• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 26(5)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
nice update anitha...
what happened to madhurakshi??? nalla venduthalthaan .....
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
காதல் இல்லா காமமும் ,காமம் இல்லா காதலும் என்றுமே வாழ்க்கைக்கு வண்ணம் சேர்க்காது .ஒரு நாணயத்தின் இரு பக்கமாய் இணை பிரியா மெல்லிய கோடே இரண்டும் .அதை விஜய் உணர்ந்தானா என்பது கேள்விக்குறியே .ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளை நெருங்கவோ ,தொடவோ ஒரு ஆணால் முடியாது .மதிப்பு ,நம்பிக்கை ,காதல் இல்லாமல் எந்த பெண்ணும் ஒரு ஆணை நெருங்குவதும் இல்லை,நெருங்க விடுவதும் இல்லை . .அது புரியாமல் ,அவனின் தாழ்வு மனப்பான்மை ,குற்ற உணர்ச்சி ,மதுராவை விலக்க வேண்டிய கட்டாயம் என்று அவனுக்கு அவனாகவே போட்டு கொண்ட வட்டத்தில் நின்று காதலுக்கு அவன் காமத்தின் முகமூடி அணிவிக்க முயன்று கொண்டு இருந்தான் .
View attachment 4298
பல வருட காதல்,பல வருடமாய் அவன் புதைத்து வைத்து இருந்த காதல் மதுராவின் அருகாமையில் அவன் தடைகளை உடைத்து வெளிவர ,அதனை கட்டுப்படுத்த முடியாமல் தோற்றவன் கடைசி ஆயுதமாய் அந்த காதலையே பணயம் வைத்து அதனை கொண்டே மதுராவை தன்னிடம் இருந்து விலக்க தான் அவளை அணைத்தது ,முத்தம் இடுவது எல்லாம் .ஆனால் அவன் மறந்து போனது எல்லை மீறுவதும் ,கட்டுப்பாடு அவன் இழப்பதும் மதுரா ஒருத்தியிடம் மட்டுமே என்பதை .

சில விஷயங்கள் ஏன் நடக்கிறது என்பது என்றுமே நம் அறிவுக்கு எட்டுவது இல்லை .இருவர் வாழ்க்கை பயணத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற விதி இருந்தால் எந்த தடைகள் வந்த போதும் ,எத்தனை இழப்புகள் வந்த போதும் அவர்கள் சேருவது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று .அவளின் வாழ்வுக்காக தான் தான் விஜய் வில்லன் வேஷம் போட துணிந்தது .

மானத்தோடு விளையாடும் எந்த ஆண்மகனையும் பெண் ஏற்க மாட்டாள் என்ற குருட்டு நம்பிக்கையில் அவன் காய் நகர்த்தியது .அந்தோ பரிதாபம் .அவன் செயலே அவனுக்கு எதிரியாக மாறி கொண்டு இருந்தது .விதியும் அவன் எதிர்காலத்தில் மிக பரிதாபமாக இருவரிடம் தோற்க போவதை ,அதற்கான ஆயுத்தங்களை அவன் செய்வதை கண்டு புன்னகைத்து கொண்டு இருந்தது .

எவ்வளவூ நேரம் கழிந்ததோ ...அவனுக்கே தெரியாது ......தன்னை சமாளித்து கொண்டு அவன் அவளை விட்டு விலகிய போது விதியின் ஆட்டம் ஆரம்பமாகி இருந்தது .

அவன் கைகளில் ,அவன் அணைப்பில் அதிர்ந்து ,திகைத்து ,குழம்பி ,பதறி ,உடல் நடுங்கி கொண்டு இருந்தவளை கண்டு தன் மனதினை கல்லாகி கொண்டு விலகிய விஜய் ,"இப்போவது புரிந்ததா .......இது லஸ்ட் ......எனக்கு உன் மேல் இருப்பது காதல் ,கத்திரிக்காய் எல்லாம் இல்லை ......நான் ரசித்தது உன் மனதை அல்ல ........எனக்கு தேவை பட்டது உன் மனது இல்லை ........இப்பவும் நம்ப மாட்டேன் என்று டயலாக் விடாதே .....ஏதோ தெரிந்த குடும்ப பெண் அச்சேன்னு இத்தோடு விடறேன் ......இனி என்னை நெருங்காதே .....மீறி நெருங்கினால் சேதாரம் உனக்கும் உன் பெண்மைக்கும் தான் .......புரிந்ததா ......இனி இது போலெ லூசு தனமா சீண்டி பார்க்காதே .......இப்போவது ஜஸ்ட் கிஸ் தான் .....அப்புறம் மொத்தமா போச்சேன்னு புலம்ப வேண்டியதாகி விடும் .......understand ?"என்று வெளி புறம் பார்த்தவாறு பேசி கொண்டு இருந்தவன் .வெகு நேரம் அவளிடம் இருந்து பதில் வராது போகவே அவளை திரும்பி பார்த்தவன் ஒரு கணம் தன் கண் முன்னே காண்பது என்ன என்று புரியாமல் ஸ்தம்பித்து போனான் .அவன் இதயம் ஒரு கணம் துடிப்பதையே நிறுத்தி விட்டது .

மதுரா அவள் இருக்கையில் மயங்கி கிடக்க அவள் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது .
View attachment 4297

"மது ......மது ....................மது.............."அவனின் அலறல் ,தவிப்பு ,துடிப்பு என்று எதற்கும் அவளிடம் பதில் இல்லை .தண்ணீர் தெளித்தும் அவள் மயக்கம் தெளியவில்லை என்றதும் ,"மது "என்று அடி வயிற்றில் இருந்து உயிர் போகும் குரலில் அலறியவன் அவளை இழுத்து அணைத்தான் .கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அவளை அணைத்து கதறி கொண்டு இருந்தான் .

"மது ....சாரி ...மது ......கண்ணை திற மது .....நான் .......சாரி மது .....ஐ லவ் யு டா .....இது லவ் தாண்டீ .....நீ நல்லா இருக்கனும் என்று தான் டீ .....அய்யோ ....கண்ணை திறடி ......உன்னை இழக்க முடியாது டீ ....முதல் முறை உன்னை இழந்த போதே நான் செத்துடேன் ...........கண்ணை திறடி ......கடவுளே .......மது ...........பேபி......angel ...நான் உன்னை தாண்டீ ...உன் ஒருத்தியை தாண்டி லவ் செய்யறேன் ......உனக்காக தான் டீ காத்து இருக்கேன் ......அய்யோ மது ....ப்ளீஸ் கண்ணை திறடி ....இப்படி பயமுறுத்தாதேடீ ........சாரி ...........சாரி ...மது ....கண்ணை திற ....."என்று அவள் கன்னத்தில் பல முறை தட்டி கூட அவள் கண் விழிக்க வில்லை என்றதும் முழுவதுமாக உடைந்து போனான் .

தொழிலில் ,வாழ்க்கையில் பல முடிவுகளை சூறாவளியாய் எடுத்தவன் ,பலருக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியன் ,பல பெண்களை காத்தவன் ,தொழிலில் முடி சூட சக்ரவர்த்தியாய் ஜொலிப்பவன் ,ஒரு முழுமையான ஆண்மகன் அடுத்து என்ன என்று கை ,கால் ஓடாமல் ,மூளை வேலை நிறுத்தம் செய்து இருக்க பித்து பிடித்தவன் போல் மதுராவை அணைத்து கதறி கொண்டு இருந்தானே ஒழிய அடுத்து செய்ய வேண்டிய எதுவும் அவனுக்கு நினைவுக்கு வரவில்லை .

மதுரா என்ற ஒருத்தியோடு அவன் எண்ணம் ,செயல் எல்லாம் நின்று போய் இருந்தது . (தம்பி மெடிக்கல் எமெர்ஜென்சி என்றால் ஹாஸ்பிடல் கூட்டி போகணும் ...நட்ட நடு ரோட்டில் ,அத்துவான காட்டில் ,காருக்குள்ளே அழுதுட்டு இருந்தால் எல்லாம் சரி ஆகி விடுமா ......இந்த அறிவூ முத்தம் என்ற பெயரில் அவளை ஒரு வழி செய்யும் போதே இருக்கனும் ......)

(அய்யோ இந்த ஹனி கீதாஞ்சலி பட பாட்டு போடும் போதே சந்தேக பட்டேன் .....இவ்வளவூ சுலபமா ரெண்டு பேரையும் சேர விடாதே என்று என்னடா நெஸ்ட் ட்விஸ்ட் வரலையேன்னு பார்த்தேன் ............ஹனி உன் கூட ரொம்ப கஷ்டம் ...ஒரு சூப்பர் ரொமான்ஸ் ...அதை இப்படியா நகம் கடிக்கும் திகில் படமா மாத்துவே ....இதுல situation சாங் வேற ......ஐயோ ஐயோ ...அந்த படத்தில் வருவது போலெ மதுராவிற்கு ஏதாவது குணப்படுத்த முடியாத நோயா ???????பிரைன் டுமெர் ,பிளட் கான்செர் ....இதய டேமேஜ் ......இன்னும் ஒரு வாரம் தான் உயிரோடு இருப்பாளா ......ஐயோ....ஏதோ ஒரு படத்தில் லவர்க்கு ஹார்ட் தேவை படுதுன்னு ஹீரோ தன்னை தானே சுட்டுப்பானே ...இங்கு சாக போவது விஜய்யா சூர்யாவா ......பானு சிஸ் ,மஹா ,சாரா, எல்லோருக்கும் மொட்டை போட்டு ,அலகு குத்தி ,காவடி தூக்க வைக்கிறேன் ,....திருப்பதிக்கு நடக்க வைத்தே வர சொல்றேன் ....கடவுளே மதுராவை காப்பாத்து )
?? அட ப...,,மக்கா அம்மாடி ?இதுக்கு தான் அப்பிடி மாஞ்சி மாஞ்சி கூப்பிட்டியா தங்கம் ஹாஹா??மோஸம்போயிட்டோ பானுமா இந்த புள்ள நம்மை வைச்சு கேம் ஆடுதுயா? என்ன தங்கம் மொட்டை யா இப்போவே தலைமுடி கொட்டி நெத்தி கொஞ்சம் சொட்டையா தான் மா இருக்கு??
அப்புறம் என்னமா வேண்டுதல் திருப்பதிக்கு அதுவும் நடந்தே ஆஆ..,,,அவ்வூ....,???கண்ணு தெரு முனை திரும்பாசே ஒலா கூப்பிடுவோம் திருப்பதிக்கு நடந்தே எத்தனை நாளா ஆச்சு மா இந்த பிலன் போட நான் உன்க்கு என்ன கெடுதல் பண்ணோம் செல்லோ?
 




Kameswari

மண்டலாதிபதி
Joined
Apr 22, 2020
Messages
110
Reaction score
51
Location
Tirupur
திகில் பட எஃபெக்ட் ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top