• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then Sinthum Poovanam! - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 13

தன்னுடைய மனக்கயத்தை யாரிடமும் சொல்லாத பிரியா எப்பொழுதும் போல இயல்பாக இருப்பது போலவே தன்னை மற்றவர்களிடம் காட்டுகொண்டவள் அடுத்தடுத்த நாளில் ‘தன்னுடைய மேல் படிப்பிற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ..?’ அதை எல்லாம் சரியாக செய்ய ஆரம்பித்தாள்..

தனியறையில் முடங்கினால் தன்னுடைய மனது தேவை இல்லாத விஷயங்களை யோசிக்கும் என்பதால் நூலகம் சென்று படிப்பிற்கு தேவையான புத்தகங்களை எடுத்து வந்து குறிப்பெடுக்க ஆரம்பித்தவளின் நடவடிக்கை எல்லாம் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது..

காலையில் அவள் வீட்டைவிட்டு கிளம்பும் பொழுது சந்தோஷ் அல்லது சங்கமித்ராவை பார்க்க நேர்ந்தாலும் கூட தன்னுடைய மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அவர்களை விட்டு விலகி நடப்பாள்.. ஆனால் அவளின் மனம் முழுவதும் சந்தோஷ் மீதும் சங்கமித்ராவின் மீதுமே இருக்கும்..

அதுவும் சங்கமித்ரா அவளின் உயிர்தோழி.. அவளிடம் இதுநாள்வரை பிரியா பேசாமல் இருந்தே இல்லை என்று சொல்லலாம்.. ஆனால் சில காயங்களுக்கு மௌனம் என்ற மருந்து மிகவும் அவசியம் என்பதாலோ என்னவோ இப்பொழுது எல்லாம் அவர்களிடம் பேசுவதே இல்லை.. அவள் பேசாமல் மெளனமாக இருக்க மூன்று காரணங்கள் இருக்கிறது..

முதலில் இந்த விஷயம் சந்தோஷ், சங்கமித்ரா இருவரில் யாருக்கு தெரிந்தாலும் பிரச்சனை பெரியதாகிவிடும்.. அடுத்து பிருந்தாவின் மனம் கஷ்டப்படும்.. ‘தன்னுடைய மனதில் வந்த காதலை சந்தோஷிற்கு தெரிந்தால் அவன் தன்னை நிராகரித்துவான்..’ என்று இவளே நினைத்துக்கொண்டாள்.. இந்த மூன்று காரணங்களுக்காகவே மெளனமாக இருக்க கற்றுகொண்டாள்..

அவளின் மௌனம் சந்தோஷை எந்த அளவிற்கு மனத்தால் பாதிக்க படுவான் என்றோ சங்கமித்ராவிடம் தான் பேசாமல் இருப்பதால் அவளின் மனம் எந்தளவிற்கு வருந்தும் என்று உணராமல் இருந்தாள்..

காலையில் கிளம்பியதும் முதலில் கோவிலுக்கு போய்விட்டு அப்படியே நூலகம் போவாள்.. அங்கே போரடித்தால் பூங்கா போய்விட்டு மதியான நேரம் தங்களின் கம்பெனிக்கு சென்றுவிடுவாள்.. அங்கே யாராவது தன்னிடம் விளக்கம் கேட்டால், ‘இப்போவே வேலைகளின் நுணுக்கத்தை கற்றுக்கொள்கிறேன்..” என்று பதில் கொடுப்பத்தோடு மட்டும் நிறுத்தாமல் தன்னிடம் ஒப்படைக்கும் வேலைகளை சரியாக செய்து பெரியவர்களிடம் பாராட்டும் வாங்கிவிடுவாள்..

அவள் வீட்டிற்கு வருவதைக் குறைத்து கொண்டே வருவதைக் கவனித்த சந்தோஷ், ‘யாரோ என்னவோ சொன்னாங்க என்று இவள் ஏன் இப்படி பண்ற..’ என்றவனின் மனம் கொதிக்க, ‘அவளோட மனம் காயத்தை ஆற்றும் பதில் உன்னிடம் தான் இருக்கு.. நீ மெளனமாக இருக்கும் வரையில் அவளும் உன்னை விட்டு ஒதுங்கிதான் இருப்பாள்.. அதே போல அவளின் காயப்பட்ட மனமும் இந்த மாதிரி எல்லாம் யோசிக்கும்.. அதை முதலில் நீ புரிந்துக்கொள்..’ என்றவனின் மனம் அவனையே திட்டியது..

‘எந்த நேரத்தில் யாருக்கு என்ன பதில் கொடுக்கணும் என்று எனக்கு நல்லாவே தெரியும்..’ என்றவன் சொல்ல. ‘உனக்கு என்ன தெரியும்.. அவள் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறாள் அது உனக்கு தெரியுமா..?’ என்றவனின் மனம் அவனிடம் கேள்வி கேட்க மௌனம் சாதித்தான் சந்தோஷ்..

அவர்களின் மற்றொரு கிளைக்கு சென்று வேலைகளை கற்றுகொள்ள ஆரம்பித்தவனும் தொழிலில் தன்னுடைய கவனத்தை திருப்பிவிட அவர்களின் பொழுது நன்றாகவே சென்றது.. இவர்களின் மூவரின் நடவடிக்கையும் கவனித்த பெரியவர்கள் அவர்களிடம் எதையுமே கேட்கவில்லை..

இவர்களின் சண்டையில் அதிகம் பாதிக்கபட்டது என்னவோ சங்கமித்ராதான்.. ‘நான் என்ன தப்பு பண்ணினேன்..? என்னோட அவள் ஏன் பேசவே மாட்டேன்ற.. என்னை கண்டாலே ஒதுக்கி போற..’ என்று நினைத்தவளுக்கு மனம் கனத்து போனது..

வீட்டில் முதல் போல கலகலப்பு யாரின் முகத்திலும் இல்லை.. முதலில் சந்தோஷ், பிரியா சங்கமித்ரா இவர்கள் மூவரின் முகத்தில் புன்னகை என்பது பெயருக்கு மட்டுமே முகத்தில் இருந்தது..

தன்னுடைய உயிர் தோழி பிரியா பேசாமல் இருப்பதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் மித்ரா கூட இப்பொழுது எல்லாம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்க பழகிக்கொண்டாள்..

இதையெல்லாம் பார்த்த சஞ்சனா, “இவங்க மூவரும் முதல் மாதிரியே இல்ல..” என்று புலம்ப மதுபாலா அவளின் கருத்தை ஆமோதித்தாள்..

“பிரியா அக்கா இப்போ எல்லாம் வீட்டில் இருப்பதே இல்லை..” என்று மதுபாலா சொல்ல, “ம்ம் அன்றைக்கு பிறகுபிரியாக்கா வீடுக்கு வருவதே இல்ல..” என்று சஞ்சனா சொல்ல அதில் கடுப்பான சஞ்சீவ், “அவங்க வீட்டில் இருந்தால் தானே இங்கே வருவாங்க..” என்றான்..

“ம்ம் நீ சொல்றதும் சரிதான் சஞ்சீவ்..” என்றவர்கள் மூவரும் பேசிகொண்டிருக்க என்றும் இல்லாத திருநாளாக அறையைவிட்டு வெளியே சங்கமித்ராவைப் பார்த்த சஞ்சீவ், “அக்கா நீ எங்கே கிளம்பிட்ட..” என்றவன் சந்தேகமாக புருவம் உயர்த்த, “காலேஜ் போய் அப்ளிகேஷன் வாங்கிட்டு வரேன் சஞ்சீவ்..” என்றவள் சாதாரணமாகக் கூறினாள்..

மூவரும் அவளைக் கேள்வியாக பார்க்க, “நானும் லேடீஸ் காலேஜ் சேர போகிறேன்..” என்றவள் பதில் சொல்ல, “என்னக்கா சொல்ற..” என்று மூவரும் அதிர, “அவள் ஏன் இப்படி பண்ற என்ற காரணம் தெரியல.. அவளுடம் பேசாமல் இருக்க என்னால முடியாது எனக்கு பைத்தியமே பிடித்துவிடும்.. அதுதான் நான் இந்த முடிவிற்கு வந்தேன்..” என்றவள் மெல்லிய குரலில் கூறினாள்..

“சூப்பர் அக்கா.. நீங்க மூவரும் இப்படி இருப்பதைப் பார்த்து நாங்க மூவரும் வருத்தத்தில் இருந்தோம்.. இனிமேல் அப்படி இருக்காது இல்ல.. நீங்க மூவரும் எப்பொழுதும் போல பேசிக்க போறீங்க..” என்ற மதுபாலா சந்தோசத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க, “எனக்கும் ரொம்ப சந்தோசமாக இருக்கு அக்கா..” என்றான் சஞ்சீவ்.. சஞ்சனவோ மித்ராவின் அழுத்தமாக முத்தமிட்டு, “என்னோட ஸ்வீட் அக்கா..” என்று கொஞ்சினாள்..

அதன்பிறகு காலேஜ் சென்று அப்ளிகேஷன் வாங்கிட்டு வீட்டின் உள்ளே நுழைந்த சங்கமித்ரா சோபாவில் அமர்ந்து அப்ளிகேஷனை எழுத ஆரம்பிக்க பேனா எடுத்தவள் கண்கள் தானாக கலங்கிட அப்பொழுது ஆபீசில் இருந்து வீட்டிற்கு வந்த சந்தோஷ் தங்கை சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவளின் அருகில் சென்று அமர்ந்தான்..

“ஐயோ எல்லாம் போச்சே.. என்னோட கனவு ஆசை எல்லாமே போச்சே..” என்று புலம்பியவண்ணம் அப்பிகேஷனை எழுதும் தங்கையைப் பார்த்த சந்தோஷிற்கு சிரிப்பு வர, “அதை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு எழுதற..” என்றவன் சிரித்துக்கொண்டே கேட்க அப்பொழுது அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் செந்தணலாகவே மாறிவிட்டது..

“எல்லாம் உன்னாலதான்.. அன்னைக்கு கோவிலில் என்னவோ நடந்திருக்கு..” என்றவள் சொன்னதுமே அவனின் முகம் மாறிப்போனது.. அவன் அவளையே இமைக்காமல் பார்க்க, “என்னிடம் சொல்லு அண்ணா அன்னைக்கு கோவிலில் என்ன நடந்தது..?” என்றவள் தீவிரமாக கேட்க சந்தோஷ் தெரிந்தே மௌனமாக இருந்தான்..

அவனின் மௌனம் அவளின் கோபத்தை கிளப்பிவிட, “எதுவும் நடக்காமல் பிரியா இப்படி இருக்க மாட்டா.. அவளைப்பற்றி உன்னைவிட எனக்கு நல்லாவே தெரியும்.. கடைசியில் என்னை டீலில் இழுத்து விட்டுட்டீங்க..” என்றவள் கோபத்தில் அவனை அடித்தாள்..

“பிரியா நம்ம கூட காலேஜ் வருவாள்.. அதற்கு நான் பொறுப்பு..” என்றவன் அவளின் கையில் அப்ளிகேஷனை வாங்கிவிட்டு வேறொரு காலேஜ் அப்ளிகேஷனை கொடுத்தான்..

அதை வாங்கிப் பார்த்தவள் கேள்வியாக புருவம் உயர்த்தி அண்ணனை பார்க்க, “என்னை நம்பு..” என்றவன் சொன்ன ஒரு வார்த்தைக்காக அந்த அப்ளிகேஷனை எழுதி அண்ணனின் கையில் கொடுத்தவள், “இது பிரியாவிற்காக..” என்றவள் அந்த அப்ளிகேஷனையும் எழுதினாள்..

இதையெல்லாம் கண்டும் காணாதது போல தன்னுடைய வேலையில் ஈடுப்பட்டனர் பெரியவர்கள்.. நாட்கள் விரைந்து சென்றது..

அன்று காலையில் வேகமாக வெளியே கிளம்பிய பிரியாவை தேடி வந்து வழிமறித்து நின்ற சந்தோஷைப் புரியாத பார்வைப் பார்த்த பிரியா, “என்ன விஷயம் சொல்லுங்க..” என்று மட்டும் கூறினாளே தவிர, ‘அத்து’ என்றவள் உரிமையுடன் அழைக்கவே இல்லை..

அதைக் கவனித்த சந்தோஷ், “ராச்சசி..” என்று முணுமுணுத்துவிட்டு அவளின் பக்கம் திரும்பி வேண்டுமென்றே, “நீ உன்னோட முடிவை மாற்றவே வேண்டாம் பிரியா.. நீ ஏன் இப்படி பண்ற என்று எனக்கு இப்போ வரை காரணம் புரியல..” என்றவன் புலம்பிட அவனின் முகத்தையே இமைக்காமல் பார்த்த பிரியா..

“நானும் என்னோட தங்கையும் ஒரே காலேஜ் சேர போகிறோம்..” என்றவன் தன்னுடைய முடிவை சொல்லிவிட்டு வந்த வழியில் திரும்பி நடக்க, அவன் செல்லும் திசையைப் பார்த்த பிரியாவோ, ‘நீயும் மாறிவிட்டாய் இல்ல அத்து..’ என்று மனதினுள் அவள் கேள்வி கேட்டுகொண்டிருந்தாள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
தன்னுடைய ஸ்கூட்டியில் யாரோ ஏறுவது போல தோன்றவே திரும்பிப் பார்த்தாள்.. சங்கமித்ராவைப் பார்த்தும் அவளின் முகம் மலர்ந்துவிட, “மிது..” என்று பாசத்துடன் அழைத்தாள்..

“ஆமா கடைசியில் நீ ஜெய்ச்சிட்ட இல்ல...” என்றவள் இரண்டு முகத்தையும் தூக்கி வைத்துகொண்டு அவள் பாவமாகச் சொல்ல வாய்விட்டுச் சிரித்த பிரியா, “அது எப்படி நீயும்தான் வின் பண்ணிட்ட..” என்றவள், “நானும் அந்த காலேஜில் அதே கோர்ஸ்க்கு அப்ளே பண்ணி இருக்கேன் வா போலாம்..” என்றவளை அழைத்துசென்றாள் பிரியா..

அவள் அப்படி சொன்னதும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தவள், “அப்புறம் எதுக்குடி எங்களை எல்லாம் இந்த அளவிற்கு எங்களை எல்லாம் பழிவாங்கின..” என்றவள் கடுப்புடன் கேட்க அவளுக்கு பதில் சொல்லாத பிரியாவோ சீரான வேகத்தில் ஸ்கூட்டியை செலுத்தியவள் கேம்பஸ் உள்ளே சென்று ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறங்கினாள்..

சங்கமித்ரா அவளைக் கேள்வியாக பார்க்க, “இல்ல மது அங்கே என்ன நடந்தது என்று உனக்கு தெரியாது..” என்றவள் அன்றைய நாளின் தாக்கத்தில் சொல்ல, “ஆமா அன்னைக்கு நீ வீட்டுக்கு போய்விட்டதாக மானு சொன்னாள்.. அவள் ஏதாவது உன்னிடம் சொன்னாளா..?” என்று கேட்டாள்..

“இல்ல மிது அன்னைக்கு நடந்த விஷயத்திற்கும் மான்விழிக்கும் எந்த சம்மதமும் இல்ல..” என்றவள் அன்று கோவிலில் நடந்த விஷயத்தை அவளிடம் சொல்ல சங்கமித்ராவின் கோபம் அதிகரிக்க, ‘இவளுக்கு உரிமை இல்லை என்று சொல்ல அவளுக்கு என்ன உரிமை இருக்கு..?’ என்று கோபத்தில் பல்லைக் கடித்தாள்..

‘அந்த வார்த்தைகள் அவளை எந்தளவுக்கு காயப்படுத்தி இருக்கும்’ என்று உணர்ந்த சங்கமித்ரா “ஸாரிடி நான்தான் உன்னை புரிஞ்சிக்கவே இல்ல..” என்றவள் தொடர்ந்து, “அண்ணாவிற்கு இந்த விஷயம் தெரியாது இல்ல..” என்று சந்தேகமாகக் கேட்டாள் சங்கமித்ரா..

“இந்த விஷயம் எதுவுமே அத்துக்கு தெரியாது.. அத்துகூட பேசும் பொழுது நானே என்னை மீறி உண்மையைச் சொல்லிவிடுவேனோ என்ற பயத்தில்தான் நான் யாரிடமும் பேசுவதே இல்ல..” என்றவள் தொடர்ந்து,

“என்னோட மனசில் என்ன இருக்கு எனு என்னைவிட அவளுக்கு நல்ல தெரிந்துவிட்டது மிது.. அத்துவிடம் நான் ஏதோ சொல்லி அவர் வீம்பிற்கு ஏதாவது செய்து வைத்தால் என்னால் அதை தாங்கிக்க முடியாது..” என்றவள் கண்ணீரோடு சொல்ல அவளின் கண்ணீர் மித்ராவிற்கு வேறு விஷயங்களை உணர்த்தியது..

‘அப்போ அண்ணாவை பிரியா உயிருக்கு உயிராக காதலிக்கிறாள்.. இல்லாவிட்டால் இவள் எதற்காக இவ்வாறு மனதிற்குள் வைத்து மருக வேண்டும்..?’ என்று நினைத்தவளின் கோபம் எல்லாமே தீபியின் மீது திரும்பியது..

அவள் மீது மித்ரா வைத்திருந்த கோபம் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிட, “இதுக்கு எல்லாம் என்னோட டார்லிங் அழுவாளா.. வா வா நம்ம போய் அட்மிசன் போட்டுவிட்டு வருவோம்..’ என்றவளை தேற்றியவண்ணம் அழைத்து சென்றாள் சங்கமித்ரா..

கடைசியில் மூவரும் ஒரே காலேஜில் ஒரே குரூப்பில் சேர்ந்தனர்.. அதில் அதிகமாக சந்தோசப்பட்டது மதுபாலா, சஞ்சனா, சஞ்சீவ் மூவரும் தான்.. பிரியா ஊரில் இருந்து வந்த நாளில் இருந்தே அவளின் மாற்றத்தை உணர்ந்த பிருந்தாவின் மனதில் மட்டும் சந்தேகம் முளைவிட்டது.. அவர்கள் எப்பொழுது போல சந்தோஷமாக பேசி சிரிப்பதைப் பார்த்த பெரியவர்களில் மனம் நிம்மதியடைந்தது..

சென்னையில் பெரிய ஸ்கூலில் மதுபாலா, சஞ்சனா, சஞ்சீவ் மூவரை சேர்த்துவிட்டனர்.. அவர்களும் அந்த ஸ்கூல் லைப்பில் பிடித்துவிட்டது.. அவர்களின் இடையே பழைய கலகலப்பு திரும்பிவிட வீடே கதிகலங்க ஆரம்பித்தது..

காலேஜில் ராகிங் கலட்ட முடிந்ததும் கிளாசிற்கு சென்றனர்.. சந்தோஷ் அருகில் அமர்ந்திருந்த அசோக், “ஹாய் என்னோட நேம் அசோக்..” என்றவன் தன்னை அறிமுகம் செய்துகொள்ள, “என்னோட நேம் சந்தோஷ்..” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான்..

“சந்தோஷ் இங்கே வா..” என்றழைத்த மித்ராவின் குரல்கேட்டு திரும்பிய அசோக், “நீங்க காலேஜில் இப்போதானே சேர்த்தீங்க.. இவங்க எப்படி உங்களோட பெயரை சரியாக..” என்றவன் சிந்திக்க, “அவள் என்னோட தங்கை மித்ரா..” என்றவன் சாதாரணமாக கூறினான்..

“தங்கை எப்படி ஒரே வகுப்பில்..” என்றவன் புரியாமல் கேட்டதும் பொறுமை இழந்த சந்தோஷ், “நாங்க இருவரும் டிவிங்க்ஸ்..” என்றவன் எழுந்து அவர்களின் அருகில் சென்றான்.. சிறிதுநேரம் பேசிட்டு மீண்டும் தன்னருகே வந்தவனிடம் அவன் கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்தான்..

“ஸாரி அசோக்.. நாங்க எப்பொழுது இப்படித்தான்.. நீ இதையெல்லாம் பெருசாக நினைக்காதே..” என்றவன் தொடர்ந்து, “இது என்னோட அத்தைமகள் பிரியா..” என்றவன் அவளையும் அடையாளம் காட்ட, “அவங்களை கல்யாணம் பண்ணும் ஐடியா எனக்கு இல்லையே சந்தோஷ்..” என்றவன் இயல்புடன் கேலி பேசினான்..

“ஏய் நீ காதலிக்கிறேன் என்று சொன்னாலும் அவள் உன்னை ஏற்றுகொள்ள மாட்டாள்..” என்றவன் கூலாகச் சொல்ல சந்தொஷை புருவம் உயர்த்தி பார்த்த அசோக், “அப்போ உங்களோட மனசில் அவங்க இருக்காங்க..” என்றவன் கேட்டதும் அவன் தன்னை கண்டுபிடித்து விட்டதை உணர்ந்து வாய்விட்டுச் சிரித்தான் சந்தோஷ்...

அதன்பிறகு ஜூனியர் வெல்கம் பார்ட்டி என்று நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு நாட்கள் வாரங்களாக மாறி மாதங்களாக கடந்து சென்றது..

மூவரும் ஒரே கிளாஸ் என்பதால் புதிதாக அவர்களுடம் பழகிய பிரிண்ட்ஸ் எல்லோரும் அவர்களில் ஒருவராக மாற முடியாமல் ரொம்பவே திண்டாடினர்..

அன்று காலையில் எப்பொழுதும் போல கேண்டீன் போன மூவரும், “ஏய் பிரியா இன்னைக்கு உனக்கு கிளாஸில் நடத்திய சப்ஜெக்ட் புரிந்ததா..?” என்று சங்கமித்ரா கேட்டாள்..

“ம்ம் இந்த மேம் ரொம்ப நல்ல கிளாஸ் எடுக்கறாங்க..” என்று பிரியா சொல்ல மூவருக்கும் சேர்ந்து சமோசா டீ வாங்கி வந்த சந்தோஷ், “நான் கிளாஸ் கவனிக்கவே இல்ல..” என்றவன் கூலாகச் சொல்ல, “அப்புறம் எப்படிடா கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொன்ன..?” என்று சங்கமித்ரா அதிர்ச்சியுடன் கேட்டாள்..

“அதை ஏண்டி என்னிடம் கேட்கிற..” என்றவனை அவள் புரியாத பார்வை பார்க்க, “இங்கே என்ன லுக்கு.. உன்னோட பக்கத்தில் இருக்காளே அவளிடம் விடு உன்னோட லுக்கை..” என்றவன் சமோசாவை சாப்பிட பிரியாவின் பக்கம் பார்வையைத் திருப்பினாள் சங்கமித்ரா..

எனக்கும் இதற்கும் சம்மதமே இல்ல..’ என்ற லெவலில் அவள் டீ குடிக்க, “இவன் என்ன சொல்றான்...” என்றவள் புரியாமல் கேட்க, “அதை அவரிடமே கேளுடி..” என்றவள் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்த இருவரையும் கொலைவெறியுடன் பார்த்த சங்கமித்ரா,

“நீங்க இருவரும் பேசுங்க என்னவோ பண்ணுங்க.. பட் என்னோட கேள்விக்கு இப்போ பதில் தெரியணும்..” என்றவள் அவர்களை மிரட்டினாள்..

அவளின் மிரட்டலில் வாய்விட்டு சிரித்த சந்தோஷ் முகம் பார்த்த பிரியா, ‘வேண்டுமென்றே என்னிடம் பேசாமல் இருக்கிறான்..’ என்று மனதில் அவனை வறுத்தெடுக்க, ‘நீ என்னிடம் பேசாமல் இருந்து பழி வாங்கியது எல்லாம் மறந்துவிட்டதா..?’ என்றவன் இடது புருவம் உயர்த்தி அவளைப் பார்க்க தலையைக் குனிந்து கொண்டாள் பிரியா..

அவள் பேசாமல் இருந்து பழிவாங்கிய நாளில் இருந்தே சந்தோஷ் அவளிடம் பேசுவதே இல்லை.. ஆனால் தேவை இல்லாத சேட்டைகள் ஆயிரம் செய்வான்.. அவனோட திருவிளையாடலில் ஒன்று இப்போ பிரியா சொல்லுவா கேளுங்க..

அவளின் மிரட்டலில் சிரித்த சந்தோஷ் முகம் பார்த்த மித்ரா, “யாராவது எனக்கு பதில் சொல்லுங்க..” என்றவள் தலையைபிடித்து அமர்ந்துவிட, “என்னோட நோட்டில் நான் எழுதிய ரன்னிங் கமெண்ட்ஸ் பார்த்து பதில் சொல்லிட்டாரு..” என்றவள் மெல்லிய குரலில் கூறினாள்..

அவள் சொல்லும் அழகை கன்னத்தில் கைவைத்த வண்ணம் ரசித்த சந்தோஷ் முகம் பார்த்த சங்கமித்ரா, “நீங்க இருவரும் ரொம்ப நல்லவங்க.. நாங்கதான் பைத்தியம் இல்ல..” என்றவள் கோபம் தலைகேறிய வண்ணம் கேட்க, இவர்கள் மூவரும் பேசுவதை அருகில் இருந்த டேபிளில் இருந்து கேட்ட அசோக், ‘ரொம்ப ஜாலியாக இருக்காங்க..’ என்று எதார்த்தமாக நினைத்தான்..

அவனின் பார்வை முழுவதும் மித்ராவின் மீதே இருந்தது.. யார் என்ன சொன்னாலும் எதற்கும் கவலையேபடாமல் எந்தநேரமும் சிரித்துக்கொண்டே, சந்தோஷமாக இருக்கும் அவளின் துருதுருப்பு அவனின் மனதில் இடம்பிடித்தது..

அவர்களின் ஒற்றுமை அவனின் மனதினையும் வென்றது.. அதே மாதிரி சந்தோஷ் அணுகுமுறை.. அசோக்கிடம் அவன் எப்பொழுதும் போல பேசினாலும், சிரித்தாலும் ஒரு எல்லை தாண்டி அவனும் செல்வதில்லை.. மற்றவர்களையும் அந்த எல்லைக்குள் அனுமதிக்காத அந்த குணம் அவனை ரொம்பவே கவர்ந்தது..

தன் வீட்டு பெண்களுக்கு அவன் கொடுக்கும் பாதுகாப்பை அவனின் செயல்கள் மூலம் அவனால் உணர முடிந்தது.. தன்னுடைய வீட்டில் கூட அவன் பார்க்காத ஒரு ஒற்றுமையை அவர்களுக்குள் கண்டவன், ‘சீக்கிரமே இவர்களில் ஒருவராக மாறிவிட வேண்டும்..’ என்று நினைத்துக்கொண்டான்..

அவளின் கேள்விக்கு இவருமே பதில் சொல்லாமல் இருக்க காலேஜ் பெல் மட்டும் அடித்தது.. இப்படியே நாட்கள் ரொம்ப அழகாக அதே அளவு ஆர்ப்பாட்டத்துடன் நகர்ந்தது..

காலேஜ் கேம்பஸ், லைப்ரரி, கிளாஸ் ரூம், கேண்டீன் என்று எல்லா இடத்திலும் இவர்கள் மூவரும் ஒற்றுமையாக இருப்பது எல்லோரின் மனதிலும் சிறிய பொறாமையைக் கூட உருவாக்கியது..

காலேஜில் கல்சுரல்ஸ் போட்டிகள், தேர்வுகள் என்று ஒரு வருடம் சூப்பராக சென்று இரண்டாம் ஆண்டில் மூவரும் அடியெடுத்து வைத்தனர்.. அவர்களின் வாழ்க்கையின் பிரச்சனைகளும் அங்கிருந்து ஆரம்பித்தது..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top