துலாபாரம்....
தலைப்பை
படித்தவுடன் நினைவுக்கு வருவது இந்து சமயத்தில் கோவில்களில் கடைபிடிக்கப்படும் சடங்குமுறை தான்....இதை பற்றி விக்கிபீடியா வில் தேடியபோது கிடைத்த சுவாரசியமான தகவல்கள்...
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
என்ற மன்னன் திருவரங்கத்தில்இருக்கும் அரங்கநாதனுக்கு கொடுத்த துலாபாரத்தினை பல்வேறு நூல்கள் உரைக்கின்றன.
திருவரங்க ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் இருபத்து நான்கு துலாபுருச மண்டபங்கள் அமைத்து, அவற்றில் துலாபாரம் அமைத்து பொன்னையும், நவமணிகளையும
கொடுத்தார். அத்துடன் பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி, தானும் போர்க்கோலம் பூண்டு அதில் ஏறி படகு எந்த அளவிற்கு நீரில் அமிழ்கிறதோ அந்த அளவிற்கு மற்றொரு படகில் தங்கம், நவரத்தினம்.. ஆபரணம் போன்ற பொற்குவியல்களை நிறப்பி சமமான அளவுற்ற பொக்கிசங்களை அரங்கனுக்கு கொடுத்தார். இவ்வாறு செய்தமையை ஆர்க்கிமிடீஸை கண்டறிந்த பௌதிக தத்துவத்தினை தமிழன் பல்நூறு ஆண்டுகளுக்கு முன்பே
செய்துள்ளதாக பெருமை கொள்கின்றனர்.
இந்த வரலாறு கல்வெட்டுப் பாடலொன்றில் பதிவாகியுள்ளது.
‘பாயல் கொள்ளும் பரமயோகத்து ஒரு பெருங்கடவுளும்
இனிதுறையும் இருபெருங் காவிரி இடை நிலத்திலங்கும
்திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்புப் பன்முறை அணிதுலாபாரமேறிப் பொன்மலையென்னப் பொலிந்து தோன்றவும்’
###பகுத்தறிவு துலாபாரம்..
தமிழகத்தில் இறை மறுப்பாளராக வாழந்த பெரியாருக்கு, அவர் புகழ்பெற்ற பிறகு எண்ணற்ற தொண்டர்கள், துலாபாரமாக பல பொருட்களைக் கொடுத்தனர். மகிழுந்து(கார்) டயர்கள்,
கண்ணாடிக் குவளைகள், பெட்ரோல், காப்பிக் கொட்டை, படுக்கை விரிப்புகள், மிளகாய் போன்ற பொருட்களை பெரியாரின் எடைக்கு எடைக்காக கொடுத்தனர். பல கோயில்களில் துலாபாரத்திற்காக மறுக்கப்படும் உப்பும் ஒரு முறை பெரியாருக்காக கொடுக்கப்பட்டது.