• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 28(4)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
தன் அறையில் மதுரா தூங்காமல் விழித்து கொண்டு இருந்தாள் .டேபிள் மேல் இருந்த தன் ஹாண்ட்பாக் எடுத்தவள் ,அதில் இருந்து மூன்று பொருட்களை எடுத்து கட்டிலின் மேல் வைத்தாள் .அது ஒரு சிறிய நோட்பேட் ,ஒரு செயின் ,ஒரு பென்டிரைவ் .

அவை ஆல்வின் வீட்டில் இருந்த விஜய்யின் secret அறையில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்கள் .முதலில் செயின் லாக்கெட் உடன் இருந்தது .அந்த லாக்கெட் தங்கத்தில் ஜொலித்து கொண்டு இருந்தது .

'மவளே !மனசுக்குள் பெரிய கணேஷ் வசந்துன்னு நினைப்பு .......நீ செஞ்ச வேலைக்கு பெயர் திருட்டு .......சிறையில் கலி எப்படி இருக்கும் என்று எனக்கு நோ ஐடியா "நேரம் காலம் தெரியாமல் வந்து ஆஜர் ஆனா மனசாட்சியை "சீ போ "என்று விரட்டி அடித்தவள் ,லொக்கெட் மேல் "I LOVE YOU "என்று பொறிக்க பட்டு இருந்ததை கண்டு தலையை குலுக்கி கொண்டாள் .லாக்கெட்டை திறந்து பார்த்தாள் உள்ளே அவளை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள் மற்றொரு மதுராக்ஷி ஒரு புறம் .விஜய் மற்றொரு புறம் .

"நெனச்சேன் .......அலிபாபா குகையோடு மோசமா இருக்கும் போதே நெனச்சேன் ......ஆனா சும்மா சொல்ல கூடாது பிளான் எல்லாம் நல்லா தான் போடுறே விஜய் .......யாருமே சஸ்பெக்ட் செய்யாத ஆல்வின் வீட்டில் உன் திருட்டுவேலை எல்லாம் ஸ்டார் ஆகி இருக்கு ........... ஹ்ம்ம் அடுத்து என்ன ?பென் டிரைவ் ...."என்றவள் தன் லேப்டாப் எடுத்து வந்து அதில் இன்ஸெர்ட் செய்து ,ஹெட்போன் மாட்டி PLAY செய்தாள் .

ஏதோ ஒரு கலை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது .மேடைக்கு விஜய் கிடார் ஓடு செல்ல கரகோசத்தில் அரங்கமே அதிர்ந்தது .
vijays-birthday-to-be-celebrated-in-a-noble-manner-photos-pictures-stills.jpg

"அனைவர்க்கும் வணக்கம் ...........இன்றைக்கு என் பிறந்த நாள் "என்று விஜய் சொன்ன உடன் ,குழுமி இருந்த மாணவ மாணவியர் வாழ்த்து ஒலியில் அரங்கம் மற்றொரு முறை அதிர்ந்தது .

"ஹ்ம்ம்ம் ........செம FOLLOW UP இருந்து இருக்கும் போல் இருக்கே விஜய் உனக்கு ?"என்றாள் மதுரா அந்த ரகலையை கண்டு .

"இன்று மீண்டும் புதிதாய் நான் பிறந்த நாள் ..........ஒரு தாயால் ஜனனம் எடுத்த நான் இன்று மற்றொரு பெண்ணால் என்னை நானே உணர்ந்து கொண்ட நாள் ............எனக்குள் அவள் காதலை விதைத்து என்னை மனிதனாய் மாற்றிய நாள் ......."என்றவனை இடை இட்டது பல குரல் .

"நோ .....நோ .....அப்போ எங்க கதி ????"

"இப்படி ஏமாத்திட்டேயே மாமு "

"யார் அந்த லக்கி கேர்ள் ?"

"லவ் சொல்லிட்டியா .............என்ன க்ரீன் சிக்னல்லா ??????"

"எங்கு இருந்தாலும் வாழ்க ..........."

என்று பல குரல் அரங்கை நிறைத்தது .

"யார் அவங்க .....?பேர் என்ன ?என்ன கிளாஸ் ....எந்த காலேஜ் ????அத்தை பெண்ணா ?"

பல பல கேள்விகள் ......அவை அனைத்திற்கும் விஜய்யிடம் மௌனமே பதிலாக மென்முறுவலுடன் வந்தது .

"மாமு ...........வழக்கம் போல் சிரித்து எஸ்கேப் ஆக பார்க்காதே ...........யார் ....யார் யார் அவள் யாரோ ?"

"யாரோ அவள் ...யாரோ அவள் ..........உன் பூக்களின் வேரோ அவள் ?"

"டேய் மச்சான் மேரேஜ் எப்போ ?"என்று முதல் வரிசையில் இருந்து கேட்டது சாட்சாத் ஆல்வின் தான் .

"பாலு ...அவனை கொஞ்சம் கண்ட்ரோல் செய்யுடா "என்ற உடன் பத்து இருபது பேர் பாய்ந்து ஆல்வின்னை நொங்கி எடுத்தனர் .

"அடேய் நீ எல்லாம் நண்பனா ???ஆளை விட்ட அடிக்கறே ???எப்போ மேரேஜ்ன்னு தானேடா கேட்டேன் ????அது ஒரு குத்தமாயா ?????"என்று புலம்பினான் ஆல்வின் .

"அடேய் அவனே இன்னும் ப்ரோபஸ் செய்யலை ......இன்னைக்கு தான் சிஸ்டர் பர்த்டே ....ப்ரொபோஸ் செய்ய போறான்...அதை தான் சார் சுத்தி வளைச்சு காதல் பைத்தியத்தில் உளறிட்டு இருக்கான் ......அதற்குள் முந்திரி கொட்டை மாதிரி மேரேஜ் வரைக்கும் போனா அவன் டென்ஷன் அவனா மாட்டானா ?????போடா போடா மங்கூஸ் மண்டையா "என்று கொட்டினான் பாலாஜி .

"ஹி ஹி எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான் ....நீ continue பண்ணு மச்சி ."என்றான் ஆல்வின் அசடு வழிந்தவாறு .

"என்னது என் பர்த்டே அப்போ ப்ரொபோஸ் செய்ய இருந்தானா .........."வாய் விட்டே அலறி விட்ட மதுராவிற்கு ஒரு கணம் இதயம் நின்று பின் துடித்தது .

"என் பர்த்டே அன்னைக்கு தான் இவர் புதிதாய் மறுபடியும் பிறந்தாரமா ?.........கடவுளே .....மேடை ஏறி இப்படியா இப்படியா பிதற்றி வைப்பே .............லூசு லூசு "என்று புலம்பினாள் மதுரா என்றோ நடந்ததிற்கு இன்று .
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஒருவனால் ஒரு பாட்டில் தன் குரலால் ,முக பாவத்தால் காதலை சொல்ல முடியுமா என்ன ???பாஷை புரியாதவர்கள் கூட அவன் காதலை அந்த கணம் உணர்ந்தார்கள் .அவன் விழுந்து விழுந்து அந்த வரிகளை எழுதவில்லை .இசை அமைக்கவில்லை தான் .ஆனால் அவனால் முடிந்தது பாடுவது .பாடும் திறன் மூலம் தன் குரலால் தன் காதலை உலகம் அறிய பிரகடனப்படுத்தி கொண்டு இருந்தான் அந்த காதலன் .


41661010_263509860968895_8380313497088024950_n.jpg

1534268727.jpg

CrKE4ZrWcAAyjfX.jpg

( இந்த பாடல் வரிகளில் இருந்து புரிந்து கொண்டதை தமிழில் கொடுத்து இருக்கிறேன் ....தவறுகள் ,பிழைகள் இருக்கலாம் .)

"என் பயணமும் நீ தான் ..............என் பயணத்தின் இலக்கும் நீ தான் .
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது
நீ என் கடவுள் ..............என் எல்லா பிராத்தனைகளிலும் இருப்பவளும் நீ தான்
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது


நீ என்னுடன் இல்லாத நேரங்கள் என்னை சோதிக்கின்றன (கொல்கின்றன )
என்னுடைய எல்லா குறைகளையும் நிறைவாக்க தேவை படுவது நீ தான் .
(நீ இருந்தால் தான் என் எல்லா றைகளும் ,இழப்புகளும் நிறைவாகும் )
என்னுடைய பேரார்வம் உனக்கு தகுந்தவனாக நான் இருப்பது மட்டும் தான்
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது


இந்த ஆத்மா என்னுடையது ,இந்த உடல் என்னுடையது
ஆனால் உன்னை சந்தித்த பிறகு இரண்டுமே என்னுடையது அல்ல ....
(அவை உன்னுடையதாக மாறி விட்ட பிறகு அவை என்னுடையது அல்ல )
வலிகளை மட்டுமே நீ கொடுப்பதாய் இருந்தாலும் ,கொடுப்பது நீ என்பதால் எனக்கு அது பரிசே (வரமே )


நான் வானம் .....நீ என் பூமி
உன்னை தேடியே என் பயணம்
என்னுடைய எல்லா குறைகளையும் நிறைவாக்க தேவை படுவது நீ தான் .
இந்த பூமியில் சேர முடியாது என்றால் நாம் இணைவு சொர்க்கத்திலாவது நடக்கட்டும் .
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது


என்னுடைய இந்த வாழ்வானது .............நீ இல்லாதது
நீ இல்லாமல் ..........வாழ்க்கையை வாழவே எனக்கு தெரியாது
(நான் உயிர் வாழ தேவை படுவது நீ தான் )


நான் உன்னை தீவிரமாக காதலிக்கிறேன் .
உனக்கு இது தெரியாமல் போகலாம்
தெரியாமலே நீ இருந்து விடலாம்
ஆனால் உன்னை நோக்கிய என் பயணம் ஒரு வழி பயணம்
இலக்கான உன்னை அடையாமல் போனாலும்
உன்னை நோக்கி பயணித்து கொண்டு இருப்பதே அழகானது .


