அத்தியாயம் – 11
பிரியதர்ஷினி அழுதபடியே செல்வதைப் பார்த்து சந்தோஷத்தில் நின்றிருந்த தீபிகாவின் அருகில் சென்ற மான்விழி, “ஏன் தீபி நீ இப்படி இருக்கிற..?” என்றவள் புரியாமல் கேட்டதும் இடது புருவம் உயர்த்தி அவளைக் கேள்வியாகப் பார்த்த தீபிகா, “நான் இப்படி இருப்பதில் உனக்கு என்ன பிரச்சனை..?” என்று எதிர்கேள்வி கேட்டாள்..
அவளின் கேள்வியில் மான்விழிக்கு கோபம் வர, “ஒருவர் கண்ணீர் விடுவதைப் பார்த்து சந்தோஷப்பட நீ என்ன மிருகமா..? அந்த அக்கா உன்னை என்ன பண்ணினாங்க.. எதுக்கு இப்போ அவங்களை அழுகவெச்ச..?” என்றவள் கேட்டதும் தீபியின் கோபம் அதிகரிக்க, “அது உனக்கு தேவை இல்லாத விஷயம் மானு..” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினாள்..
அவளின் முகத்தைப் பார்த்தவள், “ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணு.. உன்னிடம் எல்லாம் நான் பிரிண்ட்ஷிப் வெச்சிருக்கேன்..” என்றவள் சொல்ல அந்த வார்த்தைகள் தான் பின்நாளில் தன்மேல் அவள் சுமத்த போகும் பழிக்கு அஸ்திவாரம் என்று அறியாமல் நின்றிருந்தாள் மான்விழியைப் பார்த்தவள், “ஆமா நான் சுயநலக்காரிதான்..” என்றவள் நிற்காமல் கோவிலைவிட்டு வெளியே சென்றாள்..
தீபிகாவை முழுவதுமாக புரிந்து வைத்திருந்த மான்விழிக்கே அவளின் செயல் புதிதாக தெரிய, ‘இவளை என்ன செய்வது என்று தெரியல..’ என்று நினைத்தவளுக்கு பிரியதர்ஷினியின் நினைவுவர, ‘ஐயோ அந்த அக்காவிற்கு என்ன ஆச்சோ..?’ என்றவளும் கோவிலில் இருந்து வேகமாகக் கிளம்பினாள்..
தீபிகாவின் வார்த்தைகளில் காயப்பட்ட பிரியா வேகமாக ஓட அவளின் பின்னோடு வேகமாகச் சென்ற சந்தோஷ், “ஏய் பிரியா நில்லுடி..” என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்து வேகமாகச் சென்றான்.. அப்பொழுது கோவிலை விட்டு வெளியே வந்த சங்கமித்ரா பைக்கில் செல்லும் சந்தோஷைப் பார்த்து, “இவன் எதுக்கு இவ்வளவு வேகமாக போகிறான்..” என்று தனக்குதானே கேள்விகேட்டு கொண்டாள்..
“எனக்கு இங்க என்ன நடக்குது என்றே சுத்தமாக புரியல மித்ரா..” என்ற சஞ்சனா இருவரும் வேகமாக வீட்டை நோக்கி செல்ல வேகமாக ஓடிய பிரியதர்ஷினியின் ஒரு திருப்பத்தில் எந்தப்பக்கம் சென்றாள் என்று தெரியாமல் நின்ற சந்தோஷ், “ஏய் தேனு எங்கடி போன..” என்றவன் புலம்பியபடி வீட்டை நோக்கி சென்றான்..
அவளோ அங்கிருக்கும் அண்ணா பூங்காவின் உள்ளே சென்று ஒரு மரத்தின் பின்னாடி இருந்த பெஞ்சில் அமர்ந்தவளின் நினைவில் தீபியின் வார்த்தைகள் வந்து செல்ல, “என்னோட அத்துமேல் எனக்கு உரிமை இல்லையா..?” என்று நினைத்தவள் கதறியழுக ஆரம்பித்தாள்..
அதுவரை அழுகாத பிரியதர்ஷினி தன்னை மறந்து கதறியழுக தன்னுடைய கதறலுக்கு அர்த்தம் புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.. நேரம் செல்ல செல்ல அவளின் அழுகை குறைந்துவிட சிந்தனை தெளிவாக மாறிவிட, “அவள் அப்படி சொன்னதுமே எனக்கு எதுக்கு அழுகை வரணும்..” என்றவள் தன்னுடைய மனதிடமே கேட்டாள்..
‘இன்னும் உனக்கு புரியலையா பிரியா.. நீ சந்தோஷை மனதார காதலிக்கிற..’ என்றவளின் மனம் உண்மையைச் சொல்ல அவளின் அழுகை நின்றது.. அதுவரை சந்தோஷை, ‘தன்னுடைய அத்தை மகனாக மட்டுமே..’ பார்த்திருந்த பிரியதர்ஷினியின் மனம் அன்றுதான் ஒன்று விஷயத்தை தெளிவாக உணர்ந்தது.. தன்னுடைய மனதில் காதலின் விதைகள் வேரூன்றி பலநாள் ஆனதை அன்றுதான் அதிர்வுடன் உணர்ந்தாள் பிரியதர்ஷினி..
இதுவரை அவளுடன் போட்டி போடா யாருமே இல்லாததால் அவள் தன்னுடைய காதலை உணரவே இல்லை.. ஆனால் இன்றோ தீபிகா அவளுக்கு போட்டியாக வந்துவிட, ‘தன்னுடைய கையில் இருக்கும் பொம்மையை யாரோ பறித்துவிட்டு சென்றது போல உணர்ந்ததால் வந்த அழுகை..’ என்றவளின் மனம் தெளிவாக அவளுக்கு உணர்த்தியது
“இதனால்தான் அவளின் பேச்சு தன்னை பாதிக்கிறதா..?” என்றவளின் அழுகை நின்றுவிட தெளிவாக யோசிக்க ஆரம்பித்த பிரியா, ‘சந்தோஷிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவன் வீம்பிற்கு வேற யாரையாவது காதலித்து கல்யாணம் பண்ணிக்கொள்வான்..’ என்று நினைத்தவள்,
‘அத்து சரியான வீம்பு பிடித்தவன்.. நம்ம எதை செய்ய வேண்டாம்னு என்று சொல்றமோ அவன் அதைதான் செய்வான்.. அவனோட மனம் தெரியாமல் நம்ம வாய்திறக்க கூடாது.. அதனால் என்னோட காதல் எனக்குள் இருக்கட்டும்..’ என்ற முடிவுடன் அந்த இடத்திலிருந்து கிளம்பினாள்..
பிரியாவைத் தேடிய சந்தோஷ், ‘வீட்டிற்கு போயிருப்பாளோ..?’ நேராக வீட்டிற்கு சென்றான்.. அவன் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கும் பொழுது வீட்டிற்குள் நுழைந்த சங்கமித்ரா, “அண்ணா நீ ஏன் கோவிலுக்கு வரவே இல்ல..” என்றவள் கேள்வி கேட்க, “முதலில் வழிவிட்டு நில்லுடி..” என்றவன் அவளைக் கடந்து வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்..
அவனின் வேகத்தைக் கண்ட சஞ்சனா, “அக்கா என்னவோ சரியில்ல அக்கா..” என்றவள் சொல்ல இருவரும் வேகமாக வீட்டின் உள்ளே நுழைய மூவரையும் பார்த்த சுமதி, “சந்தோஷ் எங்கே பிரியா..?” என்றவர் அவனிடம் சந்தேகமாகக் கேட்டார்.. அவரின் கேள்வியில் பெண்கள் இருவரும், ‘இன்னும் பிரியா வீட்டுக்கு வரலையா..?’ என்று அதிர்ந்து நின்றனர்..
பாட்டியின் முகம் பார்த்த சந்தோஷ், “என்ன பாட்டி சொல்றீங்க.. அவள் இன்னும் வீட்டுக்கு வரவில்லை..” என்றவனின் கவலை அதிகரிக்க, ‘எல்லாம் இந்த தீபிகாவால் வந்தது..’ என்றவனின் கோபம் முழுவதும் தீபியின் மீது திரும்பிட மனமோ தன்னவளைத் தேடியது..
‘தேனு எங்கே இருக்கிற...?’ என்ற கேள்வி மனதில் இருந்தவளிடம் கேட்க, ‘கோவிலில் இருந்து அழுதுட்டே போனாளே.. அவள் ஏதாவது தப்பான முடிவு..’ என்று நினைத்தவனின் மனம் படபடத்தது.. தன்னுடைய தேடலின் அர்த்தம் புரியாமல் சோர்வுடன் சோபாவில் அமர்ந்தான்..
அவனைப் பார்த்த சுமதி, “டேய் பிரியா எங்கே..?” என்றவர் தீவிரமாக விசாரிக்க கல்லு மாதிரி அமர்ந்திருந்த அண்ணனைப் பார்த்த சங்கமித்ரா, ‘அண்ணா இப்படி இருக்க மாட்டானே..?’ என்றவள் யோசனை செய்ய சஞ்சனாவோ, “அக்கா பிரியா எங்கே போயிருப்பா.. எனக்கு என்னவோ ரொம்ப பயமாக இருக்குது அக்கா..” என்றவள் அழுக ஆரம்பித்தாள்..
அவள் அழுவதைப் பார்த்தபடியே வீட்டின் உள்ளே நுழைந்த மோகனும், மணிகண்டனும், “சஞ்சனா இப்போ எதுக்கு நீ அழுகிற..” என்றவர் கேட்க, “தாத்தா..” என்றவள் முழுவதுமாக சொல்லி முடிக்க, “என்னடா பிரியா உங்களை விட்டுவிட்டு கோவிலில் இருந்து சொல்லாமல் கிளம்பி வந்துவிட்டாளா..?” என்ற பெரியவர்கள் நால்வருக்கும் அதிர்ச்சியாக இருந்தது..
பிரியா எங்கே சென்றாலும் தான் செல்லும் இடத்தை பற்றியும், அங்கிருந்து வீட்டுக்கு வரும் நேரத்தையும் சொல்லிவிட்டு செல்வாள்.. அப்படியிருக்கும் பொழுது இவர்கள் இருவரும் சொல்வதை அவர்களால் நம்ப முடியாமல் போனது.. அப்பொழுது கூட அமைதியாக அமர்ந்திருந்த பேரனின் முகம் பார்த்த மோகனின் புருவங்கள் உயர்ந்தது..
‘இவன் என்ன பித்து பிடித்தவனை போல உட்காந்திருக்கான்..’ என்றவர் யோசித்தவண்ணம், “டேய் சந்தோஷ் பிரியா எங்கே..?” என்றவர் அவனிடம் கேட்க, “நான் பிரியாவைப் பார்க்கல தாத்தா..” என்றவன் பொய் சொல்ல அவனின் முகத்தைக் கூர்ந்து கவனித்த சங்கமித்ரா..
“தாத்தா அண்ணா பொய் சொல்றான்.. நாங்க கோவிலில் இருந்து வெளியே வரும் பொழுது அண்ணா யாரையோ கூப்பிட வண்டியில் ஸ்பீடாக போனான்..” என்றவள் தாத்தாவிடம் சொல்ல, “ஏய் உனக்கு என்ன தெரியும்..?” என்றவன் இருந்த கோபத்தில் தங்கையிடம் எகிற தாத்தாவின் பின்னோடு பயத்துடன் மறந்து நின்றாள் சங்கமித்ரா..
அவனின் முகம் பார்த்த சுமதியோ, “ஏங்க அவன் எப்பொழுதும் பொய் சொல்ல மாட்டான்.. நீங்க இருவரும் போய் முதலில் பிரியாவைத் தேடுங்க.. அவளைக் காணவில்லை என்றால் விக்ரமும் மீராவும் துடிச்சு போயிருவாங்க..” என்றவர் கணவனை திசை திருப்ப நினைத்தார்..
அவன் கோபத்தைக் கண்ட மணிகண்டன், “சந்தோஷ் நீ எதுக்கு பொய் சொல்ற.. நீங்க எல்லோரும் கோவிலுக்கு போனீங்க.. ஆனால் வரும் பொழுது பிரியாவை மட்டும் காணவில்லை என்றால் நாங்க யாரை சந்தேகப்படுவது..?” என்றவர் அவனிடம் கேட்டார்..
“நீங்க யாரையும் சந்தேகப்பட வேண்டாம்..” என்ற சீதாவை மணிகண்டன் முறைத்தார்.. சந்தோஷ் யாருக்கும் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றிருக்க, “டேய் உண்மையை சொல்லுடா..” என்றவர் அவனை அடிக்க கையோங்கிட, “தாத்தா..” என்று கத்திக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தாள் பிரியா..
அவளின் குரல்கேட்டு திரும்பிய சந்தோஷின் பார்வை அவளின் உச்சி முதல் பாதம் வரையில் வருடிச் சென்றது.. அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்றதுதான் அவனின் மனதில் இருந்த பதட்டம் குறைய அவளின் பார்வை முழுவதும் அவனின் மீதே இருந்தது..
அவளின் குரல்கேட்டு திரும்பிய மோகன், “பிரியா எங்கேடா போயிருந்தா..?” என்றவர் அவளிடம் கேட்க, “பிரியா உனக்கு ஒன்னும் ஆகலையே..?” என்று பதட்டத்துடன் கேட்டனர் சீதாவும், சுமதியும்..! அதுவரை அழுதுக்கொண்டிருந்த சஞ்சனா, “பிரியா..” என்றவள் ஓடிவது அவளை கட்டியணைத்துக் கொண்டாள்..
“எனக்கு ஒன்றுமே இல்லை பாட்டி..” என்றவள் சொல்ல, “அப்புறம் எங்கே போயிருந்த பிரியா..” என்றவர்கள் எல்லோரும் அவளிடம் கேள்வி கேட்க, “அது வந்து தாத்தா.. சும்மா விளையாடி பார்க்கலாம்..” என்றவள் இழுக்க, சங்கமித்ராவின் பார்வை அவளின் மீது சந்தேகமாக படியா சஞ்சனா அவளை விட்டு விலகி நின்றாள்..,
சந்தோஷின் பார்வையோ, ‘இவள் என்ன சொல்ல போறா..?’ என்றவனின் அவளின் மீது பார்வையை செலுத்தினான்.. “நான்தான் சொல்லாமல் கோவிலில் இருந்து அண்ணா பார்க்கில் வந்து உட்கார்ந்திருந்தேன்.. நீங்க எல்லோரும் என்னை தேடுவீங்க..” என்றவள் திமிராக பதில் சொல்லி முடிக்கும் முன்பே, “நீ விளையாட இதுவா நேரம்..?” என்ற மோகனின் கரங்கள் அவளின் கன்னத்தை பதம் பார்த்தது..
அவரிடம் இருந்து அப்படியொரு செயலை எதிர்பார்க்காத அனைவரும் திகைத்து நிற்க, “என்னங்க பிள்ளையை இப்படி அடிச்சிடீங்க..?” என்றவர் அதிர்ச்சியுடன் கணவனிடம் கேள்வி கேட்க, “இவளை அடிக்காமல் என்ன பண்ண சொல்ற..?” என்றவர் சுமதியிடம் சண்டைக்கு போனார்..
பிரியதர்ஷினி அழுதபடியே செல்வதைப் பார்த்து சந்தோஷத்தில் நின்றிருந்த தீபிகாவின் அருகில் சென்ற மான்விழி, “ஏன் தீபி நீ இப்படி இருக்கிற..?” என்றவள் புரியாமல் கேட்டதும் இடது புருவம் உயர்த்தி அவளைக் கேள்வியாகப் பார்த்த தீபிகா, “நான் இப்படி இருப்பதில் உனக்கு என்ன பிரச்சனை..?” என்று எதிர்கேள்வி கேட்டாள்..
அவளின் கேள்வியில் மான்விழிக்கு கோபம் வர, “ஒருவர் கண்ணீர் விடுவதைப் பார்த்து சந்தோஷப்பட நீ என்ன மிருகமா..? அந்த அக்கா உன்னை என்ன பண்ணினாங்க.. எதுக்கு இப்போ அவங்களை அழுகவெச்ச..?” என்றவள் கேட்டதும் தீபியின் கோபம் அதிகரிக்க, “அது உனக்கு தேவை இல்லாத விஷயம் மானு..” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினாள்..
அவளின் முகத்தைப் பார்த்தவள், “ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணு.. உன்னிடம் எல்லாம் நான் பிரிண்ட்ஷிப் வெச்சிருக்கேன்..” என்றவள் சொல்ல அந்த வார்த்தைகள் தான் பின்நாளில் தன்மேல் அவள் சுமத்த போகும் பழிக்கு அஸ்திவாரம் என்று அறியாமல் நின்றிருந்தாள் மான்விழியைப் பார்த்தவள், “ஆமா நான் சுயநலக்காரிதான்..” என்றவள் நிற்காமல் கோவிலைவிட்டு வெளியே சென்றாள்..
தீபிகாவை முழுவதுமாக புரிந்து வைத்திருந்த மான்விழிக்கே அவளின் செயல் புதிதாக தெரிய, ‘இவளை என்ன செய்வது என்று தெரியல..’ என்று நினைத்தவளுக்கு பிரியதர்ஷினியின் நினைவுவர, ‘ஐயோ அந்த அக்காவிற்கு என்ன ஆச்சோ..?’ என்றவளும் கோவிலில் இருந்து வேகமாகக் கிளம்பினாள்..
தீபிகாவின் வார்த்தைகளில் காயப்பட்ட பிரியா வேகமாக ஓட அவளின் பின்னோடு வேகமாகச் சென்ற சந்தோஷ், “ஏய் பிரியா நில்லுடி..” என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்து வேகமாகச் சென்றான்.. அப்பொழுது கோவிலை விட்டு வெளியே வந்த சங்கமித்ரா பைக்கில் செல்லும் சந்தோஷைப் பார்த்து, “இவன் எதுக்கு இவ்வளவு வேகமாக போகிறான்..” என்று தனக்குதானே கேள்விகேட்டு கொண்டாள்..
“எனக்கு இங்க என்ன நடக்குது என்றே சுத்தமாக புரியல மித்ரா..” என்ற சஞ்சனா இருவரும் வேகமாக வீட்டை நோக்கி செல்ல வேகமாக ஓடிய பிரியதர்ஷினியின் ஒரு திருப்பத்தில் எந்தப்பக்கம் சென்றாள் என்று தெரியாமல் நின்ற சந்தோஷ், “ஏய் தேனு எங்கடி போன..” என்றவன் புலம்பியபடி வீட்டை நோக்கி சென்றான்..
அவளோ அங்கிருக்கும் அண்ணா பூங்காவின் உள்ளே சென்று ஒரு மரத்தின் பின்னாடி இருந்த பெஞ்சில் அமர்ந்தவளின் நினைவில் தீபியின் வார்த்தைகள் வந்து செல்ல, “என்னோட அத்துமேல் எனக்கு உரிமை இல்லையா..?” என்று நினைத்தவள் கதறியழுக ஆரம்பித்தாள்..
அதுவரை அழுகாத பிரியதர்ஷினி தன்னை மறந்து கதறியழுக தன்னுடைய கதறலுக்கு அர்த்தம் புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.. நேரம் செல்ல செல்ல அவளின் அழுகை குறைந்துவிட சிந்தனை தெளிவாக மாறிவிட, “அவள் அப்படி சொன்னதுமே எனக்கு எதுக்கு அழுகை வரணும்..” என்றவள் தன்னுடைய மனதிடமே கேட்டாள்..
‘இன்னும் உனக்கு புரியலையா பிரியா.. நீ சந்தோஷை மனதார காதலிக்கிற..’ என்றவளின் மனம் உண்மையைச் சொல்ல அவளின் அழுகை நின்றது.. அதுவரை சந்தோஷை, ‘தன்னுடைய அத்தை மகனாக மட்டுமே..’ பார்த்திருந்த பிரியதர்ஷினியின் மனம் அன்றுதான் ஒன்று விஷயத்தை தெளிவாக உணர்ந்தது.. தன்னுடைய மனதில் காதலின் விதைகள் வேரூன்றி பலநாள் ஆனதை அன்றுதான் அதிர்வுடன் உணர்ந்தாள் பிரியதர்ஷினி..
இதுவரை அவளுடன் போட்டி போடா யாருமே இல்லாததால் அவள் தன்னுடைய காதலை உணரவே இல்லை.. ஆனால் இன்றோ தீபிகா அவளுக்கு போட்டியாக வந்துவிட, ‘தன்னுடைய கையில் இருக்கும் பொம்மையை யாரோ பறித்துவிட்டு சென்றது போல உணர்ந்ததால் வந்த அழுகை..’ என்றவளின் மனம் தெளிவாக அவளுக்கு உணர்த்தியது
“இதனால்தான் அவளின் பேச்சு தன்னை பாதிக்கிறதா..?” என்றவளின் அழுகை நின்றுவிட தெளிவாக யோசிக்க ஆரம்பித்த பிரியா, ‘சந்தோஷிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவன் வீம்பிற்கு வேற யாரையாவது காதலித்து கல்யாணம் பண்ணிக்கொள்வான்..’ என்று நினைத்தவள்,
‘அத்து சரியான வீம்பு பிடித்தவன்.. நம்ம எதை செய்ய வேண்டாம்னு என்று சொல்றமோ அவன் அதைதான் செய்வான்.. அவனோட மனம் தெரியாமல் நம்ம வாய்திறக்க கூடாது.. அதனால் என்னோட காதல் எனக்குள் இருக்கட்டும்..’ என்ற முடிவுடன் அந்த இடத்திலிருந்து கிளம்பினாள்..
பிரியாவைத் தேடிய சந்தோஷ், ‘வீட்டிற்கு போயிருப்பாளோ..?’ நேராக வீட்டிற்கு சென்றான்.. அவன் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கும் பொழுது வீட்டிற்குள் நுழைந்த சங்கமித்ரா, “அண்ணா நீ ஏன் கோவிலுக்கு வரவே இல்ல..” என்றவள் கேள்வி கேட்க, “முதலில் வழிவிட்டு நில்லுடி..” என்றவன் அவளைக் கடந்து வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்..
அவனின் வேகத்தைக் கண்ட சஞ்சனா, “அக்கா என்னவோ சரியில்ல அக்கா..” என்றவள் சொல்ல இருவரும் வேகமாக வீட்டின் உள்ளே நுழைய மூவரையும் பார்த்த சுமதி, “சந்தோஷ் எங்கே பிரியா..?” என்றவர் அவனிடம் சந்தேகமாகக் கேட்டார்.. அவரின் கேள்வியில் பெண்கள் இருவரும், ‘இன்னும் பிரியா வீட்டுக்கு வரலையா..?’ என்று அதிர்ந்து நின்றனர்..
பாட்டியின் முகம் பார்த்த சந்தோஷ், “என்ன பாட்டி சொல்றீங்க.. அவள் இன்னும் வீட்டுக்கு வரவில்லை..” என்றவனின் கவலை அதிகரிக்க, ‘எல்லாம் இந்த தீபிகாவால் வந்தது..’ என்றவனின் கோபம் முழுவதும் தீபியின் மீது திரும்பிட மனமோ தன்னவளைத் தேடியது..
‘தேனு எங்கே இருக்கிற...?’ என்ற கேள்வி மனதில் இருந்தவளிடம் கேட்க, ‘கோவிலில் இருந்து அழுதுட்டே போனாளே.. அவள் ஏதாவது தப்பான முடிவு..’ என்று நினைத்தவனின் மனம் படபடத்தது.. தன்னுடைய தேடலின் அர்த்தம் புரியாமல் சோர்வுடன் சோபாவில் அமர்ந்தான்..
அவனைப் பார்த்த சுமதி, “டேய் பிரியா எங்கே..?” என்றவர் தீவிரமாக விசாரிக்க கல்லு மாதிரி அமர்ந்திருந்த அண்ணனைப் பார்த்த சங்கமித்ரா, ‘அண்ணா இப்படி இருக்க மாட்டானே..?’ என்றவள் யோசனை செய்ய சஞ்சனாவோ, “அக்கா பிரியா எங்கே போயிருப்பா.. எனக்கு என்னவோ ரொம்ப பயமாக இருக்குது அக்கா..” என்றவள் அழுக ஆரம்பித்தாள்..
அவள் அழுவதைப் பார்த்தபடியே வீட்டின் உள்ளே நுழைந்த மோகனும், மணிகண்டனும், “சஞ்சனா இப்போ எதுக்கு நீ அழுகிற..” என்றவர் கேட்க, “தாத்தா..” என்றவள் முழுவதுமாக சொல்லி முடிக்க, “என்னடா பிரியா உங்களை விட்டுவிட்டு கோவிலில் இருந்து சொல்லாமல் கிளம்பி வந்துவிட்டாளா..?” என்ற பெரியவர்கள் நால்வருக்கும் அதிர்ச்சியாக இருந்தது..
பிரியா எங்கே சென்றாலும் தான் செல்லும் இடத்தை பற்றியும், அங்கிருந்து வீட்டுக்கு வரும் நேரத்தையும் சொல்லிவிட்டு செல்வாள்.. அப்படியிருக்கும் பொழுது இவர்கள் இருவரும் சொல்வதை அவர்களால் நம்ப முடியாமல் போனது.. அப்பொழுது கூட அமைதியாக அமர்ந்திருந்த பேரனின் முகம் பார்த்த மோகனின் புருவங்கள் உயர்ந்தது..
‘இவன் என்ன பித்து பிடித்தவனை போல உட்காந்திருக்கான்..’ என்றவர் யோசித்தவண்ணம், “டேய் சந்தோஷ் பிரியா எங்கே..?” என்றவர் அவனிடம் கேட்க, “நான் பிரியாவைப் பார்க்கல தாத்தா..” என்றவன் பொய் சொல்ல அவனின் முகத்தைக் கூர்ந்து கவனித்த சங்கமித்ரா..
“தாத்தா அண்ணா பொய் சொல்றான்.. நாங்க கோவிலில் இருந்து வெளியே வரும் பொழுது அண்ணா யாரையோ கூப்பிட வண்டியில் ஸ்பீடாக போனான்..” என்றவள் தாத்தாவிடம் சொல்ல, “ஏய் உனக்கு என்ன தெரியும்..?” என்றவன் இருந்த கோபத்தில் தங்கையிடம் எகிற தாத்தாவின் பின்னோடு பயத்துடன் மறந்து நின்றாள் சங்கமித்ரா..
அவனின் முகம் பார்த்த சுமதியோ, “ஏங்க அவன் எப்பொழுதும் பொய் சொல்ல மாட்டான்.. நீங்க இருவரும் போய் முதலில் பிரியாவைத் தேடுங்க.. அவளைக் காணவில்லை என்றால் விக்ரமும் மீராவும் துடிச்சு போயிருவாங்க..” என்றவர் கணவனை திசை திருப்ப நினைத்தார்..
அவன் கோபத்தைக் கண்ட மணிகண்டன், “சந்தோஷ் நீ எதுக்கு பொய் சொல்ற.. நீங்க எல்லோரும் கோவிலுக்கு போனீங்க.. ஆனால் வரும் பொழுது பிரியாவை மட்டும் காணவில்லை என்றால் நாங்க யாரை சந்தேகப்படுவது..?” என்றவர் அவனிடம் கேட்டார்..
“நீங்க யாரையும் சந்தேகப்பட வேண்டாம்..” என்ற சீதாவை மணிகண்டன் முறைத்தார்.. சந்தோஷ் யாருக்கும் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றிருக்க, “டேய் உண்மையை சொல்லுடா..” என்றவர் அவனை அடிக்க கையோங்கிட, “தாத்தா..” என்று கத்திக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தாள் பிரியா..
அவளின் குரல்கேட்டு திரும்பிய சந்தோஷின் பார்வை அவளின் உச்சி முதல் பாதம் வரையில் வருடிச் சென்றது.. அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்றதுதான் அவனின் மனதில் இருந்த பதட்டம் குறைய அவளின் பார்வை முழுவதும் அவனின் மீதே இருந்தது..
அவளின் குரல்கேட்டு திரும்பிய மோகன், “பிரியா எங்கேடா போயிருந்தா..?” என்றவர் அவளிடம் கேட்க, “பிரியா உனக்கு ஒன்னும் ஆகலையே..?” என்று பதட்டத்துடன் கேட்டனர் சீதாவும், சுமதியும்..! அதுவரை அழுதுக்கொண்டிருந்த சஞ்சனா, “பிரியா..” என்றவள் ஓடிவது அவளை கட்டியணைத்துக் கொண்டாள்..
“எனக்கு ஒன்றுமே இல்லை பாட்டி..” என்றவள் சொல்ல, “அப்புறம் எங்கே போயிருந்த பிரியா..” என்றவர்கள் எல்லோரும் அவளிடம் கேள்வி கேட்க, “அது வந்து தாத்தா.. சும்மா விளையாடி பார்க்கலாம்..” என்றவள் இழுக்க, சங்கமித்ராவின் பார்வை அவளின் மீது சந்தேகமாக படியா சஞ்சனா அவளை விட்டு விலகி நின்றாள்..,
சந்தோஷின் பார்வையோ, ‘இவள் என்ன சொல்ல போறா..?’ என்றவனின் அவளின் மீது பார்வையை செலுத்தினான்.. “நான்தான் சொல்லாமல் கோவிலில் இருந்து அண்ணா பார்க்கில் வந்து உட்கார்ந்திருந்தேன்.. நீங்க எல்லோரும் என்னை தேடுவீங்க..” என்றவள் திமிராக பதில் சொல்லி முடிக்கும் முன்பே, “நீ விளையாட இதுவா நேரம்..?” என்ற மோகனின் கரங்கள் அவளின் கன்னத்தை பதம் பார்த்தது..
அவரிடம் இருந்து அப்படியொரு செயலை எதிர்பார்க்காத அனைவரும் திகைத்து நிற்க, “என்னங்க பிள்ளையை இப்படி அடிச்சிடீங்க..?” என்றவர் அதிர்ச்சியுடன் கணவனிடம் கேள்வி கேட்க, “இவளை அடிக்காமல் என்ன பண்ண சொல்ற..?” என்றவர் சுமதியிடம் சண்டைக்கு போனார்..