THAVAM --1 தவம் ---1
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே ........
என் இசை நின்றால் அடங்கும் உலகே ...........
நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே -----
திருவிளையாடல் படத்தில் வரும் பாடலில் ஒரு நொடி இறைவன் தன் அசைவை நிறுத்தியவுடன் ,உலகமே ஒரு நொடி உறைந்து நிற்பதாக கட்சி வரும் .காற்று ,அலை ,பறக்கும் பறவைகள் ,பொங்கும் எரிமலை என அனைத்தும் பிரீஸ் ஆகி நின்று விட்டதாக காட்டுவார்கள் .அதேபோல் தன்னை சுற்றி அனைத்தும் ஒரு கணம் நின்று போனதாகவே தோன்றியது மதுரக்ஷிக்கு .பூண்டு வகை தாவரத்தில் ஒன்று உண்டாம் .அதை மிதித்தவர்கள் அப்படியே சிலையாக உறைந்து நின்று விடுவார்களாம் .நொடிகளோ பல வினாடிகளோ மதுராக்ஷியும் அவ்வாரே சிலையாக உறைந்து நின்று கொண்டு இருந்தாள் .கண்கள் இமைக்க மறந்து ,தேவர் மகனில் ரேவதி சொல்வது போல அவளின் திறந்த வாயில் இருந்து "வெறும் காற்று "தாங்க வெளி வந்தது .
மதுராக்ஷி -- சங்கரன் -பவானியின் தவ புதல்வி .அண்ணன் ரகுராமனின் பத்ரகாளி(((((பயபுள்ளக்கு தீடிர்னு எப்படி இவளோ தைரியம் வந்தது ???)))) .கார்த்திக்கின் கனவூ நாயகி (இப்படி சொல்லலீனா அவனுக்கு அடி விழுங்க -பேய் ,பூதம் என்பதை தான் இவளோ பாலிஷா சொல்றான் ) 26 வயது .முடித்தது MBA (+ கம்ப்யூட்டர் கோர்ஸ் .(போய் வா மா என்று டிகிரி கொடுத்து அனுப்பிட்டாங்களோ -யார் கண்டது .நமக்கு ஏன் வம்பு.சொன்ன ஓத்துட்டு போயிடுவோம் .நமக்கு நம்ம ஹெல்த் முக்கியமுங்கோ --உங்களுக்கு ?????)))) சட்டென்று பார்ப்பதற்கு சமந்தா + ஸ்னேகா மாதிரி ஹோம்லி லுக் .நிச்சயம் திரும்பி பார்க்க தூண்டும் அழகி .மஞ்சள் பொற்சித்திரம் .இடை வரை தாண்டிய கருங்கூந்தல் .மான் ,மீன் கலந்த கலவையாக கண்கள் .அதில் இட பட்டு இருந்த மை கண்களுக்கு தனி அழகினை கொடுத்தது .ஸ்ட்ராபெர்ரி ,செர்ரி ,ரோஜா இதழ்கள் தேனில் ஊற வைத்த எபெக்ட் கொடுக்கும் சிவந்த இதழ்கள் .புருவத்தின் மேல் உள்ள மச்சம் அந்த ப்ரஹ்மனே திரிஷ்டி பொட்டு வைத்தது போல் இருந்தது.கொடி இடை /ஸிரோ சைஸ் உடல் அமைப்பு எல்லாம் இல்லை .நமது பக்கத்துக்கு வீட்டு பெண்கள் எப்படி இருப்பார்களோ அப்படி பட்ட உடல் அமைப்பு .உயரத்தில் மட்டும் 5 '8 இருப்பாள் .
மாசு மரு வற்ற சருமம் .chubby சீக்ஸ் .dimpled சின்.சில பல சினிமா பாடல்களில் பெண்களை வர்ணிப்பார்களே அவை இவளுக்கு பொருந்தும் .அதை சிச்சுவேஷன் சாங் போலெ பாட இரு ஜீவன்கள் பின்னால் வருவாங்க.குணத்திலும் தங்கம் .மற்றவர்களுக்கு பார்த்து பார்த்து நல்லது செய்வதில் மதுராக்கு நிகர் மதுரா தான் .கொஞ்சம் வாலு ,கொஞ்சம் அப்பாவி .
Iஇந்த அழகு சிலை தான் நிஜ சிலையாக மாறி பேச வார்த்தை கிடைக்காமல் வாயை திறந்து திறந்து மூடி கொண்டு இருந்தாள் .அத்தனை தவிப்பு ,திணறல் ,அதிர்ச்சி ,கலக்கம் அவளிடம் .கண்கள் கலங்கி நின்ற அவளின் கோலம் பார்க்கும் யாருக்குமே நெஞ்சை பிசையவைக்கும் .குழந்தை தனமான அந்த குமரியை அவள் வீட்டினரே,நண்பர்களோ கூட அழ வைத்தது இல்லை .
ஆனால் மதுராவை கலங்க வைத்து அவளின் தவிப்பு ,திணறலால் பாதிக்க படா தவளாய் ,அதை அலட்சியம் செய்தவாறு அந்த மாபெரும் ஹாலில் அவள் அமர்ந்து இருந்தாள் .கையில் நுரை பொங்கிய சாம்பைன் (champagne )க்ளாசில் வாய் வைத்து உறிஞ்சிய வாறு அடிக்கண்ணில் மதுராவின் நிலையை சுவைத்து கொண்டு இருந்தாள் சோனா .அவள் அமர்ந்து இருந்த விதம் படையப்பா நீலாம்பரியை ஓத்து இருந்தது .திமிர் ,தெனாவட்டு ,அகம்பாவம் ,டாம்பீகம் ,சுயநலத்தின் ஒட்டு மொத்த அகராதி அவள் .ஆயிரம் நீலாம்பரி ,சொர்ணக்காவின் கலவை குணத்தில் ,நடத்தையில் .
சோனா மதுராவின் பெரியப்பா சேதுபதியின் மகள் .'இந்தர் இண்டஸ்ட்ரீஸ் 'கஜேந்திரனின் பேத்தி .மாபெரும் கோடீஸ்வரி .அளவுக்கு அதிக பணம் ,கஜேந்திரனின் வளர்ப்பு என்று மற்றவர்களின் வலி ,வேதனை ,துயரம் என்று எதற்குமே சற்று கூட இளக்கம் காட்டாத ராட்சச ஜென்மம் .தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் ,அப்படி நடக்க எந்த எல்லைக்கும் போகும் வெறித்தனம் சோனவிடம் உண்டு .
அவளை போலவே ஐந்து அல்லக்கைகள் அந்த ஹாலில் அமர்ந்து இருந்தன .சோனாவின் பணத்திற்காக உடன் சுற்றும் காக்கை கூட்டம் .குணத்திலும் சோனவை போன்றவர்கள் .ஒன்று மட்டும் உறுதி நிச்சயம் இவர்கள் பெண்களே கிடையாது .பெண்களின் எந்த குணமும் இவர்களிடம் கிடையாது .ஆடை என்ற பெயரில் அறுவரும் கெர்ச்சிப் அணிந்து இருந்தனர்என்று சொன்னால் மிகையாகாது .மறைக்க வேண்டியவை வெளிச்சம் போட்டு காட்ட பட்டு இருந்தது .பெண்ணியம் பேசுபவர்களே முகம் நிச்சயம் சுளிப்பார்கள் .தரை முழுவதும் மது பாட்டில்கள் .டேபிள் மேல் குவிந்து கிடந்த சிகரேட் துண்டுகள் .இந்த மாதிரி பெண்களிடம் தவறு ராட்சசிகளிடம் மாட்டி விழி பிதுங்கி நின்று இருந்தாள் மதுரா .
"மதுரா ! அம்மா சொல்வதை கேளுமா .அப்பா கிட்ட நீயே சொல்லி இதை தடுக்க பாரு மா .தேவை இல்லாம உன் தலையில் நீயே மண்ணை அள்ளி போட்டு கொள்ளாத ."என்று தன் தாயார் பவானி ஒரு வருடத்திற்கு முன் ,பல முறை தன்னிடம் கெஞ்சியது நினைவுக்கு வர மதுராவிற்கு இதயம் வலித்தது .அத்தனை தடவை கெஞ்சினாரே !!!.துஷ்டனை கண்டால் தூர விலக வேண்டும் என்று சொல்வார்கள் .சோனாவை கண்டதும் மாநிலமே மாறி இருக்க வேண்டும் என்று நிரூபித்து விட்டாளே !!!!தன் தாய் உண்மையில் ஒரு தீர்க்க தரிசி .இப்படி ஒரு நிலை மகளுக்கு வரும் என்று எண்ணி தானே அவர் பயந்தது .அவர் பயம் உண்மையாகி விட்டது .உண்மையாக்க பட்டு விட்டது
உடன் பிறந்த ரகு ,அவளுக்கு என்று மணம் முடிக்க பெரியவர்களால் சிறு வயதில் இருந்தே பேச பட்ட கார்த்திக் ,அவ்வளவூ ஏன் சோனாவின் பெற்றோர் ஆனா சேதுபதி -கனகா கூட "வேண்டாம்"என்று எவ்வளவூ தடுத்தார்கள் ?????யார் பேச்சையும் கேட்காமல் முடிவூ எடுத்த தந்தை சங்கரனின் வார்த்தையை மறுத்திருக்க வேண்டுமோ ???கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல சோனாவின் உண்மை முகம் தெரிந்த பிறகு புலம்பி என்ன செய்ய முடியும் ????
"ஆஸ்திரேலியாவில் இதை விட சம்பளம் அதிகமான வேலை வாங்கி தருகிறேன் ராணி மா .ப்ளீஸ் .....இது தேவை இல்லாத வேலை .சரியா படலை .மனசு பதறுது ராணி .வேண்டாம் மா "என்று காலில் விழாத குறையாக கெஞ்சினனானே கார்த்திக் -அவன் பேச்சை மதிக்காதற்கான தண்டனை இதோ.
தந்தை நல்லது செய்கிறார் ,பிரிந்த குடும்பம் ஒன்று சேர பாடுபடுகிறார் என்று நினைத்தது தப்போ !!!!இந்த சோனாவும் கூட தான் குடும்பம் ,பாசம் ,அன்பு ,தன் தந்தை சேதுபதி செய்த தவறுக்கு தண்டனை,பிரெயிஸித்தம் ,என் தங்கை ,தங்கை ஒரு கோவில் ,என் தங்கை மதுரா என்று பக்கம் பக்கமாக டயலாக் விட்டாளே !குடும்பம் ,தங்கை என்று ஒரு வருடம் முன்பு உருகி வழிந்தவளா இன்று இப்படி பேசியது ????மற்ற ஜந்துக்களையும் பேச விட்டு ரசித்தது ???
"இன்னொரு உயிரை கொன்று புசிப்பது மிருகமடா .......இன்னொரு உயிரை கொன்று ரசிப்பது அரக்கனடா "இந்த பாடல் வரிகள் சோனாவிற்காகவே எழுதினார்களோ ?????
காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகள் .அதுவும் ஒவ்வொரு பெண்ணும் உயிருக்கு மேலாக மதிக்கும் ,உயிரை கொடுத்தாவது காப்பாற்ற துடிக்கும் ஒழுக்கத்தை ,கற்பை ,மானத்தை அல்லவா வாய் வார்த்தையால் குதறி எடுத்து விட்டனர் .
PENANCE WILL CONTINUE .............. தவம் தொடரும்.....................
Last edited: