• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 26(5)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
காதல் இல்லா காமமும் ,காமம் இல்லா காதலும் என்றுமே வாழ்க்கைக்கு வண்ணம் சேர்க்காது .ஒரு நாணயத்தின் இரு பக்கமாய் இணை பிரியா மெல்லிய கோடே இரண்டும் .அதை விஜய் உணர்ந்தானா என்பது கேள்விக்குறியே .ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளை நெருங்கவோ ,தொடவோ ஒரு ஆணால் முடியாது .மதிப்பு ,நம்பிக்கை ,காதல் இல்லாமல் எந்த பெண்ணும் ஒரு ஆணை நெருங்குவதும் இல்லை,நெருங்க விடுவதும் இல்லை . .அது புரியாமல் ,அவனின் தாழ்வு மனப்பான்மை ,குற்ற உணர்ச்சி ,மதுராவை விலக்க வேண்டிய கட்டாயம் என்று அவனுக்கு அவனாகவே போட்டு கொண்ட வட்டத்தில் நின்று காதலுக்கு அவன் காமத்தின் முகமூடி அணிவிக்க முயன்று கொண்டு இருந்தான் .
cc2817736c6ca5fa10e42ecab2455acd.jpg
பல வருட காதல்,பல வருடமாய் அவன் புதைத்து வைத்து இருந்த காதல் மதுராவின் அருகாமையில் அவன் தடைகளை உடைத்து வெளிவர ,அதனை கட்டுப்படுத்த முடியாமல் தோற்றவன் கடைசி ஆயுதமாய் அந்த காதலையே பணயம் வைத்து அதனை கொண்டே மதுராவை தன்னிடம் இருந்து விலக்க தான் அவளை அணைத்தது ,முத்தம் இடுவது எல்லாம் .ஆனால் அவன் மறந்து போனது எல்லை மீறுவதும் ,கட்டுப்பாடு அவன் இழப்பதும் மதுரா ஒருத்தியிடம் மட்டுமே என்பதை .

சில விஷயங்கள் ஏன் நடக்கிறது என்பது என்றுமே நம் அறிவுக்கு எட்டுவது இல்லை .இருவர் வாழ்க்கை பயணத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற விதி இருந்தால் எந்த தடைகள் வந்த போதும் ,எத்தனை இழப்புகள் வந்த போதும் அவர்கள் சேருவது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று .அவளின் வாழ்வுக்காக தான் தான் விஜய் வில்லன் வேஷம் போட துணிந்தது .

மானத்தோடு விளையாடும் எந்த ஆண்மகனையும் பெண் ஏற்க மாட்டாள் என்ற குருட்டு நம்பிக்கையில் அவன் காய் நகர்த்தியது .அந்தோ பரிதாபம் .அவன் செயலே அவனுக்கு எதிரியாக மாறி கொண்டு இருந்தது .விதியும் அவன் எதிர்காலத்தில் மிக பரிதாபமாக இருவரிடம் தோற்க போவதை ,அதற்கான ஆயுத்தங்களை அவன் செய்வதை கண்டு புன்னகைத்து கொண்டு இருந்தது .

எவ்வளவூ நேரம் கழிந்ததோ ...அவனுக்கே தெரியாது ......தன்னை சமாளித்து கொண்டு அவன் அவளை விட்டு விலகிய போது விதியின் ஆட்டம் ஆரம்பமாகி இருந்தது .

அவன் கைகளில் ,அவன் அணைப்பில் அதிர்ந்து ,திகைத்து ,குழம்பி ,பதறி ,உடல் நடுங்கி கொண்டு இருந்தவளை கண்டு தன் மனதினை கல்லாகி கொண்டு விலகிய விஜய் ,"இப்போவது புரிந்ததா .......இது லஸ்ட் ......எனக்கு உன் மேல் இருப்பது காதல் ,கத்திரிக்காய் எல்லாம் இல்லை ......நான் ரசித்தது உன் மனதை அல்ல ........எனக்கு தேவை பட்டது உன் மனது இல்லை ........இப்பவும் நம்ப மாட்டேன் என்று டயலாக் விடாதே .....ஏதோ தெரிந்த குடும்ப பெண் அச்சேன்னு இத்தோடு விடறேன் ......இனி என்னை நெருங்காதே .....மீறி நெருங்கினால் சேதாரம் உனக்கும் உன் பெண்மைக்கும் தான் .......புரிந்ததா ......இனி இது போலெ லூசு தனமா சீண்டி பார்க்காதே .......இப்போவது ஜஸ்ட் கிஸ் தான் .....அப்புறம் மொத்தமா போச்சேன்னு புலம்ப வேண்டியதாகி விடும் .......understand ?"என்று வெளி புறம் பார்த்தவாறு பேசி கொண்டு இருந்தவன் .வெகு நேரம் அவளிடம் இருந்து பதில் வராது போகவே அவளை திரும்பி பார்த்தவன் ஒரு கணம் தன் கண் முன்னே காண்பது என்ன என்று புரியாமல் ஸ்தம்பித்து போனான் .அவன் இதயம் ஒரு கணம் துடிப்பதையே நிறுத்தி விட்டது .

மதுரா அவள் இருக்கையில் மயங்கி கிடக்க அவள் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது .
1112.jpg

"மது ......மது ....................மது.............."அவனின் அலறல் ,தவிப்பு ,துடிப்பு என்று எதற்கும் அவளிடம் பதில் இல்லை .தண்ணீர் தெளித்தும் அவள் மயக்கம் தெளியவில்லை என்றதும் ,"மது "என்று அடி வயிற்றில் இருந்து உயிர் போகும் குரலில் அலறியவன் அவளை இழுத்து அணைத்தான் .கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அவளை அணைத்து கதறி கொண்டு இருந்தான் .

"மது ....சாரி ...மது ......கண்ணை திற மது .....நான் .......சாரி மது .....ஐ லவ் யு டா .....இது லவ் தாண்டீ .....நீ நல்லா இருக்கனும் என்று தான் டீ .....அய்யோ ....கண்ணை திறடி ......உன்னை இழக்க முடியாது டீ ....முதல் முறை உன்னை இழந்த போதே நான் செத்துடேன் ...........கண்ணை திறடி ......கடவுளே .......மது ...........பேபி......angel ...நான் உன்னை தாண்டீ ...உன் ஒருத்தியை தாண்டி லவ் செய்யறேன் ......உனக்காக தான் டீ காத்து இருக்கேன் ......அய்யோ மது ....ப்ளீஸ் கண்ணை திறடி ....இப்படி பயமுறுத்தாதேடீ ........சாரி ...........சாரி ...மது ....கண்ணை திற ....."என்று அவள் கன்னத்தில் பல முறை தட்டி கூட அவள் கண் விழிக்க வில்லை என்றதும் முழுவதுமாக உடைந்து போனான் .

தொழிலில் ,வாழ்க்கையில் பல முடிவுகளை சூறாவளியாய் எடுத்தவன் ,பலருக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியன் ,பல பெண்களை காத்தவன் ,தொழிலில் முடி சூட சக்ரவர்த்தியாய் ஜொலிப்பவன் ,ஒரு முழுமையான ஆண்மகன் அடுத்து என்ன என்று கை ,கால் ஓடாமல் ,மூளை வேலை நிறுத்தம் செய்து இருக்க பித்து பிடித்தவன் போல் மதுராவை அணைத்து கதறி கொண்டு இருந்தானே ஒழிய அடுத்து செய்ய வேண்டிய எதுவும் அவனுக்கு நினைவுக்கு வரவில்லை .

மதுரா என்ற ஒருத்தியோடு அவன் எண்ணம் ,செயல் எல்லாம் நின்று போய் இருந்தது . (தம்பி மெடிக்கல் எமெர்ஜென்சி என்றால் ஹாஸ்பிடல் கூட்டி போகணும் ...நட்ட நடு ரோட்டில் ,அத்துவான காட்டில் ,காருக்குள்ளே அழுதுட்டு இருந்தால் எல்லாம் சரி ஆகி விடுமா ......இந்த அறிவூ முத்தம் என்ற பெயரில் அவளை ஒரு வழி செய்யும் போதே இருக்கனும் ......)

(அய்யோ இந்த ஹனி கீதாஞ்சலி பட பாட்டு போடும் போதே சந்தேக பட்டேன் .....இவ்வளவூ சுலபமா ரெண்டு பேரையும் சேர விடாதே என்று என்னடா நெஸ்ட் ட்விஸ்ட் வரலையேன்னு பார்த்தேன் ............ஹனி உன் கூட ரொம்ப கஷ்டம் ...ஒரு சூப்பர் ரொமான்ஸ் ...அதை இப்படியா நகம் கடிக்கும் திகில் படமா மாத்துவே ....இதுல situation சாங் வேற ......ஐயோ ஐயோ ...அந்த படத்தில் வருவது போலெ மதுராவிற்கு ஏதாவது குணப்படுத்த முடியாத நோயா ???????பிரைன் டுமெர் ,பிளட் கான்செர் ....இதய டேமேஜ் ......இன்னும் ஒரு வாரம் தான் உயிரோடு இருப்பாளா ......ஐயோ....ஏதோ ஒரு படத்தில் லவர்க்கு ஹார்ட் தேவை படுதுன்னு ஹீரோ தன்னை தானே சுட்டுப்பானே ...இங்கு சாக போவது விஜய்யா சூர்யாவா ......பானு சிஸ் ,மஹா ,சாரா, எல்லோருக்கும் மொட்டை போட்டு ,அலகு குத்தி ,காவடி தூக்க வைக்கிறேன் ,....திருப்பதிக்கு நடக்க வைத்தே வர சொல்றேன் ....கடவுளே மதுராவை காப்பாத்து )
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஒரு சிலர் ஆபத்து என்றால் துணிந்து தன் உயிரையும் பணயம் வைத்து மற்றவர்களை காப்பாற்றி விடுவார்கள் .ஒரு சிலரோ உறைந்து போய் நின்று விடுவார்கள் .விஜய் முதல் வகை சார்ந்தவன் தான் என்றாலும் அந்த நொடி அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மதுராவை அணைத்து கதறி கொண்டு இருந்தான் .அவன் கதறலுக்கு செவி சாய்த்தோ இல்லை மதுராவின் உயிர் பிரியும் வேளை வரவில்லையோ காரின் கண்ணாடி உடைக்க பட்டது வெளி புறம் இருந்து .

மதுராவின் பக்கம் கார் கண்ணாடி உடைக்க பட அதிர்ந்து நிமிர்ந்த விஜய் அங்கு நின்று இருக்கும் தன் ஆல்வினை கண்டதும் தான் அடுத்த மூச்சு சரியாக விட்டான் .

"ஆல் !மது ....என் மது .......இவளுக்கு ஏதாவதுன்னா நான் உயிரோடு இருக்க மாட்டேன் .....என் மதுவை காப்பாத்துடா ....."என்றான் .

நண்பன் இருக்கும் நிலை கண்டு ஒரு கணம் கண்களை அழுந்த மூடி திறந்த ஆல்வின் ,"மதுரா சிஸ்டருக்கு எதுவும் ஆகாது .......ஹாஸ்பிடல் கூட்டி போகணும் ......கீழ் இறங்கி வந்து சிஸ்ட்டரை பின் சீட்டுக்கு தூக்கி போ ......மிருதுளா கிட்ட போன் செய்து நாம ஹாஸ்பிடல் வரும் விஷயத்தை சொல்லு ....நான் காரை எடுக்கறேன் .....கெட் டவுன் விஜய் ......"என்றவன் situation தன் கையில் எடுத்து கொண்டான் .

ஆல்வின் சொல்வதை மட்டும் செய்யும் அளவுக்கு தான் விஜய்யால் அப்போது முடிந்தது .அவன் மதுராவுக்கு நல்லது செய்ய போய் அதுவே வினையாகி விட அவனால் எதையும் நினைக்கவோ அடுத்து என்ன என்று சிந்திக்கவோ முடியவில்லை .மதுராவுடன் மடியில் தாங்கி பின் சீட்டில் விஜய் ஏறி விட ,ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து ஆல்வின் அசுர வேகத்தில் காரை தன் மனைவி மிருதுளாவின் ஹாஸ்பிடலை நோக்கி செலுத்தினான்

மதுராவை மடியில் வைத்து கொண்டு மிருதுளாவிற்கு போன் செய்தான் விஜய் .

"மிருது !எங்கே இருக்கே ......ஹாஸ்பிடல்லா ????......சரி ........சரி ............சொல்வதை கேளு ..........மது ...மது ....மயங்கிட்டா ......நோஸ் ப்ளீட் ஆகுது .....அங்கே தான் வரோம் .....எத்தனை டாக்டர்ஸ் வேண்டுமோ .....எத்தனை நர்ஸ் வேண்டுமோ ......ரெடி செய்துக்கோ ......தெரியலை ........நல்லா தான் பேசிட்டு இருந்தா .....திடீர்னு இப்படி .........."என்றான் விஜய் குரல் நடுங்க .

"அவங்களுக்கு முன்னாடியே ஏதாவது மெடிக்கல் கண்டிஷன் இது போல் இருந்ததா அண்ணா ....ஏதாவது தெரியுமா ????"என்றாள் மிருதுளா .

"மூன்று மாதம் முன் கூட சுபாவோடு சேர்த்து இவளுக்கும் மெடிக்கல் செக்up செய்தோம் .....அந்த ரிப்போர்ட்டில் எல்லாம் நார்மல் தான் வந்துச்சு ......ரிப்போர்ட் ஆல்வின் கிட்டே தான் இருக்கு ......ஹ்ம்ம் உன் ஈமெயில் ஐடிக்கு இப்போ தான் அனுப்பிட்டானாம் ......"என்றான் விஜய் .

"சரி அண்ணா இப்போவும் நோஸ் ப்ளீட் ஆகுதா ????"என்றாள் மிருதுளா .

"ஆகுது ஆனா அதிகமா இல்லை......தண்ணீர் அடிச்சு பார்த்தேன் மயக்கம்தெளியலை மிருது ...."என்றான் விஜய் .

" அண்ணா அவங்களை முன் பக்கமா குனிய வையுங்க ......மூக்கின் மேல் பகுதியை ரொம்ப போர்ஸ் கொடுக்காம அழுத்தி பிடிங்க .....ஆனா அவங்க சுவாசிக்கறதுக்கு தடை பட கூடாது .......மெடிக்கல் ரிப்போர்ட்டில் எந்த ஹெல்த் ப்ரோப்லேம் இல்லைன்னு தான் காட்டுது ......பயப்படும் படியா எதுவும் இருக்காதுன்னா .....நீங்க டென்ஷன் ஆகாம வாங்க ......."என்ற மிருதுளா கால் cut செய்து விட்டு கணவனுக்கு அழைத்தாள் .

"என்னங்க ..........அவங்களுக்கு என்ன ஆச்சு ...?"என்றாள் மிருதுளா .

"தெரியலை .....கருணா கேட்டாலும் பதில் சொல்லும் நிலையில் இல்லை .....அவனை பத்தி தான் தெரியும் தானே ...மதுராவிற்கு ஏதாவது ஒன்று என்றால் அவன் அவனாகவே இருக்க மாட்டானே .....அங்கே வீட்டை காவல் காக்க நிறுத்தி இருந்த ஆள் ,சிஸ்டர் கருணாவை காரின் உள் வைத்து லாக் செய்துட்டு ,பின் அவங்களே காரை ஓட்டிட்டு போறாங்கன்னு இன்போர்ம் செய்தான் ......அதான் கிளம்பி வந்தேன் .....இவன் கார் gps கண்டு பிடித்து வந்து பார்த்தால் சிஸ்டர் மயங்கி கிடக்காங்க .....இவன் கதறிட்டு இருக்கான் ....வெளியே இருந்து எத்தனையோ தடவை தட்டி பார்த்து ,சத்தமா கூப்பிட்டும் இவன் கவனம் இங்கு இல்லை .....அதான் கார் கண்ணாடியை உடைத்து .............இவனை கிளப்புவதற்குள் மறுபடியும் சாக போறேன்னு டயலாக் விட ஆரம்பித்து விட்டான் .....ஹி இஸ் நாட் ஹிம்செல்ப் நவ் .....சிஸ்டருக்கு எதுவும் இருக்காது இல்லை .....போன தடவையே இவனை மீட்டு வருவதற்குள் .........உனக்கே தெரியும் தானே ......"என்றான் ஆல்வின் .

"செக் செய்யாமல் எதையும் சொல்ல முடியாது ஆல் .......சீக்கரம் கூட்டி வாங்க ....."என்றாள் மிருதுளா .

அடுத்த 10-15 நிமிடத்திற்குள் மிருதுளாவின் 'லைப் கேர் 'ஹாஸ்பிடல் வாசல் முன் வந்து நின்றது அந்த கார் .வாசலிலேயே ஸ்ட்ரெட்ச்சரோடு ,நர்ஸ் ,டாக்டரோடு நின்று இருந்தாள் மிருதுளா .மதுரா ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்க பட்டு ,இன்டென்சிவ் கேர் யூனிட் (ICU )கொண்டு செல்ல பட கால்கள் தோய்ந்து வராண்டாவில் இருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தான் விஜய் .
bepanah_adi_zoya.jpg

அவன் பருக சூடாக காபி கொண்டு வந்து கொடுத்த ஆல்வின் ,"சிஸ்டருக்கு ஒன்றும் ஆகாது கருண் ......கண்ட்ரோல் யுவர்செல்ப் ........"என்றான் ஆல்வின் நண்பனை அணைத்து .

PENANCE WILL CONTINUE..............
 




mila

இணை அமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
855
Reaction score
1,256
Location
sri lanka
innoru part iruke ;)
super
madu ku enna prblm??
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Correct than ani sis oru romance scene thikil scene a aakitenga ennachu madhuku.. vijay ava mayanki irukum pothu love solrane nice epi sis
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
romba interestingana ud......
Vijay madhurava emathanumnu panna poi,ippa athu unakku thirumba vanthuruchu.....
vijay kadhala sonna neram madhura ninavu illa......madhuraku thirumba solluvana.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top