மறுநாள் காலை
"அய்யயோ ..............இந்த அசிங்கத்தை கேள்வி கேட்க எவனுமே இல்லையா ....ஐயோ ஐயோ உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணிட்டாளே .....தங்கச்சி என்று நம்பி வீட்டில் விட்டா என் வீட்டுக்கே பாதகம் செய்துட்டாளே .....கட்டின பொண்டாட்டி குத்துகள் போலே இருக்கேன் ....கட்டிக்க போறவன் பாறை மாதிரி இருக்கான் .....ஐயோ ஐயோ ...."என்ற சோனாவின் சுப்ரபாதம் கண் விழித்த விஜய் காதுகளில் விழுந்தது .
'அடச்சே ...காலங்காத்தால இந்த சனியன் ஏன் இப்படி ஒப்பாரி வச்சிட்டு இருக்கு ...இதுவே எல்லோருக்கும் துரோகம் செய்யும் ஜென்மம் ...இதுக்கு போய் எவன் என்ன ."என்று புரண்டு படுத்தவன் அவள் வைக்கும் ஒப்பாரி 'தனக்கு தான்' என்று அருகில் நின்று அவனை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் எரிமலையாக கண்கள் சிவந்து நின்று கொண்டு இருந்த சூர்யாவை கண்டதும் புரிந்து விட்டது .
'இவன் எதுக்கு எப்படி பொங்கிட்டு கிடக்கான் ........என்னங்கடா நடக்குது இங்கே ......"என்று கண்களை சுழற்றியவன் ,அந்த அறையில் பவானி புடவை தலைப்பில் வாய் மூடி அழுவதும் ,அருகே சிவகாமி ,சங்கரன் ,சேது ,மரகதம் ,கனகா ,ஹர்ஷா ,மேக்னா ,நரசிம்ம ரெட்டி ,ராமராஜு ,அவன் பெற்றோர்கள் ,ரூபிணி ,சந்திரா ,ஆல்வின் ,பாலாஜி ,சுபா, சென்னையின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி -சூர்யாவின் உறவினர் என்று ஒட்டுமொத்த குடும்பமும் சோனா ,சொர்ணா ,கஜாவும் இருப்பதை பார்த்து பேந்த பேந்த விழித்தான் .
"சும்மா இரு விஜய் ............என்னை தூங்க விடு ............."என்ற குரல் வெகு அருகில் இருந்து கேட்க ,விக்கித்தவனாய் தன் அருகே குனிந்து பார்க்க அங்கு அவன் மேல் கை ,கால் போட்டு படுத்து இருந்தது சாட்சாத் மதுராக்ஷியே தான் .
((என்னது .............)
அவள் அந்த டயலொக் எந்தவிதத்தில் சொன்னாளோ, அது அங்கு இருந்த சூழ்நிலைக்கு வேறு ஒரு அர்த்தத்தை கொடுப்பதையும் ,இவன் மேல் பாய சென்ற சூர்யாவை உத்தம் ,ஆல்வின் பிடித்து நிறுத்துவதையும் கண்டான் .
"ஏய் ...மது எழுந்துக்கோ.....இங்கே எப்படி வந்தே ....கண்ணை திரடி ..."என்றான் விஜய் பதட்டத்துடன் .
"ச்சு .....சும்மா இரு விஜய் .....தூங்க விடு ...."என்று அங்கு இருந்த நிலைமை புரியாமல் ,தூக்கத்தில் புலம்பிய தூங்கு மூஞ்சி பெண்ணை என்ன செய்வது என்று அவனுக்கு புரியவேயில்லை .
எது நடக்க கூடாது என்று பதறி அடித்து ஓடி வந்தானோ ,அதை நடத்தி காட்டி இருந்தாள் சோனா .....மதுராவின் மானத்தை அந்த திருமண மண்டபத்தில் வாங்கி கொண்டு இருந்தாள் .அதுவும் தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தும் வேலை .சோனா முகத்தில் இருந்த வெற்றி களிப்பு விஜய் கோபத்தை கிளறி விட்டு கொண்டு இருந்தது .அங்கு இருந்த cctv கேமரா அந்த அறையை படம் எடுத்து கொண்டு இருக்க ,அந்த அறையில் நடப்பது அந்த அறை டிவியில் ஓடி கொண்டு இருந்தது. மதுராவின் மானத்தை ஊர் உலகத்தின் முன் வாங்கி விட்டு இருந்தாள் சோனா விஜய்யை வைத்தே
படுக்கை அருகே வந்த பவானி ,மதுராவின் முதுகில் ஒரு போடு போட்டு ,"சனியனே ....முதலில் எழுந்து தொலை ..."என்றார் கண்ணில் கண்ணீரோடு .
