• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இவர்கள் இங்கே தோட்டத்தில் பேசி கொண்டு இருக்க ,வீட்டின் முன்புறம் அதே சமயம் மற்றொரு மீட்டிங் விஜய் அண்ட் கோ போட்டு கொண்டு இருந்தார்கள் .
vijays-bairavaa-opening-day-show-details-photos-pictures-stills-1.jpg

"அவன் ஏன் இங்கே வந்தான் ஆல்வின் ?"என்றான் விஜய் கோபமாக .

"அதை சொல்ல தான் மோர்னிங் வந்தேன் ....அதற்குள் நீ செய்த கூத்தில் எல்லாம் மறந்து போச்சு .....சோனாவை சூர்யா ஆட்கள் பேக் செய்துட்டாங்கன்னு கேள்வி......என்ன ட்ரான்ஸாக்ட் ஆச்சுன்னு தெரியலை .....அது விஷயமா தான் இப்போ உத்தம் மதுராவை பார்க்க வந்து இருக்கான்னு தோணுது ......"என்றான் ஆல்வின் .

"அவன் ஏன் மதுரா விஷயத்தில் வீணா தலை இடுறான் ?"என்றார் சேது

"ஏனென்றால் சூர்யா மதுராவை லவ் செய்யறான் அப்பா .....காலேஜ் அப்போவே இவ கூட தான் பெவிகால் இல்லாத குறையை ஓட்டிட்டு அலைவான் ......இப்போ கேட்கவா வேண்டும் ......"என்றான் விஜய் விரக்தியாக .

"நாங்க இருக்கும் வரை நீ எதற்கும் கவலை படாதே கருணா ....எங்களை மீறி தான் எவனாய் இருந்தாலும் மதுராவை நெருங்க முடியும் ...."என்றார் சேது .

"சூர்யா ஒன்று நினைத்தால் அதை நடத்தி முடித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பான் ....."என்றான் விஜய் பெருமூச்சு விட்டு .

"அது என்னவோ சரி தான் ......அவன் போடும் பிளான் என்றுமே மிஸ் ஆனது இல்லை ......அதனால் தான் சோனா ACP ராஜேஸ்வரி கிட்டே மாட்டி வைத்து இருக்கான் "என்ற ஆல்வின் நடந்தது அனைத்தையும் சொல்ல மற்றவர்கள் அதிர்ந்து போனார்கள் .

"யார் எப்படி ,எங்கு ஆப்பு வைத்தாலும் இவங்க மட்டும் மாட்டவே மாட்டேன் என்கிறாங்க ............."என்றான் விஜய் கடுப்புடன் .

"ராஜேஸ்வரி மேடம் உன்னிடம் பேச வேண்டும் என்றார்கள் ......நம்பர் கொடுத்து இருக்கேன் ...எப்போ வேண்டும் என்றாலும் கால் செய்வாங்க ...."என்றான் ஆல்வின் .

"நான் கேட்ட மத்த டீடெயில்ஸ் உடன் இந்த ஜட்ஜ் ,மத்திய அமைச்சர் ,வக்கீல் பற்றியும் விவரம் வேண்டும் .....அப்படி மொத்தம் எத்தனை பேர் தான் கஜாவிடம் சிக்கி இருக்காங்க .....ஒவ்வொரு முறை வெவேறு ஆட்கள் உள்ளேகொண்டு வரார் ...."என்றான் விஜய் நெற்றியை தேய்த்தவாறு .

"விஜய் ரிலாக்ஸ் மேன் ....இப்போ எதுக்கு இப்படி தேவை இல்லாம டென்ஷன் ஆகுறே ?"என்றான் ஆல்வின் நண்பனின் மனம் புரிந்தவனாக .

கூடவே ரகு ,கார்த்திக் இருந்ததால் அவர்களால் மேற்கொண்டு எதையும் பேசவும் முடியவில்லை .சேது ஏதோ சொல்ல போன சமயம் உத்தம் மதுராவிடம் பேசி முடித்து விட்டு கிளம்பி வெளியே வந்தான் .வெளியே வந்தவன் காரில் ஏறாமல் எதையோ யோசித்தவன் விஜய் அருகே மீண்டும் வந்தான் .

"oppourtunity knocks தி door once விஜய் சார் .....அதை விடாமல் கெட்டியாக பிடித்து கொள்பவன் தான் புத்திசாலி ....ஒரு சில சமயங்களில் சந்தர்ப்பம் நம்மை தேடி மற்றவர்களால் வந்த போதும் ,அதை ஏற்காமல் தேவை அற்ற தடைகளை ஏற்படுத்துவது பைத்தியக்காரத்தனம் .....போன முறை என் பாஸ் மிஸ் செய்துட்டார் ...இந்த தடவை மதுரா மேடம் சம்மதித்தால் ,அவங்க கை பிடிக்க எந்த தடை வந்தாலும் தகர்க்க தயாராக உள்ளார் ....ஏனென்றால் அவர் தியாகச்செம்மல் இல்லை ......ரொம்ப நல்லவரா இருக்க போறதுனாலயே அவருக்கு யாரும் சிலை வைக்க போவதும் இல்லை ......மத்தவங்களுக்காக பார்த்து பார்த்து ,வாழ்ந்து ,வாழ்ந்து அவர் கிடைக்கவே முடியாத விலை மதிப்பு இல்லாத தேவதை போன்ற பெண்ணை இழக்க தயாராக இல்லை ....."என்றவன் மற்றவர்கள் திகைத்து நிற்கும் போதே கிளம்பி விட்டான் .
ar-murugadoss-plans-to-direct-ram-charan-48329e8d.jpg

அவன் பைத்தியக்காரன் என்று சொல்லியது ,வந்த வாய்ப்பை நழுவ விட்டவன் ,மீண்டும் மற்றவர்களால் வரும் வாய்ப்பை நழுவ விடுகிறவன் ,தியாக செம்மல் என்று தன்வீர் கிண்டல் அடித்தது எல்லாம் விஜயயை என்று ஆல்வின் ,பாலாஜி ,சேதுவிற்கு புரிந்து தான் இருந்தது .கண்கள் கனலை கக்க ,எரிமலையை நின்று கொண்டு இருந்த விஜய்க்கும் அது புரிந்து தான் இருந்தது .புரிந்தது அது மட்டும் அல்ல ...மதுராவை கரம் பிடிக்க ,மதுராவிற்காக எதையும் செய்ய சூர்யா தயார் ஆகி விட்டான் என்பதும் தான் .ஆனால் புரிந்தது தான் அவனுக்கு உவப்பாய் இல்லை என்பதே நிதர்சனம் .

போலி கொள்கை ,வறட்டு கெளரவம் ,தேவை அற்ற தாழ்வு மனப்பான்மை சில சமயங்களில் நம் கைக்கு கிடைக்கும் உயர்ந்த வாழ்வை தட்டி பறிக்கிறது .கை விட்டு வாழ்கை நழுவிய பிறகு அழுது ,புரண்டு மட்டும் என்ன பயன் ????காதல் என்பது உன்னதமானது .ஒருத்தியை காதலித்த பிறகு கை விடுவதும் தவறு ,கை நழுவ விடுவதும் தவறு .அது விஜய்க்கும் புரிந்தே தான் இருந்தது என்றாலும் அவன் கைகள் கட்டப்பட்டு இருந்தது .சோனா அண்ட் கோ என்ற மாபெரும் நெருப்பு சங்கிலியால் .அதை மீற முயன்றால் முதல் சேதாரம் மதுராவிற்கே என்னும் போது அவனால் துணிந்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை .மதுராவின் மானம் ,எதிர்காலம் ,அவள் குடும்பம் மட்டும் இல்லாமல் ரூபிணி வாழ்வும் அல்லவா இதில் இருக்கிறது .விவாகரத்து என்பது சோனாவாக கொடுத்தால் தான் உண்டு .அப்படியே கொடுத்தாலும் மதுராவை விஜய் மணக்க அவள் விடுவாளா என்பது மிக பெரிய கேள்விக்குறியே .ஒருவேளை காதலித்து இருப்பாளோ என்ற சந்தேகம் வந்ததற்கே ஒரு பெண்ணை கொன்று ,ஒரு பெண் மனநல காப்பகத்திற்கு சேர்க்கும் அளவுக்கு கொண்டு போய் ,மதுராவிற்கு சுமன் போன்ற அயோக்கியனை கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் சோனா திருமணம் நடக்க விடுவாளா ????

ஆனால் இது போன்ற எந்த தடைகளும் சூர்யாவின் பாதையில் இல்லை .அவன் பாதை முட்கள் அற்ற ரோஜா படுக்கை .அவன் நினைத்தை நடத்தி கொடுக்க பண பலம் ,ஆள் பலம் கொண்டவன் .பாசம் ,பந்தம் ,குடும்பம் என்ற என்ற எந்த சங்கிலியாலும் பிணைக்க படாதவன் .அவன் செயல் பட சுதந்திரம் ரொம்பவே உண்டு .விஜய்யின் தயக்கம் ,குழப்பம் ,மற்றவர்களுக்காக பார்க்கும் குணம் என்று எதுவும் இல்லாதவன் .தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் என்பவன் .

தடைகளால் கைதியாக இருப்பவன் ,தனக்கு தானே விலங்கு மாட்டி கொண்டு வெளி வர முடியாதவனுக்கும் ,எல்லா வசதிகளும் ,சந்தர்ப்பங்களும் அமைய பெற்றவனுக்கும் இடையே நடக்க இருக்கும் காதல் யுத்தத்திற்கான பரிசு மதுரா .ஆனால் அவள் மனதில் இருவரில் யார் ???

"விஜய் !வா பா உத்தம் ஏன் வந்தான் என்று மதுரா கிட்டே கேட்கணும் இல்லையா .....வா உள்ளே ..."என்றார் சேது மகனின் கவனத்தை திசை திருப்ப .

பெருமூச்சு விட்டு தன்னை வழக்கம் போல் சமாளித்து நிமிர்ந்தவன் ,தந்தையின் மனம் புரிந்தவனாக உள்ளே சென்றான் .அங்கு எந்த கவலையும் இல்லாமல் ,தனக்காக இருவர் மோதலுக்கு நிற்பதை பற்றி சற்றும் அறிந்து கொள்ள அக்கறை காட்டாதவளாக ,உத்தம் வாங்கி வந்து இருந்த ரசமலாய் இனிப்பை விழுங்கி கொண்டு இருந்தாள் மதுரா .

(நல்லா வருவே மா நீ .....ரோம் பற்றி எரியும் போது நீரோ என்னும் மன்னன் பிடில் வாசித்து கொண்டு இருந்தானாம் ....நீ அந்த category போல் இருக்கு ....ஒருவேளை "ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று விட்டா பாடுவியோ ???)

"மதுரா !......சொல்லுமா ..."என்றார் சேது அவள் எதிரே அமர்ந்து .

"ரசமலாய் நல்லா இருக்கு பெரியப்பா .....ஆனா என்ன பாதம் பால் தான் கொஞ்சமா இருக்கு ...."என்றாள் மதுரா அது தான் உலக மகா ,மெகா இம்போர்ட்டண்ட் விஷயம் என்பது போலெ

சேது முகம் போன போக்கை கண்டு,விஜய் வாயை கையால் மறைத்து தன் சிரிப்பை அடக்கி கொண்டான் .அவனை ஒரு பார்வை பார்த்த விட்டு மதுரா மீண்டும் ஸ்வீட்டில் கவனம் செலுத்தினாள் .

"நான் அதை கேட்கலை மதுரா ..."என்றார் சேது .

"ரொம்ப தேங்க்ஸ் பெரியப்பா .....எனக்கே இது பத்தாது ....நீங்க வேற பங்குக்கு வந்துடீங்களோ என்று பயந்து தான் போய் இருந்தேன் .....அம்மா !மீதம் இருப்பதை பிரிட்ஜில் வையுங்க ...நான் count செய்துட்டேன் இன்னும் 8 இருக்கு .....யாருக்கும் கொடுக்காதீங்க "என்றாள் மதுரா .

பவானி தலையில் அடித்து கொள்ள ,விஜய் பொங்கி வந்த சிரிப்பை இருமலாக மாற்றி சமாளித்தான் .அவள் குணம் அறிந்தவன் ஆயிற்றே .அவள் பண்ணும் அலம்பலை அவனால் ரசிக்க மட்டுமே முடிந்தது .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"மதுரா !உத்தம் ஏன் இங்கு வந்தான் என்று பெரியப்பா கேட்கிறாங்க ....யாரும் உன் ஸ்வீட்க்கு பங்கு வரவில்லை ."என்றாள் சுபா கடுப்போடு .

எதையும் பேசாத மதுரா அவள் அருகே வைத்து இருந்த அக்ரீமெண்ட்ஸ் இரண்டையும் எடுத்து சேதுவிடம் கொடுத்து விட்டு தன் வேலையை -அதான் ஸ்வீட் சாப்பிடும் வேலையை செவ்வனே செய்தாள் .ஒவ்வொருவராய் படித்தவர்கள் தான் திகைத்து போய் அடுத்து என்ன பேசுவது ,செய்வது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

அக்ரீமெண்ட் விஷயம் அது வரை தெரியாத பவானி ,கார்த்திக் ,ரகு தான் அதிகமாக அதிர்ந்தது .மற்றவர்களுக்கு சூர்யாவின் அதிரடி அதிர்ச்சியை கொடுத்து கொண்டு இருந்தது .

கோபமாக எழுந்து வந்த பவானி ,மதுராவின் தலையில் கொட்டி ,"எருமை ,எருமை ....மூக்கு முட்ட சாப்பிட தெரியுது இல்ல ......ஒரு ஒப்பந்தம் சைன் செய்யும் போது ஒன்றுக்கு நாலு முறை படித்து பார்த்து சைன் பண்ண மாட்டியா ....இன்னும் என்ன எல்லாம் அந்த சோனா பிசாசு செய்து இருக்கு ....என் கிட்டே இருந்து இன்னும் எதை எல்லாம் மறைத்து இருக்கே ......படிச்சவ தானேடீ நீயே .....லட்ச லட்சமாய் இதற்கு தான் கொட்டி படிக்க வைத்தோமா .....தத்தி ....தத்தி "என்றார் பொரிந்து தள்ளினார் பவானி .டீச்சர் மகள் மக்காய் இருந்தால் அவருக்கு கோபம் வருமா வராதா ???
CSZ7_InUAAUDBpk.jpg

"ஹிட்லர் மேடம் .....ரிலாக்ஸ் ....நீங்க படம் எல்லாம் பார்ப்பதே கிடையாதா .....காசு ,பணம் ,துட்டு ,மணி ...மணி இருந்தா .....இது போல் ஆயிரம் போலி கையெழுத்து ,பத்திரம் தயாரிக்க முடியுமாம் ...நான்சொல்லலை மாதாஜி ....என் எருமை சாரி அருமை சகோதரி தான் செப்பினாங்க .....நான் கையெழுத்து போட்ட அக்ரீமெண்ட்டில் இது மாதிரி எல்லாம் இல்லவே இல்லை என்னும் போது என்னை குறை சொல்லி என்ன யூஸ் சொல்லுங்க ......சரி அதை விடுங்க என்னுடைய பத்திரமாவது போலி பத்திரம் ,போலி கையெழுத்து .....பட் அடுத்த அக்ரீமெண்ட் மிசஸ் பவானி அதான் மா உங்க புருஷர் உயர்திரு சங்கரன்,தி கிரேட் ஆடிட்டர் ,நீதி ,நேர்மை,நியாயம் ,தர்மம் என்று வாழ்ந்தவர் ஏன் மூன்று கோடி கடன் வாங்கியதாக உண்மை கையெழுத்து போட்டு இருக்காரே ......அதை என்ன சொல்ல போறீங்க ????"சித்தப்பான்னு கண் கலங்கி ....அப்பாவுக்கு போன் போட்டு கொடுத்தேன் ...அந்த பக்கம் பேசி கொண்டே இந்த பக்கம் எதையும் படித்து பார்க்காம கையெழுத்து போட்டு கொடுத்து விட்டார் உன் தந்தை ....என் தாத்தா சொன்னது போல் உன் டாடி யூஸ்லெஸ் தான் "என்று சோனா மேடம் சொன்னாங்க மிஸ்சஸ் சங்கரன் ....இப்போ சொல்லுங்க மா யார் தத்தி ...யார் சாப்பிட மட்டும் தான் லாயக்கு ?????என்ன நாட்டாமை ......சத்தத்தையே காணொம் .....தீர்ப்பை மாத்தி சொல்லுங்க .....புருஷன் என்று வரும் போது மட்டும் வாயே திறக்க மாடீங்களே .....வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் என்பது இது தானோ ...."என்றாள் மதுரா சற்றும் அலட்டி கொள்ளாமல் .

மகளின் கூற்றில் உள்ள உண்மை சுட பவானி கையை பிசைந்து கொண்டு நின்றார் ."உண்மை சுட தானே செய்யும் "

"முடிந்து போன விஷயத்தை பற்றி பேசுவதால் பயன் இல்லை மதுரா .....இப்போ நடந்தது பற்றி தான் தெரிய வேண்டும் .....சூர்யா எதற்கு சோனாவிற்கு நாலு கோடி கொடுத்து இந்த அக்ரீமெண்ட் கான்செல் செய்யணும் ?"என்றார் மரகதம் .

"பாட்டி ....உங்க பேத்திக்கு சூர்யா நாலு கோடி கொடுத்ததாக நான் சொல்லவே இல்லையே .....நீங்களா கற்பனை செய்து கொண்டால் ...நான் என்ன செய்ய முடியும் ?"என்றாள் மதுரா

"என்னது ....நாலு கோடி சூர்யா கொடுக்கலையா .....அப்புறம் எப்படி இந்த பத்திரத்தில் சோனா சைன் போட்டா ?"என்றான் விஜய்

"நாலு கோடி கொடுக்கலையாம் ......நாலு அறை தான் கொடுத்தாராம் சூர்யா .....அப்படி தான் தன்வீர் அண்ணா சொன்னாங்க ...."என்றாள் மதுரா .

"என்னது .....!'பல குரல்கள் ஒரே காலத்தில் திகைப்பில் ஒலித்தது .

"சோனா அடி வாங்கினா இத்தனை பேர் சந்தோச படுவாங்கன்னு தெரியாம போச்சே .....என்ன மிஸ்டர் விஜய் ,எதற்கு இந்த அளவூ ஷாக் ...நீங்க அதை செய்ய முடியலை என்றா ?"என்றாள் மதுரா தலை நிமிராமலே .

CpkyUJ4XgAANbUC.jpg
அவன் பதில் சொல்வதற்குள் ,"அடிங்க ....சிரியவங்க ,பெரியவங்கனு மரியாதை இல்லாம .....தோலை உருச்சுடுவேன் ....என்ன இருந்தாலும் அவர் உன் அக்கா கணவர் ....மரியாதையா பேசு "என்றார் பவானி கோபமாக .

"ஓஹ் ...மாதாஜி ...நீங்க இன்னும் கதை கருவுக்கே வரலையா ....சோ sad .....ஸ்கிரிப்ட் உங்களுக்கு இன்னும் தெரியலை ....மதர் .....இவர் கணவராக இல்லை என்பது தானே சோனாவின் பிரச்சனையே .....சோனா ஆபீஸ் drugs யூஸ் செய்தபோ வாய் விட்டது தான் ...அதை சொன்ன நான் இந்த மேட்டரை சொல்லாமல் விட்டு விட்டேன் ......இவர் அவ கழுத்தில் திருமாங்கல்யமே கட்டவில்லையாம் ....ஒரு முடிச்சு கூட போடவில்லையாம் .....அதை கட்டியது கூட சொர்ணா பெரியம்மா தானம் .....தாலியே கட்டாத இவர் எப்படிம்மா என் அக்கா கணவர் ஆக முடியும் ??????இவர் இன்னும் கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரியாக இருப்பதால் தான் என்னை கூட்டி போய் கேட்டா பாருங்க கேள்வி ......கேள்வியா அது ...."என்றாள் மதுரா

இவ எதற்கு இதை எல்லாம் கிளறுகிறாள் என்று புரியாமல் ,விஷயம் தெரிந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

"இப்போ எதற்கு மதுரா பழசை எல்லாம் பேசிட்டு இருக்கே ....விட்டு தள்ளு "என்றார் சேது பதட்டத்துடன் .


PENANCE WILL CONTINUE....
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
sorry guys all expected madhura and suriya meet.but the day still going on.so few episodes it will take.morning varanum illaiya pa????ippo than afternnoon lunch madhura home la perpare stage.so stay and enjoy whats going on in between
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top