அத்தியாயம் – 14
அன்று காலேஜ் ரீஓபன்.. புதிய மாணவர்களை ராகிங் செய்ய ஒரு கூட்டமே மரத்தடியே கமிட்டி போட்டு கும்பல் கும்பலாக அமர்ந்திருந்தனர்.. கல்லூரியின் உள்ளே நுழைந்த புதிய மாணவ, மாணவிகளுடன் இணைந்த வண்ணம் கல்லூரிக்குள் நுழைந்த மான்விழியின் மனம் சிறகில்லாமல் பறக்க அவளுடன் சேர்ந்து நடந்த தீபிகாவின் மனமோ ஆயிரம் சிந்தனையுடன் வந்தது..
இவர்களைப் பார்த்த சீனியரில் ஒருவன், “ஏய் எங்கே தப்பிச்சு போக பார்க்கிற..?” என்றவன் கேட்டதும் மான்விழியின் கண்கள் படபடக்க தீபிகாவைப் பார்க்க அவளோ எதை பற்றியும் பயமே இல்லாமல், “நான் உன்னிடம் இருந்து தப்பிக்க நினைத்தேனா..?” என்று திமிருடன் கேட்டாள்..
அவளின் திமிரைக் கண்ட கூட்டத்தின் தலைவன், “என்ன ரொம்ப திமிராக பேசற..” என்றவன் கேள்வி கேட்க, “ஆமா திமிராகத்தான் பேசுவேன்..” என்றவள் பதில் சொல்ல, “அந்த திமிரோட போய் அதோ அந்த கேண்டீன் உள்ளே நுழையும் புளூ கலர் சர்ட்..” என்றவன் திசையைக் காட்டிட அங்கே பார்வையை திருப்பினாள் தீபிகா..
“அவனிடம் லவ் பிரபோஸ் பண்ணிட்டு, ‘என்னோட வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உங்களோட மட்டும்தான்..’ என்று வசனம் பேசிவிட்டுவா..” என்றான்..
“ம்ம் ஓகே..” என்று தீபிகா நகர்ந்துவிட மான்விழியின் பதட்டம் அதிகமாக எச்சிலை விழுங்கிய வண்ணம் அவர்களைப் பயத்துடன் பார்த்த மான்விழியின் பார்வை அவனை என்ன செய்ததோ, “உன்னோட பெயர் என்ன..?” என்று கேட்டான்..
“மான்விழி..” என்றவள் பயத்துடன் சொல்ல, “மான்விழி..” என்றவளின் பெயரைச் சொல்லி பார்த்தவன், “நல்ல இருக்கு” என்றவன் தொடர்ந்து, “நீ உன்னோட கிளாஸ் ரூம் போ மான்விழி..” என்றவன் சொல்ல சரியென தலையசைத்து நகர்ந்துவிட்டாள்..
அவள் சென்றதும் அங்கிருந்தவர்கள் அவனை இமைக்காமல் பார்க்க, “ஏற்கனவே பயந்துட்டு இருக்கும் பெண்ணின் மனதில் நம்ம எதுக்குடா தேவை இல்லாத பயத்தை விதைக்கணும்..?” என்று சொல்ல, “அவன் சொல்வதிலும் தவறில்லை..” என்றவர்கள் அந்த விஷயத்தை அத்தோடு விட்டுவிட்டனர்..
அவர்கள் சொன்னது போலவே கேண்டீன் உள்ளே நுழைந்த தீபியின் பார்வை அங்கே புளூ கலர் சர்ட் அணிந்த நபரை தேட அவளுக்கு முதுகாட்டி அமர்ந்தவனின் அருகில் சென்ற தீபிகா, “ஹலோ..” என்றழைக்க வேகமாக நிமிர்ந்த சந்தோஷ் விழிகள் அவளை அடையாளம் கண்டதும், ‘இவள் எப்படி இங்கே..?’ என்றவன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்..
அவன் சந்தோஷ் என்று முதல் பார்வையில் அடையாளம் கண்டு கொண்ட தீபிகா, “சந்தோஷ் ஐ லவ் யூ.. எனக்கு திருமணம் என்ற ஒன்று நடந்தால் அது உன்கூட மட்டும்தான்..” என்றவள் ரோஜா பூவை அவனின் முகத்தின் முன்னாடி புன்னகையுடன் நீட்டியவள் பார்வை பிரியாவின் மீதே இருந்தது.. அவளைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தாள் பிரியா...
‘இது தான் என்னோட முதல் அடி..’ என்று விஷயமத்துடன் சிரித்து வைக்க இகழ்ச்சியாக ஔ புன்னகை சிந்திய ‘உன்னிடம் பேசி போராடி நான் வெல்வேன் என்று நினைக்கிறாயா தீபி.. என்னோட காதல் உண்மை என்றால் என்னோட அத்து எனக்கு கிடைப்பார்..’ என்றவள் அவளின் பார்வையை எதிர்கொண்டாள்..
அவளைப் பார்த்த சங்கமித்ராவிற்கு கோபம் தலைகேற, ‘பிரச்சனை ரயிலேறி சென்னை வந்திருக்கு..’ என்றவள் அண்ணனின் முகத்தைக் கேள்வியாக பார்க்க தீபியை இமைக்காமல் பார்த்த சந்தோஷ், “உங்களோட நேம்..?” என்று மட்டும் கேட்க பிரியா அவனை முறைத்தாள்..
“தீபிகா..” என்றவள் சொன்னதும், “ஐ லவ் யூ தீபிகா..” என்றவளின் கையில் இருந்து பூவை வாங்கிட அவளின் உள்ளம் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்க, “லவ் யூ சந்தோஷ்..” என்றவள் பிரியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்துவிட, சங்கமித்ராவின் உள்ளம் தான் தீயாக கொதித்தது..
அவள் சென்ற திசையைப் பார்த்து கொண்டிருந்த அண்ணனை கொலைவெறியுடன் பார்த்தவள், “டேய் நீ என்ன காரியம் பண்ணிட்டு இருக்கிற.. உனக்கு என்ன லூசா..” என்றவள் கோபத்தில் கேட்டதும் அவளின் கரத்தை பிடித்து அழுத்திய பிரியா, “மிது பொறுமையாக இரு..” என்றவளை பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தினான் சந்தோஷ்..
“சந்தோஷ் அந்த பொண்ணு பற்றி நீ என்ன நினைக்கிற..” என்று சாதாரணமாக கேட்க, அவளின் கேள்வியில் பிரியாவின் கையை உதறிவிட்டு எழுந்த சங்கமித்ரா, “காதலி முன்னாடியே இன்னொருத்திக்கு பிரபோஸ் பண்ற..” என்றவள் கோபத்தில் எகிறினாள்..
“மித்ரா உனக்கு என்ன பைத்தியமா..? நான் பிரியாவை காதலிக்கிறேன் என்று உனக்கு யார் சொன்னது..?” என்று கேட்டவன் பிரியாவின் முகத்தை அழுத்தத்துடன் பார்த்தான்.. அவனின் பார்வையை எதிர்கொண்ட பிரியா, “சந்தோஷ்..” என்றவள் கோபத்தில் பல்லைக்கடித்தாள்..
“ஸாரி பிரியா உன்னோட மனசில் இப்படியொரு எண்ணம் இருக்குது என்பதே எனக்கு தெரியாது.. எனக்கு தீபிகாவை ரொம்ப பிடிச்சிருக்கு.. அவளை நான் காதலிக்க போகிறேன்..” என்றவன் தன்னுடைய முடிவை அவளிடம் மறைக்காமல் கூறினான்..
அவனின் பார்வை அவளின் மீது நிலைத்திருக்க, ‘இன்றாவது என்னிடம் உண்மையைச் சொல்லுடி.. தீபிக்கு உன்மேல் உரிமை இல்ல.. எனக்குத்தான் சந்தோஷ் மீது முழுஉரிமையும் இருக்கு என்று சொல்லுடி..’ என்றவன் மனதில் நினைத்தவண்ணம் அவளையே இமைக்காமல் பார்க்க, சங்கமித்ராவோ பிரியாவின் பதிலை எதிர்பார்த்து நின்றாள்..
அவன் சொன்னதைக்கேட்டு அவளின் உள்ளம் வலித்தாலும் தன்னுடைய வலியைத் தனக்குள் மறைத்துக்கொண்டு, “ரொம்ப ஹாப்பி.. நீ யாரையோ லவ் பண்ணு.. எனக்கு என்ன பிரச்சனை.. எப்படியோ நான் உன்னிடம் இருந்து தப்பித்தேன்..” என்றவள் அக்கறையின்றி சொல்லிவிட்டு எழுந்து சென்ற பிரியாவைப் பின்தொடர்ந்து சென்றாள் சங்கமித்ரா..
சந்தோஷிடம் ப்ரபோஸ் செய்துவிட்டு தீபிகா நேராக அந்த ராகிங் கும்பலிடம் வந்து, “ரொம்ப தேங்க்ஸ்பா.. என்னோட வேலையை நீங்க ரொம்பவே சுலபம் ஆகிட்டீங்க..” என்றவள் நிற்காமல் சந்தோஷமாகச் செல்ல, “இவளிடம் ஏதோ தவறாக இருக்கு மச்சி..” என்று வாய்விட்டு கூறினான் கேன்கின் தலைவன்..
நேராக தன்னுடைய வகுப்பிற்கு சென்ற தீபிகா, “மானு.. மானு.. நான் சந்தோஷ் கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டேன்.. பிரியா முகம் எந்தமாதிரி போச்சு தெரியுமா..” என்றவள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறையாக கூறினாள்..
அவளை நிமிர்ந்து பார்த்த மான்விழி, ‘என்ன விஷயமாக இருக்கும்..? எதுக்கு இவள் இந்த குதி குதிக்கிற..?’ என்றவள் தீவிரமாக யோசித்தவள், ‘இவளே குட்டையை குழப்பிவிட்டு மீன் பிடிப்படிப்பவள்..’ என்று நினைத்தவளின் புருவங்கள் கேள்வியாக உயர்ந்தது..
அவளின் பார்வையைக் கவனித்த தீபிகா, “என்னடி ரியாக்ட் பண்ணாமல் இருக்க..??” என்றவள் கேட்டதுமே, “ஏய் எதுவாக இழுத்தாலும் தெளிவாக சொல்லுடி..” என்று மான்விழி அவளிடம் சண்டை போட, “சரி சரி நான் தெளிவாக சொல்றேன்..” என்றவள் கீழே கேண்டீனில் நடத்த நிகழ்ச்சியை மான்விழியிடம் கூறினாள்..
“அதுக்கு இப்போ என்ன பண்ணனும் தீபி..” என்றவள் அக்கரையின்றிக் கேட்டதும், “மானு அவங்க யாருமே சந்தோஷமாக இருக்கக்கூடாது மானு.. என்னோட முதலடியிலேயே எனக்கு வெற்றி..” என்றவள் சொல்ல, ‘அடிப்பாவி உன்னோட கண்ணு முன்னாடி யாரும் சந்தோஷமாக இருக்க கூடாதா..?’ என்றவள் மனதில் நினைத்தாள்..
“ஆமா மானு.. அவங்க யாருமே சந்தோஷமாக இருக்கக்கூடாது..” என்றவள் சொல்ல, ‘இந்த விஷயத்தில் உன்னை சரியாக புரிந்து வைத்திருக்கிறேன்.. ரொம்ப நல்ல குணம்..’ என்று எரிச்சலுடன் நினைத்தாள் மான்விழி..
பிறகு அவளின் பழிவெறியைப் பார்த்தவள், ‘என்னால இவள் சந்தோஷ் அண்ணாவை நெருங்கினால், பிரியாக்கா என்னை என்ன கேள்வி கேட்பாங்க என்றே தெரியாது.. நம்முடைய படிப்பை மட்டும் பார்ப்போம்.. என்னால அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது..’ என்று மனதினுள் ஒரு உறுதியை எடுத்துக்கொண்டாள் மான்விழி.
‘அவளே சென்று அவர்களிடம் பேசுவாள்..’ என்றவள் அப்பொழுது உணரவில்லை.. அவள் அதை உணரும் பொழுது காலம் கடந்திருந்தது..
அன்று காலேஜ் ரீஓபன்.. புதிய மாணவர்களை ராகிங் செய்ய ஒரு கூட்டமே மரத்தடியே கமிட்டி போட்டு கும்பல் கும்பலாக அமர்ந்திருந்தனர்.. கல்லூரியின் உள்ளே நுழைந்த புதிய மாணவ, மாணவிகளுடன் இணைந்த வண்ணம் கல்லூரிக்குள் நுழைந்த மான்விழியின் மனம் சிறகில்லாமல் பறக்க அவளுடன் சேர்ந்து நடந்த தீபிகாவின் மனமோ ஆயிரம் சிந்தனையுடன் வந்தது..
இவர்களைப் பார்த்த சீனியரில் ஒருவன், “ஏய் எங்கே தப்பிச்சு போக பார்க்கிற..?” என்றவன் கேட்டதும் மான்விழியின் கண்கள் படபடக்க தீபிகாவைப் பார்க்க அவளோ எதை பற்றியும் பயமே இல்லாமல், “நான் உன்னிடம் இருந்து தப்பிக்க நினைத்தேனா..?” என்று திமிருடன் கேட்டாள்..
அவளின் திமிரைக் கண்ட கூட்டத்தின் தலைவன், “என்ன ரொம்ப திமிராக பேசற..” என்றவன் கேள்வி கேட்க, “ஆமா திமிராகத்தான் பேசுவேன்..” என்றவள் பதில் சொல்ல, “அந்த திமிரோட போய் அதோ அந்த கேண்டீன் உள்ளே நுழையும் புளூ கலர் சர்ட்..” என்றவன் திசையைக் காட்டிட அங்கே பார்வையை திருப்பினாள் தீபிகா..
“அவனிடம் லவ் பிரபோஸ் பண்ணிட்டு, ‘என்னோட வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உங்களோட மட்டும்தான்..’ என்று வசனம் பேசிவிட்டுவா..” என்றான்..
“ம்ம் ஓகே..” என்று தீபிகா நகர்ந்துவிட மான்விழியின் பதட்டம் அதிகமாக எச்சிலை விழுங்கிய வண்ணம் அவர்களைப் பயத்துடன் பார்த்த மான்விழியின் பார்வை அவனை என்ன செய்ததோ, “உன்னோட பெயர் என்ன..?” என்று கேட்டான்..
“மான்விழி..” என்றவள் பயத்துடன் சொல்ல, “மான்விழி..” என்றவளின் பெயரைச் சொல்லி பார்த்தவன், “நல்ல இருக்கு” என்றவன் தொடர்ந்து, “நீ உன்னோட கிளாஸ் ரூம் போ மான்விழி..” என்றவன் சொல்ல சரியென தலையசைத்து நகர்ந்துவிட்டாள்..
அவள் சென்றதும் அங்கிருந்தவர்கள் அவனை இமைக்காமல் பார்க்க, “ஏற்கனவே பயந்துட்டு இருக்கும் பெண்ணின் மனதில் நம்ம எதுக்குடா தேவை இல்லாத பயத்தை விதைக்கணும்..?” என்று சொல்ல, “அவன் சொல்வதிலும் தவறில்லை..” என்றவர்கள் அந்த விஷயத்தை அத்தோடு விட்டுவிட்டனர்..
அவர்கள் சொன்னது போலவே கேண்டீன் உள்ளே நுழைந்த தீபியின் பார்வை அங்கே புளூ கலர் சர்ட் அணிந்த நபரை தேட அவளுக்கு முதுகாட்டி அமர்ந்தவனின் அருகில் சென்ற தீபிகா, “ஹலோ..” என்றழைக்க வேகமாக நிமிர்ந்த சந்தோஷ் விழிகள் அவளை அடையாளம் கண்டதும், ‘இவள் எப்படி இங்கே..?’ என்றவன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்..
அவன் சந்தோஷ் என்று முதல் பார்வையில் அடையாளம் கண்டு கொண்ட தீபிகா, “சந்தோஷ் ஐ லவ் யூ.. எனக்கு திருமணம் என்ற ஒன்று நடந்தால் அது உன்கூட மட்டும்தான்..” என்றவள் ரோஜா பூவை அவனின் முகத்தின் முன்னாடி புன்னகையுடன் நீட்டியவள் பார்வை பிரியாவின் மீதே இருந்தது.. அவளைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தாள் பிரியா...
‘இது தான் என்னோட முதல் அடி..’ என்று விஷயமத்துடன் சிரித்து வைக்க இகழ்ச்சியாக ஔ புன்னகை சிந்திய ‘உன்னிடம் பேசி போராடி நான் வெல்வேன் என்று நினைக்கிறாயா தீபி.. என்னோட காதல் உண்மை என்றால் என்னோட அத்து எனக்கு கிடைப்பார்..’ என்றவள் அவளின் பார்வையை எதிர்கொண்டாள்..
அவளைப் பார்த்த சங்கமித்ராவிற்கு கோபம் தலைகேற, ‘பிரச்சனை ரயிலேறி சென்னை வந்திருக்கு..’ என்றவள் அண்ணனின் முகத்தைக் கேள்வியாக பார்க்க தீபியை இமைக்காமல் பார்த்த சந்தோஷ், “உங்களோட நேம்..?” என்று மட்டும் கேட்க பிரியா அவனை முறைத்தாள்..
“தீபிகா..” என்றவள் சொன்னதும், “ஐ லவ் யூ தீபிகா..” என்றவளின் கையில் இருந்து பூவை வாங்கிட அவளின் உள்ளம் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்க, “லவ் யூ சந்தோஷ்..” என்றவள் பிரியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்துவிட, சங்கமித்ராவின் உள்ளம் தான் தீயாக கொதித்தது..
அவள் சென்ற திசையைப் பார்த்து கொண்டிருந்த அண்ணனை கொலைவெறியுடன் பார்த்தவள், “டேய் நீ என்ன காரியம் பண்ணிட்டு இருக்கிற.. உனக்கு என்ன லூசா..” என்றவள் கோபத்தில் கேட்டதும் அவளின் கரத்தை பிடித்து அழுத்திய பிரியா, “மிது பொறுமையாக இரு..” என்றவளை பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தினான் சந்தோஷ்..
“சந்தோஷ் அந்த பொண்ணு பற்றி நீ என்ன நினைக்கிற..” என்று சாதாரணமாக கேட்க, அவளின் கேள்வியில் பிரியாவின் கையை உதறிவிட்டு எழுந்த சங்கமித்ரா, “காதலி முன்னாடியே இன்னொருத்திக்கு பிரபோஸ் பண்ற..” என்றவள் கோபத்தில் எகிறினாள்..
“மித்ரா உனக்கு என்ன பைத்தியமா..? நான் பிரியாவை காதலிக்கிறேன் என்று உனக்கு யார் சொன்னது..?” என்று கேட்டவன் பிரியாவின் முகத்தை அழுத்தத்துடன் பார்த்தான்.. அவனின் பார்வையை எதிர்கொண்ட பிரியா, “சந்தோஷ்..” என்றவள் கோபத்தில் பல்லைக்கடித்தாள்..
“ஸாரி பிரியா உன்னோட மனசில் இப்படியொரு எண்ணம் இருக்குது என்பதே எனக்கு தெரியாது.. எனக்கு தீபிகாவை ரொம்ப பிடிச்சிருக்கு.. அவளை நான் காதலிக்க போகிறேன்..” என்றவன் தன்னுடைய முடிவை அவளிடம் மறைக்காமல் கூறினான்..
அவனின் பார்வை அவளின் மீது நிலைத்திருக்க, ‘இன்றாவது என்னிடம் உண்மையைச் சொல்லுடி.. தீபிக்கு உன்மேல் உரிமை இல்ல.. எனக்குத்தான் சந்தோஷ் மீது முழுஉரிமையும் இருக்கு என்று சொல்லுடி..’ என்றவன் மனதில் நினைத்தவண்ணம் அவளையே இமைக்காமல் பார்க்க, சங்கமித்ராவோ பிரியாவின் பதிலை எதிர்பார்த்து நின்றாள்..
அவன் சொன்னதைக்கேட்டு அவளின் உள்ளம் வலித்தாலும் தன்னுடைய வலியைத் தனக்குள் மறைத்துக்கொண்டு, “ரொம்ப ஹாப்பி.. நீ யாரையோ லவ் பண்ணு.. எனக்கு என்ன பிரச்சனை.. எப்படியோ நான் உன்னிடம் இருந்து தப்பித்தேன்..” என்றவள் அக்கறையின்றி சொல்லிவிட்டு எழுந்து சென்ற பிரியாவைப் பின்தொடர்ந்து சென்றாள் சங்கமித்ரா..
சந்தோஷிடம் ப்ரபோஸ் செய்துவிட்டு தீபிகா நேராக அந்த ராகிங் கும்பலிடம் வந்து, “ரொம்ப தேங்க்ஸ்பா.. என்னோட வேலையை நீங்க ரொம்பவே சுலபம் ஆகிட்டீங்க..” என்றவள் நிற்காமல் சந்தோஷமாகச் செல்ல, “இவளிடம் ஏதோ தவறாக இருக்கு மச்சி..” என்று வாய்விட்டு கூறினான் கேன்கின் தலைவன்..
நேராக தன்னுடைய வகுப்பிற்கு சென்ற தீபிகா, “மானு.. மானு.. நான் சந்தோஷ் கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டேன்.. பிரியா முகம் எந்தமாதிரி போச்சு தெரியுமா..” என்றவள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறையாக கூறினாள்..
அவளை நிமிர்ந்து பார்த்த மான்விழி, ‘என்ன விஷயமாக இருக்கும்..? எதுக்கு இவள் இந்த குதி குதிக்கிற..?’ என்றவள் தீவிரமாக யோசித்தவள், ‘இவளே குட்டையை குழப்பிவிட்டு மீன் பிடிப்படிப்பவள்..’ என்று நினைத்தவளின் புருவங்கள் கேள்வியாக உயர்ந்தது..
அவளின் பார்வையைக் கவனித்த தீபிகா, “என்னடி ரியாக்ட் பண்ணாமல் இருக்க..??” என்றவள் கேட்டதுமே, “ஏய் எதுவாக இழுத்தாலும் தெளிவாக சொல்லுடி..” என்று மான்விழி அவளிடம் சண்டை போட, “சரி சரி நான் தெளிவாக சொல்றேன்..” என்றவள் கீழே கேண்டீனில் நடத்த நிகழ்ச்சியை மான்விழியிடம் கூறினாள்..
“அதுக்கு இப்போ என்ன பண்ணனும் தீபி..” என்றவள் அக்கரையின்றிக் கேட்டதும், “மானு அவங்க யாருமே சந்தோஷமாக இருக்கக்கூடாது மானு.. என்னோட முதலடியிலேயே எனக்கு வெற்றி..” என்றவள் சொல்ல, ‘அடிப்பாவி உன்னோட கண்ணு முன்னாடி யாரும் சந்தோஷமாக இருக்க கூடாதா..?’ என்றவள் மனதில் நினைத்தாள்..
“ஆமா மானு.. அவங்க யாருமே சந்தோஷமாக இருக்கக்கூடாது..” என்றவள் சொல்ல, ‘இந்த விஷயத்தில் உன்னை சரியாக புரிந்து வைத்திருக்கிறேன்.. ரொம்ப நல்ல குணம்..’ என்று எரிச்சலுடன் நினைத்தாள் மான்விழி..
பிறகு அவளின் பழிவெறியைப் பார்த்தவள், ‘என்னால இவள் சந்தோஷ் அண்ணாவை நெருங்கினால், பிரியாக்கா என்னை என்ன கேள்வி கேட்பாங்க என்றே தெரியாது.. நம்முடைய படிப்பை மட்டும் பார்ப்போம்.. என்னால அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது..’ என்று மனதினுள் ஒரு உறுதியை எடுத்துக்கொண்டாள் மான்விழி.
‘அவளே சென்று அவர்களிடம் பேசுவாள்..’ என்றவள் அப்பொழுது உணரவில்லை.. அவள் அதை உணரும் பொழுது காலம் கடந்திருந்தது..