அத்தியாயம் – 13
தன்னுடைய மனக்கயத்தை யாரிடமும் சொல்லாத பிரியா எப்பொழுதும் போல இயல்பாக இருப்பது போலவே தன்னை மற்றவர்களிடம் காட்டுகொண்டவள் அடுத்தடுத்த நாளில் ‘தன்னுடைய மேல் படிப்பிற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ..?’ அதை எல்லாம் சரியாக செய்ய ஆரம்பித்தாள்..
தனியறையில் முடங்கினால் தன்னுடைய மனது தேவை இல்லாத விஷயங்களை யோசிக்கும் என்பதால் நூலகம் சென்று படிப்பிற்கு தேவையான புத்தகங்களை எடுத்து வந்து குறிப்பெடுக்க ஆரம்பித்தவளின் நடவடிக்கை எல்லாம் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது..
காலையில் அவள் வீட்டைவிட்டு கிளம்பும் பொழுது சந்தோஷ் அல்லது சங்கமித்ராவை பார்க்க நேர்ந்தாலும் கூட தன்னுடைய மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அவர்களை விட்டு விலகி நடப்பாள்.. ஆனால் அவளின் மனம் முழுவதும் சந்தோஷ் மீதும் சங்கமித்ராவின் மீதுமே இருக்கும்..
அதுவும் சங்கமித்ரா அவளின் உயிர்தோழி.. அவளிடம் இதுநாள்வரை பிரியா பேசாமல் இருந்தே இல்லை என்று சொல்லலாம்.. ஆனால் சில காயங்களுக்கு மௌனம் என்ற மருந்து மிகவும் அவசியம் என்பதாலோ என்னவோ இப்பொழுது எல்லாம் அவர்களிடம் பேசுவதே இல்லை.. அவள் பேசாமல் மெளனமாக இருக்க மூன்று காரணங்கள் இருக்கிறது..
முதலில் இந்த விஷயம் சந்தோஷ், சங்கமித்ரா இருவரில் யாருக்கு தெரிந்தாலும் பிரச்சனை பெரியதாகிவிடும்.. அடுத்து பிருந்தாவின் மனம் கஷ்டப்படும்.. ‘தன்னுடைய மனதில் வந்த காதலை சந்தோஷிற்கு தெரிந்தால் அவன் தன்னை நிராகரித்துவான்..’ என்று இவளே நினைத்துக்கொண்டாள்.. இந்த மூன்று காரணங்களுக்காகவே மெளனமாக இருக்க கற்றுகொண்டாள்..
அவளின் மௌனம் சந்தோஷை எந்த அளவிற்கு மனத்தால் பாதிக்க படுவான் என்றோ சங்கமித்ராவிடம் தான் பேசாமல் இருப்பதால் அவளின் மனம் எந்தளவிற்கு வருந்தும் என்று உணராமல் இருந்தாள்..
காலையில் கிளம்பியதும் முதலில் கோவிலுக்கு போய்விட்டு அப்படியே நூலகம் போவாள்.. அங்கே போரடித்தால் பூங்கா போய்விட்டு மதியான நேரம் தங்களின் கம்பெனிக்கு சென்றுவிடுவாள்.. அங்கே யாராவது தன்னிடம் விளக்கம் கேட்டால், ‘இப்போவே வேலைகளின் நுணுக்கத்தை கற்றுக்கொள்கிறேன்..” என்று பதில் கொடுப்பத்தோடு மட்டும் நிறுத்தாமல் தன்னிடம் ஒப்படைக்கும் வேலைகளை சரியாக செய்து பெரியவர்களிடம் பாராட்டும் வாங்கிவிடுவாள்..
அவள் வீட்டிற்கு வருவதைக் குறைத்து கொண்டே வருவதைக் கவனித்த சந்தோஷ், ‘யாரோ என்னவோ சொன்னாங்க என்று இவள் ஏன் இப்படி பண்ற..’ என்றவனின் மனம் கொதிக்க, ‘அவளோட மனம் காயத்தை ஆற்றும் பதில் உன்னிடம் தான் இருக்கு.. நீ மெளனமாக இருக்கும் வரையில் அவளும் உன்னை விட்டு ஒதுங்கிதான் இருப்பாள்.. அதே போல அவளின் காயப்பட்ட மனமும் இந்த மாதிரி எல்லாம் யோசிக்கும்.. அதை முதலில் நீ புரிந்துக்கொள்..’ என்றவனின் மனம் அவனையே திட்டியது..
‘எந்த நேரத்தில் யாருக்கு என்ன பதில் கொடுக்கணும் என்று எனக்கு நல்லாவே தெரியும்..’ என்றவன் சொல்ல. ‘உனக்கு என்ன தெரியும்.. அவள் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறாள் அது உனக்கு தெரியுமா..?’ என்றவனின் மனம் அவனிடம் கேள்வி கேட்க மௌனம் சாதித்தான் சந்தோஷ்..
அவர்களின் மற்றொரு கிளைக்கு சென்று வேலைகளை கற்றுகொள்ள ஆரம்பித்தவனும் தொழிலில் தன்னுடைய கவனத்தை திருப்பிவிட அவர்களின் பொழுது நன்றாகவே சென்றது.. இவர்களின் மூவரின் நடவடிக்கையும் கவனித்த பெரியவர்கள் அவர்களிடம் எதையுமே கேட்கவில்லை..
இவர்களின் சண்டையில் அதிகம் பாதிக்கபட்டது என்னவோ சங்கமித்ராதான்.. ‘நான் என்ன தப்பு பண்ணினேன்..? என்னோட அவள் ஏன் பேசவே மாட்டேன்ற.. என்னை கண்டாலே ஒதுக்கி போற..’ என்று நினைத்தவளுக்கு மனம் கனத்து போனது..
வீட்டில் முதல் போல கலகலப்பு யாரின் முகத்திலும் இல்லை.. முதலில் சந்தோஷ், பிரியா சங்கமித்ரா இவர்கள் மூவரின் முகத்தில் புன்னகை என்பது பெயருக்கு மட்டுமே முகத்தில் இருந்தது..
தன்னுடைய உயிர் தோழி பிரியா பேசாமல் இருப்பதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் மித்ரா கூட இப்பொழுது எல்லாம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்க பழகிக்கொண்டாள்..
இதையெல்லாம் பார்த்த சஞ்சனா, “இவங்க மூவரும் முதல் மாதிரியே இல்ல..” என்று புலம்ப மதுபாலா அவளின் கருத்தை ஆமோதித்தாள்..
“பிரியா அக்கா இப்போ எல்லாம் வீட்டில் இருப்பதே இல்லை..” என்று மதுபாலா சொல்ல, “ம்ம் அன்றைக்கு பிறகுபிரியாக்கா வீடுக்கு வருவதே இல்ல..” என்று சஞ்சனா சொல்ல அதில் கடுப்பான சஞ்சீவ், “அவங்க வீட்டில் இருந்தால் தானே இங்கே வருவாங்க..” என்றான்..
“ம்ம் நீ சொல்றதும் சரிதான் சஞ்சீவ்..” என்றவர்கள் மூவரும் பேசிகொண்டிருக்க என்றும் இல்லாத திருநாளாக அறையைவிட்டு வெளியே சங்கமித்ராவைப் பார்த்த சஞ்சீவ், “அக்கா நீ எங்கே கிளம்பிட்ட..” என்றவன் சந்தேகமாக புருவம் உயர்த்த, “காலேஜ் போய் அப்ளிகேஷன் வாங்கிட்டு வரேன் சஞ்சீவ்..” என்றவள் சாதாரணமாகக் கூறினாள்..
மூவரும் அவளைக் கேள்வியாக பார்க்க, “நானும் லேடீஸ் காலேஜ் சேர போகிறேன்..” என்றவள் பதில் சொல்ல, “என்னக்கா சொல்ற..” என்று மூவரும் அதிர, “அவள் ஏன் இப்படி பண்ற என்ற காரணம் தெரியல.. அவளுடம் பேசாமல் இருக்க என்னால முடியாது எனக்கு பைத்தியமே பிடித்துவிடும்.. அதுதான் நான் இந்த முடிவிற்கு வந்தேன்..” என்றவள் மெல்லிய குரலில் கூறினாள்..
“சூப்பர் அக்கா.. நீங்க மூவரும் இப்படி இருப்பதைப் பார்த்து நாங்க மூவரும் வருத்தத்தில் இருந்தோம்.. இனிமேல் அப்படி இருக்காது இல்ல.. நீங்க மூவரும் எப்பொழுதும் போல பேசிக்க போறீங்க..” என்ற மதுபாலா சந்தோசத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க, “எனக்கும் ரொம்ப சந்தோசமாக இருக்கு அக்கா..” என்றான் சஞ்சீவ்.. சஞ்சனவோ மித்ராவின் அழுத்தமாக முத்தமிட்டு, “என்னோட ஸ்வீட் அக்கா..” என்று கொஞ்சினாள்..
அதன்பிறகு காலேஜ் சென்று அப்ளிகேஷன் வாங்கிட்டு வீட்டின் உள்ளே நுழைந்த சங்கமித்ரா சோபாவில் அமர்ந்து அப்ளிகேஷனை எழுத ஆரம்பிக்க பேனா எடுத்தவள் கண்கள் தானாக கலங்கிட அப்பொழுது ஆபீசில் இருந்து வீட்டிற்கு வந்த சந்தோஷ் தங்கை சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவளின் அருகில் சென்று அமர்ந்தான்..
“ஐயோ எல்லாம் போச்சே.. என்னோட கனவு ஆசை எல்லாமே போச்சே..” என்று புலம்பியவண்ணம் அப்பிகேஷனை எழுதும் தங்கையைப் பார்த்த சந்தோஷிற்கு சிரிப்பு வர, “அதை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு எழுதற..” என்றவன் சிரித்துக்கொண்டே கேட்க அப்பொழுது அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் செந்தணலாகவே மாறிவிட்டது..
“எல்லாம் உன்னாலதான்.. அன்னைக்கு கோவிலில் என்னவோ நடந்திருக்கு..” என்றவள் சொன்னதுமே அவனின் முகம் மாறிப்போனது.. அவன் அவளையே இமைக்காமல் பார்க்க, “என்னிடம் சொல்லு அண்ணா அன்னைக்கு கோவிலில் என்ன நடந்தது..?” என்றவள் தீவிரமாக கேட்க சந்தோஷ் தெரிந்தே மௌனமாக இருந்தான்..
அவனின் மௌனம் அவளின் கோபத்தை கிளப்பிவிட, “எதுவும் நடக்காமல் பிரியா இப்படி இருக்க மாட்டா.. அவளைப்பற்றி உன்னைவிட எனக்கு நல்லாவே தெரியும்.. கடைசியில் என்னை டீலில் இழுத்து விட்டுட்டீங்க..” என்றவள் கோபத்தில் அவனை அடித்தாள்..
“பிரியா நம்ம கூட காலேஜ் வருவாள்.. அதற்கு நான் பொறுப்பு..” என்றவன் அவளின் கையில் அப்ளிகேஷனை வாங்கிவிட்டு வேறொரு காலேஜ் அப்ளிகேஷனை கொடுத்தான்..
அதை வாங்கிப் பார்த்தவள் கேள்வியாக புருவம் உயர்த்தி அண்ணனை பார்க்க, “என்னை நம்பு..” என்றவன் சொன்ன ஒரு வார்த்தைக்காக அந்த அப்ளிகேஷனை எழுதி அண்ணனின் கையில் கொடுத்தவள், “இது பிரியாவிற்காக..” என்றவள் அந்த அப்ளிகேஷனையும் எழுதினாள்..
இதையெல்லாம் கண்டும் காணாதது போல தன்னுடைய வேலையில் ஈடுப்பட்டனர் பெரியவர்கள்.. நாட்கள் விரைந்து சென்றது..
அன்று காலையில் வேகமாக வெளியே கிளம்பிய பிரியாவை தேடி வந்து வழிமறித்து நின்ற சந்தோஷைப் புரியாத பார்வைப் பார்த்த பிரியா, “என்ன விஷயம் சொல்லுங்க..” என்று மட்டும் கூறினாளே தவிர, ‘அத்து’ என்றவள் உரிமையுடன் அழைக்கவே இல்லை..
அதைக் கவனித்த சந்தோஷ், “ராச்சசி..” என்று முணுமுணுத்துவிட்டு அவளின் பக்கம் திரும்பி வேண்டுமென்றே, “நீ உன்னோட முடிவை மாற்றவே வேண்டாம் பிரியா.. நீ ஏன் இப்படி பண்ற என்று எனக்கு இப்போ வரை காரணம் புரியல..” என்றவன் புலம்பிட அவனின் முகத்தையே இமைக்காமல் பார்த்த பிரியா..
“நானும் என்னோட தங்கையும் ஒரே காலேஜ் சேர போகிறோம்..” என்றவன் தன்னுடைய முடிவை சொல்லிவிட்டு வந்த வழியில் திரும்பி நடக்க, அவன் செல்லும் திசையைப் பார்த்த பிரியாவோ, ‘நீயும் மாறிவிட்டாய் இல்ல அத்து..’ என்று மனதினுள் அவள் கேள்வி கேட்டுகொண்டிருந்தாள்..
தன்னுடைய மனக்கயத்தை யாரிடமும் சொல்லாத பிரியா எப்பொழுதும் போல இயல்பாக இருப்பது போலவே தன்னை மற்றவர்களிடம் காட்டுகொண்டவள் அடுத்தடுத்த நாளில் ‘தன்னுடைய மேல் படிப்பிற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ..?’ அதை எல்லாம் சரியாக செய்ய ஆரம்பித்தாள்..
தனியறையில் முடங்கினால் தன்னுடைய மனது தேவை இல்லாத விஷயங்களை யோசிக்கும் என்பதால் நூலகம் சென்று படிப்பிற்கு தேவையான புத்தகங்களை எடுத்து வந்து குறிப்பெடுக்க ஆரம்பித்தவளின் நடவடிக்கை எல்லாம் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது..
காலையில் அவள் வீட்டைவிட்டு கிளம்பும் பொழுது சந்தோஷ் அல்லது சங்கமித்ராவை பார்க்க நேர்ந்தாலும் கூட தன்னுடைய மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அவர்களை விட்டு விலகி நடப்பாள்.. ஆனால் அவளின் மனம் முழுவதும் சந்தோஷ் மீதும் சங்கமித்ராவின் மீதுமே இருக்கும்..
அதுவும் சங்கமித்ரா அவளின் உயிர்தோழி.. அவளிடம் இதுநாள்வரை பிரியா பேசாமல் இருந்தே இல்லை என்று சொல்லலாம்.. ஆனால் சில காயங்களுக்கு மௌனம் என்ற மருந்து மிகவும் அவசியம் என்பதாலோ என்னவோ இப்பொழுது எல்லாம் அவர்களிடம் பேசுவதே இல்லை.. அவள் பேசாமல் மெளனமாக இருக்க மூன்று காரணங்கள் இருக்கிறது..
முதலில் இந்த விஷயம் சந்தோஷ், சங்கமித்ரா இருவரில் யாருக்கு தெரிந்தாலும் பிரச்சனை பெரியதாகிவிடும்.. அடுத்து பிருந்தாவின் மனம் கஷ்டப்படும்.. ‘தன்னுடைய மனதில் வந்த காதலை சந்தோஷிற்கு தெரிந்தால் அவன் தன்னை நிராகரித்துவான்..’ என்று இவளே நினைத்துக்கொண்டாள்.. இந்த மூன்று காரணங்களுக்காகவே மெளனமாக இருக்க கற்றுகொண்டாள்..
அவளின் மௌனம் சந்தோஷை எந்த அளவிற்கு மனத்தால் பாதிக்க படுவான் என்றோ சங்கமித்ராவிடம் தான் பேசாமல் இருப்பதால் அவளின் மனம் எந்தளவிற்கு வருந்தும் என்று உணராமல் இருந்தாள்..
காலையில் கிளம்பியதும் முதலில் கோவிலுக்கு போய்விட்டு அப்படியே நூலகம் போவாள்.. அங்கே போரடித்தால் பூங்கா போய்விட்டு மதியான நேரம் தங்களின் கம்பெனிக்கு சென்றுவிடுவாள்.. அங்கே யாராவது தன்னிடம் விளக்கம் கேட்டால், ‘இப்போவே வேலைகளின் நுணுக்கத்தை கற்றுக்கொள்கிறேன்..” என்று பதில் கொடுப்பத்தோடு மட்டும் நிறுத்தாமல் தன்னிடம் ஒப்படைக்கும் வேலைகளை சரியாக செய்து பெரியவர்களிடம் பாராட்டும் வாங்கிவிடுவாள்..
அவள் வீட்டிற்கு வருவதைக் குறைத்து கொண்டே வருவதைக் கவனித்த சந்தோஷ், ‘யாரோ என்னவோ சொன்னாங்க என்று இவள் ஏன் இப்படி பண்ற..’ என்றவனின் மனம் கொதிக்க, ‘அவளோட மனம் காயத்தை ஆற்றும் பதில் உன்னிடம் தான் இருக்கு.. நீ மெளனமாக இருக்கும் வரையில் அவளும் உன்னை விட்டு ஒதுங்கிதான் இருப்பாள்.. அதே போல அவளின் காயப்பட்ட மனமும் இந்த மாதிரி எல்லாம் யோசிக்கும்.. அதை முதலில் நீ புரிந்துக்கொள்..’ என்றவனின் மனம் அவனையே திட்டியது..
‘எந்த நேரத்தில் யாருக்கு என்ன பதில் கொடுக்கணும் என்று எனக்கு நல்லாவே தெரியும்..’ என்றவன் சொல்ல. ‘உனக்கு என்ன தெரியும்.. அவள் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறாள் அது உனக்கு தெரியுமா..?’ என்றவனின் மனம் அவனிடம் கேள்வி கேட்க மௌனம் சாதித்தான் சந்தோஷ்..
அவர்களின் மற்றொரு கிளைக்கு சென்று வேலைகளை கற்றுகொள்ள ஆரம்பித்தவனும் தொழிலில் தன்னுடைய கவனத்தை திருப்பிவிட அவர்களின் பொழுது நன்றாகவே சென்றது.. இவர்களின் மூவரின் நடவடிக்கையும் கவனித்த பெரியவர்கள் அவர்களிடம் எதையுமே கேட்கவில்லை..
இவர்களின் சண்டையில் அதிகம் பாதிக்கபட்டது என்னவோ சங்கமித்ராதான்.. ‘நான் என்ன தப்பு பண்ணினேன்..? என்னோட அவள் ஏன் பேசவே மாட்டேன்ற.. என்னை கண்டாலே ஒதுக்கி போற..’ என்று நினைத்தவளுக்கு மனம் கனத்து போனது..
வீட்டில் முதல் போல கலகலப்பு யாரின் முகத்திலும் இல்லை.. முதலில் சந்தோஷ், பிரியா சங்கமித்ரா இவர்கள் மூவரின் முகத்தில் புன்னகை என்பது பெயருக்கு மட்டுமே முகத்தில் இருந்தது..
தன்னுடைய உயிர் தோழி பிரியா பேசாமல் இருப்பதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் மித்ரா கூட இப்பொழுது எல்லாம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்க பழகிக்கொண்டாள்..
இதையெல்லாம் பார்த்த சஞ்சனா, “இவங்க மூவரும் முதல் மாதிரியே இல்ல..” என்று புலம்ப மதுபாலா அவளின் கருத்தை ஆமோதித்தாள்..
“பிரியா அக்கா இப்போ எல்லாம் வீட்டில் இருப்பதே இல்லை..” என்று மதுபாலா சொல்ல, “ம்ம் அன்றைக்கு பிறகுபிரியாக்கா வீடுக்கு வருவதே இல்ல..” என்று சஞ்சனா சொல்ல அதில் கடுப்பான சஞ்சீவ், “அவங்க வீட்டில் இருந்தால் தானே இங்கே வருவாங்க..” என்றான்..
“ம்ம் நீ சொல்றதும் சரிதான் சஞ்சீவ்..” என்றவர்கள் மூவரும் பேசிகொண்டிருக்க என்றும் இல்லாத திருநாளாக அறையைவிட்டு வெளியே சங்கமித்ராவைப் பார்த்த சஞ்சீவ், “அக்கா நீ எங்கே கிளம்பிட்ட..” என்றவன் சந்தேகமாக புருவம் உயர்த்த, “காலேஜ் போய் அப்ளிகேஷன் வாங்கிட்டு வரேன் சஞ்சீவ்..” என்றவள் சாதாரணமாகக் கூறினாள்..
மூவரும் அவளைக் கேள்வியாக பார்க்க, “நானும் லேடீஸ் காலேஜ் சேர போகிறேன்..” என்றவள் பதில் சொல்ல, “என்னக்கா சொல்ற..” என்று மூவரும் அதிர, “அவள் ஏன் இப்படி பண்ற என்ற காரணம் தெரியல.. அவளுடம் பேசாமல் இருக்க என்னால முடியாது எனக்கு பைத்தியமே பிடித்துவிடும்.. அதுதான் நான் இந்த முடிவிற்கு வந்தேன்..” என்றவள் மெல்லிய குரலில் கூறினாள்..
“சூப்பர் அக்கா.. நீங்க மூவரும் இப்படி இருப்பதைப் பார்த்து நாங்க மூவரும் வருத்தத்தில் இருந்தோம்.. இனிமேல் அப்படி இருக்காது இல்ல.. நீங்க மூவரும் எப்பொழுதும் போல பேசிக்க போறீங்க..” என்ற மதுபாலா சந்தோசத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க, “எனக்கும் ரொம்ப சந்தோசமாக இருக்கு அக்கா..” என்றான் சஞ்சீவ்.. சஞ்சனவோ மித்ராவின் அழுத்தமாக முத்தமிட்டு, “என்னோட ஸ்வீட் அக்கா..” என்று கொஞ்சினாள்..
அதன்பிறகு காலேஜ் சென்று அப்ளிகேஷன் வாங்கிட்டு வீட்டின் உள்ளே நுழைந்த சங்கமித்ரா சோபாவில் அமர்ந்து அப்ளிகேஷனை எழுத ஆரம்பிக்க பேனா எடுத்தவள் கண்கள் தானாக கலங்கிட அப்பொழுது ஆபீசில் இருந்து வீட்டிற்கு வந்த சந்தோஷ் தங்கை சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவளின் அருகில் சென்று அமர்ந்தான்..
“ஐயோ எல்லாம் போச்சே.. என்னோட கனவு ஆசை எல்லாமே போச்சே..” என்று புலம்பியவண்ணம் அப்பிகேஷனை எழுதும் தங்கையைப் பார்த்த சந்தோஷிற்கு சிரிப்பு வர, “அதை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு எழுதற..” என்றவன் சிரித்துக்கொண்டே கேட்க அப்பொழுது அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் செந்தணலாகவே மாறிவிட்டது..
“எல்லாம் உன்னாலதான்.. அன்னைக்கு கோவிலில் என்னவோ நடந்திருக்கு..” என்றவள் சொன்னதுமே அவனின் முகம் மாறிப்போனது.. அவன் அவளையே இமைக்காமல் பார்க்க, “என்னிடம் சொல்லு அண்ணா அன்னைக்கு கோவிலில் என்ன நடந்தது..?” என்றவள் தீவிரமாக கேட்க சந்தோஷ் தெரிந்தே மௌனமாக இருந்தான்..
அவனின் மௌனம் அவளின் கோபத்தை கிளப்பிவிட, “எதுவும் நடக்காமல் பிரியா இப்படி இருக்க மாட்டா.. அவளைப்பற்றி உன்னைவிட எனக்கு நல்லாவே தெரியும்.. கடைசியில் என்னை டீலில் இழுத்து விட்டுட்டீங்க..” என்றவள் கோபத்தில் அவனை அடித்தாள்..
“பிரியா நம்ம கூட காலேஜ் வருவாள்.. அதற்கு நான் பொறுப்பு..” என்றவன் அவளின் கையில் அப்ளிகேஷனை வாங்கிவிட்டு வேறொரு காலேஜ் அப்ளிகேஷனை கொடுத்தான்..
அதை வாங்கிப் பார்த்தவள் கேள்வியாக புருவம் உயர்த்தி அண்ணனை பார்க்க, “என்னை நம்பு..” என்றவன் சொன்ன ஒரு வார்த்தைக்காக அந்த அப்ளிகேஷனை எழுதி அண்ணனின் கையில் கொடுத்தவள், “இது பிரியாவிற்காக..” என்றவள் அந்த அப்ளிகேஷனையும் எழுதினாள்..
இதையெல்லாம் கண்டும் காணாதது போல தன்னுடைய வேலையில் ஈடுப்பட்டனர் பெரியவர்கள்.. நாட்கள் விரைந்து சென்றது..
அன்று காலையில் வேகமாக வெளியே கிளம்பிய பிரியாவை தேடி வந்து வழிமறித்து நின்ற சந்தோஷைப் புரியாத பார்வைப் பார்த்த பிரியா, “என்ன விஷயம் சொல்லுங்க..” என்று மட்டும் கூறினாளே தவிர, ‘அத்து’ என்றவள் உரிமையுடன் அழைக்கவே இல்லை..
அதைக் கவனித்த சந்தோஷ், “ராச்சசி..” என்று முணுமுணுத்துவிட்டு அவளின் பக்கம் திரும்பி வேண்டுமென்றே, “நீ உன்னோட முடிவை மாற்றவே வேண்டாம் பிரியா.. நீ ஏன் இப்படி பண்ற என்று எனக்கு இப்போ வரை காரணம் புரியல..” என்றவன் புலம்பிட அவனின் முகத்தையே இமைக்காமல் பார்த்த பிரியா..
“நானும் என்னோட தங்கையும் ஒரே காலேஜ் சேர போகிறோம்..” என்றவன் தன்னுடைய முடிவை சொல்லிவிட்டு வந்த வழியில் திரும்பி நடக்க, அவன் செல்லும் திசையைப் பார்த்த பிரியாவோ, ‘நீயும் மாறிவிட்டாய் இல்ல அத்து..’ என்று மனதினுள் அவள் கேள்வி கேட்டுகொண்டிருந்தாள்..