அத்தியாயம் – 2௦
மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.. அந்த விடியலைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த பிரியாவின் விழிகள் இரண்டும் சிவந்திருந்தது..
தன்னுடைய கையில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்தவள், ‘ம்ஹும்.. இதுக்கு மேல் நான் பொறுமையாக இருக்க முடியாது.. இந்த பத்திரிக்கைக்கு ஒரு பதில் வேண்டும்..’ என்ற உறுதியுடன் விழியைத் துடைத்துவிட்டு வேகமாக எழுந்தாள்..
காலையில் விடிந்தும் குளித்துவிட்டு அந்த பட்டுசேலையைக் கட்டிக்கொண்டு கண்ணாடி முன்னாடி நின்றாள்.. அவள் அழுததற்கு அடையாளமாக இரண்டு விழிகள் மட்டுமே சிவந்திருப்பது கண்டு, ‘உனக்கு கேரளா பொண்ணு கேட்குதா..?’ என்று நினைத்தவள் வேகமாக கிளம்பி கீழே சென்றாள்..
அதிகாலை நேரத்தில் முழு அலங்காரத்துடன் வரும் பேத்தியைப் பார்த்த சீதாலட்சுமி வேகமாக சமையலறையில் இருந்து வெளியே வந்தார்.. சோபாவில் அமர்ந்திருந்த மணிகண்டனைப் பார்த்தவர், “என்னங்க பேத்தி இவ்வளுவு சீக்கிரம் ஆபீஸ் கிளம்பிட்டா..” என்று சொல்ல பேப்பர் படித்துகொண்டிருந்த மணிகண்டன் நிமிர்ந்து பிரியாவைப் பார்த்தார்..
“என்ன பிரியா இவ்வளவு சீக்கிரம் ஆபீஸ் கிளம்பிட்டியே.. மணி இப்போதான் ஆறு ஆகுதுடா.. இரு நான் உனக்கு சாப்பிட ஏதாவது செய்து தருகிறேன்..” என்றவர் சொல்ல, “இல்லங்க பாட்டி எனக்கு வேண்டாம்.. நான் ஊருக்கு போகிறேன்..” என்றவள் சொல்ல வினோதமாக பிரியாவைப் பார்த்த மணிகண்டன், “என்ன செல்லம் ஆச்சு.. எதுக்கு இப்போ ஊருக்கு போகிறாய்..?” என்று விசாரித்தார்..
“நேற்று வந்த பார்சலுக்கு விளக்கம் தெரியணும் தாத்தா.. அதுக்குதான் தாத்தா ஊருக்கு போறேன்..” என்றவள் சொல்ல, “அப்போ பார்சல் அனுப்பியது சந்தோஷா..?” என்றவர் கேட்க, “ம்ம் அத்துதான் தாத்தா..” என்றவள் சொல்லிகொண்டிருக்க பூஜை அறைக்கு சென்ற சீதாலட்சுமி விபூதியை எடுத்து வந்து அவளின் நெற்றியில் வைத்துவிட்டவர்,
“உனக்கு ஒரு தடங்களும் வராது.. நீ முதலில் கிளம்பு செல்லம்..” என்றவர், “இங்கிருந்து சேலத்திற்கு பஸில் போடா.. அது உனக்கு பாதுகாப்பு.. அதற்கு மேல் ரயிலில் போன மத்தியானம் ஒரு மணிக்கு உள்ள சென்னை போய்விடலாம்..” என்றவர் பேத்திக்கு அறிவுரை கூறினார்..
“இல்லங்க பாட்டி நான் காரில் ஊருக்கு போகிறேன்..” என்றவளின் விழியிரண்டும் கலங்கிட, “பாட்டி நான் போயிட்டு வருகிறேன்..” என்று சொல்ல, “ம்ம் கிளம்பு பிரியா..” என்ற இருவரும் வாசல்வரை வந்து அவளை வழியனுப்பி வைக்க காரில் ஏறியவள் வேகமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்..
ஏற்காட்டில் இருந்து பிரியா கிளம்பியதும் மாணிக்கம் சந்தோஷிற்கு அழைக்க, “அவனுக்கு போன் செய்ய வேண்டாங்க.. அவன் இன்னும் பிள்ளையை அழுக வைப்பான்..” என்று சீதா சொல்ல, “சரி சீதா..” என்றவர் விக்ரமிற்கு போன் செய்தார்..
அவரின் அழைப்பை எடுத்த விக்ரம், “அப்பா பிரியா சென்னை கிளம்பி வருகிறாளா..?” என்றவர் கேட்க, “அது எப்படிப்பா உனக்கு தெரியும்..?” என்று கேட்டார் மாணிக்கம்..
“அதெல்லாம் அவள் கிளம்பி வருவாள் என்று நேற்றே எனக்கு தெரியும் அப்பா.. இனிமேல் அவங்களே ஒரு முடிவாக எடுக்கட்டும் என்றவர் போனை வைத்துவிட்டு தன்னுடைய வேலையைக் கவனிக்க, “யாருங்க போனில்..?” என்று கேட்ட மீராவிடம் அனைத்தையும் கூறினார்..
“இனி என்ன நடக்கிறது என்றுதான் பார்க்கலமே..” என்றவர் சொல்ல மீராவிற்கும் அதுவே சரியெனப்பட்டது.. அதன்பிறகு மீரா சமையல் வேலையைக் கவனிக்க விக்ரம் தன்னுடைய கையில் இருந்த ஆபீஸ் பைலில் மூழ்கிப்போனார்..
காலையில் வீடே பரபரப்புடன் இருக்க தங்கையின் அறைக்கு சென்ற சந்தோஷ், “மித்ரா இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.. நான் முன்னாடி போகிறேன்.. நீ சீக்கிரம் கிளம்பி வா..” என்றவன் சொல்ல, “அண்ணா நைட் எல்லாம் பிரியா கால் பண்ணிடே இருந்தா.. நான் போன் எடுக்கல இந்தா உன்னோட போன்..” என்றவள் செல்லை அவனிடம் கொடுத்தாள்..
“தேங்க்ஸ் மித்ரா.. காரணம் தெரியாமலே ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாய்.. அதுவரை ரொம்ப சந்தோஷம்..” என்றவன் பிரகாசமான முகத்தோடு வேகமாக அங்கிருந்து கிளம்பிச் செல்ல மாடியில் இருந்து வேகமாக கீழிறங்கி வந்த மித்ரா சமையலறைக்குள் சென்றாள்..
“அம்மா இன்னைக்கு உன்னோட மகன் ஒரு மார்க்கமாக இருக்கிறான்.. என்னவோ சரியில்ல.. என்ன என்று விசாரிங்க..” என்றவள் சொல்ல, “அது என்னவென்று அப்புறம் கேட்காமல் மித்ரா.. இந்த இந்த காயை நறுக்கி சமையலை முடித்துவிடு..” என்றவர் சொல்ல, “அம்மா..” என்று அதிர்ந்தாள் மகள்..
“மித்ரா உனக்கு செல்லம் கொடுத்த காலம் எல்லாம் மலையேறி போச்சு.. இந்த இன்றிலிருந்து நீதான் சமையல் செய்யணும்.. நீ எவ்வளவு கேவலமாக சமையல் செய்தாலும் சாப்பிட நாங்க எல்லோரும் ரெடி.. பட் நீ சமையல் நல்ல செய்து பழகு.. அது நாளைக்கு உன்னோட புகுந்த வீட்டில் உனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும்..” என்றவர் சொல்ல மித்ரா அழுவதற்கு தயாரானாள்..
மித்ராவை சமையலறையில் பார்த்த அபிநந்தன், “என்ன மித்ரா இங்கே என்ன பண்ற..?” என்றவர் கேட்க, “அப்பா அம்மா என்னை சமையல் பண்ண சொல்லிட்டாங்க அப்பா..” என்றவள் குழந்தை போல சிணுங்க வாய்விட்டு சிரித்தார் அபிநந்தன்..
அவர் சிரிப்பதை மித்ரா கொலைவெறியுடன் பார்க்க, “இந்த விஷயத்தில் உங்க அம்மா செய்ததுதான் சரி.. நீ சமையலை தொடங்கு..” என்றவர் மேகாவின் பக்கம் திரும்பியவர், “நீயும் வா மேகா.. அவளே சமையல் செய்யட்டும்..” என்றவர் சொல்ல, “அப்பா..” என்று சினுங்கினாள் மகள்..
“உன்னோட சிணுங்கள் எல்லாம் இங்கே செல்லுபடி ஆகும்.. புகுந்த வீட்டில் அது எல்லாம் நடக்காது செல்லம்.. உனக்கு உதவிக்கு மதுவை அனுப்பி வைக்கிறேன்..” என்றவர், “இன்னைக்கு அவளும் மதுவும் சமையல் செய்யட்டும்.. நம்ம யாரும் அவர்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம்..” என்றவர் சொல்லிவிட்டு முன்னே செல்ல அவரை பின் தொடர்ந்தனர் பிருந்தாவும் மேகாவும்..!
அபிநந்தன் – பிருந்தா இருவரும் திருமண ஏற்பாடுகள் பற்றி பேச சமையல் வேலையைக் கவனித்தாள்.. மதுவும் அவளுக்கு துணைக்கு வர சஞ்சீவ் நன்றாக தூகிக் கொண்டிருக்க சந்தோஷ் ஆபீஸ் கிளம்பிச் சென்றான்..
மோகன் – சுமதி இருவரையும் அழைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றிருந்தார்.. சந்துரு – மலர்விழி இருவரும் வேறொரு விசயமாக வெளியே சென்றிருந்தனர்.. ஏற்காட்டில் இருந்து கிளம்பிய பிரியா கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் சென்னையை அடைந்தாள்.. அவள் முதலில் வீட்டிற்கு சென்றாள்..
சென்னையில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்க அந்த மதியான நேரத்தில்பிருந்தாவனம் உள்ளே நுழைந்தவாழ்க காரைவிட்டு கீழிறங்க காரின் சத்தம் கேட்ட விக்ரம் வாசலை எட்டிப்பார்க்க பிரியாதான் காரில் இருந்து இறங்கினாள்..
“பிரியா வாடா..” என்றவர் பாசத்தோடு அழைத்தபடி வேகமாக வாசலுக்கு வர அவரின் அழைப்பைக் கவனிக்காத பிரியா நேராக சந்தோஷ் வீட்டிற்குள் நுழைந்தாள்..
கணவரின் அழைப்பைக் கேட்டு வெளியே வந்த மீரா, “என்னங்க பிரியா எங்கே..?” என்று கேட்க, “பிருந்தா வீட்டிற்குள் போகிறாள் வா..” என்றவர் முன்னே செல்ல மீரா அவளைப் பின் தொடர்ந்தார்..
திருமண ஏற்பாடுகள் பற்றி பேசிகொண்டிருந்த அபிநந்தன் யாரோ வரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப் பார்க்க பிரியா புயல் வேகத்தில் வீட்டிற்குள் நுழைய அப்பொழுதுதான் அறையைவிட்டு வெளியே வந்த சஞ்சீவ், “அண்ணி..” என்ற அழைப்புடன் வேகமாக மாடியில் இருந்து இறங்கினான்..
அப்பொழுதுதான் பிரியா வருவதைக் கவனித்த பிருந்தா, “வா பிரியா.. என்ன தீடீரென்று வந்து நிற்கிற..” என்றவர் புன்னகையோடு எழுந்து அவளின் அருகில் செல்ல, “அத்தை இங்கே என்ன நடக்கிறது.. அத்துவிற்கு கிரிஜா என்ற பெண்ணை பொண்ணு பார்த்து பத்திரிகை எல்லாம் அடிச்சிருக்கீங்க..” என்றவள் கோபத்தோடு கேட்டாள்..
அவளின் பேச்சில் இருந்தே, ‘இது சந்தோஷ் வேலை..’ என்று உணர்ந்த பிருந்தா, “ஆமா அதுக்கு இப்போ என்ன பிரியா செய்ய சொல்ற.. நாங்களும் எவ்வளவு நாள்தான் பொறுமையாக இருப்பது..?” என்றவர் விக்ரம் கேட்ட அதே கேள்வியைக் கேட்க, “என்னோட வீம்பிற்கு இது எல்லாம் எனக்கு தேவைதான்..” என்றவள் தலையில் அடித்து கொண்டாள்..
