• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then Sinthum Poovanam! - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 11

பிரியதர்ஷினி அழுதபடியே செல்வதைப் பார்த்து சந்தோஷத்தில் நின்றிருந்த தீபிகாவின் அருகில் சென்ற மான்விழி, “ஏன் தீபி நீ இப்படி இருக்கிற..?” என்றவள் புரியாமல் கேட்டதும் இடது புருவம் உயர்த்தி அவளைக் கேள்வியாகப் பார்த்த தீபிகா, “நான் இப்படி இருப்பதில் உனக்கு என்ன பிரச்சனை..?” என்று எதிர்கேள்வி கேட்டாள்..

அவளின் கேள்வியில் மான்விழிக்கு கோபம் வர, “ஒருவர் கண்ணீர் விடுவதைப் பார்த்து சந்தோஷப்பட நீ என்ன மிருகமா..? அந்த அக்கா உன்னை என்ன பண்ணினாங்க.. எதுக்கு இப்போ அவங்களை அழுகவெச்ச..?” என்றவள் கேட்டதும் தீபியின் கோபம் அதிகரிக்க, “அது உனக்கு தேவை இல்லாத விஷயம் மானு..” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினாள்..

அவளின் முகத்தைப் பார்த்தவள், “ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணு.. உன்னிடம் எல்லாம் நான் பிரிண்ட்ஷிப் வெச்சிருக்கேன்..” என்றவள் சொல்ல அந்த வார்த்தைகள் தான் பின்நாளில் தன்மேல் அவள் சுமத்த போகும் பழிக்கு அஸ்திவாரம் என்று அறியாமல் நின்றிருந்தாள் மான்விழியைப் பார்த்தவள், “ஆமா நான் சுயநலக்காரிதான்..” என்றவள் நிற்காமல் கோவிலைவிட்டு வெளியே சென்றாள்..

தீபிகாவை முழுவதுமாக புரிந்து வைத்திருந்த மான்விழிக்கே அவளின் செயல் புதிதாக தெரிய, ‘இவளை என்ன செய்வது என்று தெரியல..’ என்று நினைத்தவளுக்கு பிரியதர்ஷினியின் நினைவுவர, ‘ஐயோ அந்த அக்காவிற்கு என்ன ஆச்சோ..?’ என்றவளும் கோவிலில் இருந்து வேகமாகக் கிளம்பினாள்..

தீபிகாவின் வார்த்தைகளில் காயப்பட்ட பிரியா வேகமாக ஓட அவளின் பின்னோடு வேகமாகச் சென்ற சந்தோஷ், “ஏய் பிரியா நில்லுடி..” என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்து வேகமாகச் சென்றான்.. அப்பொழுது கோவிலை விட்டு வெளியே வந்த சங்கமித்ரா பைக்கில் செல்லும் சந்தோஷைப் பார்த்து, “இவன் எதுக்கு இவ்வளவு வேகமாக போகிறான்..” என்று தனக்குதானே கேள்விகேட்டு கொண்டாள்..

“எனக்கு இங்க என்ன நடக்குது என்றே சுத்தமாக புரியல மித்ரா..” என்ற சஞ்சனா இருவரும் வேகமாக வீட்டை நோக்கி செல்ல வேகமாக ஓடிய பிரியதர்ஷினியின் ஒரு திருப்பத்தில் எந்தப்பக்கம் சென்றாள் என்று தெரியாமல் நின்ற சந்தோஷ், “ஏய் தேனு எங்கடி போன..” என்றவன் புலம்பியபடி வீட்டை நோக்கி சென்றான்..

அவளோ அங்கிருக்கும் அண்ணா பூங்காவின் உள்ளே சென்று ஒரு மரத்தின் பின்னாடி இருந்த பெஞ்சில் அமர்ந்தவளின் நினைவில் தீபியின் வார்த்தைகள் வந்து செல்ல, “என்னோட அத்துமேல் எனக்கு உரிமை இல்லையா..?” என்று நினைத்தவள் கதறியழுக ஆரம்பித்தாள்..

அதுவரை அழுகாத பிரியதர்ஷினி தன்னை மறந்து கதறியழுக தன்னுடைய கதறலுக்கு அர்த்தம் புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.. நேரம் செல்ல செல்ல அவளின் அழுகை குறைந்துவிட சிந்தனை தெளிவாக மாறிவிட, “அவள் அப்படி சொன்னதுமே எனக்கு எதுக்கு அழுகை வரணும்..” என்றவள் தன்னுடைய மனதிடமே கேட்டாள்..

‘இன்னும் உனக்கு புரியலையா பிரியா.. நீ சந்தோஷை மனதார காதலிக்கிற..’ என்றவளின் மனம் உண்மையைச் சொல்ல அவளின் அழுகை நின்றது.. அதுவரை சந்தோஷை, ‘தன்னுடைய அத்தை மகனாக மட்டுமே..’ பார்த்திருந்த பிரியதர்ஷினியின் மனம் அன்றுதான் ஒன்று விஷயத்தை தெளிவாக உணர்ந்தது.. தன்னுடைய மனதில் காதலின் விதைகள் வேரூன்றி பலநாள் ஆனதை அன்றுதான் அதிர்வுடன் உணர்ந்தாள் பிரியதர்ஷினி..

இதுவரை அவளுடன் போட்டி போடா யாருமே இல்லாததால் அவள் தன்னுடைய காதலை உணரவே இல்லை.. ஆனால் இன்றோ தீபிகா அவளுக்கு போட்டியாக வந்துவிட, ‘தன்னுடைய கையில் இருக்கும் பொம்மையை யாரோ பறித்துவிட்டு சென்றது போல உணர்ந்ததால் வந்த அழுகை..’ என்றவளின் மனம் தெளிவாக அவளுக்கு உணர்த்தியது

“இதனால்தான் அவளின் பேச்சு தன்னை பாதிக்கிறதா..?” என்றவளின் அழுகை நின்றுவிட தெளிவாக யோசிக்க ஆரம்பித்த பிரியா, ‘சந்தோஷிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவன் வீம்பிற்கு வேற யாரையாவது காதலித்து கல்யாணம் பண்ணிக்கொள்வான்..’ என்று நினைத்தவள்,

‘அத்து சரியான வீம்பு பிடித்தவன்.. நம்ம எதை செய்ய வேண்டாம்னு என்று சொல்றமோ அவன் அதைதான் செய்வான்.. அவனோட மனம் தெரியாமல் நம்ம வாய்திறக்க கூடாது.. அதனால் என்னோட காதல் எனக்குள் இருக்கட்டும்..’ என்ற முடிவுடன் அந்த இடத்திலிருந்து கிளம்பினாள்..

பிரியாவைத் தேடிய சந்தோஷ், ‘வீட்டிற்கு போயிருப்பாளோ..?’ நேராக வீட்டிற்கு சென்றான்.. அவன் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கும் பொழுது வீட்டிற்குள் நுழைந்த சங்கமித்ரா, “அண்ணா நீ ஏன் கோவிலுக்கு வரவே இல்ல..” என்றவள் கேள்வி கேட்க, “முதலில் வழிவிட்டு நில்லுடி..” என்றவன் அவளைக் கடந்து வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்..

அவனின் வேகத்தைக் கண்ட சஞ்சனா, “அக்கா என்னவோ சரியில்ல அக்கா..” என்றவள் சொல்ல இருவரும் வேகமாக வீட்டின் உள்ளே நுழைய மூவரையும் பார்த்த சுமதி, “சந்தோஷ் எங்கே பிரியா..?” என்றவர் அவனிடம் சந்தேகமாகக் கேட்டார்.. அவரின் கேள்வியில் பெண்கள் இருவரும், ‘இன்னும் பிரியா வீட்டுக்கு வரலையா..?’ என்று அதிர்ந்து நின்றனர்..

பாட்டியின் முகம் பார்த்த சந்தோஷ், “என்ன பாட்டி சொல்றீங்க.. அவள் இன்னும் வீட்டுக்கு வரவில்லை..” என்றவனின் கவலை அதிகரிக்க, ‘எல்லாம் இந்த தீபிகாவால் வந்தது..’ என்றவனின் கோபம் முழுவதும் தீபியின் மீது திரும்பிட மனமோ தன்னவளைத் தேடியது..

‘தேனு எங்கே இருக்கிற...?’ என்ற கேள்வி மனதில் இருந்தவளிடம் கேட்க, ‘கோவிலில் இருந்து அழுதுட்டே போனாளே.. அவள் ஏதாவது தப்பான முடிவு..’ என்று நினைத்தவனின் மனம் படபடத்தது.. தன்னுடைய தேடலின் அர்த்தம் புரியாமல் சோர்வுடன் சோபாவில் அமர்ந்தான்..

அவனைப் பார்த்த சுமதி, “டேய் பிரியா எங்கே..?” என்றவர் தீவிரமாக விசாரிக்க கல்லு மாதிரி அமர்ந்திருந்த அண்ணனைப் பார்த்த சங்கமித்ரா, ‘அண்ணா இப்படி இருக்க மாட்டானே..?’ என்றவள் யோசனை செய்ய சஞ்சனாவோ, “அக்கா பிரியா எங்கே போயிருப்பா.. எனக்கு என்னவோ ரொம்ப பயமாக இருக்குது அக்கா..” என்றவள் அழுக ஆரம்பித்தாள்..

அவள் அழுவதைப் பார்த்தபடியே வீட்டின் உள்ளே நுழைந்த மோகனும், மணிகண்டனும், “சஞ்சனா இப்போ எதுக்கு நீ அழுகிற..” என்றவர் கேட்க, “தாத்தா..” என்றவள் முழுவதுமாக சொல்லி முடிக்க, “என்னடா பிரியா உங்களை விட்டுவிட்டு கோவிலில் இருந்து சொல்லாமல் கிளம்பி வந்துவிட்டாளா..?” என்ற பெரியவர்கள் நால்வருக்கும் அதிர்ச்சியாக இருந்தது..

பிரியா எங்கே சென்றாலும் தான் செல்லும் இடத்தை பற்றியும், அங்கிருந்து வீட்டுக்கு வரும் நேரத்தையும் சொல்லிவிட்டு செல்வாள்.. அப்படியிருக்கும் பொழுது இவர்கள் இருவரும் சொல்வதை அவர்களால் நம்ப முடியாமல் போனது.. அப்பொழுது கூட அமைதியாக அமர்ந்திருந்த பேரனின் முகம் பார்த்த மோகனின் புருவங்கள் உயர்ந்தது..

‘இவன் என்ன பித்து பிடித்தவனை போல உட்காந்திருக்கான்..’ என்றவர் யோசித்தவண்ணம், “டேய் சந்தோஷ் பிரியா எங்கே..?” என்றவர் அவனிடம் கேட்க, “நான் பிரியாவைப் பார்க்கல தாத்தா..” என்றவன் பொய் சொல்ல அவனின் முகத்தைக் கூர்ந்து கவனித்த சங்கமித்ரா..

“தாத்தா அண்ணா பொய் சொல்றான்.. நாங்க கோவிலில் இருந்து வெளியே வரும் பொழுது அண்ணா யாரையோ கூப்பிட வண்டியில் ஸ்பீடாக போனான்..” என்றவள் தாத்தாவிடம் சொல்ல, “ஏய் உனக்கு என்ன தெரியும்..?” என்றவன் இருந்த கோபத்தில் தங்கையிடம் எகிற தாத்தாவின் பின்னோடு பயத்துடன் மறந்து நின்றாள் சங்கமித்ரா..

அவனின் முகம் பார்த்த சுமதியோ, “ஏங்க அவன் எப்பொழுதும் பொய் சொல்ல மாட்டான்.. நீங்க இருவரும் போய் முதலில் பிரியாவைத் தேடுங்க.. அவளைக் காணவில்லை என்றால் விக்ரமும் மீராவும் துடிச்சு போயிருவாங்க..” என்றவர் கணவனை திசை திருப்ப நினைத்தார்..

அவன் கோபத்தைக் கண்ட மணிகண்டன், “சந்தோஷ் நீ எதுக்கு பொய் சொல்ற.. நீங்க எல்லோரும் கோவிலுக்கு போனீங்க.. ஆனால் வரும் பொழுது பிரியாவை மட்டும் காணவில்லை என்றால் நாங்க யாரை சந்தேகப்படுவது..?” என்றவர் அவனிடம் கேட்டார்..

“நீங்க யாரையும் சந்தேகப்பட வேண்டாம்..” என்ற சீதாவை மணிகண்டன் முறைத்தார்.. சந்தோஷ் யாருக்கும் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றிருக்க, “டேய் உண்மையை சொல்லுடா..” என்றவர் அவனை அடிக்க கையோங்கிட, “தாத்தா..” என்று கத்திக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தாள் பிரியா..

அவளின் குரல்கேட்டு திரும்பிய சந்தோஷின் பார்வை அவளின் உச்சி முதல் பாதம் வரையில் வருடிச் சென்றது.. அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்றதுதான் அவனின் மனதில் இருந்த பதட்டம் குறைய அவளின் பார்வை முழுவதும் அவனின் மீதே இருந்தது..

அவளின் குரல்கேட்டு திரும்பிய மோகன், “பிரியா எங்கேடா போயிருந்தா..?” என்றவர் அவளிடம் கேட்க, “பிரியா உனக்கு ஒன்னும் ஆகலையே..?” என்று பதட்டத்துடன் கேட்டனர் சீதாவும், சுமதியும்..! அதுவரை அழுதுக்கொண்டிருந்த சஞ்சனா, “பிரியா..” என்றவள் ஓடிவது அவளை கட்டியணைத்துக் கொண்டாள்..

“எனக்கு ஒன்றுமே இல்லை பாட்டி..” என்றவள் சொல்ல, “அப்புறம் எங்கே போயிருந்த பிரியா..” என்றவர்கள் எல்லோரும் அவளிடம் கேள்வி கேட்க, “அது வந்து தாத்தா.. சும்மா விளையாடி பார்க்கலாம்..” என்றவள் இழுக்க, சங்கமித்ராவின் பார்வை அவளின் மீது சந்தேகமாக படியா சஞ்சனா அவளை விட்டு விலகி நின்றாள்..,

சந்தோஷின் பார்வையோ, ‘இவள் என்ன சொல்ல போறா..?’ என்றவனின் அவளின் மீது பார்வையை செலுத்தினான்.. “நான்தான் சொல்லாமல் கோவிலில் இருந்து அண்ணா பார்க்கில் வந்து உட்கார்ந்திருந்தேன்.. நீங்க எல்லோரும் என்னை தேடுவீங்க..” என்றவள் திமிராக பதில் சொல்லி முடிக்கும் முன்பே, “நீ விளையாட இதுவா நேரம்..?” என்ற மோகனின் கரங்கள் அவளின் கன்னத்தை பதம் பார்த்தது..

அவரிடம் இருந்து அப்படியொரு செயலை எதிர்பார்க்காத அனைவரும் திகைத்து நிற்க, “என்னங்க பிள்ளையை இப்படி அடிச்சிடீங்க..?” என்றவர் அதிர்ச்சியுடன் கணவனிடம் கேள்வி கேட்க, “இவளை அடிக்காமல் என்ன பண்ண சொல்ற..?” என்றவர் சுமதியிடம் சண்டைக்கு போனார்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஏற்கனவே மனதளவில் பாதிக்க பட்டிருந்த பிரியாவிற்கு இந்த அடி இடிபோல இருக்க கண்களிரண்டும் கலங்கிட, “ஸாரி தாத்தா..” என்றவள் அழுதபடியே நிற்க சந்தோஷ் மனமோ, ‘ஏண்டி இப்படி பொய் சொன்னாய்..?’ என்றவன் அவளையே இமைக்காமல் பார்த்தான்.. பிரியாவோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் நின்றிருந்தாள்..

இருவரின் முகத்தையும் பார்த்த மித்ராவோ, ‘இருவரும் ஏதோவொரு விஷயத்தை நம்மிடம் மறைக்கிறாங்க..’ என்றவளின் மனதில் சந்தேகம் எழுந்துவிட, “மித்ரா, சாக்லேட் இருவரும் பிரியாவைக் கூட்டிட்டு அறைக்கு போங்க..” என்றார் சீதாலட்சுமி..

அவளை அழைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே செல்ல, “ஸாரி சந்தோஷ்..” என்ற மோகனின் கரங்கள் பேரனின் தோளில் விழுக அவனின் கரத்தை தட்டிவிட்ட சந்தோஷ் வேகமாக மாடியேறி சென்றிட்டான்.. அவனின் செயல் எல்லாம் புதிராகவே இருந்தது.. டியூசன் சென்றுவிட்டு திரும்பி வந்தனர் சஞ்சீவும், மதுபாலாவும்..!

பிரியாவை அறைக்குள் அழைத்து சென்ற சங்கமித்ரா, “நீ எங்கே பிரியா போயிருந்தாய்..? என்றவளிடம் கேள்வி கேட்க, “நாளைக்கு எக்ஸாம் மிது வா படிக்கலாம்.. இரு நான் போய் முகம் கழுவிவிட்டு வருகிறேன்..” என்றவள் குளியலறைக்குள் புகுந்தாள்..

தன்னுடைய அறைக்குள் சென்ற சந்தோஷ், ‘இன்னைக்கு நடந்த எல்லா பிரச்சனைக்கும் ஒரே காரணம் தீபிகாதான்.. அவளை சும்மா விடவே கூடாது..’ என்றவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.. அதே நேரத்தில் பிரியா அவளின் உரிமையை உணர வைக்கும் வண்ணம் தன்னுடைய காயை நகர்த்த முடிவு செய்த பிறகுதான் அவனுக்கு தூக்கமே வந்தது..

கோவிலில் பிரியாவை அழுக வைத்துவிட்டு வீட்டிற்கு வந்த தீபியின் முகம் தாமரை மலர்போல மலர்ந்திருந்தது.. தீபக் மகளின் முகம் பார்த்து, “என்னடா ரொம்ப சந்தோசமாக இருக்கிறாயா..?” என்றவர் கேட்டதும், “கோவிலில் நல்ல தரிசனம் அப்பா..” என்று இரு பொருள்பட கூறியவள் தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்தாள்..

அவளிடம் இருந்த வேறுபாட்டை உணர்ந்த தீபக், ‘இவள் இன்று போல எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்..’ என்று நினைத்தவரின் முகத்தில் புன்னகை அரும்பியது.. தன்னுடைய அறைக்குள் நுழைந்து படுக்கை யில் விழுந்த தீபிகா, ‘இன்னைக்குதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது..’ என்று நினைத்தவளின் மனமோ அவர்களை சந்தித்த நாளை நினைத்து பார்த்தது..

அன்றொரு நாள் அவர்கள் கோவிலுக்கு போகும் பொழுது அப்பா யாரையோ மறந்து நின்று பார்ப்பதைக் கவனித்த தீபிகா, “அப்பா யாரை பார்க்கிறீங்க..” என்றவர் பார்வை சென்ற திசைப் பார்த்தாள்..

“என்னோட அக்காவைப் பார்க்கிறேன் செல்லம்..” என்றவர் சொல்ல திகைத்த தீபிகா, “யாரு பிருந்தா அத்தையை பார்க்கிறீங்களா..?” என்றவள் கேட்டதும், “ம்ம் அதோ ரெட் கலர் சேலைக் காட்டிருக்காங்க இல்ல அவங்க உன்னோட அத்தை..” என்று தீபிகாவிற்கு அடையாளம் காட்டினார்..

அத்தையின் முகம் பார்த்த தீபிகாவோ, “உங்கள ஏன் அத்தைக்கு பிடிக்கல..” என்றவள் அவரிடம் கேள்வி கேட்டதும் தங்களுடைய தவறை குழந்தையிடம் சொல்ல விருப்பம் இல்லாமல், “என்னோட இடத்தில் வேற சிலர் இருக்காங்க செல்லம்.. விக்ரம், சந்துரு என்று இவர் இருக்காங்க.. அதனால உன்னோட அத்தைக்கு என்னையும், தாத்தாவையும் பிடிக்கலடா..” என்றவர் மகளிடம் கூறினார்..

“அவங்களால் தான் நீங்க அத்தை வீட்டுக்கு போவதில்லையா..?” என்றவள் கேட்டதும் எதையோ நினைத்து சிரித்தவரை அவள் புரியாத பார்வை பார்க்க, “உன்னோட அத்தைக்கு என்னை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது..” என்றவர் அப்பொழுது வாய்க்கு வந்த காரணத்தை மகளிடம் கூறினார்..

“அக்கா என்னை முழுவதுமாக வெறுத்துவிட்டாள் தீபி.. ஒரு நாள்கூட தம்பி வீடு என்றவள் உரிமையாக ஒரு நாள்கூட நம்ம வீட்டுக்கு வந்தது இல்ல தீபி.. எனக்கு அந்த ஒரு வருத்தம்தான் தீபி..” என்றவர் அவரின் மனதில் இருப்பதை மகளிடம் சொல்ல அவளோ அவள் சொன்னதை தவறாக புரிந்து கொண்டாள்..

‘என்னோட அப்பா தனிமையில் கஷ்டப்பட இவங்க எல்லோரும் ரொம்ப சந்தோஷமாக இருக்காங்க இல்ல..’ என்றவளின் அவளின் மனதில் தீய விதைகளை விதைக்கும் என்றும் நாளை எதுவே மரமாக மாறும் என்ற உண்மையை அறியாமல் சொல்லிவிட்டார்..

அப்பொழுது அவர்களைக் கடந்து சென்ற சந்தோஷ் முகம் பார்த்த தீபக், “தீபி இது உன்னோட அத்தை மகன் சந்தோஷ்..” என்றவர் அறிமுகப்படுத்த அவன் சென்ற திசையைப் பார்த்த தீபிகாவிற்கு அவனின் முதுகு மட்டுமே தெரிய, “என்னப்பா இது அவரோட முகத்தை நான் பார்க்கவே இல்லையே..” என்றவள் வருத்தப்பட்டாள்..

அதற்குள் அவனின் பின்னோடு வந்த அவளின் வயதை உடைய பெண்ணொருத்தி, “அத்து..” என்றழைப்புடன் அவனை நோக்கி செல்ல நின்று திரும்பிய சந்தோஷ் முகத்தைப் பார்த்தாள் தீபிகா..

அதற்குள் அவனின் அருகில் அந்தப்பெண்[பிரியா], “இந்த அத்து உனக்காக பொங்கல் வாங்கிட்டு வந்தேன்..” என்று அவனின் கையில் கொடுக்க, “தேங்க்ஸ் தேனு..” என்றவனின் உதட்டில் இருந்த புன்னகையைக் கண்டவளின் மனது உள்ளுக்குள் கொதித்தது..

‘இவனோட பெயரில் இருக்கும் சந்தோஷம் இனிமேல் இவனோட வாழ்க்கை இருக்கக்கூடாது..’ என்று நினைத்த தீபிக்கு முதல் பார்வையிலேயே சந்தோஷையும், பிரியாவையும் பிடிக்காமல் போக அவளின் மனமோ, ‘இவங்க இருவரையும் வைத்துதான் காய் நகர்த்திதான் அத்தையை நம்ம வீட்டு வரவழைக்க முடியும்..’ என்று மனதிற்குள் திட்டமிட்டாள்..

“அப்பா இவள் யாரு..??” என்று கேட்க, “விக்ரமோட பொண்ணு பிரியதர்ஷினி..” என்று சொல்ல பிரியாவின் முகம் பார்த்தவளின் மனதில் வன்மம் தீயேன வளர்ந்தது.. குழந்தைகளிடம் ஒரு வார்த்தை பேசும் பொழுது ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் என்பதை மறந்தே போனார் தீபக்..

தன்னுடைய மகளின் மனதில் வளர்ந்த தீய எண்ணம் யார் யார் மனதை காயப்படுத்த போகிறது என்றும், அவளால் ஒரு உயிர் பழியாக போகிறது என்றும் அப்பொழுது அவருக்கு தெரியாது.. விதி தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்தது தீபியின் ரூபத்தில்..!

அன்றைய நினைவுகளில் ஆழ்ந்தவள் தன்னையும் மறந்து தூக்கத்தில் ஆழ்ந்தாள்.. நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்து செல்ல அன்றைய நாளிற்கு பிறகு மான்விழியை அவர்கள் பார்க்கவே இல்லை..

அதனாலோ என்னவோ பிரியாவிடம் ஏற்பட்ட மாற்றத்தை யாருமே உணராமல் போயினர்.. அவளின் செயல் எல்லாமே வினோதமாகவே இருக்க யாரும் அவளிடம் கேள்வி கேட்கவே இல்லை.. அதன்பிறகு வந்த நாளில் எல்லோருக்கும் எக்ஸாம் தொடங்கிவிட இந்த பிரச்சனையை முழுவதுமாக மறந்தே போயினர்..

ஆறு பேருக்கும் தேர்வு முடிந்ததும் தாத்தா, பாட்டியுடன் சென்னை கிளம்பும் நேரத்தில் மான்விழியை அவர்கள் எதர்ச்சியாக பார்க்க நேர்ந்தது.. ‘அவள் எதற்காக வந்திருக்கிறாள்..’ என்றவர்கள் யோசித்தனர்..??? அன்று அவர்களிடம் அவள் உண்மையை சொல்லி இருந்தால் அநியாயமாக ஒரு உயிர் போயிருக்காதோ..???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அச்சோ, மண்விழிக்கு என்ன
ஆச்சு, சந்தியா டியர்?
மான்விழி இறந்து விட்டாளா?
இவளோட இறப்புக்கு தீபிகாதான்
காரணமா?
ஒரு நல்ல பாடகியை அநியாயமாக
இழந்து விட்டோமோ?
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
banuma ippo busy... so konjam neram kalichu vanthu comment podovanga..athukaga intha smile potto seat pottoto poirukanga. correct ah banuma???
banuma edit panrathe illa dr..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top