அன்று மாலை ஹோட்டல் "ப்ளூ டைமென்ட் " executive அறையில் சூர்யாவின் வரவுக்காக காத்து இருந்தார் சங்கரன் .புதிய வேலை மாற்றம் ,கிடைத்து இருந்த பதவி உயர்வூ அவருக்கு தனி சோபையை கொடுத்து இருந்தது .தவிர சூர்யாவின் ஆட்கள் அவருக்கு கொடுத்த மரியாதையை கண்டு நெக்குருகி போனார் .பாவம் அது அவர் மகளுக்கான மரியாதை ,மகளை கவிழ்க்க மாமனாருக்கு வீச படும் வலை என்று யார் அவருக்கு சொல்வது ????நெல்லுக்கு பாயும் தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும் பாய்கிறது .....அது தெரியாத அவர் ஒருவித கர்வமான மனநிலையில் தான் காத்து இருந்தார் .
இருக்காதா பின்னே ...தன் மகனின் பண்பு ,தங்களின் குடும்பத்தை பார்த்து ஒரு ராஜ வம்ச சம்பந்தம் வருகிறது என்பதே பெருமை தானே ....
அவரை வெகு நேரம் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தான் சூர்யா .அது வரை அவனை போட்டோவிலும் ,டிவி பேட்டிகளிலும் மட்டுமே பார்த்து பரவச பட்டு கொண்டு இருந்த சங்கரன் ,சூர்யாவை நேரில் கண்டதும் கடவுளை கண்ட பக்தன் கணக்காய் சங்கரன் பாவனை காட்ட சூர்யாவே ஒரு கணம் ஜெர்க் ஆகி தான் போனான் .
சந்தன நிற tuxedoவில் ஆண் அழகனாய் வந்து இறங்கியவனை அந்த ஹோட்டல்லில் இருந்த அனைத்து பெண்களின் கண்களும் மொய்த்தன என்றால் மிகையல்ல ....வயது வித்தியாசம் பாராமல் ஒரு சிலரால் தான் அனைவரின் பார்வையையும் தங்கள் மேல் திருப்ப முடியும் .....அப்படி ஒரு ஆகர்சனம் அவர்களிடம் இருக்கும் .அந்த வகையை சார்ந்தவர்கள் சூர்யாவும் விஜய்யும் .
"ஹலோ சார் ."என்று சூர்யா கை நீட்ட பாட்ஷா படத்தில் ரஜினியின் கையை பயபக்தியுடன் பிடிப்பார்களே அந்த மாதிரி ஒரு ரியாக்ஷன் அவர் முகத்தில் நிலவியது .
"ஹலோ ...சார் ...ஹலோ ...ஹலோ ."என்றார் சங்கரன் வாயில் தந்தி அடித்து .
"உங்களுக்கு ஆபீஸ் ,இங்கே தங்கி இருக்கும் ஹோட்டல் அறை ,அல்லோட் செய்து இருக்கும் வீடு எல்லாம் வசதியாக இருக்கா .....ஏதாவது குறை என்றால் சொல்லுங்க ...உடனே நிவர்த்தி செய்து விடலாம் ."என்றான் சூர்யா
"ஐயோ சார் .....இதுவே ரொம்ப அதிகம் சார் ....தவிர உங்க ஏற்பாட்டில் குறை ஏதாவது இருக்குமா என்ன ....?"என்றார் சங்கரன் .
"ப்ளீஸ் மிஸ்டர் சங்கரன் ...உங்களை விட வயதில் சின்னவன் ...உங்க மகன் மாதிரி ...என்னை போய் சார் என்று எல்லாம் கூப்பிட வேண்டாம் ....பெயர் சொல்லியே கூப்பிடுங்க ...."என்றான் சூர்யா .
"ஐயோ சார் நீங்க எவ்வளவூ பெரிய பிக் ஷாட் ...உங்களை போய் ...."என்று திணறினர் சங்கரன் .
"சிவகாமி பாட்டி உங்க கிட்டே பேசி இருப்பாங்க....உறவூ ஆக போறோம் ...இன்னும் என்ன போர்மாலிட்டீஸ் அங்கிள் ....ப்ளீஸ் ஜஸ்ட் கால் மீ சூர்யா ....ப்ளீஸ் டேக் யுவர் சீட் ."என்றவன் அவர்கள் அமர்ந்ததும் ,"வாட் டூ யு லைக் டு ஹவ் அங்கிள் ?ஹாட் ஆர் கோல்டு ?"என்றான்
"mushroom சூப் இஸ் குட் ."என்றார் சங்கரன் .
சூர்யா சைகை காட்கட அவர்களுக்குகாவே காத்து நின்ற அந்த ஹோட்டலின் செஃப் சூப் செய்து கொண்டு வர சென்றான் .
"தம்பி !...உங்களை அப்படி கூப்பிடலாம் தானே ...."என்றார் சங்கரன் .
"சூர் அங்கிள் ...ஆஸ் யு விஷ் ."என்றான் சூர்யா
"தம்பி!...உங்க ஸ்டேட்டஸ் க்கு பெரிய இடத்தில இருந்து எல்லாம் சம்பந்தம் வந்து இருக்கும் ....நாங்க அப்பர் மிடில் கிளாஸ் அவ்வளவூ தான் ...உங்க வசதிக்கு .....உங்க தங்கையை இளவரசி மாதிரி வளர்த்து இருப்பீங்க ....அந்த அளவூ வசதி எல்லாம் எங்களால் கொடுக்க முடியாது ....இல்லை நான் பேசிடுறேன் .....நீங்க எல்லா வசதி செய்து தருவீங்க என்று எதிர் பார்ப்பது ,இல்லை செய்து கொடுங்க என்று கேட்பது ரெண்டுமே சரி வராது .....நீங்க எதற்கும் ஒன்றுக்கு பல முறை யோசிச்சுக்கோங்கோ ....அதனால் தான் இன்னும் என் வீட்டினரிடம் கூட இதை பற்றி எதையும் சொல்லமால் இருக்கிறேன் .....திருமணத்திற்கு பிறகு வீட்டோடு மாப்பிளை ,தனி குடித்தனம் இது எல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்லை ....தவிர எனக்கு ஒரு மகளும் இருக்கா ...அவளுக்கு திருமணம் அண்ணனாய் செய்து வைத்து ,என் காலத்திற்கு பிறகு தட்டாமல் அவளுக்கு சீர் செய்யும் கடமையும் ரகுவிற்கு இருக்கு .....பெரியவங்க சொல்வாங்க பெற்றோருக்கு போடும் சாப்பாட்டுக்கும் ,கூட பிறந்தவளுக்கு செய்யும் சீருக்கும் ஒருத்தன் கணக்கு பார்க்க கூடாது ....அப்படி பார்த்தால் அவன் ஏழு தலைமுறை பாவத்தை தான் சுமக்கும் என்று ...இதில் எல்லாவற்றிலும் தோள் கொடுக்கும் ஒரு துணை தான் எங்கள் குடும்பத்திற்கு வேண்டும் .....என் மகளின் கடைசி மூச்சு இருக்கும் வரை ,நானே இல்லாமல் போனாலும் அவளை தாங்கும் கடமை கூட பிறந்தவனாய் ரகுவிற்கு உண்டு ....இதற்கு எல்லாம் உங்க தங்கை சரி வருவார்களா ....யோசித்து சொல்லுங்க ....பிறகு மன பொருத்தம் இல்லா விட்டால் வாழ்க்கை நரகமாக கூடாது இல்லையா ?"என்றார் சங்கரன் .
அவரை தான் குறைவாக எடை போட்டு விட்டோம் என்று புரிந்து போனது சூர்யாவிற்கு ....எந்த ஒரு மனிதனின் குணத்தையும் அந்த அந்த சூழ்நிலையே வெளி கொண்டு வருகிறது.உங்கள் தங்கைக்கும் குறை இருக்க கூடாது ,எங்களுக்கும் உங்கள் தன்கையால் மனவருத்தம் வர கூடாது என்று மிக தெளிவாக கோடிட்டு காட்டி விட்ட சங்கரனின் மேல் அவனுக்கு மதிப்பு வரவே செய்தது .
"அங்கிள் !....சிவகாமி பாட்டி எங்க வீட்டின் பெரியவங்க ....அவங்க உங்களை பற்றியும் ,எங்களை பற்றியும் தெரியாமல் சம்பந்தம் பேசி இருக்க மாட்டார் ....தவிர எங்களை வளர்த்தது பாட்டி தான் ....ரெண்டு குடும்பமும் ரொம்ப க்ளோஸ் .....அவங்க முடிவூ செய்யும் எதுவும் எங்க விஷயத்தில் என்றுமே தவறாய் போனது இல்லை .....ரகுவிற்கு சந்திரா சரியான இணை என்று அவர் சொல்லி இருக்கிறார் என்றால் உங்களின் எதிர்பார்ப்பு தெரியாமல் சொல்லி இருக்க மாட்டார் ....நீங்க எதிர் பார்த்த படியே தான் சந்திரா நடந்துப்பா ....உங்க மருமகளாய் இல்லை ...மகளாய் ....."என்றான் சூர்யா .
"ரொம்ப சந்தோசம் தம்பி ...சிவகாமி மேடம் முடிவூ செய்தால் அது சரியாக தான் இருக்கும் ......இருந்தாலும் நானும் சொல்லி விடுவது என் கடமை இல்லையா ....அதான் ...நீங்க தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் .....உங்க வீட்டு பெரியவங்க வரலையா ...."என்றார் சங்கரன் .
இருக்காதா பின்னே ...தன் மகனின் பண்பு ,தங்களின் குடும்பத்தை பார்த்து ஒரு ராஜ வம்ச சம்பந்தம் வருகிறது என்பதே பெருமை தானே ....
அவரை வெகு நேரம் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தான் சூர்யா .அது வரை அவனை போட்டோவிலும் ,டிவி பேட்டிகளிலும் மட்டுமே பார்த்து பரவச பட்டு கொண்டு இருந்த சங்கரன் ,சூர்யாவை நேரில் கண்டதும் கடவுளை கண்ட பக்தன் கணக்காய் சங்கரன் பாவனை காட்ட சூர்யாவே ஒரு கணம் ஜெர்க் ஆகி தான் போனான் .
சந்தன நிற tuxedoவில் ஆண் அழகனாய் வந்து இறங்கியவனை அந்த ஹோட்டல்லில் இருந்த அனைத்து பெண்களின் கண்களும் மொய்த்தன என்றால் மிகையல்ல ....வயது வித்தியாசம் பாராமல் ஒரு சிலரால் தான் அனைவரின் பார்வையையும் தங்கள் மேல் திருப்ப முடியும் .....அப்படி ஒரு ஆகர்சனம் அவர்களிடம் இருக்கும் .அந்த வகையை சார்ந்தவர்கள் சூர்யாவும் விஜய்யும் .
"ஹலோ சார் ."என்று சூர்யா கை நீட்ட பாட்ஷா படத்தில் ரஜினியின் கையை பயபக்தியுடன் பிடிப்பார்களே அந்த மாதிரி ஒரு ரியாக்ஷன் அவர் முகத்தில் நிலவியது .
"ஹலோ ...சார் ...ஹலோ ...ஹலோ ."என்றார் சங்கரன் வாயில் தந்தி அடித்து .
"உங்களுக்கு ஆபீஸ் ,இங்கே தங்கி இருக்கும் ஹோட்டல் அறை ,அல்லோட் செய்து இருக்கும் வீடு எல்லாம் வசதியாக இருக்கா .....ஏதாவது குறை என்றால் சொல்லுங்க ...உடனே நிவர்த்தி செய்து விடலாம் ."என்றான் சூர்யா
"ஐயோ சார் .....இதுவே ரொம்ப அதிகம் சார் ....தவிர உங்க ஏற்பாட்டில் குறை ஏதாவது இருக்குமா என்ன ....?"என்றார் சங்கரன் .
"ப்ளீஸ் மிஸ்டர் சங்கரன் ...உங்களை விட வயதில் சின்னவன் ...உங்க மகன் மாதிரி ...என்னை போய் சார் என்று எல்லாம் கூப்பிட வேண்டாம் ....பெயர் சொல்லியே கூப்பிடுங்க ...."என்றான் சூர்யா .
"ஐயோ சார் நீங்க எவ்வளவூ பெரிய பிக் ஷாட் ...உங்களை போய் ...."என்று திணறினர் சங்கரன் .
"சிவகாமி பாட்டி உங்க கிட்டே பேசி இருப்பாங்க....உறவூ ஆக போறோம் ...இன்னும் என்ன போர்மாலிட்டீஸ் அங்கிள் ....ப்ளீஸ் ஜஸ்ட் கால் மீ சூர்யா ....ப்ளீஸ் டேக் யுவர் சீட் ."என்றவன் அவர்கள் அமர்ந்ததும் ,"வாட் டூ யு லைக் டு ஹவ் அங்கிள் ?ஹாட் ஆர் கோல்டு ?"என்றான்
"mushroom சூப் இஸ் குட் ."என்றார் சங்கரன் .
சூர்யா சைகை காட்கட அவர்களுக்குகாவே காத்து நின்ற அந்த ஹோட்டலின் செஃப் சூப் செய்து கொண்டு வர சென்றான் .
"தம்பி !...உங்களை அப்படி கூப்பிடலாம் தானே ...."என்றார் சங்கரன் .
"சூர் அங்கிள் ...ஆஸ் யு விஷ் ."என்றான் சூர்யா
"தம்பி!...உங்க ஸ்டேட்டஸ் க்கு பெரிய இடத்தில இருந்து எல்லாம் சம்பந்தம் வந்து இருக்கும் ....நாங்க அப்பர் மிடில் கிளாஸ் அவ்வளவூ தான் ...உங்க வசதிக்கு .....உங்க தங்கையை இளவரசி மாதிரி வளர்த்து இருப்பீங்க ....அந்த அளவூ வசதி எல்லாம் எங்களால் கொடுக்க முடியாது ....இல்லை நான் பேசிடுறேன் .....நீங்க எல்லா வசதி செய்து தருவீங்க என்று எதிர் பார்ப்பது ,இல்லை செய்து கொடுங்க என்று கேட்பது ரெண்டுமே சரி வராது .....நீங்க எதற்கும் ஒன்றுக்கு பல முறை யோசிச்சுக்கோங்கோ ....அதனால் தான் இன்னும் என் வீட்டினரிடம் கூட இதை பற்றி எதையும் சொல்லமால் இருக்கிறேன் .....திருமணத்திற்கு பிறகு வீட்டோடு மாப்பிளை ,தனி குடித்தனம் இது எல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்லை ....தவிர எனக்கு ஒரு மகளும் இருக்கா ...அவளுக்கு திருமணம் அண்ணனாய் செய்து வைத்து ,என் காலத்திற்கு பிறகு தட்டாமல் அவளுக்கு சீர் செய்யும் கடமையும் ரகுவிற்கு இருக்கு .....பெரியவங்க சொல்வாங்க பெற்றோருக்கு போடும் சாப்பாட்டுக்கும் ,கூட பிறந்தவளுக்கு செய்யும் சீருக்கும் ஒருத்தன் கணக்கு பார்க்க கூடாது ....அப்படி பார்த்தால் அவன் ஏழு தலைமுறை பாவத்தை தான் சுமக்கும் என்று ...இதில் எல்லாவற்றிலும் தோள் கொடுக்கும் ஒரு துணை தான் எங்கள் குடும்பத்திற்கு வேண்டும் .....என் மகளின் கடைசி மூச்சு இருக்கும் வரை ,நானே இல்லாமல் போனாலும் அவளை தாங்கும் கடமை கூட பிறந்தவனாய் ரகுவிற்கு உண்டு ....இதற்கு எல்லாம் உங்க தங்கை சரி வருவார்களா ....யோசித்து சொல்லுங்க ....பிறகு மன பொருத்தம் இல்லா விட்டால் வாழ்க்கை நரகமாக கூடாது இல்லையா ?"என்றார் சங்கரன் .
அவரை தான் குறைவாக எடை போட்டு விட்டோம் என்று புரிந்து போனது சூர்யாவிற்கு ....எந்த ஒரு மனிதனின் குணத்தையும் அந்த அந்த சூழ்நிலையே வெளி கொண்டு வருகிறது.உங்கள் தங்கைக்கும் குறை இருக்க கூடாது ,எங்களுக்கும் உங்கள் தன்கையால் மனவருத்தம் வர கூடாது என்று மிக தெளிவாக கோடிட்டு காட்டி விட்ட சங்கரனின் மேல் அவனுக்கு மதிப்பு வரவே செய்தது .
"அங்கிள் !....சிவகாமி பாட்டி எங்க வீட்டின் பெரியவங்க ....அவங்க உங்களை பற்றியும் ,எங்களை பற்றியும் தெரியாமல் சம்பந்தம் பேசி இருக்க மாட்டார் ....தவிர எங்களை வளர்த்தது பாட்டி தான் ....ரெண்டு குடும்பமும் ரொம்ப க்ளோஸ் .....அவங்க முடிவூ செய்யும் எதுவும் எங்க விஷயத்தில் என்றுமே தவறாய் போனது இல்லை .....ரகுவிற்கு சந்திரா சரியான இணை என்று அவர் சொல்லி இருக்கிறார் என்றால் உங்களின் எதிர்பார்ப்பு தெரியாமல் சொல்லி இருக்க மாட்டார் ....நீங்க எதிர் பார்த்த படியே தான் சந்திரா நடந்துப்பா ....உங்க மருமகளாய் இல்லை ...மகளாய் ....."என்றான் சூர்யா .
"ரொம்ப சந்தோசம் தம்பி ...சிவகாமி மேடம் முடிவூ செய்தால் அது சரியாக தான் இருக்கும் ......இருந்தாலும் நானும் சொல்லி விடுவது என் கடமை இல்லையா ....அதான் ...நீங்க தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் .....உங்க வீட்டு பெரியவங்க வரலையா ...."என்றார் சங்கரன் .