vasumathi karunanidhi
மண்டலாதிபதி
விழிகளின் மேல் விழுந்த சில்லென்ற நீர்த்துளிகள் உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்த மெல்ல மெல்ல தன் இமைகளை திறந்தாள் வசிஷ்ட்ரா..
தன்னை சுற்றிலும் இருளே சூழ்ந்திருக்க வழி தெரியாமல் திக்கு தெரியா காட்டிற்குள் காட்டியிருப்பது போல் தோன்றியது வசிஷ்ட்ராவிற்கு..
மெதுவாக எழுந்தமர்ந்தவள் இருளுக்கு தன் கண்களை பழக்கப்படுத்த முயற்சித்தாள்..
வானின் குட்டிக் குட்டி விண்மீன்கள் அவளுக்கு உதவியாய் ஒளியலைகளைத் தெளிக்க மெதுவாக நடக்கத் துவங்கினாள் அவள்..
சேறும் சகதியும் நடையை சற்று தடுமாற செய்ய முயன்று அடிகளை எடுத்துவைத்து ஒரு வெட்ட வெளியை அடைந்தாள்..
எங்கோ அவ்விடதைப் பார்த்ததுபோல் இருக்க வேக வேகமாக முன்னேறியவளை தடுப்பது பொல், “யார் நீங்க..?? இங்க என்ன பண்றீங்க..??”, என்று கேட்டபடி சிறு புதரின் பின்னிருந்து தோன்றினான் ஒருவன்..
அவனைக் கண்டு கொஞ்சமே கொஞ்சம் பின்னடைந்த போதிலும், “நான் வசிஷ்ட்ரா.. வழி தடுமாறி இங்க வந்துட்டேன்..” என்றாள் மெல்லிய குரலில்..
“ஓ.. மூன்று வயதில் தொடங்கிய வழி தடுமாறல் இன்னும் இன்னும் தொடரும் போலவே..??”, கேள்வியாகும் கேலியாகவும்..
“நீங்க என்ன சொல்றீங்க..??”, என்று குழப்பமாக கேட்ட வசிஷ்ட்ரா சற்று நிதானித்து, “ஆமா நீங்கள் யார்..??”, எனக் கேட்டாள்..
“நான் மயூரன்..”, என்று தன்னைத் தானே அறிமுக படுத்திக்கொண்டவன் அவள் வயிற்றை தடவி கொடுப்பது கண்டு, “
இதழ்களை இழுத்துப் பிடித்து மண்டையை உருட்டி சாப்பிடலாம் சாப்பிடலாம் என்றவள் அவனுடன் அவன் தங்கியிருந்த இடத்திற்கு செல்லலானாள்..
சுடச் சுட வயிற்றுக்குள் உருண்டோடிய கார உருண்டை வயிற்றை நிறப்பியிருக்க சில பல கேள்விகளுடன் மயூரனின் முன் தரையில் அமர்ந்திருந்தாள் வசிஷ்டிரா..
“கேளு வசிஷ்டரா..”
“ஹான்..!!??”
“இல்லை ரொம்ப நேரமா என்கிட்ட கேகணும்னு தவிக்கர மாதிரி இருக்கு.. அதான்.. என்னனு கேளு..”, என்றான் மயூரன்..
“அது வந்து.. இது என்ன இடம்..??”
“ஹா ஹா..”, என்று வாய்விட்டே சிரித்தவன், “இது பீது வனம்..”, என்றுவிட்டு, “நீ கேட்க நினைத்த கேள்வி இதுவல்ல போலவே..??”, லேசாக கண்ணிடத்து..
அதில் லேசாக தடுமாறியவள், “நான் இங்கே ஏற்கனவே வந்த மாதிரி இருக்கு.. நீங்க பேசறத பார்த்தா உங்களுக்கு என்னை நல்லா தெரிந்த மாதிரி இருக்கு.. நீங்க யாரு..?? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..?? இந்த இடத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..??”, கேள்விகளை அடுக்கினாள் வசிஷ்ட்ரா..
“ப்பா.. அரை நிமிடத்தில் எத்தனை கேள்விகள்.. மாறவே இல்லை நீ..”, என்றவன், “இந்த இடம் தான் நீ நம் கிரகத்தை விட்டுப் போவதற்கு முன்னால் வந்த இடம்.. நான்...?? நீ பொழிலை விட்டுப் போக காரணமானவர்களில் ஒருவன்..”, என்றான் எங்கோ பார்த்தபடி..
“என்ன சொல்றீங்க நீங்க..??”, திகைத்த படி கேள்வி விழுந்தது..
“நீ இன்னும் ஒரு முக்கியமான இடத்தைப் பார்க்கவில்லை..”, என்றவன் அவள் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டே அந்த வெட்டவெளியைத் தாண்டி மரங்கள் போர்த்தியுள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றான்..
“இது என்ன இடம்..??”, என்று கேட்டவளை அமைதியாக இருக்கும்படி அடக்கியவன் ஒரு பெரிய மரத்தின் அருகே அவளது கைகளை விட்டுவிட்டு, “ஒரு நிமிடம் இரு..”, என்றுவிட்டு விறுவிறுவென மரத்தில் ஏறினான்..
இடப்பக்கம் பிரிந்த கிளையில் வலது காலை வைத்தவன் கையேட்டும் தூரத்தில் இருந்த ஒரு சிறு பொந்துக்குள் கையை நுழைத்து உலோகத்தாலான குச்சி போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான்..
“எங்க போறோம் மயூரன்..??”, என்று கேட்டவளிடம், “உன்கிட்ட நான் பேச வேண்டாம்னு சொன்னேன்..”, என்று மீண்டும் எச்சரித்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு மரங்கள் நிறைந்த அந்தப் பகுதிக்குள் புகுந்து நடக்கத் துவங்கினான் வசிஷ்ட்ராவுடன்..
சற்று தூரம் நடந்தவர்கள் பாறைகள் சூழ்ந்திருந்த ஓர் இடத்தை வந்தடைந்தனர்..
வசிஷ்ட்ராவிற்கு அவ்விடத்தை எங்கோ கனவில் பார்த்தது போல் இருந்தது..
எவ்வளவு தான் தன் நெற்றிப் ****** தட்டி யோசித்தபோதும் விடை மட்டும் பூஜியமே..
மயூரனிடம் கேட்கலாம் என்றாலோ அவன் அமைதியாக இரு என்று எச்சரித்தது தடுத்து நிறுத்தியது வசிஷ்ட்ராவை..
மௌனம் காக்கத் வசிஷ்ட்ரா ஆவலாகவும் குழப்பத்துடனும்..
மூன்று சிறிய பாறைகள் தாண்டிஒரு சிறிய குகைக்குள் நுழைந்தனர் இருவரும்..
குகைக்குள்ளே விதவிதமாக பல வண்ணங்களில் பாறையில் நிரம்பி வழிய மயில் நீல வண்ணத்தில் காட்சியளித்த ஒரு பாறை அருகில் சென்ற
மயூரன் அப்பாறையில் இருந்த ஒரு ஓட்டைக்குள் மரத்தின் மீதேறி தான் எடுத்த அந்த குச்சி போன்ற ஒன்றை நுழைத்தான்..
கடமுட கடமுடா என்று சத்தம் கேட்க திறந்துகொண்டது குகையின் ஒரு மூலையில் இருந்த பாறைக்கதவு..
பாறை திறந்ததுமே மயூரனுக்கு முன்பே உள்ளே நுழைந்திருந்தாள் வசிஷ்ட்ரா..
வித விதமான ஸ்பேஸ் ஷிப்புகள் அணிவகுத்து நிற்க ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டு வந்தவள் கிரீடம் போல் இருந்த ஒரு ஷிப்பை நெருங்கினாள்..
அந்த கம்பீரமான ஷிப்பைக் கண்டதும் உடலில் ஒரு நடுக்கம் பரவ கால்களைத் தரையில் நன்றாக அழுத்திக் கொண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டு மெதுமெதுவாக அதன் கதவின் மேல் தன் கையை வைத்து மயூரனைத் திரும்பிப் பார்த்தாள்..
“கண்டுபிடிச்சிட்ட போல..??”
ஆம் என்பது போல் தலையசைத்தவள், “நான் பொழில் வந்ததுக்கு அப்புறம் நீங்கள் ஏன் என்னை வந்து பார்க்கவில்லை..??”, கோபமாக..
“இந்த மாதம் காவல் என் முறை என்பதால் என்னால் உன்னை வந்து பார்க்க முடியவில்லை..”, என்றான் புன்னகையுடன்..
ஓவென்றவள், “ஏன் இந்த இடம் இவளோ அமைதியா இருக்கு..?? இங்கிருக்கும் ஆட்கள் எல்லாம் இங்கே..??”, குழப்பமாக..
“இந்த இடம் மூடப்பட்டு பல வருடம் கடந்துவிட்டது..”
“மூடிட்டாங்களா..?? ஏன்..??”
“இந்த இடம் புலரி வனத்திற்கு அடுத்து இருப்பதால்.. வெகு சுலபமாக மக்கள் இங்கு நுழைந்துவிட முடியும் என்ற காரணத்தால்.. இனி ஒரு முறை தவறு நடக்கக்கூடாது என்பதால்..”, என்றான் வெறித்தபடி..
“தவறா ..?? என்ன தவறு..??”
அவளைக் கூர்ந்து பார்த்தவன், “உன்னை பூமியில் விட்டு வந்தவர்களின் தவறுக்காக.. உன்னை விண்வெளி கப்பலில் யாருக்கும் தெரியாமல் மறைந்து கொள்ள சொன்ன மிகிரின் தவறுக்காக.. உன்னை இங்கு அழைத்து வந்த விபுவின் தவறுக்காக..”, என்றவன் தொடர்ந்து, “உன்னை இங்கு அழைத்து வரலாம் என்று யோசனை சொன்ன என் தவறுக்காகவும்தான்..”, என்றான்..
“என்ன சொல்றீங்க மயூரன்..??”, அதிர்ந்தவள், “அப்..போ.. அப்..போ.. என்னைக் காரணம் காட்டித் தான் இந்த இடத்தை மூடினார்களா..??”
ஆம் என்பது போல் தலையசைத்தவன், “இதை உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன்.. இதை வேறு யாராவது உன்னிடம் சொல்லித் தெரிவதற்கு பதில் நானே சொல்லிவிடலாம் என்பதால் தான் சொன்னேன்..”, என்றான்..
அதிர்ந்தபடி தன்னைப் பார்த்தவளைக் கண்ட மயூரன் அவள் தோளில் கைவைத்து, “வசிஷ்டரா இங்க பாரு.. இதை செய்தது நமது அரசாங்கம்.. உன்னைக் காரணம் காட்டி அவர்கள் இதை செய்திருந்தாலும் இது நம் கிரக மக்களின் நன்மைக்கே.. உனக்கு நேர்ந்தது போல் இனி இக்கிரகத்தில் ஒருவருக்குக் கூட நடக்ககூடாது என்பதற்கு தான்..புரிந்ததா..??”, அதட்டலாகவும் மிரட்டலாகவும்..
அரைமனதாக புரிந்தது என்பது போல் தலையசைதவளைக் கண்டு, “இந்த விஷயம் மற்றவர்கள் மூலம் தெரிய வந்தால் நீ விளக்கம் தேடி அலைய வேண்டியது இருக்கும்.. அது உனக்கு வீணான மனக்கஷ்டதைத் விளைவிக்கலாம்.. அதனால் தான் நானே உன்னிடம் உரைத்தேன்..”, என்ற மயூரன், “போகலாமா..??”, என்று கேட்டான்..
சரியென்பது போல் தலையசைத்து விட்டு பின்னால் திரும்பியவள் கைகளைக் கட்டிக்கொண்டு தன்னை முறைத்துக்கொண்டு நின்றிருந்தவர்களைக் கண்டு திகைத்து போனாள்..
-தேடல்கள் தொடரும்..
தன்னை சுற்றிலும் இருளே சூழ்ந்திருக்க வழி தெரியாமல் திக்கு தெரியா காட்டிற்குள் காட்டியிருப்பது போல் தோன்றியது வசிஷ்ட்ராவிற்கு..
மெதுவாக எழுந்தமர்ந்தவள் இருளுக்கு தன் கண்களை பழக்கப்படுத்த முயற்சித்தாள்..
வானின் குட்டிக் குட்டி விண்மீன்கள் அவளுக்கு உதவியாய் ஒளியலைகளைத் தெளிக்க மெதுவாக நடக்கத் துவங்கினாள் அவள்..
சேறும் சகதியும் நடையை சற்று தடுமாற செய்ய முயன்று அடிகளை எடுத்துவைத்து ஒரு வெட்ட வெளியை அடைந்தாள்..
எங்கோ அவ்விடதைப் பார்த்ததுபோல் இருக்க வேக வேகமாக முன்னேறியவளை தடுப்பது பொல், “யார் நீங்க..?? இங்க என்ன பண்றீங்க..??”, என்று கேட்டபடி சிறு புதரின் பின்னிருந்து தோன்றினான் ஒருவன்..
அவனைக் கண்டு கொஞ்சமே கொஞ்சம் பின்னடைந்த போதிலும், “நான் வசிஷ்ட்ரா.. வழி தடுமாறி இங்க வந்துட்டேன்..” என்றாள் மெல்லிய குரலில்..
“ஓ.. மூன்று வயதில் தொடங்கிய வழி தடுமாறல் இன்னும் இன்னும் தொடரும் போலவே..??”, கேள்வியாகும் கேலியாகவும்..
“நீங்க என்ன சொல்றீங்க..??”, என்று குழப்பமாக கேட்ட வசிஷ்ட்ரா சற்று நிதானித்து, “ஆமா நீங்கள் யார்..??”, எனக் கேட்டாள்..
“நான் மயூரன்..”, என்று தன்னைத் தானே அறிமுக படுத்திக்கொண்டவன் அவள் வயிற்றை தடவி கொடுப்பது கண்டு, “
இதழ்களை இழுத்துப் பிடித்து மண்டையை உருட்டி சாப்பிடலாம் சாப்பிடலாம் என்றவள் அவனுடன் அவன் தங்கியிருந்த இடத்திற்கு செல்லலானாள்..
சுடச் சுட வயிற்றுக்குள் உருண்டோடிய கார உருண்டை வயிற்றை நிறப்பியிருக்க சில பல கேள்விகளுடன் மயூரனின் முன் தரையில் அமர்ந்திருந்தாள் வசிஷ்டிரா..
“கேளு வசிஷ்டரா..”
“ஹான்..!!??”
“இல்லை ரொம்ப நேரமா என்கிட்ட கேகணும்னு தவிக்கர மாதிரி இருக்கு.. அதான்.. என்னனு கேளு..”, என்றான் மயூரன்..
“அது வந்து.. இது என்ன இடம்..??”
“ஹா ஹா..”, என்று வாய்விட்டே சிரித்தவன், “இது பீது வனம்..”, என்றுவிட்டு, “நீ கேட்க நினைத்த கேள்வி இதுவல்ல போலவே..??”, லேசாக கண்ணிடத்து..
அதில் லேசாக தடுமாறியவள், “நான் இங்கே ஏற்கனவே வந்த மாதிரி இருக்கு.. நீங்க பேசறத பார்த்தா உங்களுக்கு என்னை நல்லா தெரிந்த மாதிரி இருக்கு.. நீங்க யாரு..?? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..?? இந்த இடத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..??”, கேள்விகளை அடுக்கினாள் வசிஷ்ட்ரா..
