இந்த கவிதை உங்கள் எல்லோருக்கும் சமர்ப்பணம் தோழிகளே....
கண்களால் பார்க்காமலே இவள்
எனது தோழி என்று சொல்கிறாளே
இது என்ன பாசமோ..?!
குரலின் ஒலி கேட்காமல்
புன்னகை பூக்க செய்கிறாளே
இது எந்த வகை நேசமோ..?!
திறமை வெளிபடுத்த வழி தேடிய
எனக்கு வழி துணையாக வருகிறாளே
இவளின் தோழமை கூட
கடவுள் கொடுத்த பரிசு தானோ..?!
நிறம் அறியாமல் நட்பு
மலரும் என்று தெரியும்...
நேரில் காணாமலே நட்பு மலர்கிறதே
இது என்ன வகை பந்தமோ..?
புரியவில்லையா மனமே..?
இதுதான் தோழமை...
தோழமை கொள்ள ஆண், பெண்
என்ற பேதமில்லை..
சாதி மதம் தடையில்லை
நேரில் காண தேவையில்லை
ஆனாலும் நட்பு மலருமே
இரண்டு மனங்கள் ஒன்றிணைந்தால்...!
சந்தியா ஸ்ரீ
கண்களால் பார்க்காமலே இவள்
எனது தோழி என்று சொல்கிறாளே
இது என்ன பாசமோ..?!
குரலின் ஒலி கேட்காமல்
புன்னகை பூக்க செய்கிறாளே
இது எந்த வகை நேசமோ..?!
திறமை வெளிபடுத்த வழி தேடிய
எனக்கு வழி துணையாக வருகிறாளே
இவளின் தோழமை கூட
கடவுள் கொடுத்த பரிசு தானோ..?!
நிறம் அறியாமல் நட்பு
மலரும் என்று தெரியும்...
நேரில் காணாமலே நட்பு மலர்கிறதே
இது என்ன வகை பந்தமோ..?
புரியவில்லையா மனமே..?
இதுதான் தோழமை...
தோழமை கொள்ள ஆண், பெண்
என்ற பேதமில்லை..
சாதி மதம் தடையில்லை
நேரில் காண தேவையில்லை
ஆனாலும் நட்பு மலருமே
இரண்டு மனங்கள் ஒன்றிணைந்தால்...!
சந்தியா ஸ்ரீ