அத்தியாயம் – 22
இரவு எட்டுமணி ஆகியும் சந்தோஷ், பிரியா இருவரும் வராமல் இருப்பதைக் கண்ட மித்ரா வாசலைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க அவளின் அருகில் வந்தமர்ந்த சஞ்சனா, “அக்கா அண்ணியை இன்னும் காணோம்..” என்றவள் மித்ராவின் காதைக் கடிக்க, “நானும் இங்கேதான் இருக்கேன்.. என்னிடம் கேட்ட எனக்கு எப்படி தெரியும்..?” என்றவள் தங்கையை முறைத்தாள்..
“அண்ணாவும், அண்ணியும் சமாதானம் ஆகிருப்பாங்க அக்கா.. இன்னும் கொஞ்சநேரத்தில் வருவாங்க பாருங்க..” என்றவன் சொல்லிக் கொண்டிருக்க, “அப்படியா சொல்ற.. சரி வெயிட் பண்ணி பார்க்கலாம்..” என்றாள் மதுபாலா வாசலைப் பார்த்தபடியே..!
காலையில் வீட்டில் இருந்து கிளம்பிய பேத்தி ஊருக்கு பத்திரமாக போய் சேர்ந்தாளா என்று அறிந்து கொள்ள மாணிக்கமும், சீதாவும் மாலை நேரத்தில் பிருந்தாவிற்கு போன் செய்தனர்..
அப்பொழுது பிருந்தாவின் செல் அடிக்க அதை எடுத்தவர், “அவரின் போனை எடுத்த பிருந்தா, “அம்மா எப்படிம்மா இருக்கீங்க..? அப்பா எப்படி இருக்கிறார்..?” என்று விசாரிக்க, “யாரு பிந்து என்று கேட்டார் அபிநந்தன்..
அவரின் முகம் பார்த்த பிருந்தா, “அம்மா, அப்பா..” என்று சொல்ல, “சரி நீ பேசு..” என்றவர் அந்தபக்கம் விக்ரமுடன் பேச ஆரம்பிக்க, “முதலில் இவங்களோட திருமணத்தை வைத்துவிடலாமா..?” என்று கேட்டார் விக்ரம்..
அர்ஜூன் பிரதாப்பிடம் மதுபாலாவின் திருமணத்தைப் பற்றி பேசிகொண்டிருந்தார்.. சந்துருவோ மித்ராவை பெண் பார்க்க வரும் அசோக் வீட்டிற்கு போன் செய்த , ‘முதலில் நிச்சயம் செய்து கொள்ளலாம்.. பிறகு திருமண ஏற்பாடு செய்யலாம்..’ என்று பேசிகொண்டிருந்தனர்..
“என்னம்மா இந்த நேரத்தில் போன் பண்ணிருக்கீங்க..” என்றவர் கேட்க, “பிரியா அங்கே வந்துவிட்டாளா..?” என்று பதட்டத்துடன் விசாரித்தார் சீதா..
“அவள் மதியம் வந்துவிட்டாள் அம்மா.. இப்போ சந்தோஷ் கூட வெளியே போயிருக்கிற..” என்றவர் உண்மையைச் சொல்லாமல் சாமாளிக்க, “ஹப்பாடா இப்போ கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்மா.. இருவரும் இப்படியே ஒற்றுமையாக இருக்கணும்..” என்றவர் சொல்ல சீதா பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்..
“உங்க வாக்கு பலிக்கும் அம்மா கவலைபடாமல் இருங்க.. பிரியா வந்ததும் நானே உங்களிடம் பேச சொல்றேன்..” என்ற பிருந்தா அவருடன் சிறிதுநேரம் பேச அப்பொழுது அவளின் அருகில் வந்த மலர்விழி, மேகா என்று இருவரும் மாறி மாறி அவளின் கையில் இருந்த போனை வாங்கி பேச ஆரம்பித்தனர்..
சந்தோஷ் திருமணத்திற்கு சரியென்று சொன்னதும் வேறு அதைபற்றியும் கவலையேபடாத அபிநந்தன் இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்.. அதுவும் பிரியா நேரில் கிளம்பி வந்ததில் திருமணம் பற்றி தெளிவாக திட்டமிட ஆரம்பித்தனர் பெரியவர்கள்..!
சந்தோஷ் சீரான வேகத்தில் காரை செலுத்த அவனை ஓரக்கண்ணால் பார்த்தவண்ணம் வந்த பிரியாவின் பார்வையை உள்ளுக்குள் ரசித்தவண்ணம் அமைதியாக வந்தான்.. சிறிதுநேரம் பிரியா வெளியே வேடிக்கை பார்ப்பதும் அவன் தன்னை பார்க்காத நேரத்தில் அவனை ரசித்துக்கொண்டே வந்தாள்..
“ஏய் பிரியா செமயா சைட் அடிக்கிறடி..” என்றவன் அவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்ட, “என்னோட புருஷனை நான் சைட் அடிக்கிறேன்..” என்றவள் அவனின் தோளில் சாய காரை நிறுத்திய சந்தோஷ், “மேடம் என்ன சொன்னீங்க..?” என்று அவளை மையலுடன் பார்த்தான்..
அவனின் பார்வை கண்ட பிரியா, “நான் ஒண்ணுமே சொல்லல..” என்றவள் அவனைவிட்டு விலகி அமர்ந்தாள்.. அவளின் கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்தவனின் பார்வையில் இருந்த மாற்றத்தை நொடியில் உணர்ந்தவள், “அத்து காரை எடு.. வீட்டுக்கு போகலாம்..” என்றவள் மெல்லிய குரலில் கூறினாள்..
“வீட்டு போனால் மேடம் என்ன தருவீங்க..” என்றவன் அவளிடம் பேரம் பேசியவன் அவளை நெருங்கி அமர, “ஏண்டா காருக்குள் என்கூட வம்பு பண்ற..” என்றவள் சிணுங்க, “உன்னோட வம்பு பண்ணாமல் வேற யார்கிட்ட போய் பண்ணட்டும்..” என்றவன் அவளை நெருங்கினான்..
“அத்து..” என்றவளின் குரல் உள்ளுக்குள் போக விழிகள் இரண்டும் மூடிக்கொள்ள, “உன்னோட காதலால் என்னை தோக்கடிச்சுட்ட இல்ல..” என்றவன் அவளின் இதழில் அழுத்தமாக முத்தமிட்டு நிமிர்ந்தான்.. அவளோ குழப்பத்தில் அவனை நிமிர்ந்து பார்த்து, “அத்து நீ என்ன சொல்ற..” என்று கேட்டாள்..
“உன்னைத் தேடி நான் வந்தேன் பிரியா ஏற்காடு வரை வந்தேன்.. நான்தான் உன்னைத் தேடி வந்தேன்.. நீ என்னைத் தேடி வரல.. தீபிகாவை நீ எதிர்த்து பேசிய பிறகு உன்னைப் பிரிந்து என்னால இருக்க முடியல.. அதுதான் அந்த மாதிரி ஒரு பொய்யான கடிதம் எழுதினேன்..” என்றவன் உண்மையை போட்டு உடைத்தான்..
அவன் ஒவ்வொரு வார்த்தையும் சொல்ல சொல்ல அவளின் விழிநீர் பெருகி வெள்ளமென்று மாறிவிட, “ஐ லவ் யூ என்ற மூன்று வார்த்தை போதாது நம் காதலைச் சொல்ல.. இருந்தாலும் சொல்கிறேன் ஐ லவ் யூ அத்து..” என்றவள் அவனின் முகம் முழுவதும் முத்தமிட்டு அவனின் மார்பில் முகம் புதைத்துக்கொள்ள அவளை மார்போடு அணைத்துக் கொண்டான் சந்தோஷ்..
“மையூமா உன்னிடம் சொல்லாமல் இருக்கலாம் என்று நினைத்தேன்.. ஆனால் உன்னிடம் மறைக்க என்னோட மனசு இடம் கொடுக்கல.. அதுதான் சொல்லிட்டேன்..” என்றவன் அவளை இறுக்கியணைத்து கொள்ள அவனின் கண்களும் கலங்கியது..
சிறிதுநேரம் மௌனத்திற்கு பிறகு, “மையூமா நம்ம ஓடி போயிருவோமா..?” என்றவன் அவளின் காதோரம் கேட்க, “அதெல்லாம் காதலிக்கிறவங்க பண்ற வேலை.. நமக்கு கல்யாணம் ஆகிருச்சி இல்ல.. நம்ம எதுக்கு ஓடிபோகனும்..” என்றவள் குறுஞ்சிரிப்புடன் கேட்டாள்..
“ஏய் உனக்கு என்ன பைத்தியமா..??” என்றவன் கேட்க அவனைவிட்டு விலகி அமர்ந்தவள், “ஏன் அத்து இப்படி கேட்கிற..” என்றவள் முகத்தை சோகமாக வைத்துகொண்டு கேட்டதும், “வீட்டுக்கு போனால் மறுபடியும் கல்யாணம் வரை பிரிச்சு வெச்சிருவாங்க பிரியாம்மா..” என்றவன் சிணுங்கினான்..
“இதுக்குதான் பொய் லெட்டர் போட்டு என்னை இங்கே ஓடிவர வைத்தாயா..?” என்றவள் கடுப்புடன் கேட்டதும், “என்னோட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுடி..” என்றவன் அவளிடம் அடம்பிடிக்க, “எனக்கு இதில் விருப்பம் இல்ல..” என்றவள் சொல்ல சந்தோஷ் கோபமாக காரை எடுத்தான்..
அவன் மெளனமாக வருவதைப் பார்த்தவள், “உன்னோட விருப்பம் எதுவோ அதையே பண்ணு..” என்றவள் வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் சொல்ல, “அப்படியா அப்போ முதல் மாதிரி இல்லாமல் இந்த திருமணத்தில் ஒவ்வொரு நொடியையும் நிதானமாக ரசிக்கணும்மையூமா.. அதுதான் என்னோட ஆசை..” என்றவனைத் திரும்பிப் பார்த்தாள் பிரியா..
அவளின் மனதிலும் அந்த ஆசை இருப்பதை உணர்ந்தே இருந்தவன், “ஜவுளி எடுப்பதில் இருந்து திருமணம் முடிவும் வரையில் இருக்கிற ஓவ்வொரு நாளையும் ரொம்ப ரசித்து மனதில் மலரும் நினைவுகளாக சேர்த்து வைக்கணும் தேனு..” என்றவனின் தோள் சாய்ந்தாள் பிரியா..
இரவு எட்டுமணி ஆகியும் சந்தோஷ், பிரியா இருவரும் வராமல் இருப்பதைக் கண்ட மித்ரா வாசலைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க அவளின் அருகில் வந்தமர்ந்த சஞ்சனா, “அக்கா அண்ணியை இன்னும் காணோம்..” என்றவள் மித்ராவின் காதைக் கடிக்க, “நானும் இங்கேதான் இருக்கேன்.. என்னிடம் கேட்ட எனக்கு எப்படி தெரியும்..?” என்றவள் தங்கையை முறைத்தாள்..
“அண்ணாவும், அண்ணியும் சமாதானம் ஆகிருப்பாங்க அக்கா.. இன்னும் கொஞ்சநேரத்தில் வருவாங்க பாருங்க..” என்றவன் சொல்லிக் கொண்டிருக்க, “அப்படியா சொல்ற.. சரி வெயிட் பண்ணி பார்க்கலாம்..” என்றாள் மதுபாலா வாசலைப் பார்த்தபடியே..!
காலையில் வீட்டில் இருந்து கிளம்பிய பேத்தி ஊருக்கு பத்திரமாக போய் சேர்ந்தாளா என்று அறிந்து கொள்ள மாணிக்கமும், சீதாவும் மாலை நேரத்தில் பிருந்தாவிற்கு போன் செய்தனர்..
அப்பொழுது பிருந்தாவின் செல் அடிக்க அதை எடுத்தவர், “அவரின் போனை எடுத்த பிருந்தா, “அம்மா எப்படிம்மா இருக்கீங்க..? அப்பா எப்படி இருக்கிறார்..?” என்று விசாரிக்க, “யாரு பிந்து என்று கேட்டார் அபிநந்தன்..
அவரின் முகம் பார்த்த பிருந்தா, “அம்மா, அப்பா..” என்று சொல்ல, “சரி நீ பேசு..” என்றவர் அந்தபக்கம் விக்ரமுடன் பேச ஆரம்பிக்க, “முதலில் இவங்களோட திருமணத்தை வைத்துவிடலாமா..?” என்று கேட்டார் விக்ரம்..
அர்ஜூன் பிரதாப்பிடம் மதுபாலாவின் திருமணத்தைப் பற்றி பேசிகொண்டிருந்தார்.. சந்துருவோ மித்ராவை பெண் பார்க்க வரும் அசோக் வீட்டிற்கு போன் செய்த , ‘முதலில் நிச்சயம் செய்து கொள்ளலாம்.. பிறகு திருமண ஏற்பாடு செய்யலாம்..’ என்று பேசிகொண்டிருந்தனர்..
“என்னம்மா இந்த நேரத்தில் போன் பண்ணிருக்கீங்க..” என்றவர் கேட்க, “பிரியா அங்கே வந்துவிட்டாளா..?” என்று பதட்டத்துடன் விசாரித்தார் சீதா..
“அவள் மதியம் வந்துவிட்டாள் அம்மா.. இப்போ சந்தோஷ் கூட வெளியே போயிருக்கிற..” என்றவர் உண்மையைச் சொல்லாமல் சாமாளிக்க, “ஹப்பாடா இப்போ கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்மா.. இருவரும் இப்படியே ஒற்றுமையாக இருக்கணும்..” என்றவர் சொல்ல சீதா பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்..
“உங்க வாக்கு பலிக்கும் அம்மா கவலைபடாமல் இருங்க.. பிரியா வந்ததும் நானே உங்களிடம் பேச சொல்றேன்..” என்ற பிருந்தா அவருடன் சிறிதுநேரம் பேச அப்பொழுது அவளின் அருகில் வந்த மலர்விழி, மேகா என்று இருவரும் மாறி மாறி அவளின் கையில் இருந்த போனை வாங்கி பேச ஆரம்பித்தனர்..
சந்தோஷ் திருமணத்திற்கு சரியென்று சொன்னதும் வேறு அதைபற்றியும் கவலையேபடாத அபிநந்தன் இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்.. அதுவும் பிரியா நேரில் கிளம்பி வந்ததில் திருமணம் பற்றி தெளிவாக திட்டமிட ஆரம்பித்தனர் பெரியவர்கள்..!
சந்தோஷ் சீரான வேகத்தில் காரை செலுத்த அவனை ஓரக்கண்ணால் பார்த்தவண்ணம் வந்த பிரியாவின் பார்வையை உள்ளுக்குள் ரசித்தவண்ணம் அமைதியாக வந்தான்.. சிறிதுநேரம் பிரியா வெளியே வேடிக்கை பார்ப்பதும் அவன் தன்னை பார்க்காத நேரத்தில் அவனை ரசித்துக்கொண்டே வந்தாள்..
“ஏய் பிரியா செமயா சைட் அடிக்கிறடி..” என்றவன் அவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்ட, “என்னோட புருஷனை நான் சைட் அடிக்கிறேன்..” என்றவள் அவனின் தோளில் சாய காரை நிறுத்திய சந்தோஷ், “மேடம் என்ன சொன்னீங்க..?” என்று அவளை மையலுடன் பார்த்தான்..
அவனின் பார்வை கண்ட பிரியா, “நான் ஒண்ணுமே சொல்லல..” என்றவள் அவனைவிட்டு விலகி அமர்ந்தாள்.. அவளின் கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்தவனின் பார்வையில் இருந்த மாற்றத்தை நொடியில் உணர்ந்தவள், “அத்து காரை எடு.. வீட்டுக்கு போகலாம்..” என்றவள் மெல்லிய குரலில் கூறினாள்..
“வீட்டு போனால் மேடம் என்ன தருவீங்க..” என்றவன் அவளிடம் பேரம் பேசியவன் அவளை நெருங்கி அமர, “ஏண்டா காருக்குள் என்கூட வம்பு பண்ற..” என்றவள் சிணுங்க, “உன்னோட வம்பு பண்ணாமல் வேற யார்கிட்ட போய் பண்ணட்டும்..” என்றவன் அவளை நெருங்கினான்..
“அத்து..” என்றவளின் குரல் உள்ளுக்குள் போக விழிகள் இரண்டும் மூடிக்கொள்ள, “உன்னோட காதலால் என்னை தோக்கடிச்சுட்ட இல்ல..” என்றவன் அவளின் இதழில் அழுத்தமாக முத்தமிட்டு நிமிர்ந்தான்.. அவளோ குழப்பத்தில் அவனை நிமிர்ந்து பார்த்து, “அத்து நீ என்ன சொல்ற..” என்று கேட்டாள்..
“உன்னைத் தேடி நான் வந்தேன் பிரியா ஏற்காடு வரை வந்தேன்.. நான்தான் உன்னைத் தேடி வந்தேன்.. நீ என்னைத் தேடி வரல.. தீபிகாவை நீ எதிர்த்து பேசிய பிறகு உன்னைப் பிரிந்து என்னால இருக்க முடியல.. அதுதான் அந்த மாதிரி ஒரு பொய்யான கடிதம் எழுதினேன்..” என்றவன் உண்மையை போட்டு உடைத்தான்..
அவன் ஒவ்வொரு வார்த்தையும் சொல்ல சொல்ல அவளின் விழிநீர் பெருகி வெள்ளமென்று மாறிவிட, “ஐ லவ் யூ என்ற மூன்று வார்த்தை போதாது நம் காதலைச் சொல்ல.. இருந்தாலும் சொல்கிறேன் ஐ லவ் யூ அத்து..” என்றவள் அவனின் முகம் முழுவதும் முத்தமிட்டு அவனின் மார்பில் முகம் புதைத்துக்கொள்ள அவளை மார்போடு அணைத்துக் கொண்டான் சந்தோஷ்..
“மையூமா உன்னிடம் சொல்லாமல் இருக்கலாம் என்று நினைத்தேன்.. ஆனால் உன்னிடம் மறைக்க என்னோட மனசு இடம் கொடுக்கல.. அதுதான் சொல்லிட்டேன்..” என்றவன் அவளை இறுக்கியணைத்து கொள்ள அவனின் கண்களும் கலங்கியது..
சிறிதுநேரம் மௌனத்திற்கு பிறகு, “மையூமா நம்ம ஓடி போயிருவோமா..?” என்றவன் அவளின் காதோரம் கேட்க, “அதெல்லாம் காதலிக்கிறவங்க பண்ற வேலை.. நமக்கு கல்யாணம் ஆகிருச்சி இல்ல.. நம்ம எதுக்கு ஓடிபோகனும்..” என்றவள் குறுஞ்சிரிப்புடன் கேட்டாள்..
“ஏய் உனக்கு என்ன பைத்தியமா..??” என்றவன் கேட்க அவனைவிட்டு விலகி அமர்ந்தவள், “ஏன் அத்து இப்படி கேட்கிற..” என்றவள் முகத்தை சோகமாக வைத்துகொண்டு கேட்டதும், “வீட்டுக்கு போனால் மறுபடியும் கல்யாணம் வரை பிரிச்சு வெச்சிருவாங்க பிரியாம்மா..” என்றவன் சிணுங்கினான்..
“இதுக்குதான் பொய் லெட்டர் போட்டு என்னை இங்கே ஓடிவர வைத்தாயா..?” என்றவள் கடுப்புடன் கேட்டதும், “என்னோட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுடி..” என்றவன் அவளிடம் அடம்பிடிக்க, “எனக்கு இதில் விருப்பம் இல்ல..” என்றவள் சொல்ல சந்தோஷ் கோபமாக காரை எடுத்தான்..
அவன் மெளனமாக வருவதைப் பார்த்தவள், “உன்னோட விருப்பம் எதுவோ அதையே பண்ணு..” என்றவள் வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் சொல்ல, “அப்படியா அப்போ முதல் மாதிரி இல்லாமல் இந்த திருமணத்தில் ஒவ்வொரு நொடியையும் நிதானமாக ரசிக்கணும்மையூமா.. அதுதான் என்னோட ஆசை..” என்றவனைத் திரும்பிப் பார்த்தாள் பிரியா..
அவளின் மனதிலும் அந்த ஆசை இருப்பதை உணர்ந்தே இருந்தவன், “ஜவுளி எடுப்பதில் இருந்து திருமணம் முடிவும் வரையில் இருக்கிற ஓவ்வொரு நாளையும் ரொம்ப ரசித்து மனதில் மலரும் நினைவுகளாக சேர்த்து வைக்கணும் தேனு..” என்றவனின் தோள் சாய்ந்தாள் பிரியா..