sakthipriya
SM Exclusive
“சரி அன்பு… நம்ம ஹாஸ்பிடலை நெருங்கிட்டோம். நான் உங்களை ஹாஸ்பிடலை இறக்கி விட்டுவிட்டு அப்படியே உங்கள் பிரண்டை பார்த்துட்டு போகிறேன்”
“சரிங்க மேடம்” என்று அவள் ஆமோதித்த வேளையில் கார் ஹாஸ்பிடல் உள்ளே நின்றது.
“அண்ணா... நீ இங்கேயே வெயிட் பன்னுங்க. நான் வந்து விடுகிறேன்” என்று அவள் இறங்கிக் கொள்ள தன் பேக்கை எடுத்துக் கொண்டு இறங்கினாள் அன்பு செல்வி.
ஆதிரையன் காரிலேயே இருக்க, அவர்கள் இருவரும் உள்ளே நடந்து சென்று ஐ.சி.யூ வார்டை அடைந்தார்கள்.
சௌமியா கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைய விமலா வணக்கம் சொல்ல அதை ஆமோதித்தவள் “விமலா... பேஷண்ட கண் விழிச்சாங்களா?” என்றாள்.
“இல்லை மேடம். ஜெயகாந்தன் சார் இப்பதான் அரை மணி நேரம் முன்னாடிதான் பார்த்துவிட்டு போனார். இந்தாங்க மேடம் ரிப்போர்ட்” என்று நீட்ட வாங்கிப் படித்து பார்த்தாள்.
“வேறு ஏதாவது?” என்று சந்தேகமாய் சௌமியா கேட்டாள்.
“நத்திங் மேடம்” என்றாள் விமலா.
“சரி கவனமாக பாத்துக்கோங்க. எதுன்னாலும் எனக்கு கால் பன்னுங்க” என்றாள் சௌமியா.
“சரிங்க மேடம். அப்புறம் ஹேப்பி பர்த்டே மேம்” என்று அவள் சொன்னவுடன் “நன்றி விமலா” என்றாள் சௌமியா.
“அன்பு… உங்களுக்குன்னு ஒரு ரூம் தரவரைக்கும் மேலே இருக்கிற என் ரூமில் நீங்கள் தங்கிக்கலாம். அந்த ரூமை நான் படுக்குனுமுன்னு நினைக்கறப்பதான் யூஸ் செய்வேன். அங்கே உங்கள் திங்கஸ் எல்லாம் வைச்சிக்கோங்க.” என்றாள் சௌமியா.
“மேடம்… அது வந்து… உங்களின் ரூம் எதுக்கு மேடம்? நர்ஸ்கள் தங்கிக்கிற ரூம் கொடுத்தாலே எனக்கு போதுமே” என்று அன்பு கேட்டாள்.
“இல்லை அன்பு. அது வேண்டாம். இப்போதைக்கு
நீங்கள் என் ரூமிலேயே தங்கிக்கோங்க. அதுதான் சரியாக இருக்கும்.” என்று சௌமியா சொன்னதும் அன்பு எதிர்த்து பேசவில்லை.
அன்பு செல்வியை அழைத்துக் கொண்டு தன் கேபினுக்கு சென்று சாவியை எடுத்துக் கொண்டு மேலே சென்றவள் தன் அறையின் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே கூட்டிக்கொண்டு சென்று விட்டாள்.
அன்பு செல்வி லைட்டை ஆன் செய்தாள். சாவியை அவளிடம் தந்து விட்டு “நான் நாளைக்கு வருகிறேன்” என்று சென்றாள் சௌமியா
அன்பு செல்வி தன் பேக்கை ஒரிடத்தில் வைத்து விட்டு கட்டிலில் சிறிது நேரம் அமர்ந்தவள் பின் லைட்டை ஆப் செய்து விட்டு கதவை பூட்டிவிட்டு ஐ.சி.யூ அறைக்குச் சென்றாள்.
“மேடம்… நீங்கள்தான் அன்பா? சௌமியா மேடம் உங்களை சாப்பிட அழைத்துப் போக சொன்னாங்க. வாங்க” என்று ஒரு நர்ஸ் அழைத்தாள்.
“சரி… வாங்க போகலாம்.” என்று அவள் பின்னே செல்லும்போது சௌமியாவின் மீது அவளுக்கு தனி மரியாதை ஏற்பட்டது.
அன்பு செல்வி இரவு சாப்பாட்டிற்குபின் ஐ.சி.யூ வார்டிற்கு வந்து தன் தோழியை பார்த்து தலை வருடி விட்டு வெளியே வந்து அமர்ந்துக் கொண்டாள்.
அன்பு செல்வி எவ்வளவு நேரம் விழித்திருந்தாள் என்று தெரியவில்லை. நள்ளிரவு வேளையில்தான் அவள் கண் அயர்ந்தாள்.
அன்பு செல்வி மணிக்கு ஒருமுறை விழித்து எழுந்து வந்து தன் தோழியை பார்ப்பதும் பின் தூங்குவதும் பின் விழித்து எழுவதுமாக இருந்தாள்.
காலை எட்டு மணி. ஆதிரையன் காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு சௌமியாவிடம் “எதுன்னாலும் போன் பன்னும்மா” என்று சொல்லிவிட்டு அவன் சென்றான்.
சௌமியா தன் அறைக்கு சென்று ஸ்டெதஸ்கோப், கோட் சகிதமாக வந்தவள் நேராக ஐ.சி.யூ வார்டிற்கு சென்றாள். ஐ.சி.யூ வார்டு வாசலில் அன்புசெல்வி முகம் கழுவி விட்டு வந்து அமர்ந்திருந்தாள்.
சௌமியாவை பார்த்ததும் அவள் எழுந்து நிற்க “குட்மார்னிங் அன்பு” என்று சௌமியா சொல்ல “வெரி குட்மார்னிங் மேடம்” என்றாள் அன்புசெல்வி.
சௌமியா உள்ளே செல்ல அவளும் பின்சென்றாள்.
இந்துமதி அருகே சௌமியா வந்ததும் விமலா “குட்மார்னிங் மேடம்” என்றபடி வந்து அருகில் நின்றாள்.
“விமலா… நைட் ஏதாச்சும்?” என்று கேட்க “இல்லை மேடம்” என்றாள்.
“சரி வெயிட் செஞ்சு பார்ப்போம்” என்று நம்பிக்கை தெரிவித்துவிட்டு அன்பு செல்வியிடம் திரும்பி “அன்பு… உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. எந்த ஒரு நெகட்டிவ் சிம்ப்டம்ஸ் வரவில்லை. என்ன இன்னும் கண் விழிக்க இல்லை அவ்வளவுதான்” என்றாள் சௌமியா.
“மேடம்… அன்பு நேத்து நைட்ல இருந்து ஐ.சி.யூ வார்டுலதான் இருக்காறாங்க. சரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து பார்த்துட்டு போனாங்க.” என்று நர்ஸ் விமலா சொன்னதும் அன்பு செல்வியை அவள் பார்த்தாள்.
“என்ன அன்பு… அப்ப நான் கொடுத்த என் ரூமுக்கு போகலையா? நீங்க தூங்கினிங்களா? இல்லையா?
“இல்லை மேடம். என் பிரண்டுக்கு இப்படி இருக்கறப்ப நான் எப்படி மேடம் நிம்மதியாக தூங்கறது? அவள் கண் முழிச்சாதான் எனக்கு நிம்மதி” என்றாள் அன்புசெல்வி.
“அன்பு… உங்களை ராத்திரியில இந்த ஐ.சி.யூ வார்டு நர்சாக போடலாமுன்னு இருந்தேன். நீங்க இப்படி சரியாக தூங்கலைன்னா உங்களால் அந்த வேலையை எப்படி கவனமாக பார்க்க முடியும்?”
“சரிங்க மேடம்” என்று அவள் ஆமோதித்த வேளையில் கார் ஹாஸ்பிடல் உள்ளே நின்றது.
“அண்ணா... நீ இங்கேயே வெயிட் பன்னுங்க. நான் வந்து விடுகிறேன்” என்று அவள் இறங்கிக் கொள்ள தன் பேக்கை எடுத்துக் கொண்டு இறங்கினாள் அன்பு செல்வி.
ஆதிரையன் காரிலேயே இருக்க, அவர்கள் இருவரும் உள்ளே நடந்து சென்று ஐ.சி.யூ வார்டை அடைந்தார்கள்.
சௌமியா கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைய விமலா வணக்கம் சொல்ல அதை ஆமோதித்தவள் “விமலா... பேஷண்ட கண் விழிச்சாங்களா?” என்றாள்.
“இல்லை மேடம். ஜெயகாந்தன் சார் இப்பதான் அரை மணி நேரம் முன்னாடிதான் பார்த்துவிட்டு போனார். இந்தாங்க மேடம் ரிப்போர்ட்” என்று நீட்ட வாங்கிப் படித்து பார்த்தாள்.
“வேறு ஏதாவது?” என்று சந்தேகமாய் சௌமியா கேட்டாள்.
“நத்திங் மேடம்” என்றாள் விமலா.
“சரி கவனமாக பாத்துக்கோங்க. எதுன்னாலும் எனக்கு கால் பன்னுங்க” என்றாள் சௌமியா.
“சரிங்க மேடம். அப்புறம் ஹேப்பி பர்த்டே மேம்” என்று அவள் சொன்னவுடன் “நன்றி விமலா” என்றாள் சௌமியா.
“அன்பு… உங்களுக்குன்னு ஒரு ரூம் தரவரைக்கும் மேலே இருக்கிற என் ரூமில் நீங்கள் தங்கிக்கலாம். அந்த ரூமை நான் படுக்குனுமுன்னு நினைக்கறப்பதான் யூஸ் செய்வேன். அங்கே உங்கள் திங்கஸ் எல்லாம் வைச்சிக்கோங்க.” என்றாள் சௌமியா.
“மேடம்… அது வந்து… உங்களின் ரூம் எதுக்கு மேடம்? நர்ஸ்கள் தங்கிக்கிற ரூம் கொடுத்தாலே எனக்கு போதுமே” என்று அன்பு கேட்டாள்.
“இல்லை அன்பு. அது வேண்டாம். இப்போதைக்கு
நீங்கள் என் ரூமிலேயே தங்கிக்கோங்க. அதுதான் சரியாக இருக்கும்.” என்று சௌமியா சொன்னதும் அன்பு எதிர்த்து பேசவில்லை.
அன்பு செல்வியை அழைத்துக் கொண்டு தன் கேபினுக்கு சென்று சாவியை எடுத்துக் கொண்டு மேலே சென்றவள் தன் அறையின் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே கூட்டிக்கொண்டு சென்று விட்டாள்.
அன்பு செல்வி லைட்டை ஆன் செய்தாள். சாவியை அவளிடம் தந்து விட்டு “நான் நாளைக்கு வருகிறேன்” என்று சென்றாள் சௌமியா
அன்பு செல்வி தன் பேக்கை ஒரிடத்தில் வைத்து விட்டு கட்டிலில் சிறிது நேரம் அமர்ந்தவள் பின் லைட்டை ஆப் செய்து விட்டு கதவை பூட்டிவிட்டு ஐ.சி.யூ அறைக்குச் சென்றாள்.
“மேடம்… நீங்கள்தான் அன்பா? சௌமியா மேடம் உங்களை சாப்பிட அழைத்துப் போக சொன்னாங்க. வாங்க” என்று ஒரு நர்ஸ் அழைத்தாள்.
“சரி… வாங்க போகலாம்.” என்று அவள் பின்னே செல்லும்போது சௌமியாவின் மீது அவளுக்கு தனி மரியாதை ஏற்பட்டது.
அன்பு செல்வி இரவு சாப்பாட்டிற்குபின் ஐ.சி.யூ வார்டிற்கு வந்து தன் தோழியை பார்த்து தலை வருடி விட்டு வெளியே வந்து அமர்ந்துக் கொண்டாள்.
அன்பு செல்வி எவ்வளவு நேரம் விழித்திருந்தாள் என்று தெரியவில்லை. நள்ளிரவு வேளையில்தான் அவள் கண் அயர்ந்தாள்.
அன்பு செல்வி மணிக்கு ஒருமுறை விழித்து எழுந்து வந்து தன் தோழியை பார்ப்பதும் பின் தூங்குவதும் பின் விழித்து எழுவதுமாக இருந்தாள்.
காலை எட்டு மணி. ஆதிரையன் காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு சௌமியாவிடம் “எதுன்னாலும் போன் பன்னும்மா” என்று சொல்லிவிட்டு அவன் சென்றான்.
சௌமியா தன் அறைக்கு சென்று ஸ்டெதஸ்கோப், கோட் சகிதமாக வந்தவள் நேராக ஐ.சி.யூ வார்டிற்கு சென்றாள். ஐ.சி.யூ வார்டு வாசலில் அன்புசெல்வி முகம் கழுவி விட்டு வந்து அமர்ந்திருந்தாள்.
சௌமியாவை பார்த்ததும் அவள் எழுந்து நிற்க “குட்மார்னிங் அன்பு” என்று சௌமியா சொல்ல “வெரி குட்மார்னிங் மேடம்” என்றாள் அன்புசெல்வி.
சௌமியா உள்ளே செல்ல அவளும் பின்சென்றாள்.
இந்துமதி அருகே சௌமியா வந்ததும் விமலா “குட்மார்னிங் மேடம்” என்றபடி வந்து அருகில் நின்றாள்.
“விமலா… நைட் ஏதாச்சும்?” என்று கேட்க “இல்லை மேடம்” என்றாள்.
“சரி வெயிட் செஞ்சு பார்ப்போம்” என்று நம்பிக்கை தெரிவித்துவிட்டு அன்பு செல்வியிடம் திரும்பி “அன்பு… உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. எந்த ஒரு நெகட்டிவ் சிம்ப்டம்ஸ் வரவில்லை. என்ன இன்னும் கண் விழிக்க இல்லை அவ்வளவுதான்” என்றாள் சௌமியா.
“மேடம்… அன்பு நேத்து நைட்ல இருந்து ஐ.சி.யூ வார்டுலதான் இருக்காறாங்க. சரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து பார்த்துட்டு போனாங்க.” என்று நர்ஸ் விமலா சொன்னதும் அன்பு செல்வியை அவள் பார்த்தாள்.
“என்ன அன்பு… அப்ப நான் கொடுத்த என் ரூமுக்கு போகலையா? நீங்க தூங்கினிங்களா? இல்லையா?
“இல்லை மேடம். என் பிரண்டுக்கு இப்படி இருக்கறப்ப நான் எப்படி மேடம் நிம்மதியாக தூங்கறது? அவள் கண் முழிச்சாதான் எனக்கு நிம்மதி” என்றாள் அன்புசெல்வி.
“அன்பு… உங்களை ராத்திரியில இந்த ஐ.சி.யூ வார்டு நர்சாக போடலாமுன்னு இருந்தேன். நீங்க இப்படி சரியாக தூங்கலைன்னா உங்களால் அந்த வேலையை எப்படி கவனமாக பார்க்க முடியும்?”
Last edited: