமடி
பெண்ணே ஓர் வெற்றிப்பாதை..
முதல் எதிரியே உன் தூண்டுதலால்
உருவானதடி ஒரு பனிமலர் கவிதை..
என் உயிர் தோழியே..
நீயே என் முதல் எதிரியடி..” என்றவள் கவிதை எழுதி அதன் கீழே, “தமிழரசியாக நான் உருவாக என்னுயிர் தோழியே நீயே காரணமடி..” என்று எழுதி அதன் கீழே, “தமிழரசி என்ற ஜெயக்கொடி..” என்று கையெழுத்து போட்டு ருக்மணியின் கையில் கொடுத்தாள்..
அதை வாங்கிப் படித்த ருக்மணி, “என்னோட பேபி கவிதை சூப்பர்.. நான் தான் உன்னோட உயிர் தோழி அண்ட் முதல் எதிரி.. லவ் யூ சோ மச் ஜெயா..” என்றாள் ருக்மணி குஷியாக..
“சரிடி வா சாப்பிடலாம்.. உன்னோட சேட்டை எல்லாம் இப்பொழுது உன்னை மாதிரியே வளர்ந்துகொண்டே போகிறது..” என்றவள் ஹோட்டலின் உள்ளே நுழையா அவளை பின் தொடர்ந்தாள் ருக்மணி..
“நான் போய் கை கழுவிட்டு வருகிறேன்.. இந்த இந்த புத்தகத்தை வைத்திரு.. மிஸ் பண்ணிவிடாதே ருக்மணி..” என்றவள் கைகழுவும் இடத்திற்கு சென்றாள்.. ருக்மணி அங்கேயே அவளுக்காக காத்திருந்தாள்..
அவன் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்த ஜெயாவின் மனம் சொல்லமுடியாத ஒரு உணர்வில் சிக்கித்தவிக்க, ‘இது என்ன மனசு இப்படி அடிச்சுக்குது..’ என்று யோசித்தவளுக்கு அதற்கான காரணம் புரியவே இல்லை..
அவன் சென்றதும் கடைக்காரப் பெரியவர் வந்துவிட, “என்னம்மா ரொம்ப லெட் பண்ணிட்டேனா..?” என்றவர் புன்னகையோடு கேட்க, “ஐயோ அதெல்லாம் இல்லப்பா..” என்றாள் ஜெயா..
“சரிப்பா நாங்க கிளம்பறோம்..” என்ற ஜெயா சொல்ல, “இனிமேல் கொஞ்சம் கவனமாக இருங்க அப்பா..” என்றாள் ருக்மணி.. இருவரின் அக்கறையும் அவரின் உள்ளத்தைத் தொட்டது..
“நீங்க இருவரும் ஒரு நிமிஷம் நில்லுங்க..” என்றவர் கடையின் உள்ளே சென்றார்.. அவர் செல்வதை பார்த்த ஜெயா, ”எதுக்கு இப்போ உள்ளே போறாரு..” என்றவள் கேள்வியாக புருவம் உயர்த்திட, “எனக்கு என்ன தெரியும்..” என்று உதட்டைப் பிதுக்கினாள் ருக்மணி..
அதற்குள் உள்ளே சென்றவர் திரும்பி வந்து, “உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குமா.. எனக்கு பெண் குழந்தை இல்ல..” என்றவர் சொல்ல, “எங்களை உங்களோட பொண்ணாக நினைச்சுகோங்க..” என்றாள் ஜெயா வேகமாக..
அவள் சொன்னதைக் கேட்டு அவரின் உதட்டில் புன்னகை அரும்பிட, “இருவரும் கையை நீட்டுங்க..” என்று சொல்ல, “எதுக்குப்பா..” என்று புரியாமல் கேட்டாள் ருக்மணி..
“அப்பா சொன்னால் கேட்கணும்..” என்றவர் கண்டிப்போடு சொல்ல, “சரிப்பா..” என்ற ருக்மணி அவரின் முன்னே கையை நீட்டினாள்.. அவளின் கையில் ஒரு டைரியும், பேனாவையும் கொடுத்தார்.. ருக்மணி அதை சந்தோசமாக வாங்கிக் கொண்டாள்..
அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே, “அப்பா எனக்கு என்ன கொடுக்க போறீங்க..” என்று உரிமையோடு கேட்டாள் ஜெயா..
சிலநொடி முன்னே அறிமுகமான அந்த பெரியவர், அடுத்த சிலநொடியில் தோழியர் இருவருக்கும் தந்தையாக மாறிப்போனார்..
அவளின் கையிலும் அவர் ஒரு டைரியும் பேனாவைக் கொடுக்க, “இது என்னப்பா இருவருக்கும் ஒரே மாதிரி கொடுக்கிறீங்க..” என்று ருக்மணி அந்த பெரியவரிடம் விளக்கம் கேட்டாள்..
அவளின் கேள்வியில் அவர் வாய்விட்டுச் சிரிக்க, “என்னப்பா சிரிக்கிறீங்க..” என்று ருக்மணி அவரிடம் கேட்டாள்.. ஜெயாவோ அவரை புரியாத பார்வை பார்த்தாள்..
“இந்த பேனாவும், டைரியும் ஒருவரோட வாழ்க்கையை புரட்டிப்போடும்.. இந்த இரண்டு பொருளையும் உபயோகிக்கும் பொழுது ரொம்பவே கவனமாக இருக்கணும்..” என்றவர் சொல்ல அவர்கள் இருவரும் அதை பொறுமையுடன் கேட்டனர்..
“இந்த டைரி ஒருவரின் குணத்தை நமக்கு வெளிச்சம் போட்டு கட்டும் வல்லமை படைத்தது.. இந்த பேனாவை விளையாட்டாக நினைக்கக்கூடாது.. ஒருவரோட உயிரை எடுக்கும் வலிமை இதனிடம் இருக்கிறது..” என்றவர் தொடர்ந்து,
“நீங்க இருவரும் ரொம்ப குழப்பத்தில் இருக்கும் பொழுது டைரி எழுங்க.. அது உங்களோட மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியை போலவே..” என்றவர் சொல்ல,
“இதில் இத்தனை இருக்கா..” என்று ருக்மணி யோசித்தாள்.. ஜெயாவோ, ‘இது நம்ம வாழ்க்கைக்கு எப்பொழுதாவது பயன்படலாம்..’ என்ற நினைவில் அவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்தாள்..
“ஒவ்வொரு முறை பேனாவை எடுக்கும் பொழுதும் கவனம்.. நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒருவரோட நன்மையையும், இன்னொருவரின் தீமையும் அடங்கி இருக்கு..” என்றவர் வாழ்க்கையைப் பற்றி தெளிவாகக் கூறினார்..
“இந்த டைரியும், பேனாவும் உங்களுக்கு அப்பா கொடுக்கும் பரிசு..” என்றவர் சொல்ல, “தேங்க்ஸ்பா..” என்ற இருவரும் அவரிடம் இருந்து விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார்கள்..
அங்கிருந்து வெளியே சென்ற மறுநொடியே, “ஜெயா எனக்கு ரொம்ப பசிக்குது வா நம்ம முதலில் போய் சாப்பிட்டுவிட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்..” என்றாள் ருக்மணி..
“சரி ருக்கு.. ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்..” என்ற ஜெயாவும் அவளோடு இணைந்து நடந்தாள்..
சிறிதுநேரம் மெளனமாக செல்ல, “ஜெயா நான் ஒன்று கேட்பேன்..” என்றவள் சொல்ல, “என்ன வேண்டும் கேளு.. என்னால் முடிந்தால் வாங்கித் தரேன்..” என்றாள் ஜெயா புன்னகையோடு..
“எனக்கு ஒரு கவிதை மட்டும் எழுதிக்கொடு..” என்றவள் சொல்ல அவளை வினோதமாக பார்த்தாள் ஜெயா..
