• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 25(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"என்ன என்னவூ உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று குதிச்சே .....இப்போ என்ன .....உங்க வீட்டு பெண்ணிற்கு எதை செய்யணும்ன்னு தெரியும் என்று சொன்னீங்க ....எதை செய்ய போறீங்க ...ஈம காரியத்தையா ?????இதோ நிற்கிறாங்களே அவ அப்பா ,அம்மா ,பாட்டி இவங்களுக்கு கூட அவளுக்கு எது தேவை ,தேவை இல்லை என்று தெரியாது .....ஏதோ ஒரு பிசாசிற்கு பயந்து இந்த பாசக்கார பெண்ணை ஹாஸ்டெலில் போடீங்களே ...இது தான் உங்க வீட்டு பெண்ணுக்கு நீங்க செய்யும் நல்லதா ????சரி அப்படி தான் போடீங்க .....பெரியம்மா ,பாட்டி மாறி மாறி தனி வீடு எடுத்து கூட இருந்து இருக்கலாம் தானே .....அது என்ன அந்த "கஜா போர்ட் ;என்ன "பெரிய சொர்கபுரின்னு அதை விட்டு வராம இந்த பச்சை மண்ணை கண் காணாத தூரத்தில் விட்டிங்க .....எல்லோரும் இருந்தும் தனக்குனு யாரும் இல்லை என்று பல முறை ஊர்வசியிடம் புலம்பி இருக்கா அது தெரியுமா உங்களுக்கு ...ஒரு அனாதை கூட யாரும் இல்லாமல் தான் அனாதையாகி இருப்பாங்க .....ஆனா நீங்க .......பொத்தி பாதுகாக்க வேண்டியவளை வேண்டாத பொருள் போலெ தூக்கி அடித்தது அதுவும் ஒரு பிசாசுக்காக .............."என்று பொரிந்து தள்ளினாள் .

"மதுரமா ......வீடுன்னு எடுத்து தங்கினா அங்கேயும் சோனா வந்து தங்கி இந்த பெண்ணை படுத்தி எடுப்பான்னு தான் ஹாஸ்டெலில் போட்டோம் .......எனக்கு பிறந்தது ரெண்டு ...அதில் ஒன்று தான் எனக்குன்னு இல்லாம போச்சு .....மீதம் இருக்கும் இவ ஒருத்தியாவது கடைசி வரை எங்க கூட இருக்கனும் என்று தான் மதுரா பூரணியை ஹாஸ்டெலில் விட்டோம் .....சந்தோசமா இல்ல ......வேறு வழி இல்லாம தான் .....சோனாவால் ஏற்கனவே இரு பெண்களில் ஒருத்தி இறந்துட்டா ...இனோருத்தி பைத்தியக்கார ஹாஸ்பிடலில் இருக்கா .அந்த நிலைமை பூரணிக்கு வர வேண்டாம் என்று தான் ..........அதுங்க அரக்க ஜென்மம் .....தானும் அன்பாய் இருக்காது ...மத்தவங்களையும் நம்மிடையே அன்பா இருக்க விடாதுங்க ......நாங்க இருப்பது புதை குழி .....அவங்களா விடுதலை கொடுத்தா தான் உண்டு ......நாங்க தான் மாட்டிட்டு முழிக்கறோம் ....இந்த புள்ளையாவது அந்த கொடுமை இல்லாமல் இருக்கட்டும் என்று தான் அப்படி விட்டோம் ......பாசம் இல்லாம இல்லை .....பாசம் இருக்கறதுனால தான் ...."என்ற பூரணி வாய் விட்டு கதறி அழுதார் .

அங்கு இருந்த அனைவரின் கண்களும் கலங்கி தான் இருந்தன .

"உனக்கு தெரியுமா மதுரா ....வீடு முழுக்க அவங்க மூன்று பேர் போட்டோவா இருக்கும் .....ஆன எங்க பூரணி போட்டோ ஒன்று கூட நாங்க வைத்து இறுக்கலை ......இவ போட்டோவை பார்த்துட்டு ,இவ அழகை பார்த்துட்டு இவளை ஏதாவது செய்து விட போகிறா என்ற பயம் ......எங்களுக்கு மட்டும் வேண்டுதலா இல்லை ஆசையாமா ..இந்த குழந்தை பெண்ணின் அருகே இருப்பதை விட்டு அவங்க கூட இருக்கணும்னு ........எங்களுக்கு வேறு வழி இல்லை .....பூரணிஎன்ற பெண் அந்த குடும்பத்தில் இல்லை என்ற மாயை உருவாக்கி வைத்து இருக்கிறோம் ......"என்றார் மரகதம் குரல் தழு தழுக்க.

"போன வருடம் நாங்க எல்லோரும் -ஐ மீன் அப்பா ,அம்மா ,பாட்டி ,பூரணி எல்லோரும் tour போய் இருந்தோம் மது .நல்ல வேளை பூரணியை ஹாஸ்டெலில் விட்டுவிட்டு தான் அங்கு அந்த நரகத்திற்கு திரும்பினோம் ......உள்ளே கூட நாங்க நுழையலை ....அதற்குள் சோனா ....என்ன ஹனிமூன் எல்லாம் என் தங்கையோடு முடிந்ததா என்று நடு ஹால்லில் நிற்க வைத்து கேட்டா .....இது மாதிரி வார்த்தை எல்லாம் பூரணி தாங்குவாளா ...... என் தங்கை அவ ...எனக்கு ரூபிணியும் ,பூரணியும் வேறு இல்லை மது .....ஆனா அது எல்லாம் சோனாவிற்கு புரியுமா சொல்லு ....எனக்கு இவளை ரொம்ப பிடிக்கும் ....வளர்ந்த குழந்தை இவ .....ஆனா இவர்கள் போய் பார்க்கும் போது அந்த tourக்கு பிறகு நான் இவளை பார்க்க போவதே இல்லை ..... .....இந்த கொடுமை எல்லாம் அவ பட வேண்டாம் என்று தான் ,அவளாவது நிம்மதியா இருக்கட்டும்னு தான் இவங்க ஹாஸ்டெலில் விட்டார்கள் ."என்றான் விஜய் கண்கள் கலங்கி .

"ஆமாம் மதுரா ...இவங்க எல்லோரும் சொல்வது ரொம்ப கொஞ்சம் தான் .....என் மக பாசம் இல்லாம வேண்டும் என்றால் வளர்ந்து இருக்கலாம் .....ஆனா அவ பாதுகாப்பா ,இந்த கேவலங்களின் நிழல் படாம ,தினம் செத்து செத்து பிழைக்காமல் இருக்கா அதுவே போதும் ......பாசத்தை கூட வெளிய காட்ட முடியாதா துரதிஷ்டசாலிங்க நாங்க .....இதோ இவன் மகனாய் இருக்கான் ...அதனால் பைத்தியம் பிடிக்காமல் ,உயிரோடு இருக்கோம் .....அவ்வளவூ தான் ...."என்றார் சேது .

"அம்மா !"என்று அழுத படி கதவை திறந்து கொண்டு ஓடி வந்து அவர்களை அணைத்து கொண்டு கதறி அழுதாள் பூரணி .

பூரணி தான் அநாதை இல்லை ....அந்த எண்ணமே அவளுக்கு மறைய வேண்டும் என்று தான் மதுரா ,கார்திக்க்கோடு மேல் ஏறி வரும் போதே பிளான் செய்து விட்டாள் .இரு கோடுகள் தத்துவம் தான் .தன்னுடைய பிரச்சனை பெரிது என்று வருந்தி கொண்டு இருப்பவளுக்கு ,அவள் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் பூதாகாரத்தை விளக்கி விட ,பூரணி தனக்காக தான் அவர்கள் விலகி இருக்கிறார்கள் என்ற உண்மை உணர்த்த பட்டது

கார்திக்க்குக்கு சிக்னல் தர தான் இவர்களை அழைத்து திரை சீலையை மதுரா விலக்கியது .ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஆக இவர்களுக்கு கார்த்திக் பூரணியை காட்டியது போல் ஆனது ,கார்திக்க்குக்கும் சிக்னல் கொடுத்தது போல் ஆனது .இவளின் எண்ணப்படி திரை சீலை மூடப்பட்ட உடன் ,கார்த்திக் பூரணியை அழைத்து கொண்டு அறைக்கு உள்ளே வந்தான் .கனமான திரை சீலை இவர்களை மறைத்து விட அங்கு நடந்த சம்பாஷணைகளை பூரணி தன் காதால் கேட்டு அது வரை 'தனக்கு என்று யாருமே இல்லை 'என்ற எண்ணத்தை உடைத்து வெளி வந்தாள் .

(அம்மா .....தாயே ...நீ கிடைக்கும் பாலில் எல்லாம் சிக்ஸர் அடிக்கறே .....உன்னிடம் மாட்ட போவது எந்த அப்பாவி ஜீவன் என்று தெரியலையே:oops::oops::unsure::unsure::unsure: ....யாராய் இருந்தாலும் பாவம் அவங்க ....கார்த்திக் ...நீ ரொம்ப உஷாருதேன்....தங்கச்சின்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டே ....இவளை வைத்தே உனக்கு லைப் கிடைச்சுடுச்சு ....)

வெகு நேரம் ஆனது பாட்டி ,மகள் ,பேத்தியின் அழுகை நிற்க ....விஜயும் ,சேதுவும் கூட கண்ணீர் வழிய தான் நின்றனர் .

"சோ பூரணி மேடம் .....இப்போ புரிந்ததா உங்க அப்பா ,அம்மா ,பாட்டி ,உங்க கருணா அண்ணன் எல்லோரும் உங்க மேல பாசமா தான் இருகாங்க ....உங்களை உங்க அருமை சகோதரி சோனா தேவியாரிடம் இருந்து காக்கவே உங்களை ஹோஸ்டேலில் விட்டது ....பாசம் இல்லாம இல்லை .....என்னையும் இவங்க எல்லோரும் வேலையை விட்டு போ போ என்று சொல்லாம இருந்ததே இல்லை .......சோனா கிட்டே போனேன் .....தன் வேலையை காட்டிட்டா .....ஒரு வருசமாய் உங்க கருணா அண்ணன் எனக்கு பாடி கார்ட் வேலை பார்த்துட்டு தான் இருக்கார் ....அதையும் மீறி ரெண்டு நாளுக்கு முன் ஒரு பொம்பளை பொறுக்கி சுமன் என்பவனிடம் வேறு அந்த பிசாசு மாட்டி விட்டு இருக்கா ......சந்தோச பட்டுகோ ....இந்த கொடுமை எல்லாம் உனக்கு நேரவில்லை என்று ......இன்னொரு விஷயம் உனக்கும் கார்திக்க்கும் மேரேஜ் செய்ய இவங்க எல்லோரும் ஒற்று கொண்டாங்க ....சோ உன் ஆளோடு ஹாப்பி ட்ரீம்ஸ் .....இந்த லெட்டரை கிழித்து போடட்டுமா ...இல்லை பிரேம் செய்து கொடுக்கட்டுமா ....நடு ஹாலில் மாட்டி வைத்துக்கறீயா ....இல்லை வேறு ஏதாவது பிரச்சனை வந்தால் யூஸ் செய்ய பயன்படும் .....என்ன சொல்றே ...."என்ற மதுராவை ஓடி வந்து அணைத்து கொண்டவள் மதுராவின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் இட்டாள் .

(அட சே ....மதுராவுக்கு விஜய் ,இல்ல சூர்யா முத்தம் கொடுப்பாங்கன்னு வெயிட் செய்துட்டு இருந்தா ....இப்படி எல்லாம் ஒரு சீன் பார்க்க வேண்டி இருக்கு .....என்ன கொடுமை சார் இது .....சாரா டார்லிங் கேட்டா மாதிரி ஒரு குஜிலிப்பானே இல்லாம போகுது .....பிரச்சனை ...பிரச்சனை .....லாட்ஸ் of பிரச்சனை மட்டும் தான் ....ஒரு ரொமான்ஸ் ,ஒரு லவ் எதுவும் இல்லை ....மீ கோபம் ....:rolleyes::rolleyes::rolleyes::devilish::devilish:)

அதற்குள் ஊர்வசி உள்ளே வர ,"ஹே பூரணி ....அங்க பாரு ....அந்த புள்ள ஊர்வசி நீ எனக்கு கிஸ் கொடுத்துட்டு இருக்கறதை பார்த்து ஸ்டன் ஆகி நிக்குறா ......இங்கன பாரு நான் கார்த்திக் இல்லை ....உணர்ச்சி வசப்பட்டு கார்த்திக்குன்னு நெனைச்சு என்னைய கட்டி பிடித்து முத்தம் கொடுத்துட்டு இருக்கே .....அங்க பாரு அந்த மங்கூஸ் மண்டையன் என்னை முறைச்சுட்டு இருக்கான் .....இது எல்லாம் எனக்கு தேவையா .....ஊர்வசி டியர் ....இவங்க கிட்டே பேசி பேசி பசி எடுக்குது ...சோ என்ன செய்யரே ....எனக்கு போய் இன்னொரு பிளேட் புளியாவரை ,கேசரி வைத்து எடுத்துட்டு வந்துடு....அப்படியே வீட்டுக்கு பார்ஸலும் கட்டிட்டு பேபி ....ஒகே "என்றாள் மதுரா .

கார்த்திக் கடுப்பாகி அவள் தலையில் கொட்டினான் ."பக்கி ...பக்கி மானத்தை வாங்காதே பக்கி ......"என்றான் .

"டேய் யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டே நீயி .....இதோ இந்த நாள் உன் டைரியில் குறித்து வைத்துக்கோ கார்த்திக் .....இனி இந்த மதுராக்ஷி டாட்டர் of சங்கரன் ,கிராண்ட் டாட்டர் of முத்துவேல் இங்கே சாப்பிட மாட்டேன் ....."என்றாள் முகத்தை கோபமாக வைத்து கொண்டு .

"கார்த்திக் என்னப்பா இது ...பசிக்குதுனு சொல்ற பொண்ணை போய் .....நாங்க வந்த உடன் அவ சாப்பிடுவதை நிறுத்தி எழுந்துட்டா பா ......புள்ள கோவிச்சுட்டா பாரு "என்றார் மரகதம் .

"யாரு அவ கோவிச்சுகிட்டா .....பாட்டி கொஞ்சம் அக்கட சூடு ...."என்றான் கார்த்திக்

திரும்பி பார்த்த அனைவரும் சிரித்து விட்டனர் .ஒரு டேபிள் மேல் ஏறி அமர்ந்து ஊர்வசி எடுத்து வந்த சாப்பாட்டை ரவுண்டு கட்டி சாப்பிட்டு கொண்டு இருந்தது சாட்சாத் மதுராவே தான் .

"என்னவோ டைரியில் குறித்து வைத்துக்கோ என்று அண்ணாமலை ரஜினி ரேஞ்சுக்கு டயலாக் விட்டே .....இப்போ என்ன செய்துட்டு இருக்கே "என்றான் விஜய் வந்த சிரிப்பை அடக்கிய படி .

"ஆமாம் சொன்னேன் ....ஆனா என்ன சொன்னேன் ....அங்கே சாப்பிட மாட்டேன் என்று தானே சொன்னேன் ....நான் இங்கே தானே சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் ...."என்றவளை கண்டு கார்திக்க்கும் விஜயும் நற நற வென்று பல்லை கடித்தனர் .....அவர்களால் முடிந்தது அது மட்டும் தான் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"ஆமாம் ....தம்பி கார்த்திக் ....என்ன சொன்னீங்க ...நான் பக்கியா.....திருப்பியும் உனக்கு ஒரு போட்டோ செஷன் சங்கு கிட்டே வைக்கணும் போலெ இருக்கே ....சரி சரி .....கோசு ,முரு,சங்கு முன்னாடி கண்ணை கசக்கிட வேண்டியது தான் .....பாருங்கத்தை ...இந்த கார்த்திக் என்னை நம்ப வைத்து மோசம் செய்துட்டு ...இப்போ யாரோ ஒரு பூரணி பின்னால் அலையறான் ......டயலாக் சரியா இருக்கா கார்த்திக் ...இல்லை வேறு ஏதாவது ஆட்ட் செய்யணும் என்றாலும் சொல்லு ....பண்ணிடலாம் ..."என்றாள் மதுரா .

28-1398665259-samantha-03.jpg

"தாயே ......உன்னை பற்றி மறந்து போய் வாய் விட்டுட்டேன் .....மன்னிச்சுடு பத்ரகாளி .....ஊர்வசி அந்த புளியாவரை அண்டா எங்கே இருக்குன்னு சொல்லுமா ....போய் தூக்கிட்டு வந்துடுறேன் ...இல்லை இந்த பரதேவதை எனக்கு ஆப்பு என்ற பெயரில் பெரிய கடப்பாரையை சொருகிடுவா .....என்னை வேறு நம்பி ஒரு பொண்ணு இருக்கு .....மதுரா உனக்கு பிடிச்ச ஐஸ்கிரீம் பத்து பேமிலி பாக் பெரிய அண்டா சைசுக்கு வாங்கி தரேன் ...என் மீது கருணை காட்டு ......"என்றான் கார்த்திக் கை எடுத்து கும்பிட்டு .

அங்கு இருந்தவர்கள் வாய் விட்டு சிரித்தனர் .

"வாயை திறக்கும் முன் இந்த பயம் இருந்து இருக்கனும் .....சரி போனா போகுது ...பூரணிக்காக விடறேன் ...பட் நீ சொன்ன ஐஸ்கிரீம் பேக் ---பத்து மறக்கவே கூடாது ....இப்போ பொழைச்சி போ ..."என்றவள் சாப்பிடுவதில் தன் கவனத்தை திருப்ப கார்த்திக் நிம்மதி பெருமூச்சு விட்டான் .



"என்ன கார்த்திக் அவ கிட்டே இப்படி பம்முறீங்க .....அரிகாப்புடி சைஸில் இருக்கா ...அவளுக்கு பயந்துட்டு இருக்கீங்க .....நம்ம ஆண் சங்கத்திற்கே களங்கம் ..."என்றான் விஜய் கார்த்திக் தோளில் கை போட்டு .

"கருணா சார் ....சத்தமா சொல்லிடாதீங்க .....நீங்க காலி ......"என்றவன் மதுரா இங்கே கவனிக்கவில்லை என்பதை கண்டு ,நிம்மதி ஆனவன் ,"சார் !வேலியில் போகும் ஓணானை டவுசருக்குள் விட்டுட்டு குத்துதே ,குடையுதேன்னு அலறி பிரயோஜனம் இல்லை சார் ......அவ கிட்டே மாட்டி நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கும் நல்ல எண்ணத்தில் சொல்கிறேன் .....இப்படி எல்லாம் பேசி வைக்காதீங்க .....இந்த திருமணத்தை நிறுத்த தெரியாத்தனமா ஆபீஸ் collegue கூட எடுத்த போட்டோவை காட்டினேன் .....வச்சா பாருங்க ஆப்பு சங்கு மூலமா ......ஆறு மாசம் அவர் அடிச்ச வேப்பிலையில் ஆஸ்திரேலியா ஓடினவன் தான் ரெண்டு நாள் முன்னாடி தான் திரும்பினேன் ......இப்போ கேளுங்க .....சொல்றேன் ...ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரோதெரஸ் அண்ட் சிஸ்டேர்ஸ் ....."என்றான் நொந்த குரலில் .

"என்ன கார்த்திக் சேதாரம் பலமோ ..."என்றான் விஜய் நக்கலாக ....

"கணக்கு வழக்கே இல்லை ...."என்றான் கார்த்திக் .

சேது கார்திக்க்கை கூப்பிட அவரிடம் அவன் சென்று விட ,விஜய் மதுராவிடம் சென்றான் .

"இன்னும் வெளியே போனா மத்தவங்க பர்ஸ் சப்பிட்டே காலி செய்யும் பழக்கம் நிறுத்தலையா நீ .....பத்து பேக் ஐஸ்கிரீம் ....உனக்கே ஓவர் ரா இல்லை .....கொஞ்சம் அடங்கு ..."என்றான் யாருக்கும் கேட்காத குரலில் .

அடிக்கண்ணில் விஜயயை பார்த்தவள் எதையும் பேசாமல் சாப்பிட்டு கொண்டு இருந்தாள் ."என்ன சொன்னது கேட்டதா ......ஓவர் ரா வாலு வெளியே வருது .....கார்திக்க்குக்கு நான் இருக்கேன் ....."என்றான் விஜய் நக்கலாக .

அவளை கடுப்படித்து விட்டதாக நினைத்து அவன் திரும்ப ,"மிஸ்டர் ....விஜய கருணாகரன் ...ஒன் செகண்ட் .....கொஞ்சம் இங்கே வாங்க .....வெளியே போனா நான் சப்பிட்டே மத்தவங்க பர்ஸ் காலி செய்வேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும் சார் ....."என்றாள் ஒரு மாதிரி குரலில் .
Samantha-signs-a-remake-film.jpg

அதிர்ந்து திகைத்து நின்றான் விஜய் .ஸெல்ப் ஆப்பு தானே வைத்து கொண்டோம் என்று புரிய ஆடு திருடின கள்ளன் மாட்டியது போலெ விழித்து நின்றான் ."அதான் ஒரு வருசமாய் உனக்கு பாடிகார்ட் வேலை செய்யறேன் இல்லை ...தெரியாதா உன் வேலை எல்லாம் ....."என்றான் விஜய் சமாளிப்பாக .

"இந்த நொண்டி சாக்கு எல்லாம் எவளாவது காதில் பூ சுத்தி இருப்பா மிஸ்டர் விஜய் ...அவ கிட்டே சொல்லுங்க .....உங்க கிட்டே ஏதோ ஒன்று ஆரம்பம் முதலே சரி இல்லை .....எதையோ மறைக்கறீங்க ......எல்லோர் கிட்டவும் இயல்பா இருக்கும் நீங்க என்னிடம் மட்டும் atrificial லா உங்க குணத்திற்கு எதிராக தான் இருக்க ட்ரை செய்யறீங்க ......ஒரு 75% நம்பும் படியாக இருக்கு .....ஏதோ மறைக்கறீங்க ......சீக்கிரம் கண்டு பிடிக்கறேன் ....."என்றவளை கண்டு மிடறு விழுங்கினான் விஜய் .(மாட்டினியா ....விஜய் .....கேட் அண்ட் மௌஸ் விளையாட்டு ஆரம்பம் .)

"சும்மா நீயே கற்பனை செய்துட்டு உளறாதே ....கிளம்பும் வழியை பாரு ..."என்றான் கடுகடு முகத்தோடு

"விஜய் !எங்க அம்மா ஒரு பழமொழி சொல்வாங்க .....சூரியன் ,நிலா ,உண்மை எவ்வளவூ தான் மறைத்து வைத்தாலும் மறையாது .....எப்படியாவது வெளியே வந்தே தீரும் ....இது நான் சொல்லலை ...புத்தர் சொன்னது ......தலைவர் mgr கூட ஒரு பாடலில் ,"என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ...இருட்டினில் நீதி மறையட்டுமே ....தன்னாலே வெளி வரும் தயங்காதே ...ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே "என்று பாடி இருக்கிறார் .....இப்போ இது வரை நார்மல் ஆக பேசி கொண்டு இருந்த நீங்க ,தான் உங்க உண்மை முகம் .....கேள்வி கேட்டதும் சிடுசிடுத்தீர்களே அது முகமூடி .....நீங்க சாதரணமாக பேசி இருந்தா கூட இந்த அளவூ உறுத்தி இருக்காது .......நிச்சயம் கண்டு பிடித்தே தீருவேன் ....தட்ஸ் எ சாலென்ஜூ ."என்றவள் கை கழுவ சென்று விட விஜய் திக்ப்ரமை பிடித்து அந்த இடத்திலேயே நின்று விட்டான் .

அவனுக்கு தெரியவில்லை இனி மேல் அணு ஆயுத போர் அவனுக்கும் அவளுக்கும் இடையே மூல போகிறது என்பதை .இத்தனை வருடம் அவன் கட்டி காப்பாற்றிய ரகசியம் வெட்ட வெளிச்சமாக போகிறது .....சூர்யாவையும் மதுராவையும் தானே சேர்த்து வைத்து மணமேடை ஏற்ற போவதை .....

கை கழுவியவாறு முன் பக்க கண்ணாடியில் ,பின்னால் சிலை மாதிரி நின்று கொண்டு இருந்த விஜய்யின் முகபாவங்களை கவனித்து கொண்டே இருந்தாள் மதுரா என்பதை உணராத விஜய் ,அவள் சொல்லி சென்றவற்றால் குழம்பி போய் நின்றான் .

'சோ sad விஜய் .......இப்படி 'எங்க அப்பா கூதிருக்குள்ள இல்லைன்னு' காமெடி பண்றியே ......போட்டு வாங்குவது கூட தெரியாத பச்சை புள்ளையா நீயி ..........உன் ரியாக்ஷன் பார்த்தா அப்போ ஏதோ இருக்கு .....சோனா காரணம் இல்லாம என்னை டார்கெட் செய்யலை .......ஏதோ இருக்குன்னு சந்தேக பட்டு தான் பிளான் போட்டு இருக்கா ........இதுல உன்னை கண்டு அந்த கஜா அண்ட் கோ பயப்படுத்து ......இரு மவனே ...மாட்டினே ....ஒரு வருஷமா ஆபீஸ்லே படுத்தி எடுத்தே இல்லை ......கவனிச்சுக்கிறேன் .......'என்று மனதிற்குள் முடிவு எடுத்தாள் மதுரா .
samantha_best_wallpaper.jpg

PENANCE WILL CONTINUE.....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top