கார்த்திகை தீபத்தின் அன்று உங்களை எல்லாம் காண புது கதையின் முதல் அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன்.. இதுவரை எனக்கு கொடுத்த அதே ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறேன் பிரண்ட்ஸ்.. உங்களின் லைக்ஸ், கமெண்ட்ஸ், அண்ட் ஹார்ட்ஸ் எல்லாவற்றையும் போடுங்கப்பா.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
அன்புடன்
சந்தியா ஸ்ரீ
அத்தியாயம் – 1
அத்தாணி பவானி ஆற்றங்கரையில் அமைத்திருக்கும் அழகிய எழில் வளம்கொண்ட சின்ன கிராமம். பச்சை பசையேல் என்று காணப்படும் வயல்வெளிகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்க பவானி ஆறுதான் ஆதாரம். பார்க்கும் இடங்கள் எங்கிலும் கரும்பு தோட்டமும், மஞ்சகிழங்கு காடும், ஆற்றங்கரையில் ஓரம் காலுடன் நிற்கும் கொக்கும், நாரையும் அந்த ஊரின் பசுமையைச் சொல்லாமல் சொல்லும் எழில் வனப்பு மிகுந்த கிராமம்.
காலைநேரம் கிழக்கே சூரியன் உதிக்க அந்த சூரியனின் ஒளிபட்டு பளபளக்கும் பச்சை நிறத்தில் புல்வெளிகள்..! அதுவரை பனியோடு உறவாடிய வண்ணம் இருந்த வயல்வெளிகள் பனிக்கு விடைகொடுத்து அனுப்பியது.. பார்க்கும் எந்த இடமும் பச்சை வயலும், அதற்கு காவலுக்கு நின்றது போலவே போலவே வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களும், கரும்புத்தோட்டமும், மஞ்சள்கிழங்கு காடும் என்று கண்ணுக்கு எட்டும் தூரம் எல்லாம் பசுமையின் வனப்பு நிறைந்து நின்றது..
“அத்தை.. அத்தை..” என்று அழைத்தபடியே மாடியில் இருந்து வேகமாக இறங்கினான் ஏழு வயதை உடைய மகிழன்.. அவனின் வேகம் கண்டவர், “டேய் மகிழ் மெதுவா போடா.. கீழே எங்கையாவது விழுந்துவிட போற..” என்று அவனை பின் தொடர்ந்த வண்ணம் கூறினார்.. அந்த வீட்டின் மருமகள் ஜெயசக்தி மகிழனின் அம்மா..
அவரின் குரலை எல்லாம் காதில் வாங்காத மகிழன் படிகளில் இருந்து வேகமாக இறங்கி நேராக சமையலறையின் உள்ளே சென்று, “அத்தை..” என்று அழைத்ததும் அவனை திரும்பிப் பார்த்தார் அந்த வீட்டில் வேலை செய்யும் பொன்னுதாய்..
அவனின் முகம் பார்த்ததும், “என்ன செல்லம் இங்கே வரைக்கும் வந்திருக்க..” என்று கேட்டவர் அவனின் முகத்தை பாசத்தோடு வருடினார்.. அவரின் முகத்தை தலையைச் சாய்த்து பார்த்தவன், “அத்தை அம்மா சொன்னாங்க.. உங்க வயிற்றில் பாப்பா இருக்குதாம்.. உண்மையா அத்தை..? அவள நான் பார்க்க முடியுமா..?” என்று ஆர்வமாகக் கேட்டான்..
அவர் கருவுற்ற நாளில் இருந்து அவன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வதே அவரின் வேலையாகி போனது.. தினமும் அவரிடம் அவன் எப்பொழுதும் கேட்கும் கேள்விதான்.. அவனின் கேள்விக்கு எல்லாம் மற்றவர்களால் பதில் சொல்லவே முடியாது.. சின்னப்பிள்ளைகளிடம் ஒரு விஷயம் சொல்லிவிட்டால் அதன்பிறகு அவர்களை சமாளிப்பது பெரும்பாடுதான்.. இப்பொழுது அப்படிதான் அவனிடம் மாட்டிகொண்டார் பொன்னுத்தாய்..
அவனின் முகம் பார்த்து சிரித்த பொன்னுத்தாய், “இங்க உள்ள இருக்கிற.. நீ இப்போ அவளை தொட்டுதானே பார்க்க முடியும்..” என்று அவரின் பெரியவயிற்றை காட்டியவரைப் பார்த்தவண்ணம் சமையலறைக்கு வந்த ஜெயசக்திக்கு சிரிப்புதான் வந்தது..
பொன்னுதாயின் வயிற்றில் கைவைத்து மெல்ல வருடியவனின் ஆர்வத்தைப் பார்த்த ஜெயா, “இவனிடம் ஒரு விஷயத்த சொல்லிட்டு நான் படும்பாடு இருக்குதே..” என்று பெருமூச்சு விட்டவரைப் பார்த்து சிரித்தார் பொன்னுத்தாய்..
அவரின் முகத்தில் புன்னகையைப் பார்த்த ஜெயசக்தி, “என்ன பொன்னுத்தாயி சிரிக்கிற..?” என்று கேட்டதும், “ஒன்றும் இல்லைங்க..” என்று கூறியவர் மகிழனின் முகம் பார்த்தார்..
அவனோ அவரின் பெரிய வயிற்றைத் தொட்டுப்பார்த்து, “அத்தை இவ வளர்ந்துட்டே இருக்கா.. அம்மா சொல்லிச்சு இவ வானத்தில் இருக்கும் நிலா போல இருப்பா என்று.. பாப்பாவுக்கு நாம துளிர்நிலா என்று பெரு வைக்கலாமா..?” என்று நிமிடத்தில் ஆயிரம் கேள்வி கேட்டவனுக்கு அவர் மட்டும் எப்படி பதில் சொல்ல முடியும்..?
“அதுக்கு என்னடா பேராண்டி வெச்சிட்டாப் போச்சு.. உன்னோட ஆசைக்கு யாராவது தடை சொல்ல முடியுமா..?” என்று கேட்டபடியே தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார் பானுமதியம்மாள்.. அந்த வீட்டின் பெரிய பண்ணையார் சிவராமனின் மனைவி..
அவரைப் பார்த்ததும் மருமகள் எழுந்து நிற்க, “அட என்ன ஜெயா நீ உட்காரும்மா..” என்று மருமகளைப் பார்த்து கூறியவர் பேரனின் அருகில் சென்று, “என்ன மகிழா இப்போ உனக்கு சந்தோஷமா..?” என்று கேட்டதும் அவனின் முகத்தில் பிரகாசமாக அவரின் கன்னத்தில் முத்தமிட்டான்..
அவனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைப் பார்த்த ஜெயசக்தி, “அத்தை நீங்க மட்டும்தான் இவனை சூப்பரா சமாளிக்கிறீங்க..” என்று சொல்லவும் பேரனின் முகத்தை வஞ்சனை இல்லாமல் வருடினார்.. வாசலில் யாரோ வரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப்பார்த்தார்..
வீட்டின் உள்ளே வேகமாக நுழைந்த சுகுமாறன் பார்த்த பானுமா, “என்ன ராஜா இவ்வளவு வேகமாக வர..” என்று கேட்டதும் அவரின் கேள்விக்கு பதில் சொல்லாதவர், “அப்பா எங்க இருக்கீங்க..?” என்று கேட்டதும் அறையைவிட்டு வெளியே வந்தார் சிவராமன்..
அவரைப் பார்த்தவன், “அப்பா நான் சென்னையில் தொடங்கிய கம்பெனி இப்போ நல்ல லாபம் வருதுப்பா.. நான் இங்கேயே இருந்தால் அதோட வளர்ச்சியை பெருசு பண்ண முடியாது.. அதனால் நான் அங்கேயே போறேன்..” என்று சொல்ல அவனின் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்தனர் பெரியவர்கள்..
சுகுமாறன் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட ஒரே காரணத்திற்காக அவன் விரும்பிய படிப்பை எல்லாம் படிக்க வைத்தவர்கள் அவனை போலவே நன்றாக படித்த ஜெயசக்தியை அவருக்கு திருமணமும் செய்து வைத்தனர்.. திருமணம் முடிந்தது சென்னை கிளம்பிச் சென்றவர் அடுத்து ஊருக்கு வந்தது ஐந்து வருடம் கழித்துதான்..
அவர் வரும் பொழுதே ஐந்து வயது மகிழனுடன் வந்து இறங்கியதைப் பார்த்த பெரியவர்களின் மனம் மகிழ்ந்து போக அவன் ஒருவனே சிவராமன் – பானுமாவிற்கு உலகம் என்று ஆகிபோனான்.. அவனோட ஓவ்வொரு விருப்பமும் தன்னுடைய விருப்பம் என்றே வாழ்ந்தார்கள் அந்த வயதான தம்பதிகள்.. இங்கிருந்தபடியே சென்னையில் தொடங்கிய தொழிலை அடிக்கடி சென்று கவனித்து வந்தார்..
