Movie pakkura feeling ma super very nice interesting anitha?????Antha sona meila bayagarama kovam varuthu ? ?enna panna ithu kadai nu puriyuthu ????anna padikkum phothu maranthu phochu??THAVAM -4 தவம் 4
View attachment 3542
சோனா தன் மேல் வீசி எறிந்த பத்திரங்களை படிக்கச் படிக்கச் மதுராவிற்கு தலை சுற்ற ஆரம்பித்தது.5 வருட பணி ஒப்பந்தம் வேலையில் சேரும் போது இவள் படித்து பார்த்து சைன் போட்டது தான் .அப்போ இருந்த சரத்தும் இன்று இவள் கையில் இருந்த பத்திரத்தில் இருந்த விஷயமும் முற்றிலும் மாறி இருந்தது ....இல்லை சோனாவால் மாற்ற பட்டு இருந்தது .
'5 வருட பணி காலத்தில் எக்காரணம் கொண்டும் வேலையே ரிசைன் செய்ய முடியாது .உயிர் போனால் தவிர........அப்படி விலகி போக வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் இந்தர் இண்டஸ்ட்ரிஸ்க்கு நஷ்ட ஈடாக தர வேண்டும் ' என்று இருந்த ஒப்பந்த பத்திரம் மதுராவின் சைன் பெற்று தன் கோர முகத்தை காட்டியது.அதில் இருந்தது மதுராவின் சைன் தான் ....ஆனால் எப்படி ....?????
இதுவே மதுராவை தலை சுற்ற வைத்தது என்றால் அடுத்த பத்திரம் அணு குண்டை வெடிக்க வைத்தது .'சங்கரன் சோனாவிடம் இருந்து மூன்று கோடி கடன்' பெற்று இருப்பதாக கூறியது .பத்திரத்தில் இருந்தது சங்கரனின் கையெழுத்து தான் .அது பதிவும் செய்ய பட்டு இருந்தது மதுராவின் பணி ஒப்பந்த பத்திரம் போல் .கடன் திருப்ப படவில்லை என்று சோனா நினைத்தால் எந்நேரமும் சங்கரனின் மொத்த குடும்பமும் கைது செய்ய படலாம்
'ஓசி டீ கூட வாங்கி குடிக்காத தன் தந்தை மூன்று கோடி கடன் வாங்கினாரா ????இருப்பதை வைத்து மன நிறைவோடு வாழும் மனிதர் ஆயிற்றே .தன் குடும்பத்தையும் அப்படி தானே பழக்கினார் .தேவைக்கு அதிகமாக எதையும் விரும்பாதவர்கள் அவள் குடும்பத்தினர் .மூன்று கோடி ரூபாய்க்கு அவர் எதற்கு கடன் வாங்க போகிறார் ???சொந்த வீடு ,கார் ,சம்பாதிக்கும் மகன் ,மனைவி ,மகள் .யாருக்கும் உடல் நல குறைவோ கிடையாது .அப்படியே என்றாலும் மெடிக்கல் இன்சூரன்ஸ் எல்லார் பேரிலும் இருக்கிறது .கை காசு போட்டு தான் வைத்தியம் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை .தனக்கோ ,ராகுவுக்கோ இப்பொது எந்த திருமண ஏற்பாடும் நடக்கவில்லை .திருமணம் கூட கோயிலில் செய்து விட்டு பார்ட்டி மட்டும் கொடுக்கும் ஐடியாவில் தான் மதுராவும் ரகுவும் இருந்தனர் .கார்த்திக் குடும்பமும் அதை ஆதரித்தனர் .பின் எதற்கு தந்தை இவளிடம் மூன்று கோடி கடன் வாங்கினார் ???என்ன அவசியம் ????அவசரம் ?????
"வாட் டார்லிங் .....அப்படி குதிச்சே .....இப்போ பெட்டி பம்பா அடங்கி கிடக்கறே.என்ன காரணம் .....ஒரு ரீசன் ...சொல்லு செல்லம் ......சொல்ல முடியலையா .....நான் சொல்லவா நான்கு கோடி ரீசன் .....ஓஓஓஓஓஓ .........நாலு கோடி காரணமா ???????இதெல்லாம் ட்ரைலர் தான் கண்ணு .மெயின் பிச்சேர் இனிமே தாண்டீ இருக்கு .ஓசி டீயை கூட குடிக்காத உன் எப்படி மூன்று கோடி கடன் வாங்கினார் என்று யோசிக்கரியா மது பேபி .....ரொம்ப யோசிக்காதே .....அவர் அப்படி வாங்கவே இல்லை .ஆனால் இந்த போலி பத்திரம் சொல்லும் அவர் கடன் வாங்கி இருக்கார் என்று .....யு நோ .....என் தாத்தா சொன்னது போலெ யுவர் டாட் ஹிஸ் சென்டிமென்டல் இடியட் .....கண்ணை கசக்கியவாறு 'அப்பா பேசணுமாம் சித்தப்பா 'என்று போன் கொடுத்தேன் .போனில் பேசி கொண்டே படித்து கூட பார்க்காமல் சைன் செய்து விட்டது.அந்தளவூ பாசம் ......என் கிராண்ட் பா சொன்னது போலெ உன் டாடி யூஸ் லெஸ் பெல்லோ தான். பணம் பத்தும் செய்யும் மதுரா ......நாலு கட்டு தூக்கி போட்டேன் .....போர்ஜ்ரி செய்து ரெண்டு டாக்குமெண்ட்ஸ் கொடுத்துட்டாங்க .....ஸோ சிம்பிள்......சொல்லுடீ என் பவர் காடடுட்டுமா .போலீசை விட்டு குன்னூரில் இருக்கும் உன் அப்பனை கைது செய்து காட்டட்டுமா ????? செய்ய மாட்டேன்ன்னு மட்டும் நினைக்காதே ......உன்னை இப்படி நிற்க வைக்க மூன்று வருஷம் திட்டம் போட்ட எனக்கு உன் பேமிலி மொத்தத்தையும் ஜெயிலில் தள்ளுவது ரொம்ப ஈசி பேபி ......ஆனா மதுரா குட்டி ஒரு டவுட்டீ செல்லம் .....ஊர் புல்லா பெயர் நாறிய பிறகு உன் டாடி அவர் மட்டும் சூசைட் செய்து கொள்வாரா ????/இல்ல சினிமாவில் ,கதைகளில் வருவது போலெ மொத்த குடும்பத்தையும் கொன்னுட்டு தானும் தற்கொலை செய்து கொள்வாரா ????.....டெஸ்ட் செய்து பார்க்கலாமா ????/ என்ன பெட் செல்லம் .......என் பிரெய்ன்ட் உன் டாடி மட்டும் தற்கொலை செய்து கொள்வார் என்கிறாள் ......நான் பாமிலியோடு தற்கொலை செய்து கொள்வார் என்கிறேன் ....பெட் பணம் எவ்வளவூ தெரியுமா மூன்று கோடி .....நீ சொல்லு ஹெட் ஆர் டெய்ல்ஸ் ???????"என்றாள் சோனா விகார சிரிப்போடு .View attachment 3548
நடப்பது கனவா ,நனவா என்று புரியாமல் ,மூளை செயல் பட மறந்து விட மீண்டும் சிலையாக நின்றாள் மதுரா .'இவ என்ன சைக்கோவா .......மன நலம் பாதிக்க பட்டவளா ???????இவளுக்கு தான் எந்த கெடுதலையும் செய்யவே இல்லையே ......இவளுக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் கூட தான் கனவிலும் தீங்கு நினைத்தது இல்லை .......இவ பேசுவதை பார்த்தால் பல வருட பிளான் போலெ இருக்கே .....வீட்டை விற்றால் கூட ஒரு கோடி கிடைக்குமா என்பதே சந்தேகம் ....சில பல லட்சம் என்றால் கூட சமாளித்து விடலாம் ....ஆனால் இவ செக் மேட் நான்கு கோடிக்கு அல்லவா வைத்து இருக்கிறாள் ......அவ்வளவு பணத்திற்கு எங்கு போவது ....யாரிடம் கேட்க முடியும் ????......சரிதான் போடீ உன்னால் முடிந்ததை பார்த்துக்கோன்னு போக முடியுமா ????இப்படி சொல்ல ஒரு நொடி போதும் ......ஆனால் அதன் விளைவு ....அப்பா நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டார் ...ஊர் முழுக்க கடன் வாங்கியதால் கைது என்றுமீடியாவில் தெரிய வந்தால் உயிரை விட்டு விடுவார் ....ரோஷம் அதிகம் உள்ளவர் .....ஒரு வார்த்தை அண்ணன் சேதுபதி சொல்லி விட்டார் என்று பதினைந்து வருடங்களாக அவருடன் பேசாமல் இருந்தவர் ஆயிற்றே !!!!! டிவி ,மீடியானு பெயர் அடிபட்டால் ........கடவுளே !!!!!'மனம் கதறியது மதுராவிற்கு .
View attachment 3549
"ஏன் ???"என்றாள் மதுரா தோற்ற குரலில் .என்ன யோசித்தும் இவள் ஏற்படுத்திய சிக்கலில் இருந்து மீளும் வழி தென் படவில்லை .
"ரிவென்ஜ் மதுரா செல்லம் .....ரிவென்ஜ் .....பழிக்கு பழி .....நீ அழணும் .....கதறி துடிக்கனும் ....நீ இப்படி துடிப்பதை பார்த்து அந்த பிச்சைகார பயல் கருணாகரனும் தவிக்கனும் ....ஒரு கல்லில் இரண்டு மாங்காய் மதுரா ....வரட்டா "என்றவள் மதுரா ஸ்தம்பித்து நிற்கும் போதே தன் ஜால்ராக்களுடன் பீச் ஹவுஸ் விட்டு வெளியேறி காரில் பறந்து விட்டாள் .
View attachment 3550
ஒருத்தி அங்கு துடிப்பதை கண்டும் லட்சியம் செய்யாமல் சோனா கிளம்பிய சில நொடிகள் மதுரா அந்த ஹாலில் அப்படியே நின்றாள் .தன்னை சமாளித்து அவள் நிமிரும் போது சோனா காரில் ஏறி கொண்டு இருந்தாள் .
"சோனா !சோனா .....நில்லு சோனா .....சோனா "என்று கத்திய படியே ஓடி வந்த மதுராவை அவள் கண்டு கொள்ளவில்லை.
அந்த மாபெரும் பீச் ஹவுஸ் வாயிலில் நின்ற மதுராவிற்கு தலை சுற்றியது .மேல் மூச்சு ,கீழ் மூச்சு வாங்க சென்ற காரையே வெறித்து பார்த்து கொண்டு நின்றாள் .அவள் எண்ணத்தை தடை செய்தது வாட்ச்மேனின் குரல்
"தா பொண்ணு ....ஹே உன்ன தான் .....என்ன சும்மா முழிச்சுட்டு நிற்கறே .....பங்களாவை விட்டு வெளியே போமே .பங்களாவை பினாயில் ஊத்தி கழுவ சொன்னாங்க ......ரெண்டு தபா ...ஹே பொன்னி ....தோ இந்த பொண்ணு நின்ன இடத்தியெல்லாம் மூணு ,நாலு முறை பினாயில் ஊத்தி கழுவ சொல்லிச்சு சின்ன மேடம் ....ஹே தா ...நில்லு .....இந்த பைலுகளை உங்க அப்பனா தூக்குவான் ....கொண்டு போ ....பொன்னி கழுவி தள்ளு புள்ள ..."என்று சொல்லிய வாட்ச்மேன் மதுராவை வெளியே தள்ளாத குறையாய் காம்பௌண்ட் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டு உள்ளே சென்று விட்டான் .வேலைக்கார பெண் பொன்னியும் வீட்டை பினாயில் ஊத்தி கழுவ ஆரம்பித்தாள்
View attachment 3551
வேலைக்காரர்களிடம் கூட இப்படி நடக்க சொல்லி விட்டு சென்று இருந்த சோனாவின் அடுத்த திட்டம் என்ன என்று புரியவில்லை மதுராவிற்கு .வேலையாட்களின் அலட்சியம் ,இப்படி பேசுவதற்கான தைரியம் யாரிடம் இருந்து வந்தது என்பது புரிந்து விட குன்றி போனவளாய் அந்த பங்களாவை விட்டு வெளியேறினாள் .மனம் முழுக்க ஏன் என்ற கேள்வி மட்டுமே .சுற்று புறத்தை மறந்தவளாய் கால் போனா போக்கில் நடக்க ஆரம்பித்தாள் .சுற்றம் ,நேரம் என்று எதுவுமே மனதில் பதிய வில்லை .பின்னால் தொடர்ந்த ஆபத்தையும் சேர்த்து..........
View attachment 3553
PENANCE WILL CONTINUE.......... தவம் தொடரும்.............