அத்தியாயம் – 8
சந்தோஷ் வந்து சென்றபிறகு தூக்கம் கலைந்ததும் தன்னுடைய அறையில் இருந்து எழுந்து வந்த விஸ்வநாதன் மகன் முகத்தைப் பார்த்ததுமே, “என்ன தீபக் என்ன ஆச்சு..” என்றவர் சாதாரணமாகக் கேட்டார்..
அவரின் கேள்வியில் நிமிர்ந்த தீபக், “சந்தோஷ் வந்துட்டு போனான்.. தீபிகாவை என்னிடம் விளையாட வேண்டான்னு சொல்லி வைங்க என்று சொல்லிட்டு போறான் அப்பா..” என்றவரின் குரலில் கோபம் அதிகமாகவே வெளிப்பட்டது..
எதையோ நினைத்து சிரித்த விஸ்வநாதனை தீபக் கேள்வியாக பார்க்க மகனின் முகம் பார்த்தவரோ, “பிருந்தாவோட மகன் இல்ல.. அதுதான் அந்த வேகம்.. அம்மா மாதிரியே மகனும்..! விக்ரம் பற்றி தவறாக பேசியதற்கே அடித்தவள்.. இப்போ பிரியா கூட தீபி பிரச்சனை பண்ணினால் சும்மாவானா பிருந்தாவின் மகன்..” என்றவர் சோபாவில் அமர்ந்தார்..
பிறகு மகனின் முகத்தைப் பார்த்தவர், “நம்ம பேத்தியாக இருந்தாலும் நம்ம உண்மையைச் சொல்லாமல் இருப்பதால் அவ அவங்களை பழி வாங்க நினைக்கிற.. பிருந்தாவுக்கு நம்ம பண்ணியது எல்லாம் சொன்ன கண்டிப்பா தீபி மாறுவா..” என்றவர் மகனுக்கு யோசனை சொன்னார்..
“நானும் அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன்..” என்றவர் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டபடி மகளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார் தீபிக்.. அவரின் மனம் முழுவது தன்னுடைய தாய் இறக்கும் பொழுது சொன்ன வார்த்தைகள் மீதே இருந்தது..
‘அம்மா சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்தால், இந்த தீபி அவங்களோட வம்பு வளர்ப்பதே வேலையாக வெச்சிருக்கிற..’ என்று நினைத்தவரின் முகம் கோபத்தில் சிவந்திருக்க, வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டவர் வாயிலைப் பார்த்தார்..
பிரியா கொடுத்த பதிலடியில் கடுப்பான தீபிகா, “என்னோட கனவு எல்லாத்தையும் தவுடுப்பொடியாகிட்டு பேசற பேச்சு..” என்றவள் முணுமுணுத்த வண்ணம் தன்னுடைய அறையை நோக்கிச் செல்ல, “தீபி..” என்றழைத்தார் தீபக்..
தந்தையின் அழைப்பில் திரும்பிய தீபிகா, “அப்பா..” என்ற அழைப்புடன் அவரின் அருகில் வந்த தீபிகா தாத்தாவின் முகத்தைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்த உதட்டைப் பிதுக்கினார் விஸ்வநாதன்...
தீபியின் முகம் பார்த்த தீபக், ‘இவளிடம் உண்மையை சொல்லாமல் இருப்பது என்னோட தவறுதான்.. அது உண்மை எல்லாம் தெரிஞ்சாதான் இவ ஒழுங்காக இருப்பா..’ என்று மனதிற்குள் கணக்குபோட்டார்..
அவரின் முகத்தில் வந்து சென்ற கலவை உணர்வுகள் புரியாமல் நின்ற தீபிகாவோ, ‘அப்பா என்ன யோசிக்கிறாரு..’ என்றவளின் சிந்தனைகள் எங்கோ செல்ல, “தீபி எங்க போய் யார்கூட வம்பிழுத்துட்டு வந்திருக்கிற..” என்றவர் கோபத்துடன் கேட்டார்..
அவரின் முகத்தையே இமைக்காமல் பார்த்தவள், “நான் யாரிடமும் வம்பு வளர்க்கல..” என்றவள் வேண்டுமென்றே பொய் சொல்ல, ‘எல்லாம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாதது போல நிற்கிற பாரு..’ என்று நினைத்தவரின் கோபம் அதிகரிக்க, “பொய் பேசற..” என்றவர் மகளின் கன்னத்தில் பளாரென ஒரு அறைவிட்டார்.. விஸ்வநாதன் மகனைத் தடுக்கவே இல்லை..