அவளின் பார்வையின் பொருள் அறிந்த ருக்மணியோ, “முதல் எதிரி என்ற தலைப்பில் எழுதிக்கொடு..” என்றாள்..
அவள் சொன்ன தலைப்பைக் கேட்ட ஜெயாவிற்கு சிரிப்பு வந்துவிட, “இது என்னடி இப்படியொரு தலைப்பு சொல்ற..” என்று அவளிடமே விளக்கமும் கேட்டாள்..
“நான்தானே உன்னோட முதல் எதிரி.. அப்போ அந்த தலைப்பில்தான் எனக்கு கவிதை வேண்டும்..” என்றவள் ஜெயாவின் கையில் அவளோட புத்தகத்தை கொடுத்து, “இதோட லாஸ்ட் பெஜ்ஜில் எழுதிகொடு.. இப்பொழுதே..” என்று அடம்பிடித்தாள்..
“ஏய் என்னடி இப்படி திடீரென கேட்டால் நான் என்ன எழுதுவது..?” என்று பாவமாகக் கேட்டாள் ஜெயா..
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. எனக்கு இப்பொழுதே ஒரு கவிதை எழுதிக்கொடு..” என்று குழந்தை போல அடம்பித்தாள் ருக்மணி..
‘இனி சொன்னாலும் என்ன சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள்..’ என்று அவளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்த ஜெயா, “சரி எழுதி தருகிறேன்.. சரியான அடமென்ட்..” என்று சொல்லிவிட்டு பேனாவை கையில் எடுத்தாள்..
“நான் சூரியனாக இருந்தால் நிலாவான
நீயே எனக்கு முதல் எதிரி..
நான் தீயென இருந்தால் நீரான
நீயே எனக்கு முதல் எதிரி..
நான் கீரியாக இருந்தால் பாம்பே
நீயே எனக்கு முதல் எதிரி..
என் உயிர் தோழியான நீதானடி
எனக்கு முதல் எதிரியே..
தோழி என்றால் தூண்டுகோல்..
நீ தூண்டிவிட்ட தீபம் இன்று
சுடரென மாறி ஜோதியாக ஜொலிக்க
தோழியான நீதான் காரணம்..
எல்லோருக்கும் முதல் எதிரி
தோழியாக கிடைத்தால் போதுமடி..
வாழ்க்கையில் பயணத்தில் கிடைக்குமடி
பெண்ணே ஓர் வெற்றிப்பாதை..
முதல் எதிரியே உன் தூண்டுதலால்
உருவானதடி ஒரு பனிமலர் கவிதை..
என் உயிர் தோழியே..
நீயே என் முதல் எதிரியடி..” என்றவள் கவிதை எழுதி அதன் கீழே, “தமிழரசியாக நான் உருவாக என்னுயிர் தோழியே நீயே காரணமடி..” என்று எழுதி அதன் கீழே, “தமிழரசி என்ற ஜெயக்கொடி..” என்று கையெழுத்து போட்டு ருக்மணியின் கையில் கொடுத்தாள்..
அதை வாங்கிப் படித்த ருக்மணி, “என்னோட பேபி கவிதை சூப்பர்.. நான் தான் உன்னோட உயிர் தோழி அண்ட் முதல் எதிரி.. லவ் யூ சோ மச் ஜெயா..” என்றாள் ருக்மணி குஷியாக..
“சரிடி வா சாப்பிடலாம்.. உன்னோட சேட்டை எல்லாம் இப்பொழுது உன்னை மாதிரியே வளர்ந்துகொண்டே போகிறது..” என்றவள் ஹோட்டலின் உள்ளே நுழையா அவளை பின் தொடர்ந்தாள் ருக்மணி..
“நான் போய் கை கழுவிட்டு வருகிறேன்.. இந்த இந்த புத்தகத்தை வைத்திரு.. மிஸ் பண்ணிவிடாதே ருக்மணி..” என்றவள் கைகழுவும் இடத்திற்கு சென்றாள்.. ருக்மணி அங்கேயே அவளுக்காக காத்திருந்தாள்..