தேன்மழை 3
இரவின் பனித்துளிகள் முத்து முத்தாகக் கோட்டைச் சுவர்களில் மின்ன காலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியெங்கும் முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
காதலியை முத்தமிடும் காதலனை எச்சரிக்கும் முகப்பருக்கள் போல அந்த நீர்த்துளிகள் சூரியனின் உஷ்ணப்பார்வையில் காணாமற் போயின.
அந்த இளஞ்சூரியனின் வரவின் போதே கழ்வராயனின் கோட்டை அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அதிகாலைப் பூஜை முடிந்து பக்திப் பழங்களாக வயதானவர்கள் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து நாட்டு நடப்பை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.
கறவை மாடுகள் தங்கள் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகள் அசைந்தாட இன்னிசையோடு மேய்ச்சலுக்காக நடந்து போய்க்கொண்டிருந்தன. பூக்கள் விற்கும் பெண்களின் கூச்சல் அந்த இடத்தையே கதிகலங்க வைத்தது.
வணிகர்கள் கூட்டம் கோட்டையெங்கும் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தன. ஆகமொத்தம் கழ்வராயனின் கோட்டை அஷ்டைசுவரியத்துடன் கூடிய மகாலக்ஷ்மியைப் போல காட்சியளித்தது.
கழ்வராயன் கோட்டையின் அந்தக் காலைப் பொழுதைத் திருப்தியோடு நோட்டமிட்ட ஒரு ஜோடிக் கண்கள் நகர்வலம் வந்து கொண்டிருந்தது.
கண்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல. ராஜதந்திரத்திற்குப் பெயர்போன சோழநாட்டு முதலமைச்சர் திருச்சிற்றம்பலமுடையான் பல்லவராயர் தான்.
தங்கள் இளவரசருக்குப் பெண்கொடுக்க அத்தனை தகுதிகளும் கழ்வராயனுக்கு இருப்பது அவருக்குத் திருப்திகரமாக இருந்தது.
நாட்டை இத்தனை ஐஸ்வர்யங்களுடன் வைத்திருப்பவன் பாண்டிய விசுவாசி என்பது அவருக்குக் கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், பாதகமில்லை... பேசிப் பார்க்கலாம் என்று தன்னைத்தானே சமாதானம் பண்ணிக் கொண்டார்.
"மன்னவா! சோழ நாட்டிலிருந்து தூதுவர் வந்திருக்கிறார்." சபாமண்டபத்தில் தன் மந்திரிகள் புடைசூழ ராஜிய விவாதத்தில் ஈடுபட்டிருந்த கழ்வராயனைத் தலைமைக் காவலனின் குரல் கலைத்தது.
"அப்படியா? வந்திருப்பது யார்?" மிதமிஞ்சிய ஆச்சரியத்தில் கேட்டான் கழ்வராயன். சோழத் தூதுக்கு இப்போது எந்தத் தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை மன்னவனுக்கு.
ஆனால், மந்திரிகளுக்கு இணையாக சபையில் உட்கார்ந்திருந்த வண்டார்குழலி கண்கள் மின்ன நிமிர்ந்து அமர்ந்தாள்.
'சோழத்தூதுவர் என்றால்...' அவள் மனதில் வர்ணிக்க முடியாத பேரின்ப அலையொன்று பொங்கிச் சிதறியது.
"சோழ சாம்ராஜ்யத்தின் முதலமைச்சர் திருச்சிற்றம்பலமுடையான் பல்லவராயர் வந்திருக்கிறார்." அந்தப் பெயரை உச்சரிக்கும் போதே அத்தனை மரியாதை தெரிந்தது தலைமைக் காவலனின் குரலில்.
"என்ன? வந்திருப்பது சோழத்தின் முதலமைச்சரா?" ஆச்சரிய மிகுதியில் அரியணையை விட்டு எழுந்த கழ்வராயன் தலைமைக் காவலருடன் சபா மண்டபத்தின் வாசலுக்கே சென்று தூதுவரை வரவேற்றார்.
