• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 36(5)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
mqdefault.jpg


"வாட் டூ யு மீன் ?"என்றாள் ரூபிணி அதிர்ந்தவளாய் .இதில் எங்கிருந்து அவள் அண்ணன் வந்தான் .

"ஐ மீன் வாட் ஐ சே ......உங்களுக்கு வந்தா ரத்தம் ,மத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னினா கொஞ்சமாவது நியாயம் வேண்டாம் .....நீ இங்கே உன் வாழ்க்கைக்கு நியாயம் கேட்டு வந்தே ....இப்போ நான் கேட்கிறேன் ரூபிணி என் வாழ்க்கைக்கு பதில் என்ன .....உன்னால் உன் அண்ணன் எனக்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்கு பதில் சொல்."என்றாள் அவள் கைகளை மார்பின் குறுக்கே காட்டியவாறு இவளை குற்றவாளி கூண்டில் ஏற்றி .

"ஏய் நீ என்ன லூசா ....முதலில் என் புருஷனை டார்லிங் ,அது இதுன்னு கூப்பிட்டுட்டு இப்போ என் அண்ணன் உனக்கு துரோகம் செய்துட்டாரு என்று சொல்றே ....என்னடி விளையாடி பாக்கறியா ....என் புருஷனை உன் ஆள் என்று சொன்ன உன் நாக்கை விட்டு வைச்சதே தப்பு ...எவ்வளவூ தைரியம் இருந்தால் என் அண்ணனை ......"என்றவளை கை தூக்கி நிறுத்தினாள் அவள் .

"அம்மா தாயே உன்ற கோனார் நோட்ஸ் விளக்கத்தை நிறுத்து ....செம போர் .....இந்த உங்க அண்ணனின் துரோகத்திற்கு ஆதாரம் ."என்று அவள் போட்டோ,வீடியோவை நீட்ட ,அதை பார்த்தவள் கண்கள் சுருங்கி அவற்றை தூக்கி வாயில்கதவுக்கு வெளியே விட்டு எறிந்தாள் .

"ஏய் !"என்று கையை ஓங்கி விட்ட அவளின் கோபம் கண்டு ஒரு நொடி சூர்யாவே அதிர்ந்து தான் போனான் என்னும் போது ரூபிணியின் நிலை கேட்க வேண்டுமா .

எதையும் பேசாது வெளியே விழுந்த போட்டோக்களை எடுத்து வந்த அவள் அவற்றை தன் ஹாண்ட் பாகில் வைத்து கொண்டாள் .

"லுக் நீ எவ்வளவூ தான் ஆதாரம் என்று போட்டோவை காட்டினாலும் அதை நம்ப வேறு கேணையை பாரு ...என் அண்ணனை பத்தி எனக்கு தெரியும் .....இது CGF உலகம் ....போத்திட்டு போ ....திவா கிளம்புங்க ...இவளை பேச விட்டு வேடிக்கையா பார்த்துட்டு இருக்கீங்க ....கிளம்புங்க திவா ."என்றாள் ரூபிணி .

"ஆமா உங்க அண்ணன் அப்படியே பிரிட்டிஷ் இளவரசர் ஹார்ரி .....அப்படியே ஜேம்ஸ் காமெரூன் அவதார் ,சங்கர் 2.O ரேஞ்சுக்கு CGF செய்து இவங்க அண்ணன் மேல் பழி சசுமத்தி அவர் சொத்துக்களை அப்படியே வாரி சுருட்டிக்க போறேன் ...தோ நிற்கிறாங்களே இவங்க ரெண்டு பேரோடு நானும் தான் உங்க அண்ணனோடு படித்தேன் ......"என்றவள் மீண்டும் பிளாஷ் பாக் ஆரம்பித்து அந்த நொடியில் நடந்தது வரை சொல்லி முடித்து ,"இது தான் நடந்தது ...நீ முதல் முறை நந்தி மாதிரி குறுக்கே வரவில்லை என்றால் அவர் சோனாவை மணந்தே இருக்க மாட்டார் ....இது எவ்வளவூ சிக்கல் நிறைந்த விஷயம் என்பதை புரிந்து கொள் ....இன்னும் இதை நம்பவில்லை என்றால் சேது அப்பா ,கனகா அம்மா,ஆல்வின் ,பாலாஜி நம்பர் இருக்கு தானே பேசி பாரு .....இந்த திருமணம் மேடை ஏற வேண்டும் ...அதுவரை உங்க அண்ணனிற்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்கட்டும் .....இல்லை சொல்லியே ஆவேன் என்றால் உன் அண்ணனின் வாழ்வை இந்த முறையும் கெடுத்து குட்டி சுவர் ஆக்கிய பெருமை உன்னையே வந்து சேரும் ...நீ மட்டும் உன் புருஷன் ,கணவன் ,குழந்தை ,குட்டி என்று சந்தோசமா வாழு .அந்த மனுஷன் கடைசி வரை உன் பிள்ளை குட்டிகளை வளர்த்துட்டு தியாக செம்மலாய் இருக்கட்டும் ....இத்தனை வருடம் தான் அவர் உன் குடும்பத்தை தாங்கினார் ...இனியாவது நிம்மதியாக அவர் மனைவி ,பிள்ளைகள் என்று வாழ்க்கை கிடைக்கட்டுமே .....யோசித்து முடிவூ செய் ."என்றாள் அவள் .

திகைத்து நின்று இருந்த ரூபிணி ,"இன்னைக்கு காலையில் உங்களை எல்லாம் பாலாஜி அண்ணா வீட்டில் பார்த்த ஞாபகம் .....சேது அப்பா ,அம்மா ,பாட்டி எல்லோரும் அண்ணாவை சூழ்ந்து நின்று இருந்தாங்க இல்லை ....அண்ணா கூட குனிஞ்சு ஏதோ பேப்பரில் சைன் போட ஆரம்பித்து இருந்தார் ."என்றாள் உள்ளே போய் விட்ட குரலில் .

"சோனாவை டைவோர்ஸ் செய்யும் பேப்பரில் தான் சைன் போட ஆரம்பித்தான் .....கன் டைம் என்பார்களே அப்படி செம ஷார்ப்பா வந்து அவன் வாழ்க்கையில் கும்மி அடிச்ச பெருமை உன்னையே சேரும் ரூபி ."என்றான் சூர்யா நக்கலாக .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
'தன் அண்ணன் வாழ்வுக்கு மீண்டும் வில்லியாக தானே வந்து இருக்கிறோமா ?என்னை வைத்தே மீண்டும் அவனை வெல்ல பார்க்கிறார்களா ?'சற்று நேரம் யோசித்த ரூபிணி தன் மொபைலிலில் இருந்து சேதுவிற்கு கால் அடித்தாள் .

"அப்பா !"என்றாள் ரூபிணி கலங்கிய குரலில் .

"எங்கே போனே மா ...இங்க உன் அண்ணன் உன் புகுந்த வீட்டில் பேச போய் இருக்கான் ....நீ தூங்கிட்டு இருக்கேன்னு மெசேஜ் அனுப்பி இருந்தான் .வந்து பார்த்தால் ஆளையே காணோம் என்றதும் ஒரு கணம் இதயம் நின்னு போச்சு ....அவனுக்கு கால் போட்டாலும் எடுக்கலை ...நல்லவேளை நீயே கால் செய்துட்டே ..."என்றார் அவர் .

"இல்லைப்பா இங்கே ."என்றவள் திவா கடத்தப்பட்டது ,அங்கு நடந்ததை சொன்னாள் ."இவங்க சொல்றது உண்மையா அப்பா ....கருணா அண்ணாவா இப்படி ?.....எனக்காக தான் இவங்க வாழ்வை வாழ்வு தொடங்குவதற்கு முன்பே நின்று போனதா நான் தான் கருணா அண்ணா வாழ்க்கைக்கு வில்லியா வந்துட்டேனா அப்பா ...?"என்றாள் அழுகையோடு .

பெருமூச்சு விட்ட அவர்,"நீயும் ஒரு காரணம் அவ்வளவூ தான் ரூபிமா ...அவ சொன்னதெல்லாம் உண்மை தான் ....உன் வாழ்க்கைக்கு பிரச்சனை என்று ஒன்று வரவில்லை என்றால் ,கருணாவை யாருமே சொந்தம் கொண்டாடி இருக்க முடியாது தான் மகளே ....அவனும் திடமாக சோனாவை எதிர்த்து நின்று இருப்பான் உயிரே போவதாக இருந்தாலும் .....ஆனால் விதி அவன் வாழ்வில் ரொம்பவே விளையாடி விட்டது ....அதை சரி செய்ய தான் அவள் முயன்று கொண்டு இருக்கிறாள் ....நீ ,குடும்பம் என்று வரும் போது உன் அண்ணன் அவன் வாழ்க்கை என்ற ஒன்றினை நினைத்தே பார்க்க மாட்டான் என்பது உனக்கு தெரியாதா?....அவனுக்காக ,அவனை அவனை எதிர்த்தே போராடி கொண்டு இருக்கிறாள் அவள் ....என்ன செய்ய போகிறாய் மகளே ...."என்றார் சேது .

"ஒருமுறை தான் அப்பா அண்ணனை ,உங்களை எல்லாம் தலைகுனிய வைத்து விட்டேன் ...இனி என் உயிரே போக வேண்டும் என்றாலும் ,இவங்களை அண்ணனோடு சேர்க்காமல் விட மாட்டேன் அப்பா ....என் அண்ணன் எனக்கு எல்லாமுமாக இதுவரை இருந்து விட்டார் ....இனி அவருக்காக நான் இருப்பேன் அப்பா ...என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்க."என்றாள் ரூபிணி .

"அவன் வீட்டுக்கு வருவதற்கு முன் வீட்டுக்கு வந்து சேரு ரூபி மாப்பிளையோடு ...."என்றார் சேது உள் அர்த்தத்தோடு .

"நிச்சயம் அப்பா ...இனி அவரோடு சேர்ந்து தான் வருவேன் ....."என்றாள் ரூபிணியும்

அழைப்பை துண்டித்தவள் ,"ரொம்ப சாரி அண்ணி ...என்னால் தானே உங்க வாழ்வூ இப்படி ஆகி போச்சு ....ரொம்ப சாரி அண்ணி ."என்றாள் அவளை அணைத்து கொண்டு .

"ஆமாம் CNN ல சொன்னாங்க மா நான் கூட கேட்டேன் .....சோனாவிற்கு இந்த ஐடியா கொடுத்தது பி நீ தானமே ...சொன்னாங்க ."என்றாள் அவள்

"அண்ணி .."என்று சிணுங்கினாள் ரூபிணி .

"ஐயோ ஆத்தி ....உன் சோனா அண்ணி காதில் விழுந்தது நான் காலி .....பொறு கண்ணு ...இன்னும் உன் அண்ணன் லைன்னுக்கே வரலை ...அதற்குள் நீ உறவூ முறை எல்லாம் வச்சி கூப்பிட ஆரம்பித்து விட்டே .... இந்த அண்ணி என்ற பட்டம் அவரின் மனைவியாக என்னை அவர் ஆக்கிய பின் ஊர் அறிய உலகம் அறிய தர வேண்டிய என் உரிமை .அதை முதலில் உன் அண்ணன் தர தயார் ஆகட்டும் ....அப்புறம் என்னை அண்ணின்னு கூப்பிடு யார் வேண்டாம் என்றது . சீதையை மீட்க ஸ்ரீராமன் தான் ரூபி வர வேண்டும் ......ஆஞ்சநேயர் வந்து யூஸ் இல்லை ......மனைவி என்ற அங்கீகாரம் உன் அண்ணன் கொடுத்தால் தான் அதற்கான மரியாதை உண்டு .....இது எனக்கும் அவருக்குமான உரிமை போராட்டம் ரூபி .....பார்ப்போம் என் உரிமை எனக்கு கிடைக்கிறதா ...இல்லை கடைசி வரை போராட வேண்டி வருமா என்று ....நீ கிளம்பு மா ....அவுங்க வெயிட் செய்துட்டு இருக்காங்க பாரு ....என் லைப் பத்தி நீ கவலை படாதே ரூபி ...நீ உன் வாழ்வை இனி வாழ்க்கையாய் வாழ்ந்தாலே என் வாழ்வூ சரி ஆகி விடும் .....விட்டு கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை ...சூழ்நிலை மனிதர்களை தவறு செய்ய வைத்து விடும் தான் ....தவறே செய்யாத மனிதன் என்று இங்கு யாருமே இல்லை ......ஆனால் அதையே பிடித்து தொங்கி கொண்டு இருந்தால் ,ஒரு நாள் திரும்பி பார்த்தால் எல்லாமே இழந்து நிற்போம் .....ட்ரையல் அண்ட் error தான் வாழ்க்கையே ஏற்கனவே நாலு வருடத்தில் நீயும் அண்ணனும் நிறைய இழந்துடீங்க .....வாழ்க்கையை வாழ்ந்து பாரு ....தோற்க மாட்டே .....""என்றாள் அவள் புன்னகையுடன் .அந்த புன்னகை கண்களை எட்டவில்லை என்பதை அங்கு இருந்தவர்கள் உணர்ந்தனர் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"திவா !உங்களுக்கு உங்க பேமிலி கண் முன்னே இருக்கணுமா ...இல்லை வேறு நல்ல வேலை கிடைத்தால் செல்ல தயாரா?"என்றான் சூர்யா .

"இல்லங்க சார் ...நான் பாசம் வைக்கும் அளவூ அவங்க ஏத்தவங்க இல்லை ....அதை உணர எனக்கு சில இழப்புகளை சந்திக்க வேண்டி இருந்தது .....அவங்க முகத்தில் விழிக்க கூட நான் விரும்பலை சார் ...."என்றான் திவாகர் .

அவனை தட்டி கொடுத்த சூர்யா ,"ரிலாக்ஸ் மேன் .....இதுவும் கடந்து போகும் ....இந்த திருமணம் முடியட்டும் .....அது வரை செகண்ட் அனிமூன் போக ஏற்பாடு செய்து இருக்கோம் ....இப்போதைக்கு ஊட்டியில் என் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு ...அங்கே போய் என்ஜோய் செய்யுங்க ....திருமணம் முடிந்த பின் உங்களுக்கு சுவிசில் என் பிரான்ச் உங்கள் பொறுப்பு ..."என்றான் .

"ஐயோ சார் ...அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு தகுதி ..."என்றவனை இடை மறித்தான் சூர்யா ,"பிறக்கும் போதே எல்லாரும் எல்லாத்தையும் கத்துட்டு பிறப்பதில்லை ...அவ சொன்னது போல் ட்ரையல் and ERROR தான் வாழ்க்கையே ....போங்க ...அங்கே அவன் வந்து தங்கையை காணவில்லை என்று ஊரை ரெண்டு படுத்துவதற்ற்கு முன் ,சோனா பேச்சை கேட்டு லூசுத்தனமாய் எதையாவது செய்து வைப்பதற்கு முன் எங்க பிளான் காப்பாத்துங்கஜி அதுவே போதும் ...நன்றி விளிம்பில் எல்லாம் பிறகு பார்த்துக்கலாம் ."என்றான் சூர்யா .

அவர்கள் கிளம்பி விட ,"சப்பா ...முடியலை .....இன்னும் இந்த திருமணம் முடியும் முன் மொத்த முடியும் கொட்டிடும் போல் இருக்கு .....என்னவெல்லாம் செய்ய வேண்டி கிடக்கு ....."என்றாள் மதுரா பொத்தென்று சோபாவில் அமர்ந்து .

"ஜஸ்ட் மிஸ்ஸு பேபி ..."என்றான் சூர்யா அவள் தோளை அணைத்து கொண்டு .

"எதுடா ..."என்றாள் மதுரா குழப்பத்துடன் .

"உனக்கு ரூபிணி கையில் விளக்கமாத்து அடி தான் டார்லிங் ...ஏதோ இந்த மாமனால் முடியாதது அவளாவது செய்வா என்று ரொம்பவே எதிர் பார்த்தேன் .....ஜஸ்ட் மிஸ்ஸு ....."என்றவன் எழுந்து ஓட ,ரூபிணி விட்டு சென்ற விளக்குமாறு எடுத்து கொண்டு அவனை ஓட ஓட வீட்டை சுற்றி ஓடினாள் மதுரா .

அதே சமயம் சோனாவின் மொபைல் ஒலிக்க ஆரம்பித்தது .

"ஹெலோ சோனா ஹியர் ...வூ இஸ் திஸ் ?"என்றாள் -அவள் அருகே சுமன் அவளை கொஞ்சியபடி .

"மேடம் !நான் தான் மேக்னா .....ரூபிணி பெட்டி படுக்கையுடன் திரும்ப வந்து இருக்கா மேடம் ."என்றாள் இவள் .

"அது என் பிளான் தான் ...அவ மாமியாருக்கு முன் போலவே பெட்டி பெட்டியா கொடுத்து பாடம் எடுத்து அனுப்பினேன் ...வாங்கின பணத்திற்கு சொன்ன வேலையை செய்துட்டாபோன முறை மாதிரியே இந்த முறையும் செய்துட்டா அந்த கிழவி.....இனி அந்த தெரு நாய் விஜய் என் காலடியில் தான் கிடப்பான் .....ரொம்பவே துள்ளிட்டான் ...அதை அடக்கலை என்றால் நான் சோனாவே கிடையாதே .....அவன் தான் தங்கை ,குடும்பம் ,பாசம் என்று முட்டாள் மாதிரி இருப்பவன் ஆச்சே ......அனுபவிக்கட்டும் ...... ....குட் ...."என்றாள் சோனா
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"அடப்போங்க மேடம் ....உங்க பிளான்னால நின்று போக இருந்த மதுரா மேரேஜ் இப்போ நிச்சயம்மே முடிந்து விட்டது .இந்த வெள்ளிக்கிழமை சூர்யாவோடு அவளுக்கு மேரேஜ் ராணி மெய்யம்மை ஹாலில் நடக்க போகுது மேடம் ....இன்விடேஷன் வாட்சப்பில் அனுப்பி இருக்கேன் பாருங்க ... நல்ல சான்ஸ் மேடம் ....அவ திருமணம் நின்று இருக்கும் ....விஜய் ,மதுராவை கையோடு பிடித்து கள்ள தொடர்பு ,இருவரும் சேர்ந்து உங்களை கொல்ல ட்ரை செய்யறாங்க என்று ஆதாரத்தை ரெடி செஞ்சு வச்சி ,ஆதாரத்தோடு ஜெயிலில் போட்டு இருக்கலாம் ...அவ பெயரை டேமேஜ் செய்து எவனுமே அவளை கட்டாமல் செய்து இருக்கலாம் ....மிஸ் செய்துடீங்களே மேடம் ...இப்போ அவளுக்கு சூர்யா கூட மேரேஜ் .அந்த பிச்சைக்காரியை நீங்களே கோடீஸ்வரி ஆக்கிடீங்க .....இனிமேல் ராஜ வம்ச மருமகள் அந்த மதுரா தான் ...கடைசியில் உங்க பிளான் எல்லாம் சொதப்பி நீங்களே அவளை ஜெயிக்க வச்சிட்டு இருக்கீங்க மேடம் ."என்றாள் மேக்னா .

"நோ நோ நீ பொய் சொல்றே ...நோ அவளுக்கு மேரேஜ் ஆகவே கூடாது ...ஆகாது ."என்று க்ரீச்சிட்டாள் சோனா .

"உங்க ஆளுங்க அந்த மதுரா வீட்டுக்கு அருகே யாரவது இருந்தால் கேட்டு பாருங்க ...உண்மையை சொல்வாங்க ...அதன் பிறகாவது என்னை நம்புங்க மேடம் ....வைக்கட்டுக்குமா பை மேடம் ."என்றவள் அழைப்பை துண்டித்து விட வெறி பிடித்தவள் போல் இன்னொரு நம்பருக்கு அழைத்தாள் சோனா .

இவள் பேசுவதற்கும் எதிர் முனையில் இருந்தவன் ,"மேடம் நானே உங்களை கூப்பிடனும் என்று இருந்தேன் ...இப்போ தான் மேடம் மதுரா வீட்டில் இருந்து நிறைய ஐயர்ருங்க போறாங்க ...அவங்க கிட்டே விசாரித்தேன் ....மதுராக்ஷிக்கும் சூர்யாவுக்கும் நிச்சயம் ஆகிடுச்சாம் ...இந்த வெள்ளிக்கிழமை ராணி மெய்யம்மை ஹாலில் கல்யாணமாம் மேடம் .போட்டோ அனுப்பி வைக்கிறேன் பாருங்க ....."என்றான் அங்கு இருந்தவன் .

அவன் வாட்ஸாப்ப் புகைப்படங்களை அனுப்ப இவளின் வெறி அதிகமாகி அங்கு இருந்த பொருட்களை தூக்கி போட்டு உடைக்க ஆரம்பித்தாள் .

"ஹேய் என்னடி ...."என்றான் சுமன் தன் மதுபானத்தை சுவைத்த படி .

"நீயே பாரு அந்த சனியனை தூக்க உன்னால் முடியலை ..இப்போ அவ அந்த சூர்யாவிற்கு மனைவி ஆக போறாளாம் ..இந்த ஃப்ரைடே மேரேஜ் யு இடியட் ..."என்று எகிறியவள் அவன் தலைமுடியை கொத்தாய் பிடித்து வலுக்கொண்ட மட்டும் பிடித்து இழுத்தாள் .

அவளை ஒரே கையில் அடித்து கீழே தள்ளியவன் ,"எல்லா பிளான் போட்டாச்சு .....நாளைக்கு இதே மாதிரி என் பெட்டில் மது இருப்பா ....நான் விரும்பிய எதுவும் எனக்கு கிடைக்காமல் போகாது .....இதோ இவளை மாதிரி நாளைக்கு அவளும் என்னிடம் கெஞ்சுவாள் ,கதறுவாள் .அதை வீடியோ எடுத்து அவளுக்கு காவல் இருக்கும் அவனுங்க ரெண்டு பேருக்கும் அனுப்ப தான் போகிறேன் ....."என்றவன் வெறி பிடித்த மிருகமாய் ஒரு பெண்ணின் குரல்வளையை நெறிக்க,அவள் உயிருக்காக போராடுவதை சட்டை செய்யத்தவளாய் ஆங்கில பாடலை சத்தமாய் ஒலிக்க விட்டு ஆடை நழுவ ஆட ஆரம்பித்தாள் சோனா .அங்கு அந்த பெண்ணின் உயிர் மெல்ல மெல்ல அடங்கியது .

"ச்சே ..........disgusting ....செத்து தொலைச்சுட்டா ......டேய் யார் அங்கே எடுத்து போய் பாய்லர்ல போட்டு எறிங்க ...சோனு டியர் நீ வா .....ஐ வாண்ட் யு நௌ ......"என்றவன் கை நீட்டினான் .

வக்கிரத்தின் மொத்த உருவம் அவன் தான் .அவன் பிளான் ஜெயிக்க போகிறதா ...காலம் தான் விடை சொல்ல வேண்டும் .

PENANCE WILL CONTINUE....
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
"அடப்போங்க மேடம் ....உங்க பிளான்னால நின்று போக இருந்த மதுரா மேரேஜ் இப்போ நிச்சயம்மே முடிந்து விட்டது .இந்த வெள்ளிக்கிழமை சூர்யாவோடு அவளுக்கு மேரேஜ் ராணி மெய்யம்மை ஹாலில் நடக்க போகுது மேடம் ....இன்விடேஷன் வாட்சப்பில் அனுப்பி இருக்கேன் பாருங்க ... நல்ல சான்ஸ் மேடம் ....அவ திருமணம் நின்று இருக்கும் ....விஜய் ,மதுராவை கையோடு பிடித்து கள்ள தொடர்பு ,இருவரும் சேர்ந்து உங்களை கொல்ல ட்ரை செய்யறாங்க என்று ஆதாரத்தை ரெடி செஞ்சு வச்சி ,ஆதாரத்தோடு ஜெயிலில் போட்டு இருக்கலாம் ...அவ பெயரை டேமேஜ் செய்து எவனுமே அவளை கட்டாமல் செய்து இருக்கலாம் ....மிஸ் செய்துடீங்களே மேடம் ...இப்போ அவளுக்கு சூர்யா கூட மேரேஜ் .அந்த பிச்சைக்காரியை நீங்களே கோடீஸ்வரி ஆக்கிடீங்க .....இனிமேல் ராஜ வம்ச மருமகள் அந்த மதுரா தான் ...கடைசியில் உங்க பிளான் எல்லாம் சொதப்பி நீங்களே அவளை ஜெயிக்க வச்சிட்டு இருக்கீங்க மேடம் ."என்றாள் மேக்னா .

"நோ நோ நீ பொய் சொல்றே ...நோ அவளுக்கு மேரேஜ் ஆகவே கூடாது ...ஆகாது ."என்று க்ரீச்சிட்டாள் சோனா .

"உங்க ஆளுங்க அந்த மதுரா வீட்டுக்கு அருகே யாரவது இருந்தால் கேட்டு பாருங்க ...உண்மையை சொல்வாங்க ...அதன் பிறகாவது என்னை நம்புங்க மேடம் ....வைக்கட்டுக்குமா பை மேடம் ."என்றவள் அழைப்பை துண்டித்து விட வெறி பிடித்தவள் போல் இன்னொரு நம்பருக்கு அழைத்தாள் சோனா .

இவள் பேசுவதற்கும் எதிர் முனையில் இருந்தவன் ,"மேடம் நானே உங்களை கூப்பிடனும் என்று இருந்தேன் ...இப்போ தான் மேடம் மதுரா வீட்டில் இருந்து நிறைய ஐயர்ருங்க போறாங்க ...அவங்க கிட்டே விசாரித்தேன் ....மதுராக்ஷிக்கும் சூர்யாவுக்கும் நிச்சயம் ஆகிடுச்சாம் ...இந்த வெள்ளிக்கிழமை ராணி மெய்யம்மை ஹாலில் கல்யாணமாம் மேடம் .போட்டோ அனுப்பி வைக்கிறேன் பாருங்க ....."என்றான் அங்கு இருந்தவன் .

அவன் வாட்ஸாப்ப் புகைப்படங்களை அனுப்ப இவளின் வெறி அதிகமாகி அங்கு இருந்த பொருட்களை தூக்கி போட்டு உடைக்க ஆரம்பித்தாள் .

"ஹேய் என்னடி ...."என்றான் சுமன் தன் மதுபானத்தை சுவைத்த படி .

"நீயே பாரு அந்த சனியனை தூக்க உன்னால் முடியலை ..இப்போ அவ அந்த சூர்யாவிற்கு மனைவி ஆக போறாளாம் ..இந்த ஃப்ரைடே மேரேஜ் யு இடியட் ..."என்று எகிறியவள் அவன் தலைமுடியை கொத்தாய் பிடித்து வலுக்கொண்ட மட்டும் பிடித்து இழுத்தாள் .

அவளை ஒரே கையில் அடித்து கீழே தள்ளியவன் ,"எல்லா பிளான் போட்டாச்சு .....நாளைக்கு இதே மாதிரி என் பெட்டில் மது இருப்பா ....நான் விரும்பிய எதுவும் எனக்கு கிடைக்காமல் போகாது .....இதோ இவளை மாதிரி நாளைக்கு அவளும் என்னிடம் கெஞ்சுவாள் ,கதறுவாள் .அதை வீடியோ எடுத்து அவளுக்கு காவல் இருக்கும் அவனுங்க ரெண்டு பேருக்கும் அனுப்ப தான் போகிறேன் ....."என்றவன் வெறி பிடித்த மிருகமாய் ஒரு பெண்ணின் குரல்வளையை நெறிக்க,அவள் உயிருக்காக போராடுவதை சட்டை செய்யத்தவளாய் ஆங்கில பாடலை சத்தமாய் ஒலிக்க விட்டு ஆடை நழுவ ஆட ஆரம்பித்தாள் சோனா .அங்கு அந்த பெண்ணின் உயிர் மெல்ல மெல்ல அடங்கியது .

"ச்சே ..........disgusting ....செத்து தொலைச்சுட்டா ......டேய் யார் அங்கே எடுத்து போய் பாய்லர்ல போட்டு எறிங்க ...சோனு டியர் நீ வா .....ஐ வாண்ட் யு நௌ ......"என்றவன் கை நீட்டினான் .

வக்கிரத்தின் மொத்த உருவம் அவன் தான் .அவன் பிளான் ஜெயிக்க போகிறதா ...காலம் தான் விடை சொல்ல வேண்டும் .

PENANCE WILL CONTINUE....[/QUO


Happa enna oru villathanam da suma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top