• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamilarasiyin Kathirazhaki! - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 5

அவன் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்த ஜெயாவின் மனம் சொல்லமுடியாத ஒரு உணர்வில் சிக்கித்தவிக்க, ‘இது என்ன மனசு இப்படி அடிச்சுக்குது..’ என்று யோசித்தவளுக்கு அதற்கான காரணம் புரியவே இல்லை..

அவன் சென்றதும் கடைக்காரப் பெரியவர் வந்துவிட, “என்னம்மா ரொம்ப லெட் பண்ணிட்டேனா..?” என்றவர் புன்னகையோடு கேட்க, “ஐயோ அதெல்லாம் இல்லப்பா..” என்றாள் ஜெயா..

“சரிப்பா நாங்க கிளம்பறோம்..” என்ற ஜெயா சொல்ல, “இனிமேல் கொஞ்சம் கவனமாக இருங்க அப்பா..” என்றாள் ருக்மணி.. இருவரின் அக்கறையும் அவரின் உள்ளத்தைத் தொட்டது..

“நீங்க இருவரும் ஒரு நிமிஷம் நில்லுங்க..” என்றவர் கடையின் உள்ளே சென்றார்.. அவர் செல்வதை பார்த்த ஜெயா, ”எதுக்கு இப்போ உள்ளே போறாரு..” என்றவள் கேள்வியாக புருவம் உயர்த்திட, “எனக்கு என்ன தெரியும்..” என்று உதட்டைப் பிதுக்கினாள் ருக்மணி..

அதற்குள் உள்ளே சென்றவர் திரும்பி வந்து, “உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குமா.. எனக்கு பெண் குழந்தை இல்ல..” என்றவர் சொல்ல, “எங்களை உங்களோட பொண்ணாக நினைச்சுகோங்க..” என்றாள் ஜெயா வேகமாக..

அவள் சொன்னதைக் கேட்டு அவரின் உதட்டில் புன்னகை அரும்பிட, “இருவரும் கையை நீட்டுங்க..” என்று சொல்ல, “எதுக்குப்பா..” என்று புரியாமல் கேட்டாள் ருக்மணி..

“அப்பா சொன்னால் கேட்கணும்..” என்றவர் கண்டிப்போடு சொல்ல, “சரிப்பா..” என்ற ருக்மணி அவரின் முன்னே கையை நீட்டினாள்.. அவளின் கையில் ஒரு டைரியும், பேனாவையும் கொடுத்தார்.. ருக்மணி அதை சந்தோசமாக வாங்கிக் கொண்டாள்..

அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே, “அப்பா எனக்கு என்ன கொடுக்க போறீங்க..” என்று உரிமையோடு கேட்டாள் ஜெயா..

சிலநொடி முன்னே அறிமுகமான அந்த பெரியவர், அடுத்த சிலநொடியில் தோழியர் இருவருக்கும் தந்தையாக மாறிப்போனார்..

அவளின் கையிலும் அவர் ஒரு டைரியும் பேனாவைக் கொடுக்க, “இது என்னப்பா இருவருக்கும் ஒரே மாதிரி கொடுக்கிறீங்க..” என்று ருக்மணி அந்த பெரியவரிடம் விளக்கம் கேட்டாள்..

அவளின் கேள்வியில் அவர் வாய்விட்டுச் சிரிக்க, “என்னப்பா சிரிக்கிறீங்க..” என்று ருக்மணி அவரிடம் கேட்டாள்.. ஜெயாவோ அவரை புரியாத பார்வை பார்த்தாள்..

“இந்த பேனாவும், டைரியும் ஒருவரோட வாழ்க்கையை புரட்டிப்போடும்.. இந்த இரண்டு பொருளையும் உபயோகிக்கும் பொழுது ரொம்பவே கவனமாக இருக்கணும்..” என்றவர் சொல்ல அவர்கள் இருவரும் அதை பொறுமையுடன் கேட்டனர்..

“இந்த டைரி ஒருவரின் குணத்தை நமக்கு வெளிச்சம் போட்டு கட்டும் வல்லமை படைத்தது.. இந்த பேனாவை விளையாட்டாக நினைக்கக்கூடாது.. ஒருவரோட உயிரை எடுக்கும் வலிமை இதனிடம் இருக்கிறது..” என்றவர் தொடர்ந்து,

“நீங்க இருவரும் ரொம்ப குழப்பத்தில் இருக்கும் பொழுது டைரி எழுங்க.. அது உங்களோட மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியை போலவே..” என்றவர் சொல்ல,

“இதில் இத்தனை இருக்கா..” என்று ருக்மணி யோசித்தாள்.. ஜெயாவோ, ‘இது நம்ம வாழ்க்கைக்கு எப்பொழுதாவது பயன்படலாம்..’ என்ற நினைவில் அவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்தாள்..

“ஒவ்வொரு முறை பேனாவை எடுக்கும் பொழுதும் கவனம்.. நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒருவரோட நன்மையையும், இன்னொருவரின் தீமையும் அடங்கி இருக்கு..” என்றவர் வாழ்க்கையைப் பற்றி தெளிவாகக் கூறினார்..

“இந்த டைரியும், பேனாவும் உங்களுக்கு அப்பா கொடுக்கும் பரிசு..” என்றவர் சொல்ல, “தேங்க்ஸ்பா..” என்ற இருவரும் அவரிடம் இருந்து விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார்கள்..

அங்கிருந்து வெளியே சென்ற மறுநொடியே, “ஜெயா எனக்கு ரொம்ப பசிக்குது வா நம்ம முதலில் போய் சாப்பிட்டுவிட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்..” என்றாள் ருக்மணி..

“சரி ருக்கு.. ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்..” என்ற ஜெயாவும் அவளோடு இணைந்து நடந்தாள்..

சிறிதுநேரம் மெளனமாக செல்ல, “ஜெயா நான் ஒன்று கேட்பேன்..” என்றவள் சொல்ல, “என்ன வேண்டும் கேளு.. என்னால் முடிந்தால் வாங்கித் தரேன்..” என்றாள் ஜெயா புன்னகையோடு..

“எனக்கு ஒரு கவிதை மட்டும் எழுதிக்கொடு..” என்றவள் சொல்ல அவளை வினோதமாக பார்த்தாள் ஜெயா..

அவளின் பார்வையின் பொருள் அறிந்த ருக்மணியோ, “முதல் எதிரி என்ற தலைப்பில் எழுதிக்கொடு..” என்றாள்..

அவள் சொன்ன தலைப்பைக் கேட்ட ஜெயாவிற்கு சிரிப்பு வந்துவிட, “இது என்னடி இப்படியொரு தலைப்பு சொல்ற..” என்று அவளிடமே விளக்கமும் கேட்டாள்..

“நான்தானே உன்னோட முதல் எதிரி.. அப்போ அந்த தலைப்பில்தான் எனக்கு கவிதை வேண்டும்..” என்றவள் ஜெயாவின் கையில் அவளோட புத்தகத்தை கொடுத்து, “இதோட லாஸ்ட் பெஜ்ஜில் எழுதிகொடு.. இப்பொழுதே..” என்று அடம்பிடித்தாள்..

“ஏய் என்னடி இப்படி திடீரென கேட்டால் நான் என்ன எழுதுவது..?” என்று பாவமாகக் கேட்டாள் ஜெயா..

“அதெல்லாம் எனக்கு தெரியாது.. எனக்கு இப்பொழுதே ஒரு கவிதை எழுதிக்கொடு..” என்று குழந்தை போல அடம்பித்தாள் ருக்மணி..

‘இனி சொன்னாலும் என்ன சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள்..’ என்று அவளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்த ஜெயா, “சரி எழுதி தருகிறேன்.. சரியான அடமென்ட்..” என்று சொல்லிவிட்டு பேனாவை கையில் எடுத்தாள்..

நான் சூரியனாக இருந்தால் நிலாவான

நீயே எனக்கு முதல் எதிரி..

நான் தீயென இருந்தால் நீரான

நீயே எனக்கு முதல் எதிரி..

நான் கீரியாக இருந்தால் பாம்பே

நீயே எனக்கு முதல் எதிரி..

என் உயிர் தோழியான நீதானடி

எனக்கு முதல் எதிரியே..

தோழி என்றால் தூண்டுகோல்..

நீ தூண்டிவிட்ட தீபம் இன்று

சுடரென மாறி ஜோதியாக ஜொலிக்க

தோழியான நீதான் காரணம்..

எல்லோருக்கும் முதல் எதிரி

தோழியாக கிடைத்தால் போதுமடி..

வாழ்க்கையில் பயணத்தில் கிடைக்குமடி

பெண்ணே ஓர் வெற்றிப்பாதை..

முதல் எதிரியே உன் தூண்டுதலால்

உருவானதடி ஒரு பனிமலர் கவிதை..

என் உயிர் தோழியே..

நீயே என் முதல் எதிரியடி..” என்றவள் கவிதை எழுதி அதன் கீழே, “தமிழரசியாக நான் உருவாக என்னுயிர் தோழியே நீயே காரணமடி..” என்று எழுதி அதன் கீழே, “தமிழரசி என்ற ஜெயக்கொடி..” என்று கையெழுத்து போட்டு ருக்மணியின் கையில் கொடுத்தாள்..

அதை வாங்கிப் படித்த ருக்மணி, “என்னோட பேபி கவிதை சூப்பர்.. நான் தான் உன்னோட உயிர் தோழி அண்ட் முதல் எதிரி.. லவ் யூ சோ மச் ஜெயா..” என்றாள் ருக்மணி குஷியாக..

“சரிடி வா சாப்பிடலாம்.. உன்னோட சேட்டை எல்லாம் இப்பொழுது உன்னை மாதிரியே வளர்ந்துகொண்டே போகிறது..” என்றவள் ஹோட்டலின் உள்ளே நுழையா அவளை பின் தொடர்ந்தாள் ருக்மணி..

“நான் போய் கை கழுவிட்டு வருகிறேன்.. இந்த இந்த புத்தகத்தை வைத்திரு.. மிஸ் பண்ணிவிடாதே ருக்மணி..” என்றவள் கைகழுவும் இடத்திற்கு சென்றாள்.. ருக்மணி அங்கேயே அவளுக்காக காத்திருந்தாள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
புத்தககண்காட்சி நடக்கும் இடத்தைவிட்டு வெளியே வந்த பிரபாகரன் மதனுக்கு போன் பண்ணினான்.. அவன் போன் ரிங் போய்கொண்டே இருந்ததே தவிர அவன் எடுக்கவே இல்லை..

‘அம்மா கூட பேசிட்டு இருப்பான் போல.. அதன் போன் பண்ணியதை கவனக்காமல் இருந்திருப்பான்..’ என்று நினைத்தவன் மெல்ல நடக்க ஆரம்பித்தான்..

அப்பொழுது அவனின் எதிரே வந்த மதன், “என்னடா அந்தக்கவிதை புத்தகத்தை வாங்கிவிட்டாயா..?” என்று கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்த பிரபாகரன், “மதன் நீ எப்பொழுது இங்கே வந்தாய்..? அம்மா எப்படி இருக்காங்க..” என்று கேட்டான்..

“அம்மா நல்ல இருக்காங்க.. உன்னைத்தான் வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லி சொன்னாங்க.. ஆனால் நீ கூப்பிட்ட வரமாட்ட..” என்றவன் கோபம் போல சொல்ல, “என்னோட மனக்காயம் எனக்கு.. உன்னோட அம்மா தானே இன்னொரு நாள் வரும் பொழுது வந்து பார்க்கிறேன்..” என்றான் பிரபாகரன்..

அவனின் அந்த பதிலே மதனுக்கு வித்தியாசமாக இருந்தது.. பிரபா தன்னுடைய கொள்கையில் இருந்து கொஞ்சமும் தளர்ந்ததே கிடையாது.. ஆனால் இன்றோ அவன் வீட்டிற்கு வருவதாக சொன்னதே அவனுக்கு அதிசயமாக இருந்தது..

ஆனாலும் அதை வெளிக்காட்டாத மதன், “அதுதான் பிரபா நானும் அம்மாவிடம் சொல்லிட்டு வந்தேன்.. அடுத்த முறை வரும் பொழுது அவனைக் கட்டாயம் கூட்டிட்டு வருகிறேன் என்று சொல்லிட்டு அம்மாவிடம் நல்லா வாசவு வாங்கினேன்..” என்றான் புன்னகையோடு..

