• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
0 (1).jpg

"என் மதுவிற்கு நானே எமன் ஆகிட்டேன்டா ...........அய்யோ அவளை நானே கொன்னுட்டேன் ......நான் பாவி ...பாவி ......கிராதகன் ......"என்று கலங்கி துடித்த அவனை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று ஆல்வினுக்கு புரியவில்லை .

"என்ன நடந்தது கருண் ?"என்றான் அவனை டைவர்ட் செய்யும் எண்ணத்தில் .

"கார்த்திக் பூரணிக்கு மேரேஜ் முடிவு செய்து இருக்க இவ .........என் கண்ட்ரோல் மொத்தமா போச்சுடா ......எங்கே கார்த்திக் இவளை திருமணம் செய்து கொள்வானோ என்று உள்ளுக்குள் ஒரு வலி இருத்துட்டே இருந்தது .........................கார்த்திக் இவளுக்கு பிரதர் என்றவுடன் இவள் அருகில் வந்ததும் அங்கே ஊர்வசி வீட்டில் உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகிட்டேன் .........அதை இவ நோட் செய்துட்டா .........என்னுடன் பேச தனியே காரில் கூட்டி போனாள் ...........ஏதாவது செய்து அதை தடுத்து நிறுத்தாமல் அவளோடு போனது என் முட்டாள் தனம் ஆல் ......நான் அவளை லவ் செய்றது அவளுக்கு தெரிஞ்சு போச்சுடா ......அவளை விலக்கி நிறுத்த ,என்னை வெறுக்க வைக்க வேறு வழி தெரியலை ............அது கூட பொய் தான் ..........இத்தனை நாள் அடக்கி வைத்த உணர்ச்சிகளுக்கு வடிகால் என்று அவளிடம் வரம்பு மீறி நடந்து கொண்டேன் .........அய்யோ ........நான் மிருகம்டா ...........எனக்கும் சுமனுக்கும் வித்தியாசமே இல்லைடா ............."என்று அழுத நண்பனை கண்டு ஆல்வின் திகைத்து விழித்தான் .


அவனால் விஜயையை தவறாக நினைக்க முடியவில்லை .அவன் காதலை அருகில் இருந்து கண்டு வியந்தவன் அவன் .அந்த காதல் கிடைக்காமல் உயிர் வாழும் எண்ணமே இல்லாமல் நடைப்பிணமாக இருந்தவனை கண்டு துடித்தவன் அவன் .நண்பனின் வாழ்க்கை திசை மாறி போன போது அதை தடுக்க எதையும் செய்ய முடியாமல் உள்ளுக்குள் உடைந்தவன் அவன் .கடந்த ஒரு வருடமாய் நண்பனின் காதலியை காக்க அவனுக்கு தோள் கொடுத்தவன் அவன் .......அந்த காதலை நண்பன் புதைக்க முயன்ற போதும் ,மதுராவிற்கு இன்னொருவனை கணவனாக கொண்டு வர முயன்ற போதும் நண்பனின் காதலின் ஆழத்தை கண்டு கலங்கி கொண்டு இருந்தவன் அவன் .............விஜய்யின் மன திடத்தையும் ,இப்போ அதே காதல் அந்த வைராக்கியத்தை உடைத்து தன்னை வெளிப்படுத்தி கொண்டதை அவனால் வரவேற்க மட்டுமே முடிந்தது .

"கருண் !......நீ முன் பின் தெரியாத பெண்ணிடம் வரம்பு மீறி நடக்கவில்லை ............சிஸ்டர் உன் உயிர் ......சிஸ்டர் உன் ...................."என்றவனை ,"ஸ்டாப் ...............அவ எனக்கு யாரும் இல்லை ............ஷி இஸ் நாட் மை லவர் "என்று உறுமினான் விஜய்


"இதே இடத்தில வேறு எந்த பெண் இருந்தாலும் அவ உனக்கு தூசுக்கு சமமாய் தான் இருந்து இருப்பா .........உன் கண்ட்ரோல் நீ யாரிடம் இழக்க வேண்டி இருந்ததோ அவர்களிடம் தான் இழந்து இருக்கேடா .......சிஸ்டரிடம் மட்டுமே உன்னால் இப்படி நடக்க முடியும் ...........ஆனா இதற்கு மேலும் லூசு தனமா சிஸ்டருக்கு திருமணம் செய்யறேன்னு தரகர் வேலை பார்க்காதேடா .......எல்லாத்தையும் சிஸ்டரிடம் சொல்லு ......அவங்க நிச்சயம் உன்னை ஏத்துப்பாங்க ..............."என்றவனை தடை செய்தது விஜய்யின் கோப பார்வை .

