• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 33(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
சட்டென்று தன் பைக் கை u டர்ன் எடுத்தவன் ,"கெட் ஆன் "என்றான் .மேக்னா ஏறி அமர மின்னல் என பாய்ந்தது அந்த பைக் தொறத்தி வந்தவர்களுக்கு எதிர் திசையில் .

"என்ன சார் அவங்களை அப்படியே விட்டுட்டு வரீங்க ?"என்றாள் அவனை அட்டை மாதிரி ஒட்டி கொண்ட மேக்னா .

"பின்ன என்ன மைக் டைசன் மாதிரி சண்டை போட சொல்றியா ...நான் என்ன சினிமா ஹீரோவா டியர் ????அவனுகளை பாரு ...என்னை பாரு ....இது எல்லாம் சண்டை போடும் உடம்பா ....???நான் மட்டும் இருந்தேன் என்றால் கூட துணிந்து இறங்கிடலாம் ....உன்னை காப்பாற்ற இருக்கும் ஒரே ஆள் இப்போதைக்கு நான் தான் ....என்னை அடித்து போட்டு உன்னை தொறத்தி வந்தால் ,,,எதுக்கு ரிஸ்க் ????ஓடுவது தப்பு இல்லை ..."என்றான் அவன் .

"இப்போ எங்கே போறோம் ?"என்றாள் மேக்னா குளிரில் உடல் நடுங்க

"ஹாங் விண்வெளிக்கு .....ஆக்டர் கார்த்திக் தமன்னாஹ் கூட காரில் போயிட்டே இருப்பார் ...அது மாதிரி உன்னுடன் டூயட் பாடிட்டே உலகம் முழுக்க சுற்றி வர ஆசை ...லூசா நீ ...காலேஜ்ஜூக்கு தான் கூட்டி போறேன் ....."என்றான் அவன் கடுப்புடன் .

"இல்லங்க சாரி ...நீங்க யாருன்னே எனக்கு தெரியாது ...உங்களுக்கு என்னை தெரிஞ்சு இருக்கு ....இந்த காலத்தில் பொண்ணுங்க கொஞ்சம் அலெர்ட்டா இருக்கனும் இல்லை ...."என்றாள் மேக்னா .

சடன் brake போட்டு வண்டியை நடு ரோட்டில் நிறுத்தி திரும்பி பார்த்தான் அவளை ....."எப்படிங்க மேடம் அலெர்ட்டா இருக்கணும் ...கொஞ்ச நேரம் முன்னே பைத்தியக்காரத்தனம் செய்தாயே ....புதுசா வந்து இருக்கும் இடத்தில் அப்படீங்களா ?????என்னை யார் என்று தெரியாது தானே ....வாமா மின்னல் உன்னை மீண்டும் உன்னை தொரத்தி வந்த மச்சானுங்க கிட்டேயே விடுறேன் ...அவங்க உன்னை full லா தெரிஞ்சுப்பாங்க ....."என்றான் "full " என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து .

"சாரி சாரி ...ரொம்ப சாரி ...காப்பாத்தி கூடி போகும் உங்களை சந்தேக பட்டு இருக்க கூடாது தான் ...இருந்தாலும் ..."என்றாள் மேக்னா .

164706215-royal-enfield-wallpapers.jpg

"லீவ் இட் ....இந்த நைட் டைம் ,குன்னூர் ரோட்டில் என்ன செய்துட்டு இருந்தே மேக்னா ?"என்றான் அவன் .

என்ன வென்று சொல்வாள் ...காதல் கொடுத்த குருட்டு தைரியத்தில் எங்கே தன்னவனை அந்த மதுரா பிசாசு ,மோஹினி பேய் மயக்கி விடுமோ என்ற அச்சத்தில் ,அந்த கணமே அவனிடம் porpose செய்ய சென்றேன் ....என்றா சொல்ல முடியும் ?????

"சுத்தி பார்க்க வந்தேன் ..."என்று சரளமாக பொய் வெளி வந்தது .


"வாட் ....சுத்தி பார்க்க வந்தியா .....பார்க்க உனக்கு நேரம் காலம் இல்லை ...இடியட் ....முட்டாள் ...படிச்சவ தானேடீ நீ ....எத்தனை நியூஸ் பார்க்றே .....உன்னை எல்லாம் படிக்கச் அனுப்பினார்கள் பார் உன் வீட்டில் அவர்களை சொல்லணும் ...அறிவு கெட்டவ ...இனி இது போல் நைட் வெளியே வந்ததை பார்த்தேன் ...உன் கை காலை நானே உடைச்சுடுவேன் ....."என்று ஏறக்குறைய கர்ஜித்தான் அவன் .

பதினைந்து நிமிடத்தில் காலேஜ் வந்து விட கேட் அருகே சென்றவன் தன் ஹெல்மெட் கண்ணாடியை மட்டும் தூக்கினான் .

யார் என்று தெரிந்து கொண்ட வாட்ச்மேன் ,"உனக்கு இதே பொழைப்பா போச்சு ...என் வேலைக்கு வெட்டு வைக்காமா விட மாட்டே ...."என்றான் பைக் காரனிடம் .

"என்ன அண்ணே ...நாம என்ன அப்படியா பழகி இருக்கோம் ...இதோ பின்னால் இருக்கும் பெண்ணின் தாத்தா சீரியஸ் ...அதான் போய் பார்த்துட்டு வரலாம் என்று போனோம் .....திரும்பி வர நேரம் ஆயிடுச்சு ....சென்னை பொண்ணு வேற வழி சொல்ல தெரியலை ...இந்தாங்க அண்ணே .."என்றவன் அவர் கையில் 500 திணிக்க ,அவர் கதவை திறந்து விட்டார் .

"தேங்க்ஸ் அண்ணா ."என்றவன் தன் ஹெல்மட் வைஸரை இறக்கி விட்டு சர்ரென்று அவளை கொண்டு போய் லேடீஸ் ஹாஸ்டல் வாயில் முன் நிறுத்தினாள் .

இறங்கிய மேக்னாவிற்கு தான் முழுதாய் திரும்பி வந்த நிம்மதி ,சந்தோசம் .இறங்கி நின்றவள் ஒரு கணம் கண் மூடி நின்றாள் .

"தேங்க்ஸ் சார் ...நீங்க மட்டும் இல்லை என்றால் நினைத்து பார்க்கவே முடியலை ...ரொம்ப தேங்க்ஸ் ..."என்றவள் திரும்பி நடக்க அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தினான் பைக்காரன் .

"என்ன சார் ?"என்றாள் மேக்னா

"என்ன டியர் ...நீ பாட்டுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்பறே ....இந்த மாமன் மனசு எப்படி தவிக்குது பாரு ."என்றான் அவன்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
image-48922181-hd-wallpapers-kajal.jpg

திகைத்து நின்றாள் மேக்னா ....

(கத்தி போய் வாளு வந்தது டும் டும் டும் ....சட்டி போய் நெருப்பு வந்தது டும் டும் டும் )

"சார் ....சார் "வெறும் காத்து தான் வந்தது மேக்னா வாயில் இருந்து .

அதற்கும் அவன் ,"என்ன பேபி நீயி ...தேவர் மகன் ரேவதி போல் வெறும் காத்து தான் வருது உன் வாயில் இருந்து ....நீ என்னை பார்த்து "தித்திக்குதே "என்று பாடும் போதே நான் சரண்டர் .....என்னமா பாடுறே ...ஆளும் க=கல்கத்தா ரசகுல்லா ,காஷ்மீர் ஆப்பிள் மாதிரி தான் இருக்கே ....."என்ன விலை அழகே ....சொன்ன விலைக்கு வாங்க வருவேன் ....விலை உயிர் என்றாலும் தருவேன் ...இந்த அழகை கண்டு வியந்து நிற்கிறேன் ..."என்று வேறு பாட செய்தான் .

பேய் அடித்தது போலெ நின்றாள் மேக்னா .

"ஐயோ சார் அது உங்களை பார்த்து நான் பாடலை .....சும்மா சும்மா ...ஒரு போட்டிக்கு தான் ...கொஞ்சம் விளையாட தான் ."என்றாள் மேக்னா ---பின்னே மதுராவை வெறுப்பு ஏற்ற ,அவளை விட தான் உயர்த்தி என்று தன்னவனுக்கு நிரூபிக்க தான் பாடினேன் என்றா சொல்ல முடியும் ??

