vasumathi karunanidhi
மண்டலாதிபதி
இடம் : பொழில் (ஆல்பா ப்ரோக்ஸிமா – I)
பூமி வாசிகளால் ஆல்பா ப்ரோக்ஸிமா – I (alpha proxima I) என அழைக்கப்படும் கிரகத்தின் பெயர் “பொழில்” (பொழில் என்றால் உலகம், சோலை என்று பொருள்)..
இது துலாதர (பொழிலில் சூரியனை குறிக்கும் சொல் துலாதரன்) குடும்பத்தின் ஆறாவது கோள்..
பூமியை விட இரண்டு மடங்கு பெரியது..
ஐம்பது சதவிகிதம் நீராலும் ஐம்பது சதவிகிதம் மண்ணாலுமான தொன்மையான கிரகம்..
பூமியை விட அங்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மேம்பட்டு இருந்தாலும் அது வெளிவாசல் வரையே..
அங்கு தொழில்நுட்பத்தை யாரும் வீட்டிற்குள் அழைத்துச் செல்வதில்லை..
உதாரமாக மின் விளக்குகள்.. பொழிலின் தெருக்களில் மின் விளக்குகள் உண்டு.. ஆனால் அதை வீட்டிற்குள் யாரும் பயன்படுத்துவதும் இல்லை அது அங்கு நிலைபெருவதும் இல்லை..
இது அந்த கிரகத்தின் சட்டம்..
ஹான்.. சட்டம் என்ற உடன் தான் நியாபகத்திற்கு வருகிறது..
அங்கு குடிகொண்டுள்ள கிரக வாசிகள் அனைவருக்கும் ஒரே சட்டம்.. இதில் ஏழை பணக்காரன் ஆண் பெண் என்ற எந்த பாகுபாடும் அக்கிரக மக்கள் உருவாக்கவில்லை..
சட்டங்களில் பொந்துகளும் இல்லை ஓட்டைகளும் இல்லை..
கடுமையான சட்டங்கள்.. ஆதலால் குற்றங்களும் அங்கு பெரியதாக நடப்பதும் இல்லை..
இதற்கு முக்கிய காரணம், அங்குள்ள ஒரு படி மண் முதல் கொட்டிக்கிடக்கும் வைர வைடூரங்கள் வரை எதுவும் எவருக்கும் சொந்தமில்லை..
சொந்தமில்லை என்பதை விட எதற்கும் அங்கு விலை இல்லை என்பதே பொருந்தும்..
பொழிலைப் பற்றி இன்னும் இன்னும் நிறைய நாம் தெரிந்து கொள்ளலாம் இனி வரும் பதிப்புகளில்..
******************************************************************************************
இடம் : பரிதி வனம்
நான்காயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய குடில் பகுதி.. தோராயமாக பதினைந்து அடி இடைவேளைகளில் ஐந்தாயிரம் குடில்கள்..
ஒவ்வொரு குடிலை சுற்றிலும் வித்யாசமான மரங்களும் செடிகளும்..
மரங்கள் செடிகள் போலவே ஒவ்வொரு குடில்களிலும் வெவ்வேறு உருவம் கொண்ட மனிதர்கள்..
சிலருக்கு அங்கு காதுகள் இல்லை, சிலருக்கு கை விரல்கள் இல்லை, சிலருக்கு இரண்டிற்கு பதிலாக நான்கு கால்கள்..
ஆனால் அவர்கள் அனைவரும் மனிதர்களே..
ஆம்.. நீங்கள் நினைப்பது சரியே..
பொழிலை சுற்றிலும் உள்ள சூரிய குடும்பங்களில் இருந்து பொழிலை ஆராய்ச்சி செய்யவும் ஆட்சி செய்யவும் நினைத்து வந்த மனிதர்களே அவர்கள்..
பூமி பாஷையில் அவர்கள் அனைவரும் அகதிகளே.. பொழிலைப் பொறுத்தவரை அவர்கள் விருந்தாளிகள்..
