banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
"கண்ணா ....உனக்கு பிடித்து தானே மா சூர்யாவோடு திருமணம் என்று சொல்றே ...ஒருவேளை அவன் .....அவர் உன்னை ஏதாவது பயமுறுத்தி கோர்னெர் செய்து இருக்காரா என்ன ......அம்மாடீ அப்படி ஏதாவது என்றால் அம்மா இருக்கேண்டா ...உன்னை ஏதாவது torture செய்து ....அதனால் இந்த திருமணத்தை நடத்தணும் என்று சொல்றியாடா கண்ணா .....நீ இது மாதிரி எல்லாம் செய்பவள் இல்லையே .........என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை ..."என்றார் அவர் .
"ஆமாம் அம்மா ......ரொம்பவும் torture செய்யறான் காலையில் இருந்து ..............நானும் விடாமல் ஐஸ் கிரீம் வாங்கி கொடுடா என்று கெஞ்சிட்டு இருக்கேன் ..........பக்கி .....இளவரசன் ,பெத்த கோடீஸ்வரன் என்று பேர் .......கஞ்சூஸ் ஒரு ஐஸ் கிரீம் கூட வாங்கி கொடுக்கவே மாட்டேன் என்று சொல்லிட்டான் ...கேட்டா பனி காலமாம் ...எனக்கு ஒதுக்காதாம் .....எருமை ...பாருங்க அம்மா எப்படி எல்லாம் torture செய்யறான் ..........."என்றவளை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்றே பவானிக்கு புரியவில்லை .
(எங்களுக்கும் தான் .....கதை எழுதற ஹனி தான் சின் சான் சங்க vice ப்ரெசிடெண்ட் என்று பார்த்தால் அவ உருவாகும் கேரக்டர்ரும் அவளை மாதிரியே படுத்தி எடுக்குது ........குஷ்ட காலம் ....ச்சே கஷ்ட காலம் )
"மதுராக்ஷி ...."என்று கடித்த பற்களுக்கு நடுவே அவள் பெயரை பவானி கோபத்தில் கடித்து துப்ப ,மதுரா ஏதோ பேசும் முன் போனை வாங்கினான் சூர்யா .
"ஆன்ட்டி ...நான் சூர்யா பேசுறேன் .............உங்க மகளை பயமுறுத்தி ,torture செய்து எல்லாம் இந்த திருமணத்தை நான் நடத்தலை ...அதை எல்லாம் செய்வது உங்க ஆசை மகள் தான் ....அவளை பத்தி தெரிஞ்சும் இப்படி எல்லாம் கேக்கறீங்களே .............அவ கையில் மாட்டி சிக்கி ,திக்கி திணறி கொண்டு இருக்கும் நான் தான் பாவமோ பாவம் .....இன்னைக்கு காலையில் தான் என் அம்மா முதல் முறை இவளை நேரில் பார்த்தாங்க ....பார்த்து ,பழகிய ஒரு மணி நேரத்தில் ,"அம்மாடீ மதுரா ...என் கண்ணையே உன் கிட்டே ஒப்படைகின்றேன் ....அதில் வெங்காயம் கட் செய்யும் போது கூட கண்ணீர் வராம பார்த்துக்கோ "என்று என்று சொல்லிட்டாங்க .......ஒரு மணி நேரத்திற்கே அவங்களுக்கு இது எப்படி தண்ணீ தொளித்து விட்ட ,கீழ்ப்பாக்கத்தில் இருந்து எஸ்கேப் ஆனா முழு நட்டு போல்ட் கழன்ற கேஸுன்னு புரிஞ்சு போச்சு .....இத்தனை வருஷம் அவளை பெத்து வளர்த்து இருக்கீங்க ........அவளை பத்தி உங்களுக்கு தெரியாதா என்ன ????உங்களை நம்பி தான் ஆன்ட்டி என் கழுத்தை நீட்டறேன் .......... "என்ற சூர்யாவின் பேச்சை கேட்டு பவானி கொள்ளென்று சிரித்து விட்டார் .
"ஏதாவது பிரச்சனையாபா ..........இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யறவ அவயில்லையே ....உன்னை குறை சொல்லணும் என்று இல்லையப்பா ..........அவளை புரிஞ்சு இருப்பதால் தான் இப்படி எல்லாம் யோசிக்க தோணுது ......."என்றார் பவானி .
"ஆண்ட்டி பிரச்சனை தான் .....அதை தீர்க்க தான் போராடிட்டு இருக்கோம் ......தீர்த்துடலாம் ......அவ தெளிவா தான் இருக்கா .....கூடவே நான் இருக்கேன் ஆன்ட்டி ....நீங்க கவலை படாதீங்க ...பொண்ணு கல்யாணம் ...உங்களை இத்தனை நாள் பிடித்து தொங்கி உங்களை படுத்தி கொண்டு இருந்த வேதாளம் உங்கள் தோளை விட்டு இறங்க போகுதுன்னு சந்தோஷ பட்டு ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்கள் ......மத்த விஷயத்தை அவளே உங்க கிட்டே சொல்வா .....அவளுக்கு தேவை இப்போ உங்க சப்போர்ட் தான் ஆன்ட்டி ........இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவோம் ....எல்லோரும் போன பிறகு கேளுங்க ...மாப்பிள்ளை வரேன் ....சும்மா வரவேற்பு அதிரனும் ..........பை ஆன்ட்டி"என்றான் சூர்யா .
அதே சமயம் வானத்தை பார்த்தவாறு சோக கீதம் வாசித்து கொண்டு இருந்தான் விஜய் .
(இன்னுமா நீ அந்த இடத்தை விட்டு அசையலே ?")
நண்பனின் நிலை பார்த்து கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தனர் ஆல்வினும் ,பாலாஜியும் .அவர்களால் எதையும் செய்யவும் முடியவில்லை .அவர்கள் நண்பன் அப்படி பட்டவன் ஆயிற்றே .....இவன் கண்ணால் சமிக்கை கட்டினால் கூட போதுமே எதையும் அவனுக்காக செய்து முடிக்கும் அவர்கள் ,நண்பன் என்ன முடிவூ எடுப்பான் என்று புரியாமல் தலையை பிய்த்து கொள்ளாத குறையாய் நின்றனர் .தப்பே செய்யாமல் இருக்க அவர்கள் நண்பன் கடவுள் இல்லை ....நிறை குறை உள்ள சாதாரண மனிதன் ....மனிதர்களில் சிறந்தவன் ...ஆனால் இப்போ வானத்தை பார்த்து துடித்து கொண்டு இருப்பவன் தங்கையின் வாழ்வுக்காக எப்படி மாறுவான் என்று அவர்களால் கணிக்க முடியவில்லை ..
PENANCE WILL CONTINUE.....