இத்தனை இடியாப்பா சிக்கல் மதுரா வாழ்வில் இருக்கும் போது உடனே மணமேடை ஏற வைக்க முடியாது ....ஆனால் அடுத்த udயில் நிச்சயம் முடித்து விடலாம் ...ஆனால் விஜய்யை அழைத்து கொண்டு சேது மதுராவின் வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார் .
இவர்கள் மதுராவிற்கும் -விஜய்க்கும் திருமணம் செய்ய ரெடி யா தான் இருகாங்க ...ஆனா விஜய் கேரக்டர் அடிப்படையே தன்னலம் அற்ற ஒருவன் .குடும்பத்திற்காக எதையும் செய்ய தயங்காதவன் .நிறை குறை உள்ள சாதாரண மனிதன் .குடும்பத்திற்காக காதலையும் துறந்து ஒரு பேயிடம் மாட்டி கொண்டு இருப்பவன் .
நமது நிஜ வாழ்க்கைகையில் எத்தனை பேரின் காதல் தோல்விகளை பார்த்து இருப்போம் ...அதில் முக்கால்வாசி குடும்பத்திற்காக தியாகம் செய்ததாக தான் இருக்கும் .ஏறக்குறைய 10 வருடங்களா குடும்ப தலைவனாய் தான் குடும்பத்தை தாங்கி கொண்டு இருப்பவன் ,மதுராவா ரூபிணியா என்று வரும் போது என்ன செய்வான் ???
அவன் குறையே தன் குடும்பத்தை உயிராக மதிப்பது தான் .ஒருவேளை குடும்பம் தேவை இல்லை என்று துணிந்து மதுராவை மணந்தாலும் சட்டப்படி அந்த திருமணம் செல்லாது என்னும் போது இதை எப்படி கொண்டு போவது ???? அவன் அப்படி செய்தால் இத்தனை நாள் குடும்பம் என்று அவன் இருந்தது போலியாகி விடும் .இப்படி பட்டவனை திருமண மேடை ஏற்ற வேண்டும் என்றால் வலுவான காரணம் இருக்க வேண்டும் .அதை நோக்கி தான் கொண்டு போகிறேன்
மேக்னா ,குழந்தைகளை விட வேறு வலுவான காரணம் தேவையா என்றால் இந்த லாஜிக் விஜய் அவர்களின் அப்பாவாக இருந்தால் மட்டுமே எடுபடும் ....ஒருவேளை அவன் இல்லை என்றால் எதை வைத்து அவனை மணமேடை ஏற்ற முடியும் ???அதற்காக தான் அந்த veil அணிந்த பெண் பிளான் போட்டு இருக்கிறாள்