• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 33(4)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
சூர்யா கால் செய்து அழைக்க விஷயம் கேள்வி பட்டு ,ஹாஸ்டல் மாணவர்களும் சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள் .

"நம்ம காலேஜ் பசங்களுக்கு இந்த அளவூ தைரியம் வராது விஜய் ....இது வேறு காலேஜ் ஆளு என்று நினைக்கிறன் ...இந்த அளவூ காஸ்டலி பைக் இந்த கல்லூரி மாணவர்கள் இடம் கிடையவே கிடையாது ...."என்றான் சூர்யா யோசனையுடன் .

அவர்கள் வந்து நின்ற இடம் நான்கு புறம் பிரிந்தது .....சூர்யா கை காட்ட ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து தேடியவாறு ஓடினார்கள் .


அதே சமயம் பைக்கில் சென்று கொண்டு இருந்தவன் ,"அப்பாடா தப்பிச்சோம் "என்று பெருமூச்சு விட்டவாறு பைக் நிறுத்தி திரும்பி பார்க்க பின்னால் இருந்த அவன் நண்பனை காணவில்லை .அதே சமயம் அவன் போன் அடிக்க ,எடுத்தவனை எதிர் முனை காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் சென்சார் செய்யும் அளவூ வார்த்தைகளை விட்டான் .

"நீ காம்பௌண்ட் பக்கம் வந்து நில்லு .....எனக்கு தெரியும் .....மாட்ட மாட்டேன் ....."என்றவாறு திரும்பிய அவன் திகைத்தான் .

துரத்தி வந்தவர்களில் ஒருவன் அவன் முன் கண்கள் சிவந்து ,கொலைவெறி கண்களில் தெரிய ,அரக்கன் போல் ஹாக்கி ஸ்டிக் உடன் எதிரே நிற்பதை கண்டவனுக்கு சர்வமும் ஆட்டம் போட்டது .....

"ஏண்டா நீயெல்லாம் ஒரு தாய் வயித்தில் தான் பிறந்தாயா ....கேடு கெட்டவனே .....பெண் என்றால் அவ்வளவூ கிள்ளு கீரையா உனக்கு .....உன்னை மாதிரி வெறி பிடிச்ச மிருகம் எல்லாம் உயிரோடு விட்டு வைக்கவே கூடாது ...செத்து தொலை ...."என்று கர்ஜித்தவாறு ,ஹாக்கி சஸ்டிக் தலைக்கு மேல் தூக்கி ஒரே போடாக போட தன் பலம் கொண்ட மட்டும் இறக்கினான் .

"ஐயோ .....அம்மாஆஆஆ "என்ற அலறலோடு அவன் கையை மேல் தூக்கியவாறு ,அடியில் இருந்து தப்ப கீழ் சரிய ,ஹாக்கி ஸ்டிக் தூக்கியவன் ,அவனை சட் என்று இழுத்து கதவின் பின் தள்ளி விட்டான் .தள்ளி விட்ட வேகத்தில் அவன் தலை சுவற்றில் மோத ஹெல்மெட் இருந்ததால் தலை பிளக்காமல் தப்பித்தான் .

அதே நேரம் இன்னொருவன் அந்த அறையின் முன் வந்து நின்று ,"அந்த நாய் கிடைத்தானா?"என்றான்

உள்ளே இருந்த இவன் ,"இல்லை ....இ பிளாக் பக்கம் இருப்பதாக தகவல் வந்தது ....."என்றான்


"அதற்குள் எப்படி அவ்வளவூ தூரம் போனான் ...."என்றவாறு அவனோடு வந்தவர்கள் ஓட ,அவர்களின் காலடி சப்தம் நின்று அடங்கியதும் ,கதவை மூடி தாள் இட்ட அவன் ஹெல்மெட்டை தேய்த்து கொண்டு இருந்த அவனை நெருங்கி நின்றான் .

"எதற்கு உனக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் ?????"என்றான் .

அவன் கீழே போட்ட ஹாக்கி ஸ்டிக் எடுத்து கொண்ட அவன் ,"கதவை திற .....இல்லை அடிச்சுடுவேன் ...."என்றான் .

"இப்படியே வெளியில் போனே ,அவனுங்க கையில் சிக்கினே உயிர் மிஞ்சாது ....கீழே போடு ...."என்றான் அவன் .

"கிட்டே வராதே ...வராதே ..."என்று அவன் பின்னால் சென்று சுவரில் மோதி நிற்க இவன் ஹெல்மெட்டை வெகு சாவகாசமாய் கழற்ற உள் இருந்து வெளி பட்டது சாட்சாத் நம்ம மதுராவே தான்

(நிறைய பேர் கரெக்ட்டா கெஸ் பண்ணிடீங்க ...அப்படி கெஸ் செய்தவர்களுக்கு லாலா கடை ஹல்வா பார்சல் ...ஹி ஹி ஹி )
samantha-akkineni-latest-HD-photoshoot-5.jpg
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாக்கி ஸ்டிக் இவன் ஓங்கிய போதே எழுந்த அவளின் அலறல் அவனுக்கு அங்கு இருப்பது யார் என்று உணர்த்தி விட்டது .வெளியே தேடுபரவர்கள் வரும் சத்தம் கேட்டே அவளை அவன் இழுத்து கதவின் பின் புறம் தள்ளியது .

அவள் முகம் போன போக்கை கண்ட அவன் வாய் விட்டு சிரித்தான் ....இவள் முறைக்க ,"ஒகே ஒகே சிரிக்கல ..."என்றவனின் உடல் மௌன சிரிப்பில் குலுங்கியது .

"எதுக்கு இந்த வேலை ?"என்றான் அவன் .

"ஒண்ணும் இல்லை ஒரு வாரம் முன்பு மேக்னா நடு ரோட்டில் நாலு தடியன்க கிட்டே மாட்டிட்டா ...அந்த பக்கம் பைக் ரைட் செய்துட்டு இருந்த நான் தான் அவளை அங்கே இருந்து காப்பாத்தினேன் ....அவளுக்கு நான் யாருன்னே அடையாளம் தெரியலை ...ஒருவேளை பைக் பார்த்ததும் என்னை ஆண் என்று நினைச்சுட்டா போலெ இருக்கு .....சார் ...சார்ன்னு ஒரே நன்றி மழை .....இதுக்கு முன்னே போய் ஹெல்ப் செய்தா ,"உன் ஹெல்ப் எல்லாம் யார் கேட்டா ...எனக்கு தேவை இல்லைன்னு "நோஸ் கட் நான்கு முறை செய்துட்டா ...அதான் வச்சி செய்யலாம் .....கொஞ்சம் அலறட்டும் என்று சும்மா பயம் காட்டினேன் ..... "என்றாள் மதுரா முகம் அஷ்டகோணலாக ....

"உன் மேல் அவளுக்கு என்ன இத்தனை காண்டு ?"என்றான் அவன்

"என்னை கேட்டா ....எனக்கு என்ன தெரியும் ????அந்த ஆல்வின் தான் ஸ்டேஜ் ஏத்தி விட்டார் ....வேணாம் என்று சொல்லி கூட கேட்காம இவ தான் வீம்பா மேடை ஏறினா .....அங்கேயே என்னை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சுக்கு தான் முறைச்சுட்டு இருந்தா ...ஏதோ நம்ம காலேஜ் வந்து இருக்காளேன்னு உதவி பண்ண போனா ஒருத்தி இப்படியா மேல பாஞ்சி கடிச்சி வைப்பா ......அதான் ..."என்றாள் மதுரா

(ஒஹ்ஹஹ் அதான் இந்த டயலாக் ---- நீ பாடியது என்னை பார்த்து தானே ....உன் விழி என்னும் வாட்கள் என்னை வெட்டி கொண்டு இருந்ததை தான் நான் கண்டேனே ....இன்னும் எதற்கு இந்த வெட்கம் ???கொஞ்சம் வா இந்த மாமன் பக்கம் ....ரெண்டு பேரும் போவோம் சொர்க்கம் .....?" என்று டயலாக் விட்டாயா மதுரா ?

மேக்னா எதிர் பாராத போது அவளை கையை பிடித்து இழுக்க அவன் மேலேயே வந்து விழுந்தாள் மேக்னா .அவள் இடையில் கை வைத்து அவளை வெகு அருகில் கொண்டு வந்தவனின் உடல் மௌன சிரிப்பில் குலுங்கி கொண்டு இருந்தது அவளின் முக பாவத்தை பார்த்து ----ஆனாலும் மதுரா வச்சி செய்யறதில் உன்னை மிஞ்ச ஆளே இல்லை தான் .....பாவம் அந்த மேக்னா பொண்ணு ...நீ எவ்வளவூ terror என்று தெரியாமல் உன் கிட்டே வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கிச்சி .



"உனக்கு என்ன சினிமா ஹீரோ என்ற நினைப்பா .....நடு இரவில் பைக் ரைட் இப்போ ரொம்ப தேவை ....அவ மாட்டியது போல் நீ மாட்டி இருந்தே .....என்ன ஆவது ....அறிவு இல்லை ...முட்டாள் ....முட்டாள் ..."என்றான் அவன் கர்ஜனையோடு .

"நான் பைக் ரேஸ் கலந்து இருக்கேன் ...இன்னும் பிரைஸ் தான் வாங்கலை .ஊட்டி பைக் ரைடர்ஸ் கிளப் மெம்பெர் .....ரெண்டு மூணு வருசமா பவர் பைக் ஒட்டி எனக்கு பழக்கம் தான் .....ஐ லவ் ரைடிங் ....கிளப் மெம்பெர் புது பைக் வாங்கி வந்தார் ....அவருக்கு இப்போ உடம்பு சரியில்லை ....அதான் அவர் வரும் வரை நான் வைச்சு ஓட்டிட்டு இருக்கேன் .....சார் ...கொஞ்சம் அடங்குங்க .....ரொம்ப துள்ள வேண்டாம் .....எனக்கு கராத்தே ,takewando எல்லாம் தெரியும் .....competition போய் மெடல் எல்லாம் கூட வாங்கி இருக்கேன் ...."என்றாள் மதுரா .

"காசு கொடுத்து தானே ..அதான் மா ...நீ வாங்கிய மெடல் காசு கொடுத்து தானே ...இல்லை ஜட்ஜ் கிட்டே போய் அழுதியா ?"என்றான் அவன் .

"என்ன லந்தா ....ஓவர் ரா தான் பேசிட்டு போறே ...ஏதோ நண்பன் என்பதற்காக சும்மா விடறேன் ....சிங்கத்தை சொறிஞ்சு எல்லாம் பார்க்க கூடாது .....சேதாரம் பலமாய் இருக்கும் ..."என்றாள் மதுரா முறைத்தவாறு .

de031967-bbbf-f974-e01d-583702000eb4.jpg

"யாருங்க இங்கே சிங்கம் ......ஒஹ்ஹ நீங்களா உங்களை built up .....சகிக்கலை .....உன்னை எல்லாம் சிங்கம் என்று சொல்லி ஒட்டுமொத்த சிங்க கூட்டத்தை தற்கொலை செய்துக்க வைக்காதே தாயே ...ஏற்கனவே பாவம் எல்லாம் "endangered "ன்னு அரசாங்கம் சொல்லுது ."என்றவனை தொரத்தினாள் மதுரா .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அவர்கள் இருந்தது கம்ப்யூட்டர் லேப் .....அறைக்குள் அறைக்குள் அறைக்குள் அறை என்று சென்று கொண்டே இருந்தது .மற்ற வாயில்கள் ஏற்க்கனவே மூட பட்டு இருக்க ,இவர்களிருந்த அறையையும் இவன் மூடி தாழ் இட்டு இருக்க ,இவர்களின் ஓட்டம் இவர்களை கடைசி அறையில் கொண்டு நிறுத்தியது .

சின்ன பிள்ளைகள் "மியூசிக்கல் chair "விளையாடுவதை போல் அந்த அறையில் இருந்த மேஜை ,நாற்காலியை சுற்றி "அவன் "ஓடி கொண்டு இருக்க ,மதுரா அவனை கொலை வெறியோடு தொறத்தி கொண்டு இருந்தாள் .

அவன் உயரத்திற்கு அவன் கால்களை எட்ட போட்டு ஓட ,அவனை பிடிப்பதற்குள் இவளுக்கு விழி பிதுங்கி ,நாக்கு எல்லாம் வெளியே தள்ளி விட்டது .மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் மதுரா .

அவனும் எச்சரிக்கையாக சற்று தொலைவில் நின்றான் .இவள் தான் ரயில் இன்ஜினுக்கு கரி அள்ளி போட்டவள் மாதிரி வேக மூச்சு வாங்கி ஆசுவாச படுத்தி கொண்டு இருந்தாலே ஒழிய அவன் வழக்கம் போல் "அவனின் " ஸ்டைல் உடன் ஒன்றுமே ஆகாதவனாய் நின்றான் .அவன் சுவாசம் கூட ஏறவில்லை என்பது தான் ஹைலைட் .

அவள் தன்னை நிலை படுத்துவதில் குறியாய் இருக்க ,அவனின் உள் இருந்த காதலன் விழித்து எழ இவளை புன்னகையுடன் ரசித்து கொண்டு இருக்க என்று இருவரும் அந்த லேப் கதவூ பூட்ட படுவதை கவனிக்கவே இல்லை .

"என்ன சிங்கம் மேடம் ....ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட் என்று பார்த்தா ...இப்படி காற்று போன பலூன் மாதிரி ஆகிட்டிங்க ....இது தான் உங்க சிங்க முகமா ...ரொம்பவே அசிங்கமா இருக்கு ...வெளியில் போய் சொல்லிடாதீங்க ......"என்றவன் எதிர் பாராத போது அவன் மேல் பாய்ந்து விட்டாள் மதுரா .

"வாய் ....வாய் ....என்ன ஓவர் ரா ஓட்டுறே ....உன்னை ...."என்று மொத்தி எடுத்தாள் அவனை .

"ஏய் ராட்சசி ...வலிக்குதுடீ ...விடு ...விடு ........விடுடீ ....."என்றவனை அடிப்பதை அவள் நிறுத்தவே இல்லை .

அவர்களின் அந்த செல்ல சண்டை எப்பொழுது திசை மாறியது என்று கேட்டால் அவனுக்கே தெரியாது .மனதிற்கு பிடித்த பெண் ...தன் ஆசை காதலி ...தன் கை வளைவில் என்றதும் அவன் தன்னை மறந்தான் .அங்கு "அவன் "என்ற சுயம் மறைந்து "அவளின் "காதலன்" என்ற உயிர்த்து எழுந்தான்

1538201341-1271.jpg
அது நாள் வரை தயக்கத்தால் அவன் காதலை சொல்ல முடியாமல் ,எங்கே கிடைத்த அவள் நட்பையும் இழந்து விடுவோமோ என்று மனம் முழுக்க காதல் இருந்தும் ,"நண்பன் "என்ற போர்வைக்குள் ஒளிந்து தன்னை தானே ஏமாற்றி கொண்டு இருந்தான் .இன்று அந்த தடைகள் எல்லாம் தகர்ந்து நின்றன

அது வரை தான் அடிப்பதை தடுத்து கொண்டு இருந்தவனுக்கு என்ன ஆனது என்ற வியப்புடன் நிமிர்ந்தவள் திகைத்தாள் .ஏனென்றால் முழுவதுமாய் அவன் மேல் சாய்ந்து படர்ந்த நிலையில் அவள் நின்று கொண்டு இருந்தாள் .காற்று கூட புக முடியாத நெருக்கம்
vdvdvdv-1.jpg .

அடிப்பதை அது வரை தடுத்து கொண்டு இருந்த அவன் கரங்கள்,அடிப்பதை தடுப்பதை விட்டு அவள் இடை தனக்கு சொந்தம் என்று ஒய்யாரமாய் அவற்றை பிடித்து கொண்டு இருந்தது .அவன் கண்கள் அவள் உயிர் வரை ஊடுருவி கொண்டு இருந்தது .கண்களால் "அடிமை சாசனம் "மற்றவருக்கு கொடுக்க முடியுமா .....காதலில் முடியும் என்று அவனுக்கு அவளும் ,அவளுக்கு அவனும் அடிமை ஆகி கொண்டு இருந்தனர் .காதலின் முதல் படியே முழு சரணாகதி தானே ...தான் என்ற சுயம் மறைந்து இன்னொரு உயிருக்காக உருகி துடிப்பது தானே .ஒரு உடலில் இரு உயிர்கள் .மீண்டும் புதிதாய் பிறக்க வைக்கும் இன்னொரு கருவறை .

அவன் தேக்கு போன்ற மார்பில் குத்தி கொண்டு இருந்தவளின் கைகள் அந்த பரந்து விரிந்த மார்பும் ,தோளும் தனக்கே சொந்தம் என்று கைகள் அவன் மார்பிலும் ,தோளிலும் உறவாடி கொண்டு இருந்தது .



மூளை என்ற ஒன்றே செயல் பட மறந்துபோனது .ஏற்க்கனவே அவ்வளவூ நெருக்கத்தில் நின்று இருந்தவர்களில் யார் மேலும் நெருங்கியது என்று அவனை கேட்டால் அவனுக்கு சொல்ல தெரியவில்லை .

அவன் கைகள் "அவள் தனக்கு மட்டுமே சொந்தம் "என்ற உரிமையில் அவள் இடையை விட்டு தங்க முலாம் பூசியது போல் மின்னி கொண்டு இருந்த அந்த கன்னங்கள் இரண்டையும் இரு கைகள் பிடித்து கொண்டன .

"வே ......வே ....வே ....வேண்டாம் ...."என்று தந்தி அடித்தாள் மதுரா .

"எனக்கு வேண்டும் .........நீ வேண்டும் ....எனக்கு மட்டுமே என்று கடைசி வரை வேண்டும் ...இனி யாரவது நீ யார் என்று கேட்டால் போய் சொல் அவர்களிடம் ....மிஸஸ் மதுராக்ஷி ..............................."நான் என்று ....என்றான் கண்கள் மின்ன .

(அடேய் ....என்ன பேருடா சொன்னே .....யாருடா நீயி .....)


PENANCE WILL CONTINUE....
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top