அவன் தோளில் இருந்து வியப்புடன் நிமிர்ந்து பார்த்தாள் மதுரா ...."என்னடி கண்ணு சாசர் மாதிரி விரியுது ....உன் மனசுல இருப்பவன் நான் டீ ....நீ என்னே நினைக்கறே என்று கூடவா தெரியாது ...என்ன பேபி ...என்ன "என்றான் அவன்
"இல்லைடா ...மனசு என்னவோ சரி இல்லை .....ஏதோ பெரிசா கெட்டது நடக்க போகுதுன்னு மனசு சொல்லுது ...என் பர்த்டே வேற வருது ....அந்த சமயம் உன் கூட இல்லாமல் இருப்பது ஒரு மாதிரி இருக்குடா ....நான் போகலை .....உன்னை பிரிந்துடுவேனோ என்று ரொம்பவே பயமா இருக்கு .........என்னை விட்டு போக மாட்டே இல்லை .....என் கூடவே தானேடா இருப்பே ....."என்றாள் மதுரா கண்கள் கலங்க .
"டேய் ...என்னடா இது ...உன்னை எவ்வளவூ தைரியசாலி என்று நினைத்து இருக்கேன் .....சின்ன புள்ளை கணக்கா அழுதுட்டு இருக்கே ....உன்னை விட்டு நான் எங்கே டா போக போறேன் .....அப்படியே போனாலும் ராட்சசி என் பின்னால் வந்து என் கண்ணை நொண்டிட மாட்டே நீ ......இந்த ரெண்டு மாதத்தில் படிப்பு முடியட்டும் .....நல்ல நாள் பார்த்து உன் வீட்டுக்கு வந்து சங்கரன் காலில் விழுந்தாவது இந்த இளவரசியை எனக்கு கட்டி கொடுங்க ......சமையல் கூட நானே செஞ்சுடறேன் ....என்று கேட்கிறேன் ஓகேவா .....இந்த பர்த்டே போகட்டும் .....அடுத்த பர்த்டே நீ என் மனைவியா இருப்பேடா ......அப்போ பாரு உன் புருஷ் performance .....இனி வரும் எல்லா பர்த்டே சேர்ந்தே தானடீ கொண்டாட போறோம் ...."உன்னை விட்டு ஓடி போக முடியுமா ...நாம் இருவர் அல்ல ஒருவர் இனி தெரியுமா ?""என்றான் அவன்
வாக்குறுதி கொடுத்த அவன் அறியவில்லை அந்த பிறந்த நாள் அவள் தலைவிதியை மாற்ற போகிறது என்று .இனி வரும் எந்த பிறந்தநாளிலும் தான் அவளுடன் இருக்க போவது இல்லை .....கனவில்,நான்கு சுவற்றுக்குள் மட்டுமே அவன் அவளுக்கான பிறந்த நாளை யாருமே அறியாமல் மட்டுமே கொண்டாடும் அவல நிலையில் இருக்க போகிறான்.ஊருக்கு ,வெளி உலகத்திற்கு அவன் இன்னொருத்தியின் கணவன்.கட்டிய மனைவியோடு பேருக்காவது சந்தோசமாய் வாழ்ந்தானா என்பது அந்த இறைவனுக்கு தான் வெளிச்சம் .
(இரு இரு ...சூர்யா ரித்திகாவோடு வாழ்ந்தானா ...தன்னை நம்பி கரம் பிடித்த பெண்ணை தள்ளி வைத்து அவளை உயிரோடு கொல்லும் வேலையை செய்து இருப்பானா ?
விஜய் உண்மையானவன் ஆக இருந்தும் அவனை மதிக்காத ,திருமணத்தின் பவித்தரத்தை உணராத சோனா யார் யாரோடு வாழ்ந்தது ????).)
சரி என்று அப்போதைக்கு தலை ஆட்டினாலும் ,madhura முகம் தெளியவில்லை ...இவனை விட்டு விட்டு மற்றவர்களுடன் அவர்களின் சுற்றுலா தொடங்கியது .
tour முடிய மூன்று நாள் இருந்த நிலையில் அவர்கள் பயணம் கதிரி அடைந்தது .மேக்னா குடும்பம் அவர்களை வரவேற்றது .அவர்கள் குழு அங்கே தங்கி இருந்த வரை மேக்னா குடும்பம் தான் அவர்களின் உணவூ ,உறைவிடம் பொறுப்பு ஏற்றார்கள் .kadiriமற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இவர்கள் குடும்பத்திற்கு மிகுந்த செல்வாக்கு .
ஸ்பெஷல் பெரிமிஸ்ஸின் வாங்கி மதுரா அண்ட் கோ --மொத்தம் நால்வர் மட்டும் அவர்களின் பண்ணை வீட்டில் தங்க ஏற்பாடு செய்தார் மேக்னா தாத்தா .இவர்கள் வந்து தங்கி இருக்கும் சமயம் கடிரி நரசிம்மர் கோயில் ஆண்டு திருமண உற்சவம் கலை கட்டி இருந்தது .அன்றோடு ஒரு சிலரின் மகிழ்ச்சி காணாமல் போனது ....ஒரு சிலரின் வாழ்வூ மாற்றி அமைக்க பட்டது .....
கடந்த காலத்தை நினைத்து பார்த்தவன் ,அவளின் புகைப்படத்தை வைத்து பார்த்து கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது .....அவனின் புகைப்படத்தை கையில் வைத்து கொண்டு கதறி கொண்டு இருந்தாள் madhura.