அத்தியாயம் – 7
சேலம் வரையில் சென்றும் பிரியாவைப் பார்க்காமல் சென்னை திரும்பியவனின் மனமோ, ‘டேய் அவ்வளவு தூரம் போயிட்டு அவளைப் பார்க்காமல் வந்திருக்க உன்னை எல்லாம் என்ன பண்ணலாம்..?’ என்றவனின் மனம் கேள்வியெழுப்பியது..
‘நான் என்னோட மனைவிக்கு விஷ் பண்ணல.. அதுக்கு இப்போ என்ன இன்னும் கொஞ்சநாள் பொறு மனமே.. என் வஞ்சிக்கொடி என்னை தேடி வருவா.. கண்ணிரண்டில் போர் தொடுப்பா.. அந்த வெண்ணிலவைத் தொக்கடிப்பா..’ என்று உதட்டில் விசில் அடித்த வண்ணம் மனதிற்குள் குஷியாக பாடிக்கொண்டிருந்தான் சந்தோஷ்..
கார் சீரான வேகத்தில் செலுத்திய சந்தோஷ், ‘ஏண்டி இத்தனை நாள் உனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்ச என்னையே நீ என்ன கேட்ட இதை என்னோட கழுத்தில் எதுக்கு கட்டின என்று கேட்ட இல்ல.. இதுக்கு எல்லாம் உனக்கு பதில் சொல்ல நேரமும் காலமும் வந்துருச்சிடி...’ என்றவன் மனதிற்குள் பேசியபடியே வந்தவனின் கார் பிருந்தாவனம் உள்ளே நுழைந்தது..
இரவு பதினோரு மணி ஆனபிறகும், ‘மகன் வீட்டிற்கு வரவில்லை..’ என்றதுமே பிருந்தாவின் மனம், ‘பிரியாவைப் பார்க்காத்தான் போயிருப்பான்..’ என்ற நினைவுடன் தங்களின் அறைக்கு செல்ல நினைக்க வீட்டின் உள்ளே கார் நுழையும் சத்தம்கேட்டுவாசலுக்கு விரைந்தாள்..
‘சந்தோஷ் வந்துவிட்டானா..?’ என்ற சந்தேகத்துடன் வேகமாக சென்று கதவைத் திறக்க காரில் இருந்து இறங்கிய சந்தோஷ் வாசலில் நின்ற பிருந்தாவைப் பார்த்தும், “அம்மா நீங்க இன்னும் தூங்கலையா..?” என்ற கேள்வியுடன் வீட்டின் உள்ளே நுழைந்தவனைப் பார்த்தும் பிருந்தாவின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது..
அவனின் முகத்தில் இருந்த சந்தோசத்தைப் கவனித்த பிருந்தா, ‘இன்னைக்கு என்னவோ நடந்திருக்கு.. சரி எதுவாக இருந்தாலும் அவனே சொல்லட்டும்..’ என்றவர் மனதிற்குள் நினைக்க, அவரின் மனதை படித்தவனோ மர்மமாக புன்னகைத்தான்..
அவனின் குரல்கேட்டு அலுவலக அறையில் இருந்து எட்டிப்பார்த்த தந்தையைக் கவனித்த சந்தோஷ் அந்த அறையைநோக்கி வேகமாக சென்றவனை பார்த்த பிருந்தா, ‘ஆபீஸ் வொர்க் போல..’ என்ற நினைவுடன் சமையலறையை நோக்கிச் சென்றார்..
அவரின் அலுவலக அறைக்குள் தலையை நீட்டிய சந்தோஷ், “அப்பா பிசியாக இருக்கீங்களா..?” என்று கேட்டது பைலை மூடி வைத்தவர், “வா சந்தோஷ்.. என்ன பேசணும்..” என்றவர நேரடியாக கேட்க, அறைக்குள் நுழைந்தான் சந்தோஷ்..
அவனின் வேகத்தைக் கண்டவர் அவன் அமர சோபாவை கைகாட்டிட, “தேங்க்ஸ்பா..” என்றவன் சோபாவில் அமர்ந்தான்.. அவன் சிறிதுநேரம் அமைதியாக இருக்க அபிநந்தனின் பார்வை மகனின் மீது கேள்வியாக படிந்திட, “அப்பா எனக்கும் பிரியாவிற்கும் திருமணம் ஏற்பாடு பண்ணுங்க..” என்று அதிரடியாக திருமணம் பற்றி பேசினான் சந்தோஷ்..
அவர் அவனைப் புரியாத பார்வை பார்க்க, “எனக்கு திருமணத்தில் பரிபூரண சம்மதம்..” என்றவன் தான் வந்த வேலை முடிந்தது என்று எழுந்து செல்ல நினைக்க, “சந்தோஷ் ஒரு நிமிஷம்..” என்றார் அபிநந்தன்..
அவரின் அழைப்பில் வேகமாக திரும்பியவன், “சொல்லுங்கப்பா..” என்றவனின் முகத்தைப் பார்த்தவர், “திருமணம் என்பது விளையாட்டு இல்ல சந்தோஷ்..” என்றவர் நிதானமாக பேச மறுபடியும் சோபாவில் அவரின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தான்..
அவன் சொல்ல வேண்டிய விஷயத்தை அவனின் நேர் கொண்ட பார்வையே சொல்லிவிட, “நான் இந்த விஷயத்தில் விளையாடலப்பா.. எனக்கு இந்த திருமணத்தில் பரிபூரண சம்மதம்..” என்றவன் முகத்தில் இருந்த உறுதியை கண்டவர் அமைதியாக இருந்தார்..
அவரின் அமைதி அவனை பாதிக்க, “நீங்க விக்ரம் மாமாவிடம் பேசி தெளிவாக முடிவெடுங்க அப்பா.. பட் திருமண நாளை ரொம்ப தள்ளிபோடாதீங்க..” என்றவன் அந்த அறையைவிட்டு எழுந்து சென்றான்..
அப்பொழுது சமையலறையில் இருந்து வெளியே வந்த பிருந்தாவோ, “டேய் இந்த வருடமும் என்னை ஏமாற்றிட்ட இல்ல..” என்று ஆதங்கத்துடன் கேட்டவர், “இந்த இந்த பாலை குடித்துவிட்டு போய் தூங்கு..” என்றார்..
அவரிடம் இருந்து பால் டம்ளாரை வாங்கி கடகடவென்று குடித்தவன், “தேங்க்ஸ் அம்மா..” என்று சொல்லிவிட்டு அவரின் கைகளில் டம்ளாரைக் கொடுத்தவன், “அம்மா நான் பிரியாவைப் பார்க்க போகல.. இப்போ எனக்கு தூக்கம் வருது தூங்க போறேன்..” என்றவனின் பேச்சில் இருந்த மாற்றம் அவரை மௌனம் கொள்ள வைத்தது..
அவர் மெளனமாக நிற்பதைப் பார்த்து, “மற்றது எல்லாம் நாளைக்கு காலையில சொல்றேன்..” என்றவன் வேகமாக படியேறி சென்றுவிட அலுவலக அறையில் இருந்து வெளியே வந்த அபிநந்தன், “என்ன பிந்து சொல்லிட்டு போறான் உன்னோட செல்ல மகன்..” என்றவர் கேட்டார்..
அவரின் கேள்வியில் திரும்பி கணவனின் முகம் பார்த்த பிருந்தா, “அவன் என்னிடம் என்ன சொன்னான்..? இன்னைக்கு பிரியாவைப் பார்க்க போகலம்மா.. மற்றது எல்லாம் காலையில பேசலன்னு சொல்லிட்டு போய்ட்டான்..” என்றவர் படுக்கை அறையை நோக்கி சென்றார்..
அபிநந்தன் மட்டும் மகன் சென்ற திசையைப் பார்த்து யோசனையுடன் நின்றிருந்தார்.. படுக்கை அறையை நோக்கி சென்ற பிருந்தாவின் மனமோ, அவனோட லைப்ல நம்ம எதுக்கு வீணாக தலையிடனும்.. என்னோட மனதில் இருக்கும் கேள்விக்கு எல்லாம் என்றாவது ஒருநாள் பதில் கிடைத்தே தீரும்..’ என்று நினைத்தவர் அவர்களின் அறைக்குள் சென்று மறந்தார்..
தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன் குளித்துவிட்டு வந்து படுக்கையில் படுக்க உறக்கம் அவனின் விழிகளை உறக்கம் சுகமாக தவிழுவிட பலநாளுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான் சந்தோஷ்..
கிழக்கே வானில் கதிரவன் அவனின் பயணத்தைத் தொடங்க பொழுது அழகாக விடிந்தது.. காலையில் எப்பொழுதும் போலவே எழுந்த சந்தோஷ் ஜாக்கிங் முடித்துவிட்டு வந்து குளித்துவிட்டு அலுவலகம் செல்ல தயாராகி கீழே வந்தான்..
சோபாவில் அமர்ந்திருந்த நந்தனும், அர்ஜூனும் கம்பெனி விஷயமாக பேசிக்கொண்டிருந்த அவர்களைப் பார்த்தபடியே மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்தான் சந்தோஷ்.. அவன் வருவதைக் கவனித்த நந்தன் எதுவும் பேசாமல் இருந்தார்..
அப்பொழுதுதான் நிமிர்ந்து மகனைப் பார்த்த அர்ஜூன், “டேய் பிரியாவைப் பார்த்தியா சந்தோஷ்..” என்றவர் கேட்டதும் அவரின் அருகில் அமர்ந்தவன், “இல்ல சித்தப்பா..” என்றவன் கூலாகச் சொல்லிகொண்டிருக்க வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது..
‘வானரங்கள் மூனும் வீடு வந்துவிட்டது..’ என்று மனதிற்குள் நினைத்தார்.. நந்தன் வாசலைப் பார்க்க வேகமாக உள்ளே நுழைந்த சஞ்சீவைப் பார்த்தவர், “டேய் நீ எப்படிடா வந்த..?” என்றவர் கேள்வி எழுப்ப சோபாவில் அமர்ந்திருந்த சந்தோஷைப் பார்த்தவனோ அவனின் மீது கொலைவெறியில் இருந்தான்..
“அம்மா உன்னோட தோசை கரண்டியை எடுத்துட்டுவா..” என்று கட்டளையிட சஞ்சீவ் குரல்கேட்டு சமயலறையில் இருந்து வேகமாக வெளியே வந்த பிருந்தா, “சஞ்சீவ் நீ என்னடா திடீரென வந்து நிற்கிற..” என்றவர் கேட்க அவரின் பின்னோடு சமைலறை விட்டு வெளியே வந்தாள் மேகா..
தம்பியின் குரல்கேட்டு நிமிர்ந்த சந்தோஷ், “சஞ்சீவ்..” என்றவன் பாசமாக அழைக்க அண்ணணின் பக்கம் திரும்பியவனோ, “அண்ணா..” என்று அவனைவிட பாசமாக அழைத்தவண்ணம் அவனின் அருகில் சென்றான்..
“அண்ணா என்னோவோ இடிக்குது..” என்றவர வேகமாக எழுந்ததும், “என்ன சித்தப்பா..” என்றவனின் பார்வை அவரின் மீது சந்தேகமாக படிய, “டேய் அண்ணா..” என்றழைத்த சஞ்சீவ் சந்தோஷை சரம்வாரியாக அடிக்க ஆரம்பித்தான்..
அவன் திடீரென அடிக்கவும், “டேய் எதுக்குடா இப்படி அடிக்கிற..” என்றவன் அவனின் கைகளைத் தடுக்க இருவரையும் பார்த்த அர்ஜூனோ, “அண்ணா என்று நீ பாசமாக அழைத்தது இதுக்குத்தானா. நல்ல வேலை நான் தப்பித்தேன்..” என்றவர் பெருமூச்சு விட நந்தனுக்கு சிரிப்பு வந்தது..
இருவரும் அடித்துக்கொள்ள அவர்களைத் தடுக்காமல் சிரித்த கணவனை பார்த்த பிருந்தா, “டேய் அவனை எதுக்குடா அடிக்கிற..” என்றவர் இருவரையும் விலக்கிவிட அவர்களின் அருகில் செல்ல அவளின் கைபிடித்து தடுத்த நந்தனோ, “உள்நாட்டு கலவரம் பிருந்தா.. நம்ம தலையிடக்கூடாது..” என்றவர் புன்னகையுடன் கூறினார்..
அவர் சொன்னதும் பிருந்தாவும் அமைதியாக நின்று இருவரின் சண்டையையும் வேடிக்கை பார்க்க மேகாவோ தன்னுடைய கணவனிடம், “அக்காவும், மாமாவும் நல்ல முடிவு எடுத்திருக்காங்க..” என்று சொல்ல மனைவியை முறைத்தார் அர்ஜூன்..
“இங்கே வீடே இரண்டாகும் நிலையில் அடிதடி தடந்துட்டு இருக்கு இப்போ வந்து என்ன சொல்ற பாரு..” என்றவன் அங்கே நடப்பதைக் கவனிக்க, சஞ்சீவ் அடியில் இருந்து தப்பிக்க எழுந்து ஓடிகொண்டிருந்தான் சந்தோஷ்..
“டேய் உன்னோட சுயரூபம் தெரியாமல் இதுநாள் வரையில் இருந்துட்டேண்டா..” என்றவன் அவனின் கைக்கு சிக்காமல் போக்கு காட்டிட, “அதேதான் நானும் சொல்றேன்.. நீ இவ்வளவு பெரிய சுயநலவாதி என்று சத்தியமாக எனக்கு தெரியாமல் போச்சுடா..” என்ற சங்கமித்ராவின் குரல் வீட்டு வாசலில் இருந்து கேட்டது..
அப்பொழுதுதான் மகளைக் கவனித்த நந்தன், “ஏன் மித்ரா அவனை இப்படியெல்லாம் சொல்ற..” என்றவரை முறைத்தவள், “நல்ல வளர்த்தி வெச்சிருக்கீங்க தடிமாடு.. அண்ணிக்கு போன் ல கூட விஷ் பண்ணாமல் இருக்கான்.. நான் எவ்வளவு தூரம் எடுத்து சொன்னேன்..” என்றவளும் சந்தோஷை துரத்த ஆரம்பித்தாள்..
அவளின் பின்னோடு வேகமாக மதுபாலா, சஞ்சனா இருவரும், “அக்கா அண்ணா அந்தபக்கம் போறான்.. நீ இந்த பக்கம் போ..” என்று அவளுக்கு பின்னால் நின்று குரல் கொடுக்க, “மது சஞ்சுமா அண்ணாமேல நீங்க வெச்ச பாசம் இவ்வளவுதானா..?” என்றவன் இருவரின் கைகளுக்கும் அகபடாமல் அல்வா கொடுத்தான்..
“அண்ணாவா அது யாரு..?” என்றவள் விழிகளால் தேட தன்னுடைய தங்கை சஞ்சனாவைப் பார்த்த சந்தோஷ், “அடியே இது எல்லாம் அநியாயம்..” என்றவன் சொல்ல, “சஞ்சீவ் அண்ணாவை சும்மே விடாதே..” என்று மதுபாலா சொல்ல வீடே சந்தைக்கடை போல மாறியது..
சங்கமித்ரா துரத்துவதைப் பார்த்த சஞ்சீவ், “அக்கா அண்ணாவை பிடிங்க அக்கா.. அவனை இன்னைக்கு அடி வெளுக்காமல் விடுவதில்லை..” என்றவன் சொல்ல, “நீ வெளுக்க நான் என்ன ஆளுக்கு துணியா..?” என்று அந்த நேரத்திலும் நக்கல் செய்தவனைப் பார்த்து வாய்விட்டு சிரித்தனர் வீட்டின் பெரியவர்கள்..
கடைசியாக ஓடமுடியாமல் அவர்கள் கையில் சிக்கிய சந்தோஷை அடிக்க ஆரம்பித்தனர் சஞ்சீவும், சங்கமித்ராவும்..! அவன் அடி வாங்குவதைப் பார்த்த பிருந்தாவோ, “டேய் அவன் பாவம்டா.. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துகோங்க..” என்றவர் மகனிடமும், மகளிடமும் சொல்ல வாய்விட்டுச் சிரித்தனர் நந்தனும், அர்ஜூனும்..!
சேலம் வரையில் சென்றும் பிரியாவைப் பார்க்காமல் சென்னை திரும்பியவனின் மனமோ, ‘டேய் அவ்வளவு தூரம் போயிட்டு அவளைப் பார்க்காமல் வந்திருக்க உன்னை எல்லாம் என்ன பண்ணலாம்..?’ என்றவனின் மனம் கேள்வியெழுப்பியது..
‘நான் என்னோட மனைவிக்கு விஷ் பண்ணல.. அதுக்கு இப்போ என்ன இன்னும் கொஞ்சநாள் பொறு மனமே.. என் வஞ்சிக்கொடி என்னை தேடி வருவா.. கண்ணிரண்டில் போர் தொடுப்பா.. அந்த வெண்ணிலவைத் தொக்கடிப்பா..’ என்று உதட்டில் விசில் அடித்த வண்ணம் மனதிற்குள் குஷியாக பாடிக்கொண்டிருந்தான் சந்தோஷ்..
கார் சீரான வேகத்தில் செலுத்திய சந்தோஷ், ‘ஏண்டி இத்தனை நாள் உனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்ச என்னையே நீ என்ன கேட்ட இதை என்னோட கழுத்தில் எதுக்கு கட்டின என்று கேட்ட இல்ல.. இதுக்கு எல்லாம் உனக்கு பதில் சொல்ல நேரமும் காலமும் வந்துருச்சிடி...’ என்றவன் மனதிற்குள் பேசியபடியே வந்தவனின் கார் பிருந்தாவனம் உள்ளே நுழைந்தது..
இரவு பதினோரு மணி ஆனபிறகும், ‘மகன் வீட்டிற்கு வரவில்லை..’ என்றதுமே பிருந்தாவின் மனம், ‘பிரியாவைப் பார்க்காத்தான் போயிருப்பான்..’ என்ற நினைவுடன் தங்களின் அறைக்கு செல்ல நினைக்க வீட்டின் உள்ளே கார் நுழையும் சத்தம்கேட்டுவாசலுக்கு விரைந்தாள்..
‘சந்தோஷ் வந்துவிட்டானா..?’ என்ற சந்தேகத்துடன் வேகமாக சென்று கதவைத் திறக்க காரில் இருந்து இறங்கிய சந்தோஷ் வாசலில் நின்ற பிருந்தாவைப் பார்த்தும், “அம்மா நீங்க இன்னும் தூங்கலையா..?” என்ற கேள்வியுடன் வீட்டின் உள்ளே நுழைந்தவனைப் பார்த்தும் பிருந்தாவின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது..
அவனின் முகத்தில் இருந்த சந்தோசத்தைப் கவனித்த பிருந்தா, ‘இன்னைக்கு என்னவோ நடந்திருக்கு.. சரி எதுவாக இருந்தாலும் அவனே சொல்லட்டும்..’ என்றவர் மனதிற்குள் நினைக்க, அவரின் மனதை படித்தவனோ மர்மமாக புன்னகைத்தான்..
அவனின் குரல்கேட்டு அலுவலக அறையில் இருந்து எட்டிப்பார்த்த தந்தையைக் கவனித்த சந்தோஷ் அந்த அறையைநோக்கி வேகமாக சென்றவனை பார்த்த பிருந்தா, ‘ஆபீஸ் வொர்க் போல..’ என்ற நினைவுடன் சமையலறையை நோக்கிச் சென்றார்..
அவரின் அலுவலக அறைக்குள் தலையை நீட்டிய சந்தோஷ், “அப்பா பிசியாக இருக்கீங்களா..?” என்று கேட்டது பைலை மூடி வைத்தவர், “வா சந்தோஷ்.. என்ன பேசணும்..” என்றவர நேரடியாக கேட்க, அறைக்குள் நுழைந்தான் சந்தோஷ்..
அவனின் வேகத்தைக் கண்டவர் அவன் அமர சோபாவை கைகாட்டிட, “தேங்க்ஸ்பா..” என்றவன் சோபாவில் அமர்ந்தான்.. அவன் சிறிதுநேரம் அமைதியாக இருக்க அபிநந்தனின் பார்வை மகனின் மீது கேள்வியாக படிந்திட, “அப்பா எனக்கும் பிரியாவிற்கும் திருமணம் ஏற்பாடு பண்ணுங்க..” என்று அதிரடியாக திருமணம் பற்றி பேசினான் சந்தோஷ்..
அவர் அவனைப் புரியாத பார்வை பார்க்க, “எனக்கு திருமணத்தில் பரிபூரண சம்மதம்..” என்றவன் தான் வந்த வேலை முடிந்தது என்று எழுந்து செல்ல நினைக்க, “சந்தோஷ் ஒரு நிமிஷம்..” என்றார் அபிநந்தன்..
அவரின் அழைப்பில் வேகமாக திரும்பியவன், “சொல்லுங்கப்பா..” என்றவனின் முகத்தைப் பார்த்தவர், “திருமணம் என்பது விளையாட்டு இல்ல சந்தோஷ்..” என்றவர் நிதானமாக பேச மறுபடியும் சோபாவில் அவரின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தான்..
அவன் சொல்ல வேண்டிய விஷயத்தை அவனின் நேர் கொண்ட பார்வையே சொல்லிவிட, “நான் இந்த விஷயத்தில் விளையாடலப்பா.. எனக்கு இந்த திருமணத்தில் பரிபூரண சம்மதம்..” என்றவன் முகத்தில் இருந்த உறுதியை கண்டவர் அமைதியாக இருந்தார்..
அவரின் அமைதி அவனை பாதிக்க, “நீங்க விக்ரம் மாமாவிடம் பேசி தெளிவாக முடிவெடுங்க அப்பா.. பட் திருமண நாளை ரொம்ப தள்ளிபோடாதீங்க..” என்றவன் அந்த அறையைவிட்டு எழுந்து சென்றான்..
அப்பொழுது சமையலறையில் இருந்து வெளியே வந்த பிருந்தாவோ, “டேய் இந்த வருடமும் என்னை ஏமாற்றிட்ட இல்ல..” என்று ஆதங்கத்துடன் கேட்டவர், “இந்த இந்த பாலை குடித்துவிட்டு போய் தூங்கு..” என்றார்..
அவரிடம் இருந்து பால் டம்ளாரை வாங்கி கடகடவென்று குடித்தவன், “தேங்க்ஸ் அம்மா..” என்று சொல்லிவிட்டு அவரின் கைகளில் டம்ளாரைக் கொடுத்தவன், “அம்மா நான் பிரியாவைப் பார்க்க போகல.. இப்போ எனக்கு தூக்கம் வருது தூங்க போறேன்..” என்றவனின் பேச்சில் இருந்த மாற்றம் அவரை மௌனம் கொள்ள வைத்தது..
அவர் மெளனமாக நிற்பதைப் பார்த்து, “மற்றது எல்லாம் நாளைக்கு காலையில சொல்றேன்..” என்றவன் வேகமாக படியேறி சென்றுவிட அலுவலக அறையில் இருந்து வெளியே வந்த அபிநந்தன், “என்ன பிந்து சொல்லிட்டு போறான் உன்னோட செல்ல மகன்..” என்றவர் கேட்டார்..
அவரின் கேள்வியில் திரும்பி கணவனின் முகம் பார்த்த பிருந்தா, “அவன் என்னிடம் என்ன சொன்னான்..? இன்னைக்கு பிரியாவைப் பார்க்க போகலம்மா.. மற்றது எல்லாம் காலையில பேசலன்னு சொல்லிட்டு போய்ட்டான்..” என்றவர் படுக்கை அறையை நோக்கி சென்றார்..
அபிநந்தன் மட்டும் மகன் சென்ற திசையைப் பார்த்து யோசனையுடன் நின்றிருந்தார்.. படுக்கை அறையை நோக்கி சென்ற பிருந்தாவின் மனமோ, அவனோட லைப்ல நம்ம எதுக்கு வீணாக தலையிடனும்.. என்னோட மனதில் இருக்கும் கேள்விக்கு எல்லாம் என்றாவது ஒருநாள் பதில் கிடைத்தே தீரும்..’ என்று நினைத்தவர் அவர்களின் அறைக்குள் சென்று மறந்தார்..
தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன் குளித்துவிட்டு வந்து படுக்கையில் படுக்க உறக்கம் அவனின் விழிகளை உறக்கம் சுகமாக தவிழுவிட பலநாளுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான் சந்தோஷ்..
கிழக்கே வானில் கதிரவன் அவனின் பயணத்தைத் தொடங்க பொழுது அழகாக விடிந்தது.. காலையில் எப்பொழுதும் போலவே எழுந்த சந்தோஷ் ஜாக்கிங் முடித்துவிட்டு வந்து குளித்துவிட்டு அலுவலகம் செல்ல தயாராகி கீழே வந்தான்..
சோபாவில் அமர்ந்திருந்த நந்தனும், அர்ஜூனும் கம்பெனி விஷயமாக பேசிக்கொண்டிருந்த அவர்களைப் பார்த்தபடியே மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்தான் சந்தோஷ்.. அவன் வருவதைக் கவனித்த நந்தன் எதுவும் பேசாமல் இருந்தார்..
அப்பொழுதுதான் நிமிர்ந்து மகனைப் பார்த்த அர்ஜூன், “டேய் பிரியாவைப் பார்த்தியா சந்தோஷ்..” என்றவர் கேட்டதும் அவரின் அருகில் அமர்ந்தவன், “இல்ல சித்தப்பா..” என்றவன் கூலாகச் சொல்லிகொண்டிருக்க வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது..
‘வானரங்கள் மூனும் வீடு வந்துவிட்டது..’ என்று மனதிற்குள் நினைத்தார்.. நந்தன் வாசலைப் பார்க்க வேகமாக உள்ளே நுழைந்த சஞ்சீவைப் பார்த்தவர், “டேய் நீ எப்படிடா வந்த..?” என்றவர் கேள்வி எழுப்ப சோபாவில் அமர்ந்திருந்த சந்தோஷைப் பார்த்தவனோ அவனின் மீது கொலைவெறியில் இருந்தான்..
“அம்மா உன்னோட தோசை கரண்டியை எடுத்துட்டுவா..” என்று கட்டளையிட சஞ்சீவ் குரல்கேட்டு சமயலறையில் இருந்து வேகமாக வெளியே வந்த பிருந்தா, “சஞ்சீவ் நீ என்னடா திடீரென வந்து நிற்கிற..” என்றவர் கேட்க அவரின் பின்னோடு சமைலறை விட்டு வெளியே வந்தாள் மேகா..
தம்பியின் குரல்கேட்டு நிமிர்ந்த சந்தோஷ், “சஞ்சீவ்..” என்றவன் பாசமாக அழைக்க அண்ணணின் பக்கம் திரும்பியவனோ, “அண்ணா..” என்று அவனைவிட பாசமாக அழைத்தவண்ணம் அவனின் அருகில் சென்றான்..
“அண்ணா என்னோவோ இடிக்குது..” என்றவர வேகமாக எழுந்ததும், “என்ன சித்தப்பா..” என்றவனின் பார்வை அவரின் மீது சந்தேகமாக படிய, “டேய் அண்ணா..” என்றழைத்த சஞ்சீவ் சந்தோஷை சரம்வாரியாக அடிக்க ஆரம்பித்தான்..
அவன் திடீரென அடிக்கவும், “டேய் எதுக்குடா இப்படி அடிக்கிற..” என்றவன் அவனின் கைகளைத் தடுக்க இருவரையும் பார்த்த அர்ஜூனோ, “அண்ணா என்று நீ பாசமாக அழைத்தது இதுக்குத்தானா. நல்ல வேலை நான் தப்பித்தேன்..” என்றவர் பெருமூச்சு விட நந்தனுக்கு சிரிப்பு வந்தது..
இருவரும் அடித்துக்கொள்ள அவர்களைத் தடுக்காமல் சிரித்த கணவனை பார்த்த பிருந்தா, “டேய் அவனை எதுக்குடா அடிக்கிற..” என்றவர் இருவரையும் விலக்கிவிட அவர்களின் அருகில் செல்ல அவளின் கைபிடித்து தடுத்த நந்தனோ, “உள்நாட்டு கலவரம் பிருந்தா.. நம்ம தலையிடக்கூடாது..” என்றவர் புன்னகையுடன் கூறினார்..
அவர் சொன்னதும் பிருந்தாவும் அமைதியாக நின்று இருவரின் சண்டையையும் வேடிக்கை பார்க்க மேகாவோ தன்னுடைய கணவனிடம், “அக்காவும், மாமாவும் நல்ல முடிவு எடுத்திருக்காங்க..” என்று சொல்ல மனைவியை முறைத்தார் அர்ஜூன்..
“இங்கே வீடே இரண்டாகும் நிலையில் அடிதடி தடந்துட்டு இருக்கு இப்போ வந்து என்ன சொல்ற பாரு..” என்றவன் அங்கே நடப்பதைக் கவனிக்க, சஞ்சீவ் அடியில் இருந்து தப்பிக்க எழுந்து ஓடிகொண்டிருந்தான் சந்தோஷ்..
“டேய் உன்னோட சுயரூபம் தெரியாமல் இதுநாள் வரையில் இருந்துட்டேண்டா..” என்றவன் அவனின் கைக்கு சிக்காமல் போக்கு காட்டிட, “அதேதான் நானும் சொல்றேன்.. நீ இவ்வளவு பெரிய சுயநலவாதி என்று சத்தியமாக எனக்கு தெரியாமல் போச்சுடா..” என்ற சங்கமித்ராவின் குரல் வீட்டு வாசலில் இருந்து கேட்டது..
அப்பொழுதுதான் மகளைக் கவனித்த நந்தன், “ஏன் மித்ரா அவனை இப்படியெல்லாம் சொல்ற..” என்றவரை முறைத்தவள், “நல்ல வளர்த்தி வெச்சிருக்கீங்க தடிமாடு.. அண்ணிக்கு போன் ல கூட விஷ் பண்ணாமல் இருக்கான்.. நான் எவ்வளவு தூரம் எடுத்து சொன்னேன்..” என்றவளும் சந்தோஷை துரத்த ஆரம்பித்தாள்..
அவளின் பின்னோடு வேகமாக மதுபாலா, சஞ்சனா இருவரும், “அக்கா அண்ணா அந்தபக்கம் போறான்.. நீ இந்த பக்கம் போ..” என்று அவளுக்கு பின்னால் நின்று குரல் கொடுக்க, “மது சஞ்சுமா அண்ணாமேல நீங்க வெச்ச பாசம் இவ்வளவுதானா..?” என்றவன் இருவரின் கைகளுக்கும் அகபடாமல் அல்வா கொடுத்தான்..
“அண்ணாவா அது யாரு..?” என்றவள் விழிகளால் தேட தன்னுடைய தங்கை சஞ்சனாவைப் பார்த்த சந்தோஷ், “அடியே இது எல்லாம் அநியாயம்..” என்றவன் சொல்ல, “சஞ்சீவ் அண்ணாவை சும்மே விடாதே..” என்று மதுபாலா சொல்ல வீடே சந்தைக்கடை போல மாறியது..
சங்கமித்ரா துரத்துவதைப் பார்த்த சஞ்சீவ், “அக்கா அண்ணாவை பிடிங்க அக்கா.. அவனை இன்னைக்கு அடி வெளுக்காமல் விடுவதில்லை..” என்றவன் சொல்ல, “நீ வெளுக்க நான் என்ன ஆளுக்கு துணியா..?” என்று அந்த நேரத்திலும் நக்கல் செய்தவனைப் பார்த்து வாய்விட்டு சிரித்தனர் வீட்டின் பெரியவர்கள்..
கடைசியாக ஓடமுடியாமல் அவர்கள் கையில் சிக்கிய சந்தோஷை அடிக்க ஆரம்பித்தனர் சஞ்சீவும், சங்கமித்ராவும்..! அவன் அடி வாங்குவதைப் பார்த்த பிருந்தாவோ, “டேய் அவன் பாவம்டா.. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துகோங்க..” என்றவர் மகனிடமும், மகளிடமும் சொல்ல வாய்விட்டுச் சிரித்தனர் நந்தனும், அர்ஜூனும்..!