• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then Sinthum Poovanam! - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 22

இரவு எட்டுமணி ஆகியும் சந்தோஷ், பிரியா இருவரும் வராமல் இருப்பதைக் கண்ட மித்ரா வாசலைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க அவளின் அருகில் வந்தமர்ந்த சஞ்சனா, “அக்கா அண்ணியை இன்னும் காணோம்..” என்றவள் மித்ராவின் காதைக் கடிக்க, “நானும் இங்கேதான் இருக்கேன்.. என்னிடம் கேட்ட எனக்கு எப்படி தெரியும்..?” என்றவள் தங்கையை முறைத்தாள்..

“அண்ணாவும், அண்ணியும் சமாதானம் ஆகிருப்பாங்க அக்கா.. இன்னும் கொஞ்சநேரத்தில் வருவாங்க பாருங்க..” என்றவன் சொல்லிக் கொண்டிருக்க, “அப்படியா சொல்ற.. சரி வெயிட் பண்ணி பார்க்கலாம்..” என்றாள் மதுபாலா வாசலைப் பார்த்தபடியே..!

காலையில் வீட்டில் இருந்து கிளம்பிய பேத்தி ஊருக்கு பத்திரமாக போய் சேர்ந்தாளா என்று அறிந்து கொள்ள மாணிக்கமும், சீதாவும் மாலை நேரத்தில் பிருந்தாவிற்கு போன் செய்தனர்..

அப்பொழுது பிருந்தாவின் செல் அடிக்க அதை எடுத்தவர், “அவரின் போனை எடுத்த பிருந்தா, “அம்மா எப்படிம்மா இருக்கீங்க..? அப்பா எப்படி இருக்கிறார்..?” என்று விசாரிக்க, “யாரு பிந்து என்று கேட்டார் அபிநந்தன்..

அவரின் முகம் பார்த்த பிருந்தா, “அம்மா, அப்பா..” என்று சொல்ல, “சரி நீ பேசு..” என்றவர் அந்தபக்கம் விக்ரமுடன் பேச ஆரம்பிக்க, “முதலில் இவங்களோட திருமணத்தை வைத்துவிடலாமா..?” என்று கேட்டார் விக்ரம்..

அர்ஜூன் பிரதாப்பிடம் மதுபாலாவின் திருமணத்தைப் பற்றி பேசிகொண்டிருந்தார்.. சந்துருவோ மித்ராவை பெண் பார்க்க வரும் அசோக் வீட்டிற்கு போன் செய்த , ‘முதலில் நிச்சயம் செய்து கொள்ளலாம்.. பிறகு திருமண ஏற்பாடு செய்யலாம்..’ என்று பேசிகொண்டிருந்தனர்..

“என்னம்மா இந்த நேரத்தில் போன் பண்ணிருக்கீங்க..” என்றவர் கேட்க, “பிரியா அங்கே வந்துவிட்டாளா..?” என்று பதட்டத்துடன் விசாரித்தார் சீதா..

“அவள் மதியம் வந்துவிட்டாள் அம்மா.. இப்போ சந்தோஷ் கூட வெளியே போயிருக்கிற..” என்றவர் உண்மையைச் சொல்லாமல் சாமாளிக்க, “ஹப்பாடா இப்போ கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்மா.. இருவரும் இப்படியே ஒற்றுமையாக இருக்கணும்..” என்றவர் சொல்ல சீதா பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்..

“உங்க வாக்கு பலிக்கும் அம்மா கவலைபடாமல் இருங்க.. பிரியா வந்ததும் நானே உங்களிடம் பேச சொல்றேன்..” என்ற பிருந்தா அவருடன் சிறிதுநேரம் பேச அப்பொழுது அவளின் அருகில் வந்த மலர்விழி, மேகா என்று இருவரும் மாறி மாறி அவளின் கையில் இருந்த போனை வாங்கி பேச ஆரம்பித்தனர்..

சந்தோஷ் திருமணத்திற்கு சரியென்று சொன்னதும் வேறு அதைபற்றியும் கவலையேபடாத அபிநந்தன் இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்.. அதுவும் பிரியா நேரில் கிளம்பி வந்ததில் திருமணம் பற்றி தெளிவாக திட்டமிட ஆரம்பித்தனர் பெரியவர்கள்..!

சந்தோஷ் சீரான வேகத்தில் காரை செலுத்த அவனை ஓரக்கண்ணால் பார்த்தவண்ணம் வந்த பிரியாவின் பார்வையை உள்ளுக்குள் ரசித்தவண்ணம் அமைதியாக வந்தான்.. சிறிதுநேரம் பிரியா வெளியே வேடிக்கை பார்ப்பதும் அவன் தன்னை பார்க்காத நேரத்தில் அவனை ரசித்துக்கொண்டே வந்தாள்..

“ஏய் பிரியா செமயா சைட் அடிக்கிறடி..” என்றவன் அவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்ட, “என்னோட புருஷனை நான் சைட் அடிக்கிறேன்..” என்றவள் அவனின் தோளில் சாய காரை நிறுத்திய சந்தோஷ், “மேடம் என்ன சொன்னீங்க..?” என்று அவளை மையலுடன் பார்த்தான்..

அவனின் பார்வை கண்ட பிரியா, “நான் ஒண்ணுமே சொல்லல..” என்றவள் அவனைவிட்டு விலகி அமர்ந்தாள்.. அவளின் கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்தவனின் பார்வையில் இருந்த மாற்றத்தை நொடியில் உணர்ந்தவள், “அத்து காரை எடு.. வீட்டுக்கு போகலாம்..” என்றவள் மெல்லிய குரலில் கூறினாள்..

“வீட்டு போனால் மேடம் என்ன தருவீங்க..” என்றவன் அவளிடம் பேரம் பேசியவன் அவளை நெருங்கி அமர, “ஏண்டா காருக்குள் என்கூட வம்பு பண்ற..” என்றவள் சிணுங்க, “உன்னோட வம்பு பண்ணாமல் வேற யார்கிட்ட போய் பண்ணட்டும்..” என்றவன் அவளை நெருங்கினான்..

“அத்து..” என்றவளின் குரல் உள்ளுக்குள் போக விழிகள் இரண்டும் மூடிக்கொள்ள, “உன்னோட காதலால் என்னை தோக்கடிச்சுட்ட இல்ல..” என்றவன் அவளின் இதழில் அழுத்தமாக முத்தமிட்டு நிமிர்ந்தான்.. அவளோ குழப்பத்தில் அவனை நிமிர்ந்து பார்த்து, “அத்து நீ என்ன சொல்ற..” என்று கேட்டாள்..

“உன்னைத் தேடி நான் வந்தேன் பிரியா ஏற்காடு வரை வந்தேன்.. நான்தான் உன்னைத் தேடி வந்தேன்.. நீ என்னைத் தேடி வரல.. தீபிகாவை நீ எதிர்த்து பேசிய பிறகு உன்னைப் பிரிந்து என்னால இருக்க முடியல.. அதுதான் அந்த மாதிரி ஒரு பொய்யான கடிதம் எழுதினேன்..” என்றவன் உண்மையை போட்டு உடைத்தான்..

அவன் ஒவ்வொரு வார்த்தையும் சொல்ல சொல்ல அவளின் விழிநீர் பெருகி வெள்ளமென்று மாறிவிட, “ஐ லவ் யூ என்ற மூன்று வார்த்தை போதாது நம் காதலைச் சொல்ல.. இருந்தாலும் சொல்கிறேன் ஐ லவ் யூ அத்து..” என்றவள் அவனின் முகம் முழுவதும் முத்தமிட்டு அவனின் மார்பில் முகம் புதைத்துக்கொள்ள அவளை மார்போடு அணைத்துக் கொண்டான் சந்தோஷ்..

“மையூமா உன்னிடம் சொல்லாமல் இருக்கலாம் என்று நினைத்தேன்.. ஆனால் உன்னிடம் மறைக்க என்னோட மனசு இடம் கொடுக்கல.. அதுதான் சொல்லிட்டேன்..” என்றவன் அவளை இறுக்கியணைத்து கொள்ள அவனின் கண்களும் கலங்கியது..

சிறிதுநேரம் மௌனத்திற்கு பிறகு, “மையூமா நம்ம ஓடி போயிருவோமா..?” என்றவன் அவளின் காதோரம் கேட்க, “அதெல்லாம் காதலிக்கிறவங்க பண்ற வேலை.. நமக்கு கல்யாணம் ஆகிருச்சி இல்ல.. நம்ம எதுக்கு ஓடிபோகனும்..” என்றவள் குறுஞ்சிரிப்புடன் கேட்டாள்..

“ஏய் உனக்கு என்ன பைத்தியமா..??” என்றவன் கேட்க அவனைவிட்டு விலகி அமர்ந்தவள், “ஏன் அத்து இப்படி கேட்கிற..” என்றவள் முகத்தை சோகமாக வைத்துகொண்டு கேட்டதும், “வீட்டுக்கு போனால் மறுபடியும் கல்யாணம் வரை பிரிச்சு வெச்சிருவாங்க பிரியாம்மா..” என்றவன் சிணுங்கினான்..

“இதுக்குதான் பொய் லெட்டர் போட்டு என்னை இங்கே ஓடிவர வைத்தாயா..?” என்றவள் கடுப்புடன் கேட்டதும், “என்னோட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுடி..” என்றவன் அவளிடம் அடம்பிடிக்க, “எனக்கு இதில் விருப்பம் இல்ல..” என்றவள் சொல்ல சந்தோஷ் கோபமாக காரை எடுத்தான்..

அவன் மெளனமாக வருவதைப் பார்த்தவள், “உன்னோட விருப்பம் எதுவோ அதையே பண்ணு..” என்றவள் வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் சொல்ல, “அப்படியா அப்போ முதல் மாதிரி இல்லாமல் இந்த திருமணத்தில் ஒவ்வொரு நொடியையும் நிதானமாக ரசிக்கணும்மையூமா.. அதுதான் என்னோட ஆசை..” என்றவனைத் திரும்பிப் பார்த்தாள் பிரியா..

அவளின் மனதிலும் அந்த ஆசை இருப்பதை உணர்ந்தே இருந்தவன், “ஜவுளி எடுப்பதில் இருந்து திருமணம் முடிவும் வரையில் இருக்கிற ஓவ்வொரு நாளையும் ரொம்ப ரசித்து மனதில் மலரும் நினைவுகளாக சேர்த்து வைக்கணும் தேனு..” என்றவனின் தோள் சாய்ந்தாள் பிரியா..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
சந்தோஷ் – பிரியா இருவரும் இரவு ஒன்பது மணிக்கு வீடு வந்து சேர்ந்தனர்.. இருவரும் காரைவிட்டு இறங்க பிரியா காரின் பின் கதவைத்திறந்து கையில் டெடிபியரை எடுத்து கட்டியணைத்து முத்தமிட்டாள்..

“ஏய் அதை எனக்கு கொடு..” என்றவன் அவளை நோக்கி கன்னத்தை காட்ட, “நேற்று என்னைத் தவிக்க விட்ட இல்ல.. கல்யாணம் முடியும் வரை உனக்கு எதுவுமே கிடையாதுடா..” என்றவள் குறும்புடன் கண்சிமிட்ட, “இது எல்லாம் போங்கு...” என்றவன் எரிச்சலோடு சொல்ல சிரித்த வண்ணம் வீட்டின் உள்ளே நுழைந்தாள் பிரியா..

அவளைப் பின் தொடர்ந்த சந்தோஷ் அவளோடு இணைந்து நடக்க இருவரையும் முதலில் பாத்தா சஞ்சீவ், “மித்ராக்கா அண்ணா அண்ணி வந்துட்டாங்க..” என்றவன் வேகமாகச் சொல்ல வீட்டில் இருந்த அனைவரும் வாயிலைத் திரும்பிப் பார்த்தனர்..

சந்தோஷ் – பிரியா இருவரும் புன்னகை முகத்துடன் வருவதைக் கண்ட பெரியவர்கள், “என்ன இருவரும் சமாதானம் ஆகிட்டீங்களா.. திருமணத்தை இந்த முகூர்த்ததில் வைக்கலாமா..? இல்ல அடுத்த ஆறுமாதம் கழித்து வைக்கலாமா..” என்று மகனையும், மருமகளையும் வாரினார் அபிநந்தன்..

அதற்கு எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காத பிரியா, “மாமா நீங்க ஒரு வருஷம் கழித்தே திருமண ஏற்பாடு பண்ணுங்க..” என்றவள் சந்தோஷைப் பார்த்த வண்ணம் குறும்புடன் சொல்ல, “அப்பா அப்புறம் குழந்தையோடதான் மணமேடை ஏற வேண்டிய நிலைமை வரும் எனக்கு என்ன எனக்கு டபுள் ஓகே..” என்றவன் பிரியாவைப் பார்த்து கண்ணடித்தான்..

இருவரையும் பார்த்த அர்ஜூன், “அண்ணா இவங்க இருவரும் ஏதோ பெருசாக பிளான் பண்றாங்க.. நம்ம மானத்தை நம்மாலே ஏன் வாங்கணும்..” என்றவர் கேட்க, “யெப்பா சாமிகளா உங்க இருவருக்கும் வர முகூர்த்ததில் திருமண ஏற்பாடு பண்ணிருக்கோம்..” என்று சந்துரு சொல்ல, “இதுதான் என்னோட சித்தப்பா..” என்றான் சந்தோஷ் புன்னகையுடன்..!

அதுவரை அமைதியாக இருந்த சங்கமித்ரா பிரியாவின் அருகில் வந்து, “இது என்னது கையில..” என்றவள் கேட்டதும், “டெடிபியர்..” என்றவள் வேகமாகச் சொல்ல, “அடியே ஒரு டெடிபியரரில் உன்னோட கோபம் எல்லாம் பறந்து போய்விட்டதா..?” என்றவள் விசாரணையில் இறங்க சந்தோஷ் பிரியாவைப் பார்த்து சிரித்தான்..

“ஆமா நல்ல கேளுங்க அக்கா.. நம்ம சொல்லும் பொழுது எல்லாம் இறங்காத கோபம் இப்போ மட்டும் எப்படி இறங்கியது..?” என்ற மதுவும் அவளின் அருகில் வர, “அதுவா உன்னோட அண்ணா எனக்கு சொக்குபொடி போட்டுட்டார்..” என்று குறும்புடன் கூறியவள் சந்தோஷைப் பார்த்து கண்ணடித்தாள்..

“அடப்பாவிகளா..” என்று சஞ்சனா வாய்மீது விரல்வைக்க அக்காவின் தோளில் கைபோட்ட சஞ்சீவ், “இந்த வீடு இவ்வளவு கலகலப்பாக இருப்பதைப் பார்க்க எவ்வளவு நல்ல இருக்கு இல்லக்கா..” என்றவன் அனுபவித்து கூறினான்..

இவர்களைப் பார்த்த பெரியவர்களின் உள்ளம் மகிழ்ச்சியில் போங்கிட, “என்ன நம்ம கூட மானு இருந்தா இன்னும் நல்ல இருந்திருக்கும்..” என்று பிரியா தன்னை மறந்து சொல்லிவிட, “ஆமா கடைசியில் அவளோட மன வருத்தத்தை நம்மால் போக்கவே முடியல..” என்றான் சந்தோஷ்..

அதுவரை இருந்த மனநிலை மாறி எல்லோரின் முகமும் மாறிவிட, “டேய் சந்தோஷ் யாருடா அந்த மான்விழி..” என்று பிருந்தா கேட்டதும், “நான் சொல்றேன்..” என்ற சஞ்சனா, “மான்விழி எங்களோட கிளோஸ் ப்ரிண்ட பெரியம்மா..” என்றவள் ஆரம்பித்தது அவளின் இறப்பு வரையில் சொல்லி முடித்தாள்.. அதைக்கேட்ட பெரியவர்கள் உள்ளம் கனத்தது..

“அவள் இறக்கும் பொழுது கூட எங்க அம்மா எனக்காக ஒரு வார்த்தை கூட பேசல அண்ணா என்று மானு சொல்லும் பொழுது என்னோட உயிரே என்னிடம் இல்லம்மா..” என்றவன் சொல்லிக் கொண்டிருக்க பிருந்தாவின் நினைவலைகள் எங்கோ சென்று திரும்பியது..

மானுவின் இறப்பு அவருக்குள் புதைத்திருந்த கேள்வி மனதில் அலையென எழும்ப அந்த நினைவுகளின் தாக்கத்தில் அவரின் முகம் மாறியது.. அவள் இறக்கும் பொழுது அவள் கேட்ட அதே கேள்வி இப்பொழுது பிருந்தாவின் உள்ளத்திலும் எதிரொலித்தது..

“அம்மா இவங்க என்னை அடிப்பதை வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறீங்க.. இவங்க என்னை அடிச்சே கொன்றாலும் நீங்க எதிர்த்து கேள்வி கேட்க மாட்டீங்க இல்ல..” என்று பிருந்தாவின் இதயக்கூட்டில் இருந்து ஒரு குரல் கேட்க அவரின் உள்ளத்தில் தாமரையின் நினைவுகள் வந்து சென்றது..

அவரின் முகம் மாறுவதைக் கவனித்த நந்தனோ, “சந்தோஷ் வார்த்தை இவளுக்கு பழைய நினைவுகளை எல்லாம் மறுபடியும் நினைவு படுத்திவிட்டது போல..” என்றவர் நினைத்துக்கொண்டே, “பிருந்தா..” என்றவளின் கைபற்ற சந்தோஷ் முகத்தையே இமைக்காமல் பார்த்தவர் மரம்போல நின்றார்..

அந்த கேள்வி பிருந்தாவின் நெஞ்சில் ஈட்டியாக பாய்ந்திட, “அம்மா..” என்றவர் அப்படியே மயங்கிச் சரிய ஆரம்பித்தார் பிருந்தா.. அவர் மயங்கிச் சரிய, “பிருந்தா..” என்று தன்னை மீறி கத்திய நந்தன் அவள் கீழே விழாமல் தாங்கிபிடிக்க தந்தையின் குரலில் சந்தோஷ், சங்கமித்ரா, சஞ்சீவ் மூவரும் திரும்பிப்பார்த்தனர்..

அங்கே மயக்கத்தில் சரிவதைப் பார்த்து மற்றது எல்லாம் மறந்து போக தாயை நோக்கி ஓடினர்.. திடீரென கேட்ட அண்ணனின் குரலில் திரும்பிய அர்ஜூன், “அண்ணி..” என்ற அழைப்புடன் அவரை நோக்கிச் செல்ல மேகா வேகமாக பிருந்தாவின் அருகில் சென்றாள்..

மனைவியை தன்னுடைய மடியில் தாங்கிக் கொண்ட நந்தனோ, “பிந்து.. பிந்து கண்ணைத்திறந்து பாரு..” என்று மனைவியின் கன்னத்தை தட்டினார்.. “அக்கா அக்கா..” என்று மேகா அழைக்க பிருந்தாவிடம் எந்த அசைவுமே இல்லை..

“அம்மா.. அம்மா..” என்ற சந்தோஷ் தாயை மடியில் போட்டுகொண்டு பதட்டத்துடன் அவரின் கன்னத்தை தட்டினான்.. சஞ்சனா ஓடிசென்று தண்ணீர் எடுத்துவர அவளிடம் தண்ணீரை வாங்கி மனைவியின் முகத்தில் அடித்தார் நந்தன்..

தாய் கண்விழிக்க வேண்டுமே என்ற வேண்டுதலுடன் மித்ராவும், சஞ்சீவும் பிருந்தாவின் இருப்பக்கமும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர்.. சந்தோஷ் தாயின் முகத்தையே பார்த்துகொண்டிருக்க பிரியா அழுக ஆரம்பித்தாள்..

விக்ரம் ஒரு புறம் டாக்டரை அழைக்க சந்துரு ஒரு புறம் டாக்டரை அழைத்தார்.. மலரும், மீராவும் பிருந்தாவின் முகத்தைக் கவலையோடு பார்த்தனர்.. நந்தனின் பார்வை மனைவியைவிட்டு அசையவே இல்லை.. சிறிதுநேரத்தில் டாக்டர் வந்துவிட அவரை அறையில் படுக்க வைத்தனர்..

அவரைப் பரிசோதித்த டாக்டர், “இதுவரை மனதில் அழுத்திய ஏதோவொரு நினைவு அவரின் மனதில் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கு.. நீங்களாக அந்த நினைவை வெளி கொண்டுவர முயற்சி செய்த காரணத்தால் அவங்க இப்போ மயக்கமாக இருக்காங்க.. மற்றபடி அவரின் மனதில் இருக்கும் அழுத்தம் குறைந்துவிட்டால் ஹார்ட் அட்டக் வர சான்சே இல்ல..” என்றவர் பிருந்தாவின் நிலையைக் கூறினார்..

“அப்படி மனதின் நினைவுகள் அழுத்தும் பொழுது ஹார்ட் அட்டக் வர சான்ஸ் இருக்கா டாக்டர்..” என்று விசாரித்தான் சந்தோஷ்..

“அதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு சந்தோஷ்.. இப்போ இருக்கிற எல்லோருக்கும் ஹார்ட் அட்டக் வர முதல் காரணமே.. நம்முடைய உள்ளத்தில் நம்மை அழுத்தும் கடந்த காலத்து நினைவுகளை வெளியே சொல்லாமல் மெளனமாக இருந்து இருந்து அந்த அழுத்தமே நாளடைவில் ஹார்ட் அட்டக் வர ஒரு காரணமாக மாறிவிடுகிறது..” என்றவர் விளக்கம் கொடுக்க அபிநந்தனின் மனம் திக்கென்று இருந்தது..

“தேங்க்ஸ் டாக்டர்..” என்றவன் வாசல் வரை சென்று அவரை அனுப்பி வைத்துவிட்டு வந்து தந்தையின் முகம் பார்க்க அவரின் பார்வை முழுவதும் அன்னையின் மீதே இருப்பதைப் பார்த்தவனின் இதயத்தில் வழி ஏற்பட்டது..

எல்லோருமே அதே அறையில் பிருந்தா கண்விழிக்க காத்திருந்தனர்.. சிறிதுநேரத்தில் பிருந்தாவே மெல்ல கண்விழித்த பிருந்தா முதலில் பார்த்தது தன்னுடைய கணவன் அபியை மட்டுமே..! ஒரு நொடி கூட தன்னுடைய பிரிவைத் தாங்க முடியாமல் அமர்ந்திருந்த கணவனின் முகம் பார்த்தவர், “அபி..” என்று கண்ணீரோடு அழைத்தார்..

அவரின் அழைப்பில் அவரின் உணர்வுகள் உயிர் பெற, “பிந்து..” என்று மனைவியை அணைத்துக்கொண்டு கதறிவிட்டார் அபிநந்தன்.. எத்தனை வருடங்கள் சென்ற பொழுதிலும் கூட தன்னுடைய மனைவியின் மீது அவர் வைத்திருந்த அன்பில் துளி கூட மாறாமல் இருக்கும் தன்னுடைய தந்தையைப் பார்த்த சந்தோஷ் உள்ளம் மகிழ்ந்தது..

‘என்னுடைய அப்பா மாதிரியே என்னோட மனைவியை நான் இறுதிவரை காதலிக்கணும்..’ என்றவன் பிரியாவின் விரலோடு கைகோர்த்து கொள்ள மெல்ல நிமிர்ந்தவள், “அத்தைக்கு ஒன்னும் இல்ல இல்ல அத்து..” என்றவள் விழிகளை நீரைத் தேக்கி வண்ணம் கேட்க, “அம்மாவுக்கு ஒன்னும் இல்ல தேனு..” என்றவளைத் தேற்றினான் சந்தோஷ்..

“அபி என்னோட அம்மா கடைசி வரை எனக்காக ஒரு வார்த்தை கூட பேசவே இல்ல.. அதை நினைக்கும் பொழுது மனசு ரொம்ப வலிக்குது அபி.. அப்போ என்னோட பிறப்பு அவங்களுக்குமா பிடிக்கல..” என்றவர் குழந்தை போல கேட்டதும், “உனக்காக உங்க அம்மா பேசவே இல்லன்னு இன்னொரு முறை சொல்லாதே பிந்து..” என்றவர் மனைவியின் வாயைப் பொத்தினார்..

அபிநந்தனுக்கு பிருந்தா என்றால் உயிர்.. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் அவரால் அதைதான்கவே முடியாது.. அதனாலோ என்னவோ இதுவரை அந்த உண்மையை தன்னுடைய மனதிலேயே மறைத்து வைத்திருந்தார்..

அதுவரை அம்மா அழுது பார்த்திராத சந்தோஷ் மனம் வலிக்க பெரியவர்களின் கவனம் முழுவதும் பிருந்தாவின் பக்கம் திரும்பிவிட மனைவியை எழுப்பி சோபாவில் அமர வைத்தவர், “இல்ல பிருந்தா உனக்காக உங்க அம்மா ஒரு நாள் பேசினாங்க..” என்றவர் நிறுத்தி நிதானமாகக் கூறினார்..

“அபி நீங்க என்ன சொல்றீங்க..” என்றவர் புரியாமல் கேட்டார் பிருந்தா.. அப்பொழுது செல்லில் அதை ரெகார்ட் செய்ய ஆரம்பித்த சந்தோஷ் அமைதியாக அங்கே நடப்பதை மட்டும் கவனிக்க பிரியா அவனைக் கேள்வியாக பார்க்க, ‘எல்லாம் நன்மைக்கே..’ என்றவன் பார்வையால் அவளுக்கு ஆறுதல் அளித்தான்..

சந்தோஷ், மித்ரா, சஞ்சீவ், மதுபாலா, சஞ்சனா பிரியா ஆறுபேரும் கீழே அமர்ந்திருக்க பெரியவர்கள் எல்லோரும் சோபாவில் அமர மனதில் இதுவரை புதைத்து வைத்திருந்த உண்மையை மனைவியிடம் சொல்ல ஆரம்பித்தார் அபிநந்தன்..

அந்த உண்மை பிருந்தாவை மேலும் வேதனைபடுத்துமா..? இல்லை மகிழ்ச்சிபடுத்துமா..? சந்தோஷ் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறான்..???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top