தாய்மை தந்த பூங்குயில்கள்
தெய்வம் தந்த தேவதைகள்
தந்தைக்கு தாயாய் சில நேரம்
தாய்க்கு மாமியாய் பல நேரம்
சாய மடி கேட்டு சில நேரம்
சாயத் தோள் தந்து பல நேரம்
பூவாய் வாசம் வீசி சில நேரம்
புயலாய் பாசம் காட்டி பல நேரம்
இசை தரும் ஒலியாய் சில நேரம்
இருள் அகற்றும் ஒளியாய் பல நேரம்
இருக்கும் நேரம் வீட்டில் விழாக்காலம்
இல்லா நேரம் கண்ணில் கார்காலம்
மனம் மயக்க வந்த ஸ்வரங்கள்
இவர்கள்
மகள் என்ற பெயரில் வரங்கள்