“ப்பா.. அரை நிமிடத்தில் எத்தனை கேள்விகள்.. மாறவே இல்லை நீ..”, என்றவன், “இந்த இடம் தான் நீ நம் கிரகத்தை விட்டுப் போவதற்கு முன்னால் வந்த இடம்.. நான்...?? நீ பொழிலை விட்டுப் போக காரணமானவர்களில் ஒருவன்..”, என்றான் எங்கோ பார்த்தபடி..
“என்ன சொல்றீங்க நீங்க..??”, திகைத்த படி கேள்வி விழுந்தது..
“நீ இன்னும் ஒரு முக்கியமான இடத்தைப் பார்க்கவில்லை..”, என்றவன் அவள் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டே அந்த வெட்டவெளியைத் தாண்டி மரங்கள் போர்த்தியுள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றான்..
“இது என்ன இடம்..??”, என்று கேட்டவளை அமைதியாக இருக்கும்படி அடக்கியவன் ஒரு பெரிய மரத்தின் அருகே அவளது கைகளை விட்டுவிட்டு, “ஒரு நிமிடம் இரு..”, என்றுவிட்டு விறுவிறுவென மரத்தில் ஏறினான்..
இடப்பக்கம் பிரிந்த கிளையில் வலது காலை வைத்தவன் கையேட்டும் தூரத்தில் இருந்த ஒரு சிறு பொந்துக்குள் கையை நுழைத்து உலோகத்தாலான குச்சி போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான்..
“எங்க போறோம் மயூரன்..??”, என்று கேட்டவளிடம், “உன்கிட்ட நான் பேச வேண்டாம்னு சொன்னேன்..”, என்று மீண்டும் எச்சரித்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு மரங்கள் நிறைந்த அந்தப் பகுதிக்குள் புகுந்து நடக்கத் துவங்கினான் வசிஷ்ட்ராவுடன்..
சற்று தூரம் நடந்தவர்கள் பாறைகள் சூழ்ந்திருந்த ஓர் இடத்தை வந்தடைந்தனர்..
வசிஷ்ட்ராவிற்கு அவ்விடத்தை எங்கோ கனவில் பார்த்தது போல் இருந்தது..
எவ்வளவு தான் தன் நெற்றிப் ****** தட்டி யோசித்தபோதும் விடை மட்டும் பூஜியமே..
மயூரனிடம் கேட்கலாம் என்றாலோ அவன் அமைதியாக இரு என்று எச்சரித்தது தடுத்து நிறுத்தியது வசிஷ்ட்ராவை..
மௌனம் காக்கத் வசிஷ்ட்ரா ஆவலாகவும் குழப்பத்துடனும்..
மூன்று சிறிய பாறைகள் தாண்டிஒரு சிறிய குகைக்குள் நுழைந்தனர் இருவரும்..
குகைக்குள்ளே விதவிதமாக பல வண்ணங்களில் பாறையில் நிரம்பி வழிய மயில் நீல வண்ணத்தில் காட்சியளித்த ஒரு பாறை அருகில் சென்ற
மயூரன் அப்பாறையில் இருந்த ஒரு ஓட்டைக்குள் மரத்தின் மீதேறி தான் எடுத்த அந்த குச்சி போன்ற ஒன்றை நுழைத்தான்..
கடமுட கடமுடா என்று சத்தம் கேட்க திறந்துகொண்டது குகையின் ஒரு மூலையில் இருந்த பாறைக்கதவு..
பாறை திறந்ததுமே மயூரனுக்கு முன்பே உள்ளே நுழைந்திருந்தாள் வசிஷ்ட்ரா..
வித விதமான ஸ்பேஸ் ஷிப்புகள் அணிவகுத்து நிற்க ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டு வந்தவள் கிரீடம் போல் இருந்த ஒரு ஷிப்பை நெருங்கினாள்..
அந்த கம்பீரமான ஷிப்பைக் கண்டதும் உடலில் ஒரு நடுக்கம் பரவ கால்களைத் தரையில் நன்றாக அழுத்திக் கொண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டு மெதுமெதுவாக அதன் கதவின் மேல் தன் கையை வைத்து மயூரனைத் திரும்பிப் பார்த்தாள்..
“கண்டுபிடிச்சிட்ட போல..??”
ஆம் என்பது போல் தலையசைத்தவள், “நான் பொழில் வந்ததுக்கு அப்புறம் நீங்கள் ஏன் என்னை வந்து பார்க்கவில்லை..??”, கோபமாக..
“இந்த மாதம் காவல் என் முறை என்பதால் என்னால் உன்னை வந்து பார்க்க முடியவில்லை..”, என்றான் புன்னகையுடன்..
ஓவென்றவள், “ஏன் இந்த இடம் இவளோ அமைதியா இருக்கு..?? இங்கிருக்கும் ஆட்கள் எல்லாம் இங்கே..??”, குழப்பமாக..
“இந்த இடம் மூடப்பட்டு பல வருடம் கடந்துவிட்டது..”
“மூடிட்டாங்களா..?? ஏன்..??”
“இந்த இடம் புலரி வனத்திற்கு அடுத்து இருப்பதால்.. வெகு சுலபமாக மக்கள் இங்கு நுழைந்துவிட முடியும் என்ற காரணத்தால்.. இனி ஒரு முறை தவறு நடக்கக்கூடாது என்பதால்..”, என்றான் வெறித்தபடி..
“தவறா ..?? என்ன தவறு..??”
அவளைக் கூர்ந்து பார்த்தவன், “உன்னை பூமியில் விட்டு வந்தவர்களின் தவறுக்காக.. உன்னை விண்வெளி கப்பலில் யாருக்கும் தெரியாமல் மறைந்து கொள்ள சொன்ன மிகிரின் தவறுக்காக.. உன்னை இங்கு அழைத்து வந்த விபுவின் தவறுக்காக..”, என்றவன் தொடர்ந்து, “உன்னை இங்கு அழைத்து வரலாம் என்று யோசனை சொன்ன என் தவறுக்காகவும்தான்..”, என்றான்..
“என்ன சொல்றீங்க மயூரன்..??”, அதிர்ந்தவள், “அப்..போ.. அப்..போ.. என்னைக் காரணம் காட்டித் தான் இந்த இடத்தை மூடினார்களா..??”
ஆம் என்பது போல் தலையசைத்தவன், “இதை உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன்.. இதை வேறு யாராவது உன்னிடம் சொல்லித் தெரிவதற்கு பதில் நானே சொல்லிவிடலாம் என்பதால் தான் சொன்னேன்..”, என்றான்..
அதிர்ந்தபடி தன்னைப் பார்த்தவளைக் கண்ட மயூரன் அவள் தோளில் கைவைத்து, “வசிஷ்டரா இங்க பாரு.. இதை செய்தது நமது அரசாங்கம்.. உன்னைக் காரணம் காட்டி அவர்கள் இதை செய்திருந்தாலும் இது நம் கிரக மக்களின் நன்மைக்கே.. உனக்கு நேர்ந்தது போல் இனி இக்கிரகத்தில் ஒருவருக்குக் கூட நடக்ககூடாது என்பதற்கு தான்..புரிந்ததா..??”, அதட்டலாகவும் மிரட்டலாகவும்..
அரைமனதாக புரிந்தது என்பது போல் தலையசைதவளைக் கண்டு, “இந்த விஷயம் மற்றவர்கள் மூலம் தெரிய வந்தால் நீ விளக்கம் தேடி அலைய வேண்டியது இருக்கும்.. அது உனக்கு வீணான மனக்கஷ்டதைத் விளைவிக்கலாம்.. அதனால் தான் நானே உன்னிடம் உரைத்தேன்..”, என்ற மயூரன், “போகலாமா..??”, என்று கேட்டான்..
சரியென்பது போல் தலையசைத்து விட்டு பின்னால் திரும்பியவள் கைகளைக் கட்டிக்கொண்டு தன்னை முறைத்துக்கொண்டு நின்றிருந்தவர்களைக் கண்டு திகைத்து போனாள்..
-தேடல்கள் தொடரும்..