ஜெயசக்திக்கு அத்தை – மாமாவின் பாசமே பெரிதாக தெரிய அவரிகளிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு விலகி நின்று ரசிப்பதோடு சரி.. அவனும் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள நாட்கள் விரைந்து சென்றது.. இரண்டு நொடி போல இரண்டு வருடம் ஓடி மறந்தது.. இப்பொழுது ஏழு வயதில் பேரனுடன் ஒரே குடும்பமாக சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் அவர் சொன்னது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது..
அவர் சொன்னது கேட்ட பானுமா, “என்ன ராஜா சொல்ற..? நீ எனக்கு ஒரே பையன்.. உன்னையும், இதோ இந்த பேரனையும் பிரிந்து நாங்க மட்டும் இங்கே எப்படிடா இருக்க முடியும்..?” என்று கேட்டார்.. ஜெயசக்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.. சிவராமன் யோசனையோடு நின்றிருந்தார்..
சுகுமாறனோ, “அம்மா அப்போ நீங்களும் எங்களோடு கிளம்பி வந்திருங்க..” என்று கொஞ்சமும் யோசிக்காமல் வேகமாக சொல்ல, “இல்ல பானு அவன் போகட்டும் விடு.. அவனுக்கு பிடித்த படிப்பு என்று படிக்க வெச்சிட்டு இப்போ அவனை தடை சொல்வது தவறு அவன் போகட்டும் விடு..” என்று கூறியவர், “ராஜா மகிழை மட்டும் இங்கே விட்டுவிட்டு போப்பா..” என்று கேட்டார் சிவராமன்..
அவரின் முகத்தைப் பார்த்த சுகுமாறன், “இல்லப்பா அவனை இங்க விட்டுவிட்டு நாங்க மட்டும் எப்படிப்பா.. நான் வேண்டுமென்றால் வருடத்தில் ஒரு மாதம் மட்டும் இங்க வந்து தங்கிவிட்டு போகிறேனே..” என்று கூறினார்.. அதற்குமேல் பெரியவர்களால் என்ன பேச முடியும்.. ஜெயாவும் எதுவும் பேசாமல் இருக்க அவரிடம் கோபத்தை காட்ட மனம் அமைதியாக நின்றனர் பெரியவர்கள்..
தன்னுடைய மருமகளின் அருகில் வந்த பானுமா, “ஜெயா அங்க போனதும் அத்தையை மறக்காமல் இவனை கொண்டு வந்து என்னோட கண்ணில் காட்டனும்..” என்று கூறியவர் பேரனை கட்டியணைத்து கொண்டார்.. அங்கே நடக்கும் எல்லாவற்றையும் ஒரு பார்வையாளராக நின்று பார்த்தார் பொன்னுத்தாய்..
இரண்டு நாளுக்குள் சுகுமாறன், ஜெயசக்தி, மகிழன் மூவரும் சென்னை செல்ல தயாராகிவிட பெரியவர்கள் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தனர்..சுகுமாறனின் மீது உயிரையே வைத்து வளர்த்தியவர்களால் அவனின் ஆசைக்கு மறுப்பு சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துவிட்டனர்..
அவர்கள் ஊருக்கு செல்லும் நாளும் வந்துவிட சுகுமாறனை அனுப்ப மனசே இல்லாமல் வழியனுப்ப வாசல்வரை வந்தவர்களைப் பார்த்த மகிழனோ, “பாட்டி நீங்க கவலைபடாம இருங்க.. நான் கொஞ்ச நாளில் வந்துவிடுவேன்..” என்று புன்னகை மாறாமல் கூறினான்..
அவனின் முகத்தைப் பார்த்தவர், “மகிழா பாட்டி தாத்தாவைப் பார்க்க வரணும் சரியா..?” என்று கூறிய பானுமா அவனின் நெற்றியில் முத்தமிட தான் அழுதால் குழந்தைகள் மனம் கஷ்டப்படும் என்று கண்ணீரை கட்டுபடுத்திய வண்ணம் நின்றிருந்தார்.. சிவராமன் மனம் கலங்கினாலும் அதை வெளியே கட்டாமல் அமைதியாக இருந்தார்..
அன்புடன்
சந்தியா ஸ்ரீ
துளிர்விடும் நேசமடி!
அத்தியாயம் – 1
நீ கருவில் இருக்கும் பொழுதே
துளிர்விட தொடங்கிவிட்டதடி
உன்மீதான எனது நேசம்...!
இந்த நேசத்தை நீ அறிவாயோ
எனது துளிர்நிலவே...!
அத்தாணி பவானி ஆற்றங்கரையில் அமைத்திருக்கும் அழகிய எழில் வளம்கொண்ட சின்ன கிராமம். பச்சை பசையேல் என்று காணப்படும் வயல்வெளிகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்க பவானி ஆறுதான் ஆதாரம். பார்க்கும் இடங்கள் எங்கிலும் கரும்பு தோட்டமும், மஞ்சகிழங்கு காடும், ஆற்றங்கரையில் ஓரம் காலுடன் நிற்கும் கொக்கும், நாரையும் அந்த ஊரின் பசுமையைச் சொல்லாமல் சொல்லும் எழில் வனப்பு மிகுந்த கிராமம்.
காலைநேரம் கிழக்கே சூரியன் உதிக்க அந்த சூரியனின் ஒளிபட்டு பளபளக்கும் பச்சை நிறத்தில் புல்வெளிகள்..! அதுவரை பனியோடு உறவாடிய வண்ணம் இருந்த வயல்வெளிகள் பனிக்கு விடைகொடுத்து அனுப்பியது.. பார்க்கும் எந்த இடமும் பச்சை வயலும், அதற்கு காவலுக்கு நின்றது போலவே போலவே வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களும், கரும்புத்தோட்டமும், மஞ்சள்கிழங்கு காடும் என்று கண்ணுக்கு எட்டும் தூரம் எல்லாம் பசுமையின் வனப்பு நிறைந்து நின்றது..
“அத்தை.. அத்தை..” என்று அழைத்தபடியே மாடியில் இருந்து வேகமாக இறங்கினான் ஏழு வயதை உடைய மகிழன்.. அவனின் வேகம் கண்டவர், “டேய் மகிழ் மெதுவா போடா.. கீழே எங்கையாவது விழுந்துவிட போற..” என்று அவனை பின் தொடர்ந்த வண்ணம் கூறினார்.. அந்த வீட்டின் மருமகள் ஜெயசக்தி மகிழனின் அம்மா..
அவரின் குரலை எல்லாம் காதில் வாங்காத மகிழன் படிகளில் இருந்து வேகமாக இறங்கி நேராக சமையலறையின் உள்ளே சென்று, “அத்தை..” என்று அழைத்ததும் அவனை திரும்பிப் பார்த்தார் அந்த வீட்டில் வேலை செய்யும் பொன்னுதாய்..
அவனின் முகம் பார்த்ததும், “என்ன செல்லம் இங்கே வரைக்கும் வந்திருக்க..” என்று கேட்டவர் அவனின் முகத்தை பாசத்தோடு வருடினார்.. அவரின் முகத்தை தலையைச் சாய்த்து பார்த்தவன், “அத்தை அம்மா சொன்னாங்க.. உங்க வயிற்றில் பாப்பா இருக்குதாம்.. உண்மையா அத்தை..? அவள நான் பார்க்க முடியுமா..?” என்று ஆர்வமாகக் கேட்டான்..
அவர் கருவுற்ற நாளில் இருந்து அவன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வதே அவரின் வேலையாகி போனது.. தினமும் அவரிடம் அவன் எப்பொழுதும் கேட்கும் கேள்விதான்.. அவனின் கேள்விக்கு எல்லாம் மற்றவர்களால் பதில் சொல்லவே முடியாது.. சின்னப்பிள்ளைகளிடம் ஒரு விஷயம் சொல்லிவிட்டால் அதன்பிறகு அவர்களை சமாளிப்பது பெரும்பாடுதான்.. இப்பொழுது அப்படிதான் அவனிடம் மாட்டிகொண்டார் பொன்னுத்தாய்..
அவனின் முகம் பார்த்து சிரித்த பொன்னுத்தாய், “இங்க உள்ள இருக்கிற.. நீ இப்போ அவளை தொட்டுதானே பார்க்க முடியும்..” என்று அவரின் பெரியவயிற்றை காட்டியவரைப் பார்த்தவண்ணம் சமையலறைக்கு வந்த ஜெயசக்திக்கு சிரிப்புதான் வந்தது..