“உனக்கு என்ன விளக்கம் என்றாலும் சந்தோஷ் சொல்வான் அவனிடம் போய் கேளு பிரியா..” என்றவர், “என்னங்க நம்ம எப்போ கல்யாணத்திற்கு ஜவுளி எடுக்க போகலாம்..” என்று பேச்சை மாற்றிட பிரியாவின் கோபம் அதிகரிக்க, “அப்போ என்னைபற்றி யாருக்குமே இங்கே அக்கறையே இல்ல..” என்றவள் கோபத்துடன் கேட்டாள்’’
“அண்ணி எனக்கு ஒரு விஷயம் புரியல.. அப்பா இப்போதான் கல்யாண தேதியைத் தேடிட்டு இருக்கிறாரு.. அதுக்குள்ள எப்படி பத்திரிகை..?” என்று மது அவளிடம் கிண்டலோடு கேட்க மித்ராவும், சஞ்சீவ் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்..
அப்பொழுது வீட்டின் உள்ளே நுழைந்த விக்ரம், “அதுதானே..? அவங்க இப்போதான் முகூர்த்தம் எந்த தேதியில் வைக்கலாம் என்று குறிக்கிறாங்க.. உனக்கு மட்டும் எப்படி பிரியா பத்திரிகை கைக்கு கிடைக்கும்..?” என்றவரும் அவளிடம் சந்தேகம் கேட்டார்..
ஒருவர் மாற்றி ஒருவர் சிரிப்பதைக் கண்ட பிரியாவிற்கு கோபம் அதிகரிக்க, “இது எல்லாம் அத்துவோட வேலை.. அது உங்க எல்லோருக்கும் தெரியும் இல்ல.. முதலில் அவனிடம் கேட்டுட்டு வந்து உங்களை எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்..” என்றவள் வேகமாக செல்ல, “பிரியா காரில் கவனமாக போ..” என்று குரல் கொடுத்தனர் மீராவும், பிருந்தாவும்..!
மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.. அந்த விடியலைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த பிரியாவின் விழிகள் இரண்டும் சிவந்திருந்தது..
தன்னுடைய கையில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்தவள், ‘ம்ஹும்.. இதுக்கு மேல் நான் பொறுமையாக இருக்க முடியாது.. இந்த பத்திரிக்கைக்கு ஒரு பதில் வேண்டும்..’ என்ற உறுதியுடன் விழியைத் துடைத்துவிட்டு வேகமாக எழுந்தாள்..
காலையில் விடிந்தும் குளித்துவிட்டு அந்த பட்டுசேலையைக் கட்டிக்கொண்டு கண்ணாடி முன்னாடி நின்றாள்.. அவள் அழுததற்கு அடையாளமாக இரண்டு விழிகள் மட்டுமே சிவந்திருப்பது கண்டு, ‘உனக்கு கேரளா பொண்ணு கேட்குதா..?’ என்று நினைத்தவள் வேகமாக கிளம்பி கீழே சென்றாள்..
அதிகாலை நேரத்தில் முழு அலங்காரத்துடன் வரும் பேத்தியைப் பார்த்த சீதாலட்சுமி வேகமாக சமையலறையில் இருந்து வெளியே வந்தார்.. சோபாவில் அமர்ந்திருந்த மணிகண்டனைப் பார்த்தவர், “என்னங்க பேத்தி இவ்வளுவு சீக்கிரம் ஆபீஸ் கிளம்பிட்டா..” என்று சொல்ல பேப்பர் படித்துகொண்டிருந்த மணிகண்டன் நிமிர்ந்து பிரியாவைப் பார்த்தார்..
“என்ன பிரியா இவ்வளவு சீக்கிரம் ஆபீஸ் கிளம்பிட்டியே.. மணி இப்போதான் ஆறு ஆகுதுடா.. இரு நான் உனக்கு சாப்பிட ஏதாவது செய்து தருகிறேன்..” என்றவர் சொல்ல, “இல்லங்க பாட்டி எனக்கு வேண்டாம்.. நான் ஊருக்கு போகிறேன்..” என்றவள் சொல்ல வினோதமாக பிரியாவைப் பார்த்த மணிகண்டன், “என்ன செல்லம் ஆச்சு.. எதுக்கு இப்போ ஊருக்கு போகிறாய்..?” என்று விசாரித்தார்..
“நேற்று வந்த பார்சலுக்கு விளக்கம் தெரியணும் தாத்தா.. அதுக்குதான் தாத்தா ஊருக்கு போறேன்..” என்றவள் சொல்ல, “அப்போ பார்சல் அனுப்பியது சந்தோஷா..?” என்றவர் கேட்க, “ம்ம் அத்துதான் தாத்தா..” என்றவள் சொல்லிகொண்டிருக்க பூஜை அறைக்கு சென்ற சீதாலட்சுமி விபூதியை எடுத்து வந்து அவளின் நெற்றியில் வைத்துவிட்டவர்,
“உனக்கு ஒரு தடங்களும் வராது.. நீ முதலில் கிளம்பு செல்லம்..” என்றவர், “இங்கிருந்து சேலத்திற்கு பஸில் போடா.. அது உனக்கு பாதுகாப்பு.. அதற்கு மேல் ரயிலில் போன மத்தியானம் ஒரு மணிக்கு உள்ள சென்னை போய்விடலாம்..” என்றவர் பேத்திக்கு அறிவுரை கூறினார்..
“இல்லங்க பாட்டி நான் காரில் ஊருக்கு போகிறேன்..” என்றவளின் விழியிரண்டும் கலங்கிட, “பாட்டி நான் போயிட்டு வருகிறேன்..” என்று சொல்ல, “ம்ம் கிளம்பு பிரியா..” என்ற இருவரும் வாசல்வரை வந்து அவளை வழியனுப்பி வைக்க காரில் ஏறியவள் வேகமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்..
ஏற்காட்டில் இருந்து பிரியா கிளம்பியதும் மாணிக்கம் சந்தோஷிற்கு அழைக்க, “அவனுக்கு போன் செய்ய வேண்டாங்க.. அவன் இன்னும் பிள்ளையை அழுக வைப்பான்..” என்று சீதா சொல்ல, “சரி சீதா..” என்றவர் விக்ரமிற்கு போன் செய்தார்..
அவரின் அழைப்பை எடுத்த விக்ரம், “அப்பா பிரியா சென்னை கிளம்பி வருகிறாளா..?” என்றவர் கேட்க, “அது எப்படிப்பா உனக்கு தெரியும்..?” என்று கேட்டார் மாணிக்கம்..
“அதெல்லாம் அவள் கிளம்பி வருவாள் என்று நேற்றே எனக்கு தெரியும் அப்பா.. இனிமேல் அவங்களே ஒரு முடிவாக எடுக்கட்டும் என்றவர் போனை வைத்துவிட்டு தன்னுடைய வேலையைக் கவனிக்க, “யாருங்க போனில்..?” என்று கேட்ட மீராவிடம் அனைத்தையும் கூறினார்..
“இனி என்ன நடக்கிறது என்றுதான் பார்க்கலமே..” என்றவர் சொல்ல மீராவிற்கும் அதுவே சரியெனப்பட்டது.. அதன்பிறகு மீரா சமையல் வேலையைக் கவனிக்க விக்ரம் தன்னுடைய கையில் இருந்த ஆபீஸ் பைலில் மூழ்கிப்போனார்..
காலையில் வீடே பரபரப்புடன் இருக்க தங்கையின் அறைக்கு சென்ற சந்தோஷ், “மித்ரா இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.. நான் முன்னாடி போகிறேன்.. நீ சீக்கிரம் கிளம்பி வா..” என்றவன் சொல்ல, “அண்ணா நைட் எல்லாம் பிரியா கால் பண்ணிடே இருந்தா.. நான் போன் எடுக்கல இந்தா உன்னோட போன்..” என்றவள் செல்லை அவனிடம் கொடுத்தாள்..
“தேங்க்ஸ் மித்ரா.. காரணம் தெரியாமலே ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாய்.. அதுவரை ரொம்ப சந்தோஷம்..” என்றவன் பிரகாசமான முகத்தோடு வேகமாக அங்கிருந்து கிளம்பிச் செல்ல மாடியில் இருந்து வேகமாக கீழிறங்கி வந்த மித்ரா சமையலறைக்குள் சென்றாள்..
“அம்மா இன்னைக்கு உன்னோட மகன் ஒரு மார்க்கமாக இருக்கிறான்.. என்னவோ சரியில்ல.. என்ன என்று விசாரிங்க..” என்றவள் சொல்ல, “அது என்னவென்று அப்புறம் கேட்காமல் மித்ரா.. இந்த இந்த காயை நறுக்கி சமையலை முடித்துவிடு..” என்றவர் சொல்ல, “அம்மா..” என்று அதிர்ந்தாள் மகள்..
“மித்ரா உனக்கு செல்லம் கொடுத்த காலம் எல்லாம் மலையேறி போச்சு.. இந்த இன்றிலிருந்து நீதான் சமையல் செய்யணும்.. நீ எவ்வளவு கேவலமாக சமையல் செய்தாலும் சாப்பிட நாங்க எல்லோரும் ரெடி.. பட் நீ சமையல் நல்ல செய்து பழகு.. அது நாளைக்கு உன்னோட புகுந்த வீட்டில் உனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும்..” என்றவர் சொல்ல மித்ரா அழுவதற்கு தயாரானாள்..
மித்ராவை சமையலறையில் பார்த்த அபிநந்தன், “என்ன மித்ரா இங்கே என்ன பண்ற..?” என்றவர் கேட்க, “அப்பா அம்மா என்னை சமையல் பண்ண சொல்லிட்டாங்க அப்பா..” என்றவள் குழந்தை போல சிணுங்க வாய்விட்டு சிரித்தார் அபிநந்தன்..
அவர் சிரிப்பதை மித்ரா கொலைவெறியுடன் பார்க்க, “இந்த விஷயத்தில் உங்க அம்மா செய்ததுதான் சரி.. நீ சமையலை தொடங்கு..” என்றவர் மேகாவின் பக்கம் திரும்பியவர், “நீயும் வா மேகா.. அவளே சமையல் செய்யட்டும்..” என்றவர் சொல்ல, “அப்பா..” என்று சினுங்கினாள் மகள்..
“உன்னோட சிணுங்கள் எல்லாம் இங்கே செல்லுபடி ஆகும்.. புகுந்த வீட்டில் அது எல்லாம் நடக்காது செல்லம்.. உனக்கு உதவிக்கு மதுவை அனுப்பி வைக்கிறேன்..” என்றவர், “இன்னைக்கு அவளும் மதுவும் சமையல் செய்யட்டும்.. நம்ம யாரும் அவர்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம்..” என்றவர் சொல்லிவிட்டு முன்னே செல்ல அவரை பின் தொடர்ந்தனர் பிருந்தாவும் மேகாவும்..!
அபிநந்தன் – பிருந்தா இருவரும் திருமண ஏற்பாடுகள் பற்றி பேச சமையல் வேலையைக் கவனித்தாள்.. மதுவும் அவளுக்கு துணைக்கு வர சஞ்சீவ் நன்றாக தூகிக் கொண்டிருக்க சந்தோஷ் ஆபீஸ் கிளம்பிச் சென்றான்..
மோகன் – சுமதி இருவரையும் அழைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றிருந்தார்.. சந்துரு – மலர்விழி இருவரும் வேறொரு விசயமாக வெளியே சென்றிருந்தனர்.. ஏற்காட்டில் இருந்து கிளம்பிய பிரியா கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் சென்னையை அடைந்தாள்.. அவள் முதலில் வீட்டிற்கு சென்றாள்..
சென்னையில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்க அந்த மதியான நேரத்தில்பிருந்தாவனம் உள்ளே நுழைந்தவாழ்க காரைவிட்டு கீழிறங்க காரின் சத்தம் கேட்ட விக்ரம் வாசலை எட்டிப்பார்க்க பிரியாதான் காரில் இருந்து இறங்கினாள்..
“பிரியா வாடா..” என்றவர் பாசத்தோடு அழைத்தபடி வேகமாக வாசலுக்கு வர அவரின் அழைப்பைக் கவனிக்காத பிரியா நேராக சந்தோஷ் வீட்டிற்குள் நுழைந்தாள்..
கணவரின் அழைப்பைக் கேட்டு வெளியே வந்த மீரா, “என்னங்க பிரியா எங்கே..?” என்று கேட்க, “பிருந்தா வீட்டிற்குள் போகிறாள் வா..” என்றவர் முன்னே செல்ல மீரா அவளைப் பின் தொடர்ந்தார்..
திருமண ஏற்பாடுகள் பற்றி பேசிகொண்டிருந்த அபிநந்தன் யாரோ வரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப் பார்க்க பிரியா புயல் வேகத்தில் வீட்டிற்குள் நுழைய அப்பொழுதுதான் அறையைவிட்டு வெளியே வந்த சஞ்சீவ், “அண்ணி..” என்ற அழைப்புடன் வேகமாக மாடியில் இருந்து இறங்கினான்..
அப்பொழுதுதான் பிரியா வருவதைக் கவனித்த பிருந்தா, “வா பிரியா.. என்ன தீடீரென்று வந்து நிற்கிற..” என்றவர் புன்னகையோடு எழுந்து அவளின் அருகில் செல்ல, “அத்தை இங்கே என்ன நடக்கிறது.. அத்துவிற்கு கிரிஜா என்ற பெண்ணை பொண்ணு பார்த்து பத்திரிகை எல்லாம் அடிச்சிருக்கீங்க..” என்றவள் கோபத்தோடு கேட்டாள்..
அவளின் பேச்சில் இருந்தே, ‘இது சந்தோஷ் வேலை..’ என்று உணர்ந்த பிருந்தா, “ஆமா அதுக்கு இப்போ என்ன பிரியா செய்ய சொல்ற.. நாங்களும் எவ்வளவு நாள்தான் பொறுமையாக இருப்பது..?” என்றவர் விக்ரம் கேட்ட அதே கேள்வியைக் கேட்க, “என்னோட வீம்பிற்கு இது எல்லாம் எனக்கு தேவைதான்..” என்றவள் தலையில் அடித்து கொண்டாள்..
“உனக்கு என்ன விளக்கம் என்றாலும் சந்தோஷ் சொல்வான் அவனிடம் போய் கேளு பிரியா..” என்றவர், “என்னங்க நம்ம எப்போ கல்யாணத்திற்கு ஜவுளி எடுக்க போகலாம்..” என்று பேச்சை மாற்றிட பிரியாவின் கோபம் அதிகரிக்க, “அப்போ என்னைபற்றி யாருக்குமே இங்கே அக்கறையே இல்ல..” என்றவள் கோபத்துடன் கேட்டாள்’’
“அண்ணி எனக்கு ஒரு விஷயம் புரியல.. அப்பா இப்போதான் கல்யாண தேதியைத் தேடிட்டு இருக்கிறாரு.. அதுக்குள்ள எப்படி பத்திரிகை..?” என்று மது அவளிடம் கிண்டலோடு கேட்க மித்ராவும், சஞ்சீவ் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்..
அப்பொழுது வீட்டின் உள்ளே நுழைந்த விக்ரம், “அதுதானே..? அவங்க இப்போதான் முகூர்த்தம் எந்த தேதியில் வைக்கலாம் என்று குறிக்கிறாங்க.. உனக்கு மட்டும் எப்படி பிரியா பத்திரிகை கைக்கு கிடைக்கும்..?” என்றவரும் அவளிடம் சந்தேகம் கேட்டார்..
ஒருவர் மாற்றி ஒருவர் சிரிப்பதைக் கண்ட பிரியாவிற்கு கோபம் அதிகரிக்க, “இது எல்லாம் அத்துவோட வேலை.. அது உங்க எல்லோருக்கும் தெரியும் இல்ல.. முதலில் அவனிடம் கேட்டுட்டு வந்து உங்களை எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்..” என்றவள் வேகமாக செல்ல, “பிரியா காரில் கவனமாக போ..” என்று குரல் கொடுத்தனர் மீராவும், பிருந்தாவும்..!