பாடல் முடிந்த போது கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆனது .கண்ணை உணர்ச்சி பிரவாகத்தில் பாடி கொண்டு இருந்தவன் கண்ணை திறக்க அதில் தெரிந்த கண்ணீரின் பளபளப்பின்னை கேமரா வெகு அழகாக பதிவு செய்து இருந்தது .

அன்று கலங்கி இருந்த அவன் கண்களுக்கு ,இன்று மதுராவின் கண்கள் கண்ணீரை சொரிந்து கொண்டு இருந்தன .மன பாரம் தாங்க முடியாமல் கட்டிலில் அப்படியே சாய்ந்து விட்டாள் .

PENANCE WILL CONTINUE.......
 




Last edited:

Susisivam

மண்டலாதிபதி
Joined
Mar 21, 2018
Messages
137
Reaction score
181
Location
Chennai
ஒருவனால் ஒரு பாட்டில் தன் குரலால் ,முக பாவத்தால் காதலை சொல்ல முடியுமா என்ன ???பாஷை புரியாதவர்கள் கூட அவன் காதலை அந்த கணம் உணர்ந்தார்கள் .அவன் விழுந்து விழுந்து அந்த வரிகளை எழுதவில்லை .இசை அமைக்கவில்லை தான் .ஆனால் அவனால் முடிந்தது பாடுவது .பாடும் திறன் மூலம் தன் குரலால் தன் காதலை உலகம் அறிய பிரகடனப்படுத்தி கொண்டு அந்த காதலன் .


View attachment 4606

View attachment 4607

View attachment 4608

( இந்த பாடல் வரிகளில் இருந்து புரிந்து கொண்டதை தமிழில் கொடுத்து இருக்கிறேன் ....தவறுகள் ,பிழைகள் இருக்கலாம் .)

"என் பயணமும் நீ தான் ..............என் பயணத்தின் இலக்கும் நீ தான் .
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது
நீ என் கடவுள் ..............என் எல்லா பிராத்தனைகளிலும் இருப்பவளும் நீ தான்
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது


நீ என்னுடன் இல்லாத நேரங்கள் என்னை சோதிக்கின்றன (கொல்கின்றன )
என்னுடைய எல்லா குறைகளையும் நிறைவாக்க தேவை படுவது நீ தான் .
(நீ இருந்தால் தான் என் எல்லா றைகளும் ,இழப்புகளும் நிறைவாகும் )
என்னுடைய பேரார்வம் உனக்கு தகுந்தவனாக நான் இருப்பது மட்டும் தான்
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது


இந்த ஆத்மா என்னுடையது ,இந்த உடல் என்னுடையது
ஆனால் உன்னை சந்தித்த பிறகு இரண்டுமே என்னுடையது அல்ல ....
(அவை உன்னுடையதாக மாறி விட்ட பிறகு அவை என்னுடையது அல்ல )
வலிகளை மட்டுமே நீ கொடுப்பதாய் இருந்தாலும் ,கொடுப்பது நீ என்பதால் எனக்கு பிடித்தமே


நான் வானம் .....நீ என் பூமி
உன்னை தேடியே என் பயணம்
என்னுடைய எல்லா குறைகளையும் நிறைவாக்க தேவை படுவது நீ தான் .
இந்த பூமியில் சேர முடியாது என்றால் நாம் இணைவு சொர்க்கத்திலாவது நடக்கட்டும் .
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது


என்னுடைய இந்த வாழ்வானது .............நீ இல்லாதது
நீ இல்லாமல் ..........வாழ்க்கையை வாழவே எனக்கு தெரியாது
(நான் உயிர் வாழ தேவை படுவது நீ தான் )


நான் உன்னை தீவிரமாக காதலிக்கிறேன் .
உனக்கு இது தெரியாமல் போகலாம்
தெரியாமலே நீ இருந்து விடலாம்
ஆனால் உன்னை நோக்கிய என் பயணம் ஒரு வழி பயணம்
இலக்கான உன்னை அடையாமல் போனாலும்
உன்னை நோக்கி பயணித்து கொண்டு இருப்பதே எனக்கு போதும் .


பாடல் முடிந்த போது கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆனது .கண்ணை உணர்ச்சி பிரவாகத்தில் பாடி கொண்டு இருந்தவன் கண்ணை திறக்க அதில் தெரிந்த கண்ணீரின் பளபளப்பின்னை கேமரா வெகு அழகாக பதிவு செய்து இருந்தது .

அன்று கலங்கி இருந்த அவன் கண்களுக்கு ,இன்று பாரம் கண்கள் சொரிந்து கொண்டு இருந்தன .

PENANCE WILL CONTINUE.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top