அத்தியாயம் – 2காலையில் கிழக்கே கீழ்வானம் சிவந்த நிறத்தை பூசிக்கொள்ள பறவைக்க எல்லாம் இரைதேடி பறப்பதை தன்னுடைய அறையில் இருந்து ரசித்தபடியே ஜன்னலோரம் நின்றவளின் விழியோரம் அவனின் நினைவுகள் படையெடுக்க அவளின் விழிகள் கலங்க நின்று அந்த விடியலை ரசித்துக்கொண்டிருந்தாள் விக்ரமின் மகள் பிரியதர்ஷினி..
‘இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் என்ற நினைவு கூட அவனுக்கு இருக்குமான்னு தெரியல.. இவன் வேண்டும் என்று பண்றானா.. இல்ல என்னை வெறுக்க வைக்க இப்படி பண்றானா ஒண்ணுமே புரியல..’ என்றவள் மனதில் புலம்பிக் கொண்டிருக்க அதே நேரத்தில்வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வாசலுக்கு விரைந்தார் மணிகண்டன்..
காரில் இருந்து வேகமாக இறங்கிய சங்கமித்ரா, “ஹாய் தாத்தா..” என்று சொல்ல, “சீதா..” என்று வீட்டின் உள்ளே குரல்கொடுக்க வேகமாக அவரின் அருகில் ஓடிச்சென்றவள், “ஐயோ தாத்தா நாங்க சஸ்பன்ஸ வந்திருக்கோம்.. நீங்க பாட்டியை கூப்பிறேன்னு பிரியாவிடம் எங்களை மாட்டி விட்டீங்க அவ்வளவுதான்..” என்றவரை மிரட்டினாள்..
அவளின் மிரட்டல் கண்டு பயந்தது போல நடித்த மணிகண்டன், “அப்படி அப்பனுக்கு மறுப்பிறவி..” என்று கூறியவர் அப்பொழுதுதான் சங்கமித்ராவின் பின்னோடு நின்ற மதுபாலா, சஞ்சனா இருவரையும் கவனித்து, “நீங்க எப்போடா வந்தீங்க..” என்று புரியாமல் கேட்டதும் இடையில் கையூன்றி இரண்டு பேத்திகளும் அவரை முறைத்தனர்..
“தாத்தா உங்களுக்கு கண்ணாடி போட்டு எங்கள கண்ணு தெரியல.. உங்கள என்ன பண்ணும் தெரியுமா..” என்று கோபத்துடன் கேட்டதும், “அது ஒன்னும் இல்லடா.. சங்கமித்ரா என்னை மிரட்டிய மிரட்டலில் உங்கள கவனிக்க மறந்துட்டேன்..” என்று கூறியதும், “அக்கா மிரட்டியதில் தப்பே இல்ல..” என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்தனர்..
சங்கமித்ரா, மதுபாலா, சஞ்சனா மூவரையும் பாதத் மணிகண்டன், “இன்னைக்கு எனக்கு எமகண்டம் போல..” என்று தனக்குள் புலம்பியபடியே வீட்டின் உள்ளே நுழைய, மதுபாலாவும், சஞ்சனாவும், சமையறை நோக்கிச் சென்றனர்..
இன்று பிரியதர்ஷினிக்கு இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள்.. அதை கொண்டாட சங்கமித்ரா, மதுபாலா, சஞ்சனா மூவரும் சென்னை இருந்து கிளம்பி வந்திருந்தனர்..
இருவரின் பின்னோடு வீட்டின் உள்ளே நுழைந்த சங்கமித்ரா, “பாலா, சஞ்சு நீங்க இருவரும் பாட்டிக்கிட்ட போய் நான் வந்திருக்கேன்னு சொல்லுங்க.. அப்புறம் என்ன என்ன ஏற்பாடு எல்லாம் பண்ணனும் என்று நினைக்கிறீங்களோ அதை எல்லாம் பண்ணுங்க..” என்று சொல்ல, “அக்கா எங்களுக்கு துணைக்கு வேலை செய்ய ஆள் இல்லையே..” என்று பாவமாகக் கேட்டாள் சஞ்சனா..
வீட்டின் உள்ளே நுழைந்த தாத்தாவைப் பார்த்த மதுபாலா, “அதன் நமக்கு வேலை செய்ய தாத்தா இருக்கிறார் இல்ல.. நீ வா முதலில் போய் சீதா என்ன பண்றங்கன்னு கவனிப்போ..” என்று சொல்ல மித்ரா வாய்விட்டுச் சிரிக்க தங்கையை அழைத்துக்கொண்டு சமையறை நோக்கி நகர்ந்தாள் மதுபாலா..
அவள் சொன்னதைக் கேட்ட மணிகண்டன், ‘எனக்கு இந்த வயசில் எமகண்டம் வருதே..’ என்று மனதிற்குள் புலம்பினாலும் அவரின் முகத்தில் புன்னகை அரும்பியது.. அவரின் அருகில் சென்ற சங்கமித்ரா, “தாத்தா என்னோட டார்லிங் மேலதான் இருக்காளா..?” என்று கேட்டதும் அவரும் ஆமாம் என்று மேலும் கீழும் தலையசைக்க, “நான் போய் என்னோட டார்லிங்கை பார்த்துவிட்டு வரேன்..” என்று வேகமாகப் படியேறினாள்..
“ஹாய் பாட்டிமா..” என்று ஆர்ப்பாட்டமாக சமையலைக்குள் நுழைந்த மது, சஞ்சு இருவரின் குரல்கேட்டு திரும்பியவர், “அடேடே என்னோட செல்லம் இரண்டும் எப்போ வந்தீங்க.. ஆமா பிருந்தா, மீரா, மலர், மேகா எல்லோரும் எப்படி இருக்காங்க..” என்று விசாரிக்க சமையல் மேடையில் ஏறியமர்ந்தாள் சஞ்சனா..
“நாங்க வந்திருக்கோம் எங்களை விசாரிக்காமல் ஆயிரம் மையிலுக்கு அந்தபக்கம் இருக்கும் உங்க மகள்களை விசாரிக்கிறீங்க.. இது எல்லாம் நியாயமா..?” என்று மதுபாலா கேட்க, “அதானே..” என்று ஒத்து ஊதினாள் சஞ்சனா..
அவர்களின் கேள்வியில் திகைத்து நின்ற சீதா, “நான் பேத்த பொண்ணுங்க இரண்டும் சேர்ந்து பெத்து வைத்திருக்கிறது பாரு மணி மணியாக இரண்டு பிள்ளை..” என்று கூறியவர், “இப்போ எதுக்குடி இங்க வந்தீங்க.. உங்கள இங்கே அனுப்பி வெச்சுட்டு அவங்க இருவரும் அங்கே நிம்மதியாக இருப்பாங்க..” என்று கூறிய சீதாவைப் பார்த்த சஞ்சனா, “எப்படி பாட்டி..?” என்று கேட்டு திகைக்க வைத்தாள்..
அப்பொழுதுதான் ஒரு விசயத்தைக் கவனித்த சீதா, “ஆமா நீங்க இருவரும் தனியாகவா வந்தீங்க..?” என்று கேட்க இல்லையென தலையசைத்த மதுபாலா, “மித்ராக்கா வந்திருக்காங்க.. பிரியாவைப் பார்க்க அவங்க அறைக்கு போயிருக்காங்க..” என்று குண்டைத் தூக்கிப் போட்டாள் மதுபாலா..
“ஐயோ இன்னைக்கு அவளுக்கு பிறந்தநாள்.. அவ என்ன சேட்டை செய்ய மேல போயிருக்களோ..” என்று பதறியவர் வேகமாக சமையறை விட்டு வெளியே வந்து, “பிரியா..” என்று அறையை நோக்கி குரல்கொடுக்க, “இந்த பாட்டி காரியத்தையே கேடுத்துடாங்க..” என்று புலம்பியபடி அங்கிருந்த திரை சீலை பின்னோடு மறந்து நின்றாள்..
“பிரியா..” என்ற அழைப்பில் கவனம் கலைந்து திருப்பிய பிரியா, “பாட்டி இதோ வந்துட்டேன்..” என்று குரல்கொடுத்துவிட்டு வேகமாக கலங்கிய விழிகளைத் துடைத்தாள்.. அவள் கண்கள் கலங்குவதைக் கவனித்த மித்ராவின் மனதில் அந்த எண்ணம் உதயமானது.. பிரியா அறையைவிட்டு வெளியே செல்ல அந்த அறைக்குள் நுழைந்தாள் மித்ரா..
அதற்குள் இரண்டு முறை அழைத்த சீதாவின் அழைப்பைக் கேட்டு வேகமாக அறையைவிட்டு வெளியே வந்த பிரியதர்ஷினி, “எனங்க பாட்டி..” என்று சிணுங்கலோடு கேட்ட விக்ரமின் மகளை நிமிர்ந்து பார்த்த மணிகண்டன், “என்னடா பிரியா இதுக்கு நீ சிணுங்கற..” என்று சிரித்தபடியே கேட்டார்..
அவளின் முகத்தில் புன்னகை அரும்ப, “ஒன்னும் இல்ல தாத்தா சும்மா..” என்று கூறியவள் மாடியில் இருந்து இறங்கி வர, “ஐயோ பிரியா கீழ வர..” என்று கூறிய மதுபாலா அந்த அறையைவிட்டு அறைக்குள் நின்று கொண்டாள்..
‘இவங்க வந்த விஷயம் அவளுக்கு தெரியல போல..’ என்று நினைத்துக்கொண்டே சமையலறையில் இருந்து வெளியே வந்த சீதா, “காலையில் குளிச்சுட்டு சீக்கிரம் கிளம்பு.. இன்னைக்கு கோவிலுக்கு போய் உன்னோட பெயருக்கு அர்ச்சனை பண்ணனுன்னு சொன்னேன் இல்ல.. அப்புறம் எதுக்குடி சிணுங்கற..” என்று கேட்டதும் அவளின் முகம் மாறிப்போனது..
‘இப்போ என்னோட பிறந்தநாள் கொண்டாட்டம் ரொம்ப முக்கியம்..’ என்று நினைத்தவளின் முகத்தையே பார்த்த சீதா, ‘இவ முதல் மாதிரி கலகலப்பாகவே இருக்க மாட்டேன்ற..’ என்று நினைத்துவிட்டு சமையறைக்குள் சென்றார்.. பாட்டி எதுவும் போட்டுக் கொடுக்காமல் வந்ததில் பேத்திகள் இருவரும் பேரும் மூச்சு விட்டனர்..
அதற்குள் அவளின் கையில் இருந்த செல்போன் சிணுங்கவும், ‘மித்ரா அவளோட சேட்டையை ஆரம்பிச்சிட்டா..’ என்று நினைத்தவர வாய்விட்டுச் சிரித்த மணிகண்டனைப் புரியாமல் பார்க்க, “அதுவும் உன்னை மாதிரியே சிணுங்குது பாரு..” என்றவளின் பார்வை கவனித்து அவளுக்கு பதில் சொன்ன தாத்தாவைப் பார்த்தவள், “ம்ம் சரிங்க தாத்தா..” என்று சிரித்தபடியே கூறியவள் செல்லோடு தன்னுடைய அறைக்கு சென்றாள்..
தன்னுடைய அறைக்குள் சென்ற மறுநொடி செல்லை எடுத்து காதில் வைக்க, “விஷ் யூ ஹாப்பி பர்த்டே மைனா..” என்று சந்தோஷின் குரல் ஒலிக்க சிலையென உறைந்து நிற்க, “என்னடி மையூமா.. அத்தான் குரல் கேட்டதும் திகைச்சு போய் நிற்கிறீயா..” என்று சிரித்துக்கொண்டே கேட்டதும் அதில் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள் பிரியா..
‘இது சந்தோஷ் குரல்..’ என்று நினைத்தவள் செல்லில் வந்த அழைப்பைப் பார்க்க அது மித்ராவின் நம்பரைக் காட்டியதும், ‘இந்த நம்பர் மித்ராவோட நம்பர்..’ என்றவள் யோசிக்க, “என்ன மைனா..” என்று தன் பின்னோடு கேட்ட சந்தோஷின் குரலில் வேகமாக திரும்பிய பிரியா அங்கே நின்றிருந்த மித்ராவைப் பார்த்ததும் ஒரு நிமிடம் நிலை தடுமாறினாள்..
அவளைப் பார்த்த மித்ராவோ, “என்ன அண்ணி இப்படி நிலை தடுமாறீங்க.. நீங்க சும்மா ஸ்ராங்க நிற்க வேண்டாமா..? இதோ என்னை மாதிரி..” என்று கேட்டதும், “அடிப்பாவி நீதான் இந்த சேட்டை எல்லாம் பண்ணியதா.. உன்னோட அண்ணாவின் குரலைக் கேட்டதும் என்னை கூட்டிட்டு போக உங்க அண்ணன் வந்து விட்டனோன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்..” என்று வருத்தத்துடன் சொல்ல மித்ராவிற்கு தன்னுடைய அண்ணனின் மீது கோபம் வந்தது..
‘இந்த அண்ணா செஞ்ச வேலைக்கு அவனை ஒரு வழி பண்ணனும்.. இவளோட பக்கம் எந்த தப்பும் இல்ல.. அவனோட பக்கமும் எந்த தப்பும் இல்ல.. இவங்க இருவரும் காதலை தெளிவாக புரிஞ்சிகிட்டும் வீம்பாக இருக்காங்க..’ என்று நினைத்தாள்..
அவள் யோசிக்கும் நேரத்தில் தன்னை மீட்டு வெளியே வந்த பிரியதர்ஷினி, “கொஞ்ச நேரத்தில் என்னை ஒரு பண்ணிட்ட..” என்றவள் கூறியதும் நிமிர்ந்த மித்ரா, “அண்ணி.. அண்ணி என்னோட செல்ல அண்ணி.. இத்தனை கிலோமீட்டர் இந்தபக்கம் வந்து உட்காந்துட்டு எல்லோரையும் படுத்தி எடுக்கிற.. அப்படியே எங்க அம்மா மாதிரி..” என்றவளின் கன்னம் கிள்ளி சிரித்துக்கொண்டே கூறிய மித்ராவைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் பிரியா..
Last edited: