அத்தியாயம் – 24
அன்று புது நிறுவனம் தொடங்குவது பற்றிய முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொள்ள மும்பை கிளம்பிக் கொண்டிருந்தாள்.. அவளின் மனதில் ஆயிரம் நினைவுகள் படையெடுத்தாலும் இந்த முடிவு சரியே என்ற நினைவுடன் கிளம்பிக் கொண்டிருந்தாள்..
அவள் கிளம்பும் நேரத்தில் சந்தோஷ் அனுப்பிய ஆடியோ ரெகார்ட் பார்த்தவள் அதை ப்ளே செய்து கேட்ட ஆரம்பித்தாள்.. அதில் அபிநந்தன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளின் மனதில் முள்ளேன்று தைத்தது..
‘ஒவ்வொரு முறை பிரியாவைக் காயப்படுத்தும் பொழுதெல்லாம் என்னோட மனசு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது.. இப்போ அதெல்லாம் நினைக்கவே கேவலாக இருக்கு..’ என்றவளின் மனம் சொல்ல பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட தீபிக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது..
‘கேட்டவள் என்று பெயர் வாங்க சில நொடி போதும்.. நல்லவள் என்று பெயர் வாங்க இந்த யுகமே போதாது..’ என்று உணர்ந்தவளின் மனதில் பாரம் ஏறிவிட தீபியின் கண்களில் கண்ணீர் மட்டுமே மீதமிருக்க தன்னுடைய செல்லில் இருந்து சந்தோஷிற்கு அழைத்தாள்..
சந்தோஷ் – பிரியா இருவரும் நிச்சயதார்த்த வேலைகள் புயல் வேகத்தில் நடந்து கொண்டிருக்க எல்லோரும் ஆளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டு செய்ய வீடே திருவிழா கோலமானது..
அந்த நேரத்தில் சந்தோஷ் செல்லடிக்க, ‘யாராது..?’ என்று திரையைப் பார்த்துவிட்டு, “என்ன தீபி இப்போதான் ஆடியோ கேட்டு முடிச்சியா..?” என்றவன் பொறுமையாக கேட்டதும், “ம்ம் ஆமா இப்போதான் கேட்டேன்..” என்றவள் சொல்ல, “என்னோட அம்மா எடுத்த முடிவில் எந்த தவறும் இல்ல.. அது மட்டும் இல்லாமல் எங்க அம்மாவிற்கு உன்னோட அப்பா மீது எந்த கோபமும் இல்ல..” என்றவன் சொல்லிக் கொண்டிருக்க தீபிகா அவனை இடைமறித்தாள்..
“அத்தை மேல் எந்த தவறும் இல்ல.. தாத்தா செய்த பாவத்திற்கு அவங்க என்ன பண்ணுவாங்க..?” என்றவள் கேட்க அவனோ அமைதியாக இருக்க அவளே தொடர்ந்தாள்.. “அத்தை மாதிரி ஒருத்தங்களை இனிமேல் என்னோட லைப் ல பார்க்க முடியுமான்னு தெரியல.. பட் நல்ல குடும்பத்தில் வாழும் வாய்ப்பை மட்டும் இழந்துட்டேன் என்று தெளிவாக புரியுது..” என்றவள் சிலநொடி மௌனமாக இருந்தாள்..
“நான் பிரியா கிட்ட பேசணும்.. அவள் பக்கத்தில் இருந்தால் போனை கொடுங்க ப்ளீஸ்..” என்றாள் தீபிகா..
அப்பொழுது ஏதோ வெளியாக அவனைக் கடந்து சென்ற பிரியாவைப் பார்த்த சந்தோஷ், “பிரியா இந்த போன்..” என்றவளின் கையில் போனைக் கொடுத்தவன் அவளை விட்டு விலகிச்செல்ல, “அத்து யாரு போனில்..?” என்று கேட்டவள், “ஹலோ..” என்றாள்..
“ஹலோ பிரியா நான் தீபி பேசறேன்.. எப்படி இருக்கிற..” என்றவள் விசாரிக்க, “தீபி நான் நல்ல இருக்கிறேன்.. நீ எப்படி இருக்கிற..” என்றவள் அவள் செய்த தவறை எல்லாம் நினைக்காமல் புன்னகையோடு கேட்டதும், “எனக்கு என்ன நான் நல்ல இருக்கிறேன்.. நீ லைப் ல ஜெயித்துவிட்டாய் பிரியா..” என்றவள் கூறினாள்..
“ஏய் என்னடி சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியல.. இங்கே பாரு உன்மேல் எங்க யாருக்கு எந்த கோபமும் இல்ல சரியா.. நீ சும்மா புலம்பாமல் இரு..” என்றவள் அதட்ட, “சரிங்க அக்கா..” என்றவள் கிண்டலுடன் கூற வாய்விட்டு சிரித்தாள் பிரியா
“சந்தோஷ் என்னோட பழகினான் என்று நீ அவனை ஒதுக்காதே பிரியா.. அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. அதை உன்னிடம் சொல்லத்தான் போனை கொடுக்க சொன்னேன்..” என்றவள் அறிவுரை சொல்ல, “இங்கே இன்னும் கொஞ்ச நேரத்தில் நிச்சயதார்த்தம் நடக்க போகிறது நீ வருகிறாயா..” என்று கேட்டாள் பிரியா..
‘இதுவரை உங்களைப் பிரித்ததே எனக்கு போதும்.. இனிமேல் உங்களோட கண்ணில் படவே கூடாது என்ற முடிவில் இருக்கிறேன்..’ என்றவள், “உன்னோட மனசு யாருக்கும் வாராது பிரியா..” என்ற தீபிகா, “நான் எதிரியாகவே இருக்கிறேன் சரியா.. அந்த பூவனத்தைக் கலைக்க நினைத்த தீபி இப்போ இல்ல.. இங்கிருந்து நான் கிளம்பறேன் பிரியா.. வெளிநாட்டில் ஒரு கம்பெனிஸ்டாட் பண்ணிருக்கேன்.. அங்கேயே போறேன்..” என்றவள் சொல்ல பிரியா மெளனமாக இருந்தாள்..
“அந்த தேன் சிந்தும் பூவனத்தில் நீங்க எல்லோரும் இருங்க.. நான் அந்த தகுதியை எப்பவோ இழந்துவிட்டேன்.. அதை நினைக்கும் பொழுது கொஞ்சம் வருத்தமாக இருக்கு.. உங்களோட மான்விழியும் இருக்கிறாள் இல்ல.. என்னோட முட்டாள் தனத்தால் என்னோட தோழியையும் இழந்துவிட்டேன்..” என்றவள் வருத்தப்பட, “தீபி ரிலாக்ஸ்..” என்றாள் பிரியா..
அப்பொழுது சந்தோஷ் அவளின் அருகில் வர, “சந்தோஷ் கிட்ட சொல்லிரு பிரியா.. அத்தை எந்த தவறும் செய்யல.. அதை நான் புரிஞ்சிக்கிட்டேன்.. இனிமேல் கனவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்கும் எண்ணம் எனக்கு வாராது என்று சொல்லிரு..” என்றவள் பிரியா பேசும் முன்னே போனை வைத்துவிட்டாள்..
இவர்கள் இருவரிடமும் பேசியதில் அவளின் உள்ளத்தில் நிம்மதி பரவியது.. அந்தே நிம்மதியுடன் மும்பை சென்றாள் தீபிகா.. அவள் மட்டும் இல்லாமல் தன்னுடைய அப்பா, தாத்தா இருவரையும் ஏற்காட்டில் இருந்து அழைத்துக்கொண்டு மும்பை சென்றுவிட்டாள்..
அவள் போனை வைத்துவிட, “என்ன சொன்னால் தேனு..” என்றவன் கேட்டதும், “வெளிநாடு போறேன் என்று சொன்னாள்..” என்ற பிரியா நிச்சயதார்த்ததிற்கு ரெடியாக பிரியாவின் மனதில் இருந்த கொஞ்ச தயக்கமும் அவளை விட்டு விலகிச் சென்றது..