தொங்கு மரங்கள் அந்த இடைத்திற்கு நிழலையும் குளுமையையும் வாரி வழங்கிக்கொண்டிருக்க மாசில்லா காற்றானது பூமி வாசிகள் உட்பட அனைவரின் நுரையீரல்களையும் சுகந்தமாய் நிரப்பிக் கொண்டிருந்தது..
நமது ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பொழிலிற்கு வந்து நாட்கள் இரண்டை கடந்து விட்டது..
அபித் ஆத்யா அத்வைத் சாய் நால்வரையும் அகதிகள் என முத்திரையிட்டு ஒரு பெரிய குடிலில் வைக்கப்பட்டிருந்தனர்..
கதிரோன் மறைந்து நிலவு மகள் பிறக்கும் உதிக்கும் நேரமது.. பட்சிகளின் சத்தமும் பூட்சிகளின் ரீங்காரமும் பூமி வாசிகளுக்கு புது வித உலகைக் காட்டிக்கொண்டிருந்தது..
“அத்வைத்.. அது என்ன பேர்ட்..??”, பச்சை நிற இறகுகளும் மஞ்சள் நிற உடலும் கொண்ட ஒரு பறவையை சுட்டிக் காட்டிக் கேட்டாள் ஆத்யா..
“குருவி மாதிரி தெரியுது டாக்..”
“குருவி இப்படி தான் இருக்குமா..??”, கண்கள் பளிச்சிட அந்தப் பறவையை ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்..
“தெரியலையே டாக்.. நானும் உங்களைப் போல் தான்.. புத்தகங்களிலும் சில வீடியோக்களிலும் மட்டும் தான் குருவியைப் பார்த்திருக்கிறேன்..”
“நமது பூமியில் தொழில்நுட்ப வசதிகள் எதுவும் வளராமல் இருந்திருந்தால் நாமும் இது போன்ற இயற்கை அமைப்பில் தானே வாழ்ந்திருப்போம்..”, என்றாள் ஏக்கமாக..
“தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்ததால் தான் நம்மால் இந்த கிரகத்திற்கு வர முடிந்தது..”, என்றான் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சாய்..
“ஒரு வகையில் நீ சொல்வது சரி தான் சாய்.. ஆனால் நமது பூமி இந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் இழந்தது ரொம்பவே அதிகமாயிற்றே..”, இது அத்வைத்..
“அப்படி என்ன நாம் பெரியதாக இழந்து விட்டோம்.. அறிவியல் வளர்ச்சியால் நமது நாடு வல்லரசாகவில்லையா..??”
“நமது நாடு வேண்டும் என்றால் வல்லரசாகி இருக்கலாம்.. ஆனால் அது எத்தனை லட்சம் கோடி மக்களை பலியிட்டு..??”, என்ற கேட்ட ஆத்யா இனி சாயிடமிருந்தும் அத்வைத்திடமிருந்தும் பதில் வராது என அறிந்து ஜன்னலின் கம்பிகளை கெட்டியாக பிடித்தபடி வெளியே வேடிக்கைப் பார்க்கத் துவங்கினாள்..
முப்பதாம் நூற்றாண்டில் பூமியில் இறப்பு என்பது சாதாரண நிகழ்வுதான் என்றாலும், “லட்சம் கோடி மக்களை பலியிட்டு”, என்று ஆத்யா மிக மிக சாதாரமாக குறிப்பிட்டது அத்வைதத்தின் மனதை ஏனோ உலுக்கியது என்றே சொல்லவேண்டும்..
நான்கு வருடம் மூன்று மாதம் இரண்டு வாரம் நடந்த முதல் உலக போராகட்டும் ஆறு வருடம் ஒரு நாள் நடந்த இரண்டாம் உலக போராகட்டும்.. இரண்டையும் சேர்த்து சுமார் நூறு கோடி மக்கள் (இராணுவ வீரர்களையும் சேர்த்து) தோராயமாக இறந்து போனார்கள்..
