அவன் மீண்டும் பாடி முடிக்க பல பெண்களின் உள்ளம் இன்ஸ்டன்ட் சரண் அடைந்தது விஜய்யிடம் .அதில் மதுரா ஒருத்தியா என்று கேட்டால் விடை காலத்திற்கு தான் தெரியும் .
அந்த கல்லூரி அது வரை சூர்யாவை வைத்து கொண்டாடி கொண்டு இருந்தது .இப்பொழுது விஜய் வந்ததும் ரெண்டு குழுவாக பிரிந்து போனது ஒரு குழு விஜய் என்று பைத்தியம் பிடித்து அலைந்தது ..இன்னொரு டீம் சூர்யாவின் பின் நின்றது.
இவர்கள் இருவரும் மதுராவின் பின் .....மேக்னா விஜய் /சூர்யா இருவரில் ஒருவன் பின் .
"மதுரா ...கமோன் .....உன் திறமையை காட்டு ......வி நீட் மதுரா ....வி நீட் மதுரா "என்ற கோஷம் அரங்கை நிறைத்தது
(ஆமா இவனுங்க எதுக்கு மதுராவை வேண்டும் என்று கத்திட்டு கிடக்கானுங்க ?????என்ன செய்ய சொல்றானுங்க ???)
"ஹே லூசுங்களா ....விஜய் சார் பாடிய பிறகு நான் ஸ்டேஜ்ஜில் ஏறி பாடினா சில்வர் நோஸ் ஹார்ஸ் எல்லாம் வந்துடும் .....ஒழுங்கா கிளம்பும் வழியை பாருங்க ....."என்றாள் மதுரா அவர்களை அடக்கிய படி .
(பாடறதுக்கா ????இவளுக்கு பாட வேறு தெரியுமா என்ன ???என் கேரக்டர் இதை என் கிட்டே சொல்லவே இல்லையே ....புதுசு புதுசா திறமை வெளி வருது !!!!!!என்னது விஜய் காலேஜ் பியூட்டி குயின் மேக்னாவா ?மதுரா காம்பெடிஷன் எல்லாத்துலயும் TOUGH ஆகுதே ....விடாதே ...... )))
"என்னவோ எங்க பையனை கலைசீங்க .....உங்க காலேஜ் குயின் பத்தி பாட முடியுமான்னு .....என்ன எங்க ஆளு ஸ்ட்ரோங்ன்னு நிரூபிச்சுட்டாங்க ...என்ன உங்க மேடம் ,உங்க குயின் அவ்வளவூ தானா ????"என்று மதுராவை வெறுப்பு ஏற்றியது ஆல்வின் ....அதற்குள் எல்லோரும் கிளம்பிட்டா எப்படி ...நண்பன் தன் ஆளை வெகு நாள் கழித்து பார்க்கிறான் ....நண்பனின் காதலுக்கு உதவில்லை என்றால் எப்படி ....ஏதாவது செய்து மதுராவை நண்பனின் பார்வையில் நிற்க வைக்க முயன்று கொண்டு இருந்தான் ஆல்வின்
"அண்ணா என்ன இது ?....சும்மா இருங்க அண்ணா ...இதுங்க தான் லூசு ,படிக்கறதுக்கு டிமிக்கி கொடுக்க ஏதாவது இழுத்து விடுங்க ...நீங்க வேற ...."என்றாள் மதுரா ஆல்வின் இடம் .
"சரி எங்க விஜய் கூட போட்டி போட முடியாது......ஒத்துகிறேன் .....உங்க காலேஜ் பசங்களே "மக்னெட் வாய்ஸ் மன்னன் "என்று புது பட்டம் கொடுத்துட்டாங்க .....அதனால் ....விஜய் கூட வேண்டாம் .....எங்க காலேஜ் குயின் "மேக்னா "கூட போட்டி போடு பார்க்கலாம் ....."என்றான் ஆல்வின் .
"மதுரா விடாதே ....காமன் மதுரா ....விடாதே ....."என்று ஒரு புறம் ,"மேக்னா ...மேக்னா "என்ற குரல்கள் ஒரு புறம் .
முதலில் மேடை ஏறியது மேக்னா தான் ....வந்ததில் இருந்து அவளும் பார்த்து கொண்டு தானே இருக்கிறாள் அந்த அரங்கில் நடக்கும் கூத்தை எல்லாம் ....."காத்து இருந்தவன் பொண்டாட்டியை / தவறு புருசனை நேத்து வந்தவள் தட்டி கொண்டு போவதா ???"மதுராவின் மேல் ஒருவித துவேசம் தோன்றி விட்டது ...எதிரியாகவே பார்க்க ஆரம்பித்து விட்டாள் இவளை மேக்னா ....இப்போ ஆரம்பித்தது தான் அத்தனை வருடம் தொடர்ந்ததோ மதுரா விளக்கும் வரை ???
மதுராவை அவள் தன் காதலுக்கு ,வாழ்க்கைக்கு போட்டியாக நினைக்க ஆரம்பித்து விட்டாள் ....பெண்களின் சூட்சம உணர்வூ ...தன்னவனின் கண்களில் மதுராவிற்கான ஆர்வம் ,காதல் கண்டு கொண்டது .அவளுக்கு தான் குறைந்தவள் அல்ல ....என்ற பொறாமை ,தன் பொம்மையை மற்றொருவர் திருடி கொண்டு விடுவாரோ என்ற பயம் ,பதட்டம் .
தயங்கிய மதுராவை அவள் நண்பர்கள் விடவில்லை ...."அந்த பொண்ணு என்ன தில்லா மேடை ஏறி இருக்கு ....உனக்கு என்ன ....என்னவோ ரொம்ப தயங்கறே .....போ மதுரா ...இது மான பிரச்சனை ....."என்று வற்புத்தி மேடை ஏற்றினர் .