Priyapraveenkumar
அமைச்சர்
Megna family enna ipdi plan podranga...ayyo madhura unai suthi enna nadakkuthu onnum puriyala.....அவள் முகத்தில் கொலைவெறி தாண்டவம் ஆடியது .
"மேக்னா !"என்று அதிர்ந்து போன ஸ்ரீலக்ஷ்மியும் ,கஜலட்சுமியும் ஒரே சமயத்தில் அலறி விட்டனர் .
"தடுக்காதீங்க மா ....எப்போ இருந்தாலும் என் எதிர்கால வாழ்க்கைக்கு அவ பிரச்சனை தான் .என் தலைக்கு மேல் தொங்கும் கத்தி ...அவளுக்கு பாவம் பார்த்தா எனக்கு புருசனும் என் பிள்ளகைளுக்கும் அப்பாவும் இருக்க மாட்டாங்க .....நீதி ,நேர்மை ,நியாயம் என்று பேசி ,மத்தவங்களுக்காக யோசித்து நான் இழந்தது எல்லாம் போதும் .....எனக்கு என் புருஷன் வேண்டும் ....அதற்ற்கு நடுவே இருக்கிறவ உயிரோடு இருக்க கூடாது ....அதற்கு தேவையானதை செய்துடுங்க டாடி ...."என்றவளை கண்டு மற்றவர்கள் ஸ்தம்பித்து நின்றனர் .
"அப்பா !...என்ன அப்பா எதையும் பேசாம இருக்கீங்க "என்றார் முகேஷ்
"மேக்னா சொல்வதை செய்துடு முகேஷ் ....நம்ம பொண்ணை விட வேறு யாரும் முக்கியம் இல்லை .....மேக்னா சொல்வது சரி .....ஒரு வீடு நல்லா இருக்க ஒருத்தரை இழக்கலாம் ....ஒரு கிராமம் நல்லா இருக்க ஒரு குடும்பத்தை இழக்கலாம் ....மேக்னா பட்ட கஷ்டம் போதும் .....இனி அவ கண்ணில் இருந்து கண்ணீர் வரவே கூடாது .....முடிச்சுடு ..."என்ற நரசிம்மன் தன் ஈசி chair சாய்ந்து ராமாஷ்டகம் சொல்ல ஆரம்பித்தார் .
அங்கு மேக்னா வீட்டில் நடப்பதை அறியாத மதுரா ராமராஜூவின் பண்ணை வீட்டினை அடைந்தாள் . தன் வீட்டின் வாயிலில் வந்து நின்று வரவேற்றார் ராமராஜூ .
View attachment 5720
"கடவுளே நன்றி ....என் வேண்டுதல் வீண் போகலை ....திருப்திக்கு நடந்தே வரேன் ....வா மகளே "என்று கண் கலங்க மதுராவை அணைத்து கொண்டவர் சட் என்று பார்க்க பிரகாஷ் ராஜ் போலவே இருந்தார் .
உள்ளே வந்த உடன் ,"ஸ்ரீ .....ஸ்ரீ ...யார் வந்து இருக்காங்க பாரு ...."என்று உரக்கவே கத்தினார் ராமு .
அவர் குரலை கேட்டு உள் இருந்து wheel chair வந்து சேர்ந்தாள் ஸ்ரீநிதி .
"செல்லி (சகோதரி )"என்ற கூவலுடன் வெகு வேகமாக தன் ச்சரினை உருட்டி கொண்டு வந்தாள் அவள் .பார்ப்பதற்கு பெங்களூரு டேஸ் பட பார்வதி மேனன் --அதான் பா RJ சாரா மாதிரி இருந்தாள் .
View attachment 5723
அவளை அணைத்து கொண்டு கண்ணீர் வடித்தாள் மதுரா .
"எப்படிடா இருக்கே ........."என்றாள் மதுரா .
penance will continue...
Ippa Srinithi Familyum unkooda close...yarathan ne vittu veachurukka....
enge ponalum familoda oottikkara.....