இந்த போரெல்லாம் நாட்டுக்கு நாட்டுக்கு நடந்தது.. நேரிடியாகவோ மறைமுகமாகவோ தோட்டாக்கள் குண்டுகள் எறிந்து நடந்தது..
அதைத் தொடர்ந்து நாடுகள் நேரடியாக மோதாவிட்டாலும் பனிப் போர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் என நடந்தது இருபத்தோராம் நூற்றாண்டில்..
பனி மலைகளும் நேரம் காலம் கனிந்தால் வெடிக்கத்தானே செய்யும்..
சர்வாதிகாரர்கள் கையில் ஆட்சிகள் கொடுக்கப்பட்ட நேரம் (இருபத்தி ஓராம் நூற்றாண்டு முடிவில்) மூன்றாம் உலகப் போர் வெடித்தது முதல் இரு போர்களைப் போலவே..
தன்னைத் தானே வல்லரசு என அறிவித்து உலகையை தன் கைக்குள் வைத்திருந்த நாடுகளெல்லாம் அப்போரில் படு தோல்வியடைந்தது..
இந்தப் போர் மனித சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கியிருந்தாலும் மனிதன் தனது கோட்டைத் தாண்டாமலே இருந்தான்..
தம் நாடு தம் மக்கள் தம் நாட்டு பொருளாதாரம் என சுருங்கிய கட்டமைக்குள் வாழ்ந்து இது தனது பூமி என்பதை மறந்து போனான்..
வீழ்ந்து போன நாடுகள் தங்களது எழுச்சியை நோக்கி போராடியது என்றால் வெற்றி பெற்ற நாடுகள் தங்களது நாட்டின் முன்னேற்றத்தையே முன்னிறுத்தி உழைக்கத் துவங்கினர்..
இது அடுத்தப் போரிர்க்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது..
ஆம், நான்காம் உலகப் போர்..
மூன்றாம் உலக போர் முடிந்து அன்றாட வாழ்விற்கு திரும்ப அணைத்து நாடுகளுகளும் சுமார் ஒரு அரை நூற்றாண்டு கால அவகாசம் தேவைப்பட்டது..
அறிவியலும் தொழில்நுட்பமும் இந்த இடைப்பட்டக் காலத்தில் அசுர வளர்ச்சி அடையத் துவங்கியது..
இருபதாம் நூற்றாண்டுகளில் அனைவரும் பொறியியல் துறையில் முத்தெடுத்தனர் என்றால் இருபத்தி மூன்றாம் நூறாண்டில் ரோபாடிக்ஸிளும் க்ளோனிங்கிலும்..
உருவாக்கப்பட்டது புதிய உலகம் என்றே சொல்ல வேண்டும்..
அதன் எதிரொலியாக கதிர்வீச்சுகள் தாங்காது பல உயிரிங்கள் மடிந்து போயின..
நீர் நிலையங்கள் வற்றியதால் கடல் நீரை சுத்திகரித்து அதை பருகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்..
தங்கம் வைரம் விலையைக் காட்டிலும் நீரின் விலை அதிகமானது.. நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தன..
இந்த சமயத்திலாவது உலக நாடுகள் முழித்திருக்கலாம்..
ஆனால் மனிதனுக்கு இருப்பது பேராசை அல்லவா.. அதுவும் மண்ணாசை சும்மா விடுமா..
மூன்றாம் உலகப்போரில் தோல்வி அடைந்தவர்களால் ஆரம்பமானது நான்காம் உலகப் போர்..
ஆனால் போர் துவங்கி ஐந்தாம் நாளே அது உலகையே உலுக்கிப் போட்டது..
ஆம், அணு மழைகளை நாடுகள் பொழிய அதைத் தாங்கா பூமி மாதா ஐந்தாம் நாள் அதுவரை உலகம் எதிர் நோக்கா அதிர்வளைகளைக் கொடுத்தாள்..
மனிதன் கனவில் நினைத்துப் பார்க்கா நிலநடுக்கம் அது..
சில கண்டங்கள் இரண்டாய் பிளந்தது.. சில கண்டகள் சில கண்டங்களோடு ஒன்று சேர்ந்தது..
நீரில் மூழ்கிப்போன சில நிலப்பரப்பு இந்த நிலநடுக்கத்தில் நீரை விட்டு வெளியே மலர்ந்தது..
உலகின் சிறிய கண்டம் (உலகப் போரில் தலையிடாமல் இருந்தது.. வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்து என்றும் சொல்லலாம்) கடலில் மூழ்கி அழிந்தே போனது.. அதில் வாழ்ந்த மக்கள் உட்பட..
எங்கும் மக்கள் வெள்ளம்.. இரத்த வெள்ளம்..
போரில் இறந்த மக்கள் தொகையை விட இயற்கை சீற்றத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்பட்டது..
சுமார் நூறு இலட்சம் கோடிக்கு மேல் மக்கள் இறந்திருந்தனர்..
பல இலட்சம் விலங்கு இனங்களும் பறவை இனங்களும் முற்றிலுமாக அழிந்தே போனது..
“அத்.. ப்.. ப்.. பேய்..”, தனது சட்டைக் காலரை பிடித்துக் கதறிய ஆத்யாவின் குரலில் சுயநினைவடைந்த அத்வைத், “டாக்.. என்னாச்சு..??”, என்று கேட்டான்..
“அ..ங்க..ப் பா..ரு.. அத்..வைத்..”, என்று தனது கைகளால் ஜன்னல் வழியே சுட்டினாள்..
அதைப் பார்த்த அத்வைத்தும் அதிர்ந்து போனான்..
(அடுத்த ud ல என்ன பார்த்தாங்கன்னு சொல்றேன்.. இப்போ வசிஷ்டராவை ஒரு விசிட் அடிச்சிட்டு வரலாம்..)
பூமி வாசிகளால் ஆல்பா ப்ரோக்ஸிமா – I (alpha proxima I) என அழைக்கப்படும் கிரகத்தின் பெயர் “பொழில்” (பொழில் என்றால் உலகம், சோலை என்று பொருள்)..
இது துலாதர (பொழிலில் சூரியனை குறிக்கும் சொல் துலாதரன்) குடும்பத்தின் ஆறாவது கோள்..
பூமியை விட இரண்டு மடங்கு பெரியது..
ஐம்பது சதவிகிதம் நீராலும் ஐம்பது சதவிகிதம் மண்ணாலுமான தொன்மையான கிரகம்..
பூமியை விட அங்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மேம்பட்டு இருந்தாலும் அது வெளிவாசல் வரையே..
அங்கு தொழில்நுட்பத்தை யாரும் வீட்டிற்குள் அழைத்துச் செல்வதில்லை..
உதாரமாக மின் விளக்குகள்.. பொழிலின் தெருக்களில் மின் விளக்குகள் உண்டு.. ஆனால் அதை வீட்டிற்குள் யாரும் பயன்படுத்துவதும் இல்லை அது அங்கு நிலைபெருவதும் இல்லை..
இது அந்த கிரகத்தின் சட்டம்..
ஹான்.. சட்டம் என்ற உடன் தான் நியாபகத்திற்கு வருகிறது..
அங்கு குடிகொண்டுள்ள கிரக வாசிகள் அனைவருக்கும் ஒரே சட்டம்.. இதில் ஏழை பணக்காரன் ஆண் பெண் என்ற எந்த பாகுபாடும் அக்கிரக மக்கள் உருவாக்கவில்லை..
சட்டங்களில் பொந்துகளும் இல்லை ஓட்டைகளும் இல்லை..
கடுமையான சட்டங்கள்.. ஆதலால் குற்றங்களும் அங்கு பெரியதாக நடப்பதும் இல்லை..
இதற்கு முக்கிய காரணம், அங்குள்ள ஒரு படி மண் முதல் கொட்டிக்கிடக்கும் வைர வைடூரங்கள் வரை எதுவும் எவருக்கும் சொந்தமில்லை..
சொந்தமில்லை என்பதை விட எதற்கும் அங்கு விலை இல்லை என்பதே பொருந்தும்..
பொழிலைப் பற்றி இன்னும் இன்னும் நிறைய நாம் தெரிந்து கொள்ளலாம் இனி வரும் பதிப்புகளில்..
******************************************************************************************
இடம் : பரிதி வனம்
நான்காயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய குடில் பகுதி.. தோராயமாக பதினைந்து அடி இடைவேளைகளில் ஐந்தாயிரம் குடில்கள்..
ஒவ்வொரு குடிலை சுற்றிலும் வித்யாசமான மரங்களும் செடிகளும்..
மரங்கள் செடிகள் போலவே ஒவ்வொரு குடில்களிலும் வெவ்வேறு உருவம் கொண்ட மனிதர்கள்..
சிலருக்கு அங்கு காதுகள் இல்லை, சிலருக்கு கை விரல்கள் இல்லை, சிலருக்கு இரண்டிற்கு பதிலாக நான்கு கால்கள்..
ஆனால் அவர்கள் அனைவரும் மனிதர்களே..
ஆம்.. நீங்கள் நினைப்பது சரியே..
பொழிலை சுற்றிலும் உள்ள சூரிய குடும்பங்களில் இருந்து பொழிலை ஆராய்ச்சி செய்யவும் ஆட்சி செய்யவும் நினைத்து வந்த மனிதர்களே அவர்கள்..
பூமி பாஷையில் அவர்கள் அனைவரும் அகதிகளே.. பொழிலைப் பொறுத்தவரை அவர்கள் விருந்தாளிகள்..
தொங்கு மரங்கள் அந்த இடைத்திற்கு நிழலையும் குளுமையையும் வாரி வழங்கிக்கொண்டிருக்க மாசில்லா காற்றானது பூமி வாசிகள் உட்பட அனைவரின் நுரையீரல்களையும் சுகந்தமாய் நிரப்பிக் கொண்டிருந்தது..
நமது ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பொழிலிற்கு வந்து நாட்கள் இரண்டை கடந்து விட்டது..
அபித் ஆத்யா அத்வைத் சாய் நால்வரையும் அகதிகள் என முத்திரையிட்டு ஒரு பெரிய குடிலில் வைக்கப்பட்டிருந்தனர்..
கதிரோன் மறைந்து நிலவு மகள் பிறக்கும் உதிக்கும் நேரமது.. பட்சிகளின் சத்தமும் பூட்சிகளின் ரீங்காரமும் பூமி வாசிகளுக்கு புது வித உலகைக் காட்டிக்கொண்டிருந்தது..
“அத்வைத்.. அது என்ன பேர்ட்..??”, பச்சை நிற இறகுகளும் மஞ்சள் நிற உடலும் கொண்ட ஒரு பறவையை சுட்டிக் காட்டிக் கேட்டாள் ஆத்யா..
“குருவி மாதிரி தெரியுது டாக்..”
“குருவி இப்படி தான் இருக்குமா..??”, கண்கள் பளிச்சிட அந்தப் பறவையை ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்..
“தெரியலையே டாக்.. நானும் உங்களைப் போல் தான்.. புத்தகங்களிலும் சில வீடியோக்களிலும் மட்டும் தான் குருவியைப் பார்த்திருக்கிறேன்..”
“நமது பூமியில் தொழில்நுட்ப வசதிகள் எதுவும் வளராமல் இருந்திருந்தால் நாமும் இது போன்ற இயற்கை அமைப்பில் தானே வாழ்ந்திருப்போம்..”, என்றாள் ஏக்கமாக..
“தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்ததால் தான் நம்மால் இந்த கிரகத்திற்கு வர முடிந்தது..”, என்றான் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சாய்..
“ஒரு வகையில் நீ சொல்வது சரி தான் சாய்.. ஆனால் நமது பூமி இந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் இழந்தது ரொம்பவே அதிகமாயிற்றே..”, இது அத்வைத்..
“அப்படி என்ன நாம் பெரியதாக இழந்து விட்டோம்.. அறிவியல் வளர்ச்சியால் நமது நாடு வல்லரசாகவில்லையா..??”
“நமது நாடு வேண்டும் என்றால் வல்லரசாகி இருக்கலாம்.. ஆனால் அது எத்தனை லட்சம் கோடி மக்களை பலியிட்டு..??”, என்ற கேட்ட ஆத்யா இனி சாயிடமிருந்தும் அத்வைத்திடமிருந்தும் பதில் வராது என அறிந்து ஜன்னலின் கம்பிகளை கெட்டியாக பிடித்தபடி வெளியே வேடிக்கைப் பார்க்கத் துவங்கினாள்..
முப்பதாம் நூற்றாண்டில் பூமியில் இறப்பு என்பது சாதாரண நிகழ்வுதான் என்றாலும், “லட்சம் கோடி மக்களை பலியிட்டு”, என்று ஆத்யா மிக மிக சாதாரமாக குறிப்பிட்டது அத்வைதத்தின் மனதை ஏனோ உலுக்கியது என்றே சொல்லவேண்டும்..
நான்கு வருடம் மூன்று மாதம் இரண்டு வாரம் நடந்த முதல் உலக போராகட்டும் ஆறு வருடம் ஒரு நாள் நடந்த இரண்டாம் உலக போராகட்டும்.. இரண்டையும் சேர்த்து சுமார் நூறு கோடி மக்கள் (இராணுவ வீரர்களையும் சேர்த்து) தோராயமாக இறந்து போனார்கள்..
இந்த போரெல்லாம் நாட்டுக்கு நாட்டுக்கு நடந்தது.. நேரிடியாகவோ மறைமுகமாகவோ தோட்டாக்கள் குண்டுகள் எறிந்து நடந்தது..
அதைத் தொடர்ந்து நாடுகள் நேரடியாக மோதாவிட்டாலும் பனிப் போர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் என நடந்தது இருபத்தோராம் நூற்றாண்டில்..
பனி மலைகளும் நேரம் காலம் கனிந்தால் வெடிக்கத்தானே செய்யும்..
சர்வாதிகாரர்கள் கையில் ஆட்சிகள் கொடுக்கப்பட்ட நேரம் (இருபத்தி ஓராம் நூற்றாண்டு முடிவில்) மூன்றாம் உலகப் போர் வெடித்தது முதல் இரு போர்களைப் போலவே..
தன்னைத் தானே வல்லரசு என அறிவித்து உலகையை தன் கைக்குள் வைத்திருந்த நாடுகளெல்லாம் அப்போரில் படு தோல்வியடைந்தது..
இந்தப் போர் மனித சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கியிருந்தாலும் மனிதன் தனது கோட்டைத் தாண்டாமலே இருந்தான்..
தம் நாடு தம் மக்கள் தம் நாட்டு பொருளாதாரம் என சுருங்கிய கட்டமைக்குள் வாழ்ந்து இது தனது பூமி என்பதை மறந்து போனான்..
வீழ்ந்து போன நாடுகள் தங்களது எழுச்சியை நோக்கி போராடியது என்றால் வெற்றி பெற்ற நாடுகள் தங்களது நாட்டின் முன்னேற்றத்தையே முன்னிறுத்தி உழைக்கத் துவங்கினர்..
இது அடுத்தப் போரிர்க்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது..
ஆம், நான்காம் உலகப் போர்..
மூன்றாம் உலக போர் முடிந்து அன்றாட வாழ்விற்கு திரும்ப அணைத்து நாடுகளுகளும் சுமார் ஒரு அரை நூற்றாண்டு கால அவகாசம் தேவைப்பட்டது..
அறிவியலும் தொழில்நுட்பமும் இந்த இடைப்பட்டக் காலத்தில் அசுர வளர்ச்சி அடையத் துவங்கியது..
இருபதாம் நூற்றாண்டுகளில் அனைவரும் பொறியியல் துறையில் முத்தெடுத்தனர் என்றால் இருபத்தி மூன்றாம் நூறாண்டில் ரோபாடிக்ஸிளும் க்ளோனிங்கிலும்..
உருவாக்கப்பட்டது புதிய உலகம் என்றே சொல்ல வேண்டும்..
அதன் எதிரொலியாக கதிர்வீச்சுகள் தாங்காது பல உயிரிங்கள் மடிந்து போயின..
நீர் நிலையங்கள் வற்றியதால் கடல் நீரை சுத்திகரித்து அதை பருகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்..
தங்கம் வைரம் விலையைக் காட்டிலும் நீரின் விலை அதிகமானது.. நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தன..
இந்த சமயத்திலாவது உலக நாடுகள் முழித்திருக்கலாம்..
ஆனால் மனிதனுக்கு இருப்பது பேராசை அல்லவா.. அதுவும் மண்ணாசை சும்மா விடுமா..
மூன்றாம் உலகப்போரில் தோல்வி அடைந்தவர்களால் ஆரம்பமானது நான்காம் உலகப் போர்..
ஆனால் போர் துவங்கி ஐந்தாம் நாளே அது உலகையே உலுக்கிப் போட்டது..
ஆம், அணு மழைகளை நாடுகள் பொழிய அதைத் தாங்கா பூமி மாதா ஐந்தாம் நாள் அதுவரை உலகம் எதிர் நோக்கா அதிர்வளைகளைக் கொடுத்தாள்..
மனிதன் கனவில் நினைத்துப் பார்க்கா நிலநடுக்கம் அது..
சில கண்டங்கள் இரண்டாய் பிளந்தது.. சில கண்டகள் சில கண்டங்களோடு ஒன்று சேர்ந்தது..
நீரில் மூழ்கிப்போன சில நிலப்பரப்பு இந்த நிலநடுக்கத்தில் நீரை விட்டு வெளியே மலர்ந்தது..
உலகின் சிறிய கண்டம் (உலகப் போரில் தலையிடாமல் இருந்தது.. வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்து என்றும் சொல்லலாம்) கடலில் மூழ்கி அழிந்தே போனது.. அதில் வாழ்ந்த மக்கள் உட்பட..
எங்கும் மக்கள் வெள்ளம்.. இரத்த வெள்ளம்..
போரில் இறந்த மக்கள் தொகையை விட இயற்கை சீற்றத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்பட்டது..
சுமார் நூறு இலட்சம் கோடிக்கு மேல் மக்கள் இறந்திருந்தனர்..
பல இலட்சம் விலங்கு இனங்களும் பறவை இனங்களும் முற்றிலுமாக அழிந்தே போனது..
“அத்.. ப்.. ப்.. பேய்..”, தனது சட்டைக் காலரை பிடித்துக் கதறிய ஆத்யாவின் குரலில் சுயநினைவடைந்த அத்வைத், “டாக்.. என்னாச்சு..??”, என்று கேட்டான்..
“அ..ங்க..ப் பா..ரு.. அத்..வைத்..”, என்று தனது கைகளால் ஜன்னல் வழியே சுட்டினாள்..
அதைப் பார்த்த அத்வைத்தும் அதிர்ந்து போனான்..
(அடுத்த ud ல என்ன பார்த்தாங்கன்னு சொல்றேன்.. இப்போ வசிஷ்டராவை ஒரு விசிட் அடிச்சிட்டு வரலாம்..)