• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then Sinthum Poovanam! - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
அவளின் சிரித்து நிமிர அவளின் கையில் ஒரு துணிப்பையை கொடுத்த மித்ரா, “இன்னும் கொஞ்ச நேரத்தில் சும்மா சூப்பராக கிளம்பி கீழே வரீங்க..” என்று கட்டளையிட்டவள் அந்த அறையைவிட்டு வெளியே சென்று, “ஐ லவ் யூ தேனு.. நீ என்னை தேடி வரலன்னா என்ன உன்னோட அத்து நான் உன்னை தேடி வந்துட்டேன் இல்ல..” என்று சொல்லி பிளைன் கிஸ் ஒன்றை பிரியாவை நோக்கி பறக்கவிட்டாள் மித்ரா..

அவள் சந்தோஷின் குரலில் பேசி அவளை கடுப்பேற, “ஏய் என்னை வெறுப்பேத்த தான் நீ ஊரில் இருந்து கிளம்பி வந்தியா..?” என்று கேட்டபடியே அவள் கொடுத்த துணிப்பையை கட்டலில் வீசிவிட்டு அவளைத் துரத்த ஆரம்பிக்க, “ஹே ஹனி மாமா உனக்கு மட்டும் தாண்டி.. நீ என்ன வேணும் என்றாலும் பண்ணு என்னோட காதல் மாறாது..” என்று சந்தோஷின் குரலில் கூறியவள் வேகமாக படியிறங்கி ஓடினாள்..

அவளுடைய குறும்பில் அவளைத் துரத்திக்கொண்டு ஓடிய பிரியதர்ஷினியின் முகத்தில் புன்னகையைப் பார்த்த மணிகண்டனும், சீதாவும் மனநிறைவு அடைய இருவரும் மதுபாலாவும், சஞ்சனாவும் பிரியதர்ஷினியின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்..

அவளை துரத்திப் பிடித்த தர்ஷினி, “ஏய் என்னோட அத்தான் மாதிரி பேசி என்னை வெறுப்பேத்தற..” என்று அவளின் முதுகில் அடிக்க, “ஐயோ இந்த அண்ணியோட கொடுமை பேரும் கொடுமையாக இருக்கே..” என்று கூறியவளை அடிப்பதை நிறுத்திவிட்டு, “என்னோட பிறந்தநாள் அன்னைக்கு நீயாவது வந்து என்னை சிரிக்க வைக்கிற.. ஆனா உங்க அண்ணா என்னை பற்றி நினைக்கவே இல்ல..” என்று கூறினாள்..

தீடீரென நிமிர்ந்து மித்ராவைப் பார்த்த பிரியதர்ஷினி, “ஆமா நீ மட்டும்தான் வந்திருக்க.. அம்மா, அப்பா, அத்தை, மாமா யாரும் வரலையா மித்ரா..” என்று ஆர்வமாகக் கேட்டதும், “இல்ல பிரியா யாரும் ஊரில் இருந்து வரல..” என்று கூறியதும், “என்னை எல்லோருமே மறந்துட்டாங்களா..?” என்று கேட்டாள்..

அவளைத் திசை திருப்ப நினைத்த மித்ரா, “ஏய் பிரியா போ போய் ரெடியாகு..” என்று சொல்ல சரியென தலையசைத்த பிரியதர்ஷினி வீட்டின் உள்ளே சென்றதும் எதையோ யோசித்தபடி அங்கே சிறிதுநேரம் நின்ற மித்ரா மீதும் வீட்டைநோக்கி நடந்தாள்.. அவள் குளித்துவிட்டு தயாராக வெளியே வரும் பொழுது அவளைப் பார்த்த சீதா சிலையாக நின்றுவிட்டார்..

பாட்டி சிலையே நிற்பதைப் பார்த்த மதுபாலாவும், சஞ்சனாவும் அறையைவிட்டு வெளியே எட்டிப்பார்க்க சிவப்பு நிறத்தில் தங்க கற்கள் பதித்த டிசைனர் புடவையில் எழில் ஓவியம் போல இறங்கி வந்தாள்.. அவளின் சந்தனநிறத்திற்கு அந்த புடவை அவளுக்கு பொருத்தமாக இருந்தது..

ஐந்தடி உயரமும் நேரான நெற்றியும், வில்லென வளைந்த புருவமும், நேரான மூக்கும் அதில் ஒளிர்ந்த வெள்ளை மூக்குத்தியும், சிவந்த உதடுகளும், அளவான உடலமைப்பிற்கு அந்த சேலைக்கும் அவ்வளவு அழகாக இருத்த அண்ணியைப் பார்த்த மது, “அண்ணி சூப்பராக இருக்காங்க இல்ல சஞ்சனா..?” என்று கேட்டாள்..

“ஆமா மதுக்கா அண்ணி ரொம்ப அழகாக இருக்காங்க..” என்று வேகமாகக் கூறியவள் தன்னுடைய செல்லை எடுத்து அவளறியாமல் அவளையே போட்டோ எடுத்த சஞ்சனா அவளின் போட்டோவை எடுத்து சந்தோஷிற்கு அனுப்பி வைத்தாள்..

அவள் போட்டோ எடுத்ததை பார்த்த மதுபாலா, “ஏய் சஞ்சனா என்னடி பண்ணிட்டு இருக்கிற..?” என்று கேட்க, “அண்ணியோட போட்டோவை எடுத்து அண்ணனோட நம்பருக்கு அனுப்பி இருக்கேன்..” என்று கூறியதும், “பிரியா அண்ணியை அண்ணா மட்டும் பார்த்தால் அந்த இடத்திலேயே அவன் தொலைந்தான்..” என்று சிரித்துக்கொண்டே கூறினாள் மதுபாலா..

தன முன்னே வந்து நின்ற தன்னுடைய பேத்திக்கு திஷ்டி கழித்த சீதா, “என்னோட பேத்தி அழகு.. அதுதான் என்னோட பேரன் உன்னையே கல்யாணம் பண்ணிட்டான் போல..” என்று சொல்ல சந்தோஷின் நினைவில் அவளின் புன்னகை மறைய, ‘அத்தான் நீங்க ஏன் அப்படி பண்ணீங்க..?’ என்று மனதிற்குள் அவனிடம் கேள்வி கேட்டவளின் கவனத்தைக் கலைத்தார் மணிகண்டன்..

“வாம்மா பிரியா கோவிலுக்கு போயிட்டு வரலாம்..” என்று அழைக்க சிரிக்க முயற்சி செய்த பிரியாவைப் பார்த்து மனம் வருந்தினாள் சங்கமித்ரா.. மணிகண்டன், சீதா, பிரியதர்ஷினி மூவரும் கோவிலுக்கு கிளம்பினர்..

அப்பொழுது கூட பிரியாவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தன்னுடைய வேலையைக் கவனித்துக் கொண்டிருந்த பேத்திகளைப் பார்த்த மணிகண்டன், “நீங்க இருவரும் கோவிலுக்கு வரல..” என்று கேட்டதும், “நீங்க போயிட்டு வாங்க.. நாங்க இங்கே வேலையைப் பார்க்கிறோம்..” என்று கோரஸாகக் கூறியவர்கள் மும்பரமாக வேலை செய்து கொண்டிருந்தனர்..

“அது சரி..” என்று சொல்லிவிட்டு நகர்ந்த மணிகண்டனுடன் வாசல்வரையில் வந்த மித்ராவை பார்த்த தர்ஷினி, “வா மித்ரா கோவிலுக்கு போயிட்டு வரலாம்..” என்றழைக்க, “இல்ல அண்ணி நீங்க போயிட்டு வாங்க..” என்று அவர்களை அனுப்பி வைத்தவள் போனை எடுத்து நந்தனுக்கு அழைத்தாள்..

மறுப்பக்கம் அழைப்பு போய் கொண்டே இருக்க மித்ராவிற்கு கோபம் தலைகேறியது.. மறுப்பக்கம் அவளின் அழைப்பை எடுத்த நந்தன், “மித்து என்னடா கண்ணா ஊருக்கு போய் சேர்ந்தீங்களா..? என்னோட மருமகள் பிரியா என்ன பண்ணிட்டு இருக்கிற..? நல்ல இருக்காளா..? தாத்தா, பாட்டி எப்படி இருக்காங்க..?” என்று நிமிடத்தில் ஆயிரம் கேள்விகளைக் கேட்டார்..

அவரின் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லாத மித்ரா, “அப்பா அண்ணா எங்கே..?” என்று கேட்டு நந்தனின் பொறுமையை சோதிக்க, “என்னோட மகள் என்று நிரூப்பிக்கிற உன்னோட மகள்..?” என்று மனைவியிடம் கூறினார் நந்தன்..

“உங்க மகள்தானே அப்புறம் உங்கள மாதிரி இல்லாமல் வேற யார் மாதிரி இருப்பா..?” என்று எப்பொழுதும் போலவே கணவனை வாரினாள் பிருந்தா..

“பிந்து நீ வர வர பேசுவதே சரியில்ல..” என்று அழைப்பில் இருந்த மகளைக் கவனிக்காமல் மனைவியுடன் சண்டை போட்ட, “அப்பா..” என்று கோபத்தில் பல்லைக் கடித்தாள் மித்ரா..

“ஐயோ மெதுவாக பேசு மித்ரா காத்து வலிக்குது..” என்று மகளிடம் கத்திய கணவனைப் பார்த்து புன்னகைத்தபடியே தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள் பிருந்தா..

“அண்ணா இப்போ எங்கே இருக்கான்..?” என்று மீண்டும் அதே கேள்வியை மகள் கேட்க, “உன்னோட அண்ணா நேற்று காலையில கிளம்பி போனவன்தான் இன்னும் அவன் வீடு வரல..” என்றவர் சொல்லி முடிக்கும் முன்னே போனை வைத்தாள் மித்ரா..

“அண்ணா இப்போ எங்கே போயிருப்பான்..?” என்றவள் யோசிக்க, அவள் போனை வைத்தும், “என்னை மாதிரியே இருக்கிற..” என்றவர் புலம்ப அவனைப் பார்த்து புன்னகைத்த பிருந்தா, “ஆண்டவா என்னோட மகன் பிரியாவைத் தேடி போயிருந்தால் நல்ல இருக்குமே..?” என்று வாய்விட்டு இறைவனிடம் வேண்டிகொண்டார்..

“அவன் பிரியாவைத் தேடி போக மாட்டான் பிருந்தா..” என்று கூறிய கணவனை முறைத்தாள் பிருந்தா.. அவளின் முறைப்பதை கவனித்த நந்தன் அந்த இடம் விட்டு நகர்ந்தான்..

சந்தோஷ் அப்படி என்ன செய்தான்..? இப்போ எங்கே இருக்கான்..? பிரியாவைத் தேடி அவன் வருவானா..?

Nice start and superb update
 




Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
Nice Starting sandhiya. Santhosh varuvana..... waitingggggg sandhiya ????
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Superb strt sis:love::love:
Priya Santhosh life laa Perusa etho nadanthuruku pola
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
samaaa sandiya ithulayum name selection mathubala sanjanaaa sanga mithra super da

santhosh and priya ku ena prblm avnga love la 2 perume strong ah irukangale aprm yean pirinji irukangaaa

karuvil uruvanaa sontham eppo chlm epi tharuveengaaa
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top