அத்தியாயம் – 9
பதினைந்து நாள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்திட கோவில் திருவிழா களைகட்ட ஆரம்பித்தது..
ஜெயாவும், ருக்மணியும் கோவிலில் இருந்து மண்ணெடுத்து வந்து நவதானியங்கள் போட்டு விதை விதைக்க அதுவும் செழித்து வளர்ந்தது..
அதன் வளர்ச்சியைப் பார்த்த ருக்மணி, “அம்மா இந்த முளைப்பாரி எதுக்கு எடுக்கிறோம்..?” என்றவள் விளக்கம் கேட்டாள்..
அடுத்தநொடியே மகளை முறைத்த ரேகா, “ருக்மணி செய் என்று சொன்னால் செய்ய வேண்டிய வேலையை செய்டி.. எதுக்கு என்னிடம் விளக்கம் கேட்கிற..” என்றவர் அவளின் மீது எரிந்து விழுந்தார்..
அவரின் எரிச்சலில் இருந்தே அவளுக்கு தெரிந்துவிட்டது.. முளைப்பாரி எதற்கு எடுக்கிறோம் என்று தெரியாமலே அதை எடுக்கிறார் என்று..!
தன்னுடைய தாயை நினைத்து அவளுக்கே சிரிப்பு வந்துவிட, “ஒருவர் ஒரு செயலை செய்கிறார் என்றால் அதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கும்மா..” என்றவள் தொடர்ந்து,
“எந்த விளக்கமும் அந்த சடங்கின் அர்த்தமும் தெரியாமல் நாம் ஒரு செயலை செய்ய கூடாது இல்ல.. நம்மளோட முன்னோர் செய்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னாடியும் ஆயிரம் அர்த்தம் இருக்கும்..” என்றவள் தொடர,
“அடியேய் இன்னும் வேலை தலைக்கு மேல் கிடக்கிறது.. என்னோட உயிரை வாங்காமல் சொல்ல வந்ததை சொல்லு.. இல்ல என்னையாவது அந்த வேலையை செய்ய விடு..” என்றவர் அலுப்புடன் கூறினார்..
“அப்போ எனக்கு விளக்கம் கொடுங்க..” என்றவள் ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்க, “நீ போய் சுகந்தி அக்காவிடம் கேளுடி.. அவங்களுக்கு இந்த அர்த்தம் எல்லாம் தெரியும்.. என்னை இப்பொழுது ஆளைவிடு..” என்றவர் அடுத்த வேலைகளைக் கவனிக்க சென்றார்..
“சரிம்மா நான் போய் சுகந்தி அம்மாவிடம் கேட்கிறேன்..” என்றவள் வேகமாக வெளியே சென்றுவிட்டாள்..
வீட்டில் இருந்து கிளம்பிய ருக்மணி நேராக ஜெயாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.. அவளைப் பார்த்த கண்ணன், “அக்கா வாங்க..” என்று அழைக்க, “வாம்மா ருக்மணி..” என்று அவளை வரவேற்றார் சுகந்தி..
“அம்மா எனக்கு ஒரு விளக்கம் சொல்லுங்க அம்மா..” என்றவள் அவரின் அருகில் அமர, “இப்பொழுது உனக்கு எதுக்கு விளக்கம் தெரியணும்..?” என்றவர் புன்னகையுடன் கேட்டார்..
ருக்மணியின் குரல்கேட்டு ஜெயக்கொடி, “வா ருக்மணி.. உன்னோட சந்தேகம் ஆரம்பம் ஆகிவிட்டதா..?” என்றவள் காய்களை நறுக்கினாள்..
“அக்கா சந்தேகம் கேட்டால் அறிவு வளரும் என்று அம்மா சொல்வாங்க இல்ல..” என்ற கண்ணனோ, “அக்கா நீங்க கேளுங்க..” என்று கூறினான்..
அவனின் கன்னத்தைத் தட்டிச்சிரித்த ருக்மணி, “அம்மா எதற்காக முளைப்பாரி எடுக்கறாங்க..?” என்றவள் கேட்டதுமே,
“என்னடி இப்படியெல்லாம் கேட்கிற.. உன்னை இப்படியெல்லாம் யார் யோசிக்க சொன்னாங்க..” என்றவள் கவுண்டமணி டைலாக்கை அவளிடம் கேட்டாள்..
அவளோ ‘எனக்கு ஒண்ணுமே தெரியாது..’ என்ற பாவனையுடன் பாவமாக முகத்தை வைத்துகொண்டு அமர்ந்திருந்தாள்..
இருவரையும் பார்த்த கண்ணன், “ஐயோ அக்கா..” என்று வாய்விட்டுச் சிரிக்க, “டேய் என்னடா நக்கல் பண்றீயா..” என்றவனை அதட்டினாள் ருக்மணி..
“முளைப்பாரி போட சில காரணம் இருக்கிறது.. அதில் பெரிய ஆன்மிகம் மறைந்திருக்கிறது..” என்ற சுகந்தியின் பேச்சை மூவரும் கவனமாக கவனித்தனர்..
“என்னம்மா அது..?” என்று ஜெயா சுவாரசியமாக கவனிக்க, “முளைப்பாரிக்கு என்று நாம் விதைக்கும் தானியங்கள் ஒன்பது.. அது ஒன்பது நவக்கிரகங்களைக் குறிக்கும்..” என்றவர் தொடர்ந்தார்..
“அந்த ஒன்பது கிரகங்களுக்கும் அதிபதி அந்த ஆதிபராசக்தி.. அவளோட அனுமதி இல்லாமல் இங்கே ஒரு கிரகங்களுக்கும் இயங்காது..” என்றவர் சொல்ல,
“அப்போ அம்பாள் நினைத்தால் கிரகங்களின் செய்ய இருக்கும் செயலைத் தடுக்க முடியுமா..?” என்றவள் புரியாமல் கேட்டதும் சுகந்தியின் முகத்தில் புன்னகை அரும்பியது..
“அவர்களுக்கு எல்லாம் அதிபதி மட்டும்தான் அம்பாள்.. ஆனால் அவளால் அவர்களின் வேலையில் தலையிட முடியாது ருக்மணி..” என்றவர் புன்னகையுடன் விளக்கம் கொடுத்தார்..
“நாம் நவதானியங்களை விதையென விதைத்து அதை அம்மனுக்கு படைக்கும் பொழுது நம்முடைய குடும்பத்திற்கு என்று பெரிய ஆபத்து வருகிறது என்றால் அதோட தாக்கத்தை கொஞ்சம் குறைப்பார்..” என்றவர் சொல்ல,
“அதை எப்படி நாம் தெரிந்துகொள்வது..?” என்றவரிடம் விளக்கம் கேட்டான் கண்ணன்..
“ஒன்பது கிரகத்திற்கும் ஒன்பது தானியங்கள் இருக்கிறது இல்ல.. அதோட வளர்ச்சியை வைத்து நன்மை தீமையை நாம் அறியலாம்..” என்றவர் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார்..
அது மட்டும் இல்ல பயிரோட வளர்ச்சி சிறப்பாக இல்லையென்றால் நம்ம குடும்பத்திற்கு கஷ்டம் வரும் என்றும், பயிரோட வளர்ச்சி நன்றாக இருந்தால் நம்ம குடும்பம் நல்ல நிலைக்கு போகும் என்றும் தெரிஞ்சிக்கலாம்..” என்றவர் மூவரும் விளக்கம் கொடுத்தார்..
“அதுதான் காரணம் இல்லாமல் பெரியவங்க சடங்கு சம்பிரதாயம் எல்லாவற்றையும் உருவாக்கி வைத்திருக்க மாட்டாங்க..” என்றவள் அர்த்தத்துடன் புன்னகைத்தாள்..
“சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் உருவாக்கி வைத்திருந்தாலும் சிலநேரம் நம்மால் அதை ஏற்றுகொள்ள முடியாது.. அப்பொழுது அதை ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்க்கை பற்றி யோசித்து முடிவெடுக்கவும் கற்றுகொள்ள வேண்டும் ருக்மணி..” என்றவர் ஏதோ நினைவுகளில் மூழ்கிய வண்ணம் கூறினார்..
அவர் சொல்வதன் அர்த்தம் முழுமையாக யாருக்கும் புரியாவிட்டாலும், ‘நல்லது சொல்லும் பொழுது கேட்டுக்கொள்ள வேண்டும்..’ என்று மூவரும் அமைதியாக இருந்தனர்.. அதன்பிறகு நாட்கள் வேகமாக சென்றது..
அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழா களைகட்டியது.. முதல்நாள் தீர்த்தம் எடுப்பதில் ஆரம்பித்த திருவிழா, மாவிளக்கு, முளைப்பாரி, அம்பாள் வீதி உலா, மஞ்சள் நீராட்டு எல்லாம் முடிந்தது..
அன்று மதியம் மதன் படுத்து நன்றாக உறங்கிட பிரபாவிற்கு தூக்கம் என்பது வரவே இல்லை.. அவன் சிந்தனையுடன் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் புரண்டு புரண்டு படுத்தான்..
அவனுக்கு தூக்கம் வரவில்லை என்றதும், ‘இது சரிப்பட்டு வராது..’ என்றவன் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.. அப்பொழுதுதான் வேலையை முடித்த கற்பகம் கொஞ்சம் படுத்து உறங்கினார்..
அவர் சோபாவின் தூங்குவதைப் பார்த்த பிரபாவின் மனம் சொல்ல முடியாத உணர்வில் சிக்கி தவித்தது.. அது ஏன் என்று புரியாமல் குழப்பத்துடன் வீட்டு வாசலில் அமைக்கபட்டிருந்த திண்ணையில் வந்தமர்ந்தான்..
அவனின் நினைவுகள் அனைத்தும் கற்பகம் மீதே இருந்தது.. அவரின் அன்பான கவனிப்பில் பிரபாவின் மனதில் இருந்த காயம் கொஞ்சம் ஆறியிருக்க, ‘என்னோட அம்மாவை உங்களோட ரூபத்தில் மீண்டும் பார்த்தேன் அம்மா..’ என்றவன் மனதிற்குள் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தான்..
அப்பொழுதுதான் தூக்கம் கலைந்து எழுந்த மதன் தன்னருகே படுத்திருந்த பிரபாவைக் காணாமல், ‘இவன் எங்கே போனான்..?’ என்ற சிந்தனையுடன் அறையில் இருந்து வெளியே வந்தான்..
கற்பகம் எழுந்து சமையலறைக்குள் செல்வதைப் பார்த்தவன், “அம்மா பிரபா எங்கே..” என்றவன் சமையலறை நோக்கி குரல்கொடுத்தான்..
“வீட்டு வாசலில் இருக்கும் திண்ணையில் உட்காந்திருக்கிறான் பாருடா..” என்றவர் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார்..
“ஓ வெளியே இருக்கிறனா..?” என்றவன் வாசலை நோக்கிச் சென்றான்.. அவன் சென்று பார்க்கும் பொழுது பிரபா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்..
‘தான் வந்து நிற்பதைக் கூட கவனிக்காமல் சிந்தனையில் அமர்ந்திருந்த நண்பனின் முகத்தைப் பார்த்தவன், ‘இவனுக்கு என்ன ஆச்சு..?’ என்றவனின் அருகில் அமர்ந்தான் மதன்..
தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம்கேட்டு பிரபா வேகமாகத் திரும்பிப்பார்க்க, “பிரபா நம்ம நாளைக்கு ஹாஸ்டல் போலமா.?” என்று கேட்டான் மதன்..
“ம்ம் சரிடா போலாம்..” என்றவன் மீண்டும் தன்னுடைய சிந்தனையில் மூழ்கினான்..
அவனின் முகம் பார்த்த மதன், “என்னடா ரொம்ப தீவிரமாக யோசிக்கிற..” என்றவன் கேட்டதும் பிரபா நிமிர்ந்து நண்பனின் முகம் பார்த்தான்..
அவனின் முகம் தெளிவுடன் இருந்தாலும் நெற்றியில் விழுந்த சுருக்கங்கள் அவனின் சிந்தனையை வெளிகாட்ட, “என்னடா என்னிடம் சொல்ல கூடாதா..?” என்றவன் மென்மையாக விசாரித்தான்..
“அதெல்லாம் இல்ல மதன்.. இத்தனை வருஷத்தில் யாரோட வீட்டுக்கும் போய் நான் அதிகநாள் தங்கியதில்லை.. ஆனால் இங்கே வந்து தங்கிருந்த ஒரு மாதமும் நான் அவ்வளவு நிம்மதியாக இருந்தேன்..” என்றவன் தொடர்ந்து,
“நான் இதுவரை இவ்வளவு நிம்மதியாக இருந்ததே இல்லை.. நீ சொன்னது போலவே உன்னோட அம்மா இன்றுவரை என்னை எந்த கேள்வியுமே கேட்கல..” என்றவனின் முகத்தில் இருந்த நிறைவு வெளிப்படையாகத் தெரிந்தது..
பிரபாவின் அவ்வளவு சீக்கிரம் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிகட்ட மாட்டான்.. அதனாலோ என்னவோ அவனிடம் யாரும் நெருங்க முடியாமல் போனது..
அவனின் நட்பு வட்டாரம் பெரிதாக இருந்தாலும் பிரபாவிடம் அதிகமாக நெருங்கியது மதன் மட்டுமே..! அவனின் நட்பு மட்டும் விதிவிலக்கு என்று சொல்லலாம்..
‘இவனோ மனதில் இந்த அளவிற்கு காயப்பட்டு இருக்கிறதா..? அப்போ எந்தளவிற்கு இவன் நொந்து போயிருந்தால் அவனோட வாயில் இந்த வார்த்தைகள் வரும்..’ என்றவன் நினைக்க பிரபா தொடர்ந்தான்..
பதினைந்து நாள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்திட கோவில் திருவிழா களைகட்ட ஆரம்பித்தது..
ஜெயாவும், ருக்மணியும் கோவிலில் இருந்து மண்ணெடுத்து வந்து நவதானியங்கள் போட்டு விதை விதைக்க அதுவும் செழித்து வளர்ந்தது..
அதன் வளர்ச்சியைப் பார்த்த ருக்மணி, “அம்மா இந்த முளைப்பாரி எதுக்கு எடுக்கிறோம்..?” என்றவள் விளக்கம் கேட்டாள்..
அடுத்தநொடியே மகளை முறைத்த ரேகா, “ருக்மணி செய் என்று சொன்னால் செய்ய வேண்டிய வேலையை செய்டி.. எதுக்கு என்னிடம் விளக்கம் கேட்கிற..” என்றவர் அவளின் மீது எரிந்து விழுந்தார்..
அவரின் எரிச்சலில் இருந்தே அவளுக்கு தெரிந்துவிட்டது.. முளைப்பாரி எதற்கு எடுக்கிறோம் என்று தெரியாமலே அதை எடுக்கிறார் என்று..!
தன்னுடைய தாயை நினைத்து அவளுக்கே சிரிப்பு வந்துவிட, “ஒருவர் ஒரு செயலை செய்கிறார் என்றால் அதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கும்மா..” என்றவள் தொடர்ந்து,
“எந்த விளக்கமும் அந்த சடங்கின் அர்த்தமும் தெரியாமல் நாம் ஒரு செயலை செய்ய கூடாது இல்ல.. நம்மளோட முன்னோர் செய்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னாடியும் ஆயிரம் அர்த்தம் இருக்கும்..” என்றவள் தொடர,
“அடியேய் இன்னும் வேலை தலைக்கு மேல் கிடக்கிறது.. என்னோட உயிரை வாங்காமல் சொல்ல வந்ததை சொல்லு.. இல்ல என்னையாவது அந்த வேலையை செய்ய விடு..” என்றவர் அலுப்புடன் கூறினார்..
“அப்போ எனக்கு விளக்கம் கொடுங்க..” என்றவள் ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்க, “நீ போய் சுகந்தி அக்காவிடம் கேளுடி.. அவங்களுக்கு இந்த அர்த்தம் எல்லாம் தெரியும்.. என்னை இப்பொழுது ஆளைவிடு..” என்றவர் அடுத்த வேலைகளைக் கவனிக்க சென்றார்..
“சரிம்மா நான் போய் சுகந்தி அம்மாவிடம் கேட்கிறேன்..” என்றவள் வேகமாக வெளியே சென்றுவிட்டாள்..
வீட்டில் இருந்து கிளம்பிய ருக்மணி நேராக ஜெயாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.. அவளைப் பார்த்த கண்ணன், “அக்கா வாங்க..” என்று அழைக்க, “வாம்மா ருக்மணி..” என்று அவளை வரவேற்றார் சுகந்தி..
“அம்மா எனக்கு ஒரு விளக்கம் சொல்லுங்க அம்மா..” என்றவள் அவரின் அருகில் அமர, “இப்பொழுது உனக்கு எதுக்கு விளக்கம் தெரியணும்..?” என்றவர் புன்னகையுடன் கேட்டார்..
ருக்மணியின் குரல்கேட்டு ஜெயக்கொடி, “வா ருக்மணி.. உன்னோட சந்தேகம் ஆரம்பம் ஆகிவிட்டதா..?” என்றவள் காய்களை நறுக்கினாள்..
“அக்கா சந்தேகம் கேட்டால் அறிவு வளரும் என்று அம்மா சொல்வாங்க இல்ல..” என்ற கண்ணனோ, “அக்கா நீங்க கேளுங்க..” என்று கூறினான்..
அவனின் கன்னத்தைத் தட்டிச்சிரித்த ருக்மணி, “அம்மா எதற்காக முளைப்பாரி எடுக்கறாங்க..?” என்றவள் கேட்டதுமே,
“என்னடி இப்படியெல்லாம் கேட்கிற.. உன்னை இப்படியெல்லாம் யார் யோசிக்க சொன்னாங்க..” என்றவள் கவுண்டமணி டைலாக்கை அவளிடம் கேட்டாள்..
அவளோ ‘எனக்கு ஒண்ணுமே தெரியாது..’ என்ற பாவனையுடன் பாவமாக முகத்தை வைத்துகொண்டு அமர்ந்திருந்தாள்..
இருவரையும் பார்த்த கண்ணன், “ஐயோ அக்கா..” என்று வாய்விட்டுச் சிரிக்க, “டேய் என்னடா நக்கல் பண்றீயா..” என்றவனை அதட்டினாள் ருக்மணி..
“முளைப்பாரி போட சில காரணம் இருக்கிறது.. அதில் பெரிய ஆன்மிகம் மறைந்திருக்கிறது..” என்ற சுகந்தியின் பேச்சை மூவரும் கவனமாக கவனித்தனர்..
“என்னம்மா அது..?” என்று ஜெயா சுவாரசியமாக கவனிக்க, “முளைப்பாரிக்கு என்று நாம் விதைக்கும் தானியங்கள் ஒன்பது.. அது ஒன்பது நவக்கிரகங்களைக் குறிக்கும்..” என்றவர் தொடர்ந்தார்..
“அந்த ஒன்பது கிரகங்களுக்கும் அதிபதி அந்த ஆதிபராசக்தி.. அவளோட அனுமதி இல்லாமல் இங்கே ஒரு கிரகங்களுக்கும் இயங்காது..” என்றவர் சொல்ல,
“அப்போ அம்பாள் நினைத்தால் கிரகங்களின் செய்ய இருக்கும் செயலைத் தடுக்க முடியுமா..?” என்றவள் புரியாமல் கேட்டதும் சுகந்தியின் முகத்தில் புன்னகை அரும்பியது..
“அவர்களுக்கு எல்லாம் அதிபதி மட்டும்தான் அம்பாள்.. ஆனால் அவளால் அவர்களின் வேலையில் தலையிட முடியாது ருக்மணி..” என்றவர் புன்னகையுடன் விளக்கம் கொடுத்தார்..
“நாம் நவதானியங்களை விதையென விதைத்து அதை அம்மனுக்கு படைக்கும் பொழுது நம்முடைய குடும்பத்திற்கு என்று பெரிய ஆபத்து வருகிறது என்றால் அதோட தாக்கத்தை கொஞ்சம் குறைப்பார்..” என்றவர் சொல்ல,
“அதை எப்படி நாம் தெரிந்துகொள்வது..?” என்றவரிடம் விளக்கம் கேட்டான் கண்ணன்..
“ஒன்பது கிரகத்திற்கும் ஒன்பது தானியங்கள் இருக்கிறது இல்ல.. அதோட வளர்ச்சியை வைத்து நன்மை தீமையை நாம் அறியலாம்..” என்றவர் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார்..
அது மட்டும் இல்ல பயிரோட வளர்ச்சி சிறப்பாக இல்லையென்றால் நம்ம குடும்பத்திற்கு கஷ்டம் வரும் என்றும், பயிரோட வளர்ச்சி நன்றாக இருந்தால் நம்ம குடும்பம் நல்ல நிலைக்கு போகும் என்றும் தெரிஞ்சிக்கலாம்..” என்றவர் மூவரும் விளக்கம் கொடுத்தார்..
“அதுதான் காரணம் இல்லாமல் பெரியவங்க சடங்கு சம்பிரதாயம் எல்லாவற்றையும் உருவாக்கி வைத்திருக்க மாட்டாங்க..” என்றவள் அர்த்தத்துடன் புன்னகைத்தாள்..
“சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் உருவாக்கி வைத்திருந்தாலும் சிலநேரம் நம்மால் அதை ஏற்றுகொள்ள முடியாது.. அப்பொழுது அதை ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்க்கை பற்றி யோசித்து முடிவெடுக்கவும் கற்றுகொள்ள வேண்டும் ருக்மணி..” என்றவர் ஏதோ நினைவுகளில் மூழ்கிய வண்ணம் கூறினார்..
அவர் சொல்வதன் அர்த்தம் முழுமையாக யாருக்கும் புரியாவிட்டாலும், ‘நல்லது சொல்லும் பொழுது கேட்டுக்கொள்ள வேண்டும்..’ என்று மூவரும் அமைதியாக இருந்தனர்.. அதன்பிறகு நாட்கள் வேகமாக சென்றது..
அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழா களைகட்டியது.. முதல்நாள் தீர்த்தம் எடுப்பதில் ஆரம்பித்த திருவிழா, மாவிளக்கு, முளைப்பாரி, அம்பாள் வீதி உலா, மஞ்சள் நீராட்டு எல்லாம் முடிந்தது..
அன்று மதியம் மதன் படுத்து நன்றாக உறங்கிட பிரபாவிற்கு தூக்கம் என்பது வரவே இல்லை.. அவன் சிந்தனையுடன் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் புரண்டு புரண்டு படுத்தான்..
அவனுக்கு தூக்கம் வரவில்லை என்றதும், ‘இது சரிப்பட்டு வராது..’ என்றவன் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.. அப்பொழுதுதான் வேலையை முடித்த கற்பகம் கொஞ்சம் படுத்து உறங்கினார்..
அவர் சோபாவின் தூங்குவதைப் பார்த்த பிரபாவின் மனம் சொல்ல முடியாத உணர்வில் சிக்கி தவித்தது.. அது ஏன் என்று புரியாமல் குழப்பத்துடன் வீட்டு வாசலில் அமைக்கபட்டிருந்த திண்ணையில் வந்தமர்ந்தான்..
அவனின் நினைவுகள் அனைத்தும் கற்பகம் மீதே இருந்தது.. அவரின் அன்பான கவனிப்பில் பிரபாவின் மனதில் இருந்த காயம் கொஞ்சம் ஆறியிருக்க, ‘என்னோட அம்மாவை உங்களோட ரூபத்தில் மீண்டும் பார்த்தேன் அம்மா..’ என்றவன் மனதிற்குள் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தான்..
அப்பொழுதுதான் தூக்கம் கலைந்து எழுந்த மதன் தன்னருகே படுத்திருந்த பிரபாவைக் காணாமல், ‘இவன் எங்கே போனான்..?’ என்ற சிந்தனையுடன் அறையில் இருந்து வெளியே வந்தான்..
கற்பகம் எழுந்து சமையலறைக்குள் செல்வதைப் பார்த்தவன், “அம்மா பிரபா எங்கே..” என்றவன் சமையலறை நோக்கி குரல்கொடுத்தான்..
“வீட்டு வாசலில் இருக்கும் திண்ணையில் உட்காந்திருக்கிறான் பாருடா..” என்றவர் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார்..
“ஓ வெளியே இருக்கிறனா..?” என்றவன் வாசலை நோக்கிச் சென்றான்.. அவன் சென்று பார்க்கும் பொழுது பிரபா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்..
‘தான் வந்து நிற்பதைக் கூட கவனிக்காமல் சிந்தனையில் அமர்ந்திருந்த நண்பனின் முகத்தைப் பார்த்தவன், ‘இவனுக்கு என்ன ஆச்சு..?’ என்றவனின் அருகில் அமர்ந்தான் மதன்..
தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம்கேட்டு பிரபா வேகமாகத் திரும்பிப்பார்க்க, “பிரபா நம்ம நாளைக்கு ஹாஸ்டல் போலமா.?” என்று கேட்டான் மதன்..
“ம்ம் சரிடா போலாம்..” என்றவன் மீண்டும் தன்னுடைய சிந்தனையில் மூழ்கினான்..
அவனின் முகம் பார்த்த மதன், “என்னடா ரொம்ப தீவிரமாக யோசிக்கிற..” என்றவன் கேட்டதும் பிரபா நிமிர்ந்து நண்பனின் முகம் பார்த்தான்..
அவனின் முகம் தெளிவுடன் இருந்தாலும் நெற்றியில் விழுந்த சுருக்கங்கள் அவனின் சிந்தனையை வெளிகாட்ட, “என்னடா என்னிடம் சொல்ல கூடாதா..?” என்றவன் மென்மையாக விசாரித்தான்..
“அதெல்லாம் இல்ல மதன்.. இத்தனை வருஷத்தில் யாரோட வீட்டுக்கும் போய் நான் அதிகநாள் தங்கியதில்லை.. ஆனால் இங்கே வந்து தங்கிருந்த ஒரு மாதமும் நான் அவ்வளவு நிம்மதியாக இருந்தேன்..” என்றவன் தொடர்ந்து,
“நான் இதுவரை இவ்வளவு நிம்மதியாக இருந்ததே இல்லை.. நீ சொன்னது போலவே உன்னோட அம்மா இன்றுவரை என்னை எந்த கேள்வியுமே கேட்கல..” என்றவனின் முகத்தில் இருந்த நிறைவு வெளிப்படையாகத் தெரிந்தது..
பிரபாவின் அவ்வளவு சீக்கிரம் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிகட்ட மாட்டான்.. அதனாலோ என்னவோ அவனிடம் யாரும் நெருங்க முடியாமல் போனது..
அவனின் நட்பு வட்டாரம் பெரிதாக இருந்தாலும் பிரபாவிடம் அதிகமாக நெருங்கியது மதன் மட்டுமே..! அவனின் நட்பு மட்டும் விதிவிலக்கு என்று சொல்லலாம்..
‘இவனோ மனதில் இந்த அளவிற்கு காயப்பட்டு இருக்கிறதா..? அப்போ எந்தளவிற்கு இவன் நொந்து போயிருந்தால் அவனோட வாயில் இந்த வார்த்தைகள் வரும்..’ என்றவன் நினைக்க பிரபா தொடர்ந்தான்..