deviprakash6
நாட்டாமை
- Joined
- Oct 13, 2019
- Messages
- 82
- Reaction score
- 123
தமிழரசியின் கதிரழகி" ரிவியூவோட வந்துருக்கேன்??
முதலில் இப்படி ஒரு முயற்சிக்கு வாழ்த்துக்கள் டா.. ஆரம்பம் முதல் கடைசி வரை கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை அளவில்லாமல் ஏற்படுத்தி எங்களை பயணிக்க வச்சுருக்கே?? ஆத்மார்த்தமான காதலுக்கு அறிமுகமே தேவை இல்லை, மனமார்ந்த உணர்வுகள் போதும்னு பிரபா-ஜெயா, ருக்கு-ஸ்ரீனி, மதன்- மின்மினி எல்லாரும் ஒவ்வொரு வகையில அழகா எடுத்து காட்டி இருக்காங்க??
?தொடர் உறவுகளின் இழப்பு, பரிதாப பார்வைனு அது குடுத்த வலியினாலே கூட்டுக்குள் குறுகி போய் இருந்த பிரபா, கல்லூரி பருவத்திலும் ஒரு வளர்ந்த குழந்தையா தான் தெரியுறான்.. ஒரு சிலர் பண்ற விஷயங்கள் எல்லார்கிட்டயும் இருந்து விலகி நிக்க வச்சுடும். அப்படி ஒரு நிலைல தான் பிரபா இருக்கான்?? ஆனா உலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது. அது மாதிரி, பிரபா வாழ்க்கைல முதல் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பிச்சது அவனுக்கு கிடைச்ச அழகான நட்பு ?? அடுத்து அவனோட மாற்றத்துக்கு துணையா இருந்தது, இனம் தெரியாத காதல் முதல் கவிதைல ஆரம்பம் ஆன பிரபாவோட ஃபீலிங்ஸ் ல இருந்து, அவன் ஜெயாவ புக் ஃபேர் ல பார்த்தது, ஹோட்டல் ல பார்த்தது அப்பறம் கோவில் ல சந்திச்சது முதற்கொண்டு, ஒவ்வொரு முறை அவளோட சந்திப்பு நடக்கும்போது, மனசுல தோன்ற உணர்ச்சிகள் எல்லாமே சொல்ல முடியாத காதல கூட அவ்வளவு அழகா சொல்லும் ?? ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்காம பேசிக்காம இருந்த போதும் கூட, நம்ம மனசுல இருக்கற ஆளு இவ தானானு யோசிக்கிற நேரம் அவனோட புரிதல் அழகா வெளிப்பட்டு இருக்கு ??
?அதுக்கு அப்பறமா வேலை சமயங்கள் ல அவள நேருக்கு நேரா பார்த்து உண்டான உணர்ச்சிகள், அதோட தாக்கம் அதை தொடர்ந்து அவகிட்ட முதல் முதலாக தன்னோட மனச வெளிப்படுத்தின விதம், ஒவ்வொரு முறையும் அதை தவறாம செஞ்சு அவளோட கோபத்தை தூண்டி விட்டு ரசிச்ச தருணங்கள் எல்லாமே அவனோட கடந்த கால கசப்புகள் மறந்த ஒரு விளையாட்டு பிள்ளையா நமக்கு தெரியறான்?? கவிதை கதை எல்லாம் படிச்சு, தன்னோட பனிமலர் இந்த ஜெயாவானு அவன் ஒவ்வொரு பக்கமும் யோசிச்சு அதை கண்டறியற விதம் கொள்ளை அழகு ?? எல்லாத்துக்கும் மேல கோபிநாத் மாமா, அவரோட கடமைக்கு மேல பிரபாவோட பொறுப்ப எடுத்து சிறப்பவே செஞ்சு முடிச்சு இருக்காரு?? பெத்தவங்களே இந்த காலத்துல ஒரு கட்டத்துக்கு அப்பறமா பிள்ளைகள ஒதுக்கி வச்சுட்டு போறப்போ, ஒரு மாமாவா பிரபாக்கு இவர் செஞ்சது எல்லாமே ரொம்ப அதிகம்.. அதோட அவனை நல்லபடியா செதுக்கி வச்ச பெருமைக்கு உரியவர்.. தட்டி குடுக்க வேண்டிய நேரத்துல தட்டி குடுத்து, கண்டிக்க வேண்டிய நேரத்துல கண்டிப்பாவும் அவனை ஒரு நல்ல மனுஷனா உருவாக்கி விட்டுருக்காரு??
? வாழ்க்கைய அனுபவிச்சு வாழ்றதை விடவும் முக்கியம் அந்த அனுபவங்களையும் ஏதார்த்தத்தையும் புரிஞ்சு வாழனும்.. ஜெயா அத சிறப்பாவே செஞ்சுருக்கா. படிப்புல வேலையில ஆகட்டும், நிதர்சனமா யோசிச்சு தனக்கான தேவைய தேர்ந்தெடுத்து இருக்கா. அவளுக்கே துணையான ஒரு நட்பு அவளை இன்னுமும் மெருகேற்றி இருக்கு. சிறந்த நட்புக்கு எப்போதும் நாம நம்மளை புரிஞ்சு வச்சு இருக்கறத விட அவங்க நம்மளை பத்தி நிறைய விஷயங்கள் புரிஞ்சு வச்சிருப்பாங்க. அதுவே அவளுக்கு ஒரு பெரிய வெற்றிய நோக்கி அடி எடுத்து வைக்க உதவி இருக்கு. கவிதைல ஆரம்பிச்ச பயணம் கதை வரை அவள கொண்டு போனதுக்கு முதலில் பாராட்ட வேண்டியது, நம்ம ருக்குவ தான் ?? ஒவ்வொரு முறையும் அவளை ஊக்கப் படுத்தி, துணையா கூட இருந்து வழிகாட்டியா இருந்திருக்கா..
?கவிதை புத்தகம் மூலமா தன்னோட எதிர்கால வாழ்க்கையையே ஒரு நிமிஷத்துல முடிவு பண்ணி, கவிதையா வடிவிச்சு அதுக்கெல்லாம் ஒரு கெத்து வேணும் ?? ஆனா அவளையும் அறியாம தன்னவனொட பொக்கிஷம் அவகிட்ட வந்து சேர்ந்த நேரம், விவரிக்க முடியாத அழகான மாற்றம்.. அந்த வரிகள் மூலமா மட்டுமே அவனை நேசிச்சு வாழ்க்கைய செலுத்தி, அவன்மேல அவ்வளவு காதல் இருந்தும் அதை உணராமல், தனக்குள்ளேயே வச்சு அனுபவிச்ச நொடி கூட மலர் அழகு தான்?? அவனை பக்கத்துல வச்சு பார்க்கும்போதும் அவனோட தன்னை மீறி வம்பு பண்ணி சண்டை போடும் போது சரி, தமிழா முகப்புத்தகத்தில் அவனோட பேசும்போதும் சரி, தன்னோட உணர்வுகள் மேல எழும்போது சொல்ல முடியாமல் தவிச்ச தவிப்பு அதையும் மீறி, அவன் தன்னவனா இருக்குமான்னு சந்தேகப்பட்ட நேரங்கள் எல்லாமே அவளோட ஆழ்மனசு காதல தெளிவா பறைசாற்றுது..
?கண்முன்னே பெற்றோர்களை பறிகுடுக்கர வலி எப்படி இருக்கும்னு அந்த இடத்திலே இருந்து பார்த்தா தானே தெரியும். அப்படி ஒரு சூழ்நிலை வந்தும் கூட, தன்னை அதுல இருந்து மீட்டு எடுத்து, தன்னோட வளர்ப்பு பெற்றோரா இருந்தாலும் அவங்களை சொந்த பெற்றவர்களா பார்த்து அவங்க மேல அளவு கடந்த அன்பு வைக்கிறது உண்மையாவே பெரிய விஷயம். அந்த இடத்திலேயே ஜெயா வாழ்க்கையை ஜெய்க்க ஆரம்பிச்சுட்டா?? அவங்களும் அன்பு காட்றதுல இவளுக்கு சலச்சவங்க இல்லனு நிரூபிச்சு இருக்காங்க?? படிப்பு வேலை பிடித்தம்னு எல்லாத்துலயும் அவளுக்கான சுதந்திரத்தை தேவைக்கு ஏற்ப குடுத்து துணையா இருந்திருக்கங்க..
?அப்பறம் அந்த கதிரழகி கதை மூலமா ரெண்டு பேரும் சேர்ந்து அடிச்ச அரட்டை, அதுல இருந்து இவங்க ஒருத்தர் ஒருத்தரை கண்டு பிடிச்ச விதம் எல்லாம் பயங்கரம்?? அந்த கதைல வர பாத்திரங்கள் எல்லாம் அவ்வளவு அருமை. ஒருத்தரோட மனச காய படுத்தினா எவ்வளவு வலிக்கும்னு அழகி கதிர் ரெண்டு பேரோட செயல்களுமே நமக்கு ஒரு எடுத்துக்காட்டு தான்.. அதே போல பார்கவி பார்த்திபன் அவங்களும் தங்களோட இடங்கள அழகா நிறைவு செஞ்சு இருக்காங்க?? சொன்னால் தான் காதல் என்று இல்லயே, அது கதிரழகியோட முடிவில அருமையா புரிஞ்சுது. ஒரு விஷயம் நாம முழு ஈடுபாட்டோடு செஞ்சா அது அப்படியே நம்மளோட மனசை பிரதிபலிக்கும்.. அந்த மாதிரி கதிரழகி கதை ஜெயவோட வாழ்க்கைய பிரதிபலிச்சுது.. அதையும் தாண்டி பிரபா அவ்வளவு அழகா அந்த உண்மையை கண்டு பிடிச்ச விதம் மனசை கொள்ளையடிக்குது ஆனாலும் அந்த பிள்ளைய மிரட்டி, கல்யாணம் பண்ண ரெடி ஆகுனு சொல்லி பொண்ணு பார்க்க வேற வீட்ல ஆளுகள அனுப்பிச்சானே அங்க நிக்கறான் நம்ம ஹீரோ??
முதலில் இப்படி ஒரு முயற்சிக்கு வாழ்த்துக்கள் டா.. ஆரம்பம் முதல் கடைசி வரை கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை அளவில்லாமல் ஏற்படுத்தி எங்களை பயணிக்க வச்சுருக்கே?? ஆத்மார்த்தமான காதலுக்கு அறிமுகமே தேவை இல்லை, மனமார்ந்த உணர்வுகள் போதும்னு பிரபா-ஜெயா, ருக்கு-ஸ்ரீனி, மதன்- மின்மினி எல்லாரும் ஒவ்வொரு வகையில அழகா எடுத்து காட்டி இருக்காங்க??
?தொடர் உறவுகளின் இழப்பு, பரிதாப பார்வைனு அது குடுத்த வலியினாலே கூட்டுக்குள் குறுகி போய் இருந்த பிரபா, கல்லூரி பருவத்திலும் ஒரு வளர்ந்த குழந்தையா தான் தெரியுறான்.. ஒரு சிலர் பண்ற விஷயங்கள் எல்லார்கிட்டயும் இருந்து விலகி நிக்க வச்சுடும். அப்படி ஒரு நிலைல தான் பிரபா இருக்கான்?? ஆனா உலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது. அது மாதிரி, பிரபா வாழ்க்கைல முதல் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பிச்சது அவனுக்கு கிடைச்ச அழகான நட்பு ?? அடுத்து அவனோட மாற்றத்துக்கு துணையா இருந்தது, இனம் தெரியாத காதல் முதல் கவிதைல ஆரம்பம் ஆன பிரபாவோட ஃபீலிங்ஸ் ல இருந்து, அவன் ஜெயாவ புக் ஃபேர் ல பார்த்தது, ஹோட்டல் ல பார்த்தது அப்பறம் கோவில் ல சந்திச்சது முதற்கொண்டு, ஒவ்வொரு முறை அவளோட சந்திப்பு நடக்கும்போது, மனசுல தோன்ற உணர்ச்சிகள் எல்லாமே சொல்ல முடியாத காதல கூட அவ்வளவு அழகா சொல்லும் ?? ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்காம பேசிக்காம இருந்த போதும் கூட, நம்ம மனசுல இருக்கற ஆளு இவ தானானு யோசிக்கிற நேரம் அவனோட புரிதல் அழகா வெளிப்பட்டு இருக்கு ??
?அதுக்கு அப்பறமா வேலை சமயங்கள் ல அவள நேருக்கு நேரா பார்த்து உண்டான உணர்ச்சிகள், அதோட தாக்கம் அதை தொடர்ந்து அவகிட்ட முதல் முதலாக தன்னோட மனச வெளிப்படுத்தின விதம், ஒவ்வொரு முறையும் அதை தவறாம செஞ்சு அவளோட கோபத்தை தூண்டி விட்டு ரசிச்ச தருணங்கள் எல்லாமே அவனோட கடந்த கால கசப்புகள் மறந்த ஒரு விளையாட்டு பிள்ளையா நமக்கு தெரியறான்?? கவிதை கதை எல்லாம் படிச்சு, தன்னோட பனிமலர் இந்த ஜெயாவானு அவன் ஒவ்வொரு பக்கமும் யோசிச்சு அதை கண்டறியற விதம் கொள்ளை அழகு ?? எல்லாத்துக்கும் மேல கோபிநாத் மாமா, அவரோட கடமைக்கு மேல பிரபாவோட பொறுப்ப எடுத்து சிறப்பவே செஞ்சு முடிச்சு இருக்காரு?? பெத்தவங்களே இந்த காலத்துல ஒரு கட்டத்துக்கு அப்பறமா பிள்ளைகள ஒதுக்கி வச்சுட்டு போறப்போ, ஒரு மாமாவா பிரபாக்கு இவர் செஞ்சது எல்லாமே ரொம்ப அதிகம்.. அதோட அவனை நல்லபடியா செதுக்கி வச்ச பெருமைக்கு உரியவர்.. தட்டி குடுக்க வேண்டிய நேரத்துல தட்டி குடுத்து, கண்டிக்க வேண்டிய நேரத்துல கண்டிப்பாவும் அவனை ஒரு நல்ல மனுஷனா உருவாக்கி விட்டுருக்காரு??
? வாழ்க்கைய அனுபவிச்சு வாழ்றதை விடவும் முக்கியம் அந்த அனுபவங்களையும் ஏதார்த்தத்தையும் புரிஞ்சு வாழனும்.. ஜெயா அத சிறப்பாவே செஞ்சுருக்கா. படிப்புல வேலையில ஆகட்டும், நிதர்சனமா யோசிச்சு தனக்கான தேவைய தேர்ந்தெடுத்து இருக்கா. அவளுக்கே துணையான ஒரு நட்பு அவளை இன்னுமும் மெருகேற்றி இருக்கு. சிறந்த நட்புக்கு எப்போதும் நாம நம்மளை புரிஞ்சு வச்சு இருக்கறத விட அவங்க நம்மளை பத்தி நிறைய விஷயங்கள் புரிஞ்சு வச்சிருப்பாங்க. அதுவே அவளுக்கு ஒரு பெரிய வெற்றிய நோக்கி அடி எடுத்து வைக்க உதவி இருக்கு. கவிதைல ஆரம்பிச்ச பயணம் கதை வரை அவள கொண்டு போனதுக்கு முதலில் பாராட்ட வேண்டியது, நம்ம ருக்குவ தான் ?? ஒவ்வொரு முறையும் அவளை ஊக்கப் படுத்தி, துணையா கூட இருந்து வழிகாட்டியா இருந்திருக்கா..
?கவிதை புத்தகம் மூலமா தன்னோட எதிர்கால வாழ்க்கையையே ஒரு நிமிஷத்துல முடிவு பண்ணி, கவிதையா வடிவிச்சு அதுக்கெல்லாம் ஒரு கெத்து வேணும் ?? ஆனா அவளையும் அறியாம தன்னவனொட பொக்கிஷம் அவகிட்ட வந்து சேர்ந்த நேரம், விவரிக்க முடியாத அழகான மாற்றம்.. அந்த வரிகள் மூலமா மட்டுமே அவனை நேசிச்சு வாழ்க்கைய செலுத்தி, அவன்மேல அவ்வளவு காதல் இருந்தும் அதை உணராமல், தனக்குள்ளேயே வச்சு அனுபவிச்ச நொடி கூட மலர் அழகு தான்?? அவனை பக்கத்துல வச்சு பார்க்கும்போதும் அவனோட தன்னை மீறி வம்பு பண்ணி சண்டை போடும் போது சரி, தமிழா முகப்புத்தகத்தில் அவனோட பேசும்போதும் சரி, தன்னோட உணர்வுகள் மேல எழும்போது சொல்ல முடியாமல் தவிச்ச தவிப்பு அதையும் மீறி, அவன் தன்னவனா இருக்குமான்னு சந்தேகப்பட்ட நேரங்கள் எல்லாமே அவளோட ஆழ்மனசு காதல தெளிவா பறைசாற்றுது..
?கண்முன்னே பெற்றோர்களை பறிகுடுக்கர வலி எப்படி இருக்கும்னு அந்த இடத்திலே இருந்து பார்த்தா தானே தெரியும். அப்படி ஒரு சூழ்நிலை வந்தும் கூட, தன்னை அதுல இருந்து மீட்டு எடுத்து, தன்னோட வளர்ப்பு பெற்றோரா இருந்தாலும் அவங்களை சொந்த பெற்றவர்களா பார்த்து அவங்க மேல அளவு கடந்த அன்பு வைக்கிறது உண்மையாவே பெரிய விஷயம். அந்த இடத்திலேயே ஜெயா வாழ்க்கையை ஜெய்க்க ஆரம்பிச்சுட்டா?? அவங்களும் அன்பு காட்றதுல இவளுக்கு சலச்சவங்க இல்லனு நிரூபிச்சு இருக்காங்க?? படிப்பு வேலை பிடித்தம்னு எல்லாத்துலயும் அவளுக்கான சுதந்திரத்தை தேவைக்கு ஏற்ப குடுத்து துணையா இருந்திருக்கங்க..
?அப்பறம் அந்த கதிரழகி கதை மூலமா ரெண்டு பேரும் சேர்ந்து அடிச்ச அரட்டை, அதுல இருந்து இவங்க ஒருத்தர் ஒருத்தரை கண்டு பிடிச்ச விதம் எல்லாம் பயங்கரம்?? அந்த கதைல வர பாத்திரங்கள் எல்லாம் அவ்வளவு அருமை. ஒருத்தரோட மனச காய படுத்தினா எவ்வளவு வலிக்கும்னு அழகி கதிர் ரெண்டு பேரோட செயல்களுமே நமக்கு ஒரு எடுத்துக்காட்டு தான்.. அதே போல பார்கவி பார்த்திபன் அவங்களும் தங்களோட இடங்கள அழகா நிறைவு செஞ்சு இருக்காங்க?? சொன்னால் தான் காதல் என்று இல்லயே, அது கதிரழகியோட முடிவில அருமையா புரிஞ்சுது. ஒரு விஷயம் நாம முழு ஈடுபாட்டோடு செஞ்சா அது அப்படியே நம்மளோட மனசை பிரதிபலிக்கும்.. அந்த மாதிரி கதிரழகி கதை ஜெயவோட வாழ்க்கைய பிரதிபலிச்சுது.. அதையும் தாண்டி பிரபா அவ்வளவு அழகா அந்த உண்மையை கண்டு பிடிச்ச விதம் மனசை கொள்ளையடிக்குது ஆனாலும் அந்த பிள்ளைய மிரட்டி, கல்யாணம் பண்ண ரெடி ஆகுனு சொல்லி பொண்ணு பார்க்க வேற வீட்ல ஆளுகள அனுப்பிச்சானே அங்க நிக்கறான் நம்ம ஹீரோ??