இத்தனை பெரிய வரவேற்பை பல்லவராயர் எதிர்பார்க்கவில்லை. நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் போன கழ்வராயன் இத்தனை பண்பாடும் மரியாதையும் தெரிந்தவன் என்ற செய்தி பல்லவராயருக்குப் புதிது.
"வரவேண்டும் முதலமைச்சரே! தங்கள் வரவால் என் மாளிகை மிகவும் கவுரவம் பெறுகிறது." வார்த்தைகள் லாவகமாக வந்து விழ பல்லவராயர் மெய்மறந்து போனார்.
"மன்னவா! கழ்வராயரைப் பற்றி இதுவரை என் செவி புகுந்த சேதிகள் அனைத்தும் சொற்பம் என்று நிரூபித்து விட்டீர்களே. உங்களைக் காணக் கிடைத்தது என் பாக்கியம்." தலை தாழ்த்தி அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பல்லவராயர்.
முதலமைச்சரை வரவேற்று தன் மந்திரிகள் அனைவரையும் அறிமுகம் செய்தார் கழ்வராயர். இறுதியாகத் தன் மகள் வண்டார் குழலியிடம் வந்தவர்,
"முதலமைச்சரே! என் அருந்தவப் புதல்வி வண்டார் குழலி." என்றார்.
பல்லவராயரின் கண்கள் அந்த மங்கையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தது. தங்கள் இளவரசருக்குத் தக்க துணை என்று அவர் மனம் களியாட்டம் ஆடியது.
வண்டார் குழலியைப் பற்றி அறியாது அப்போது எந்த வீரனும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. ஏனென்றால், வாள் வேல் வீச்சுக்களில் அபார தேர்ச்சி பெற்றவளும், போர் முனைகளில் பங்கெடுத்து படைகளை நடத்திச் செல்வதின் சூட்சுமங்களும் அறிந்த பெண் என்பதால் அவளின் புகழ் நாலாபக்கமும் பரவித்தான் இருந்தது.
தனக்கொரு ஆண்வாரிசில்லையே என்ற கவலையைத் தூக்கி ஆற்றில் போட்டுவிட்டு தன் பெண் மகவை அனைத்திலும் தேர்ந்த வீர மங்கையாக வளர்த்திருந்தார் கழ்வராயன்.
"மன்னர் பெருமானே! தங்கள் புல்வியைக் கண்களால் காணவில்லையே தவிர அவளின் வீர சாகசங்கள் சதா எங்கள் காதுகளில் மோதிக்கொண்டு தான் இருக்கின்றன."
இந்த வார்த்தைளைக் கேட்ட மாத்திரத்தில் கழ்வராயன் தன் மீசையைத் தடவிக் கொள்ள, வண்டார் குழலி தன் இரு கை கூப்பி பல்லவராயரை வணங்கினாள்.
"நீ நீடூழி வாழ வேண்டும் மகளே! உன் தாய்நாட்டுக்குப் பெருமை சேர்த்தது போல நீ வாழப்போகும் தேசத்திற்கும் உன்னால் பெருமை விளைய வேண்டும்."
அந்த ஆசீர்வாதத்தில் குழலியின் கண்கள் வெட்கத்தோடு நிலம் பார்க்க கழ்வராயனின் சிந்தையில் மணியடித்தது. எந்தவித சுற்றிவளைப்பும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் பல்லவராயர்.
"மன்னர் பெருமானே! அடியேனுக்குச் சுற்றிவளைக்கத் தெரிந்ததெல்லாம் கோட்டைகளைத்தான், பேச்சுக்களையல்ல. நான் நேரடியாகவே விஷயத்திற்கு வந்து விடுகிறேன்." சொன்னவர் மன்னரின் அனுமதிக்காகக் காத்து நின்றார்.
"சபையில் சொல்வது உசிதமென்றால் தாராளமாகச் சொல்லுங்கள் பல்லவராயரே."
"மன்னா! பார்போற்றும் சோழ சிம்மாசனத்தின் முடிக்குரிய இளவரசரும், ராஜதந்திரங்களுக்கும் போர்த்தந்திரங்களுக்கும் இணையில்லாது விளங்குபவரும், போர் முனைகள் பலவற்றில் வெற்றி வாகை சூடி சோழ எல்லைகளை விஸ்தீரனப் படுத்துவதில் இடைவிடாது ஈடுபட்டிருக்கும் சுந்தரச் சோழரின் தவப் புதல்வன் ஆதித்த கரிகாலனுக்கு உங்கள் மகள் வண்டார் குழலியைப் பெண் கேட்டே யான் இங்கு வந்துள்ளேன். இது சோழமன்னரின் விண்ணப்பம்."
பல்லவராயரின் கம்பீரமான குரல் தங்கள் சோழ சாம்ராஜ்யத்தின் இளவலின் பெருமைகளைச் சொன்ன போது கர்ஜித்து ஓய்ந்தது. மண்டபத்தின் சுவர்களில் அவர் குரல் முட்டி மோதி அந்த மண்டபத்தை முழுவதும் ஆதித்த கரிகாலனின் புகழால் நிரப்பியது.
தன் காதுகளையே நம்ப முடியாமல் கழ்வராயன் ஸ்தம்பித்து நின்றார் என்றால் அந்த மண்டபமே சுவாசிக்க மறந்து அமைதியானது.
இவையனைத்தையும் தாண்டி நிதானத்தில் இருந்ததென்றால் அது குழலி மட்டும்தான். தன் மனங்கவர்ந்த காதலனின் வீர தீரப் பிரதாபங்களில் லயித்துப் போனவள் அவன் தொட்டணைத்த நிமிடங்களில் கரைந்து போனாள்.
"மன்னவா! சோழ மன்னரின் அபிலாஷையை உங்களிடம் தெரிவித்து விட்டேன். உங்கள் பதில் தெரிந்தால் அதை சோழ மன்னரிடம் கொண்டு சேர்ப்பதே இந்தத் தூதுவனின் நோக்கம்." மிகவும் பணிவாக வந்தது பல்லவரின் வாய்மொழி.
இதுவரை அதிர்ச்சியின் பிடியிலிருந்த கழ்வராயர் தன்னைச் சுதாரித்துக் கொண்டார். தன் மீது வத்து மோதிய அதிர்ஷ்ட தேவதையில் மெய்மறந்து போனவர் இப்போது சிந்தனை வயப்பட்டார். அவர் சிந்தனையைக் குலைக்காமல் அந்த மண்டபமே மௌனித்திருந்தது.
"பல்லவராயரே! உங்கள் வார்த்தைகள் என்னை மகிழ்ச்சியின் உச்சிக்கே இட்டுச் செல்கின்றன. இந்தக் க்ஷணம் யான் உணரும் மகிழ்ச்சியை அளவிட முடியாது." நிதானமாக வந்தது கழ்வராயனின் வார்த்தைகள்.
இதன் பிற்பாடு மன்னர் என்ன பேசப்போகின்றார் என்று சபையே எதிர்பார்த்திருக்க... பல்லவராயர் மர்மமாகப் புன்னகைத்தார்.
"பல்லவராயரே! கிடைப்பதற்கரிய பொக்கிஷம் என் வாசல் தேடி வந்திருக்கிறது. மகிழ்ச்சிதான்... இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், சோழ சாம்ராஜ்யத்தின் நேசக்கரத்தைப் பற்ற முடியாத துர்ப்பாக்கியசாலி நான்." வார்த்தைகள் நயமாக வந்தாலும் கழ்வராயரின் முகத்தில் ஒரு தீர்மானம் இருந்தது.
"சோழ முதலமைச்சரே! பாண்டியனும் இந்த கழ்வராயனும் தாயாதிகள். இந்தச் சிற்றரசை எனக்கு அமைத்துக் கொடுத்து எனக்கொரு ஸ்தானத்தையும் வழங்கிய பாண்டியனுக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்ய மாட்டேன். நாட்டில் உலவும் செய்திகளை நீங்களும் அறிந்திருப்பீர்கள். சோழத்தின் பார்வை ராஜீய விஸ்தரிப்பில் கழ்வராயன் பக்கம் திரும்பியிருப்பதால் இந்தச் சிற்றரசைப் பலப்படுத்தும் பொருட்டு பாண்டிய இளவலுக்கு என் மகளை மணமுடிக்கப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன."
"மன்னர் பெருமானே! தங்களைக் குறுக்கிடுவதற்கு என்னைப் பொருத்தருள வேண்டும். ராஜீய விசுவாசத்திற்காக உங்கள் மகளின் வாழ்க்கையைப் பணயம் வைக்கப் போகிறீர்களா?"
"பல்லவராயரே! நாட்டின் நலனுக்காக எதையும் பணயம் வைப்பான் இந்தக் கழ்வராயன்."
"சோழ சாம்ராஜ்யத்தினுடனான சம்பந்தம் நாட்டிற்கு இன்னும் நலனைத்தான் கொண்டு வரும் கழ்வராயரே!"
"அது துரோகம் பல்லவராயரே!"
"ஈடு அத்தனை விரும்பத்தக்கதாக இல்லையே? உம் பெண்ணின் வீரத்துக்கு பாண்டிய இளவல் எந்த வகையில் பொருத்தமானவன்?"
"பொருந்திக் கொள்வதுதான் பெண்ணின் இயல்பு. என் பெண்ணின் வீரத்திலாவது பாண்டியனின் பரம்பரை இனி வீரமிக்கதாகட்டும்."
"இதுதான் தங்களின் இறுதி முடிவா?"
"நிச்சயமான முடிவு முதலமைச்சரே!"
"மாற்றம் வர வாய்ப்பில்லையா?"
"ஒருகாலும் இல்லை."
"அப்படியென்றால் சோழ மன்னரின் முடிவையும் உங்களிடம் இந்தச் சபையில் கூறிவிடுகிறேன். மன்னர் பெருமானின் முடிவு சாதகமாக இருந்தால் கிடைப்பதற்கரிய வைரங்கள் பதித்த ஆபரணம் ஒன்றை தனது மருமகளுக்குப் பரிசாக அனுப்பினார் சுந்தரச் சோழர். அதற்கு வேலையில்லை என்று ஆகிப் போனது. முடிவு பாதமாக இருந்தால்... இன்னும் சரியாகப் பத்து நாட்களில் கழ்வராயன் எல்லையில் சோழப்படைகள் பாசறை அமைக்கும். அன்று இரவு மூன்றாம் ஜாமத்தில் போர் முரசு கொட்டும். உயிர்ப் பலி இல்லாமல், ரத்தம் சிந்தாமல் கைகோர்த்துக் கொள்ள ஆசைப்பட்டது சோழ அரசு. அதற்கு அவசியமில்லை... ரத்தம் சிந்தித்தான் நாங்கள் கைகோர்ப்போம் என்று கழ்வராயர் சொன்னால் நாங்கள் அதற்கும் தயார்தான். மன்னர் பெருமானே! நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சோழ சாம்ராஜ்யத்தின் நாளைய மன்னன் ஆதித்த கரிகாலன் தான் தங்கள் மகளை மணக்கப் போகும் மணாளன். அதில் எந்த மாற்றமுமில்லை. மாமனாரைப் போர் முனையில் அறிமுகம் செய்து கொள்ளும் பாக்கியம் எந்த மருமகனுக்குக் கிடைக்கும்?"
நெஞ்சை நிமிர்த்தி ஆவேசமாக இதுவரை பேசியவர் கேலியாக முடித்தார். அரியணையை நோக்கித் தலை சாய்த்து விட்டு கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் வைத்தார் பல்லவராயர். கடைசியாகக் குழலியைப் பார்த்தவர்,
"மனம் தளராதே மகளே! சோழ இளவரசன் சொன்ன சொல் தவறமாட்டான். கூடிய சீக்கிரம் வந்து சேருவான்... மணமாலையோடு." சத்தமாகச் சொன்னவர் மீண்டுமொருமுறை சபையை வணங்கிவிட்டு வெளியேறிவிட்டார்.
அலையொன்று அடித்து ஓய்ந்தது போல் அந்த இடமே அமைதியாகிப் போனது. அத்தோடு சபையைக் கலைத்து விட்டு கழ்வராயனும் எழுந்து போய்விட்டான்.
இரவின் பனித்துளிகள் முத்து முத்தாகக் கோட்டைச் சுவர்களில் மின்ன காலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியெங்கும் முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
காதலியை முத்தமிடும் காதலனை எச்சரிக்கும் முகப்பருக்கள் போல அந்த நீர்த்துளிகள் சூரியனின் உஷ்ணப்பார்வையில் காணாமற் போயின.
அந்த இளஞ்சூரியனின் வரவின் போதே கழ்வராயனின் கோட்டை அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அதிகாலைப் பூஜை முடிந்து பக்திப் பழங்களாக வயதானவர்கள் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து நாட்டு நடப்பை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.
கறவை மாடுகள் தங்கள் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகள் அசைந்தாட இன்னிசையோடு மேய்ச்சலுக்காக நடந்து போய்க்கொண்டிருந்தன. பூக்கள் விற்கும் பெண்களின் கூச்சல் அந்த இடத்தையே கதிகலங்க வைத்தது.
வணிகர்கள் கூட்டம் கோட்டையெங்கும் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தன. ஆகமொத்தம் கழ்வராயனின் கோட்டை அஷ்டைசுவரியத்துடன் கூடிய மகாலக்ஷ்மியைப் போல காட்சியளித்தது.
கழ்வராயன் கோட்டையின் அந்தக் காலைப் பொழுதைத் திருப்தியோடு நோட்டமிட்ட ஒரு ஜோடிக் கண்கள் நகர்வலம் வந்து கொண்டிருந்தது.
கண்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல. ராஜதந்திரத்திற்குப் பெயர்போன சோழநாட்டு முதலமைச்சர் திருச்சிற்றம்பலமுடையான் பல்லவராயர் தான்.
தங்கள் இளவரசருக்குப் பெண்கொடுக்க அத்தனை தகுதிகளும் கழ்வராயனுக்கு இருப்பது அவருக்குத் திருப்திகரமாக இருந்தது.
நாட்டை இத்தனை ஐஸ்வர்யங்களுடன் வைத்திருப்பவன் பாண்டிய விசுவாசி என்பது அவருக்குக் கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், பாதகமில்லை... பேசிப் பார்க்கலாம் என்று தன்னைத்தானே சமாதானம் பண்ணிக் கொண்டார்.
"மன்னவா! சோழ நாட்டிலிருந்து தூதுவர் வந்திருக்கிறார்." சபாமண்டபத்தில் தன் மந்திரிகள் புடைசூழ ராஜிய விவாதத்தில் ஈடுபட்டிருந்த கழ்வராயனைத் தலைமைக் காவலனின் குரல் கலைத்தது.
"அப்படியா? வந்திருப்பது யார்?" மிதமிஞ்சிய ஆச்சரியத்தில் கேட்டான் கழ்வராயன். சோழத் தூதுக்கு இப்போது எந்தத் தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை மன்னவனுக்கு.
ஆனால், மந்திரிகளுக்கு இணையாக சபையில் உட்கார்ந்திருந்த வண்டார்குழலி கண்கள் மின்ன நிமிர்ந்து அமர்ந்தாள்.
'சோழத்தூதுவர் என்றால்...' அவள் மனதில் வர்ணிக்க முடியாத பேரின்ப அலையொன்று பொங்கிச் சிதறியது.
"சோழ சாம்ராஜ்யத்தின் முதலமைச்சர் திருச்சிற்றம்பலமுடையான் பல்லவராயர் வந்திருக்கிறார்." அந்தப் பெயரை உச்சரிக்கும் போதே அத்தனை மரியாதை தெரிந்தது தலைமைக் காவலனின் குரலில்.
"என்ன? வந்திருப்பது சோழத்தின் முதலமைச்சரா?" ஆச்சரிய மிகுதியில் அரியணையை விட்டு எழுந்த கழ்வராயன் தலைமைக் காவலருடன் சபா மண்டபத்தின் வாசலுக்கே சென்று தூதுவரை வரவேற்றார்.
இத்தனை பெரிய வரவேற்பை பல்லவராயர் எதிர்பார்க்கவில்லை. நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் போன கழ்வராயன் இத்தனை பண்பாடும் மரியாதையும் தெரிந்தவன் என்ற செய்தி பல்லவராயருக்குப் புதிது.
"வரவேண்டும் முதலமைச்சரே! தங்கள் வரவால் என் மாளிகை மிகவும் கவுரவம் பெறுகிறது." வார்த்தைகள் லாவகமாக வந்து விழ பல்லவராயர் மெய்மறந்து போனார்.
"மன்னவா! கழ்வராயரைப் பற்றி இதுவரை என் செவி புகுந்த சேதிகள் அனைத்தும் சொற்பம் என்று நிரூபித்து விட்டீர்களே. உங்களைக் காணக் கிடைத்தது என் பாக்கியம்." தலை தாழ்த்தி அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பல்லவராயர்.
முதலமைச்சரை வரவேற்று தன் மந்திரிகள் அனைவரையும் அறிமுகம் செய்தார் கழ்வராயர். இறுதியாகத் தன் மகள் வண்டார் குழலியிடம் வந்தவர்,
"முதலமைச்சரே! என் அருந்தவப் புதல்வி வண்டார் குழலி." என்றார்.
பல்லவராயரின் கண்கள் அந்த மங்கையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தது. தங்கள் இளவரசருக்குத் தக்க துணை என்று அவர் மனம் களியாட்டம் ஆடியது.
வண்டார் குழலியைப் பற்றி அறியாது அப்போது எந்த வீரனும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. ஏனென்றால், வாள் வேல் வீச்சுக்களில் அபார தேர்ச்சி பெற்றவளும், போர் முனைகளில் பங்கெடுத்து படைகளை நடத்திச் செல்வதின் சூட்சுமங்களும் அறிந்த பெண் என்பதால் அவளின் புகழ் நாலாபக்கமும் பரவித்தான் இருந்தது.
தனக்கொரு ஆண்வாரிசில்லையே என்ற கவலையைத் தூக்கி ஆற்றில் போட்டுவிட்டு தன் பெண் மகவை அனைத்திலும் தேர்ந்த வீர மங்கையாக வளர்த்திருந்தார் கழ்வராயன்.
"மன்னர் பெருமானே! தங்கள் புல்வியைக் கண்களால் காணவில்லையே தவிர அவளின் வீர சாகசங்கள் சதா எங்கள் காதுகளில் மோதிக்கொண்டு தான் இருக்கின்றன."
இந்த வார்த்தைளைக் கேட்ட மாத்திரத்தில் கழ்வராயன் தன் மீசையைத் தடவிக் கொள்ள, வண்டார் குழலி தன் இரு கை கூப்பி பல்லவராயரை வணங்கினாள்.
"நீ நீடூழி வாழ வேண்டும் மகளே! உன் தாய்நாட்டுக்குப் பெருமை சேர்த்தது போல நீ வாழப்போகும் தேசத்திற்கும் உன்னால் பெருமை விளைய வேண்டும்."
அந்த ஆசீர்வாதத்தில் குழலியின் கண்கள் வெட்கத்தோடு நிலம் பார்க்க கழ்வராயனின் சிந்தையில் மணியடித்தது. எந்தவித சுற்றிவளைப்பும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் பல்லவராயர்.
"மன்னர் பெருமானே! அடியேனுக்குச் சுற்றிவளைக்கத் தெரிந்ததெல்லாம் கோட்டைகளைத்தான், பேச்சுக்களையல்ல. நான் நேரடியாகவே விஷயத்திற்கு வந்து விடுகிறேன்." சொன்னவர் மன்னரின் அனுமதிக்காகக் காத்து நின்றார்.
"சபையில் சொல்வது உசிதமென்றால் தாராளமாகச் சொல்லுங்கள் பல்லவராயரே."
"மன்னா! பார்போற்றும் சோழ சிம்மாசனத்தின் முடிக்குரிய இளவரசரும், ராஜதந்திரங்களுக்கும் போர்த்தந்திரங்களுக்கும் இணையில்லாது விளங்குபவரும், போர் முனைகள் பலவற்றில் வெற்றி வாகை சூடி சோழ எல்லைகளை விஸ்தீரனப் படுத்துவதில் இடைவிடாது ஈடுபட்டிருக்கும் சுந்தரச் சோழரின் தவப் புதல்வன் ஆதித்த கரிகாலனுக்கு உங்கள் மகள் வண்டார் குழலியைப் பெண் கேட்டே யான் இங்கு வந்துள்ளேன். இது சோழமன்னரின் விண்ணப்பம்."
பல்லவராயரின் கம்பீரமான குரல் தங்கள் சோழ சாம்ராஜ்யத்தின் இளவலின் பெருமைகளைச் சொன்ன போது கர்ஜித்து ஓய்ந்தது. மண்டபத்தின் சுவர்களில் அவர் குரல் முட்டி மோதி அந்த மண்டபத்தை முழுவதும் ஆதித்த கரிகாலனின் புகழால் நிரப்பியது.
தன் காதுகளையே நம்ப முடியாமல் கழ்வராயன் ஸ்தம்பித்து நின்றார் என்றால் அந்த மண்டபமே சுவாசிக்க மறந்து அமைதியானது.
இவையனைத்தையும் தாண்டி நிதானத்தில் இருந்ததென்றால் அது குழலி மட்டும்தான். தன் மனங்கவர்ந்த காதலனின் வீர தீரப் பிரதாபங்களில் லயித்துப் போனவள் அவன் தொட்டணைத்த நிமிடங்களில் கரைந்து போனாள்.
"மன்னவா! சோழ மன்னரின் அபிலாஷையை உங்களிடம் தெரிவித்து விட்டேன். உங்கள் பதில் தெரிந்தால் அதை சோழ மன்னரிடம் கொண்டு சேர்ப்பதே இந்தத் தூதுவனின் நோக்கம்." மிகவும் பணிவாக வந்தது பல்லவரின் வாய்மொழி.
இதுவரை அதிர்ச்சியின் பிடியிலிருந்த கழ்வராயர் தன்னைச் சுதாரித்துக் கொண்டார். தன் மீது வத்து மோதிய அதிர்ஷ்ட தேவதையில் மெய்மறந்து போனவர் இப்போது சிந்தனை வயப்பட்டார். அவர் சிந்தனையைக் குலைக்காமல் அந்த மண்டபமே மௌனித்திருந்தது.
"பல்லவராயரே! உங்கள் வார்த்தைகள் என்னை மகிழ்ச்சியின் உச்சிக்கே இட்டுச் செல்கின்றன. இந்தக் க்ஷணம் யான் உணரும் மகிழ்ச்சியை அளவிட முடியாது." நிதானமாக வந்தது கழ்வராயனின் வார்த்தைகள்.
இதன் பிற்பாடு மன்னர் என்ன பேசப்போகின்றார் என்று சபையே எதிர்பார்த்திருக்க... பல்லவராயர் மர்மமாகப் புன்னகைத்தார்.
"பல்லவராயரே! கிடைப்பதற்கரிய பொக்கிஷம் என் வாசல் தேடி வந்திருக்கிறது. மகிழ்ச்சிதான்... இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், சோழ சாம்ராஜ்யத்தின் நேசக்கரத்தைப் பற்ற முடியாத துர்ப்பாக்கியசாலி நான்." வார்த்தைகள் நயமாக வந்தாலும் கழ்வராயரின் முகத்தில் ஒரு தீர்மானம் இருந்தது.
"சோழ முதலமைச்சரே! பாண்டியனும் இந்த கழ்வராயனும் தாயாதிகள். இந்தச் சிற்றரசை எனக்கு அமைத்துக் கொடுத்து எனக்கொரு ஸ்தானத்தையும் வழங்கிய பாண்டியனுக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்ய மாட்டேன். நாட்டில் உலவும் செய்திகளை நீங்களும் அறிந்திருப்பீர்கள். சோழத்தின் பார்வை ராஜீய விஸ்தரிப்பில் கழ்வராயன் பக்கம் திரும்பியிருப்பதால் இந்தச் சிற்றரசைப் பலப்படுத்தும் பொருட்டு பாண்டிய இளவலுக்கு என் மகளை மணமுடிக்கப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன."
"மன்னர் பெருமானே! தங்களைக் குறுக்கிடுவதற்கு என்னைப் பொருத்தருள வேண்டும். ராஜீய விசுவாசத்திற்காக உங்கள் மகளின் வாழ்க்கையைப் பணயம் வைக்கப் போகிறீர்களா?"
"பல்லவராயரே! நாட்டின் நலனுக்காக எதையும் பணயம் வைப்பான் இந்தக் கழ்வராயன்."
"சோழ சாம்ராஜ்யத்தினுடனான சம்பந்தம் நாட்டிற்கு இன்னும் நலனைத்தான் கொண்டு வரும் கழ்வராயரே!"
"அது துரோகம் பல்லவராயரே!"
"ஈடு அத்தனை விரும்பத்தக்கதாக இல்லையே? உம் பெண்ணின் வீரத்துக்கு பாண்டிய இளவல் எந்த வகையில் பொருத்தமானவன்?"
"பொருந்திக் கொள்வதுதான் பெண்ணின் இயல்பு. என் பெண்ணின் வீரத்திலாவது பாண்டியனின் பரம்பரை இனி வீரமிக்கதாகட்டும்."
"இதுதான் தங்களின் இறுதி முடிவா?"
"நிச்சயமான முடிவு முதலமைச்சரே!"
"மாற்றம் வர வாய்ப்பில்லையா?"
"ஒருகாலும் இல்லை."
"அப்படியென்றால் சோழ மன்னரின் முடிவையும் உங்களிடம் இந்தச் சபையில் கூறிவிடுகிறேன். மன்னர் பெருமானின் முடிவு சாதகமாக இருந்தால் கிடைப்பதற்கரிய வைரங்கள் பதித்த ஆபரணம் ஒன்றை தனது மருமகளுக்குப் பரிசாக அனுப்பினார் சுந்தரச் சோழர். அதற்கு வேலையில்லை என்று ஆகிப் போனது. முடிவு பாதமாக இருந்தால்... இன்னும் சரியாகப் பத்து நாட்களில் கழ்வராயன் எல்லையில் சோழப்படைகள் பாசறை அமைக்கும். அன்று இரவு மூன்றாம் ஜாமத்தில் போர் முரசு கொட்டும். உயிர்ப் பலி இல்லாமல், ரத்தம் சிந்தாமல் கைகோர்த்துக் கொள்ள ஆசைப்பட்டது சோழ அரசு. அதற்கு அவசியமில்லை... ரத்தம் சிந்தித்தான் நாங்கள் கைகோர்ப்போம் என்று கழ்வராயர் சொன்னால் நாங்கள் அதற்கும் தயார்தான். மன்னர் பெருமானே! நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சோழ சாம்ராஜ்யத்தின் நாளைய மன்னன் ஆதித்த கரிகாலன் தான் தங்கள் மகளை மணக்கப் போகும் மணாளன். அதில் எந்த மாற்றமுமில்லை. மாமனாரைப் போர் முனையில் அறிமுகம் செய்து கொள்ளும் பாக்கியம் எந்த மருமகனுக்குக் கிடைக்கும்?"
நெஞ்சை நிமிர்த்தி ஆவேசமாக இதுவரை பேசியவர் கேலியாக முடித்தார். அரியணையை நோக்கித் தலை சாய்த்து விட்டு கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் வைத்தார் பல்லவராயர். கடைசியாகக் குழலியைப் பார்த்தவர்,
"மனம் தளராதே மகளே! சோழ இளவரசன் சொன்ன சொல் தவறமாட்டான். கூடிய சீக்கிரம் வந்து சேருவான்... மணமாலையோடு." சத்தமாகச் சொன்னவர் மீண்டுமொருமுறை சபையை வணங்கிவிட்டு வெளியேறிவிட்டார்.
அலையொன்று அடித்து ஓய்ந்தது போல் அந்த இடமே அமைதியாகிப் போனது. அத்தோடு சபையைக் கலைத்து விட்டு கழ்வராயனும் எழுந்து போய்விட்டான்.