"பட் டார்லிங் .....நீ பாடியது என்னை பார்த்து தானே ....உன் விழி என்னும் வாட்கள் என்னை வெட்டி கொண்டு இருந்ததை தான் நான் கண்டேனே ....இன்னும் எதற்கு இந்த வெட்கம் ???கொஞ்சம் வா இந்த மாமன் பக்கம் ....ரெண்டு பேரும் போவோம் சொர்க்கம் ....."என்றவன் மேக்னா எதிர் பாராத போது அவளை கையை பிடித்து இழுக்க அவன் மேலேயே வந்து விழுந்தாள் மேக்னா .

அவள் இடையில் கை வைத்து அவளை வெகு அருகில் கொண்டு வந்தவனின் உடல் மௌன சிரிப்பில் குலுங்கி கொண்டு இருந்தது அவளின் முக பாவத்தை பார்த்து .

"என் இனிய தேவதையே ...பாட்டால் என்னை பைத்தியம் ஆக்கிய என் பேபி ......யு ஆர் மைன் .....ஒன்லி மைன் .....உன்னை இனி தொடர்ந்துட்டே இருப்பேன் .....இந்த மாமனுக்கு ஏத்த ரசகுல்லா நீ தான் கண்ணு ....நைட் ட்ரீம் மீட் செய்யலாம் ....பை டார்லிங் ....."என்றவன் ஒரு பிளையின் கிச் ஒன்றை அனுப்பி விட்டு கிளம்ப,மேக்னா தான் தலை சுத்தி நின்றாள் .

அவளின் அந்த தலை சுற்றலை மேலும் மேலும் அதிகரித்தான் அந்த பைக்காரன் .அவள் ஹோஸ்டேலுக்கு உள்ளே சென்று படுத்ததும் மொபைல் sms ,whatsapp "குட் நைட் மை டியர் காஷ்மீர் ஆப்பிள் " என்ற வாழ்த்துக்கள் அவளை பார்த்து இளித்தன .மறுநாள் காலை அவளுக்கு ஹாஸ்டல் முன் டெஸ்க்கில் ரோஜா பூங்கொத்து காத்து இருந்தது

"என் ஊட்டி ரோஜாவிற்கு இந்த ராஜாவின் காதல் ரோஜா ...!"என்ற வாசகங்களுடன்

(ஹா ஹா பிரமாதம் கவிதை கவிதை .....மூணு புள்ளி ஒரு ஆச்சரியக்குறி ......த்தூ ...கர்மம் ....)

அன்று மட்டும் அல்ல தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேக்னா நொந்து நூடுல்ஸ் ஆகி போனாள் .அவள் வகுப்பில் ,அவள் வண்டியில் ,பார்சல் என்று விதம் விதமாய் அவளை வெறுப்பு ஏற்ற என்ற ஏதாவது ஒன்று வந்து கொண்டு இருந்தது .

கல்லூரி முடிந்து இவள் வெளியே வரும் போது அவனக்கு எப்படி தான் தெரியுமோ ...இவள் ஹாஸ்டல் போவதற்குள் அவன் பைக்கும் அவனும் ஆஜர் ஆகி விடுவார்கள் .....ஒரு ரவுண்டு இவளை சுற்றி அடித்து விட்டே அவன் கிளம்புவான் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அன்று சில காம்பெடிஷன் ,cultural ,ஆந்திரா சுற்றுலா பற்றி பேசி முடிக்க இரவூ எட்டு மேல் ஆனது .இவள் வெளியே வரவும் ,தொலைவில் அவன் பைக் உறுமல் சபதம் கேட்க ஓட்டமும் நடையுமாக அவள் நண்பர்கள் அமர்ந்து அமர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்த மரத்திற்கு கீழ் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றாள் .

"என்னடீ ...என்னவோ உசைன் போல்ட் போல் ஓடி வர ....ஒலிம்பிக்ஸ் ஓட்டத்தில் தங்க மெடல் வாங்க ஏதாவது பிராத்தித்து இருக்கியா என்ன .....?"என்றான் விஜய்

அவனுக்கு ஹை பைவ் கொடுத்த சூர்யா ,"மெடல் வந்தா எனக்கு ட்ரீட் கொடுக்கணும் மேக்னா ...."என்றான் .

(அடப்பாவிங்களா நீங்க ரெண்டு பேர் இங்கே நிற்க ,ஒரு வாரமாய் இவளை கதற விடுபவன் அப்போ யாரு ?????)

(காதல் பரிசு படம் பார்த்து இருக்கியா ?

(எது கமல் ,அம்பிகா ,ராதா நடிச்ச படம் தானே ...அந்த காலத்துல வந்துச்சே ..ஆமா இப்போ எதுக்கு அந்த படத்தை சம்மந்தா சம்மந்தம் இல்லமா இங்கே இழுக்கறே ???".)

(அதே தான் அதில் அம்பிகா கமல் தான் தன் குழந்தைக்கு அப்பா என்று நம்பிட்டு இருப்பார் ..கடைசியில் வேறு யாரோ தான் அந்த குழந்தையின் அப்பாவா இருப்பாங்க .....ஒருவேளை அந்த சீன் சுட்டுட்டியா ?சரி சரி முறைக்காதே ...இவனுங்க இங்கே இருக்கானுங்க ...அப்போ அங்கே பைக் உறுமல் யாரால் அதான் அப்படி கேட்டேன் ...நீ வேற நோ நியூ என்ட்ரி என்று செல்லம்ஸ் கிட்டே ஏற்கனவே சொல்லிட்டே ...மீதம் இருப்பது உத்தம் ,ஆல்வின் ---இவர்களையும் அண்ணன் என்று சொல்லி பாச பறவையை பறக்க விட்டுட்டே ...மீதம் இருப்பது கார்த்திக் ,ரகு ...இவங்க ரெண்டு பேருக்கும் இந்த அளவூ தில் இருக்குமா ????இல்லை சுமன்னா ???அவன் துச்சாதனன் வேலை தானே பார்ப்பான் ...இது மாதிரி போக்கே ,காப்பாத்தறது எல்லாம் அவன் அகராதியில் இல்லவே இல்லையே .......)

"உங்களுக்கு என்னை கிண்டல் செய்ய நேரம் காலமே கிடையாதா .....நானே பயந்து போய் ஓடி வரேன் ...இப்படி கிண்டல் அடிச்சுட்டு இருக்கீங்க ?"என்றாள் மேக்னா முகம் சுருங்க .

"பின்ன எப்படி டிரஸ் செஞ்சா டாக்ஸ் எல்லாம் confuse ஆகி தொரத்த தான் செய்யும் .....பாவம் அதுங்க கண்ணு அவிஞ்சு போய் கிடக்குதுங்க .....வாட் டு டூ ?"என்றான் சூர்யா .

"என்ன நக்கலா .....நானே அவன் தொல்லை தாங்க முடியாம தவிச்சுட்டு இருக்கேன் .....இந்த torture செய்யறதற்கு அந்த சனி என்னை காப்பாத்தாமலே இருந்து இருக்கலாம் ....உங்க கிட்டே சொல்ல வந்தேன் பாருங்க ..."என்று கிளம்ப போனவளை கை பிடித்து ,இழுத்து நிறுத்தினான் விஜய் .

"என்னடீ ஆச்சு ....யார் உன்னை torture செய்யறது ?"என்றான் முகம் சிவக்க .

நடந்ததை மேக்னா சொல்ல ,ஓங்கி ஒரு அறை விட்டான் விஜய் ."பையித்தியமாடீ நீ ....ஊர் சுத்தி பார்க்க நேரம் காலம் இல்லை உனக்கு ...அறிவு கெட்டவ....வர ஆத்திரத்திற்கு உன்னை கழுத்தை பிடித்து கொல்லனும் போல் இருக்கு ......ஒண்ணு கிடக்க ஏதாவது ஆகி தொலைத்து இருந்தது என்றால் உங்க அப்பா கிட்டே என்ன போய் சொல்வோம் .....உன் லட்சணம் தெரிந்து தான் கிளம்பும் போது அப்படி "என் பொண்ணை பார்த்துகோங்கோ என்று சொன்னார் போலெ இருக்கு ."என்றான் விஜய் கோபத்துடன் .

"விடு விஜய் ....ஆர்வ கோளாறு ......இதுவே பாடமாய் இருக்கட்டும் .....இனி இது போல் செய்து வைக்காதே ...."என்றான் சூர்யா .

அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது உறுமலுடன் அவர்களுக்கு சற்று தொலைவே வந்து நின்றது அந்த பைக் .இந்த முறை பைக்கில் இருவர் .

"சூர்யா எடு அந்த ஹாக்கி ஸ்ட்டிக் ."என்று விஜய் கை நீட்ட ,சூர்யா ,ஆல்வின் ,உத்தம் ஆளாளுக்கு ஒரு ஹாக்கி ஸ்டிக் ,கிரிக்கெட் பேட் உடன் எழுந்து நின்றனர் .

பைக் உறுமிய படி இருக்க ,விஜய் சட்என்று முன் பாய ,பைக் ஹை ஸ்பீடில் அரை வட்டம் அடித்து வாயிலை நோக்கி கிளம்பியது .

"நில்லுடா பரதேசி .....எங்கே வந்து .....என்ன வேலை செய்யரே ...."என்று கத்திய படி விஜய் ,சூர்யா அண்ட் கோ பைக் தொரத்தி ஓடினார்கள் .

13-275x397.jpg

பைக் வேகத்திற்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை .அதுவே பவர் பைக் ...ஆனால் அடுத்து நடந்தது யாரும் எதிர் பார்க்காதது ...வண்டி ஒட்டியவன் பின்னால் தொறத்தி வருபவர்களை பார்த்து கொண்டே வண்டி ஓட்ட ,ஸ்பீட் பிரேக்கர் முன்னால் இருப்பதை கவனிக்க தவற ,கடைசி நொடியில் வேகத்தை குறைக்க ,அதன் ஆட்டம் தாளாமல் பின்னால் இருந்தவன் அலறியபடி கீழ் விழுந்தான் .


தன் நண்பன் கீழ் விழுந்ததை கவனிக்காமல் அவன் வேகம் எடுத்து புயல் என காலேஜ் விட்டு வெளியேறினான் .கீழே விழுந்து கிடந்தவன் ,ஓடி வருபவர்களில் கையில் சிக்கினால் தான் சட்னி என்று புரிந்து விட ,எடுத்தான் ஓட்டம் கல்லூரி வகுப்பறைகளை நோக்கி
201810280102247121_Vijay-films-court-cases_SECVPF.jpg

மூன்று building எல்லாம் corridor மூலம் இண்டெர் connected ......200 குறையாத அறைகள் .காம்பௌண்ட் எகிறி குதிக்க நிறைய இடங்கள் .....இரவூ வேறு ....இதை வைத்து அவன் தப்ப முயல்கிறான் என்பது தொரத்தி வந்தவர்களுக்கு புரிந்தது .

PENANCE WILL CONTINUE....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே
பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது
போலே பூச்சூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை

மாமனோட ஹே மாமனோட மனசு..............

அக்காளின் மகளுக்கு கேட்டதை நான்
கொடுப்பேன்
மனசில் இப்போ அல்லாடி கிடக்குற ஆசய
நான் முடிப்பேன்
விரும்பியது இன்னேரம் கிடைக்கிற போது
வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது
எல்லோர்க்கும் நினைத்தது போலே
மண வாழ்க்கை வாய்த்திடாது
எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்
இப்போது நான் அதை கண்டுபிடித்தேன்
கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட...மாமனோட

இந்த மாமனோட மனசு மல்லியப்பூ................

பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன்
மணவறையில் கண்ணாலே உனக்கொரு நன்றியை
நானுரைப்பேன்
எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும்
விழி ஓரம் ஈரமாகும்
கல்யாண கனவுல யாவும் கையில் சேரும்
நேரம் ஆகும்
பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும்
வண்டாட்டம் பரந்திடும் வஞ்சி மனதும்
மஞ்சத் தாலி மார்பில் ஊஞ்சலாட... மாமனோட

ஹே மாமனோட மனசு மல்லியப்பூ போலே
பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது
போலே பூச்சூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
மாமனோட ஹே மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Bike kara thambi nee yaarupa watchman mattum kandu pidichutaru helmet ai kadaisi varai kalatta laiye.. nice epi sis pora poka patha neenga engala kaadhal padam murugan rangeku aakitenga polaye surya&vijayView attachment 5608
ஹா... ஹா... ஹா.........
ஜூப்பரு, ஸ்ரீதேவி டியர்
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
Bike kara thambi nee yaarupa watchman mattum kandu pidichutaru helmet ai kadaisi varai kalatta laiye.. nice epi sis pora poka patha neenga engala kaadhal padam murugan rangeku aakitenga polaye surya&vijayView attachment 5608

Hmmm ama Ani ma nee apudi Oru mudivodathan iruka pola
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top