44916591.jpg
"பைத்தியம் மாதிரி உளறாதே ஆல்வின் ..............எனக்கு தான் அவ காதலி ..........அவளுக்கு நான் மூன்றாம் மனுஷன் தான் ......................நான் அவளுக்கு தகுதி இல்லாதவன் தான் ............அது மாறி விடாது ..........மதுரா தேவதை ..............நான் பாவி .............சோனா போன்ற சாக்கடை புத்தி கொண்டவளின் கணவன் ............அது அப்படியே இருந்துட்டு போகட்டும் ..............என் மதுராவிற்கு நல் வாழ்க்கை அமைத்து கொடுப்பேன் .........அவ சந்தோசமா வாழனும் ............மதுராவிற்கு என்னால் இந்த ஒரு வருஷத்தில் ஏற்பட்ட கஷ்டம் போதும் ..........பெஸ்ட் மாப்பிள்ளையா ..........என் மதுவை உள்ளங்கையில் வைத்து ராணி மாதிரி பார்த்து கொள்பவன் கிடைத்தால் சொல்லு ............மத்த எதையும் என்னிடம் பேசாதே ................கடவுளுக்கே தெரிந்து இருக்கு ......நாங்க ஒண்ணு சேர கூடாது என்று ...........அதான் இப்படி எல்லாம் நடந்து இருக்கு ............."என்றவன் அங்கு இருந்து எழுந்து நடக்க ஆரம்பித்து விட ஆல்வின் தலையில் கை வைத்து கொண்டான் .


வார்த்தைக்கு வார்த்தை என் மது ,என் மது என்று சொல்கிறவன் தான் முரணாக அவளுக்கு கணவன் தேட சொல்கிறான் ........நண்பனை பேசாமல் மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்த்து விடலாமா என்று கூட தோன்றி விட்டது ஆல்வினுக்கு ......

(அதை முதலில் செய்ப்பா ஆல்வின் ...............கீழ்ப்பாக்கத்தில் சேர்த்து ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து பார்க்கலாமா ................விஜய் தம்பி நீ இப்படியே செஞ்சுட்டு ,உளறிட்டு இருந்தே மதுராவிற்கு சூர்யாவை கன்சிடர் செய்ய சொல்லி ஹனி கிட்டே சொல்லிடுவேன் )
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
10-15 நிமிடமாக விஜயின் முன்னுக்கு பின் முரணான பேச்சுகளால் திக்கி திணறி நொந்து நூடுல்ஸ் ஆகி கொண்டு இருந்த ஆல்வினை காக்க அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வெளி வந்தாள் மிருதுளா .காதலிக்கும் போது கூட அவள் வரவை அந்த அளவு ஆல்வின் ரசித்து இருப்பானா என்பது சந்தேகமே ......குணா கமல் "அபிராமி " ரேஞ்சு லுக் விட்டு கொண்டு இருக்கும் கணவனை கண்டு ஒரு கணம் குழம்பி நின்றாள் மிருதுளா .அவளுக்கு எங்கே தெரிய போகிறது விஜய் அந்த அளவுக்கு ஆல்வினை படுத்தி இருப்பது .

Kamal-Guna-Theme-Bgm-Ringtones.jpg

அவள் வருவதை கண்ட விஜய்யின் கவனம் அவள் மேல் திரும்பி விட அது வரை பிடித்து இருந்த மூச்சை வெளியிட்டான் ஆல்வின் .

"மிருது !............மது ............என் ...மதுக்கு ............உயிரோடு தானே ............அவளுக்கு ஒன்றும் ............நல்லா இருக்காளா ............ ஆச்சு ..............அவளுக்கு உயிர் ..............அவளுக்கு ஒன்றும் ..........நல்லா .........."என்று அவளை பேச விடாமல்,பிடித்து உலுக்கி , துடித்து தவித்து கொண்டு இருந்தவனை கண்டு ஒரு தன் கணவன் ஏன் தன்னை அப்படி பார்த்தான் என்று புரிந்தது மிருதுளாவுக்கு .

மனதிற்குள் சிரித்து கொண்டவள் ,'பய புள்ள நல்லா மாட்டி விழி பிதுங்கி நிக்குது .............'

"அண்ணா .....அண்ணா ...........ரிலாக்ஸ் .......அண்ணா ....என்னை பேச விடுங்க ..........அண்ணா "என்று பலமுறை கெஞ்சிய பிறகே விஜய் தன் புலம்பலை நிறுத்தினான் .

"அண்ணா ..............அண்ணிக்கு ஒன்றும் இல்லை ............அவங்க நல்லா தான் இருகாங்க ......."முடிக்க விடவில்லை விஜய் .

"பொய் சொல்லாதே ............என் மது என்னை விட்டு போய்ட்டா ...............அவளை நானே கொன்னுட்டேன் ..........என்னை சமாதானம் செய்ய பொய் சொல்லாதே ...........அவ என்னை விட்டு ............ஐயோ என் மதுவை நானே கொன்னுட்டேனே ............மூக்கில் இருந்து ரத்தம் வந்தது .........தண்ணீர் தெளிச்சும் மயக்கம் தெளியலை ...........ஏன் இப்படி பொய் சொல்றே ............நீ படிச்சு டாக்டர்ஆகிநியா இல்லை காசு கொடுத்தா .........சொல்லு ....."என்று மிருதுளாவை ஒரு வழி செய்தான் .

"அண்ணா .........நான் சொல்வதை ..........."என்று மிருதுளா முடிக்கவில்லை .

"அவளுக்கு என்ன .........பிரைன் டுமெர் ........பிளட் கான்செர் ..............இதய வால்வு பழுது ...........கிட்னி டிசீஸ் .....platelet குறைவு ...........ரத்தம் உறைவது குறைவு .......ரத்த நாளம் ஒழுங்கா இல்லாம இருக்கிறது ............ஹீமோபிலியா .............இதில் எது காரணம் .............நெட் ல இவவளோ ரீசன் போட்டு இருக்காங்க .......ஒன்றும் இல்லைன்னு சொல்றே ...........அவளை எங்கே கூட்டி போகணும் ........அமெரிக்கா ......ஆஸ்திரேலியா ...........எத்தனை கோடி செலவு ஆகும் ..............உண்மையை சொல்லு ...........எனக்கு அவ பிழைக்கணும் ............வேறு எதை பற்றியும் எனக்கு கவலை இல்லை ............இல்லை வேர்ல்ட் பெஸ்ட் டாக்டர் வரவழைக்கணுமா .........ஏற்பாடு செய்யறேன் சொல்லு .............உன் அண்ணா பிச்சைக்காரன் இல்ல ...........என் தலையை அடமானம் வைத்தாவது என்னால் பணம் புரட்ட முடியும் ............என் மதுராவின் உயிரை காப்பாற்று மிருது ........."என்றவனை கன்ட்ரோல் செய்வதற்குள் மத்த இருவருக்கும் உயிர் போய் உயிர் வந்தது என்றால் மிகையல்ல .

எதையும் பேசாத மிருதுளா ,விஜய்யின் கையை பிடித்து இழுத்து சென்று மதுரா இருந்த அறைக்குள் அவனை கொண்டு சென்றாள் .அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்ற பட்டு இருந்தாள் மதுரா .தலை முதல் கால் வரை தன்னவளை வெகு வேகமாக கண்களால் ஆராய்ந்த விஜய் ,அதற்கு மேல் முடியாமல் குனிந்து அவளை அணைத்து கொண்டான் .

"சாரி டீ ..............ஐ லவ் யு ..................நீ இல்லாமல் இன்னொரு முறை என்னால் வாழ முடியாதுடீ ........உன்னை பிரிந்து ,உன்னை இழந்து நான் பட்ட வேதனை போதும்டீ ...........நீ தாண்டீ எனக்கு எல்லாமே ...........என் கிட்டே வந்துடுடீ .............என்னை விட்டு போகாதே ..........காரில் நான் சொன்னது எல்லாம் பொய் தான் டீ ..........உன்னை தவிர வேறு எவளையையும் நான் விரும்பியது இல்லை .........வேறு ஒருத்தியின் நிழலை தொட்டது இல்லை .............மனசு முழுக்க உன் மேல் உள்ள காதல் தாண்டீ என்னை இன்னும் வாழ வைச்சுட்டு இருக்கு .......உன் உயிர் பிரியும் முன் என் உயிர் போய்டும் ...........என்னை விட்டு போகாதே .........."என்று கதறியவனை எப்படி தடுப்பது என்று புரியாமல் கண் கலங்கி நின்றார்கள் மற்ற இருவரும் .
p4b.jpg

"அண்ணா !...........அண்ணா .........அண்ணிக்கு எதுவுமே இல்லை அண்ணா ........அவங்க மேல ப்ரோமிஸ் ........அவங்க நல்லா தான் அண்ணா இருக்காங்க .............என்னை நம்புங்க அண்ணா ...........இப்போ தூங்கிட்டு தான் இருக்காங்க .............ரிலாக்ஸ் அண்ணா ..........."என்றாள் மிருதுளா அவன் தோளில் கை வைத்து .