“இந்த அடியை அன்னைக்கே நீ கொடுத்திருந்தா இவ எப்போவோ திருந்தி இருப்பா தீபக்..” என்றார் விஸ்வநாதன்.. அவளோ அடித்த அடியில் கன்னத்தை இடதுகைகளில் தாங்கிய வண்ணம் பயத்துடன் நிமிர்ந்து தீபக் முகம் பார்த்தாள்..
“என்ன பார்வை..? நானும் சின்ன பொண்ணு இன்னைக்கு திருந்துவா.. நாளைக்கு திருந்துவான்னு பார்த்த நீ ரொம்ப பண்ற..” என்றவர் தொடர்ந்து,
“உனக்கே முதலில் உரிமை இல்லன்னு தெரியுது இல்ல.. அப்புறம் நீ எதுக்கு பிருந்தா அக்கா வீட்டில் இருப்பவங்களோட நிம்மதியைக் கெடுக்கிற..” என்றவர் கோபம் குறையாமல் கேட்டார்..
“அப்பா நீங்க இத்தனை வருஷம்..” என்றவள் காரணம் சொல்ல தொடங்கும் முன்னே கரம்நீட்டி தடுத்தார் தீபக், “நீ பழிவாங்கும் அளவுக்கு உன்னோட அத்தை எங்களுக்கு என்ன துரோகம் செஞ்சாங்க..” என்று கேட்டார்..
“அவங்க ஒண்ணுமே செய்யல என்றவள் அவரைவிட அதிக கோபத்துடன் கேட்க, “என்னோட அக்கா யாருக்குமே துரோகம் பண்ணல..” என்றவர் அழுத்தமாக பிருந்தாவிற்கு சப்போர்ட் செய்ய அவர் சொன்னதைக் கேட்டு கோபத்தில் நிமிர்ந்த தீபிகா..
“அப்பா உங்களுக்கு என்ன பைத்தியமா..? கூட பிறந்த நீங்க இருக்கும் பொழுது யாரோ ஒருத்தரை அண்ணான்னு சொல்லிட்டு அவங்க மகளை தூக்கி கொஞ்சறாங்க..” என்றவளின் குரலில் பொறாமை வெளிப்படையாகவே தெரிந்தது..
“ஒருத்தங்க நம்மல வெறுக்க ஆயிரம் காரணம் இருக்கும் தீபி.. நீ பழிவாங்கணும் என்று நினைத்தால் முதலில் என்னையும், உன்னோட தாத்தாவையும் தான் பழிவாங்கணும்..” என்றவர் கோபத்தில் சொல்ல புரியாத பார்வை பார்த்தாள் தீபி..
“அப்பா நீங்க சொல்றது எனக்கு புரியல..” என்றவள் சொல்ல, “உனக்கு முதலில் பிருந்தா அக்கா பற்றிய உண்மை தெரியணும்.. அப்பொழுதுதான் அவங்க ஏன் எங்களை ஒதுக்குனாங்க என்று உனக்கு புரியும்..” என்றவர் மனத்தைக் கல்லாக்கிக்கொண்ட கடந்த காலத்தை மகளிடம் சொல்ல ஆரம்பித்தார்..
அவர் சொல்ல சொல்ல தீபிகாவின் கண்கள் குளமாகியது.. தீபக் உண்மையைச் சொல்ல சொல்ல அந்த நாளுக்கே சென்னு திரும்பியது விஸ்வநாதனின் மனம்..!
தீபக் சொல்லி முடித்து மகளின் முகம் பார்க்க தன்னுடைய தவறை உணர்ந்த தீபிகாவோ, “அப்பா நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்..” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு கதறியவள் எழுந்து தன்னுடைய அறைக்குள் சென்றாள்..
‘தன்னுடைய அத்தை எவ்வளவு நல்லவங்க..’ என்று புரிந்து கொண்ட தீபிகாவின் மனதிலோ, ‘அவங்க நட்பு என்ற ஒரு சொல்லிற்காக உயிரையே கொடுக்கவும் துணிஞ்சவங்க..’ என்றவள் தன்னை பார்த்த பார்வையின் அர்த்தம் என்ன என்று இப்பொழுது உணர்ந்தாள் தீபிகா..
‘கடந்த காலத்தில் நம்ம எவ்வளவு பெரிய தவறு பண்ணிருக்கிறோம்.. என்னோட தோழிக்கு நான் எவ்வளவு பெரிய இழிவை ஏற்படுத்தி இருக்கேன்..?’ என்று நினைத்தவள் மான்விழியின் கதறி அழுதவளின் நினைவுகள் கடந்த காலம் நோக்கி பயணித்தது..
தன்னுடைய மகன் சென்ற திசையைப் பார்த்த அபிநந்தன், ‘இவன் என்னதான் பண்றான்.. முதல்ல தீபிகாவை லவ் பண்றேன்னு சொன்னான்.. அடுத்து பிரியாவைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்றான்.. இப்போ இந்த பொண்ணு யாரு..’ என்றவரின் மனம் மகனின் வாழ்க்கையை எண்ணி குழம்பியது..
கணவனின் தோளில் கைவைத்த பிருந்தா, “என்னங்க இவனோட வாழ்க்கையில் என்னங்க நடக்குது.. ஆமா நம்ம போட்டோவில் பார்த்த பொண்ணு பெயரு தீபிகா இல்ல மான்விழி என்று குழப்பிட்டு போறான்..” என்று குழப்பத்துடன் தொடர்ந்தார்..
“வானரம் நாலும் வாலை சுருட்டிகிட்டு அவன் பின்னாடியே போகுதுங்க..” என்று சொல்ல அர்ஜூனோ அமைதியாக நின்று வேடிக்கை பார்க்க, சந்தோஷ் சென்ற திசையை கேள்வியுடன் பார்த்துகொண்டிருந்தார் நந்தன்..
அவரின் முகத்தைப் பார்த்தபடியே வீட்டின் உள்ளே நுழைந்த விக்ரம், “என்ன நந்தன் மேல பார்த்துட்டு நிற்கிற..” என்றவர் கேள்வியெழுப்ப அவரின் குரல் கேட்டுத் திரும்பியவரின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தது..
“வாங்க அண்ணா..” என்றழைத்தவரைப் பார்த்த விக்ரமோ, “என்ன வானரங்கள் ஒன்றையும் காணோம்..” என்றவர் கேள்வியெழுப்ப, “எல்லோரும் சந்தோஷ் ரூமில் இருக்காங்க அண்ணா.. நீங்க வாங்க..” என்றார் பிருந்தா..
அர்ஜூன் மூவரையும் பார்த்தபடி நின்றிருக்க, “வா விக்ரம்.. இங்கே உட்காரு உன்னிடம் கொஞ்சம் பேசணும்..” என்றவர் அர்ஜூன் பக்கம் பார்வையைத் திருப்பி, “நீயும் உட்காரு அர்ஜூன்..” என்றார்..
அவரின் முகத்தைப் பார்த்த விக்ரம், “என்ன பேசணும்..?” என்றவர் சோபாவில் அமர அவரின் எதிரே அமர்ந்தார் அபிநந்தன்.. பிருந்தா கணவனின் அருகில் நின்று நடப்பதை கவனிக்க அவளின் அருகில் சிந்தனையோடு நின்றார் மேகா..
“விக்ரம் சந்தோஷ் நேற்று வீட்டுக்கு வந்ததுமே, ‘அப்பா எனக்கும் பிரியாவுக்கும் கல்யாண ஏற்பாடு செய்ங்க..’ என்று சொன்னான்.. இப்போ என்ன பண்ணலாம்.. ஏன் கேட்கிறேன்னு உனக்கு நல்ல பொண்ணைப் பெற்றவன்..” என்றவர் சிந்தனையோடு விக்ரமின் முகம் பார்த்தார்..
அவர் விக்ரமிடம் அப்படி கேட்க காரணமே, ‘சந்தோஷ் ஏன் எனக்கு தாலிக்கட்டினான் என்ற கோபத்தில் பிரியா அவனைப் பிரிந்து இருக்கிறாள்.. இந்த நேரத்தில் சந்தோஷ் திருமண ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்வது அவரை யோசிக்க வைத்தது.. திருமணம் என்பது சின்ன விஷயம் இல்லை..’ என்பதை அவர் உணர்ந்தே இருந்தார்..
நந்தன் சொன்ன விஷயத்தில் திகைத்து நின்ற பிருந்தா, “ஏங்க சந்தோஷ் நிஜமாவே கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டானா..? நேற்று ஒரே நாளில் என்ன நடத்திருக்கும்..?” என்றவர் தீவிரமாக யோசித்தார்..
அவள் சிந்தனையைக் கண்ட விக்ரமோ, “என்ன பிருந்தா உன்னையே உன்னோட மகன் குழப்பிவிட்டுட்டு போயிட்டானா..?” என்றவர் கிண்டல் செய்யா வாய்விட்டுச் சிரித்தாள் பிருந்தா..
“என்னோட மகன் இல்ல.. சரியான வில்லன் என்று இவரு சொல்லும் பொழுது எல்லாம் நம்பல.. ஆனால் இப்போ அவனையும், அவனோட வாழ்க்கை முறையும் பார்த்த வில்லனாக மாரிட்டனோ என்ற சந்தேகம் எனக்கே வருது அண்ணா..” என்றார் பிருந்தா..
“இப்போ என்னோட கேள்விக்கு பதில் சொல்லு விக்ரம்..” என்றவர் விக்ரமின் கவனத்தை திசைதிருப்பிட, கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு மித்ராவைப் பார்க்க வேகமாக வந்த மீரா, “மித்து..” என்ற அழைப்புடன் வீட்டின் உள்ளே நுழைய அங்கே அமைதி நிலவியது..
‘என்ன ரொம்ப அமைதியாக இருக்கு..’ என்றவரின் மனதில் கேள்வியெழுந்தது.. சோபாவில் சிந்தனையோடு அமர்ந்திருந்த கணவனின் முகம் பார்த்த மீரா, “என்ன எல்லோரும் ரொம்ப அமைதியாக இருக்கீங்க..?” என்றவர் கேட்க மனைவியின் குரல்கேட்டு வாசலைப் பார்த்தார் விக்ரம்..
சந்தோஷ் வந்து சென்றபிறகு தூக்கம் கலைந்ததும் தன்னுடைய அறையில் இருந்து எழுந்து வந்த விஸ்வநாதன் மகன் முகத்தைப் பார்த்ததுமே, “என்ன தீபக் என்ன ஆச்சு..” என்றவர் சாதாரணமாகக் கேட்டார்..
அவரின் கேள்வியில் நிமிர்ந்த தீபக், “சந்தோஷ் வந்துட்டு போனான்.. தீபிகாவை என்னிடம் விளையாட வேண்டான்னு சொல்லி வைங்க என்று சொல்லிட்டு போறான் அப்பா..” என்றவரின் குரலில் கோபம் அதிகமாகவே வெளிப்பட்டது..
எதையோ நினைத்து சிரித்த விஸ்வநாதனை தீபக் கேள்வியாக பார்க்க மகனின் முகம் பார்த்தவரோ, “பிருந்தாவோட மகன் இல்ல.. அதுதான் அந்த வேகம்.. அம்மா மாதிரியே மகனும்..! விக்ரம் பற்றி தவறாக பேசியதற்கே அடித்தவள்.. இப்போ பிரியா கூட தீபி பிரச்சனை பண்ணினால் சும்மாவானா பிருந்தாவின் மகன்..” என்றவர் சோபாவில் அமர்ந்தார்..
பிறகு மகனின் முகத்தைப் பார்த்தவர், “நம்ம பேத்தியாக இருந்தாலும் நம்ம உண்மையைச் சொல்லாமல் இருப்பதால் அவ அவங்களை பழி வாங்க நினைக்கிற.. பிருந்தாவுக்கு நம்ம பண்ணியது எல்லாம் சொன்ன கண்டிப்பா தீபி மாறுவா..” என்றவர் மகனுக்கு யோசனை சொன்னார்..
“நானும் அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன்..” என்றவர் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டபடி மகளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார் தீபிக்.. அவரின் மனம் முழுவது தன்னுடைய தாய் இறக்கும் பொழுது சொன்ன வார்த்தைகள் மீதே இருந்தது..
‘அம்மா சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்தால், இந்த தீபி அவங்களோட வம்பு வளர்ப்பதே வேலையாக வெச்சிருக்கிற..’ என்று நினைத்தவரின் முகம் கோபத்தில் சிவந்திருக்க, வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டவர் வாயிலைப் பார்த்தார்..
பிரியா கொடுத்த பதிலடியில் கடுப்பான தீபிகா, “என்னோட கனவு எல்லாத்தையும் தவுடுப்பொடியாகிட்டு பேசற பேச்சு..” என்றவள் முணுமுணுத்த வண்ணம் தன்னுடைய அறையை நோக்கிச் செல்ல, “தீபி..” என்றழைத்தார் தீபக்..
தந்தையின் அழைப்பில் திரும்பிய தீபிகா, “அப்பா..” என்ற அழைப்புடன் அவரின் அருகில் வந்த தீபிகா தாத்தாவின் முகத்தைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்த உதட்டைப் பிதுக்கினார் விஸ்வநாதன்...
தீபியின் முகம் பார்த்த தீபக், ‘இவளிடம் உண்மையை சொல்லாமல் இருப்பது என்னோட தவறுதான்.. அது உண்மை எல்லாம் தெரிஞ்சாதான் இவ ஒழுங்காக இருப்பா..’ என்று மனதிற்குள் கணக்குபோட்டார்..
அவரின் முகத்தில் வந்து சென்ற கலவை உணர்வுகள் புரியாமல் நின்ற தீபிகாவோ, ‘அப்பா என்ன யோசிக்கிறாரு..’ என்றவளின் சிந்தனைகள் எங்கோ செல்ல, “தீபி எங்க போய் யார்கூட வம்பிழுத்துட்டு வந்திருக்கிற..” என்றவர் கோபத்துடன் கேட்டார்..
அவரின் முகத்தையே இமைக்காமல் பார்த்தவள், “நான் யாரிடமும் வம்பு வளர்க்கல..” என்றவள் வேண்டுமென்றே பொய் சொல்ல, ‘எல்லாம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாதது போல நிற்கிற பாரு..’ என்று நினைத்தவரின் கோபம் அதிகரிக்க, “பொய் பேசற..” என்றவர் மகளின் கன்னத்தில் பளாரென ஒரு அறைவிட்டார்.. விஸ்வநாதன் மகனைத் தடுக்கவே இல்லை..
“இந்த அடியை அன்னைக்கே நீ கொடுத்திருந்தா இவ எப்போவோ திருந்தி இருப்பா தீபக்..” என்றார் விஸ்வநாதன்.. அவளோ அடித்த அடியில் கன்னத்தை இடதுகைகளில் தாங்கிய வண்ணம் பயத்துடன் நிமிர்ந்து தீபக் முகம் பார்த்தாள்..
“என்ன பார்வை..? நானும் சின்ன பொண்ணு இன்னைக்கு திருந்துவா.. நாளைக்கு திருந்துவான்னு பார்த்த நீ ரொம்ப பண்ற..” என்றவர் தொடர்ந்து,
“உனக்கே முதலில் உரிமை இல்லன்னு தெரியுது இல்ல.. அப்புறம் நீ எதுக்கு பிருந்தா அக்கா வீட்டில் இருப்பவங்களோட நிம்மதியைக் கெடுக்கிற..” என்றவர் கோபம் குறையாமல் கேட்டார்..
“அப்பா நீங்க இத்தனை வருஷம்..” என்றவள் காரணம் சொல்ல தொடங்கும் முன்னே கரம்நீட்டி தடுத்தார் தீபக், “நீ பழிவாங்கும் அளவுக்கு உன்னோட அத்தை எங்களுக்கு என்ன துரோகம் செஞ்சாங்க..” என்று கேட்டார்..
“அவங்க ஒண்ணுமே செய்யல என்றவள் அவரைவிட அதிக கோபத்துடன் கேட்க, “என்னோட அக்கா யாருக்குமே துரோகம் பண்ணல..” என்றவர் அழுத்தமாக பிருந்தாவிற்கு சப்போர்ட் செய்ய அவர் சொன்னதைக் கேட்டு கோபத்தில் நிமிர்ந்த தீபிகா..
“அப்பா உங்களுக்கு என்ன பைத்தியமா..? கூட பிறந்த நீங்க இருக்கும் பொழுது யாரோ ஒருத்தரை அண்ணான்னு சொல்லிட்டு அவங்க மகளை தூக்கி கொஞ்சறாங்க..” என்றவளின் குரலில் பொறாமை வெளிப்படையாகவே தெரிந்தது..
“ஒருத்தங்க நம்மல வெறுக்க ஆயிரம் காரணம் இருக்கும் தீபி.. நீ பழிவாங்கணும் என்று நினைத்தால் முதலில் என்னையும், உன்னோட தாத்தாவையும் தான் பழிவாங்கணும்..” என்றவர் கோபத்தில் சொல்ல புரியாத பார்வை பார்த்தாள் தீபி..
“அப்பா நீங்க சொல்றது எனக்கு புரியல..” என்றவள் சொல்ல, “உனக்கு முதலில் பிருந்தா அக்கா பற்றிய உண்மை தெரியணும்.. அப்பொழுதுதான் அவங்க ஏன் எங்களை ஒதுக்குனாங்க என்று உனக்கு புரியும்..” என்றவர் மனத்தைக் கல்லாக்கிக்கொண்ட கடந்த காலத்தை மகளிடம் சொல்ல ஆரம்பித்தார்..
அவர் சொல்ல சொல்ல தீபிகாவின் கண்கள் குளமாகியது.. தீபக் உண்மையைச் சொல்ல சொல்ல அந்த நாளுக்கே சென்னு திரும்பியது விஸ்வநாதனின் மனம்..!
தீபக் சொல்லி முடித்து மகளின் முகம் பார்க்க தன்னுடைய தவறை உணர்ந்த தீபிகாவோ, “அப்பா நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்..” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு கதறியவள் எழுந்து தன்னுடைய அறைக்குள் சென்றாள்..
‘தன்னுடைய அத்தை எவ்வளவு நல்லவங்க..’ என்று புரிந்து கொண்ட தீபிகாவின் மனதிலோ, ‘அவங்க நட்பு என்ற ஒரு சொல்லிற்காக உயிரையே கொடுக்கவும் துணிஞ்சவங்க..’ என்றவள் தன்னை பார்த்த பார்வையின் அர்த்தம் என்ன என்று இப்பொழுது உணர்ந்தாள் தீபிகா..
‘கடந்த காலத்தில் நம்ம எவ்வளவு பெரிய தவறு பண்ணிருக்கிறோம்.. என்னோட தோழிக்கு நான் எவ்வளவு பெரிய இழிவை ஏற்படுத்தி இருக்கேன்..?’ என்று நினைத்தவள் மான்விழியின் கதறி அழுதவளின் நினைவுகள் கடந்த காலம் நோக்கி பயணித்தது..
தன்னுடைய மகன் சென்ற திசையைப் பார்த்த அபிநந்தன், ‘இவன் என்னதான் பண்றான்.. முதல்ல தீபிகாவை லவ் பண்றேன்னு சொன்னான்.. அடுத்து பிரியாவைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்றான்.. இப்போ இந்த பொண்ணு யாரு..’ என்றவரின் மனம் மகனின் வாழ்க்கையை எண்ணி குழம்பியது..
கணவனின் தோளில் கைவைத்த பிருந்தா, “என்னங்க இவனோட வாழ்க்கையில் என்னங்க நடக்குது.. ஆமா நம்ம போட்டோவில் பார்த்த பொண்ணு பெயரு தீபிகா இல்ல மான்விழி என்று குழப்பிட்டு போறான்..” என்று குழப்பத்துடன் தொடர்ந்தார்..
“வானரம் நாலும் வாலை சுருட்டிகிட்டு அவன் பின்னாடியே போகுதுங்க..” என்று சொல்ல அர்ஜூனோ அமைதியாக நின்று வேடிக்கை பார்க்க, சந்தோஷ் சென்ற திசையை கேள்வியுடன் பார்த்துகொண்டிருந்தார் நந்தன்..
அவரின் முகத்தைப் பார்த்தபடியே வீட்டின் உள்ளே நுழைந்த விக்ரம், “என்ன நந்தன் மேல பார்த்துட்டு நிற்கிற..” என்றவர் கேள்வியெழுப்ப அவரின் குரல் கேட்டுத் திரும்பியவரின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தது..
“வாங்க அண்ணா..” என்றழைத்தவரைப் பார்த்த விக்ரமோ, “என்ன வானரங்கள் ஒன்றையும் காணோம்..” என்றவர் கேள்வியெழுப்ப, “எல்லோரும் சந்தோஷ் ரூமில் இருக்காங்க அண்ணா.. நீங்க வாங்க..” என்றார் பிருந்தா..
அர்ஜூன் மூவரையும் பார்த்தபடி நின்றிருக்க, “வா விக்ரம்.. இங்கே உட்காரு உன்னிடம் கொஞ்சம் பேசணும்..” என்றவர் அர்ஜூன் பக்கம் பார்வையைத் திருப்பி, “நீயும் உட்காரு அர்ஜூன்..” என்றார்..
அவரின் முகத்தைப் பார்த்த விக்ரம், “என்ன பேசணும்..?” என்றவர் சோபாவில் அமர அவரின் எதிரே அமர்ந்தார் அபிநந்தன்.. பிருந்தா கணவனின் அருகில் நின்று நடப்பதை கவனிக்க அவளின் அருகில் சிந்தனையோடு நின்றார் மேகா..
“விக்ரம் சந்தோஷ் நேற்று வீட்டுக்கு வந்ததுமே, ‘அப்பா எனக்கும் பிரியாவுக்கும் கல்யாண ஏற்பாடு செய்ங்க..’ என்று சொன்னான்.. இப்போ என்ன பண்ணலாம்.. ஏன் கேட்கிறேன்னு உனக்கு நல்ல பொண்ணைப் பெற்றவன்..” என்றவர் சிந்தனையோடு விக்ரமின் முகம் பார்த்தார்..
அவர் விக்ரமிடம் அப்படி கேட்க காரணமே, ‘சந்தோஷ் ஏன் எனக்கு தாலிக்கட்டினான் என்ற கோபத்தில் பிரியா அவனைப் பிரிந்து இருக்கிறாள்.. இந்த நேரத்தில் சந்தோஷ் திருமண ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்வது அவரை யோசிக்க வைத்தது.. திருமணம் என்பது சின்ன விஷயம் இல்லை..’ என்பதை அவர் உணர்ந்தே இருந்தார்..
நந்தன் சொன்ன விஷயத்தில் திகைத்து நின்ற பிருந்தா, “ஏங்க சந்தோஷ் நிஜமாவே கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டானா..? நேற்று ஒரே நாளில் என்ன நடத்திருக்கும்..?” என்றவர் தீவிரமாக யோசித்தார்..
அவள் சிந்தனையைக் கண்ட விக்ரமோ, “என்ன பிருந்தா உன்னையே உன்னோட மகன் குழப்பிவிட்டுட்டு போயிட்டானா..?” என்றவர் கிண்டல் செய்யா வாய்விட்டுச் சிரித்தாள் பிருந்தா..
“என்னோட மகன் இல்ல.. சரியான வில்லன் என்று இவரு சொல்லும் பொழுது எல்லாம் நம்பல.. ஆனால் இப்போ அவனையும், அவனோட வாழ்க்கை முறையும் பார்த்த வில்லனாக மாரிட்டனோ என்ற சந்தேகம் எனக்கே வருது அண்ணா..” என்றார் பிருந்தா..
“இப்போ என்னோட கேள்விக்கு பதில் சொல்லு விக்ரம்..” என்றவர் விக்ரமின் கவனத்தை திசைதிருப்பிட, கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு மித்ராவைப் பார்க்க வேகமாக வந்த மீரா, “மித்து..” என்ற அழைப்புடன் வீட்டின் உள்ளே நுழைய அங்கே அமைதி நிலவியது..
‘என்ன ரொம்ப அமைதியாக இருக்கு..’ என்றவரின் மனதில் கேள்வியெழுந்தது.. சோபாவில் சிந்தனையோடு அமர்ந்திருந்த கணவனின் முகம் பார்த்த மீரா, “என்ன எல்லோரும் ரொம்ப அமைதியாக இருக்கீங்க..?” என்றவர் கேட்க மனைவியின் குரல்கேட்டு வாசலைப் பார்த்தார் விக்ரம்..