இனிய தோழிகளே..,
சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஓரிரு சிறுகதைகள்.. எழுதிய நான் மட்டுமே என் சிறுகதைகளுக்கு வாசகியாக இருந்த காலம். பின் என் நெருங்கிய தோழமைகளும், குடும்பத்தினர் மட்டுமே வாசித்த ஓரிரு சிறுகதைகள்.
அவற்றுள் ஒன்றைச் சற்று பயத்தோடும், ஆவலோடும் நேற்று பதிவேற்றம் செய்தேன்.
என் முதல் நாவல் தாகத்தை ஊக்கப்படுத்தி, என்னைக் கட்டங்கள் எழுதவைத்துத் தட்டி கொடுத்து வரவேற்பு கொடுத்தது போலவே.., நீங்கள் சிறுகதைக்கும் கொடுத்த likes மற்றும் comments என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி.., அடுத்த சிறுகதையை பதிவிடும் தைரியத்தை கொடுத்துள்ளது.
உங்கள் விமர்சனங்களை எதிர்பார்த்து நான். சில வருடங்களுக்கு முன் எழுதிய சிறுகதை.
தமிழா!!! தமிழா !!! கண்கள் கலங்காதே....
கவிதா கோலம் இட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு நாள் கிழமை எல்லாம் கிடையாது. எல்லா நாட்களிலும் கலர் ரங்கோலி தான்.
நரேன் ஆறு அடி உயரம். அவன் உடற்கட்டு தினமும் ஜிம் செல்வதை உறுதி செய்தது.
" கவி, ஏன் ரோட்ல கிறுக்கிட்டு இருக்க?" , கோலமிட்டுக் கொண்டிருந்த கவிதாவை பார்த்துக் கேட்டான் நரேன்.
"அண்ணா மரியாதையாய் நன்றாகக் கண்களை திறந்து பார். இல்லைனா கண்ணை குத்திடுவேன்.", என்று தன் அண்ணனைச் செல்லமாக மிரட்டினாள் கவிதா.
"ஏன்மா காலையிலே இத்தனை வன்முறை...?? மெரினால இருக்கிற பசங்கள பார்த்து கத்துக்கோ.. எப்படி வன்முறையே இல்லாம அறப்போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க.", என்று தன் தங்கைக்கு அறிவுரை கூறினான் நரேன் கவிதாவின் அழகிய வண்ண கோலத்தை ரசித்தபடியே..
"அண்ணா பேச்சை திசை திருப்பாதே ... கோலம் எப்படி இருக்கு ?", என்று நரேனின் முகம் பார்த்து கேட்டாள் கவிதா.
கோலத்தை நோட்டமிட்டான் நரேன்.
ஓர் காளை, அலங்கரிக்கப்பட்டு யாருக்காகவோ காத்திருப்பது போல் நின்றது. அதைச் சுற்றி ரங்கோலி டிசைன் , இன்றைய மாடர்ன் ஆர்ட் போல் காட்சி அளித்தது. அதற்குக் கொடுத்துள்ள நிறங்கள் மனதிற்கு ரம்மியமாக இருந்தது.
"கவி இந்த டிசைன எங்கிருந்து எடுத்தாய்? ", என்று ஆர்வமாக நரேன் கேட்க, " கூகிள்.... அங்க அங்க பார்த்து.., அப்படி கொஞ்சம் நம்ம கற்பனையைத் தூவி விட்டு.., அப்புறம்..", என்று கவிதா ஆரம்பிக்க.." சரி !சரி! போதும் தாயே ", என்று கையை உயர்த்திக் கும்பிடு போட்டான்.
"எனக்கு நேரம் ஆகுது நான் கிளம்பனும்..", என்று கூறிவிட்டு கிளம்ப ஆயுதமானான் நரேன்.
"அண்ணா!! நாங்களோ அறப்போராட்டம் பண்றோம். உங்களுக்கு அங்க என்ன வேலை?", என்று கவிதா கேள்வியாக நிறுத்த, " நாங்க தான் உங்களுக்குப் பாதுகாப்பு கவி..."., என்றான் அன்பு அண்ணன்.
" சாப்பாடு வேண்டாம்னு அம்மா கிட்ட சொல்லிவிடு...", என்று கூறி விட்டு வேகமாகப் பறந்து விட்டான்.
" ஓகே அண்ணா", என்று கவி கூறியது.., காற்றுக்குத்தான் கேட்டது.
கவிதாவுக்குள் தன் அண்ணன் போலீஸ் என்ற கர்வம் வழக்கம் போல் தலை தூக்கியது. புன்னகைத்துக்கொண்டாள்.
நரேன் மெரீனாவுக்கு சென்றடைந்தான். இரவிலும் கூட்டம் கூட்டமாய் மாணவர்களும் இளைஞர்களும் படுத்திருந்த அடையாளம் தெளிவாக தெரிந்தது.விடியற்காலையிலும் அத்தனை கூட்டம்..
நரேனுக்கு பெரிதாக அங்கு வேலை இல்லை. அவனுக்கும் உணவு கொடுத்தது இளைஞர் அணி. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் நரேன். நரேனின் மனதில் பல கேள்விகள்.
"எப்படி உருவாகியது இந்தக் கூட்டம்?", இதுவே அவன் முதல் கேள்வி.
கபாலி முதல் பைரவா வரை டிக்கெட்டுக்காக அலைந்த கூட்டம்!!
கிரிக்கெட் என்றால் சேப்பாக்கத்தில் அலை மோதும் கூட்டம்!!
சூப்பர் சிங்கர் ஷோ என்றவுடன் கூடும் கூட்டம்!!!
இவர்களுக்குள் இத்தனை உணர்ச்சியா??
எத்தனை முறை இது போல் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறேன்??
ஆனால் இந்த உணர்ச்சி புதிது...
இந்த எண்ணங்களுடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் நரேன். அப்பொழுது ஒரு பெண் கர்ஜித்து கொண்டிருந்தாள்.
" பெண் என்று நினைத்தாயோ
பெண் சிங்கம் நாங்கள்!!!
புலியை முறத்தால் விரட்டிய
வீரப்பெண்ணின் பால் குடித்தவர்கள்
நாங்கள்!!!"
" உயிர் காக்க மட்டும் அல்ல
உணர்வு காக்கவும்
வீறு கொண்டெழுவோம் "
" அன்று சுதந்திரத்திற்காக போராடிய
வீர மங்கை வேலு நாச்சியார்
வழி வந்த நாங்கள்
இன்று போராடுவது
பொருளாதார சுதந்திரத்திற்காக!!!!!!"
“ இளைஞர் என்றால்
இடைஞ்சல் என்ற சொல்
இனி
இல்லை ....
எழுந்தோம் face book ஆல்
இணைத்தோம் whatsapp ஆல்
இனி இணைவோம் நாட்டின்
வளர்ச்சிக்காக….!!!!
புல்லரித்து விட்டது நரேனுக்கு..
அப்துல் கலாம் கனவு கண்ட இளைஞர்கள் இதோ!!!!
ஆனால் அவர் இங்கு இல்லை...
இளைஞர்களை ஒன்று கூட சொன்ன விவேகானந்தர்,
கண்முன் சிலையாய் நிற்கிறார்...
அறப்போராட்டத்தை விரும்பிய காந்தி,
ரூபாய் நோட்டில் சிரிக்கிறார்....
பெண்களைப் போராட சொன்ன பெரியார் ,
தமிழ்ப் புத்தகத்தில் பாடமாக மாறி விட்டார்...
சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஓரிரு சிறுகதைகள்.. எழுதிய நான் மட்டுமே என் சிறுகதைகளுக்கு வாசகியாக இருந்த காலம். பின் என் நெருங்கிய தோழமைகளும், குடும்பத்தினர் மட்டுமே வாசித்த ஓரிரு சிறுகதைகள்.
அவற்றுள் ஒன்றைச் சற்று பயத்தோடும், ஆவலோடும் நேற்று பதிவேற்றம் செய்தேன்.
என் முதல் நாவல் தாகத்தை ஊக்கப்படுத்தி, என்னைக் கட்டங்கள் எழுதவைத்துத் தட்டி கொடுத்து வரவேற்பு கொடுத்தது போலவே.., நீங்கள் சிறுகதைக்கும் கொடுத்த likes மற்றும் comments என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி.., அடுத்த சிறுகதையை பதிவிடும் தைரியத்தை கொடுத்துள்ளது.
உங்கள் விமர்சனங்களை எதிர்பார்த்து நான். சில வருடங்களுக்கு முன் எழுதிய சிறுகதை.
தமிழா!!! தமிழா !!! கண்கள் கலங்காதே....
கவிதா கோலம் இட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு நாள் கிழமை எல்லாம் கிடையாது. எல்லா நாட்களிலும் கலர் ரங்கோலி தான்.
நரேன் ஆறு அடி உயரம். அவன் உடற்கட்டு தினமும் ஜிம் செல்வதை உறுதி செய்தது.
" கவி, ஏன் ரோட்ல கிறுக்கிட்டு இருக்க?" , கோலமிட்டுக் கொண்டிருந்த கவிதாவை பார்த்துக் கேட்டான் நரேன்.
"அண்ணா மரியாதையாய் நன்றாகக் கண்களை திறந்து பார். இல்லைனா கண்ணை குத்திடுவேன்.", என்று தன் அண்ணனைச் செல்லமாக மிரட்டினாள் கவிதா.
"ஏன்மா காலையிலே இத்தனை வன்முறை...?? மெரினால இருக்கிற பசங்கள பார்த்து கத்துக்கோ.. எப்படி வன்முறையே இல்லாம அறப்போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க.", என்று தன் தங்கைக்கு அறிவுரை கூறினான் நரேன் கவிதாவின் அழகிய வண்ண கோலத்தை ரசித்தபடியே..
"அண்ணா பேச்சை திசை திருப்பாதே ... கோலம் எப்படி இருக்கு ?", என்று நரேனின் முகம் பார்த்து கேட்டாள் கவிதா.
கோலத்தை நோட்டமிட்டான் நரேன்.
ஓர் காளை, அலங்கரிக்கப்பட்டு யாருக்காகவோ காத்திருப்பது போல் நின்றது. அதைச் சுற்றி ரங்கோலி டிசைன் , இன்றைய மாடர்ன் ஆர்ட் போல் காட்சி அளித்தது. அதற்குக் கொடுத்துள்ள நிறங்கள் மனதிற்கு ரம்மியமாக இருந்தது.
"கவி இந்த டிசைன எங்கிருந்து எடுத்தாய்? ", என்று ஆர்வமாக நரேன் கேட்க, " கூகிள்.... அங்க அங்க பார்த்து.., அப்படி கொஞ்சம் நம்ம கற்பனையைத் தூவி விட்டு.., அப்புறம்..", என்று கவிதா ஆரம்பிக்க.." சரி !சரி! போதும் தாயே ", என்று கையை உயர்த்திக் கும்பிடு போட்டான்.
"எனக்கு நேரம் ஆகுது நான் கிளம்பனும்..", என்று கூறிவிட்டு கிளம்ப ஆயுதமானான் நரேன்.
"அண்ணா!! நாங்களோ அறப்போராட்டம் பண்றோம். உங்களுக்கு அங்க என்ன வேலை?", என்று கவிதா கேள்வியாக நிறுத்த, " நாங்க தான் உங்களுக்குப் பாதுகாப்பு கவி..."., என்றான் அன்பு அண்ணன்.
" சாப்பாடு வேண்டாம்னு அம்மா கிட்ட சொல்லிவிடு...", என்று கூறி விட்டு வேகமாகப் பறந்து விட்டான்.
" ஓகே அண்ணா", என்று கவி கூறியது.., காற்றுக்குத்தான் கேட்டது.
கவிதாவுக்குள் தன் அண்ணன் போலீஸ் என்ற கர்வம் வழக்கம் போல் தலை தூக்கியது. புன்னகைத்துக்கொண்டாள்.
நரேன் மெரீனாவுக்கு சென்றடைந்தான். இரவிலும் கூட்டம் கூட்டமாய் மாணவர்களும் இளைஞர்களும் படுத்திருந்த அடையாளம் தெளிவாக தெரிந்தது.விடியற்காலையிலும் அத்தனை கூட்டம்..
நரேனுக்கு பெரிதாக அங்கு வேலை இல்லை. அவனுக்கும் உணவு கொடுத்தது இளைஞர் அணி. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் நரேன். நரேனின் மனதில் பல கேள்விகள்.
"எப்படி உருவாகியது இந்தக் கூட்டம்?", இதுவே அவன் முதல் கேள்வி.
கபாலி முதல் பைரவா வரை டிக்கெட்டுக்காக அலைந்த கூட்டம்!!
கிரிக்கெட் என்றால் சேப்பாக்கத்தில் அலை மோதும் கூட்டம்!!
சூப்பர் சிங்கர் ஷோ என்றவுடன் கூடும் கூட்டம்!!!
இவர்களுக்குள் இத்தனை உணர்ச்சியா??
எத்தனை முறை இது போல் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறேன்??
ஆனால் இந்த உணர்ச்சி புதிது...
இந்த எண்ணங்களுடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் நரேன். அப்பொழுது ஒரு பெண் கர்ஜித்து கொண்டிருந்தாள்.
" பெண் என்று நினைத்தாயோ
பெண் சிங்கம் நாங்கள்!!!
புலியை முறத்தால் விரட்டிய
வீரப்பெண்ணின் பால் குடித்தவர்கள்
நாங்கள்!!!"
" உயிர் காக்க மட்டும் அல்ல
உணர்வு காக்கவும்
வீறு கொண்டெழுவோம் "
" அன்று சுதந்திரத்திற்காக போராடிய
வீர மங்கை வேலு நாச்சியார்
வழி வந்த நாங்கள்
இன்று போராடுவது
பொருளாதார சுதந்திரத்திற்காக!!!!!!"
“ இளைஞர் என்றால்
இடைஞ்சல் என்ற சொல்
இனி
இல்லை ....
எழுந்தோம் face book ஆல்
இணைத்தோம் whatsapp ஆல்
இனி இணைவோம் நாட்டின்
வளர்ச்சிக்காக….!!!!
புல்லரித்து விட்டது நரேனுக்கு..
அப்துல் கலாம் கனவு கண்ட இளைஞர்கள் இதோ!!!!
ஆனால் அவர் இங்கு இல்லை...
இளைஞர்களை ஒன்று கூட சொன்ன விவேகானந்தர்,
கண்முன் சிலையாய் நிற்கிறார்...
அறப்போராட்டத்தை விரும்பிய காந்தி,
ரூபாய் நோட்டில் சிரிக்கிறார்....
பெண்களைப் போராட சொன்ன பெரியார் ,
தமிழ்ப் புத்தகத்தில் பாடமாக மாறி விட்டார்...