பொன்னுதாயின் வயிற்றில் கைவைத்து மெல்ல வருடியவனின் ஆர்வத்தைப் பார்த்த ஜெயா, “இவனிடம் ஒரு விஷயத்த சொல்லிட்டு நான் படும்பாடு இருக்குதே..” என்று பெருமூச்சு விட்டவரைப் பார்த்து சிரித்தார் பொன்னுத்தாய்..
அவரின் முகத்தில் புன்னகையைப் பார்த்த ஜெயசக்தி, “என்ன பொன்னுத்தாயி சிரிக்கிற..?” என்று கேட்டதும், “ஒன்றும் இல்லைங்க..” என்று கூறியவர் மகிழனின் முகம் பார்த்தார்..
அவனோ அவரின் பெரிய வயிற்றைத் தொட்டுப்பார்த்து, “அத்தை இவ வளர்ந்துட்டே இருக்கா.. அம்மா சொல்லிச்சு இவ வானத்தில் இருக்கும் நிலா போல இருப்பா என்று.. பாப்பாவுக்கு நாம துளிர்நிலா என்று பெரு வைக்கலாமா..?” என்று நிமிடத்தில் ஆயிரம் கேள்வி கேட்டவனுக்கு அவர் மட்டும் எப்படி பதில் சொல்ல முடியும்..?
“அதுக்கு என்னடா பேராண்டி வெச்சிட்டாப் போச்சு.. உன்னோட ஆசைக்கு யாராவது தடை சொல்ல முடியுமா..?” என்று கேட்டபடியே தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார் பானுமதியம்மாள்.. அந்த வீட்டின் பெரிய பண்ணையார் சிவராமனின் மனைவி..
அவரைப் பார்த்ததும் மருமகள் எழுந்து நிற்க, “அட என்ன ஜெயா நீ உட்காரும்மா..” என்று மருமகளைப் பார்த்து கூறியவர் பேரனின் அருகில் சென்று, “என்ன மகிழா இப்போ உனக்கு சந்தோஷமா..?” என்று கேட்டதும் அவனின் முகத்தில் பிரகாசமாக அவரின் கன்னத்தில் முத்தமிட்டான்..
அவனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைப் பார்த்த ஜெயசக்தி, “அத்தை நீங்க மட்டும்தான் இவனை சூப்பரா சமாளிக்கிறீங்க..” என்று சொல்லவும் பேரனின் முகத்தை வஞ்சனை இல்லாமல் வருடினார்.. வாசலில் யாரோ வரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப்பார்த்தார்..
வீட்டின் உள்ளே வேகமாக நுழைந்த சுகுமாறன் பார்த்த பானுமா, “என்ன ராஜா இவ்வளவு வேகமாக வர..” என்று கேட்டதும் அவரின் கேள்விக்கு பதில் சொல்லாதவர், “அப்பா எங்க இருக்கீங்க..?” என்று கேட்டதும் அறையைவிட்டு வெளியே வந்தார் சிவராமன்..
அவரைப் பார்த்தவன், “அப்பா நான் சென்னையில் தொடங்கிய கம்பெனி இப்போ நல்ல லாபம் வருதுப்பா.. நான் இங்கேயே இருந்தால் அதோட வளர்ச்சியை பெருசு பண்ண முடியாது.. அதனால் நான் அங்கேயே போறேன்..” என்று சொல்ல அவனின் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்தனர் பெரியவர்கள்..
சுகுமாறன் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட ஒரே காரணத்திற்காக அவன் விரும்பிய படிப்பை எல்லாம் படிக்க வைத்தவர்கள் அவனை போலவே நன்றாக படித்த ஜெயசக்தியை அவருக்கு திருமணமும் செய்து வைத்தனர்.. திருமணம் முடிந்தது சென்னை கிளம்பிச் சென்றவர் அடுத்து ஊருக்கு வந்தது ஐந்து வருடம் கழித்துதான்..
அவர் வரும் பொழுதே ஐந்து வயது மகிழனுடன் வந்து இறங்கியதைப் பார்த்த பெரியவர்களின் மனம் மகிழ்ந்து போக அவன் ஒருவனே சிவராமன் – பானுமாவிற்கு உலகம் என்று ஆகிபோனான்.. அவனோட ஓவ்வொரு விருப்பமும் தன்னுடைய விருப்பம் என்றே வாழ்ந்தார்கள் அந்த வயதான தம்பதிகள்.. இங்கிருந்தபடியே சென்னையில் தொடங்கிய தொழிலை அடிக்கடி சென்று கவனித்து வந்தார்..
ஜெயசக்திக்கு அத்தை – மாமாவின் பாசமே பெரிதாக தெரிய அவரிகளிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு விலகி நின்று ரசிப்பதோடு சரி.. அவனும் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள நாட்கள் விரைந்து சென்றது.. இரண்டு நொடி போல இரண்டு வருடம் ஓடி மறந்தது.. இப்பொழுது ஏழு வயதில் பேரனுடன் ஒரே குடும்பமாக சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் அவர் சொன்னது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது..
அவர் சொன்னது கேட்ட பானுமா, “என்ன ராஜா சொல்ற..? நீ எனக்கு ஒரே பையன்.. உன்னையும், இதோ இந்த பேரனையும் பிரிந்து நாங்க மட்டும் இங்கே எப்படிடா இருக்க முடியும்..?” என்று கேட்டார்.. ஜெயசக்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.. சிவராமன் யோசனையோடு நின்றிருந்தார்..
சுகுமாறனோ, “அம்மா அப்போ நீங்களும் எங்களோடு கிளம்பி வந்திருங்க..” என்று கொஞ்சமும் யோசிக்காமல் வேகமாக சொல்ல, “இல்ல பானு அவன் போகட்டும் விடு.. அவனுக்கு பிடித்த படிப்பு என்று படிக்க வெச்சிட்டு இப்போ அவனை தடை சொல்வது தவறு அவன் போகட்டும் விடு..” என்று கூறியவர், “ராஜா மகிழை மட்டும் இங்கே விட்டுவிட்டு போப்பா..” என்று கேட்டார் சிவராமன்..
அவரின் முகத்தைப் பார்த்த சுகுமாறன், “இல்லப்பா அவனை இங்க விட்டுவிட்டு நாங்க மட்டும் எப்படிப்பா.. நான் வேண்டுமென்றால் வருடத்தில் ஒரு மாதம் மட்டும் இங்க வந்து தங்கிவிட்டு போகிறேனே..” என்று கூறினார்.. அதற்குமேல் பெரியவர்களால் என்ன பேச முடியும்.. ஜெயாவும் எதுவும் பேசாமல் இருக்க அவரிடம் கோபத்தை காட்ட மனம் அமைதியாக நின்றனர் பெரியவர்கள்..
தன்னுடைய மருமகளின் அருகில் வந்த பானுமா, “ஜெயா அங்க போனதும் அத்தையை மறக்காமல் இவனை கொண்டு வந்து என்னோட கண்ணில் காட்டனும்..” என்று கூறியவர் பேரனை கட்டியணைத்து கொண்டார்.. அங்கே நடக்கும் எல்லாவற்றையும் ஒரு பார்வையாளராக நின்று பார்த்தார் பொன்னுத்தாய்..
இரண்டு நாளுக்குள் சுகுமாறன், ஜெயசக்தி, மகிழன் மூவரும் சென்னை செல்ல தயாராகிவிட பெரியவர்கள் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தனர்..சுகுமாறனின் மீது உயிரையே வைத்து வளர்த்தியவர்களால் அவனின் ஆசைக்கு மறுப்பு சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துவிட்டனர்..
அவர்கள் ஊருக்கு செல்லும் நாளும் வந்துவிட சுகுமாறனை அனுப்ப மனசே இல்லாமல் வழியனுப்ப வாசல்வரை வந்தவர்களைப் பார்த்த மகிழனோ, “பாட்டி நீங்க கவலைபடாம இருங்க.. நான் கொஞ்ச நாளில் வந்துவிடுவேன்..” என்று புன்னகை மாறாமல் கூறினான்..
அவனின் முகத்தைப் பார்த்தவர், “மகிழா பாட்டி தாத்தாவைப் பார்க்க வரணும் சரியா..?” என்று கூறிய பானுமா அவனின் நெற்றியில் முத்தமிட தான் அழுதால் குழந்தைகள் மனம் கஷ்டப்படும் என்று கண்ணீரை கட்டுபடுத்திய வண்ணம் நின்றிருந்தார்.. சிவராமன் மனம் கலங்கினாலும் அதை வெளியே கட்டாமல் அமைதியாக இருந்தார்..
Last edited: