"வாட் டூ யு மீன் ?"என்றாள் ரூபிணி அதிர்ந்தவளாய் .இதில் எங்கிருந்து அவள் அண்ணன் வந்தான் .
"ஐ மீன் வாட் ஐ சே ......உங்களுக்கு வந்தா ரத்தம் ,மத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னினா கொஞ்சமாவது நியாயம் வேண்டாம் .....நீ இங்கே உன் வாழ்க்கைக்கு நியாயம் கேட்டு வந்தே ....இப்போ நான் கேட்கிறேன் ரூபிணி என் வாழ்க்கைக்கு பதில் என்ன .....உன்னால் உன் அண்ணன் எனக்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்கு பதில் சொல்."என்றாள் அவள் கைகளை மார்பின் குறுக்கே காட்டியவாறு இவளை குற்றவாளி கூண்டில் ஏற்றி .
"ஏய் நீ என்ன லூசா ....முதலில் என் புருஷனை டார்லிங் ,அது இதுன்னு கூப்பிட்டுட்டு இப்போ என் அண்ணன் உனக்கு துரோகம் செய்துட்டாரு என்று சொல்றே ....என்னடி விளையாடி பாக்கறியா ....என் புருஷனை உன் ஆள் என்று சொன்ன உன் நாக்கை விட்டு வைச்சதே தப்பு ...எவ்வளவூ தைரியம் இருந்தால் என் அண்ணனை ......"என்றவளை கை தூக்கி நிறுத்தினாள் அவள் .
"அம்மா தாயே உன்ற கோனார் நோட்ஸ் விளக்கத்தை நிறுத்து ....செம போர் .....இந்த உங்க அண்ணனின் துரோகத்திற்கு ஆதாரம் ."என்று அவள் போட்டோ,வீடியோவை நீட்ட ,அதை பார்த்தவள் கண்கள் சுருங்கி அவற்றை தூக்கி வாயில்கதவுக்கு வெளியே விட்டு எறிந்தாள் .
"ஏய் !"என்று கையை ஓங்கி விட்ட அவளின் கோபம் கண்டு ஒரு நொடி சூர்யாவே அதிர்ந்து தான் போனான் என்னும் போது ரூபிணியின் நிலை கேட்க வேண்டுமா .
எதையும் பேசாது வெளியே விழுந்த போட்டோக்களை எடுத்து வந்த அவள் அவற்றை தன் ஹாண்ட் பாகில் வைத்து கொண்டாள் .
"லுக் நீ எவ்வளவூ தான் ஆதாரம் என்று போட்டோவை காட்டினாலும் அதை நம்ப வேறு கேணையை பாரு ...என் அண்ணனை பத்தி எனக்கு தெரியும் .....இது CGF உலகம் ....போத்திட்டு போ ....திவா கிளம்புங்க ...இவளை பேச விட்டு வேடிக்கையா பார்த்துட்டு இருக்கீங்க ....கிளம்புங்க திவா ."என்றாள் ரூபிணி .
"ஆமா உங்க அண்ணன் அப்படியே பிரிட்டிஷ் இளவரசர் ஹார்ரி .....அப்படியே ஜேம்ஸ் காமெரூன் அவதார் ,சங்கர் 2.O ரேஞ்சுக்கு CGF செய்து இவங்க அண்ணன் மேல் பழி சசுமத்தி அவர் சொத்துக்களை அப்படியே வாரி சுருட்டிக்க போறேன் ...தோ நிற்கிறாங்களே இவங்க ரெண்டு பேரோடு நானும் தான் உங்க அண்ணனோடு படித்தேன் ......"என்றவள் மீண்டும் பிளாஷ் பாக் ஆரம்பித்து அந்த நொடியில் நடந்தது வரை சொல்லி முடித்து ,"இது தான் நடந்தது ...நீ முதல் முறை நந்தி மாதிரி குறுக்கே வரவில்லை என்றால் அவர் சோனாவை மணந்தே இருக்க மாட்டார் ....இது எவ்வளவூ சிக்கல் நிறைந்த விஷயம் என்பதை புரிந்து கொள் ....இன்னும் இதை நம்பவில்லை என்றால் சேது அப்பா ,கனகா அம்மா,ஆல்வின் ,பாலாஜி நம்பர் இருக்கு தானே பேசி பாரு .....இந்த திருமணம் மேடை ஏற வேண்டும் ...அதுவரை உங்க அண்ணனிற்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்கட்டும் .....இல்லை சொல்லியே ஆவேன் என்றால் உன் அண்ணனின் வாழ்வை இந்த முறையும் கெடுத்து குட்டி சுவர் ஆக்கிய பெருமை உன்னையே வந்து சேரும் ...நீ மட்டும் உன் புருஷன் ,கணவன் ,குழந்தை ,குட்டி என்று சந்தோசமா வாழு .அந்த மனுஷன் கடைசி வரை உன் பிள்ளை குட்டிகளை வளர்த்துட்டு தியாக செம்மலாய் இருக்கட்டும் ....இத்தனை வருடம் தான் அவர் உன் குடும்பத்தை தாங்கினார் ...இனியாவது நிம்மதியாக அவர் மனைவி ,பிள்ளைகள் என்று வாழ்க்கை கிடைக்கட்டுமே .....யோசித்து முடிவூ செய் ."என்றாள் அவள் .
திகைத்து நின்று இருந்த ரூபிணி ,"இன்னைக்கு காலையில் உங்களை எல்லாம் பாலாஜி அண்ணா வீட்டில் பார்த்த ஞாபகம் .....சேது அப்பா ,அம்மா ,பாட்டி எல்லோரும் அண்ணாவை சூழ்ந்து நின்று இருந்தாங்க இல்லை ....அண்ணா கூட குனிஞ்சு ஏதோ பேப்பரில் சைன் போட ஆரம்பித்து இருந்தார் ."என்றாள் உள்ளே போய் விட்ட குரலில் .
"சோனாவை டைவோர்ஸ் செய்யும் பேப்பரில் தான் சைன் போட ஆரம்பித்தான் .....கன் டைம் என்பார்களே அப்படி செம ஷார்ப்பா வந்து அவன் வாழ்க்கையில் கும்மி அடிச்ச பெருமை உன்னையே சேரும் ரூபி ."என்றான் சூர்யா நக்கலாக .