தேன்மழை 4
சோழப் பேரரசின் தூதுவர் வந்து அன்றோடு பத்து நாட்கள் கடந்திருந்தன. நாட்களை எண்ணிக் கொண்டிருந்த வண்டார் குழலி உப்பரிகையில் தன் அறையின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு எதிரே தெரிந்த காட்டை வெறித்துப் பார்த்தாள்.
கழ்வராயன் கோட்டைக்கு எதிரே தெரிந்த காட்டுப்பகுதி திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது. சோழ வீரர்கள் ஆயிரமாயிரமாகக் குவிந்து பாசறைகளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
யானைப்படை குதிரைப்படை என காட்டின் ஒரு புறம் கனைப்பாலும் பிளிறலாலும் கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. காட்டு மரங்கள் வெட்டப்பட்டு வீழ்த்தப்படும் ஒலி தடால் தடாலென முழங்கிக் கொண்டிருந்தது.
எதிரிகளின் பாசறையை நோட்டமிட்டவள் மனதில் தனது கோட்டைக்குள் கடந்த பத்து தினங்களாக நடக்கும் ஏற்பாடுகளையும் எண்ணத் தவறவில்லை.
போரில் அத்தனை நாட்டம் இல்லாவிட்டாலும் தன் தாயாதியான பாண்டியனுக்குத் துரோகம் இழைக்க முடியாததால் காரியங்கள் யாவையும் கச்சிதமாகவே நடத்தினார் கழ்வராயர்.
பத்து அடி அகலத்திலிருந்த கோட்டை மதில்கள் செப்பனிடப்பட்டு வில்லெய்தும் கூண்டுகள் பழுது பார்க்கப்பட்டன. எண்ணெய்க் கொப்பரைககள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
சேனாதிபதி, உபசேனாதிபதி சகிதம் தினமும் மந்திராலோசனை நடைபெற்றது. போருக்கான திட்டங்கள் செவ்வனே நிறைவேற்றப்பட்டன.
ஆனால் எதிலும் குழலி கலந்து கொள்ளவில்லை. வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் பங்கெடுத்துக் கொண்டவள் போர்த் தந்திரங்கள் எதிலும் ஈடுபடவில்லை.
நாட்டின் நலனுக்காக இதுவரை போர்முனைகளில் வாளேந்தியவள் முதல் முறையாகத் தன் நாட்டின் நலனுக்காக மௌனித்திருந்தாள்.
இருள் ஏறிக் கொண்டிருந்தது. இரண்டாம் ஜாமத்துக் கோயில் மணியோசை அந்த இடத்தையே நிரப்பியது. அல்லி கொண்டுவந்து கொடுத்த வில்லையும் அம்பறாத் தூணியிலிருந்த அம்பையும் கையிலெடுத்த குழலி சரியாகக் குறி வைத்து அதை கரிகாலனின் பாசறைக்கு எய்தாள்.
காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த அம்பு சரியாகக் கரிகாலன் பாசறையின் உச்சிப் பகுதியில் குத்தி நின்றது. படைத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த கரிகாலனைக் கலைத்தது வீரனொருவனின் குரல்.
"இளவரசே!"
"சொல்லும் வீரரே!"
"எதிரி புறமிருந்து அம்பொன்று புறப்பட்டு வந்து தங்கள் பாசறையில் தஞ்சமடைந்திருக்கிறது."
"அப்படியா என்ன?" கூடாரத்தை விட்டு வெளியே வந்த கரிகாலன் வீரன் ஒருவனின் உதவியோடு அந்த அம்பைத் தன்னிடம் கொண்டு வரச் செய்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே அம்பின் நுனியில் ஓலைச் சுருளொன்று இணைக்கப்பட்டிருந்தது. புன்னகையோடு நகர்ந்த தங்கள் இளவரசனைச் சுற்றி நின்ற அத்தனை வீரர்களும் கேலி செய்து சிரித்தார்கள்.
வீரர்களோடு எப்போதுமே நல்லுறவைப் பேணும் அந்த இளவரசனும் அவர்கள் கேலிக்கு இடமளித்து சிவந்த முகத்துடன் கூடாரத்திற்குள் நுழைந்து கொண்டான்.
கைகள் பரபரக்க அந்த ஓலைச் சுருளைப் பிரித்தான் கரிகாலன். மணிமணியாக எழுத்துக்கள் வடிக்கப்பட்டிருந்தன.
"அன்பரே!
நலந்தானா? போருக்கான முன்னேற்பாடுகளில் என்னை மறந்து விட்டீர்களா? முதன்முறையாகக் கழ்வராயனின் புதல்வி போர் முனையைத் தவிர்த்திருக்கிறாள். அவள் அன்பருக்கு எதிராக வாள் பிடிக்கும் சக்தி மன்னருக்கு வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் மகளுக்கு இல்லை. அதிக ரத்தம் சிந்தாமல் இந்தக் கோட்டையைக் கைப்பற்றுங்கள். கழ்வராயன் வீரர்கள் இனி உங்கள் வீரர்களும் கூட. நம் வீரர்கள் எந்த இடத்திலும் கவுரவவின்மையை எதிர் நோக்கக் கூடாது. இது இந்தக் வண்டார் குழியின் ஆக்ஞை. ஏதேனும் சொல்ல நினைத்தால் அம்பை உப்பரிகையின் பெரிய சாளரத்திற்கு எய்து விடுங்கள்.
உங்கள் பேரழகு."
ஓலையைப் படித்த கரிகாலன் மகிழ்ச்சி பொங்க அதில் முத்தமிட்டான். மளமளவென்று ஓலையொன்றை எடுத்து அதில் எழுதியவன்,
"யாரங்கே!" என்றான்.
"சொல்லுங்கள் இளவரசே!"
"வீரனே! அம்பில் ஓலையைப் பிணைத்து உப்பரிகையின் பெரிய சாளரத்திற்கு எய்து விடு."
"ஆகட்டும் இளவரசே!"
அம்பு சரியாக குழலியின் அறையில் 'க்ளிங்' என்ற ஒலியுடன் வந்து வீழ்ந்தது. புன்னகையோடு அம்பை எடுத்த அல்லி ஓலையைப் பிரித்துத் தன் இளவரசியிடம் நீட்டினாள். குழலியின் வதனம் மலர்ந்து போனது.
"பேரழகே!
அப்படியே ஆகட்டும். போரைத் தவிர்க்கத்தான் எவ்வளவோ முயன்றேன், முடியவில்லை. அதற்காக உன்னை விட்டுக் கொடுக்க என்னால் முடியாது. கழ்வராயனுக்கும் அவர் வீரர்களுக்கும் எந்த அவமாரியாதையும் நடக்காது. க்ஷத்திரிய தர்மப்படி கண்ணியமான முறையிலேயே போர் நடக்கும். ஆனால், பாண்டிய வீரர்கள் என்னைத் தாக்கும் பட்சத்தில் அவர்களுக்குச் சரியான பதிலடி கொடுப்பான் இந்த ஆதித்த கரிகாலன். நாளை இரண்டாம் ஜாமத்தில் நந்தவனத்தில் எனக்காகக் காத்திரு. வெற்றிவாகை சூடி வருவான் உன் அன்பன்.
ஆதித்த கரிகாலன்."
ஓலையைப் படித்து முடித்த குழலி அதைத் தனது பவளப் பேழையில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
சரியாக மூன்றாம் ஜாமத்தை நெருங்கும் போது சோழ சைனியத்தின் பக்கமிருந்து போர் முரசு கொட்டும் சத்தம் கேட்டது.
கழ்வராயனின் வீரர்கள் போர்க்கோலத்தில் வாளேந்தி அணிவகுத்து நிற்க, குதிரைப்படை முன்னணியில் திகழ்ந்தது.
கோட்டைச் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த கொப்பரைகளில் நெருப்பு மூட்டப்பட்டது.
வில்லும் வேலும் ஏந்திய வீரர்கள் சுற்று மதிலில் அணிவகுத்து ஆயத்தமாக நின்றார்கள். கழ்வராயனும் அவர் சேனாதிபதியும் படைத்தலைவர்களும் பூரண போர்க்கோலம் தரித்து அனைத்தையும் மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தார்கள்.
இங்கு இத்தனை ஏற்பாடுகளும் நடக்க காட்டுக்குள் இருந்த சோழ வீரர்கள் வெட்டிப் போட்ட நீண்ட மரங்களை ஆயுத வண்டிகளில் பொருத்தி கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
கோட்டையைச் சுற்றி பெரிய அகழி வெட்டப்பட்டு அதில் முதலைகளும் வளர்க்கப் பட்டிருந்ததால் பாலம் அமைப்பதற்கென தனியாக மரங்களை வண்டிகளில் கொண்டு சென்றார்கள்.
கோட்டையை மூன்று புறங்களிலிருந்து தாக்க முடிவு செய்திருந்தான் கரிகாலன். சைனியத்தை நான்காகப் பிரித்தவன் காட்டுக்குள் ஒரு பகுதியை நிறுத்திவிட்டு மீதி மூன்று பகுதியைக் கோட்டையைத் தாக்க ஏற்பாடு பண்ணி இருந்தான். பாண்டிய வீரர்கள் ஒருவேளை பின்னால் தாக்கலாம் என்ற ஐயம் இருந்தது.
உப தளபதிகளோடு இரண்டு பகுதி புறப்பட பெரும்பகுதியோடு கோட்டை வாயிலை நோக்கிப் போனான் சோழ இளவரசன்.
மரங்கள் பொருத்தப்பட்ட ஆயுத வண்டிகள் கோட்டைக் கதவில் வேகங்கொண்டு மோத சற்று நேரத்திற்கெல்லாம் ஆவெனப் பிளந்து கொண்டது கோட்டை வாயில்.
இரு தரப்பிலிருந்தும் வீரர்கள் வேலும் அம்பும் எய்தபடியிருக்க மாண்டவர் உடல்கள் அகழியில் வீழ்ந்து முதலைக்கு இரையாயின.
அந்த அர்த்த ஜாமத்தில் வாள்வீச்சுக்கள் பளீர் பளீரென மின்னல் போல ஜொலிக்க அந்தக் கோர யுத்தத்தைக் காணப் பொறுக்காத அந்த முழு நிலாவும் மேகத்துக்குள் ஒளிந்து கொண்டது.
தலையில்லாத முண்டங்கள் கோரத் தாண்டவம் ஆட அந்த நிலப்பரப்பே ரத்த நிறம் கொண்டது.
கொப்பரைகளிலிருந்து ஊற்றப்பட்ட சூடான எண்ணெயில் வெந்த உடல்களின் அலறல் அந்த இடத்தையே அதிர வைத்தது.
சோழ இளவரசன் எத்தனை தார்மீகமாகப் போரை நடத்த முடியுமோ அத்தனை தூரம் தன் வீரர்களை வழி நடத்திச் சென்றான். ஒரு எல்லைக்கு மேல் கழ்வராயன் வீரர்களின் கை நலிவடையத் தொடங்கியது.
அறைத் தாழ்வாரத்திலிருந்து அந்த யுத்தத்தை பார்வையிட்ட படி இருந்தாள் வண்டார் குழலி. இளவரசி என்பதாலும் தன் அன்பிற்குரியவர் வெற்றி வாகை சூடவேண்டும் என்ற அவாவினாலும் அன்று அதிக ஆபரணங்களை அணிந்திருந்தாள் இளவரசி.
தனது நீண்ட ஜடையில் அவள் வைத்திருந்த தாழம் பூக்களின் வாசம் அந்த அறைக்கு அகிலின் தேவையை நிவர்த்தி செய்திருந்தன.
சூரிய உதயத்தின் போது கழ்வராயன் எல்லையே சாந்த சொரூபியாக மாறி இருந்தது. காட்டுக்குள் கேட்ட சலசலப்புக்களும் அடங்கி விட கோட்டை முழுவதும் சோழ வீரர்களின் அணிவகுப்பே காட்சியளித்தது. குழலி தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஆனால், பல்லவராயரை அங்கு அனுப்பி இருந்தான் கரிகாலன்.
ரத்தம் தோய்ந்த தன் உடை வாளை உறைக்குள் போட்டவர் கம்பீரமாகக் குழலியின் அறைக்குள் நுழைந்தார்.
"மன்னிக்க வேண்டும் இளவரசி! அந்தப் புரத்திற்குள் நுழைந்து உங்களுக்குக் களங்கம் கற்பிப்பது எனது நோக்கமன்று. இளவரசரின் ஆணையின் பேரில் நிலவரத்தைச் சொல்லவே வந்திருக்கிறேன்."
"பாதகமில்லை... என் தந்தை..."
"கவலைப்படவேண்டாம். தங்கள் தந்தைக்கு எந்தக் குறைவும் ஏற்படவில்லை. ஏற்படவும் இளவரசர் அனுமதிக்கவில்லை. சொல்லப் போனால் அவர்கள் இருவரும் இப்போது ஒன்றாக சற்றுத் தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்."
"அப்படியா?"
"ஆமாம் இளவரசி. தங்கள் சேனாதிபதி, படைத்தலைவர்கள் எல்லோரும் மிகவும் மரியாதையான முறையில் இளவரசால் கவனிக்கப்பட்டார்கள். மீதமுள்ள வீரர்கள் இப்போதைக்குக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். தங்கள் திருமணம் முடிந்ததும் கழ்வராயரின் சிற்றரசு மீண்டும் அவருக்கே பூரண சுதந்திரத்தோடு வழங்கப்படும். பாண்டியனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய அவசியம் இனி ஒரு போதும் இல்லாதபடி சோழப் பேரரசு அதைக் காத்து நிற்கும். இதுவே இளவரசரின் சேதி."
"இளவரசரை இப்போது..." மேலே தொடர முடியாமல் நாணம் தடுக்கத் தலை குனிந்து கொண்டாள் குழலி. அல்லியும் பல்லவராயரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.
"நந்தவனத்தில் சந்திப்பதாகச் சொன்னார்."
"சேனாதிபதி அவர்களே!" வெளியேறப்போன பல்லவராயரைத் தடுத்தது குழலியின் குரல். திரும்பிப் பார்த்தவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள் இளவரசி.
"தீர்க்க சுமங்கலியாக நீடூழி வாழ வேண்டும் மகளே!" ரத்தம் தோய்ந்த கையால் ஆசீர்வதித்தார் பல்லவராயர்.
சோழப் பேரரசின் தூதுவர் வந்து அன்றோடு பத்து நாட்கள் கடந்திருந்தன. நாட்களை எண்ணிக் கொண்டிருந்த வண்டார் குழலி உப்பரிகையில் தன் அறையின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு எதிரே தெரிந்த காட்டை வெறித்துப் பார்த்தாள்.
கழ்வராயன் கோட்டைக்கு எதிரே தெரிந்த காட்டுப்பகுதி திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது. சோழ வீரர்கள் ஆயிரமாயிரமாகக் குவிந்து பாசறைகளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
யானைப்படை குதிரைப்படை என காட்டின் ஒரு புறம் கனைப்பாலும் பிளிறலாலும் கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. காட்டு மரங்கள் வெட்டப்பட்டு வீழ்த்தப்படும் ஒலி தடால் தடாலென முழங்கிக் கொண்டிருந்தது.
எதிரிகளின் பாசறையை நோட்டமிட்டவள் மனதில் தனது கோட்டைக்குள் கடந்த பத்து தினங்களாக நடக்கும் ஏற்பாடுகளையும் எண்ணத் தவறவில்லை.
போரில் அத்தனை நாட்டம் இல்லாவிட்டாலும் தன் தாயாதியான பாண்டியனுக்குத் துரோகம் இழைக்க முடியாததால் காரியங்கள் யாவையும் கச்சிதமாகவே நடத்தினார் கழ்வராயர்.
பத்து அடி அகலத்திலிருந்த கோட்டை மதில்கள் செப்பனிடப்பட்டு வில்லெய்தும் கூண்டுகள் பழுது பார்க்கப்பட்டன. எண்ணெய்க் கொப்பரைககள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
சேனாதிபதி, உபசேனாதிபதி சகிதம் தினமும் மந்திராலோசனை நடைபெற்றது. போருக்கான திட்டங்கள் செவ்வனே நிறைவேற்றப்பட்டன.
ஆனால் எதிலும் குழலி கலந்து கொள்ளவில்லை. வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் பங்கெடுத்துக் கொண்டவள் போர்த் தந்திரங்கள் எதிலும் ஈடுபடவில்லை.
நாட்டின் நலனுக்காக இதுவரை போர்முனைகளில் வாளேந்தியவள் முதல் முறையாகத் தன் நாட்டின் நலனுக்காக மௌனித்திருந்தாள்.
இருள் ஏறிக் கொண்டிருந்தது. இரண்டாம் ஜாமத்துக் கோயில் மணியோசை அந்த இடத்தையே நிரப்பியது. அல்லி கொண்டுவந்து கொடுத்த வில்லையும் அம்பறாத் தூணியிலிருந்த அம்பையும் கையிலெடுத்த குழலி சரியாகக் குறி வைத்து அதை கரிகாலனின் பாசறைக்கு எய்தாள்.
காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த அம்பு சரியாகக் கரிகாலன் பாசறையின் உச்சிப் பகுதியில் குத்தி நின்றது. படைத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த கரிகாலனைக் கலைத்தது வீரனொருவனின் குரல்.
"இளவரசே!"
"சொல்லும் வீரரே!"
"எதிரி புறமிருந்து அம்பொன்று புறப்பட்டு வந்து தங்கள் பாசறையில் தஞ்சமடைந்திருக்கிறது."
"அப்படியா என்ன?" கூடாரத்தை விட்டு வெளியே வந்த கரிகாலன் வீரன் ஒருவனின் உதவியோடு அந்த அம்பைத் தன்னிடம் கொண்டு வரச் செய்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே அம்பின் நுனியில் ஓலைச் சுருளொன்று இணைக்கப்பட்டிருந்தது. புன்னகையோடு நகர்ந்த தங்கள் இளவரசனைச் சுற்றி நின்ற அத்தனை வீரர்களும் கேலி செய்து சிரித்தார்கள்.
வீரர்களோடு எப்போதுமே நல்லுறவைப் பேணும் அந்த இளவரசனும் அவர்கள் கேலிக்கு இடமளித்து சிவந்த முகத்துடன் கூடாரத்திற்குள் நுழைந்து கொண்டான்.
கைகள் பரபரக்க அந்த ஓலைச் சுருளைப் பிரித்தான் கரிகாலன். மணிமணியாக எழுத்துக்கள் வடிக்கப்பட்டிருந்தன.
"அன்பரே!
நலந்தானா? போருக்கான முன்னேற்பாடுகளில் என்னை மறந்து விட்டீர்களா? முதன்முறையாகக் கழ்வராயனின் புதல்வி போர் முனையைத் தவிர்த்திருக்கிறாள். அவள் அன்பருக்கு எதிராக வாள் பிடிக்கும் சக்தி மன்னருக்கு வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் மகளுக்கு இல்லை. அதிக ரத்தம் சிந்தாமல் இந்தக் கோட்டையைக் கைப்பற்றுங்கள். கழ்வராயன் வீரர்கள் இனி உங்கள் வீரர்களும் கூட. நம் வீரர்கள் எந்த இடத்திலும் கவுரவவின்மையை எதிர் நோக்கக் கூடாது. இது இந்தக் வண்டார் குழியின் ஆக்ஞை. ஏதேனும் சொல்ல நினைத்தால் அம்பை உப்பரிகையின் பெரிய சாளரத்திற்கு எய்து விடுங்கள்.
உங்கள் பேரழகு."
ஓலையைப் படித்த கரிகாலன் மகிழ்ச்சி பொங்க அதில் முத்தமிட்டான். மளமளவென்று ஓலையொன்றை எடுத்து அதில் எழுதியவன்,
"யாரங்கே!" என்றான்.
"சொல்லுங்கள் இளவரசே!"
"வீரனே! அம்பில் ஓலையைப் பிணைத்து உப்பரிகையின் பெரிய சாளரத்திற்கு எய்து விடு."
"ஆகட்டும் இளவரசே!"
அம்பு சரியாக குழலியின் அறையில் 'க்ளிங்' என்ற ஒலியுடன் வந்து வீழ்ந்தது. புன்னகையோடு அம்பை எடுத்த அல்லி ஓலையைப் பிரித்துத் தன் இளவரசியிடம் நீட்டினாள். குழலியின் வதனம் மலர்ந்து போனது.
"பேரழகே!
அப்படியே ஆகட்டும். போரைத் தவிர்க்கத்தான் எவ்வளவோ முயன்றேன், முடியவில்லை. அதற்காக உன்னை விட்டுக் கொடுக்க என்னால் முடியாது. கழ்வராயனுக்கும் அவர் வீரர்களுக்கும் எந்த அவமாரியாதையும் நடக்காது. க்ஷத்திரிய தர்மப்படி கண்ணியமான முறையிலேயே போர் நடக்கும். ஆனால், பாண்டிய வீரர்கள் என்னைத் தாக்கும் பட்சத்தில் அவர்களுக்குச் சரியான பதிலடி கொடுப்பான் இந்த ஆதித்த கரிகாலன். நாளை இரண்டாம் ஜாமத்தில் நந்தவனத்தில் எனக்காகக் காத்திரு. வெற்றிவாகை சூடி வருவான் உன் அன்பன்.
ஆதித்த கரிகாலன்."
ஓலையைப் படித்து முடித்த குழலி அதைத் தனது பவளப் பேழையில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
சரியாக மூன்றாம் ஜாமத்தை நெருங்கும் போது சோழ சைனியத்தின் பக்கமிருந்து போர் முரசு கொட்டும் சத்தம் கேட்டது.
கழ்வராயனின் வீரர்கள் போர்க்கோலத்தில் வாளேந்தி அணிவகுத்து நிற்க, குதிரைப்படை முன்னணியில் திகழ்ந்தது.
கோட்டைச் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த கொப்பரைகளில் நெருப்பு மூட்டப்பட்டது.
வில்லும் வேலும் ஏந்திய வீரர்கள் சுற்று மதிலில் அணிவகுத்து ஆயத்தமாக நின்றார்கள். கழ்வராயனும் அவர் சேனாதிபதியும் படைத்தலைவர்களும் பூரண போர்க்கோலம் தரித்து அனைத்தையும் மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தார்கள்.
இங்கு இத்தனை ஏற்பாடுகளும் நடக்க காட்டுக்குள் இருந்த சோழ வீரர்கள் வெட்டிப் போட்ட நீண்ட மரங்களை ஆயுத வண்டிகளில் பொருத்தி கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
கோட்டையைச் சுற்றி பெரிய அகழி வெட்டப்பட்டு அதில் முதலைகளும் வளர்க்கப் பட்டிருந்ததால் பாலம் அமைப்பதற்கென தனியாக மரங்களை வண்டிகளில் கொண்டு சென்றார்கள்.
கோட்டையை மூன்று புறங்களிலிருந்து தாக்க முடிவு செய்திருந்தான் கரிகாலன். சைனியத்தை நான்காகப் பிரித்தவன் காட்டுக்குள் ஒரு பகுதியை நிறுத்திவிட்டு மீதி மூன்று பகுதியைக் கோட்டையைத் தாக்க ஏற்பாடு பண்ணி இருந்தான். பாண்டிய வீரர்கள் ஒருவேளை பின்னால் தாக்கலாம் என்ற ஐயம் இருந்தது.
உப தளபதிகளோடு இரண்டு பகுதி புறப்பட பெரும்பகுதியோடு கோட்டை வாயிலை நோக்கிப் போனான் சோழ இளவரசன்.
மரங்கள் பொருத்தப்பட்ட ஆயுத வண்டிகள் கோட்டைக் கதவில் வேகங்கொண்டு மோத சற்று நேரத்திற்கெல்லாம் ஆவெனப் பிளந்து கொண்டது கோட்டை வாயில்.
இரு தரப்பிலிருந்தும் வீரர்கள் வேலும் அம்பும் எய்தபடியிருக்க மாண்டவர் உடல்கள் அகழியில் வீழ்ந்து முதலைக்கு இரையாயின.
அந்த அர்த்த ஜாமத்தில் வாள்வீச்சுக்கள் பளீர் பளீரென மின்னல் போல ஜொலிக்க அந்தக் கோர யுத்தத்தைக் காணப் பொறுக்காத அந்த முழு நிலாவும் மேகத்துக்குள் ஒளிந்து கொண்டது.
தலையில்லாத முண்டங்கள் கோரத் தாண்டவம் ஆட அந்த நிலப்பரப்பே ரத்த நிறம் கொண்டது.
கொப்பரைகளிலிருந்து ஊற்றப்பட்ட சூடான எண்ணெயில் வெந்த உடல்களின் அலறல் அந்த இடத்தையே அதிர வைத்தது.
சோழ இளவரசன் எத்தனை தார்மீகமாகப் போரை நடத்த முடியுமோ அத்தனை தூரம் தன் வீரர்களை வழி நடத்திச் சென்றான். ஒரு எல்லைக்கு மேல் கழ்வராயன் வீரர்களின் கை நலிவடையத் தொடங்கியது.
அறைத் தாழ்வாரத்திலிருந்து அந்த யுத்தத்தை பார்வையிட்ட படி இருந்தாள் வண்டார் குழலி. இளவரசி என்பதாலும் தன் அன்பிற்குரியவர் வெற்றி வாகை சூடவேண்டும் என்ற அவாவினாலும் அன்று அதிக ஆபரணங்களை அணிந்திருந்தாள் இளவரசி.
தனது நீண்ட ஜடையில் அவள் வைத்திருந்த தாழம் பூக்களின் வாசம் அந்த அறைக்கு அகிலின் தேவையை நிவர்த்தி செய்திருந்தன.
சூரிய உதயத்தின் போது கழ்வராயன் எல்லையே சாந்த சொரூபியாக மாறி இருந்தது. காட்டுக்குள் கேட்ட சலசலப்புக்களும் அடங்கி விட கோட்டை முழுவதும் சோழ வீரர்களின் அணிவகுப்பே காட்சியளித்தது. குழலி தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஆனால், பல்லவராயரை அங்கு அனுப்பி இருந்தான் கரிகாலன்.
ரத்தம் தோய்ந்த தன் உடை வாளை உறைக்குள் போட்டவர் கம்பீரமாகக் குழலியின் அறைக்குள் நுழைந்தார்.
"மன்னிக்க வேண்டும் இளவரசி! அந்தப் புரத்திற்குள் நுழைந்து உங்களுக்குக் களங்கம் கற்பிப்பது எனது நோக்கமன்று. இளவரசரின் ஆணையின் பேரில் நிலவரத்தைச் சொல்லவே வந்திருக்கிறேன்."
"பாதகமில்லை... என் தந்தை..."
"கவலைப்படவேண்டாம். தங்கள் தந்தைக்கு எந்தக் குறைவும் ஏற்படவில்லை. ஏற்படவும் இளவரசர் அனுமதிக்கவில்லை. சொல்லப் போனால் அவர்கள் இருவரும் இப்போது ஒன்றாக சற்றுத் தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்."
"அப்படியா?"
"ஆமாம் இளவரசி. தங்கள் சேனாதிபதி, படைத்தலைவர்கள் எல்லோரும் மிகவும் மரியாதையான முறையில் இளவரசால் கவனிக்கப்பட்டார்கள். மீதமுள்ள வீரர்கள் இப்போதைக்குக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். தங்கள் திருமணம் முடிந்ததும் கழ்வராயரின் சிற்றரசு மீண்டும் அவருக்கே பூரண சுதந்திரத்தோடு வழங்கப்படும். பாண்டியனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய அவசியம் இனி ஒரு போதும் இல்லாதபடி சோழப் பேரரசு அதைக் காத்து நிற்கும். இதுவே இளவரசரின் சேதி."
"இளவரசரை இப்போது..." மேலே தொடர முடியாமல் நாணம் தடுக்கத் தலை குனிந்து கொண்டாள் குழலி. அல்லியும் பல்லவராயரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.
"நந்தவனத்தில் சந்திப்பதாகச் சொன்னார்."
"சேனாதிபதி அவர்களே!" வெளியேறப்போன பல்லவராயரைத் தடுத்தது குழலியின் குரல். திரும்பிப் பார்த்தவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள் இளவரசி.
"தீர்க்க சுமங்கலியாக நீடூழி வாழ வேண்டும் மகளே!" ரத்தம் தோய்ந்த கையால் ஆசீர்வதித்தார் பல்லவராயர்.