vasumathi karunanidhi
மண்டலாதிபதி
இடம் : புலரி வனம்..
கதிரவன் குட் மார்னிங் சொல்வதற்கு முன்பே ஸ்டிட்டியுடன் (விபுவின் விண்வெளி வாகனம்) வீட்டிற்கு வந்த விபு வீட்டு வாசலில் ஒரு காலை ஊன்றிக்கொண்டு, “வசீ.. வசீ..”, என்று கத்தினான்..
அப்பொழுது தான் எழுந்தவள் அன்று விடுமுறை நாள் என்பதால் விலாசி வீட்டில் இருப்பார் என்று கணித்து அவரைக் காண அவரது இல்லைம் செல்லலாம் என்று கிளம்பியிருந்தவள் விபுவின் குரல்க் கேட்டு அங்கு விரைந்தாள்..
வசி கிளம்பி நிற்பதுக் கண்டு, “கிளம்பித்தான் இருக்கியா நீ.. போகலாம் வா..”, என்றான் விபு மொட்டையாக..
திடீரென்று ஸ்டிட்டியுடன் வந்து போகலாம் என்றவனைப் பார்த்த வசீ அவனும் விலாசியின் வீட்டிற்கு தன்னுடன் வருகிறான் என்று நினைத்துக்கொண்டு, “விலாசி எல்லோன் வீட்டுக்கு ஸ்டிட்டி எதற்கு..??”, என்று கேட்டாள்..
“நாம் இப்பொழுது விலாசி எல்லோனின் வீட்டிற்குப் போகவில்லை வசீ..”, என்றான்..
“என்னண்ணா சொல்ற..?? விலாசி எல்லோன் வீட்டிற்கு போகவில்லை என்றால் வேறு எங்கு செல்கிறோம்..??”, என்றபடி அவனைப் புரியாமல் பார்த்தவள் ஸ்டிட்டியின் அருகே வந்து அதைத் தடவிக்கொடுத்தாள்..
“அது உனக்கு ஒரு..”, நெற்றியை சற்று தேய்த்துக்கொண்டவன், “ஹான்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் (surprise)..”, என்றான் அவளைப் பார்த்து ஒரு மர்மப்புன்னகையுடன்..
(மிளிரும் விபுவும் வசியிடமிருந்து ஆங்கிலம் பயின்றுகொண்டிருக்கிறார்கள்.. )
“பாருடா.. துறை இங்கிலீஸ் எல்லாம் பேசுது..”, என்று கிண்டலடித்தவளை முறைத்தபடி நின்றான் விபு..
அவனைப் பார்த்து லேசாக சிரித்த வசீ, “அப்பாட்டையும் அம்மாட்டையும் சொல்லனுமே விபுண்ணா..”, என்றாள்..
“சொல்லிட்டு வா..”, என்றவன் ஸ்டிட்டியில் லேசாக சாயப்போனான்..
“ண்ணா.. அப்பாவும் அம்மாவும் நீ வெளிய போனவுடனே கிளம்பிட்டாங்க..”
“ஓ.. அப்படியா..”, என்று கொஞ்சம் யோசித்தவன், “நான் சொல்லிக்கறேன் அவங்கக்கிட்ட.. நீ வீட்டை சாத்திவிட்டு வா.. போகலாம்..”, என்றான்..
ஸ்டிட்டி வானை நோக்கி மேல மெல்ல மெல்ல பறக்க ஆரம்பிக்க வசிக்கு கீழே விழப்போகும் உணர்வு..
விபுவின் தோளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவள், “விபு மெதுவா.. நான் விழுந்திடப்போறேன்..”, என்றாள் சிறு பயத்துடனே..
“அதெல்லாம் விழமாட்டாய் வசீ..”, என்ற விபு, “முதல் முறையாக இதில் பயனிக்கிறாய் அல்லவா அதுதான் உனக்கு அதுபோல் தோன்றுகிறது..”, என்றவன் பொழில் கிரகத்தின் படலத்தின் அருகில் அடுத்திருந்தான்..
“விபு அண்ணா.. விண்வெளியில் தான் ஆக்ஸிஜன் அதான் பிராணவாய்வு இருக்காதே பிறகு எப்படி விண்வெளியில் பயணிப்பது..??”
“ஸ்டிட்டி ஒரு தானியங்கி வாகனம் வசீ.. எந்த இடத்திற்கு போக வேண்டும் என்று இதில் பதிவு செய்துவிட்டால் இதுவே நம்மை அங்கு அழைத்துச் சென்று விடும்.. ஸ்டிட்டியின் தலைப்பகுதியின் நுனி விண்வெளியைத் தொட்ட அடுத்த நொடி தானாகவே குடை போல் ஒன்று தோன்றும் ஸ்டிட்டியின் பின் பகுதியில் இருந்து வெளிப்படும்.. இதுபோல்..”, என்றவன் விண்வெளியை அப்பொழுது தான் தொட்டிருந்த ஸ்டிட்டியின் பின்பகுதியில் இருந்து தோன்றிய குடை போன்ற ஒன்றைக் காட்டினான்..
அந்தக் குடை மெதுமெதுவாக ஸ்டிட்டியை மூடியது..
“வாவ்.. சூப்பர் அண்ணா.. பூமியிலும் இது போல் வாகனங்கள் உள்ளது.. ஆனால் அதுவெல்லாம் நிலத்தில் பயணிக்க உபயோகப்படுவது..”, என்றாள்..
“சொல்லிருயிருக்கிராய் வசீ..”, என்றவன், “இந்தக் குடை ஸ்டிட்டியை மூடியவதும் பின்னால் பந்து போல் இருக்கிறதல்லவா ஒரு இயந்திரம்.. அது தானாக செயற்கையாக பிராணவாய்வை உருவாக்கும்..”, என்றவன் வசீ ஏதோ யோசனைக்குப் போய்விட்டது கண்டு என்னவென்று கேட்டான்..
“அது ஒன்னும் இல்லை அண்ணா.. இங்கே விண்வெளிக்கு வரும்பொழுது தான் நாம் செயற்கை சுவாசத்தைப் பயன்படுத்துகிறோம்.. ஆனால் பூமியில் வீட்டை விட்டு வெளியே வந்தாலே செயற்கை சுவாசத்துடன் தான் வரமுடியும்.. பாவம் அவர்கள்..”, பரிதாபம் தான் அதில் மேலோங்கி இருந்தது..
“வசீ.. அது பூமியில் வாழ்ந்த முன்னோர்களின் தவறு என்றே நான் சொல்லுவேன்..”
“அதென்னவோ சரி தான் அண்ணா.. இங்கு ஒரு சென்ட் நிலத்தின் வளத்தை அழித்தால் அவர்களை ஆயிரம் மரம் வளர்க்கச் சொல்லி ஆணையிடுகிறது அரசு.. ஆனால் அங்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரசே மக்களிடமிருந்து நிலத்தை வாங்கியுள்ளது..”, என்றாள் சலிப்பாக..
“அதை விடு வசீ..”, என்ற விபு ஸ்டிட்டியின் ஸ்பீடை (speed) சற்றே குறைத்து வலது புறத்தில் இருந்த ஓரிடத்தை நோக்கி கைநீட்டி, “அங்கு ஏதாவது உனக்குத் தெரியுதான்னு பாரு வசீ..??”, என்றான்..
அவன் காட்டிய திசையில் பொழிலைப் போன்று வேறொரு கோள் இருக்க கண்களை அகல விரித்தவள், “இது தான் அந்த கிரகமா..??”, ஆச்சர்யமாக..
“எந்த கிரகம்..??”
“நமது பொழிலைப் போல் மற்றொரு கிரகம்.. அன்று சொன்னாயே பீது வனத்தை மூடிவிட்டு அருகே இருக்கும் கிரகத்தில் ஆராய்ச்சிக் கூடத்தை புதிதாகத் துவங்கியிருக்கிரார்கள் என்று.. அதுவும் இல்லாமல் அம்மா இங்கு தான் வேலை செய்கிறார்கள்..”
“அதே கிரகம் தான்.. இதன் பெயர் மாலி..”
“தெரியும் ண்ணா.. அம்மா சொன்னாங்க.. அங்கு தான் நாம் செல்லப்போகிறோமா..?? இது தான் நீ எனக்கு வைத்திருக்கும் சர்ப்ரைஸ்ஸா..??”, சற்று உற்சாகமாகவே கேட்டாள் வசீ..
லேசாக சிரித்த விபு, “அங்கு செல்லப்போகிறோம் தான் நாம்.. ஆனால் சர்ப்ரைஸ் அதுவல்ல..”, என்றான் அவளை குழப்பியடி ஒரு நமட்டுச் சிரிப்புடன்..
விபுவின் தோளில் லேசாக அடித்த வசீ அண்ணா சொல்லுண்ணா என்றாள் சிணுங்கலாக..
“ஒரு பத்து நிமிஷம் காத்திரு தங்கச்சி.. தானா என்னனு தெரியப்போகுது..”
முகத்தை லேசாகத் தூக்கிவைத்துக்கொண்டவள் விபுவை முறைத்தபடியே வந்தாள்..
கதிரவன் குட் மார்னிங் சொல்வதற்கு முன்பே ஸ்டிட்டியுடன் (விபுவின் விண்வெளி வாகனம்) வீட்டிற்கு வந்த விபு வீட்டு வாசலில் ஒரு காலை ஊன்றிக்கொண்டு, “வசீ.. வசீ..”, என்று கத்தினான்..
அப்பொழுது தான் எழுந்தவள் அன்று விடுமுறை நாள் என்பதால் விலாசி வீட்டில் இருப்பார் என்று கணித்து அவரைக் காண அவரது இல்லைம் செல்லலாம் என்று கிளம்பியிருந்தவள் விபுவின் குரல்க் கேட்டு அங்கு விரைந்தாள்..
வசி கிளம்பி நிற்பதுக் கண்டு, “கிளம்பித்தான் இருக்கியா நீ.. போகலாம் வா..”, என்றான் விபு மொட்டையாக..
திடீரென்று ஸ்டிட்டியுடன் வந்து போகலாம் என்றவனைப் பார்த்த வசீ அவனும் விலாசியின் வீட்டிற்கு தன்னுடன் வருகிறான் என்று நினைத்துக்கொண்டு, “விலாசி எல்லோன் வீட்டுக்கு ஸ்டிட்டி எதற்கு..??”, என்று கேட்டாள்..
“நாம் இப்பொழுது விலாசி எல்லோனின் வீட்டிற்குப் போகவில்லை வசீ..”, என்றான்..
“என்னண்ணா சொல்ற..?? விலாசி எல்லோன் வீட்டிற்கு போகவில்லை என்றால் வேறு எங்கு செல்கிறோம்..??”, என்றபடி அவனைப் புரியாமல் பார்த்தவள் ஸ்டிட்டியின் அருகே வந்து அதைத் தடவிக்கொடுத்தாள்..
“அது உனக்கு ஒரு..”, நெற்றியை சற்று தேய்த்துக்கொண்டவன், “ஹான்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் (surprise)..”, என்றான் அவளைப் பார்த்து ஒரு மர்மப்புன்னகையுடன்..
(மிளிரும் விபுவும் வசியிடமிருந்து ஆங்கிலம் பயின்றுகொண்டிருக்கிறார்கள்.. )
“பாருடா.. துறை இங்கிலீஸ் எல்லாம் பேசுது..”, என்று கிண்டலடித்தவளை முறைத்தபடி நின்றான் விபு..
அவனைப் பார்த்து லேசாக சிரித்த வசீ, “அப்பாட்டையும் அம்மாட்டையும் சொல்லனுமே விபுண்ணா..”, என்றாள்..
“சொல்லிட்டு வா..”, என்றவன் ஸ்டிட்டியில் லேசாக சாயப்போனான்..
“ண்ணா.. அப்பாவும் அம்மாவும் நீ வெளிய போனவுடனே கிளம்பிட்டாங்க..”
“ஓ.. அப்படியா..”, என்று கொஞ்சம் யோசித்தவன், “நான் சொல்லிக்கறேன் அவங்கக்கிட்ட.. நீ வீட்டை சாத்திவிட்டு வா.. போகலாம்..”, என்றான்..
ஸ்டிட்டி வானை நோக்கி மேல மெல்ல மெல்ல பறக்க ஆரம்பிக்க வசிக்கு கீழே விழப்போகும் உணர்வு..
விபுவின் தோளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவள், “விபு மெதுவா.. நான் விழுந்திடப்போறேன்..”, என்றாள் சிறு பயத்துடனே..
“அதெல்லாம் விழமாட்டாய் வசீ..”, என்ற விபு, “முதல் முறையாக இதில் பயனிக்கிறாய் அல்லவா அதுதான் உனக்கு அதுபோல் தோன்றுகிறது..”, என்றவன் பொழில் கிரகத்தின் படலத்தின் அருகில் அடுத்திருந்தான்..
“விபு அண்ணா.. விண்வெளியில் தான் ஆக்ஸிஜன் அதான் பிராணவாய்வு இருக்காதே பிறகு எப்படி விண்வெளியில் பயணிப்பது..??”
“ஸ்டிட்டி ஒரு தானியங்கி வாகனம் வசீ.. எந்த இடத்திற்கு போக வேண்டும் என்று இதில் பதிவு செய்துவிட்டால் இதுவே நம்மை அங்கு அழைத்துச் சென்று விடும்.. ஸ்டிட்டியின் தலைப்பகுதியின் நுனி விண்வெளியைத் தொட்ட அடுத்த நொடி தானாகவே குடை போல் ஒன்று தோன்றும் ஸ்டிட்டியின் பின் பகுதியில் இருந்து வெளிப்படும்.. இதுபோல்..”, என்றவன் விண்வெளியை அப்பொழுது தான் தொட்டிருந்த ஸ்டிட்டியின் பின்பகுதியில் இருந்து தோன்றிய குடை போன்ற ஒன்றைக் காட்டினான்..
அந்தக் குடை மெதுமெதுவாக ஸ்டிட்டியை மூடியது..
“வாவ்.. சூப்பர் அண்ணா.. பூமியிலும் இது போல் வாகனங்கள் உள்ளது.. ஆனால் அதுவெல்லாம் நிலத்தில் பயணிக்க உபயோகப்படுவது..”, என்றாள்..
“சொல்லிருயிருக்கிராய் வசீ..”, என்றவன், “இந்தக் குடை ஸ்டிட்டியை மூடியவதும் பின்னால் பந்து போல் இருக்கிறதல்லவா ஒரு இயந்திரம்.. அது தானாக செயற்கையாக பிராணவாய்வை உருவாக்கும்..”, என்றவன் வசீ ஏதோ யோசனைக்குப் போய்விட்டது கண்டு என்னவென்று கேட்டான்..
“அது ஒன்னும் இல்லை அண்ணா.. இங்கே விண்வெளிக்கு வரும்பொழுது தான் நாம் செயற்கை சுவாசத்தைப் பயன்படுத்துகிறோம்.. ஆனால் பூமியில் வீட்டை விட்டு வெளியே வந்தாலே செயற்கை சுவாசத்துடன் தான் வரமுடியும்.. பாவம் அவர்கள்..”, பரிதாபம் தான் அதில் மேலோங்கி இருந்தது..
“வசீ.. அது பூமியில் வாழ்ந்த முன்னோர்களின் தவறு என்றே நான் சொல்லுவேன்..”
“அதென்னவோ சரி தான் அண்ணா.. இங்கு ஒரு சென்ட் நிலத்தின் வளத்தை அழித்தால் அவர்களை ஆயிரம் மரம் வளர்க்கச் சொல்லி ஆணையிடுகிறது அரசு.. ஆனால் அங்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரசே மக்களிடமிருந்து நிலத்தை வாங்கியுள்ளது..”, என்றாள் சலிப்பாக..
“அதை விடு வசீ..”, என்ற விபு ஸ்டிட்டியின் ஸ்பீடை (speed) சற்றே குறைத்து வலது புறத்தில் இருந்த ஓரிடத்தை நோக்கி கைநீட்டி, “அங்கு ஏதாவது உனக்குத் தெரியுதான்னு பாரு வசீ..??”, என்றான்..
அவன் காட்டிய திசையில் பொழிலைப் போன்று வேறொரு கோள் இருக்க கண்களை அகல விரித்தவள், “இது தான் அந்த கிரகமா..??”, ஆச்சர்யமாக..
“எந்த கிரகம்..??”
“நமது பொழிலைப் போல் மற்றொரு கிரகம்.. அன்று சொன்னாயே பீது வனத்தை மூடிவிட்டு அருகே இருக்கும் கிரகத்தில் ஆராய்ச்சிக் கூடத்தை புதிதாகத் துவங்கியிருக்கிரார்கள் என்று.. அதுவும் இல்லாமல் அம்மா இங்கு தான் வேலை செய்கிறார்கள்..”
“அதே கிரகம் தான்.. இதன் பெயர் மாலி..”
“தெரியும் ண்ணா.. அம்மா சொன்னாங்க.. அங்கு தான் நாம் செல்லப்போகிறோமா..?? இது தான் நீ எனக்கு வைத்திருக்கும் சர்ப்ரைஸ்ஸா..??”, சற்று உற்சாகமாகவே கேட்டாள் வசீ..
லேசாக சிரித்த விபு, “அங்கு செல்லப்போகிறோம் தான் நாம்.. ஆனால் சர்ப்ரைஸ் அதுவல்ல..”, என்றான் அவளை குழப்பியடி ஒரு நமட்டுச் சிரிப்புடன்..
விபுவின் தோளில் லேசாக அடித்த வசீ அண்ணா சொல்லுண்ணா என்றாள் சிணுங்கலாக..
“ஒரு பத்து நிமிஷம் காத்திரு தங்கச்சி.. தானா என்னனு தெரியப்போகுது..”
முகத்தை லேசாகத் தூக்கிவைத்துக்கொண்டவள் விபுவை முறைத்தபடியே வந்தாள்..