“அம்மா ரொம்ப வருத்தப்பட்டு இருப்பாங்க இல்ல..” என்ற பிரபாவின் மனதில் பரிமளத்தின் முகம் வந்து போக, “என்னோட அம்மா எப்பவும் சிரித்த முகமாக இருப்பாங்க அவங்களுக்கு கோபம் வந்தே நான் பார்க்கல..” என்றவனின் நினைவுகள் எங்கே சென்றது..

அவனின் மனநிலை அறிந்த மதனோ அமைதியாக இருந்தான்.. கொஞ்சநேரத்தில் தன்னை சமன்செய்து நிமிர்ந்த பிரபாகரன், “என்னோட அத்தையம்மா மாதிரி எனக்கு வர மனைவியும் இருக்கணும்..” என்றவன் சிரித்துக்கொண்டே சொல்ல,

“அப்போ இப்பொழுதே தேட ஆரம்பிக்கணும்.. அப்பொழுதுதான் உனக்கு இருபத்தியேழு வயதில் கல்யாணம் நடக்கும்.. கொஞ்சம் ரிஸ்க் இருந்தாலும் உனக்காக நானே போய் பொண்ணு தேடுகிறேன்..” என்ற மதன் முகத்தைப் பாவமாக வைத்துகொண்டு சொல்ல,

“டேய் நீ எனக்கு பொண்ணு பார்க்க போறீயா.. உன்னை அப்படி கற்பனை பண்ணி பார்க்கவே படு கேவலமாக இருக்கு மதன்..” என்றவன் சிரித்துக்கொண்டே சொல்ல மதன் அவனை முறைத்தான்..

“நிஜமாவே என்னோட எதிர்பார்ப்பு இது மட்டும்தான் மதன்.. என்னோடு அவள் அதிகமாக சண்டை போட்டாலும் பரவல்ல.. ஆனால் என்னைவிட்டு அவள் பிரிந்து மட்டும் போகவே கூடாது..” என்றவன் சீரியஸாக சொல்ல, “எல்லாம் நல்லாக நடக்கும் பிரபா..” என்றான் மதன்..

“ஆமா உன்னோட பனிமலரை நீ புத்தககண்காட்சியில் பார்த்தாயா இல்லையா..?” என்றவன் கேட்டதும், “ஆமா இது அப்படியே மாயலோகம் நான் மனதில் நினைத்த மறுநொடி அவள் கண்முன்னே வந்து நிற்க போகிறாளா..?” என்றவன் தொடர்ந்து,

“நான் அவளை பார்க்கவே இல்ல.. என்னோட மனதில் இருக்கும் உருவத்திற்கும் அங்கிருந்த பெண்கள் யாருமே ஒத்துபோகல..” என்றவன் சொல்ல, “ஒருத்தி கூடவா..?” என்றவனிடம் கேட்டான் மதன்..

அப்பொழுது பிரபாவின் மனகண்ணில் ஜெயாவின் உருவம் மின்னலென தோன்றி மறைய, ‘ஒரு வேளை அவளாக இருப்பாளோ..’ என்று அவனின் உள்ளம் நினைக்க, “வா பிரபா சாப்பிட்டுவிட்டு போகலாம்..” என்ற மதன் ஹோட்டலின் உள்ளே நுழைந்தான்..

அவன் உள்ளே சென்று கைகழுவிட்டு அங்கிருக்கும் ஒரு டேபிளில் அமரந்தான்.. அவனின் பின்னோடு பிரபாவும் நுழைந்த பிரபா கையை கழுவிட்டு மதன் அமர்ந்திருந்த டேபிள் சென்று அமர கண்ணாடி பாட்டில் ஒன்று கீழே விழுந்து உடையும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்..

தன்னிடம் இருக்கும் லிஸ்டில் இருக்கும் புத்தகத்தை எல்லாம் தேடிதேடி வாங்கிய மின்மினி, “இந்த லிஸ்டில் இருக்கும் அனைத்து புத்தகத்தையும் வாங்கிட்டேன் அதுவரை நிம்மதி..” மெல்ல பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள்..

அப்பொழுது தன்னுடைய கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்தவள், “நாலாயிரம் ரூபாயிக்கும் புத்தகம் வாங்கியாச்சு.. இப்போ இதை எப்படி எடுத்துட்டு போவது..?” என்று யோசித்தாள்..

அவள் புத்தகத்தை எல்லாம் வாங்கினாலே தவிர அதை தூக்கிக்கொண்டு போக எந்த பையும் எடுத்துவரவில்லை.. அவள் கையில் இருக்கும் புத்தகத்தை எல்லாம் பார்த்தவளுக்கு, ‘இதை எப்படி எடுத்து செல்வது..?’ என்று நினைத்த நினைப்பே மலைப்பாக இருந்தது..

“கையில் இருக்கும் லிஸ்டில் இருக்கும் புத்தகத்தை எல்லாம் வாங்கணும் என்று நினைச்சேன்.. ஆனால் அதை எப்படி தூக்கிட்டு போவது என்று நான் யோசிக்கவே இல்ல..” என்றவள் தனியாக நின்று புலம்பினாள்..

அவள் தனியாக நின்று புலம்புவதை சிலர் பார்த்துவிட்டு, “இவள் என்ன லூசா..” என்று தங்களுக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டு அவளைக் கடந்து சென்றனர்..

அப்பொழுது அந்த கடைகாரரிடம், “ஐயா ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தால் கொடுக்கிறீங்களா..?” என்றவள் எப்பொழுது போல கேட்டதும் அவளை ஏறயிறங்க பார்த்த அந்த கடைக்காரர், “ஏன்மா நீ படிக்கும் பொண்ணுதானே பிளாஸ்டிக் கவர் தடை பண்ணியாச்சு என்று உனக்கு தெரியாதா..” என்று கேட்டார்..

அவரின் கேள்வியில், ‘ஐயோ மினி உன்னை இப்படி அவமானப்படுத்திவிட்டாரே..’ என்று அவளின் மனநிலை அவளைக் கேலி செய்ய, ‘ஏய் வாயை மூடு..’ என்று மனதை அடக்கியவள், “ஐயோ அண்ணா மறந்து பழக்க தோஷத்தில் கேட்டுவிட்டேன்..” என்றாள் மினி வேகமாக..

“நல்ல பொண்ணுமா நீ.. இந்த மாதிரி நாலுபேர் கேட்டால் போதும் திருந்தி இருப்பவன் எல்லோரும் மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுபோய் நிருத்தியிருவாங்க..” என்றவர் தொடர்ந்து, “எதற்கு கவர் கேட்டாய்..?” என்று விளக்கம் கேட்டார்..

‘அப்பா சாமி அட்வைஸ் முடிச்சு கேள்விக்கு வந்துட்டியா..?’ என்று மனதில் நினைத்தவள், “இந்த புத்தகம் எல்லாம் எடுத்துட்டு போக கேட்டான் அண்ணா..” என்று முகத்தைப் பாவமாக வைத்துகொண்டு கேட்டாள் மினி..

“இரும்மா நான் பேப்பரில் பேக் பண்ணி தருகிறேன்.. இடையில் கிழிந்துவிடாமல் தூக்கிட்டு போ.. இல்லாட்டி நீ இன்னைக்கு வீடு போய் சேர்வது கஷ்டம்..” என்றவர் அவளிடம் இருந்த புத்தகத்தை எல்லாம் பேப்பரில் வைத்து அடிக்கி பார்சலாக கட்டித்தந்தார்..

“இந்தம்மா எடுத்துட்டு போ.. சொன்னது நினைவில் இருக்கட்டும்.. இனிமேல் நீ மறந்தும்..” என்றவர் தொடங்க, “யார்கிட்டையும் பாலித்தின் பேப்பர் மட்டும் கேட்கவே மாட்டேன் அண்ணா..” என்றவள் வேகமாக சொல்ல, “சரிம்மா பார்த்து கவனமாக போமா..” என்றவர் தன்னுடைய வேலையைக் கவனித்தார்..

‘ஒரு வார்த்தை சொல்லிட்டு இவரிடம் நான் பட்டபாடு போதும் சாமி..’ என்று கடையைவிட்டு வெளியே செல்லும் நேரத்தில், “பனிமலர் கவிதைகள்..” என்ற தலைப்பைக்கண்டு ஒரு நொடி அங்கேயே தேங்கி நின்றாள்..

அந்த கவிதைக்குள் ஏதோ பொருள் மறைந்திருப்பது போல தோன்றவே அந்த கவிதை புத்தகத்தை எடுத்து சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தாள்..

சில கவிதையை படித்தும் அவளுக்கு அந்த கவிதை புத்தகம் பிடித்துவிட அவளும் ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்..

அவளால் அந்த புத்தகத்தை எல்லாம் தூக்கிக்கொண்டு கொஞ்ச தூரம் கூட நடக்கவே முடியவில்லை..

“என்னடா இது தனியாக வந்தது தப்போ..” என்றவள் மெல்ல நடக்க இன்னொரு பக்கம் பசி வயிற்றைக் கிள்ளியது..

“இதற்கு மேல சாப்பிடாமல் எங்கேயும் போக முடியாது..” என்றவளின் கண்ணில் அந்த ஹோட்டல் தென்பட்டது.. ‘இங்கேயே ஒரு ஹோட்டல் இருக்கு.. சாப்பிட்டு முடித்ததும் பஸில் ஆசிரமம் போகலாம்..” என்ற முடிவுடன் ஹோட்டலின் உள்ளே நுழைந்தாள் மினி..

அவர்களுக்கு அடுத்த டேபிளில் ஒருவனின் கைதவறி கீழே விழுந்த கண்ணாடி பாட்டில் உடைந்தது.. அதை அவன் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்..

“மொசைக்கில் தண்ணீரை முதலில் துடை.. அப்பொழுதுதான் யாரும் கீழே விழுக மாட்டாங்க..” என்று முதலாளி திட்ட, “யாரு கீழே விழுக போறாங்களோ தெரியலடா..” என்றான் மதன்..

“அதுதான் அவனோட முதலாளி தண்ணீரைத் துடைக்க சொல்லியிருக்கிறார் இல்ல.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது..” என்றான் பிரபா..

“இதில் வழுக்கி விழுகவே யாராவது வருவாங்க பாருடா..” என்ற மதனோ அந்த கவிதை புத்தகத்தை புரட்டினான்..

“காலையில் கடை முழுக்க சுற்றியதில் கால் ரொம்ப வலிக்கிறது..” என்ற பிரபா காலை நன்றாக நீவிட்டிவிட்டு உட்கார்ந்து, “உனக்கு என்னடா வேண்டும்..?” என்று கேட்டவன் சாப்பிட ஆடார் கொடுத்தான்..

ஆடார் கொடுத்துவிட்டு திரும்பி மதன், “டேய் அந்த புத்தகத்தைக் கொடு..” என்றவனின் கையில் இருந்து பனிமலர் புத்தகத்தை வாங்கினான் மதன்..

அவனிடம் புத்தகத்தைக் கொடுத்த பிரபா, “இந்த புத்தகம் என்னோட கைக்கு கிடைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிட்டது மதன்..” என்று பெருமூச்சுடன் சொல்லிக் கொண்டிருந்தான் பிரபா..

அப்பொழுது ஹோட்டலின் உள்ளே நுழைந்த மினி பிரபாவின் காலைக் கவனிக்காமல் நடந்தாள்.. அவனின் கால் அவளை தடுக்கிவிட, “ஐயோ இன்னைக்கு நான் காலி..” என்றவள் கீழே விழுகாமல் இருக்க எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போனது..

அவளின் கையில் இருந்த பார்சல் கீழே விழுந்து சில புத்தகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறியது.. அவள் கீழே விழுக போவதை முதலில் கவனித்த பிரபா வேகமாக எழுந்தவன் அவளின் இடையோடு கரம் கோர்த்து அவள் கீழே விழுகாமல் தாங்கிபிடித்தான்..

அதற்குள் மதனை அவள் இடித்த இடியில் அவனோட கையில் இருந்த புத்தகமும் கீழே விழுந்தது.. பிரபாவின் புத்தகமும் மினியின் பார்சலில் ஒரு புத்தகமாகமாறிவிட்டது.. யாரின் புத்தகம் யாரின் கைக்கு செல்லுமோ..?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top