தங்களின் ரெவியூக்கு நன்றி .
காலேஜ் சமயத்தில் மதுராவின் மனம் கவர்ந்தவன் யார் என்று இப்போதைக்கு சொல்ல இயலாது .அது சூர்யாவாக இருக்கலாம் ,இல்லை விஜய் ஆகா இருக்கலாம் ...ஆனால் இவர்கள் இருவரும் காதலித்தது மதுராவை .
ஏன் பிரிய வேண்டி வந்தது எப்படி வேறு பெண்களை இருவரும் மணக்க நேரிட்டது என்பதை ஸ்ரீ விளக்கி விட்டார் .
விஜய் தந்தை ஸ்ட்ரோக் வந்து படுத்த படுக்கை ஆகி விட்ட பிறகு ,தங்கையை மகளாக வளர்த்தவன் விஜய் என்று முன்னரே சொல்லி விட்டேன் .....ரூபிணியின் வாழ்க்கை பணயமாக இருக்கும் போது அவன் டைவோர்ஸ் என்று போக துணிய மாட்டான் ....இல்லை என்றால் தங்கையின் திருமணத்தை முதலிலேயே நிறுத்தி இருப்பானே .
இப்பொழுது இந்தேர் இண்டஸ்ட்ரீஸ் விட்டு சென்றதற்கு punishment ஆக தான் சோனா ரூபிணி கணவன் திவாகரின் பணத்தாசை பிடித்த பெற்றோர்களுக்கு போன் செய்து screw கொடுத்தது .அங்கு என்ன ட்ராமா நடக்கிறது என்று இன்னும் தெரியவில்லை .
அண்ணனின் வாழ்வுக்காக ரூபிணி விபரீதமான முடிவூ எடுப்பாளா என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .
இப்படி ஒரு வாழ்வூ வேண்டுமா என்பதை ரூபிணி தான் முடிவூ எடுக்க முடியும் .டைவோர்ஸ் அல்லது காதல் கணவனை பிரிந்து இருக்க முடியாமல் தற்கொலை என்பது எல்லாம் ரூபிணி கையில் தான் இருக்கிறது .அவள் எந்தவித முயற்சியும் எடுக்காமல் தனக்கு தானே மேற்கொண்டு இருக்கும் சிறை தண்டனை விட்டு வெளியே வராமல் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கும் வரை விஜய் தைரியமாக எந்த வித முடிவும் எடுக்க மாட்டான் .ஆனால் சாவதை தவிர வேறு எந்த முடிவூ எடுத்தாலும் அவளுக்கு பக்க பலமாக இருப்பான் என்பது மட்டும் நிஜம் .
சந்தோசமாக வாழாத ஒரு வாழ்வூ தங்கைக்கு தேவையா என்று பொங்கி எழுந்து அவளை மீட்டு எடுத்து வரும் வேலை செய்வதாக இருந்தால் இவ்வளவூ வருடம் அவன் கை கட்டி நிற்க வேண்டிய அவசியமே இல்லையே ....தங்கையின் வாழ்க்கைக்கு காவலாக இருக்கிறான் .....அவள் முடிவுக்கு கட்டு பட்டு இருக்கிறான் ....இந்த வாழ்க்கை தான் வேண்டும் என்று முடிவூ எடுத்து அனைவரையும் படுத்தி எடுத்து கொண்டு இருக்கும் ரூபிணி மனது மாறினாள் உண்டு
குழந்தைகள் ஒருவேளை அவனுடையதாக இருந்தாலும் ஊர் அறிய சோனா என்ற முதல் மனைவி உயிரோடு இருக்கும் வரை மண மேடை எற மாட்டான் ....சோனாவும் தியாக செம்மல் கிடையாது .....குழந்தைகள் ஒருவேளை இருந்தால் ,விட்டு கொடுப்பதற்கு .ஒரு வேளை அவனுடையதாக இருந்தாலும் இப்பொழுதைக்கு வெளியே சொன்னாலும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஆகி விடும் .சுமன் என்ற குழந்தைகளை விற்கும்---அதுவும் பாலியல் தொழிலுக்கு virkum கயவன் இருக்கும் வரை குழந்தைகளின் தகப்பன் யார் என்று தெரிய வருவது கூட ஆபத்து தான் .அதனால் தான் கோயிலில் நிச்சயத்திற்கு வருகிறேன் என்ற மேக்னாவை கூட மதுரா வேண்டாம் என்று சொன்னது .
அனைத்து பக்கமும் சூழ்நிலை அவனை கைதியாக்கி வைத்து இருக்கிறது ....
சேதுவும் ,மரகதமும் தான் விஜய்க்கு மதுராவோடு நிச்சயம் நடத்த அவனை இழுத்து வந்தது .ஆனால் அவன் மீண்டும் முருங்கை மரம் ஏறி கொண்டு இருக்கிறான் .
மேக்னா வில்லியா ?????போக போக தான் தெரியும் ........அவள் குழந்தைகளின் அப்பா யாராய் இருந்தாலும் ,விஜய் /சூர்யாவை தவிர வேறு யாரும் இருக்க போவது இல்லை என்றாலும் மதுராவை ஒரு நெருஞ்சி முள்ளாக ,தன் வாழ்வை சிதைத்து விட கூடிய ஆற்றல் உள்ளவளாக கருதுகிறாளோ என்னவோ ..........