அத்தியாயம் – 3
சென்னையின் ஓதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் அந்த இல்லm பிருந்தாவனம்.. அபிநந்தன், விக்ரம், சந்துரு மூவரும் சேர்ந்து கட்டிய இல்லம். இவர்கள் மூவருமே தங்களின் விருப்பம்போல மூன்று பங்களாவை ஒரே மாதிரி அழகாக கட்டியிருந்தனர்.. அந்த வீட்டின் பெயர் மட்டும் பிருந்தாவனம் இல்லை.. பூவிற்கென்று ஒரு இடத்தையே ஒதுக்கி அதை நிஜமான பிருந்தாவனமாக மாற்றி அமைத்திருந்தனர்..
அபிநந்தனுக்கு பிருந்தா உயிரென்றால் விக்ரமிற்கும், சந்துருவிற்கும் அவர்களின் வாழ்க்கையை மீட்டு கொடுத்தவள்.. அவளால் தான் அவர்களின் வாழ்க்கை பிருந்தாவனமாக மாறியது என்று உணர்ந்தவே மூவரும் ஒன்றிணைந்து` அந்த இல்லத்திற்கு பிருந்தாவனம் என்று பெயர் வைத்தனர்..
தன்னுடைய அறைக்கு சென்ற அபிநந்தன் குளித்துவிட்டு மீண்டும் கீழே இறங்கி வரும் வரையில் பிருந்தா சமையலறையில் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.. மேகா காய்களை நறுக்கிக் கொடுக்க அடுப்பருகே நின்று வேலையைக் கவனித்தாள்..
அவளின் கைகள் மட்டும் வேலையைச் செய்ய மனமோ, ‘இந்த வருடமாவது பிரியாவைப் போய் சந்தோஷ் சந்திப்பானா..? இல்ல இந்த வருடமும் என்னோட கனவும் கனவாகவே போயிருமோ..?’ என்றவளின் எண்ணம் முழுவதும் மகனின் மீதும் மருமகளின் மீதுமே இருந்தது..
கடுகு போட்டு தாளிப்பதற்கு பதிலாக சீரகமும், கருவேப்பிலைக்கு பதிலாக கொத்தமல்லி தலையையும் போட்டு தாளித்த பிருந்தாவைக் கவனித்த மேகா, ‘அக்காவோட கவனம் இங்கே இல்லையென்று..’ புரிந்துவிட அவளுக்கும் சேர்த்து வேலையைக் கவனித்தாள்.. பிருந்தா ஏன் இப்படி இருக்கிறாள் என்று அவளுக்கும் தெரியும் என்பதால் அவளும் அமைதியாக இருந்தாள்..
காலையில் பேப்பர் படித்து முடித்து குளித்துவிட்டு வந்த மோகன் மனைவியை பார்வையால் தேட அவரோ பூஜையறையில் கண்மூடி அமர்ந்திருக்க, “பிருந்தா ஒரு காபி போட்டு எடுத்துவாடா..” என்று அழைக்க அவரின் அழைப்பு அவளின் காதில் விழவே இல்லை.. அவளின் கவனம் இங்கில்லை என்றறிந்த மேகா காபி எடுத்துச்சென்று மாமாவிற்கு கொடுத்தாள்..
“ஏன் மேகா பிருந்தா எங்கே..?” என்றவர் கேள்வியெழுப்ப, “பிரியாவிற்கு இன்னைக்கு பிறந்தநாள் மாமா.. அந்த சிந்தனையில் இருப்பதால் அவங்களோட கவனம் இங்க இல்ல.. அதன் நீங்க கூப்பிட்டது கூட அவங்களுக்கு கேட்கல..” என்றவள் சொல்லிவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்க மோகன் காபியைக் குடித்தார்..
