• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 31(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அன்று மாலை ஹோட்டல் "ப்ளூ டைமென்ட் " executive அறையில் சூர்யாவின் வரவுக்காக காத்து இருந்தார் சங்கரன் .புதிய வேலை மாற்றம் ,கிடைத்து இருந்த பதவி உயர்வூ அவருக்கு தனி சோபையை கொடுத்து இருந்தது .தவிர சூர்யாவின் ஆட்கள் அவருக்கு கொடுத்த மரியாதையை கண்டு நெக்குருகி போனார் .பாவம் அது அவர் மகளுக்கான மரியாதை ,மகளை கவிழ்க்க மாமனாருக்கு வீச படும் வலை என்று யார் அவருக்கு சொல்வது ????நெல்லுக்கு பாயும் தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும் பாய்கிறது .....அது தெரியாத அவர் ஒருவித கர்வமான மனநிலையில் தான் காத்து இருந்தார் .

இருக்காதா பின்னே ...தன் மகனின் பண்பு ,தங்களின் குடும்பத்தை பார்த்து ஒரு ராஜ வம்ச சம்பந்தம் வருகிறது என்பதே பெருமை தானே ....

அவரை வெகு நேரம் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தான் சூர்யா .அது வரை அவனை போட்டோவிலும் ,டிவி பேட்டிகளிலும் மட்டுமே பார்த்து பரவச பட்டு கொண்டு இருந்த சங்கரன் ,சூர்யாவை நேரில் கண்டதும் கடவுளை கண்ட பக்தன் கணக்காய் சங்கரன் பாவனை காட்ட சூர்யாவே ஒரு கணம் ஜெர்க் ஆகி தான் போனான் .
70708751.jpg

சந்தன நிற tuxedoவில் ஆண் அழகனாய் வந்து இறங்கியவனை அந்த ஹோட்டல்லில் இருந்த அனைத்து பெண்களின் கண்களும் மொய்த்தன என்றால் மிகையல்ல ....வயது வித்தியாசம் பாராமல் ஒரு சிலரால் தான் அனைவரின் பார்வையையும் தங்கள் மேல் திருப்ப முடியும் .....அப்படி ஒரு ஆகர்சனம் அவர்களிடம் இருக்கும் .அந்த வகையை சார்ந்தவர்கள் சூர்யாவும் விஜய்யும் .

"ஹலோ சார் ."என்று சூர்யா கை நீட்ட பாட்ஷா படத்தில் ரஜினியின் கையை பயபக்தியுடன் பிடிப்பார்களே அந்த மாதிரி ஒரு ரியாக்ஷன் அவர் முகத்தில் நிலவியது .

"ஹலோ ...சார் ...ஹலோ ...ஹலோ ."என்றார் சங்கரன் வாயில் தந்தி அடித்து .

"உங்களுக்கு ஆபீஸ் ,இங்கே தங்கி இருக்கும் ஹோட்டல் அறை ,அல்லோட் செய்து இருக்கும் வீடு எல்லாம் வசதியாக இருக்கா .....ஏதாவது குறை என்றால் சொல்லுங்க ...உடனே நிவர்த்தி செய்து விடலாம் ."என்றான் சூர்யா

"ஐயோ சார் .....இதுவே ரொம்ப அதிகம் சார் ....தவிர உங்க ஏற்பாட்டில் குறை ஏதாவது இருக்குமா என்ன ....?"என்றார் சங்கரன் .

"ப்ளீஸ் மிஸ்டர் சங்கரன் ...உங்களை விட வயதில் சின்னவன் ...உங்க மகன் மாதிரி ...என்னை போய் சார் என்று எல்லாம் கூப்பிட வேண்டாம் ....பெயர் சொல்லியே கூப்பிடுங்க ...."என்றான் சூர்யா .

"ஐயோ சார் நீங்க எவ்வளவூ பெரிய பிக் ஷாட் ...உங்களை போய் ...."என்று திணறினர் சங்கரன் .

"சிவகாமி பாட்டி உங்க கிட்டே பேசி இருப்பாங்க....உறவூ ஆக போறோம் ...இன்னும் என்ன போர்மாலிட்டீஸ் அங்கிள் ....ப்ளீஸ் ஜஸ்ட் கால் மீ சூர்யா ....ப்ளீஸ் டேக் யுவர் சீட் ."என்றவன் அவர்கள் அமர்ந்ததும் ,"வாட் டூ யு லைக் டு ஹவ் அங்கிள் ?ஹாட் ஆர் கோல்டு ?"என்றான்

"mushroom சூப் இஸ் குட் ."என்றார் சங்கரன் .

சூர்யா சைகை காட்கட அவர்களுக்குகாவே காத்து நின்ற அந்த ஹோட்டலின் செஃப் சூப் செய்து கொண்டு வர சென்றான் .

"தம்பி !...உங்களை அப்படி கூப்பிடலாம் தானே ...."என்றார் சங்கரன் .

"சூர் அங்கிள் ...ஆஸ் யு விஷ் ."என்றான் சூர்யா

"தம்பி!...உங்க ஸ்டேட்டஸ் க்கு பெரிய இடத்தில இருந்து எல்லாம் சம்பந்தம் வந்து இருக்கும் ....நாங்க அப்பர் மிடில் கிளாஸ் அவ்வளவூ தான் ...உங்க வசதிக்கு .....உங்க தங்கையை இளவரசி மாதிரி வளர்த்து இருப்பீங்க ....அந்த அளவூ வசதி எல்லாம் எங்களால் கொடுக்க முடியாது ....இல்லை நான் பேசிடுறேன் .....நீங்க எல்லா வசதி செய்து தருவீங்க என்று எதிர் பார்ப்பது ,இல்லை செய்து கொடுங்க என்று கேட்பது ரெண்டுமே சரி வராது .....நீங்க எதற்கும் ஒன்றுக்கு பல முறை யோசிச்சுக்கோங்கோ ....அதனால் தான் இன்னும் என் வீட்டினரிடம் கூட இதை பற்றி எதையும் சொல்லமால் இருக்கிறேன் .....திருமணத்திற்கு பிறகு வீட்டோடு மாப்பிளை ,தனி குடித்தனம் இது எல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்லை ....தவிர எனக்கு ஒரு மகளும் இருக்கா ...அவளுக்கு திருமணம் அண்ணனாய் செய்து வைத்து ,என் காலத்திற்கு பிறகு தட்டாமல் அவளுக்கு சீர் செய்யும் கடமையும் ரகுவிற்கு இருக்கு .....பெரியவங்க சொல்வாங்க பெற்றோருக்கு போடும் சாப்பாட்டுக்கும் ,கூட பிறந்தவளுக்கு செய்யும் சீருக்கும் ஒருத்தன் கணக்கு பார்க்க கூடாது ....அப்படி பார்த்தால் அவன் ஏழு தலைமுறை பாவத்தை தான் சுமக்கும் என்று ...இதில் எல்லாவற்றிலும் தோள் கொடுக்கும் ஒரு துணை தான் எங்கள் குடும்பத்திற்கு வேண்டும் .....என் மகளின் கடைசி மூச்சு இருக்கும் வரை ,நானே இல்லாமல் போனாலும் அவளை தாங்கும் கடமை கூட பிறந்தவனாய் ரகுவிற்கு உண்டு ....இதற்கு எல்லாம் உங்க தங்கை சரி வருவார்களா ....யோசித்து சொல்லுங்க ....பிறகு மன பொருத்தம் இல்லா விட்டால் வாழ்க்கை நரகமாக கூடாது இல்லையா ?"என்றார் சங்கரன் .

அவரை தான் குறைவாக எடை போட்டு விட்டோம் என்று புரிந்து போனது சூர்யாவிற்கு ....எந்த ஒரு மனிதனின் குணத்தையும் அந்த அந்த சூழ்நிலையே வெளி கொண்டு வருகிறது.உங்கள் தங்கைக்கும் குறை இருக்க கூடாது ,எங்களுக்கும் உங்கள் தன்கையால் மனவருத்தம் வர கூடாது என்று மிக தெளிவாக கோடிட்டு காட்டி விட்ட சங்கரனின் மேல் அவனுக்கு மதிப்பு வரவே செய்தது .

"அங்கிள் !....சிவகாமி பாட்டி எங்க வீட்டின் பெரியவங்க ....அவங்க உங்களை பற்றியும் ,எங்களை பற்றியும் தெரியாமல் சம்பந்தம் பேசி இருக்க மாட்டார் ....தவிர எங்களை வளர்த்தது பாட்டி தான் ....ரெண்டு குடும்பமும் ரொம்ப க்ளோஸ் .....அவங்க முடிவூ செய்யும் எதுவும் எங்க விஷயத்தில் என்றுமே தவறாய் போனது இல்லை .....ரகுவிற்கு சந்திரா சரியான இணை என்று அவர் சொல்லி இருக்கிறார் என்றால் உங்களின் எதிர்பார்ப்பு தெரியாமல் சொல்லி இருக்க மாட்டார் ....நீங்க எதிர் பார்த்த படியே தான் சந்திரா நடந்துப்பா ....உங்க மருமகளாய் இல்லை ...மகளாய் ....."என்றான் சூர்யா .

"ரொம்ப சந்தோசம் தம்பி ...சிவகாமி மேடம் முடிவூ செய்தால் அது சரியாக தான் இருக்கும் ......இருந்தாலும் நானும் சொல்லி விடுவது என் கடமை இல்லையா ....அதான் ...நீங்க தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் .....உங்க வீட்டு பெரியவங்க வரலையா ...."என்றார் சங்கரன் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
வந்த சூப் ஒன்றை அவருக்கு நகர்த்தி வைத்தவன் ,"சாரி அங்கிள் ....லாஸ்ட் மந்த் டாடி ,மாம் வேர்ல்ட் டூர் போய் இருந்தாங்க ....அமெரிக்காவில் திடீர் என்று டாடிக்கு மைல்டு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு .....சின்ன இதய வால்வு ப்ளாகஜ் இருக்கு ....2 வீக்ஸ் முன்னாடி தான் அபேரட் செய்தாங்க அங்கேயே .....ஹி இஸ் இன் பெட் ரெஸ்ட் .....கொஞ்சம் காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு ...சோ பெட் விட்டு கூட அவர் நகர மாம் அங்கு அல்லோவ் செய்யறது இல்லை ....அவங்க கிட்டே விஷயம் பாட்டி சொல்லிட்டாங்க ....தே ஆர் ஹாப்பி ....வீடியோ கால்லில் உங்க கிட்டே பேசணும் என்று வெயிட் செய்துட்டு இருகாங்க .....பேசறீங்களா ....?"என்றான் சூர்யா .

"ஐயோ தம்பி ...என்ன நீங்க என் கிட்டே பெர்மிஸ்ஸின் எல்லாம் கேட்டுட்டு ...."என்றவர் சூர்யா தன் அன்னை ஸ்ரீ லட்சுமி ,தந்தை ஆதித்யா பிரதாப் வீடியோ கால் அழைத்தான் .

இருவரிடமும் பேசிய சங்கரனுக்கு கொஞ்சம் ,நஞ்சம் இருந்த தயக்கமும் அகன்று விட ,மனம் நிறைந்து இருந்தார் .பணக்காரர்கள் ,ராஜவம்சம் என்ற பந்தா எதுவும் இல்லாமல் பழகிய சூர்யாவின் பெற்றோர் அவருக்கு உடனே நண்பர்கள் ஆகி விட்டார்கள் .

"அண்ணா !....இவங்களுக்கு உடம்பு கொஞ்சம் முடியலை .....இப்போதைக்கு இவங்க அங்கே வர முடியாது ....நீங்க எல்லாம் எடுத்து செய்யுங்க ...நல்ல நாள் பார்த்து சொல்லுங்க ....அப்போ நான் மட்டும் வந்து நிச்சயம் முடிச்சுடறேன் .....இவர் உடல் கொஞ்சம் தேறிய பிறகு திருமணம் பற்றி யோசிக்கலாம் ...உங்களுக்கு எதுவும் மனவருத்தம் இல்லை தானே அண்ணா ?"என்ற லட்சுமியின் வார்த்தையில் அந்த அண்ணன் உருகி போனார் .

"மாப்பிள்ளை உடல் தேரட்டும் தங்கச்சி .....ரகுவிற்கு தங்கை ஒருத்தி இருக்கா ...தங்கையை வீட்டில் வச்சிட்டு அண்ணனுக்கு திருமணம் செய்தால் ஊர் உலகத்தில் ஏதாவது சொல்வாங்க மா ....மாப்பிள்ளை உடல் தேறும் முன் என் மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் .....அதே மேடையில் நிச்சயம் வைத்து கொள்வோம் ....பிறகு உங்களுக்கு தோது படும் நாளில் திருமணம் நடத்தி கொள்ளலாம் .."என்றார் சங்கரன் .

இரு வீட்டாரின் மன நிறைவாக திருமண பேச்சு நிறைவேற ,"ரொம்ப சந்தோசம் அங்கிள்....இந்த சந்தோசத்தை கொண்டாட நைட் டின்னெர் என் ட்ரீட் ....ரெஸ்டாரண்ட் போகலாமா .....வாங்க அங்கிள் ."என்றவன் அவரோடு அந்த ஹோட்டல்லின் ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்றான் .

அவனுக்கு ஒரு மொபைல் அழைப்பு வர ,"எக்சிகியூஸ் மீ அங்கிள் ...."என்று கூறி அழைப்பை பேச சென்றான் .

அவன் சென்ற சில நிமிடங்களில் சங்கரனை நோக்கி வந்தனர் இருவர் .அவர்களை கண்ட சங்கரன் மிகவும் சந்தோசத்துடன் அவர்களை வரவேற்றார் .சிறு வயதில் அவர் கிராமத்தில் சங்கரன் வீட்டின் அருகே வசித்தவர் டேனியல்.
hit_list_tamil_movie_stills_1e58a58.jpg

"ஹலோ அண்ணா ....பார்த்து பல வருஷம் ஆச்சு ....எப்போ அமெரிக்காவில் இருந்து வந்தீங்க ....?"என்றார் வந்த நபரை பார்த்து .

"ஹை சங்கர் ...ஹொவ் ஆர் யு மேன் ....லாங் டைம் நோ சீ ....கடைசியா பார்க்கும் போது காலேஜ் படிச்சுட்டு இருந்தே இப்போ என்ன தலையில் இவ்வளவூ பிளாட் வாங்கி வச்சு தொப்பையும் தொந்தியுமா இருக்கே ..."என்றார் அவர் --டேனியல் .

"வயசு ஆகுது இல்ல அண்ணா ...அதான் .....எப்படி இருக்கீங்க அண்ணி ..."என்றார் சங்கரன் டேனியல் மனைவி ஜென்னியை பார்த்து .

"நல்லா இருக்கேன் தம்பி ....நீங்க எப்படி இருக்கீங்க ....வீட்டில் எல்லோரும் நலமா ..."என்றார் ஜென்னி

"எல்லோரும் நலம் அண்ணி ....நீங்க ரெண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டதாக சொன்னாங்களே ....இங்கே வந்துடீங்களா என்ன ?"என்றார் சங்கரன் .

"இல்லை இல்லை ...அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டோம் ...அந்த லைப் ஸ்டைல் பழகி போச்சு ....மகனும் மருமகளும் தான் இங்கேயே இருகாங்க .....வருஷத்திற்கு ஒரு தடவை வந்து பார்ப்போம் ....இதோ வந்துட்டாங்க ..."
..."என்றவர் தன் மகன் கிறிஸ்டோபர் ,மருமகள் லீலாவை அறிமுகம் செய்து வைத்தனர் .

அறிமுகம் முடிந்ததும் உணவூ ஆர்டர் செய்து விட்டு ,அவர்கள் பேசி கொண்டு இருந்த சமயம் ,"ஆன்ட்டி லெட்ஸ் கோ நொவ் ."என்றார் லீலா சட்டென்று .

"என்ன லீலா ....டடின்னெர் ஆர்டர் செய்தாகி விட்டது ...என்ன ஏதாவது டெலிவெரி கேஸ் என்று ஹாஸ்பிடலில் இருந்து போன் வந்ததா என்ன ?எதற்கு இந்த hurry அண்ட் பர்ரி ?"என்றார் ஜென்னி .

எதையும் பேசாத லீலா கண் ஜாடை காட்ட ,அவர் குறிப்பிட்ட திசையில் பார்த்த ஜென்னி ரௌத்திரமானார் ."லெட்ஸ் கோ ....இந்த சாத்தான் இங்கே இருக்குன்னு தெரிஞ்சு இருந்தா வேறு ஏதாவது ரெஸ்டாரண்ட் சென்று இருக்கலாம் ....லெட்ஸ் மூவ் ."என்றவரின் பேச்சுக்கு மற்ற மூவரும் கட்டு பட்டு கிளம்பினார்கள் .

"என்ன அண்ணா ...என்ன ஆச்சு ?"என்று ஒன்றும் புரியாதவராய் பதறினார் சங்கரன் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அறை மணி நேரம் கழித்து மதுரா சுபாவோடு தங்கி இருந்த வீட்டின் காலிங் பெல் விடாமல் அடிக்க ஆரம்பித்தது .சென்னையில் நல்ல மழை பெய்து கொண்டு இருக்க ,இரவு குளிருக்கு அனைவரும் இழுத்து பொத்தி கொண்டு தூங்கி கொண்டு இருந்தவர்களின் தூக்கத்தை கலைத்தது அந்த அழைப்பு சத்தம் .என்னவோ ஏதோ என்று பதறிஅனைவரும் ஹாலில் குழும , கையில் கட்டையோடு ,எச்சரிக்கையாக கதவை திறந்தான் பாலாஜி .

கதவை திறந்தவன் அதிர்ந்து போனவனாய் ரெண்டு எட்டு பின் வைத்து நகர்ந்தான் வெளியே மழையில் நனைந்து சொட்ட சொட்ட நின்று இருந்த சங்கரனை கண்ட பிறகு .கண்கள் சிவந்து கிடக்க ,இலக்கற்று வெறித்து கொண்டு நின்றார் அவர் .

"அங்கிள் என்ன ஆச்சு ...ஆன்ட்டி கொஞ்சம் இங்கே வந்து பாருங்க ...அங்கிள் ஒரு மாதிரி நிற்கிறார் ."என்றான் பாலாஜி பவானியை நோக்கி .

முன் வந்த அனைவரும் சங்கரன் இருக்கும் நிலையை கண்டு ஒரு நொடி ஆடி தான் போனார்கள் .

"என்னங்க ...என்ன ஆச்சு .....ஏங்க ..இங்கே பாருங்க ..."என்று அவர் கன்னத்தை தட்டி அவரின் கவனத்தை தன் புறம் திருப்பினார் பவானி .

"பவானி !"என்றார் கிணற்றுக்குள் இருந்து பேசுபவர் போல் .

"பவானி தாங்க ...என்ன ஆச்சு உங்களுக்கு ....உள்ளே வாங்க ....டிரஸ் எல்லாம் நனைச்சு போய் இருக்கு ....உடம்புக்கு ஏதாவ்து வந்துட போகுது ....முதலில் வந்து டிரஸ் மாத்துங்க ....ரகு ஹீட்டர் போட்டு விடுடா ...சூடா குளிச்சுட்டு வரட்டும் ...மதுரா போய் ஹார்லிக்ஸ் கலக்கு ."என்றவர் கணவனுக்கு டடிரஸ் எடுத்து வைக்க உள்ளே போக முயன்றார் .

அவர் கையை பிடித்து நிறுத்திய சங்கரன் ,சற்று நேரம் அவரையே உற்று பார்த்து கண் கலங்க ஆரம்பித்தவர் ,பவானியின் மேல் சாய்ந்து கதறி அழ ஆரம்பித்தார் .
maxresdefault (6).jpg

"மன்னிச்சுடு பவானி ...மன்னிச்சுடு ...நான் பாவி ....மகா பாவி ...ஐயோ உன்னை நம்பாமல் போனேனே ....நான் பாவி ......மன்னிச்சுடு ....என் ஆணவத்தால் கெட்டேன் ...."என்று உச்சஸ்தாயில் அலறியவரை கண்டு மற்றவர்கள் எதுவும் புரியாமல் குழம்பி நின்றனர் .

"என்னங்க ...என்ன ஆச்சு ...எதற்கு மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க ...என்ன நடந்தது ?"என்றார் பவானி .

"அய்யோஓஒ ..நான் பாவி ...எனக்கு மன்னிப்பே கிடையாது ...என்னை மன்னிச்சுடு பவானி ..."என்று கிளி பிள்ளையாக சொன்னதையே சொல்லி புலம்பி ,அழுதார் அவர் .

அவரை சமாதானம் செய்ய முயன்ற பவானியின் எல்லா முயற்சிகளும் தோற்று போக ,சிறு பிள்ளையாய் கதறி அழும் கணவனை அணைத்து தட்டி கொடுத்தவாறே நின்றார் .

பதினைந்து நிமிடங்களுக்கு பின் அவர் புலம்பல் நிற்க ,மதுரா கொண்டு வந்து கொடுத்த ஹார்லிக்ஸ் கணவனுக்கு புகட்டி விட்டார் பவானி .சூடான பால் உள்ளே இறங்கியதும் சற்று தெம்பு பெற்றவர் ,மீண்டும் பவானியை பார்த்து கண் கலங்கி ,"என்னை மன்னிச்சுடு பவானி ."என்றார் .

"என்னங்க ஆச்சு ....ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க ...?"என்றார் பவானி

"ஒரு பாரில் எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது பவானி அதான் ..."என்றவர் ,"டேனியல் அண்ணா பற்றி சொல்லி இருக்கேன் தானே ...என் கிராமத்து வீட்டுக்கு பக்கத்தில் இருந்த அண்ணா ....அவரையும் அவர் குடும்பத்தையும் இன்றைக்கு ஹோட்டலில் பார்த்தேன் ...என்னோடு சாப்பிட அமர்ந்து ஆர்டர் கொடுத்தவங்க ,சாப்பிடாமலே கிளம்பிட்டாங்க "என்றார்

"ஏன் என்ன ஆச்சு ?"என்றார் பவானி .

"அது பார் அட்டாச்சுடு ரெஸ்டாரண்ட் ...அங்கு ஏதோ ஒரு பர்த்டே பார்ட்டி நடந்து கொண்டு இருந்தது ....அந்த பபார்ட்டியில் ஒரு பெண்ணை பார்த்து இவர்கள் கிளம்பிட்டாங்க ....அறை குறை ஆடையுடன் ,பார் டேபிள் மேல் ஏறி நின்று ஆடி கொண்டு இருந்தது.ட்ரிங்க்ஸ் ,சிகரெட் ,போதை மருந்து என்று எல்லாமே இருந்தது ..ஒழுக்கம் என்பது என்ன என்று கேட்பது போலெ இருந்தது அந்த கூட்டத்தின் நடவடிக்கை ...."என்றவரின் கண் முன் நடந்தது மீண்டும் ஓட ஆரம்பித்தது .

"சாரி சங்கர் ....அதோ அந்த பார்ட்டியில் பார் டேபிள் மீது ஆடும் பெண்ணுக்கும் எங்களுக்கும் ஆகாது ....அதான் ....நாங்க கிளம்பறோம் ..."என்றார் டேனியல் ஒரு பெண்ணை கை காட்டி .

அவர் கை காட்டிய இடத்தில் அரைகுறை ஆடையுடன் கையில் மது கோப்பையுடன் ஆடி கொண்டு இருந்தது யாரை அவர் மூத்த மகள் என்று தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினாரோ அதே சோனா தான் .
Hamsa-Nandini-Stills-At-Bengal-Tiger-Audio-Launch-12.jpg

SANKARAN இங்கு பவானியிடம் விளக்கி கொண்டு இருக்க ,மொபைலில் சூர்யாவை அழைத்த மதுரா அவனை குதறி எடுத்தாள் .

"எருமை ....எருமை ...நான் என்ன சொன்னேன் ...நீ என்ன செய்து வைத்தே ...மூளையை சேட்டு கடையில் அடகு வைத்து இருக்கியா என்ன ????....எப்பவுமே என் டாடி அழுதது இல்லை .....இன்றைக்கு சின்ன பிள்ளை போல் அழுதுட்டு இருக்கார் ...என்ன பிரபு குட்டி செய்தே ..."என்றாள் மதுரா .

"சத்தியமா சொல்றேன் நடந்ததற்க்கும் எனக்கும் எதுவும் சம்பந்தம் இல்லை ...நீ சொன்னது போல் தான் கடற்கரையில் எல்லாம் ரெடி யா இருந்தது ....சோனாவும் அவ கூட்டத்தோடு அங்கு வருவான்னு தான் உத்தம் அங்கு ரெடி யா நின்றான் ...உன் டாடி தலைவிதி ...நான் இந்த பக்கம் போன் பேச சென்ற சமயம் யாரோ டேனியல் ,உன் டாடி அண்ணா என்று அழைத்து உறவூ கொண்டாடிட்டு பேசிட்டு இருந்தார் .அது மட்டும் இல்லாமல் கடற்கரைக்கு போக வேண்டிய சோனா ,என் ஹோட்டலில் யாருக்கோ பர்த்டே பார்ட்டின்னு வந்து செம கூத்து அடிச்சுட்டு இருந்தா ....அதை அந்த டேனியல் குடும்பம் பார்த்துட்டு ,உங்க டாட்டிக்கும் அவளை பற்றி புட்டு புட்டு வைத்துட்டாங்க ....அவங்க அண்ணன் மகனை எப்படி காதலிப்பதாக ஏமாற்றி ,அவனுக்கு போதை மருந்து பழக்க படுத்தி கடைசியில் அவன் suicide செய்து கொண்டதையும் ,6 மாதம் ஏதோ ஒரு காரணத்திற்காக அமெரிக்கா ஜெயிலில் இவள் இருந்ததற்கான ஆதாரத்தையும் ,சில பல போட்டோ ,இவள் கூத்து அடிக்கும் வீடியோ ,எத்தனை முறை abortion செய்து இருக்க என்று ஹார்பிக் போட்டு கழுவாத குறை ....இதற்கே உன் டாடி நெஞ்சை பிடிச்சுட்டு பேய் அறைந்தது போல் அமர்ந்து இருந்தார் .ஆனால் அடுத்து நடந்தது தான் ஹைலைட் ."என்றான் சூர்யா

"என்னடா நடந்தது ...திரில்லர் கதையை பாதியில் விடுவது போல் நிறுத்தாததே ...சொல்லி தொலை ..."என்றாள் மதுரா .

"அப்போ மாமனை கட்டிக்கறேன் என்று சொல்லு ...."என்றான் சூர்யா .

"எனக்கு மாமனே இல்லை .....இருக்கும் ஒரே மாமன் ருத்ரா அவனையும் ராஜி கரெக்ட் செய்துட்டா ....நோ லக் ...."என்றாள் மதுரா .

"நான் இந்த மாமன் ...உன் சொந்த மாமன் ,இந்த அத்தானை சொன்னேன் டீ சிட்டு ."என்றான் சூர்யா .

"அத்தான் ...சட்டை பொத்தான் என்று விளையாடாதே பிரபு ....என்ன ஆச்சு என் டாடிக்கு ?"என்றாள் மதுரா .

"ஹ்ம்ம் உன் அக்காக்காரி இருக்காளே ....அரை குறை ஆடையுடன் அடியவாறே உன் அப்பா மடியில் வந்து விழுந்தா ...அதில் இருந்து தெளியவே உங்க அப்பாவுக்கு எவ்வளவூ நாள் ஆகுமோ தெரியலை ....விழுந்ததும் இல்லாம ,அவரை கொஞ்சி வேறு வைத்தாள் ."டார்லிங் ....யு லுக் சோ செக்ஸி .....என் கூட டேட் வரியா ....ஐ வில் ஷோ யு ஹெவன் ....."என்று வேறு கூறி வைத்து ஹக் வேறு செய்தாள் .....சரி நாம பிளான் போட்டது தான் நடக்கலை ...கடவுள் அவராகவே பிளான் போட்டு நடத்தறார் எதுக்கு இன்வோல்வ் ஆகி தடுத்து நிறுத்தணும் என்று நானும் எதையும் செய்யலை ..மனுஷன் வெலவெலத்து போனார் ..அங்கேயே நாலு முறை வாமிட் வேறு எடுத்துட்டார் .....இப்போ உன் டாடி ஆல் கிளீயர் .....பிடித்து இருந்த சோனா என்னும் பேய் உங்க டாடியை விட்டுடுச்சு ...இனி மேலாவது உங்க வீட்டில் மதுரை ஆட்சி மலரும் என்று நினைக்கிறன் .... "என்றான் சூர்யா .

"தேங்க்ஸ் டா பிரபு குட்டி ...ஐம் சோ ஹாப்பி ....."என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு ஹாலுக்கு வர அதற்குள் சங்கரன் அனைத்தையும் கூறி முடித்து மீண்டும் அடுத்த கட்ட அழுகையை தொடங்கி இருந்தார் .

அவரை சமாதானம் செய்து ,மீண்டும் ஒரு கிளாஸ் பால் கொடுத்து தூங்க வைத்தனர் .அதில் இந்த முறை ரெண்டு தூக்க மாத்திரையை கலந்து இருந்தாள் மதுரா .இல்லை என்றால் இரவூ முழுவதும் இவர் செய்யும் அளப்பறையை யார் தாங்குவது ?மிக பெரிய அதிர்ச்சியில் இருக்கும் அவருக்கும் உறக்கம் என்பது இப்போதைக்கு தேவை .

PENANCE WILL CONTINUE...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :love: :love: :love:
சோனாவோட நீலச் சாயம்
வெளுத்துப் போச்சு
டொம் டொம் டொம்
டிராகுலாவின் உண்மை
முகம் சங்கரனுக்கு தெரிஞ்சு
போச்சு
டொம் டொம் டொம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top