"என் மதுவிற்கு நானே எமன் ஆகிட்டேன்டா ...........அய்யோ அவளை நானே கொன்னுட்டேன் ......நான் பாவி ...பாவி ......கிராதகன் ......"என்று கலங்கி துடித்த அவனை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று ஆல்வினுக்கு புரியவில்லை .
"என்ன நடந்தது கருண் ?"என்றான் அவனை டைவர்ட் செய்யும் எண்ணத்தில் .
"கார்த்திக் பூரணிக்கு மேரேஜ் முடிவு செய்து இருக்க இவ .........என் கண்ட்ரோல் மொத்தமா போச்சுடா ......எங்கே கார்த்திக் இவளை திருமணம் செய்து கொள்வானோ என்று உள்ளுக்குள் ஒரு வலி இருத்துட்டே இருந்தது .........................கார்த்திக் இவளுக்கு பிரதர் என்றவுடன் இவள் அருகில் வந்ததும் அங்கே ஊர்வசி வீட்டில் உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகிட்டேன் .........அதை இவ நோட் செய்துட்டா .........என்னுடன் பேச தனியே காரில் கூட்டி போனாள் ...........ஏதாவது செய்து அதை தடுத்து நிறுத்தாமல் அவளோடு போனது என் முட்டாள் தனம் ஆல் ......நான் அவளை லவ் செய்றது அவளுக்கு தெரிஞ்சு போச்சுடா ......அவளை விலக்கி நிறுத்த ,என்னை வெறுக்க வைக்க வேறு வழி தெரியலை ............அது கூட பொய் தான் ..........இத்தனை நாள் அடக்கி வைத்த உணர்ச்சிகளுக்கு வடிகால் என்று அவளிடம் வரம்பு மீறி நடந்து கொண்டேன் .........அய்யோ ........நான் மிருகம்டா ...........எனக்கும் சுமனுக்கும் வித்தியாசமே இல்லைடா ............."என்று அழுத நண்பனை கண்டு ஆல்வின் திகைத்து விழித்தான் .
அவனால் விஜயையை தவறாக நினைக்க முடியவில்லை .அவன் காதலை அருகில் இருந்து கண்டு வியந்தவன் அவன் .அந்த காதல் கிடைக்காமல் உயிர் வாழும் எண்ணமே இல்லாமல் நடைப்பிணமாக இருந்தவனை கண்டு துடித்தவன் அவன் .நண்பனின் வாழ்க்கை திசை மாறி போன போது அதை தடுக்க எதையும் செய்ய முடியாமல் உள்ளுக்குள் உடைந்தவன் அவன் .கடந்த ஒரு வருடமாய் நண்பனின் காதலியை காக்க அவனுக்கு தோள் கொடுத்தவன் அவன் .......அந்த காதலை நண்பன் புதைக்க முயன்ற போதும் ,மதுராவிற்கு இன்னொருவனை கணவனாக கொண்டு வர முயன்ற போதும் நண்பனின் காதலின் ஆழத்தை கண்டு கலங்கி கொண்டு இருந்தவன் அவன் .............விஜய்யின் மன திடத்தையும் ,இப்போ அதே காதல் அந்த வைராக்கியத்தை உடைத்து தன்னை வெளிப்படுத்தி கொண்டதை அவனால் வரவேற்க மட்டுமே முடிந்தது .
"கருண் !......நீ முன் பின் தெரியாத பெண்ணிடம் வரம்பு மீறி நடக்கவில்லை ............சிஸ்டர் உன் உயிர் ......சிஸ்டர் உன் ...................."என்றவனை ,"ஸ்டாப் ...............அவ எனக்கு யாரும் இல்லை ............ஷி இஸ் நாட் மை லவர் "என்று உறுமினான் விஜய்
"இதே இடத்தில வேறு எந்த பெண் இருந்தாலும் அவ உனக்கு தூசுக்கு சமமாய் தான் இருந்து இருப்பா .........உன் கண்ட்ரோல் நீ யாரிடம் இழக்க வேண்டி இருந்ததோ அவர்களிடம் தான் இழந்து இருக்கேடா .......சிஸ்டரிடம் மட்டுமே உன்னால் இப்படி நடக்க முடியும் ...........ஆனா இதற்கு மேலும் லூசு தனமா சிஸ்டருக்கு திருமணம் செய்யறேன்னு தரகர் வேலை பார்க்காதேடா .......எல்லாத்தையும் சிஸ்டரிடம் சொல்லு ......அவங்க நிச்சயம் உன்னை ஏத்துப்பாங்க ..............."என்றவனை தடை செய்தது விஜய்யின் கோப பார்வை .
"பைத்தியம் மாதிரி உளறாதே ஆல்வின் ..............எனக்கு தான் அவ காதலி ..........அவளுக்கு நான் மூன்றாம் மனுஷன் தான் ......................நான் அவளுக்கு தகுதி இல்லாதவன் தான் ............அது மாறி விடாது ..........மதுரா தேவதை ..............நான் பாவி .............சோனா போன்ற சாக்கடை புத்தி கொண்டவளின் கணவன் ............அது அப்படியே இருந்துட்டு போகட்டும் ..............என் மதுராவிற்கு நல் வாழ்க்கை அமைத்து கொடுப்பேன் .........அவ சந்தோசமா வாழனும் ............மதுராவிற்கு என்னால் இந்த ஒரு வருஷத்தில் ஏற்பட்ட கஷ்டம் போதும் ..........பெஸ்ட் மாப்பிள்ளையா ..........என் மதுவை உள்ளங்கையில் வைத்து ராணி மாதிரி பார்த்து கொள்பவன் கிடைத்தால் சொல்லு ............மத்த எதையும் என்னிடம் பேசாதே ................கடவுளுக்கே தெரிந்து இருக்கு ......நாங்க ஒண்ணு சேர கூடாது என்று ...........அதான் இப்படி எல்லாம் நடந்து இருக்கு ............."என்றவன் அங்கு இருந்து எழுந்து நடக்க ஆரம்பித்து விட ஆல்வின் தலையில் கை வைத்து கொண்டான் .
வார்த்தைக்கு வார்த்தை என் மது ,என் மது என்று சொல்கிறவன் தான் முரணாக அவளுக்கு கணவன் தேட சொல்கிறான் ........நண்பனை பேசாமல் மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்த்து விடலாமா என்று கூட தோன்றி விட்டது ஆல்வினுக்கு ......
(அதை முதலில் செய்ப்பா ஆல்வின் ...............கீழ்ப்பாக்கத்தில் சேர்த்து ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து பார்க்கலாமா ................விஜய் தம்பி நீ இப்படியே செஞ்சுட்டு ,உளறிட்டு இருந்தே மதுராவிற்கு சூர்யாவை கன்சிடர் செய்ய சொல்லி ஹனி கிட்டே சொல்லிடுவேன் )