அப்பொழுது குளித்துவிட்டு சாப்பிட கீழே வந்த நந்தன், “குட் மார்னிங் அப்பா..” என்று கூறிய நந்தனின் பின்னோடு டைனிங் டேபிளிற்கு வந்த அர்ஜூன், “குட் மார்னிங் அப்பா..” என்றவன் அண்ணனின் அருகில் குனிந்து, “அண்ணா சந்தோஷ் எங்கே..?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.. இருவரின் முகம் பார்த்தவரின் பார்வையில் இருந்த கண்டிப்பை கவனித்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
“நானும் அவனைத்தான் அர்ஜூன் தேடிட்டு இருக்கிறேன்..” என்றவன் பதில் சொல்ல, “என்ன எங்க எல்லாம் அவனை தேடு நீங்க அண்ணா..?” என்றவன் கேட்கும் பொழுது பூஜையறையில் இருந்து வெளியே வந்த சுமதி, “பிருந்தா வாம்மா வந்து ஆரத்தி எடுத்துக்கோ..” என்று சமையறை நோக்கி குரல் கொடுத்தார்..
அவர் பிருந்தாவை எதிர்பார்க்க மேகா வெளியே வந்து ஆரத்தி எடுத்து கண்ணில் ஒத்திக்கொள்ள, “அண்ணா அண்ணி எங்கே..?” என்று கேட்டான் அர்ஜூன்.. “அக்கா சமையறையில் இருக்காங்க..” என்று பதில் கூறிய மேகா சமையறை நோக்கி நகர்ந்தாள்..
பெரிய மருமகளை எதிர்பார்த்து சமையறையை நோக்கி, “பிருந்தா இன்னும் என்னடா பண்ற..?” என்ற அத்தையின் குரல் கேட்டதும் அவளின் கவனம் கலைய திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் பிருந்தா.. அத்தை குரலுக்கு பதில் சொல்லாமல் ஏதோ நினைவில் நின்ற மனைவியை பார்த்த நந்தனுக்கு மகனை நினைக்க நினைக்க கோபம் எகிறியது..
“அத்தை இதோ வரேன்..” என்றவள் குரல்கொடுத்துவிட்டு வேகமாக வெளியே வர அவளைப் பார்த்த நால்வரின் மனமும் வருத்தத்தில் ஆழ்ந்துவிட்டனர்.. அவளின் முகம் பார்க்க அவர்களுக்கு எல்லாம் கஷ்டமாக இருந்தது.. அவர்களின் முகத்தைப் பார்த்து தன்னை தேற்றிக்கொண்ட பிருந்தா, “ஒரு சின்ன வேலை அத்தை..” என்று புன்னகையுடன் கூறினாள்..
அவள் சமையறை நோக்கி நகர மனைவியை நிமிர்ந்து பார்த்த மோகன், “இன்னைக்கு பிரியா பிறந்தநாள் சுமதி..” என்று சொல்ல சுமதியின் முகமும் சோகத்தில் ஆழ்ந்துவிட அவரும் பூஜை அறையை நோக்கி நகர்வதைப் பார்த்த நந்தனுக்கு மகனின் மீது கோபம் வந்தது.. எல்லோரும் இருந்து பிரியா அங்கே தனியாக இருப்பதை நினைத்த அர்ஜூனிற்கும் தன்னுடைய மகனின் மீது கோபம் வர இருவரும் சேர்ந்து சந்தோஷிற்கு அழைக்க அவன் அழைப்பை எடுக்கவே இல்லை..
“பிருந்தா என்ன பண்ற..?” என்ற அழைப்புடன் வீட்டின் உள்ளே நுழைந்த மீராவைத் திரும்பிப் பார்த்த அர்ஜூன், “வாங்க உங்களத்தான் தேடிட்டு இருக்கிறோம்..?” என்று பல்லைக்கடித்த அர்ஜூனைப் பார்த்து புரியாமல் நின்ற மனைவியின் பின்னோடு வந்த விக்ரம், “என்ன அர்ஜூன் காலையில இவ்வளவு கடுப்பாக இருக்கிற..?” என்று சாதாரணமாகக் கேட்டபடி நந்தனின் அருகில் அமர்ந்தான்..
“நல்ல கேளுங்க.. எங்க மருமகள் அங்கே தனியாக இருக்கிற.. இந்த சந்தோஷ் எங்கே போய் தொலைஞ்சான்னு தெரியல.. சரியான கோபத்தில இருக்கிறேன்.. அண்ணா நீ மட்டும் கடுப்பை கிளப்பின அப்புறம் சமையறையில் இருந்து சட்டுகம் தான் வரும்..” என்று மொத்த கோபத்தையும் விக்ரமிடம் காட்டினாள் பிருந்தா..
அவளின் குரல் கேட்ட மீரா, “பிருந்தா சரியான கோபத்தில் இருப்பா போல தெரியுது..” என்று மெல்லிய குரலில் நந்தனிடம் கேட்க, “சமைலறை பக்கம் மட்டும் போகதே மீரா.. அவளுக்கு இருக்கிற கோபத்தில இருக்கிற.. அப்புறம் என்ன நடக்குன்னு உனக்கு நான் சொல்லணும் என்ற அவசியமே இல்ல..” என்உ மெல்லிய குரலில் மீராவை எச்சரித்தான் நந்தன்..
அர்ஜூன் விடாமல் சந்தோஷிற்கு அழைக்க அவனின் செல் சுவிச் ஆப் என்று வரவும், சமையறையில் இருந்து மிரட்டிய பிருந்தாவின் மிரட்டலில் எல்லோரும் அமைதியாக இருக்க, “ஏன் பிருந்தா இவ்வளவு கோபமாக இருக்கிற..?” என்று அவளை சீண்டிவிட்ட விக்ரமை முறைத்த நந்தன், “இன்னைக்கு நீ அவளிடம் நல்ல வாங்க போற விக்ரம்..” என்றவன் எச்சரித்தான்..
“பிருந்தா உன்னோட கவலை எனக்கு இல்லவே இல்ல.. சந்தோஷ் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்..?” என்றவள் சொல்லி முடிக்கும் முன்னே கேஸை ஆப் செய்துவிட்டு வேகமாக வெளியே வந்த பிருந்தா, “அவனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் மீரா அண்ணி..” என்று கோபத்தில் கேட்டாள்..
“பிருந்தா நார்மலாக இரும்மா.. எதுக்கு இவ்வளவு கோபப்படற..” என்று வாசலில் இருந்து கேட்ட சந்துருவின் குரலில் திரும்பிப் பார்த்து, “சந்துரு வேண்டாம் நீங்களும் என்னிடம் திட்டு வாங்காதீங்க.. அவன் செய்வதெல்லாம் சரின்னு நீங்க எல்லோரும் அவனுக்கு சப்போர்ட் பண்ணினாலும் என்னோட மனசு ஆறவே இல்ல..” என்று கோபத்துடன் கூறினாள்..
அவனின் பின்னோடு வீட்டின் உள்ளே நுழைந்த மலர்விழி, “பிருந்தா எல்லாம் நல்லதாக நடக்கும்.. நீ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகிற..” என்று சாதரணமாக கேட்க, “அப்போ அவன் செஞ்சது எல்லாம் சரி.. நான் இப்போ பேசறது எல்லாம் தப்பு இல்ல..” என்று கேட்டதும் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் எல்லோரும் அமைதியாக இருந்தனர்..
“அக்கா அவனுக்கு அவனோட பொண்டாட்டியைப் பார்த்துக்கொள்ள தெரியாதா..? நீங்க போய் வேலையை பாருங்க.. நான் சமையல் வேலையை முடிச்சிட்டேன் எல்லோரும் சாப்பிட வாங்க..” என்று சமையறையில் இருந்து கேட்ட மேகாவின் குரலில் எல்லோரும் டைனிங் ஹாலை நோக்கி நகர்ந்தனர்..
“இன்னைக்கு மட்டும் அவன் என்னோட மருமகளைப் பார்க்காமல் வீட்டுக்கு வரட்டும்.. அப்புறம் இருக்கு அவனுக்கு கச்சேரி..” என்று மகனை வானாலி இல்லாமல் வறுத்தேடுத்தாள் பிருந்தா.. அவள் எந்த அளவுக்கு பாசமாக மகனை வளர்ந்தாலோ அந்த பாசம் எல்லாம் இப்பொழுது அவனின் மீது இருந்து காட்ட முடியாத சூழ்நிலையில் அவளை நிறுத்திவிட்டான் சந்தோஷ்..
“எனக்கு சந்தோஷ் மீதோ பிரியாவைப் பற்றியோ எந்த கவலையும் இல்ல.. இப்போ இருக்கிற பிரச்சனையை யாராவது பெருசு பண்ணிவிட கூடாதுன்னு கவலையாக இருக்கு..” என்று கூறிய மலர்விழியை சமாதானம் செய்யும் விதமாக பின்னோடு வந்து நின்ற சந்துரு, “சந்தோஷ் பற்றி நமக்கு தெரியாதா மலர்...” என்று சொல்ல அவளின் வருத்தம் கொஞ்சம் குறைந்தது..
“இங்கிருந்து மூணு வானரம் கிளம்பி போயிருக்கு.. அவங்க எந்த பிரச்சனையும் பண்ணாமல் வீடு வந்த போதும் என்று நினைங்க..” என்று அர்ஜூன் சொல்ல தன்னுடைய மகள்களை நினைத்த பிருந்தாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.. அவர்கள் சேட்டை ராணிகள்.. அவங்களோட சேட்டையில் தான் இந்த பிருந்தாவனம் இன்றும் பொலிவுடன் இருக்கிறது..
“இந்த மித்ரா கூட சேர்ந்த இரண்டு வாலுகளும் அவளோட கிளம்பி போயிருக்கு.. எனக்கு மித்ரா பற்றி கூட கவலை இல்ல.. என்னோட மகள் இருவரையும் நினைச்சாத்தான் வயிற்றில் புளியைக் கரைக்கிறது..” என்று பயத்துடன் கூறிய சந்துருவைப் பார்த்து சிரித்த பிருந்தா, “அவங்க என்னோட மகளுங்க.. அவங்களால் யாருக்கும் எந்த கெடுதலும் வராது..” என்று கூறிய மருமகளை மாமனார் மாமியார் இருவரும் புன்னகையுடன் பார்த்தனர்..
“அப்போ சந்தோஷ் மீது உனக்கு நம்பிக்கை இல்ல..” என்று சந்தேகமாக புருவம் உயர்த்திய கணவனை நிமிர்ந்து பார்த்த பிருந்தா, “அவன் மேல இருக்கிற நம்பிக்கையில் தான் நான் இன்னும் அமைதியாக இருக்கேன்..” என்று அழுத்தமாக கூறிய பிருந்தா அனைவரையும் அமரவைத்து பரிமாற மற்ற வேலைகளைக் கவனித்தாள் மேகா..
தன்னுடைய நிறுவனத்தில் வேலையை முடித்த சந்தோஷ் சீட்டில் சாய்த்து கண்மூடி அமர வரிசையாக அபிநந்தன், அர்ஜூன், சங்கமித்ரா எல்லோரும் அழைக்க செல் அடித்துக்கொண்டே இருந்தது.. அவனின் செல் மீண்டும் மீண்டும் அடிக்க விழிதிறந்து பார்த்துவிட்டு அந்த செல்லைச் சுவிச் ஆப் செய்துவிட்டு அமைதியாக அமர்ந்தான்..
அந்த தனிமை அவனின் மனதிற்கு நிம்மதியைக் கொடுக்க அவனின் மனமோ, ‘ஏய் பிரியா ஏண்டி என்னோட பொறுமையை இந்த அளவுக்கு சோதிக்கிற..’ என்று மனதில் அவளிடம் பேசியவன் அதற்கு மேலும் அங்கிருக்க பிடிக்காமல் வீட்டிற்கு கிளம்பிச் செல்ல நினைத்து கார் சாவியுடன் வெளியே வந்து காரை எடுத்தான்..
சென்னையின் ஓதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் அந்த இல்லm பிருந்தாவனம்.. அபிநந்தன், விக்ரம், சந்துரு மூவரும் சேர்ந்து கட்டிய இல்லம். இவர்கள் மூவருமே தங்களின் விருப்பம்போல மூன்று பங்களாவை ஒரே மாதிரி அழகாக கட்டியிருந்தனர்.. அந்த வீட்டின் பெயர் மட்டும் பிருந்தாவனம் இல்லை.. பூவிற்கென்று ஒரு இடத்தையே ஒதுக்கி அதை நிஜமான பிருந்தாவனமாக மாற்றி அமைத்திருந்தனர்..
அபிநந்தனுக்கு பிருந்தா உயிரென்றால் விக்ரமிற்கும், சந்துருவிற்கும் அவர்களின் வாழ்க்கையை மீட்டு கொடுத்தவள்.. அவளால் தான் அவர்களின் வாழ்க்கை பிருந்தாவனமாக மாறியது என்று உணர்ந்தவே மூவரும் ஒன்றிணைந்து` அந்த இல்லத்திற்கு பிருந்தாவனம் என்று பெயர் வைத்தனர்..
தன்னுடைய அறைக்கு சென்ற அபிநந்தன் குளித்துவிட்டு மீண்டும் கீழே இறங்கி வரும் வரையில் பிருந்தா சமையலறையில் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.. மேகா காய்களை நறுக்கிக் கொடுக்க அடுப்பருகே நின்று வேலையைக் கவனித்தாள்..
அவளின் கைகள் மட்டும் வேலையைச் செய்ய மனமோ, ‘இந்த வருடமாவது பிரியாவைப் போய் சந்தோஷ் சந்திப்பானா..? இல்ல இந்த வருடமும் என்னோட கனவும் கனவாகவே போயிருமோ..?’ என்றவளின் எண்ணம் முழுவதும் மகனின் மீதும் மருமகளின் மீதுமே இருந்தது..
கடுகு போட்டு தாளிப்பதற்கு பதிலாக சீரகமும், கருவேப்பிலைக்கு பதிலாக கொத்தமல்லி தலையையும் போட்டு தாளித்த பிருந்தாவைக் கவனித்த மேகா, ‘அக்காவோட கவனம் இங்கே இல்லையென்று..’ புரிந்துவிட அவளுக்கும் சேர்த்து வேலையைக் கவனித்தாள்.. பிருந்தா ஏன் இப்படி இருக்கிறாள் என்று அவளுக்கும் தெரியும் என்பதால் அவளும் அமைதியாக இருந்தாள்..
காலையில் பேப்பர் படித்து முடித்து குளித்துவிட்டு வந்த மோகன் மனைவியை பார்வையால் தேட அவரோ பூஜையறையில் கண்மூடி அமர்ந்திருக்க, “பிருந்தா ஒரு காபி போட்டு எடுத்துவாடா..” என்று அழைக்க அவரின் அழைப்பு அவளின் காதில் விழவே இல்லை.. அவளின் கவனம் இங்கில்லை என்றறிந்த மேகா காபி எடுத்துச்சென்று மாமாவிற்கு கொடுத்தாள்..
“ஏன் மேகா பிருந்தா எங்கே..?” என்றவர் கேள்வியெழுப்ப, “பிரியாவிற்கு இன்னைக்கு பிறந்தநாள் மாமா.. அந்த சிந்தனையில் இருப்பதால் அவங்களோட கவனம் இங்க இல்ல.. அதன் நீங்க கூப்பிட்டது கூட அவங்களுக்கு கேட்கல..” என்றவள் சொல்லிவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்க மோகன் காபியைக் குடித்தார்..
அப்பொழுது குளித்துவிட்டு சாப்பிட கீழே வந்த நந்தன், “குட் மார்னிங் அப்பா..” என்று கூறிய நந்தனின் பின்னோடு டைனிங் டேபிளிற்கு வந்த அர்ஜூன், “குட் மார்னிங் அப்பா..” என்றவன் அண்ணனின் அருகில் குனிந்து, “அண்ணா சந்தோஷ் எங்கே..?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.. இருவரின் முகம் பார்த்தவரின் பார்வையில் இருந்த கண்டிப்பை கவனித்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
“நானும் அவனைத்தான் அர்ஜூன் தேடிட்டு இருக்கிறேன்..” என்றவன் பதில் சொல்ல, “என்ன எங்க எல்லாம் அவனை தேடு நீங்க அண்ணா..?” என்றவன் கேட்கும் பொழுது பூஜையறையில் இருந்து வெளியே வந்த சுமதி, “பிருந்தா வாம்மா வந்து ஆரத்தி எடுத்துக்கோ..” என்று சமையறை நோக்கி குரல் கொடுத்தார்..
அவர் பிருந்தாவை எதிர்பார்க்க மேகா வெளியே வந்து ஆரத்தி எடுத்து கண்ணில் ஒத்திக்கொள்ள, “அண்ணா அண்ணி எங்கே..?” என்று கேட்டான் அர்ஜூன்.. “அக்கா சமையறையில் இருக்காங்க..” என்று பதில் கூறிய மேகா சமையறை நோக்கி நகர்ந்தாள்..
பெரிய மருமகளை எதிர்பார்த்து சமையறையை நோக்கி, “பிருந்தா இன்னும் என்னடா பண்ற..?” என்ற அத்தையின் குரல் கேட்டதும் அவளின் கவனம் கலைய திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் பிருந்தா.. அத்தை குரலுக்கு பதில் சொல்லாமல் ஏதோ நினைவில் நின்ற மனைவியை பார்த்த நந்தனுக்கு மகனை நினைக்க நினைக்க கோபம் எகிறியது..
“அத்தை இதோ வரேன்..” என்றவள் குரல்கொடுத்துவிட்டு வேகமாக வெளியே வர அவளைப் பார்த்த நால்வரின் மனமும் வருத்தத்தில் ஆழ்ந்துவிட்டனர்.. அவளின் முகம் பார்க்க அவர்களுக்கு எல்லாம் கஷ்டமாக இருந்தது.. அவர்களின் முகத்தைப் பார்த்து தன்னை தேற்றிக்கொண்ட பிருந்தா, “ஒரு சின்ன வேலை அத்தை..” என்று புன்னகையுடன் கூறினாள்..
அவள் சமையறை நோக்கி நகர மனைவியை நிமிர்ந்து பார்த்த மோகன், “இன்னைக்கு பிரியா பிறந்தநாள் சுமதி..” என்று சொல்ல சுமதியின் முகமும் சோகத்தில் ஆழ்ந்துவிட அவரும் பூஜை அறையை நோக்கி நகர்வதைப் பார்த்த நந்தனுக்கு மகனின் மீது கோபம் வந்தது.. எல்லோரும் இருந்து பிரியா அங்கே தனியாக இருப்பதை நினைத்த அர்ஜூனிற்கும் தன்னுடைய மகனின் மீது கோபம் வர இருவரும் சேர்ந்து சந்தோஷிற்கு அழைக்க அவன் அழைப்பை எடுக்கவே இல்லை..
“பிருந்தா என்ன பண்ற..?” என்ற அழைப்புடன் வீட்டின் உள்ளே நுழைந்த மீராவைத் திரும்பிப் பார்த்த அர்ஜூன், “வாங்க உங்களத்தான் தேடிட்டு இருக்கிறோம்..?” என்று பல்லைக்கடித்த அர்ஜூனைப் பார்த்து புரியாமல் நின்ற மனைவியின் பின்னோடு வந்த விக்ரம், “என்ன அர்ஜூன் காலையில இவ்வளவு கடுப்பாக இருக்கிற..?” என்று சாதாரணமாகக் கேட்டபடி நந்தனின் அருகில் அமர்ந்தான்..
“நல்ல கேளுங்க.. எங்க மருமகள் அங்கே தனியாக இருக்கிற.. இந்த சந்தோஷ் எங்கே போய் தொலைஞ்சான்னு தெரியல.. சரியான கோபத்தில இருக்கிறேன்.. அண்ணா நீ மட்டும் கடுப்பை கிளப்பின அப்புறம் சமையறையில் இருந்து சட்டுகம் தான் வரும்..” என்று மொத்த கோபத்தையும் விக்ரமிடம் காட்டினாள் பிருந்தா..
அவளின் குரல் கேட்ட மீரா, “பிருந்தா சரியான கோபத்தில் இருப்பா போல தெரியுது..” என்று மெல்லிய குரலில் நந்தனிடம் கேட்க, “சமைலறை பக்கம் மட்டும் போகதே மீரா.. அவளுக்கு இருக்கிற கோபத்தில இருக்கிற.. அப்புறம் என்ன நடக்குன்னு உனக்கு நான் சொல்லணும் என்ற அவசியமே இல்ல..” என்உ மெல்லிய குரலில் மீராவை எச்சரித்தான் நந்தன்..
அர்ஜூன் விடாமல் சந்தோஷிற்கு அழைக்க அவனின் செல் சுவிச் ஆப் என்று வரவும், சமையறையில் இருந்து மிரட்டிய பிருந்தாவின் மிரட்டலில் எல்லோரும் அமைதியாக இருக்க, “ஏன் பிருந்தா இவ்வளவு கோபமாக இருக்கிற..?” என்று அவளை சீண்டிவிட்ட விக்ரமை முறைத்த நந்தன், “இன்னைக்கு நீ அவளிடம் நல்ல வாங்க போற விக்ரம்..” என்றவன் எச்சரித்தான்..
“பிருந்தா உன்னோட கவலை எனக்கு இல்லவே இல்ல.. சந்தோஷ் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்..?” என்றவள் சொல்லி முடிக்கும் முன்னே கேஸை ஆப் செய்துவிட்டு வேகமாக வெளியே வந்த பிருந்தா, “அவனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் மீரா அண்ணி..” என்று கோபத்தில் கேட்டாள்..
“பிருந்தா நார்மலாக இரும்மா.. எதுக்கு இவ்வளவு கோபப்படற..” என்று வாசலில் இருந்து கேட்ட சந்துருவின் குரலில் திரும்பிப் பார்த்து, “சந்துரு வேண்டாம் நீங்களும் என்னிடம் திட்டு வாங்காதீங்க.. அவன் செய்வதெல்லாம் சரின்னு நீங்க எல்லோரும் அவனுக்கு சப்போர்ட் பண்ணினாலும் என்னோட மனசு ஆறவே இல்ல..” என்று கோபத்துடன் கூறினாள்..
அவனின் பின்னோடு வீட்டின் உள்ளே நுழைந்த மலர்விழி, “பிருந்தா எல்லாம் நல்லதாக நடக்கும்.. நீ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகிற..” என்று சாதரணமாக கேட்க, “அப்போ அவன் செஞ்சது எல்லாம் சரி.. நான் இப்போ பேசறது எல்லாம் தப்பு இல்ல..” என்று கேட்டதும் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் எல்லோரும் அமைதியாக இருந்தனர்..
“அக்கா அவனுக்கு அவனோட பொண்டாட்டியைப் பார்த்துக்கொள்ள தெரியாதா..? நீங்க போய் வேலையை பாருங்க.. நான் சமையல் வேலையை முடிச்சிட்டேன் எல்லோரும் சாப்பிட வாங்க..” என்று சமையறையில் இருந்து கேட்ட மேகாவின் குரலில் எல்லோரும் டைனிங் ஹாலை நோக்கி நகர்ந்தனர்..
“இன்னைக்கு மட்டும் அவன் என்னோட மருமகளைப் பார்க்காமல் வீட்டுக்கு வரட்டும்.. அப்புறம் இருக்கு அவனுக்கு கச்சேரி..” என்று மகனை வானாலி இல்லாமல் வறுத்தேடுத்தாள் பிருந்தா.. அவள் எந்த அளவுக்கு பாசமாக மகனை வளர்ந்தாலோ அந்த பாசம் எல்லாம் இப்பொழுது அவனின் மீது இருந்து காட்ட முடியாத சூழ்நிலையில் அவளை நிறுத்திவிட்டான் சந்தோஷ்..
“எனக்கு சந்தோஷ் மீதோ பிரியாவைப் பற்றியோ எந்த கவலையும் இல்ல.. இப்போ இருக்கிற பிரச்சனையை யாராவது பெருசு பண்ணிவிட கூடாதுன்னு கவலையாக இருக்கு..” என்று கூறிய மலர்விழியை சமாதானம் செய்யும் விதமாக பின்னோடு வந்து நின்ற சந்துரு, “சந்தோஷ் பற்றி நமக்கு தெரியாதா மலர்...” என்று சொல்ல அவளின் வருத்தம் கொஞ்சம் குறைந்தது..
“இங்கிருந்து மூணு வானரம் கிளம்பி போயிருக்கு.. அவங்க எந்த பிரச்சனையும் பண்ணாமல் வீடு வந்த போதும் என்று நினைங்க..” என்று அர்ஜூன் சொல்ல தன்னுடைய மகள்களை நினைத்த பிருந்தாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.. அவர்கள் சேட்டை ராணிகள்.. அவங்களோட சேட்டையில் தான் இந்த பிருந்தாவனம் இன்றும் பொலிவுடன் இருக்கிறது..
“இந்த மித்ரா கூட சேர்ந்த இரண்டு வாலுகளும் அவளோட கிளம்பி போயிருக்கு.. எனக்கு மித்ரா பற்றி கூட கவலை இல்ல.. என்னோட மகள் இருவரையும் நினைச்சாத்தான் வயிற்றில் புளியைக் கரைக்கிறது..” என்று பயத்துடன் கூறிய சந்துருவைப் பார்த்து சிரித்த பிருந்தா, “அவங்க என்னோட மகளுங்க.. அவங்களால் யாருக்கும் எந்த கெடுதலும் வராது..” என்று கூறிய மருமகளை மாமனார் மாமியார் இருவரும் புன்னகையுடன் பார்த்தனர்..
“அப்போ சந்தோஷ் மீது உனக்கு நம்பிக்கை இல்ல..” என்று சந்தேகமாக புருவம் உயர்த்திய கணவனை நிமிர்ந்து பார்த்த பிருந்தா, “அவன் மேல இருக்கிற நம்பிக்கையில் தான் நான் இன்னும் அமைதியாக இருக்கேன்..” என்று அழுத்தமாக கூறிய பிருந்தா அனைவரையும் அமரவைத்து பரிமாற மற்ற வேலைகளைக் கவனித்தாள் மேகா..
தன்னுடைய நிறுவனத்தில் வேலையை முடித்த சந்தோஷ் சீட்டில் சாய்த்து கண்மூடி அமர வரிசையாக அபிநந்தன், அர்ஜூன், சங்கமித்ரா எல்லோரும் அழைக்க செல் அடித்துக்கொண்டே இருந்தது.. அவனின் செல் மீண்டும் மீண்டும் அடிக்க விழிதிறந்து பார்த்துவிட்டு அந்த செல்லைச் சுவிச் ஆப் செய்துவிட்டு அமைதியாக அமர்ந்தான்..
அந்த தனிமை அவனின் மனதிற்கு நிம்மதியைக் கொடுக்க அவனின் மனமோ, ‘ஏய் பிரியா ஏண்டி என்னோட பொறுமையை இந்த அளவுக்கு சோதிக்கிற..’ என்று மனதில் அவளிடம் பேசியவன் அதற்கு மேலும் அங்கிருக்க பிடிக்காமல் வீட்டிற்கு கிளம்பிச் செல்ல நினைத்து கார் சாவியுடன் வெளியே வந்து காரை எடுத்தான்..
Last edited: