• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then Sinthum Poovanam! - 16(a)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 16

பிரியா அறையின் உள்ளே செல்வதைப் பார்த்த மதுபாலா, ‘பிரியா முதலில் மாதிரி இல்ல.. ஏன் அவங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ..’ என்றவள் மனதில் நினைத்தபடி நின்றிருந்தாள்..

“மதுக்கா பிரியா ஏன் உள்ளே போறாங்க..?” என்று சஞ்சனா மதுவிடம் கேட்க தங்கையை முறைத்தாள் மதுபாலா.. அவள் முறைக்க அமைதியாக நின்ற சஞ்சனாவைப் பார்த்துச் சிரித்தான் சஞ்சீவ்..

“பிருந்தா நான் வேண்டுமென்றால் விக்ரம் அண்ணாவிடம் பேசட்டுமா..?” என்றவள் கேட்கும் பொழுது வீட்டின் உள்ளே நுழைந்தார் சந்துரு.. அங்கே தாரணியும் அவரின் கணவரும் அமர்ந்திருப்பதைப் பார்த்தவர்,

, “வா தாரணி.. நல்ல இருக்கிறாயா..?” என்று விசாரிக்க, “அப்பா இவங்களுக்கு உங்களை முதலில் இருந்தே தெரியுமா..?” என்று ஆச்சரியத்துடன் கேட்க, “எங்க எல்லோருக்கும் அவங்களை நல்ல தெரியும் சஞ்சனா..” என்ற வண்ணம் உள்ளே நுழைந்தனர் மீராவும், மலரும்..!

மூவரையும் முதலில் திரும்பிப் பார்த்த தாரணி, “வாங்க உங்களை எல்லாம் காணோம் என்று தேடிட்டு இருந்தேன்..” என்றவர சொல்லும் பொழுதே, “நீ காரணம் இல்லாமல் தேடமாட்டியே தாரணி..” என்றாள் மீரா கிண்டலுடன்..

“அதுதான் தெரியும் இல்ல.. உள்ளே வாங்க..” என்றழைத்த அபிநந்தன்.. பிருந்தாவின் முகம் பார்த்த தாரணி, “நான் வேண்டுமென்றால் விக்ரம் அண்ணாக்கிட்ட பேசட்டுமா..” என்று வெளிப்படையாக ஒளிவுமறைவின்றிக் கேட்டார்..

“எங்களோட பிள்ளைகளுக்கு அவங்க வாழ்க்கையை தேர்ந்து எடுக்க முழுஉரிமையும் கொடுத்திருக்கோம்.. இருந்தாலும் இதை நீ விக்ரம் அண்ணாவிடம் தான் பேச வேண்டும்..” என்றார் பிருந்தா..

மூவரும் வீட்டின் உள்ளே நுழைந்து ஆளுக்கொரு சோபாவில் அமர அவர்களின் பேச்சில் கடந்தகால பொன்னான நினைவுகள் அழகாக மலர்ந்தது.. எல்லோரும் இங்கே கலகலப்புடன் பேசிகொண்டிருந்தனர்..

அந்த அறைக்குள் நுழைந்த பிரியாவால் அமைதியாக படுக்கையில் அமர அவளின் பின்னோடு வேகமாக அறைக்குள் நுழைந்த மித்ரா, “பிரியா..” என்றழைக்க நிமிராமல் அமர்ந்திருந்த பிரியாவின் விழிகள் இரண்டும் கலங்கியது..

‘அத்து பெண்கேட்டு வந்தவங்களுக்கு நான் என்ன முடிவு சொல்லட்டும்.. என்னோட அத்துவை நான் காதலிக்கிறேன்.. ஆனால் அவர் தீபிகாவை காதலிக்கிறார் என்று சொல்லட்டுமா..? இல்ல மெளனமாக இருக்கட்டுமா..? மௌனம் சம்மதம் என்று அவங்க எடுத்துகொண்டால் நான் என்ன பண்ணட்டும்..’ என்று மனதிற்குள் புலம்பினாள்..

சிறு வயதில் இருந்து சந்தோஷ் மீது அவள் வைத்த பாசம் நாளடைவில் காதலாக மாறியதை உணராமல் இருந்த பிரியாவிற்கு அவளின் காதல் மனதை வெளிச்சம் போட்டு கட்டியது தீபிகாவின் வார்த்தைகள்.. தன்னுடைய மனம் அறிந்த நாளில் இருந்தே தன்னுடைய காதலைத் தனக்குள் மறைத்துக்கொண்டு மற்றவருக்காக புன்னகை என்ற பொய்யான முகமூடியை அணிந்திருந்தாள்..

ஆனால் அவளின் காயம் பட்ட மனதிற்குள் மருந்து இடவேண்டிய சந்தோஷோ, ‘தீபிகாவை காதலிக்கிறேன்..’ என்று சொல்லி அவளின் மனதை மேலும்காயப்படுத்தியது.. மற்றவர்களுக்காக தன்னுடைய காதலை தனக்கும் மறைத்தாள் பிரியா.. அதுவே இன்று வினையாகி போனது..

இப்பொழுது போய் உண்மையை அவள் சொன்னாலும் மற்றவர்கள் அவளை ஏற்றுகொண்டாலும் சந்தோஷ் அவளை ஏற்றுகொள்ள மாட்டான் என்று உணர்ந்தவளின் கண்கள் கலங்கியது.. அவளின் காதல் மனம் சந்தோஷ் வசமிருக்க என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் தடுமாறினாள் பிரியா..

அவளின் முகம் பார்த்தவண்ணம் சுவற்றில்சாய்ந்து நின்றாள் மித்ரா.. அவளுக்கு பிரியாவின் மனம் புரிந்தது.. வீட்டிற்கு வந்தவர்களை அவமதித்தால் பெற்றோரின் வளர்ப்பு தவறாகிவிடும் என்று பொறுமையாக இருந்தாள்..

அப்பொழுது வீட்டின் உள்ளே நுழைந்த விக்ரம், “அதுக்கு என்ன தாரணி.. என்னோட தங்கை உயிரை ஆபத்தில் இருந்து காப்பாத்த உதவியவள் நீ.. உனக்கு இல்லாத உரிமையா..?” என்று கேட்க தாரணியின் முகத்தில் புன்னகை மலந்தது..

“இதோ விக்ரம் வந்துவிட்டான்.. அவனிடமே நீ பேசிக்கோ தாரணி..” என்ற அபிநந்தன் பிரதாப்பிடம் அவர்களின் மகனைப்பற்றி விசாரிக்க ஆரம்பிக்க, “வாங்க அண்ணா..” என்றழைத்த பிருந்தா, “இவள் என்னவோ கேட்கிறாள் என்ன என்று கேளுங்க..” என்றவள் தாரணியை மாட்டிவிட்டு குறும்புடன் சிரித்தாள்..

“அண்ணா உங்க பெண் பிரியாவை என்னோட மகனுக்கு கட்டிதருவீங்களா..” என்றவள் கேட்க, “முதலில் என்னோட பெண் சரியென்று சொல்லட்டும்.. அடுத்து மற்ற விஷயங்களை பேசலாம்..” என்றவர் சொல்ல, “பிரியா இங்கே வாம்மா..” என்றழைத்த தந்தையின் குரல்கேட்டு படுக்கையைவிட்டு வேகமாக எழுந்தாள் பிரியா..

இரண்டு கண்களையும் அழுந்த துடைத்தவள், ‘என்னவாக இருந்தாலும் என்னோட பதிலை நான் சொல்லித்தான் ஆகணும்..’ என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவள் அறையின் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்ல வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது..

“அண்ணா வந்துவிட்டனோ..” என்ற படபடப்புடன் வேகமாக அறையில் இருந்து வெளியே வந்தாள் மித்ரா.. அவளின் எதிர்பார்ப்பு பொய்யாகாமல் சந்தோஷ் தான் வீட்டிற்குள் நுழைந்தான்..

அவன் வருவதைக் கவனித்த அபிநந்தன், “இவன் என்னோட பெரிய மகன் சந்தோஷ்..” என்றவர் அறிமுகம் செய்ய, “வா சந்தோஷ்..” என்றழைத்தார் பிருந்தா..

அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்திருக்கும் பெரியவர்களைப் பார்த்தவன், “வாங்க..” என்று பொதுப்படையாக வரவேற்றான்..

“இங்கே உட்காரு சந்தோஷ்..” என்ற தந்தையைப் பார்த்தவன் அப்பொழுதுதான் அங்கே நின்ற பிரியாவைக் கவனித்தவன், ‘இவள் எதுக்கு முகத்தை இப்படி வெச்சிருக்கா..?’ என்றவன் யோசிக்க அதற்கான பதிலை விக்ரம் சொன்னார்..

“பிரியா இவங்க மகனுக்கு உன்னை பெண்கேட்டு வந்திருக்காங்க.. உனக்கு இதில் விருப்பமா..?” என்று விக்ரம் எதார்த்தமாகக் கேட்டார்..

அவரின் கேள்வியில் நிமிர்ந்து பிரியாவின் முகம் பார்த்த சந்தோஷ், “அப்பா இத்தனை பெயரின் முன்னால் கேட்டால் அவளுக்கு தயக்கமாக இருக்காதா..” என்றவனை நிமிர்ந்துப் பார்த்தாள் பிரியா..

“நான் கேட்டு சொல்கிறேன்..” என்றவன் அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமல் பிரியாவின் கையைப்பிடித்து இழுத்துச் சென்றான்..

“இவங்க ஆறு பேரும் சரியான கூட்டுகளவாணிகள்.. நீ தவறாக நினைக்காதே தாரணி.. சின்னத்தில் இருந்தே கூடவே வளர்ந்த பாசம்..” என்ற அபிநந்தன் பார்த்த பிரதாப், “ஒரே வயதுதானே.. இப்போ எல்லாம் சகஜம்..” என்றவர் சொல்ல மீண்டும் மற்றவர்கள் பேச ஆரம்பித்தனர்..

தன்னுடைய அறைக்குள் சென்று கதவைச் சாத்திதாளிட்ட சந்தோஷ் அடுத்த நிமிஷம் பிரியாவின் கன்னத்தில், ‘பளார்..’ என்று அறைவிட்ட அறையின் மூலையில் போய் விழுந்தாள் பிரியா..

‘அவனுக்கு எதற்கு இந்த அளவிற்கு கோபம் வந்தது..’ என்று அவனுக்கே தெரியவில்லை.. அவளின் மீதிருந்த கோபம் நொடிக்கு நொடி அதிகரிக்க அவளை முறைத்துக்கொண்டே நின்றவனின் விழியிரண்டும் செந்தணலாக மாறியிருந்தது..

அவளிடம் இருந்து இப்படி செயலை அவள் எதிர்பார்க்கவே இல்லை.. அவனின் அடியில் அவளின் கன்னம் சிவந்து வலியெடுக்க, “அத்து..” என்றவளின் கரம் இடது கன்னத்தை தாங்கி இருந்தது..

“என்ன தைரியத்தில் அவங்க முன்னாடி வந்து நிற்கிற..” என்றவனின் வார்த்தைகளில் இருந்தே அவனின் கோபம் தெரிந்தது..

“அத்து..” என்றவள் அவனை இமைக்காமல் பார்க்க, “நான் தீபிகாவைக் காதலிக்கிறேன்.. அதுக்கு என்னை பழிவாங்க நீ அவனைக் கல்யாணம் செய்ய போகிறாயா..” என்றவன் அவளின் அருகில் சென்றான்..

“என்னை நீ புரிஞ்சிக்காமல் இருந்தாலும் பரவல்ல.. ஆனால் நீ ஏன் பிரியா புரிந்தும் புரியாதது போல நடந்துக்கிற..” என்றவன் கோபத்தில் கேட்க அவளோ மெளனமாக இருந்தாள்..

“இந்த மௌனம்தான் பிரியா எதற்கு என்று எனக்கு புரியவே இல்ல..” என்றவன் சொல்ல அப்பொழுதும் மெளனமாக இருக்க, “இந்த மௌனத்தால் தான் தேனு என்னை உயிரோட வெச்சு புதைக்கிறது..” என்றவனின் கண்கள் அவளின் கன்னத்தில் பதிந்தது..

அவளின் சிவந்த கன்னத்தை வருடியவன், “ஸாரி தேனு.. என்னோட கோபத்தை என்னால கட்டுபடுத்த முடியல.. ஸாரி..” என்றவன் அவளின் சிவந்த கன்னத்தை வருடிவிட்டு, “மையூமா..” என்றழைக்க அவள் நிமிர்ந்து அவனின் விழியைப் பார்த்தாள்..

‘இந்த நிமிஷம் நீதாண்டா எனக்கு வேண்டும் என்று சொல்லு.. அடுத்த நிமிஷம் நான் எதுக்காக இப்படி நடந்துகிட்டேன் என்று நானே சொல்றேன்.. எனக்கு தீபிகா மீது காதல் இல்லடி.. உன்மேல் தாண்டி நான் உயிரையே வெச்சிருக்கேன்..’ என்றவன் அவளை இமைக்காமல் பார்த்தான்..

சந்தோஷ் பார்வை எதிர்கொண்ட பிரியாவின் விழிகள் இரண்டும் கலங்க அவளின் கண்ணீரை மென்மையாகத் துடைத்துவிட்ட சந்தோஷ், ‘ஆனால் அவளுக்கு பதிலடி கொடுக்கும் வரை என்னோட காதலை உன்னிடம் நான் சொல்லவே மாட்டேன்..’ என்று நினைத்தவனின் பார்வை அவளின் காதல் மனதை யாசித்தது..

இருவரின் காதல் கொண்ட மனமும் மெளனமாக பேசிக்கொண்டது.. இருவரின் இதயமும் எந்த நேரம் ஒன்றிணைந்தது என்று இருவரும் உணராமல் இருந்தனர்.. அப்பொழுது சந்தோஷ் செல் அடிக்க அவர்களின் மௌனநிலைக் கலைந்தது..

அவன் செல்லின் திரையைப் பார்க்க, “சந்தோஷ்..” என்ற அபிநந்தனின் குரல்கேட்டவன் பிரியாவின் பக்கம் திரும்பி, “இரு நான் இந்தோ வரேன்..” என்றவன் அறையின் கதவைத் திறந்துகொண்டு வேகமாக வெளியே சென்றான்..

அவனின் முகம் பார்த்த விக்ரம், “பிரியா என்னப்பா சொன்னாள்..?” என்றவர் கேட்க, “அவளுக்கு இப்போ திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்ற மாமா..” என்றவனின் முகத்தைக் பிருந்தாவின் பார்வை சந்தேகமாகவே பார்த்தது..

அவன் சொன்ன பதிலை உள்ளிருந்து கேட்ட பிரியாவின் மனதில் நிம்மதி பரவ, ‘தேங்க்ஸ் அத்து..’ என்றவள் விழிமூடி சுவற்றில் சாய்ந்தாள்.. அதுவரை இருந்த பதட்டம் குறைய கன்னம் வலியில் வின் வின் என்று வலித்தது..

தாயின் பார்வையை எதிர்கொள்ள முடியாத சந்தோஷ், ‘யாரை வேண்டுமாலும் ஏமாற்றலாம் இவங்கள ஏமாற்ற முடியாது போலவே..’ நினைக்க, “என்ன கண்ணா இது பிரியாவே சொன்னாளா..? இல்ல அவளுக்கு பதிலாக நீயே சொல்றீயா..” என்றவர் சந்தேகத்துடன் கேட்டார்..

“அம்மா நீங்க அவளிடமே போய் கேளுங்க.. அவளும் இதே பதில் தான் சொல்லுவா..” என்றவன் சிரித்துக்கொண்டே அறையை நோக்கி கைகாட்டிட, “சரிடா செல் எடுத்து பேசு..” என்றவர் சொல்ல, “ஐயோ என்ன அண்ணா இப்படி சொல்லிட்டா..” என்று தாரணி வருத்தப்பட “அட விடு தாரணி..” என்று மனைவியைத் தேற்றினார் பிரதாப்..

“திருமணத்தில் முடிவெடுப்பது அவளோட விருப்பம்.. நம்ம கட்டாயம் படுத்த முடியாது..” என்றாள் மீரா.. அதன்பிறகு எல்லோரும் பேசும் பொழுது அர்ஜூன்- மேகா இருவரும் வந்துவிட பேச்சு அப்படியே திசைமாறிவிட்டது..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top