அவனும் சென்று நிச்சயத்திற்கு ரெடியாகி கீழே வரவும் முகூர்த்த பத்திரிக்கை வாசிக்கப்பட மித்ரா அசோக்கைப் பார்க்க அவனும் அவளையே பார்த்தான்.. மௌனமாகவே தன்னுடைய காதலில் வெற்றி பெற்றனர் இருவரும்..!
சந்தோஷ் – பிரியாவைப் பார்வையால் பாருகிட, “அண்ணா வழியுது..” என்றாள் சஞ்சனா தன்னுடைய வழக்கமாக குறும்புடன்.. அவன் பிரியாவின் விரலில் மோதிரம் போட்ட அவனின் விழியைக் காதலோடு பார்த்தவளும் அவனுக்கு மோதிரம் அணிவித்தாள்..
சந்தோஷ் சொன்னது போலவே ஒவ்வொரு நொடியையும் ரசித்தான்.. பிரியாவும் அவனோடு இணைத்து அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்தாள்.. தங்களின் கண் முன்னாடி பிரிந்து நின்ற பேரனும் பேத்தியும் இப்பொழுது நொடி பொழுது விலகாமல் இருப்பதைப் பார்த்த மோகன் சுமது உள்ளம் மகிழ, மணிகண்டன் – சீதாவின் உள்ளம் நிம்மதியடைந்தது..
அடுத்த பதினைந்து நாளில் சந்தோஷ் – பிரியதர்ஷினி திருமணம் நடந்தது.. அன்று விக்ரமிடம் சொன்னது போலவே ஊரறிய அவளின் கழுத்தில் தாலிகட்டி அவளை மனைவியாக ஏற்றுகொண்டான் சந்தோஷ்.. அந்த நொடி அவனின் விழிகளில் தெரிந்த காதலை தன்னுடைய மனபெட்டகத்தில் அழியாத பொக்கிஷமாக சேகரித்தாள் பிரியதர்ஷினி..
அப்பொழுது பெரியவர்கள் அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யும் பொழுது இருவருமே ஒரே மாதிரி வேண்டாம் என்று மறுத்துவிட, “எதுக்குடா வேண்டாம் என்று சொல்ற..” என்று எல்லோருமே கேட்டனர்..
“முதலில் இவங்க இருவரின் திருமணத்தைக் கவனிப்போம்.. அப்புறம் நாங்க எங்களோட வாழ்க்கையைத் தொடங்குகிறோம்..” என்ற சந்தோஷ் அருகில் சென்ற சஞ்சனா, “அண்ணா ஏதோ உள் குத்து இருப்பது போல இருக்கே..” என்றவள் சொல்ல, “எனக்கும் அப்படிதான் தோணுது..” என்றான் சஞ்சீவ்..
அவர்கள் எல்லோரும் இவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க பிரியாவின் அருகில் நின்ற சந்தோஷ், “ஏய் தேனு.. இன்னும் கொஞ்சநாள் காதலிக்கலாம்.. அப்புறம் நம்ம வாழ்க்கையைத் தொடங்கலாம்..” என்றவன் குறும்புடன் கண்சிட்டினான்..
“என்னோட ஸ்வீட் அத்து..” என்றவனைக் கொஞ்சிய பிரியாவோ, “அத்து நம்ம ஓடிபோலாமா..” என்றவனைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி அவள் கேட்டதும் அதில் தன்னை மறந்த சந்தோஷ், “ஓ போலாமே..” என்றவன் வேகமாகச் சொல்ல, “இவங்க இந்த ஜென்மத்தில் உருப்பிட மாட்டாங்க..” என்று முடிவே செய்துவிட்டனர் சஞ்சனாவும், சஞ்சீவும்..
இருவரும் பேசுவதைக்கேட்டு எல்லோரும் வாய்விட்டு சிரிக்க மித்ரா மட்டும் புரிதலோடு அவர்களைப் பார்த்தவண்ணம் இருவைன் அருகில் சென்றவள், “தேங்க்ஸ்டா அண்ணா..” என்றவள் சொல்ல, “நீயும் மதுவும் முதலில் புகுந்தவீடு போய் சந்தோசமாக வாழனும்.. அப்புறம் நாங்க எங்களோட வாழ்க்கையைப் பற்றி யோசிக்கிறோம்..” என்றவனின் வலது தோளில் மித்ரா சாய்த்து கொள்ள மறுதோளில் மது சாய்ந்து கொண்டாள்..
அதை தன்னுடைய கேமராவில் போட்டோ எடுத்த சஞ்சீவ், “ரொம்ப அழகாக இருக்கு..” என்றவன் புன்னகையோடு கூறினான்.. அவர்களின் ஒற்றுமையை விலகி நின்று ரசித்தாள் பிரியா.. இவர்களின் ஒற்றுமையைப் பார்த்து பெரியவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரித்தது..
அசோக்குமார் – சங்கமித்ரா, கிருஷ்ணா – மதுபாலா இருவரின் திருமணமும் ஒரே மேடையில் நடைபெற்றது.. இருவரும் ஒரே நேரத்தில் அவர்களை விட்டு பிரிந்து செல்லும் நேரத்தில் மித்ரா ஓடிவந்து பிரியாவை அனைத்து கொண்டு கதறிவிட்டாள்..
“மை டார்லிங்.. இங்கிருந்து போகவே மனசு வரல பிரியா..” என்றவள் அண்ணனின் தோள் சாந்து அழுக, “அக்கா பிரிவு வருவது நம்ம உறவை வலிமை படுத்தத்தான்..” என்றவன் தெளிவாக சொல்ல, “குட்டி பையனாக இருந்தவன் இன்னைக்கு எனக்கு அண்ணா மாதிரி தெரியறடா..” என்றவனின் தோளிலும் சாய்ந்து அழுதாள்..
அன்று புது நிறுவனம் தொடங்குவது பற்றிய முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொள்ள மும்பை கிளம்பிக் கொண்டிருந்தாள்.. அவளின் மனதில் ஆயிரம் நினைவுகள் படையெடுத்தாலும் இந்த முடிவு சரியே என்ற நினைவுடன் கிளம்பிக் கொண்டிருந்தாள்..
அவள் கிளம்பும் நேரத்தில் சந்தோஷ் அனுப்பிய ஆடியோ ரெகார்ட் பார்த்தவள் அதை ப்ளே செய்து கேட்ட ஆரம்பித்தாள்.. அதில் அபிநந்தன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளின் மனதில் முள்ளேன்று தைத்தது..
‘ஒவ்வொரு முறை பிரியாவைக் காயப்படுத்தும் பொழுதெல்லாம் என்னோட மனசு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது.. இப்போ அதெல்லாம் நினைக்கவே கேவலாக இருக்கு..’ என்றவளின் மனம் சொல்ல பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட தீபிக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது..
‘கேட்டவள் என்று பெயர் வாங்க சில நொடி போதும்.. நல்லவள் என்று பெயர் வாங்க இந்த யுகமே போதாது..’ என்று உணர்ந்தவளின் மனதில் பாரம் ஏறிவிட தீபியின் கண்களில் கண்ணீர் மட்டுமே மீதமிருக்க தன்னுடைய செல்லில் இருந்து சந்தோஷிற்கு அழைத்தாள்..
சந்தோஷ் – பிரியா இருவரும் நிச்சயதார்த்த வேலைகள் புயல் வேகத்தில் நடந்து கொண்டிருக்க எல்லோரும் ஆளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டு செய்ய வீடே திருவிழா கோலமானது..
அந்த நேரத்தில் சந்தோஷ் செல்லடிக்க, ‘யாராது..?’ என்று திரையைப் பார்த்துவிட்டு, “என்ன தீபி இப்போதான் ஆடியோ கேட்டு முடிச்சியா..?” என்றவன் பொறுமையாக கேட்டதும், “ம்ம் ஆமா இப்போதான் கேட்டேன்..” என்றவள் சொல்ல, “என்னோட அம்மா எடுத்த முடிவில் எந்த தவறும் இல்ல.. அது மட்டும் இல்லாமல் எங்க அம்மாவிற்கு உன்னோட அப்பா மீது எந்த கோபமும் இல்ல..” என்றவன் சொல்லிக் கொண்டிருக்க தீபிகா அவனை இடைமறித்தாள்..
“அத்தை மேல் எந்த தவறும் இல்ல.. தாத்தா செய்த பாவத்திற்கு அவங்க என்ன பண்ணுவாங்க..?” என்றவள் கேட்க அவனோ அமைதியாக இருக்க அவளே தொடர்ந்தாள்.. “அத்தை மாதிரி ஒருத்தங்களை இனிமேல் என்னோட லைப் ல பார்க்க முடியுமான்னு தெரியல.. பட் நல்ல குடும்பத்தில் வாழும் வாய்ப்பை மட்டும் இழந்துட்டேன் என்று தெளிவாக புரியுது..” என்றவள் சிலநொடி மௌனமாக இருந்தாள்..
“நான் பிரியா கிட்ட பேசணும்.. அவள் பக்கத்தில் இருந்தால் போனை கொடுங்க ப்ளீஸ்..” என்றாள் தீபிகா..
அப்பொழுது ஏதோ வெளியாக அவனைக் கடந்து சென்ற பிரியாவைப் பார்த்த சந்தோஷ், “பிரியா இந்த போன்..” என்றவளின் கையில் போனைக் கொடுத்தவன் அவளை விட்டு விலகிச்செல்ல, “அத்து யாரு போனில்..?” என்று கேட்டவள், “ஹலோ..” என்றாள்..
“ஹலோ பிரியா நான் தீபி பேசறேன்.. எப்படி இருக்கிற..” என்றவள் விசாரிக்க, “தீபி நான் நல்ல இருக்கிறேன்.. நீ எப்படி இருக்கிற..” என்றவள் அவள் செய்த தவறை எல்லாம் நினைக்காமல் புன்னகையோடு கேட்டதும், “எனக்கு என்ன நான் நல்ல இருக்கிறேன்.. நீ லைப் ல ஜெயித்துவிட்டாய் பிரியா..” என்றவள் கூறினாள்..
“ஏய் என்னடி சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியல.. இங்கே பாரு உன்மேல் எங்க யாருக்கு எந்த கோபமும் இல்ல சரியா.. நீ சும்மா புலம்பாமல் இரு..” என்றவள் அதட்ட, “சரிங்க அக்கா..” என்றவள் கிண்டலுடன் கூற வாய்விட்டு சிரித்தாள் பிரியா
“சந்தோஷ் என்னோட பழகினான் என்று நீ அவனை ஒதுக்காதே பிரியா.. அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. அதை உன்னிடம் சொல்லத்தான் போனை கொடுக்க சொன்னேன்..” என்றவள் அறிவுரை சொல்ல, “இங்கே இன்னும் கொஞ்ச நேரத்தில் நிச்சயதார்த்தம் நடக்க போகிறது நீ வருகிறாயா..” என்று கேட்டாள் பிரியா..
‘இதுவரை உங்களைப் பிரித்ததே எனக்கு போதும்.. இனிமேல் உங்களோட கண்ணில் படவே கூடாது என்ற முடிவில் இருக்கிறேன்..’ என்றவள், “உன்னோட மனசு யாருக்கும் வாராது பிரியா..” என்ற தீபிகா, “நான் எதிரியாகவே இருக்கிறேன் சரியா.. அந்த பூவனத்தைக் கலைக்க நினைத்த தீபி இப்போ இல்ல.. இங்கிருந்து நான் கிளம்பறேன் பிரியா.. வெளிநாட்டில் ஒரு கம்பெனிஸ்டாட் பண்ணிருக்கேன்.. அங்கேயே போறேன்..” என்றவள் சொல்ல பிரியா மெளனமாக இருந்தாள்..
“அந்த தேன் சிந்தும் பூவனத்தில் நீங்க எல்லோரும் இருங்க.. நான் அந்த தகுதியை எப்பவோ இழந்துவிட்டேன்.. அதை நினைக்கும் பொழுது கொஞ்சம் வருத்தமாக இருக்கு.. உங்களோட மான்விழியும் இருக்கிறாள் இல்ல.. என்னோட முட்டாள் தனத்தால் என்னோட தோழியையும் இழந்துவிட்டேன்..” என்றவள் வருத்தப்பட, “தீபி ரிலாக்ஸ்..” என்றாள் பிரியா..
அப்பொழுது சந்தோஷ் அவளின் அருகில் வர, “சந்தோஷ் கிட்ட சொல்லிரு பிரியா.. அத்தை எந்த தவறும் செய்யல.. அதை நான் புரிஞ்சிக்கிட்டேன்.. இனிமேல் கனவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்கும் எண்ணம் எனக்கு வாராது என்று சொல்லிரு..” என்றவள் பிரியா பேசும் முன்னே போனை வைத்துவிட்டாள்..
இவர்கள் இருவரிடமும் பேசியதில் அவளின் உள்ளத்தில் நிம்மதி பரவியது.. அந்தே நிம்மதியுடன் மும்பை சென்றாள் தீபிகா.. அவள் மட்டும் இல்லாமல் தன்னுடைய அப்பா, தாத்தா இருவரையும் ஏற்காட்டில் இருந்து அழைத்துக்கொண்டு மும்பை சென்றுவிட்டாள்..
அவள் போனை வைத்துவிட, “என்ன சொன்னால் தேனு..” என்றவன் கேட்டதும், “வெளிநாடு போறேன் என்று சொன்னாள்..” என்ற பிரியா நிச்சயதார்த்ததிற்கு ரெடியாக பிரியாவின் மனதில் இருந்த கொஞ்ச தயக்கமும் அவளை விட்டு விலகிச் சென்றது..
அவனும் சென்று நிச்சயத்திற்கு ரெடியாகி கீழே வரவும் முகூர்த்த பத்திரிக்கை வாசிக்கப்பட மித்ரா அசோக்கைப் பார்க்க அவனும் அவளையே பார்த்தான்.. மௌனமாகவே தன்னுடைய காதலில் வெற்றி பெற்றனர் இருவரும்..!
சந்தோஷ் – பிரியாவைப் பார்வையால் பாருகிட, “அண்ணா வழியுது..” என்றாள் சஞ்சனா தன்னுடைய வழக்கமாக குறும்புடன்.. அவன் பிரியாவின் விரலில் மோதிரம் போட்ட அவனின் விழியைக் காதலோடு பார்த்தவளும் அவனுக்கு மோதிரம் அணிவித்தாள்..
சந்தோஷ் சொன்னது போலவே ஒவ்வொரு நொடியையும் ரசித்தான்.. பிரியாவும் அவனோடு இணைத்து அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்தாள்.. தங்களின் கண் முன்னாடி பிரிந்து நின்ற பேரனும் பேத்தியும் இப்பொழுது நொடி பொழுது விலகாமல் இருப்பதைப் பார்த்த மோகன் சுமது உள்ளம் மகிழ, மணிகண்டன் – சீதாவின் உள்ளம் நிம்மதியடைந்தது..
அடுத்த பதினைந்து நாளில் சந்தோஷ் – பிரியதர்ஷினி திருமணம் நடந்தது.. அன்று விக்ரமிடம் சொன்னது போலவே ஊரறிய அவளின் கழுத்தில் தாலிகட்டி அவளை மனைவியாக ஏற்றுகொண்டான் சந்தோஷ்.. அந்த நொடி அவனின் விழிகளில் தெரிந்த காதலை தன்னுடைய மனபெட்டகத்தில் அழியாத பொக்கிஷமாக சேகரித்தாள் பிரியதர்ஷினி..
அப்பொழுது பெரியவர்கள் அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யும் பொழுது இருவருமே ஒரே மாதிரி வேண்டாம் என்று மறுத்துவிட, “எதுக்குடா வேண்டாம் என்று சொல்ற..” என்று எல்லோருமே கேட்டனர்..
“முதலில் இவங்க இருவரின் திருமணத்தைக் கவனிப்போம்.. அப்புறம் நாங்க எங்களோட வாழ்க்கையைத் தொடங்குகிறோம்..” என்ற சந்தோஷ் அருகில் சென்ற சஞ்சனா, “அண்ணா ஏதோ உள் குத்து இருப்பது போல இருக்கே..” என்றவள் சொல்ல, “எனக்கும் அப்படிதான் தோணுது..” என்றான் சஞ்சீவ்..
அவர்கள் எல்லோரும் இவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க பிரியாவின் அருகில் நின்ற சந்தோஷ், “ஏய் தேனு.. இன்னும் கொஞ்சநாள் காதலிக்கலாம்.. அப்புறம் நம்ம வாழ்க்கையைத் தொடங்கலாம்..” என்றவன் குறும்புடன் கண்சிட்டினான்..
“என்னோட ஸ்வீட் அத்து..” என்றவனைக் கொஞ்சிய பிரியாவோ, “அத்து நம்ம ஓடிபோலாமா..” என்றவனைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி அவள் கேட்டதும் அதில் தன்னை மறந்த சந்தோஷ், “ஓ போலாமே..” என்றவன் வேகமாகச் சொல்ல, “இவங்க இந்த ஜென்மத்தில் உருப்பிட மாட்டாங்க..” என்று முடிவே செய்துவிட்டனர் சஞ்சனாவும், சஞ்சீவும்..
இருவரும் பேசுவதைக்கேட்டு எல்லோரும் வாய்விட்டு சிரிக்க மித்ரா மட்டும் புரிதலோடு அவர்களைப் பார்த்தவண்ணம் இருவைன் அருகில் சென்றவள், “தேங்க்ஸ்டா அண்ணா..” என்றவள் சொல்ல, “நீயும் மதுவும் முதலில் புகுந்தவீடு போய் சந்தோசமாக வாழனும்.. அப்புறம் நாங்க எங்களோட வாழ்க்கையைப் பற்றி யோசிக்கிறோம்..” என்றவனின் வலது தோளில் மித்ரா சாய்த்து கொள்ள மறுதோளில் மது சாய்ந்து கொண்டாள்..
அதை தன்னுடைய கேமராவில் போட்டோ எடுத்த சஞ்சீவ், “ரொம்ப அழகாக இருக்கு..” என்றவன் புன்னகையோடு கூறினான்.. அவர்களின் ஒற்றுமையை விலகி நின்று ரசித்தாள் பிரியா.. இவர்களின் ஒற்றுமையைப் பார்த்து பெரியவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரித்தது..
அசோக்குமார் – சங்கமித்ரா, கிருஷ்ணா – மதுபாலா இருவரின் திருமணமும் ஒரே மேடையில் நடைபெற்றது.. இருவரும் ஒரே நேரத்தில் அவர்களை விட்டு பிரிந்து செல்லும் நேரத்தில் மித்ரா ஓடிவந்து பிரியாவை அனைத்து கொண்டு கதறிவிட்டாள்..
“மை டார்லிங்.. இங்கிருந்து போகவே மனசு வரல பிரியா..” என்றவள் அண்ணனின் தோள் சாந்து அழுக, “அக்கா பிரிவு வருவது நம்ம உறவை வலிமை படுத்தத்தான்..” என்றவன் தெளிவாக சொல்ல, “குட்டி பையனாக இருந்தவன் இன்னைக்கு எனக்கு அண்ணா மாதிரி தெரியறடா..” என்றவனின் தோளிலும் சாய்ந்து அழுதாள்..