அவர் விஜய் முகத்தை நேருக்கு நேர் பார்க்காமல் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொள்ள ,மனதால் ரொம்ப அடி பட்டு போனான் விஜய் .சேதுவும் ,கனகா,மரகதம் கூட அவன் முகத்தை பார்க்க விரும்பாதவர்களாய்அவன் பார்க்கும் போது வேறு புறம் முகத்தை திருப்பி கொண்டார்கள் .இருவர் ஒரே இடத்தில் இருந்தால் வரம்பு மீறி இருப்பார்கள் என்று அவர்கள் அனைவரும் முடிவுக்கு வந்து விட்டதை அவர்கள் முகமே காட்டி கொடுத்து கொண்டு இருந்தது .என்ன ஏத்து என்று விசாரிக்காமல் இவர்களாகவே நீதிபதி ஸ்தானத்தில் இருந்து "வரம்பு மீற பட்டு இருக்கும் "என்ற முடிவில் நின்றார்கள் .
"மம்மி ...ஒரு பெட் காபி ....தலை ரொம்ப வலிக்குது மம்மி ....."என்றவள் சோம்பல் முறித்து எழுந்து உட்கார ,அங்கு இருந்தவர்களை கண்டவள் ,தன் கண்ணை அந்த அறை முழுவதும் சுத்தி ஓட விட்டாள் .
"என்னங்க ப்பா எல்லோரும் இங்கேயே வந்து இருக்கீங்க .....அட சோனா உன்னை யார் உள்ளே விட்டது ?"என்றாள் மதுரா கோபத்துடன் .
"ஏன் உன் வண்டவாளம் தண்டவாளம் ஏறி விடும் என்ற பயமா ......என்னவோ உத்தம பத்தினி மாதிரி அங்கே என் பீச் ஹவுஸ்சில் சில நாட்களுக்கு முன் ,"என் புருஷனை கூட affair என்று சொன்னதற்கு அந்த குதி குதிச்சே ....இப்போ இது என்ன ....இதை பார்க்க கூடாது என்று தான் என்னை உள்ளே விட கூடாது என்று சொன்னியா ....."என்றாள் சோனா .
இவள் எதை சொல்கிறாள் என்று மதுரா விழித்து பார்க்க கட்டிலில் அவள் அருகில் இருந்த விஜய் கண்டு அவள் கண்கள் சாசேர் மாதிரி விரிந்து கொண்டே போனது .
"நீங்க எப்படி என் பெட் ரூமிற்குள் வந்தீங்க ....."என்றாள் மதுரா திகைப்புடன் .
பதில் சொல்ல முடியாமல் ,பதில் தெரியாமல் கையை பிசைந்து கொண்டு அமர்ந்து இருந்தான் விஜய் .அவனுக்குமே மூன்றாவது மாடியில்இருந்த தான் எப்படி ,மதுராவின் அறைக்கு எப்படி வந்தோம் ,எப்படி அவள் அருகே ஒரே கட்டிலில் படுத்து இருக்கிறோம் என்று எவ்வளவூ யோசித்தும் புரியவில்லை .
கடைசியாய் உத்தம் அவனை மேல்தளத்திற்கு கொண்டு சென்றதும் ,அங்கு அவன் கொடுத்த ஜூஸ் குடித்ததும் மட்டுமே விஜய்க்கு நினைவில் நின்றது .
"எதுக்கு டா எனக்கு மயக்கமருந்து கொடுத்தீங்க ..............."என்றான் விஜய் .இவர்கள் இப்படி செய்வார்கள் என்பதை நம்ப முடியாதவனாய்
"முதலில் அவ அருகே இருந்து எந்திரிடா ....கேள்வி எல்லாம் பிறகு கேளு ...கெட் அப் "என்றான் சூர்யா கோபத்தோடு .
"சூர்யா ....நீ தப்பா புரிஞ்சுட்டு இருக்கேடா ......சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது ..... உத்தம் கொடுத்த ஜூஸ் குடிச்சு நான் மயங்கிட்டேன் டா ...மதுரா ரூமிற்கு எப்படி வந்தேன் என்று சத்தியமாய் தெரியாது .........."என்றான் சூர்யா கையை பிடித்து கொண்டு .
"அவன் கைகளில் இருந்து கையை உருவி கொண்டு ,"ச்சே ....பேசாதே .....நேத்து சோனா உன் வீடியோ காட்டிய போது கூட நம்பலை ..ஏதோ வீடியோ மார்பிங் செய்து விளையாடறா என்று தான் அவளை இங்கே தங்க வைத்தேன் அவள் கண் முன் மதுரா கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று .....ஆனா ச்சே ....அசிங்கம் ............"என்றவன் மதுராவை நோக்கி சென்று ,"உன் கிட்டே என்ன சொன்னேன் .....அவன் பக்கம் போகவே கூடாதுன்னு சொல்லி இருந்தேன் தானே ......என்ன கன்றாவி இது ............அவன் தான் வேண்டும் என்று சொல்லி இருந்தால் நான் விலகி போய் இருப்பேன் இல்லை .......இத்தனை பெரிய மண்டபம் ஏற்பாடு செய்துட்டு ,ஊரே அங்கே கூடி இருக்குடீ நம்ம கல்யாணத்திற்கு .....இங்கே உனக்கு இவனோடு ..........சாந்தி ..........."என்றவனை ,"சூர்யா !"விஜய் , அதிர்ந்த குரல் சூர்யாவை தடை செய்தது .
"சூர்யா !...வேண்டாம் சூர்யா ....சோனா பேச்சை நம்பி மதுராவை சந்தேக படாதே ...நான் மூன்றாவது மாடியில் தான் டா இருந்தேன் ....சத்தியமா இங்கே மதுரா ரூமிற்கு எப்படி வந்தேன் என்று தெரியாது டா ...நீங்க நினைப்பது போல் இங்கே எந்த தவறும் நடக்கவில்லை ......மதுரா பாவம் டா ...இப்படி எல்லாம் தப்பாய் பேசாதே ........அவ தாங்க மாட்ட ....உடைஞ்சுடுவா ...........அவ அப்பாவி டா ...அவள் பேரை கெடுக்க இந்த பிசாசு தான் ஏதோ செய்து இருக்கு ...ப்ளீஸ் டா .......மதுராவை பத்தி உனக்கு தெரியாதா என்ன ?"என்றான் விஜய் .
"அய்யயோ ..............இந்த அசிங்கத்தை கேள்வி கேட்க எவனுமே இல்லையா ....ஐயோ ஐயோ உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணிட்டாளே .....தங்கச்சி என்று நம்பி வீட்டில் விட்டா என் வீட்டுக்கே பாதகம் செய்துட்டாளே .....கட்டின பொண்டாட்டி குத்துகள் போலே இருக்கேன் ....கட்டிக்க போறவன் பாறை மாதிரி இருக்கான் .....ஐயோ ஐயோ ...."என்ற சோனாவின் சுப்ரபாதம் கண் விழித்த விஜய் காதுகளில் விழுந்தது .
'அடச்சே ...காலங்காத்தால இந்த சனியன் ஏன் இப்படி ஒப்பாரி வச்சிட்டு இருக்கு ...இதுவே எல்லோருக்கும் துரோகம் செய்யும் ஜென்மம் ...இதுக்கு போய் எவன் என்ன ."என்று புரண்டு படுத்தவன் அவள் வைக்கும் ஒப்பாரி 'தனக்கு தான்' என்று அருகில் நின்று அவனை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் எரிமலையாக கண்கள் சிவந்து நின்று கொண்டு இருந்த சூர்யாவை கண்டதும் புரிந்து விட்டது .
'இவன் எதுக்கு எப்படி பொங்கிட்டு கிடக்கான் ........என்னங்கடா நடக்குது இங்கே ......"என்று கண்களை சுழற்றியவன் ,அந்த அறையில் பவானி புடவை தலைப்பில் வாய் மூடி அழுவதும் ,அருகே சிவகாமி ,சங்கரன் ,சேது ,மரகதம் ,கனகா ,ஹர்ஷா ,மேக்னா ,நரசிம்ம ரெட்டி ,ராமராஜு ,அவன் பெற்றோர்கள் ,ரூபிணி ,சந்திரா ,ஆல்வின் ,பாலாஜி ,சுபா, சென்னையின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி -சூர்யாவின் உறவினர் என்று ஒட்டுமொத்த குடும்பமும் சோனா ,சொர்ணா ,கஜாவும் இருப்பதை பார்த்து பேந்த பேந்த விழித்தான் .
"சும்மா இரு விஜய் ............என்னை தூங்க விடு ............."என்ற குரல் வெகு அருகில் இருந்து கேட்க ,விக்கித்தவனாய் தன் அருகே குனிந்து பார்க்க அங்கு அவன் மேல் கை ,கால் போட்டு படுத்து இருந்தது சாட்சாத் மதுராக்ஷியே தான் .
((என்னது .............)
அவள் அந்த டயலொக் எந்தவிதத்தில் சொன்னாளோ, அது அங்கு இருந்த சூழ்நிலைக்கு வேறு ஒரு அர்த்தத்தை கொடுப்பதையும் ,இவன் மேல் பாய சென்ற சூர்யாவை உத்தம் ,ஆல்வின் பிடித்து நிறுத்துவதையும் கண்டான் .
"ஏய் ...மது எழுந்துக்கோ.....இங்கே எப்படி வந்தே ....கண்ணை திரடி ..."என்றான் விஜய் பதட்டத்துடன் .
"ச்சு .....சும்மா இரு விஜய் .....தூங்க விடு ...."என்று அங்கு இருந்த நிலைமை புரியாமல் ,தூக்கத்தில் புலம்பிய தூங்கு மூஞ்சி பெண்ணை என்ன செய்வது என்று அவனுக்கு புரியவேயில்லை .
எது நடக்க கூடாது என்று பதறி அடித்து ஓடி வந்தானோ ,அதை நடத்தி காட்டி இருந்தாள் சோனா .....மதுராவின் மானத்தை அந்த திருமண மண்டபத்தில் வாங்கி கொண்டு இருந்தாள் .அதுவும் தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தும் வேலை .சோனா முகத்தில் இருந்த வெற்றி களிப்பு விஜய் கோபத்தை கிளறி விட்டு கொண்டு இருந்தது .அங்கு இருந்த cctv கேமரா அந்த அறையை படம் எடுத்து கொண்டு இருக்க ,அந்த அறையில் நடப்பது அந்த அறை டிவியில் ஓடி கொண்டு இருந்தது. மதுராவின் மானத்தை ஊர் உலகத்தின் முன் வாங்கி விட்டு இருந்தாள் சோனா விஜய்யை வைத்தே
படுக்கை அருகே வந்த பவானி ,மதுராவின் முதுகில் ஒரு போடு போட்டு ,"சனியனே ....முதலில் எழுந்து தொலை ..."என்றார் கண்ணில் கண்ணீரோடு .
அவர் விஜய் முகத்தை நேருக்கு நேர் பார்க்காமல் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொள்ள ,மனதால் ரொம்ப அடி பட்டு போனான் விஜய் .சேதுவும் ,கனகா,மரகதம் கூட அவன் முகத்தை பார்க்க விரும்பாதவர்களாய்அவன் பார்க்கும் போது வேறு புறம் முகத்தை திருப்பி கொண்டார்கள் .இருவர் ஒரே இடத்தில் இருந்தால் வரம்பு மீறி இருப்பார்கள் என்று அவர்கள் அனைவரும் முடிவுக்கு வந்து விட்டதை அவர்கள் முகமே காட்டி கொடுத்து கொண்டு இருந்தது .என்ன ஏத்து என்று விசாரிக்காமல் இவர்களாகவே நீதிபதி ஸ்தானத்தில் இருந்து "வரம்பு மீற பட்டு இருக்கும் "என்ற முடிவில் நின்றார்கள் .
"மம்மி ...ஒரு பெட் காபி ....தலை ரொம்ப வலிக்குது மம்மி ....."என்றவள் சோம்பல் முறித்து எழுந்து உட்கார ,அங்கு இருந்தவர்களை கண்டவள் ,தன் கண்ணை அந்த அறை முழுவதும் சுத்தி ஓட விட்டாள் .
"என்னங்க ப்பா எல்லோரும் இங்கேயே வந்து இருக்கீங்க .....அட சோனா உன்னை யார் உள்ளே விட்டது ?"என்றாள் மதுரா கோபத்துடன் .
"ஏன் உன் வண்டவாளம் தண்டவாளம் ஏறி விடும் என்ற பயமா ......என்னவோ உத்தம பத்தினி மாதிரி அங்கே என் பீச் ஹவுஸ்சில் சில நாட்களுக்கு முன் ,"என் புருஷனை கூட affair என்று சொன்னதற்கு அந்த குதி குதிச்சே ....இப்போ இது என்ன ....இதை பார்க்க கூடாது என்று தான் என்னை உள்ளே விட கூடாது என்று சொன்னியா ....."என்றாள் சோனா .
இவள் எதை சொல்கிறாள் என்று மதுரா விழித்து பார்க்க கட்டிலில் அவள் அருகில் இருந்த விஜய் கண்டு அவள் கண்கள் சாசேர் மாதிரி விரிந்து கொண்டே போனது .
"நீங்க எப்படி என் பெட் ரூமிற்குள் வந்தீங்க ....."என்றாள் மதுரா திகைப்புடன் .
பதில் சொல்ல முடியாமல் ,பதில் தெரியாமல் கையை பிசைந்து கொண்டு அமர்ந்து இருந்தான் விஜய் .அவனுக்குமே மூன்றாவது மாடியில்இருந்த தான் எப்படி ,மதுராவின் அறைக்கு எப்படி வந்தோம் ,எப்படி அவள் அருகே ஒரே கட்டிலில் படுத்து இருக்கிறோம் என்று எவ்வளவூ யோசித்தும் புரியவில்லை .
கடைசியாய் உத்தம் அவனை மேல்தளத்திற்கு கொண்டு சென்றதும் ,அங்கு அவன் கொடுத்த ஜூஸ் குடித்ததும் மட்டுமே விஜய்க்கு நினைவில் நின்றது .
"எதுக்கு டா எனக்கு மயக்கமருந்து கொடுத்தீங்க ..............."என்றான் விஜய் .இவர்கள் இப்படி செய்வார்கள் என்பதை நம்ப முடியாதவனாய்
"முதலில் அவ அருகே இருந்து எந்திரிடா ....கேள்வி எல்லாம் பிறகு கேளு ...கெட் அப் "என்றான் சூர்யா கோபத்தோடு .
"சூர்யா ....நீ தப்பா புரிஞ்சுட்டு இருக்கேடா ......சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது ..... உத்தம் கொடுத்த ஜூஸ் குடிச்சு நான் மயங்கிட்டேன் டா ...மதுரா ரூமிற்கு எப்படி வந்தேன் என்று சத்தியமாய் தெரியாது .........."என்றான் சூர்யா கையை பிடித்து கொண்டு .
"அவன் கைகளில் இருந்து கையை உருவி கொண்டு ,"ச்சே ....பேசாதே .....நேத்து சோனா உன் வீடியோ காட்டிய போது கூட நம்பலை ..ஏதோ வீடியோ மார்பிங் செய்து விளையாடறா என்று தான் அவளை இங்கே தங்க வைத்தேன் அவள் கண் முன் மதுரா கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று .....ஆனா ச்சே ....அசிங்கம் ............"என்றவன் மதுராவை நோக்கி சென்று ,"உன் கிட்டே என்ன சொன்னேன் .....அவன் பக்கம் போகவே கூடாதுன்னு சொல்லி இருந்தேன் தானே ......என்ன கன்றாவி இது ............அவன் தான் வேண்டும் என்று சொல்லி இருந்தால் நான் விலகி போய் இருப்பேன் இல்லை .......இத்தனை பெரிய மண்டபம் ஏற்பாடு செய்துட்டு ,ஊரே அங்கே கூடி இருக்குடீ நம்ம கல்யாணத்திற்கு .....இங்கே உனக்கு இவனோடு ..........சாந்தி ..........."என்றவனை ,"சூர்யா !"விஜய் , அதிர்ந்த குரல் சூர்யாவை தடை செய்தது .
"சூர்யா !...வேண்டாம் சூர்யா ....சோனா பேச்சை நம்பி மதுராவை சந்தேக படாதே ...நான் மூன்றாவது மாடியில் தான் டா இருந்தேன் ....சத்தியமா இங்கே மதுரா ரூமிற்கு எப்படி வந்தேன் என்று தெரியாது டா ...நீங்க நினைப்பது போல் இங்கே எந்த தவறும் நடக்கவில்லை ......மதுரா பாவம் டா ...இப்படி எல்லாம் தப்பாய் பேசாதே ........அவ தாங்க மாட்ட ....உடைஞ்சுடுவா ...........அவ அப்பாவி டா ...அவள் பேரை கெடுக்க இந்த பிசாசு தான் ஏதோ செய்து இருக்கு ...ப்ளீஸ் டா .......மதுராவை பத்தி உனக்கு தெரியாதா என்ன ?"என்றான் விஜய் .