• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 27(4)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
கடவுள் நேரில் வந்து அனைவரையும் காப்பாற்ற முடியாது தான் .சில சமயங்களில் இது போல் எச்சரிக்கை பல பெற்றோர்களுக்கு கிடைப்பதும் இல்லை ......மற்றவரின் மேல் நம்பிக்கை வைத்து தான் பெற்றோர்கள் வேலைக்கு செல்வது .......அந்த நம்பிக்கை தகர்க்க படும் போது எதற்காக,யாருக்காக ஓடி ஓடி வேலை செய்தார்களோ அவர்களே இல்லாத போது குற்ற உணர்ச்சி என்னும் கொடிய அரக்கனின் பிடியில் மாட்டி திக்கி திணறி அழகான குயில் கூடு பல சூறாவளியில் சிக்கி சின்னா பின்னமாகி விடுவதும் நடப்பது உண்டு .....ஜான்சி போன்ற சிறு பிள்ளைகள் ,ஆணோ ,பெண்ணோ ..........கண்காணிப்பில் வைத்து இருப்பது அவசியம் ..........மனித வக்கிரத்தின் அளவூ கோல் யார் அறிவார் ????/அதிர்ந்து பேச தயங்குபவன் கூட கூட்டத்தோடு இருக்கும் போது பாம் வீசி தயங்க மாட்டான் என்பதே நிதர்சனம் .ஒருவன் மனிதன் ஆவதும் ,மிருகம் ஆவதும் ஒரு சூழ்நிலையில் அவன் எப்படி ரியாக்ட் ஆகிறான் என்பதை பொறுத்தே .....அதை முன் கூட்டியே யாரால் தான் உணர்ந்து அறிய முடியும் ????நம்மால் முடிந்தது தற்காப்பு மட்டும் தான் .
9304226a5317d94b769e9384768696ed.jpg

ஜான்சி போன்ற சிறு பிள்ளைகளின் நிலை இது என்றால் ,பருவ பெண்களை,வாலிப ஆண்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் நிறைய ஊக்குவிப்பான்கள் நாட்டில் உண்டு .....அதில் நட்பு ,காதல் ,சோசியல் மீடியா ,சொசைட்டி பெரும் பங்கு வகிக்கிறது ......உன் நண்பனை பற்றி சொல் ...உன்னை பற்றி நான் சொல்கிறேன் என்பது இது தான் ......விஜய் ஆல்வின் ,பாலாஜி போன்ற நண்பர்கள் வாழ வைப்பவர்கள் .......சோனாவின் நண்பர் கூட்டம் அழிவுக்கு வழி வகுப்பவர்கள் ......தடம் மாறி போன இந்த வயது பிள்ளைகள் தான் பின் நாளில் suicide பாம்மர் ஆகவோ ,terrorist ஆகவோ ,இன்னொரு உயிர் போக காரணமாகவோ ஆகி விடுகிறார்கள் ......இந்த கூட்டத்திற்கு "காதல்"என்பது பொழுது போக்கு .... தீவிரவாதிகளின் தற்பொழுதைய ஆயுதம் "காதல் "தானாம் .காதல் என்ற பெயரில் ,காதலுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்ய தயாராய் இருக்கும் ஆண் /பெண்களை தீவிர வாதிகளாக மாற்றுவது தான் .அதனால் தான் 76 வழுக்குகள் RAW /NIA (RESEARCH அனாலிசிஸ் விங் /நேஷனல் இன்வெஸ்டிகஷன் AGENCY )பதிவு செய்து உள்ளது என்று நிதர்சனத்தை நினைத்து பார்த்த மதுராவின் உள்ளம் குமுறியது
child_traffic.gif

VOLUNTEER வேலையாக தொண்டு நிறுவனங்களுக்கு செல்லும் இடங்களில் இவ்வாறு பாதிக்க பட்ட பெண்கள் ,கை விட பட்ட அனாதை குழந்தைகளை பார்த்து விட்டு ஷாப்பிங் மால் ,சினிமா ,பீச் ,பார்க் போன்ற இடங்களில் சுற்றும் ஜோடிகளை பார்க்கும் போதும் மதுராவின் மனம் வேதனை அடையாமல் இருந்தது இல்லை .
Kashi-Syal-Human-Trafficking-in-India-Infographic.jpg

'இவர்கள் யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள் தங்களையேவா இல்லை பெற்றோர்களையா ???? இதில் எத்தனை காதல் உண்மையானது ?எத்தனை காதல் திருமணத்தில் முடிகிறது ?இவ்வாறு நடந்த திருமணங்கள் கடைசி நொடி உயிர் போகும் வரை எத்தனை நிலைத்து இருக்கிறது ?????இதில் எத்தனை டைம் பாஸ் காதல் ????இவர்களின் பெற்றோர் இதை எல்லாம் கவனிக்காமல் என்ன செய்கிறார்கள் ?????பெற்றோரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு இவ்வாறு செல்லும் தைரியம் எங்கு இருந்து வருகிறது ???எங்கு பெற்றோர் தோல்வி அடைகிறார்கள் ????மதுரவால் இவவாறு எண்ணாமல் இருக்க முடியவில்லை .

எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்தவை என்று நினைக்கும் போது பெரு மூச்சு எழுவதையும் அவளால் தடுக்க முடியவில்லை

நல்ல திருமணமே ...நல்ல தாம்பத்தியம் (இல்லறம் )
நல்ல தாம்பத்யமே ......நல்ல சந்தானம் (பிள்ளைகள் ).
நல்ல பிள்ளைகளே ...........நல்ல சமூகம்
நல்ல சமூகமே ............நல்ல உலகம்


இதை தானே எல்லா மத திருமணங்களும் வலியுறுத்துகின்றன .திருமணத்திற்கு அதனால் தானே இவ்வளவோ முக்கியத்துவம் ,சிறப்பு கொடுக்கப்படுகிறது .

உணர்வாலும் ,மனதாலும் ஒத்த கருத்துக்களை உடையவர்கள் சேர்வது தான் நல்ல திருமணம் .அது இல்லாத போது வாழ்க்கை நரகம் ---உதாரணம் கஜா -மரகதம் ,சோனா -விஜய் ,ரூபிணி -திவாகர் .

நல்ல துணை கிடைத்தாலும் அதை போற்றி பாதுகாக்க தெரியாமல் வாழக்கையை தொலைபவர்கள் நிறைய உண்டு .உதாரணம் --சொர்ணா ,சோனா,திவாகர்

நல்ல இல்லறம் இருந்தாலும் பெற்றோர்களையும் மீறும் பிள்ளைகள் கிடைப்பது நரகம் ---உதாரணம் மாசிலாமணியும் சுமனும் ,சேது ,கனகா -சோனா

நல்ல பிள்ளைகள் இல்லை என்றால் சமூகம் இல்லை -சுமன் ,சோனாவால் பாதிக்க பட்டது மற்ற வீட்டு பிள்ளைகளே .ஒட்டு மொத்த சமூகமே .

இப்படி சமூகம் முழுவதும் அழிந்து போனால் உலகம் மட்டும் எப்படி அழியாமல் இருக்கும் ???
1_2 (1).jpg


இதில் ஒன்று தவறினாலும் உலகத்தில் உள்ள அனைவர்க்கும் இழப்பு தான் .பெரியவர்களின் இந்த தத்துவம் இந்த ஷாப்பிங் மால் ,சினிமா ,பார்க் ,பீச் காதலில் காணாமல் போகிறது .நம்பி ஏமாறுவதும் தப்பு ,நம்பியவர்களை ஏமாற்றுவதும் தப்பு .இது எதுவுமே இந்த டைம் பாஸ் காதலில் இருப்பதில்லை .விட்டில் பூச்சிகளாய் வாழ்க்கை அழிந்து ,கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பயன் ???

தன் எண்ண போக்கில் உழன்று கொண்டு இருந்தவள் பின் பக்க கார் கதவு திறந்ததை கண்டு கவனம் சிதறினாள் .கதவை திறந்து கொண்டு வந்த மிருதுளா மதுராவை அணைத்து கண் கலங்கி விட்டாள் .

"தேங்க்ஸ் மதுரா .....ரொம்ப தேங்க்ஸ் மா ...............நீ சுட்டி காட்டும் வரை எங்களுக்கு புரியவேயில்லை .நானும் அவரும் ஓடி ஓடி சம்பாதிப்பது ஜான்சிக்காக தான் ......தினமும் எங்கள் இருவரின் தொழிலில் இது போன்ற வக்கிரங்களை பார்த்து கொண்டு தானே இருக்கிறோம் .............ஆனால் நீ சொல்லும் வரை அது எங்களுக்கே கூட நடக்கலாம் என்பது தோன்றாமல் போய் விட்டது ......பிரச்சனை என்று வருபவர்களுக்காக தினமும் போராடி கொண்டு தான் இருக்கிறோம் ...............ஆனால் .......எங்கள் வீட்டை கவனிக்க தவறி விட்டோம் ..........தேங்க்ஸ் மா .....இனி மதியம் அத்தை தூங்கும் போது எல்லாம் நான் ஜான்சியோடு இருக்க போகிறேன் .....இன்னும் கூடுதல் டாக்டர்ஸ் என் பொறுப்பை ஏற்க வேண்டுமானாலும் நியமித்து விட போகிறேன் ....ஹாஸ்பிடல் முழுக்க cctv கேமரா பொறுத்த ஏற்பாடு செய்ய போகிறோம் ....ஜான்சிக்காக என்று இல்லை ...........இங்கு எங்கள் ஹாஸ்பிடலை நம்பி வரும் அனைவருக்காகவும் .............patients இடம் எப்படி நடக்க வேண்டும் என்று,மனஅழுத்தம் குறையவும் இங்கு வேலை பார்க்கும் அனைவர்க்கும் ஸ்பெஷல் வகுப்பு எடுக்க போகிறோம் ......விசிட்டிங் ஹௌர்ஸ் ல செக்யூரிட்டி இன்னும் tight செய்ய போகிறோம் ....தேங்க்ஸ் மதுரா ........."என்றாள் மிருதுளா.

"என்ன அண்ணி இது .............இது எல்லாம் மேட்டரே இல்லை ......ஏதோ தோணினது சொன்னேன் .....நீங்க கொண்டு வந்து இருப்பது எல்லாமே மிகவும் பயன் உள்ள நடவடிக்கைகள் ...."என்றாள் மதுரா .

"மதுரா !.............தப்பா நினைச்சுக்காதே அண்ணா ரொம்பவே நல்லவங்க ...........சத்தியமா ஒரு பெண்ணின் மானத்தோடு விளையாடும் கெட்டவங்க கிடையாது .....உன்னை ரொம்பவே விரும்பறாங்க ...........உனக்காக தன் உயிரை கூட கொடுக்க தயங்க மாட்டாங்க .............இன்னைக்கு அவங்க நடந்து கொண்டதை மட்டும் வைத்து அவங்களை தப்பா நினைக்காதே .....நான் ஒரு பெண் .ஒரு பெண் குழந்தையின் அம்மா .....இன்னொரு பெண்ணின் வாழ்வில் விளையாட மாட்டேன் ......நீ அண்ணாவை வெறுத்து ஒதுக்கணும் என்று தான் அவங்க இப்படி எல்லாம் செய்துட்டாங்க ....அவங்க மேல சாப்ட் கார்னெர் வந்து ,அவங்களுக்காக உன் வாழ்வை நீ இழந்து விட கூடாது என்று தான் ....இப்படி எல்லாம் ........"என்ற மிருதுளாவை தடை செய்தது மதுராவின் புன்முறுவல் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"தெரியும் .........."என்றவள் ஏதோ சொல்வதற்குள் முன் பக்க கார் கதவை திறந்து கொண்டு டிரைவர் சீட்டில் விஜயும் ,அவன் அருகே ஆல்வினும் அமர்ந்து விட மதுரா அமைதியாகி விட்டாள் .

மிருதுளாவிடம் வெறும் தலை அசைப்புடன் அவள் விடை பெற ,கார் கிளம்பியது .

"சிஸ்டர் ! ரொம்ப தேங்க்ஸ் .............நீங்க சொல்லும் வரை நாங்க செய்த ..........."என்ற ஆல்வின்னை தடுத்த மதுரா ,"அண்ணா !ப்ளீஸ் ...இப்போ தான் மிருதுளா அண்ணி எல்லாம் சொன்னாங்க .........யார் வீட்டு குழந்தையாக இருந்தாலும் இதை நான் சொல்லி இருப்பேன் தான் .....இது ஒவ்வொருவரின் கடமை .....நமக்கு என்ன வந்தது என்று எதிலுமே தலையிடாமல் இருந்தால் ,இன்று ஒரு வீட்டில் பிடித்த தீ நாளை நம்ம வீட்டிலும் பரவலாம் .....அப்போது நமக்கு என்று யாருமே வரமாட்டாங்க ......."என்று மேலும் ஏதோ சொல்ல முயன்றவளை தடை செய்தது அவளின் மொபைல் அழைப்பு .

அவள் மொபைல் எடுப்பதற்குள் அழைப்பு நின்று விட ,டிஸ்பிலே பார்த்தவள் அதில் தன் அன்னையிடம் இருந்து 20 மேற்பட்ட அழைப்புகள் இருப்பதை பார்த்து நெற்றி சுருங்கினாள் .

இவள் அழைப்பதற்குள் ,பவானியே மீண்டும் அழைக்க ,அழைப்பை ஏற்றவள் ,"என்ன பவி டார்லிங் என் கூட பேசாமல் இருக்க முடியலையா என்ன .........இத்தனை தடவை கால் போட்டு இருக்கே .......என்ன மேட்டர் ........?"என்றாள்

"அடிங்க .........நீ தான் என்னை பெத்து வளர்த்தவ மாதிரி பேர் சொல்லி கூப்பிடறே .....போனை எடுக்காம என்னடீ அப்படி வெட்டி முறிச்சுட்டு இருந்தே ....... "என்றார் பவானி .

"ஒகே ......ஒகே ........மலை ஏறாதே ....சிலேண்ட் மோடில் இருந்துச்சு ....போனும் ஹாண்ட்பாகில் வைத்து இருந்தேன் .....வேலை செய்யும் போது நீ ஏன்மா கால் செய்யரே ........?"என்றாள் மதுரா .

(மதுரா செல்லம் ...நீ பார்த்த வேலை மட்டும் பவானி மேடத்திற்கு தெரிஞ்சது .....தோளை உரிச்சு உப்புக்கண்டம் தாண்டீ )

"இல்லை மதுரா .....ரொம்ப URGENT கண்ணா ............உன்னை பார்க்கணும் என்று உத்தம் சிங்க் என்பவர் ரொம்ப நேரமா இங்கே காத்துட்டு இருக்கார் ....அவர் ஜெய்ப்பூர் இளவரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் சூர்யா பிரதாப் ரத்தன் சிங் பி .ஏ வாம் .....அதான் ....அந்த ஆளை பார்த்தாலே மாமிச மலை போலெ இருக்கார் .....உன்னை தேடி வந்து இருக்கார்.உன் பெரியப்பா கூட அவனை பார்த்துட்டு டென்ஷன் ஆகிட்டு இருக்கார் .கார்த்திக் சுத்த மோசம் ....கை கால் நடுங்கி போய் நிற்கிறான் .....பயமா இருக்குடீ ....சீக்கிரம் வா ."என்றார் பவானி .

"உத்தம் சிங் ...........எனக்கு அப்படி யாரையும் தெரியாதே அம்மா .........ஜெய்ப்பூர் இளவரசரா .........என்னமா இந்த கார்த்திக் ஏதாவது ஏப்ரல் பூல் செய்யறானா .....நீயும் அதற்கு கூட்டா ?"என்றாள் மதுரா குழம்பி போனவளாய் .
Vijay-Samantha-RamCharan-w.jpg

இவள் போனில் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த விஜய் ,உத்தம் ,ஜெய்ப்பூர் இளவரசன் என்பதை கேட்டதும் அதிர்ந்து விட ,அவன் கால்கள் தானாக BRAKE அழுத்த ,கார் குலுங்களோடு நின்றது .மதுரா போனில் பேசி கொண்டே இருக்க ,ஆல்வினும் ,விஜயும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

"லூசாடீ நீ ....இதில் எல்லாமா விளையாடுவாங்க .....சீக்கிரம் வா ....என்ன ஏதுன்னு விசாரித்து அனுப்பு ....."என்றார் பவானி .

"இதோ வந்துட்டே இருக்கோம் அம்மா ....பத்து நிமிசத்தில் வந்துடுவோம் ....உட்கார வை ..."என்றவள் யார் இவர்கள் என்று குழம்பி கொண்டு இருக்க ,ஆல்வின் இரு முறை அழைத்தும் மதுரா பதில் சொல்லவில்லை .

மூன்றாவது முறை ஆல்வின் வெகு சத்தமாக அழைத்த பின்னே தன் எண்ணத்தில் இருந்து வெளி வந்தவள் ,"என்ன அண்ணா ?"என்றாள் .

"யாருமா போனில் ???என்னவோ ஜெய்ப்பூர் இளவரசன் என்று எல்லாம் காதில் விழுந்தது ?"என்றான் .

"வீட்டுக்கு யாரோ உத்தம் சிங் என்பவர் வந்து இருக்காராம் ....அவரை பார்த்து பெரியப்பா ,கார்த்திக் எல்லாம் பேஜார் ஆகிட்டு இருக்காங்களாம் ....அவர் ஏதோ ஜெய்ப்பூர் இளவரசரின் பி .ஏ வாம் ....என்னை பார்க்க ரொம்ப நேரமா காத்துட்டு இருக்காராம் ....அதான் என் அம்மா போன் செய்து சீக்கிரம் வர சொல்ராங்க .....யார் இவங்க ன்னு யோசிச்சுட்டு இருக்கேன் ......தமிழ் நாட்டில் ஜெய்ப்பூர் இளவரசர் என்றால் ,ரெசார்ட்டில் இறந்து போன பெண்ணின் கணவர் தானே அண்ணா ........நான் இவரின் பி .ஏ ...இதை தவிர மற்ற யாருடனும் எனக்கு காண்டாக்ட் இருந்தது இல்லையே ....அவங்க எதற்கு என்னை தேடி வந்து இருகாங்க என்று புரியலை ...."என்றாள் மதுரா .

ஆல்வினும் ,விஜய்யும் பார்வை பரிமாறி கொள்ள அதை மதுரா கவனிக்க தவறினாள் .விஜய்யின் முகம் கற்பாறையாக மாறி விட ,கைகள் ஸ்டேரிங்கை பிடித்த பிடியில் நரம்புகள் புடைத்தன .

PENANCE WILL CONTINUE....
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
Nice anitha... Udambu paravallaya.... Welcome back...

Namma valikattuthal sariya illathanalayo or namma gavana kuraivunalayo kulandhainga thavarana pathaila poidranga.. Namalum athu namma kudumba prachanainu ninaikkurom... Ana namma seiyara oru oru thavarum namma nattaiyum bathikkumgarathu than unmai...
Atha azhaga solirukinga...
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் எதர்ந்தத்தை எடுத்து காட்டும் பதிவு சகோ நல்ல விழிப்புணர்வைத் தோண்றுவிக்கும் கருத்து சூப்பர் சகோ??????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top