அன்றைய காலை பொழுது வழக்கம் போல் உதித்தாலும் ,மதுரா முடிவூ செய்த திருமணம் என்ற சூறாவளி பலரின் தலைவிதியை மாற்றி போட ஆரம்பித்தது .
பிரிந்தவனத்தில் தங்கி இருந்த பவானி தன் கையில் இருந்த செல் போனை தவற விட்டு பேய் அடித்தது போல் நின்றார் .அவரின் அந்த நிலையை கண்டு மற்றவர்கள் அவர் அருகே ஓடி வந்தனர் .சங்கரன் பல முறை உலுக்கிய பிறகே பவானி சகஜ நிலைக்கு திரும்பினாலும் அவரின் முகம் தெளியவில்லை .
"என்னடி யாரு போனிலே ?"என்றார் சங்கரன் மனைவியை இந்த அளவுக்கு நிலை குலைய வைக்கும் செய்தி அப்படி என்ன என்று புரியாதவராய் .
"சூர்யா தம்பியோட அம்மா ,சம்மந்தியம்மா பேசினாங்க ..........இன்னும் கொஞ்ச நேரத்தில் திருமணம் பேச வருகிறார்களாம் ."என்றார்
"என்னமா இது ..........ரகுவிற்கு சந்திராவிற்கும் ஏற்கனவே பேசி வைத்தது தானே .....இதுல நீ அதிர்ச்சியாக என்ன இருக்கு ?"என்றார் சங்கரன் .
"அவங்க ரகு சந்திரா திருமணத்தை மட்டும் நடத்த வரலையே ...........நம்ம மக மதுராவை சூர்யாவிற்கு முடிக்கவும் தானே வாரங்களாம் ..."என்றாள்
பவானி .
"என்னது .............!!!!"பல குரல்கள் ஒரே சமயத்தில் திகைப்போடு ஒலித்தது .
"மதுரா இங்கே இல்லாத நேரத்தில் இது என்ன புது குழப்பம் ...இந்த பொண்ணு வேற சொல்லாம கொள்ளாம டெல்லி போய் இருக்கு ...எதுக்குனும் தெரியலை ...எப்ப வரும்னும் புரியலை .....இதுல இது என்ன புது பிரச்சனை "என்றார் சங்கரன் கைகளை பிசைந்து கொண்டு .
"உங்க மக நேத்து ராத்திரியே சென்னை வந்துட்டாளாம் ....சூர்யா வீட்டில் தான் தங்கி இருக்கா ....அவ தான் சூர்யாவை விரும்புவதாகவும் அவங்க கிட்டே சொல்லி இருக்கா .....அதை கேட்டு தான் சம்மந்தியம்மா ரெண்டு திருமணத்தையும் நிச்சயம் செய்ய இப்போ வந்துட்டு இருக்காங்க ......"என்றார் பவானி வறண்ட குரலில் .
அதிர்ச்சி ,திகைப்பு ,ஸ்தம்பிப்பு என்ற எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் குத்தகைக்கு எடுத்து நின்று இருந்தனர் அந்த குடும்பத்தினர் .
பாலாஜியின் கைகள் தானாக விஜய்க்கு அழைப்பு விட ,விஷயத்தை கேள்வி பட்ட விஜய் பல வினாடிகள் சுவாசிக்கவும் மறந்து போனவனாய் சிலையாக நின்றான் .நெஞ்சின் ஒரு இடத்தில் உருவான வலி உடல் முழுக்க பரவ அமர்ந்து இருந்த சேரில் இருந்து கீழே விழுந்தவன் நெஞ்சை பிடித்து கொண்டு "ஐயோ அம்மா "என்று ஓங்கி கதற ஆரம்பித்தான் .
அவன் நிலையை கண்டு பதறி அடித்து ஓடி வந்தனர் சேது ,கனகா ,மரகதம் ,ஆல்வின்,மிருதுளா .எதை சொல்லியும் அவனை சமாதானம் செய்ய முடியவில்லை அவர்களால் .அவன் கையில் இருந்து கீழே விழுந்த செல்போனை எடுத்து பேசிய ஆல்வின் பாலாஜியை குதறி எடுத்து விட்டான் .
"என்னடா அப்படி சொல்லி தொலைச்சே ..........அவன் நெஞ்சை பிடிச்சிட்டு கதறிட்டு இருக்கான் .....அறிவூ இருக்கா இல்லையா ......எது அவனிடம் சொல்வதாய் இருந்தாலும் என்னிடம் சொல்லு ...நான் நேரம் பார்த்து பக்குவமாய் சொல்லிடறேன் என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கேன் ..........மூளையை அடகு வைத்து இருக்கியா என்ன .... "என்று நிறுத்தாமல் வறுத்து எடுத்தான் ஆல்வின் .
"ஆல் ............ஆல் ................ஸ்டாப் இட் மேன் ............என்னத்தை பொறுமையா ,நிதானமா சொல்ல போறே ......மதுரா கழுத்தில் சூர்யா தாலி கட்ட போவதையா ..............என்னடா பேச்சை காணோம் .....என்ன சொல்றேன்னா ...ராமர் சீதைக்கு சித்தப்பான்னு .....மதுரா நேத்து நைட்டே டெல்லியில் இருந்து ரெட்டர்ன் ஆகிட்டாளாம் ....நேரா சூர்யா வீட்டுக்கே போய் இருக்கா ....அவனை தான் விரும்பறேன்ன்னு அவன் கிட்டேயே சொல்லி இருக்கா .......அவன் என்ன விஜய்யா .....குடும்பம் ,சொந்தம் எல்லாம் பார்க்கா ......காலை விடிந்தும் விடியாமல் அவங்க அம்மாவை கூட்டிட்டு நிச்சயம் செய்ய வந்துட்டு இருக்கான் ...இதை எப்படி பாலிஷ்ஷா சொல்லுவே சொல்லு பார்க்கலாம் ..... இப்போ என்ன செய்யறதா .......நீயும் அவனும் சேர்ந்து சட்டியும் பானையும் செய்யுங்க ......போய் சொல்லு அந்த கூமுட்டை கிட்டே ......அவன் தானே அவளுக்கு திருமணம் செய்யணும் என்று ஒத்தை காலில் நின்று தவம் இருந்தான் ...அவன் தவம் பலித்து விட்டது ....அவன் காதலி இன்னொருவனின் மனைவியாக போகிறாள் ....அவனை "எங்கிருந்தாலும் வாழ்க "என்று பாட சொல்லு ....அவனுக்கு பாட சொல்லியா தரணும் ????......லூசாடா அவன் ...சோனா எல்லாம் ஒரு ஆள்ன்னு ...............இப்போ மட்டும் ரூபிணி அப்படியே ரொம்ப சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கலாமா ?????.....டேய் போடா ...கண் இருப்பவன் எல்லோருக்கும் தெரியும் அவ எந்த லட்சணத்தில் வாழ்ந்துட்டு இருக்கான்னு ....அவளும் வாழலை ...இவனையும் வாழ விடாமல் சாகடிச்சிட்டு இருக்கா .............இந்த பைத்தியமும் ஒருத்தன் விடாம அவளுக்கு மாப்பிளை பார்க்க சொன்னவன் தானேடா ..............இப்போ எதுக்கு நெஞ்சை பிடிச்சுட்டு கதறான் ?????இவனும் சோனவை விவாகரத்து செய்து தொலைக்க மாட்டான் .....மதுராவையும் விட முடியாமல் தவிப்பான் ......கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் ......அந்த பொண்ணு மதுரா தெளிவா தான் இருக்கு ...அது தான் எப்பவுமே ப்ராக்டிகலா இருக்குமே ......இந்த குழப்பவாதிக்கு அந்த அதிரடி ஆட்டக்காரனே சரி என்று பச்சை கொடி காட்டிடுச்சு ......வந்து திருமண வேலைகள் நிறைய இருக்கும் பார்க்க சொல்லு அவனை ...."என்று ஆடி விட்டான் பாலாஜி --ஸ்பீக்கரில் போட பட்டு இருக்க அவன் பேசியது எல்லாம் அங்கு இருந்த அனைவர்க்கும் மிக தெளிவாகவே கேட்டது .