"அண்ணா !...........அண்ணா .........அண்ணிக்கு எதுவுமே இல்லை அண்ணா ........அவங்க மேல ப்ரோமிஸ் ........அவங்க நல்லா தான் அண்ணா இருக்காங்க .............என்னை நம்புங்க அண்ணா ...........இப்போ தூங்கிட்டு தான் இருக்காங்க .............ரிலாக்ஸ் அண்ணா ..........."என்றாள் மிருதுளா அவன் தோளில் கை வைத்து .

கண்ணீர் வழிய நிமிர்ந்தவன் ,"ப்ரோமிஸ் ..............சத்தியமா சொல்றியா மிருது ..........மதுக்கு எதுவும் இல்லையே .............ஆனா மயக்கம் ,மூக்கில் இருந்து ரத்தம் ............நெட்ல என்னலாமோ போட்டு இருந்தார்களே ...........நீ எதுவுமே இல்ல என்கிறாய் ...........பொய் சொல்லாதேமா ................"என்றான் அவள் கைகளை பிடித்து கொண்டு .

"அண்ணா !.....நல்லா கவனிங்க ........நீங்க சொன்னது எல்லாம் மத்தவங்களுக்கு இருக்கலாம் ...........அண்ணிக்கு இல்லை .........அந்த காரணங்களால் மட்டும் மயக்கம் ,மூக்கில் ரத்தம் வருவது இல்லை .......அது எல்லாம் கிரிட்டிக்கல் ஸ்டேஜ் ............அண்ணிக்கு அது இல்லை ..........ரொம்ப நாளா ரொம்ப ஸ்ட்ரெஸ், ,கவலை,மன அழுத்தம் அதிகமாக இருந்து இருக்கு ............anxiety என்று சொல்வோம் ....நிறைய டென்ஷன் ,மன அழுத்தம் ,சரியா தூங்காம இருக்கிறது ............இது எல்லாம் சேர்ந்து இதயத்திற்கு அதிக ஸ்ட்ரெஸ் தரும் .....இதய துடிப்பு அதிகமாகி ,ரத்த நாளங்களில் அதிக அழுத்தம் சேரும் .....ஹைப்பர் டென்ஷன் என்பார்கள் ........சோ மூக்கில் இருக்கும் ரத்த நாளங்கள் ரொம்ப மெல்லியதாய் இருக்கும் ....அவைகளால் இந்த அழுத்தத்தை தாங்க முடியாது ...........இன்று அந்த ஸ்ட்ரெஸ் ,anxiety ,ஹைப்பர் டென்ஷன் ,அதிர்ச்சி தாங்க முடியாத அளவை கடந்து இருக்கு ...........மூளையால் அதை தாங்க முடியவில்லை .........தன்னை தானே பாதுகாத்து கொள்ள உடல் எடுக்கும் நடவடிக்கை தான் இந்த மயக்கம் .....ஏதோ சரி இல்லை என்று எச்சரிக்கை கொடுக்கும் விதமாக தான் மூக்கில் இருந்து ரத்தம் வருவது .............இப்போ தூங்க வைக்க மருந்து கொடுத்து இருக்கோம் ...........நல்லா தூங்கி எழட்டும் ............எல்லா டெஸ்டும் செய்துட்டோம் .....வேறு எந்த நோயும் இல்லை ..........அவங்க உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை ..........ஷி இஸ் perfectly அல்ரைட் அண்ணா ............இந்த அளவுக்கு நீங்க பயந்து நடுங்கும் அளவு எல்லாம் எதுவுமே இல்லை ...... ஸ்கேன் ,x ரே ,பிளட் டெஸ்ட் எல்லாம் எடுத்தாச்சு .....எல்லாம் நார்மல் .....பிளட் பிரஷர் ,இதய துடிப்பு மட்டும் கொஞ்சம் அதிகமா இருக்கு .........தூங்கி எழுந்தா சரி ஆகிவிடும் ......"என்றாள் மிருதுளா .
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,771
Location
Coimbatore
ஊதி ஊதி இவனே பெரிசு பண்ணிருவா
அட இந்த விஜய் ,ஆல்வின் அவன் மண்டையில்
இரண்டு போடுப்பா.
சும்மா மாற்றி மாற்றி பேசுறான்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"அப்போ இவ இந்த நிலையில் இருப்பதற்கு நான் தான் காரணமா .............என்னால் தான் என் மது இப்படி பேச்சு மூச்சு இல்லாம இருக்காளா ............."என்றான் விஜய் .

"இல்லை அண்ணா ...........ரொம்ப நாளாகவே அவங்க anxiety ,ஹைப்பர் டென்ஷன் ,கவலை ,மன அழுத்தத்தில் இருந்து இருக்காங்க .....சரியா தூங்கறது இல்லை போல் இருக்கு ......... இன்று வழக்கத்தை விட மிக அதிகம் .....அவ்வளவூ தான் ...........இது நோய் எல்லாம் இல்லை ...........lifestyle மாற்றம் தான் ......அவங்க சந்தோசமா ,நிம்மதியா இருந்தாலே போதும் ............வேற எந்த ட்ரீட்மென்ட் தேவை இல்லை ......"என்றாள் மிருதுளா .

உறங்கி கொண்டு இருக்கும் மதுராவை சற்று நேரம் பார்த்து கொண்டு இருந்தவன் ,"நீ சொல்வது சரி தான் மா .....இவ சந்தோசமா இருக்க வேண்டியவ தான் ..........ஆல்வின் ! ...........உடனே மதுராவிற்கு ஏற்ற நல்ல மாப்பிளையை பார்த்து ,விசாரித்து சொல்லு ............இவளை சந்தோசமா ,ராணி மாதிரி பார்த்துக்கணும் ...........உள்ளங்கையில் வைத்து தங்குபவனாக இருக்க வேண்டும் ....இவளை கஷ்ட படுத்தினால் ஹி வில் பி answering டு மீ ...........இவளுக்கு கூடவே இருந்து பாதுகாப்பு கொடுக்க இவளை திருமணம் செய்பவனால் மட்டுமே முடியும் ...........நாம தூர இருந்து வழக்கம் போல் பார்த்து கொள்வோம் ......பார்த்துக்கோ மிருது ........தேங்க்ஸ் .........."என்றவன் அறை வாயில் வரை சென்று ,"மிருது !இனி அவளை அண்ணி என்று கூப்பிடாதே .....நமக்கு ஆயிரம் ஆசை இருக்கலாம் ............ஆனா அவ வேறு வீட்டில் சென்று வாழ வேண்டியவ ..........நீ இப்படி கூப்பிடுவது யார் காதிலாவது விழுந்துச்சுன்னா அவளுக்கு தான் பாதிப்பு .......இன்னொருவனின் மனைவி ஆகா வேண்டியவளை என்னுடன் இணைத்து பேசாதேமா ....."என்றவன் திரும்பி பார்க்காமல் வெளியேறி விட்டான் .

திகைத்து நின்று இருந்தார்கள் அவர்கள் இருவரும் .தன் கணவனின் தோளில் கை வைத்து அழுத்தினாள் மிருதுளா .

"என்ன ஆல் ..........அண்ணா இப்படி பேசிட்டு போவது நமக்கு புதுசா என்ன ...........இதற்கு எல்லாம் டென்ஷன் ஆனா எப்படிம்மா ..........மனசு அளவுல அண்ணா ரொம்பவே பாதிக்க பட்டு இருக்கார் உனக்கு தெரியாதா என்ன ......மதுராவை இழந்தது ,ரூபிணி மேட்டர் ,சோனா ,கஜா என்று ஒரே ஆள் எத்தனை விதமான பிரச்சனைகளை தான் சமாளிப்பார் ...............இது சினிமாவோ ,கதையோ இல்லையே ......வாழ்க்கை ......அவரும் சாதாரண மனிதர் தானே ............குற்ற உணர்ச்சி ....அண்ணியை விட்டு சோனாவை மணந்து விட்டதால் ஏற்பட்ட மரண வலி ......அவள் கொடுக்கும் torture ....இவங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் .....தன் காதலை மறைக்க வேண்டிய கட்டாயம் ......விடு டா .............பார்த்துக்கலாம் ............அண்ணி உடம்பு தேரட்டும் .....அவங்க கிட்டே பேசி புரிய வைப்போம் ........."என்றாள் மிருதுளா .


PENANCE WILL CONTINUE..............
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த லவ்லி அப்டேட் முடிஞ்சுதா?
இல்லை, இன்னும் கொஞ்சம்
அப்டேட் பாக்கியிருக்கா,
அனிதா டியர்?
PENANCE WILL CONTINUE............-ங்கிற
வரி காணலையேப்பா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top