அத்தியாயம் – 13
வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த பானுமாவின் மனம் மருமகள் சொன்ன விஷயத்திலேயே இருந்தது.. காலையில் எழுந்ததும் மருமகளுக்கு அழைத்த பானுமா, “ஜெயா எப்படிம்மா இருக்கிற..?” என்று கேட்டார்.. அவரின் பாசம் அவளின் மனதை நெகிழ வைக்க, “ரொம்ப நல்ல இருக்கேன் அத்தை.. மாமா எப்படி இருக்காங்க..?” என்று கேட்டதும், “அவரும் நல்ல இருக்காரு கண்ணு.. ஆமா சின்னவன் எங்க ஜெயா..?” என்று மிதிலனை விசாரித்தார்..
அதற்குள் அம்மாவிடம் இருந்து போனை வாங்கியவன், “பாட்டிம்மா எப்படி இருக்கீங்க..?” என்று பாசத்தோடு விசாரிக்க, “எனக்கு என்ன நான் நல்லாவே இருக்கேன்.. அண்ணனும், தம்பியும் தான் ஊருப்பக்கம் வரவே மாட்டேன்னு இருக்கீங்களே..” என்று அவரும் வருத்தமாக கூறினார்.. அவரின் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்த மிதிலன், “பாட்டிமா இதுக்கு எல்லாம் வருத்தப்பட்ட.. அப்புறம் எப்படி உடம்பு நல்ல இருக்கும்..?” என்று கேட்டவன், “பாட்டி நானும் வெளிநாட்டுக்கு படிக்க போறேன்..” என்று சொன்னதும் பானுமாவின் முகம் மாறிவிட்டது..
“என்ன ராசா சொல்ற நீ..? உன்னோட அண்ணனே இன்னும் இங்க வராமல் வெளிநாடே கெதின்னு இருக்கான்.. இதில நீயும் அங்க போனா என்ன ஆகிறது..?” என்று கேட்டவரின் கண்கள் இரண்டும் கலங்கிவ அவரின் குரலில் வருத்தம் வெளிப்படையாக தெரிவதை உணர்ந்த ஜெயா மகனை முறைத்தார்.. அவனோ, “பாட்டிம்மா இதுக்கு வருத்தப்படக்கூடாது..” என்று மெல்லிய குரலில் கூறினான்
“நான் அங்கே போனதும் அண்ணனை பார்சல் பண்ணி அனுப்பி விடுகிறேன்..” என்று சிரித்துக்கொண்டே கூறினான் மிதிலன்.. அவனின் சிரிப்பு சத்தம் கேட்டதும் பானுமாவின் துயரம் எல்லாம் மாறிவிட, “மகிழனை அனுப்பு வைப்பா.. பாட்டி அவன் மேல சரியான கோபத்தில இருக்கிறேன்னு சொல்லு..” என்று பேரனிடம் பேசிய மாமியாரை நினைத்த ஜெயாவின் மனம் தான் வலித்தது..
அவரோ, “இந்த மாமா பண்ற வேலையல.. இன்னும் எத்தனை பொய் சொல்ல வேண்டி இருக்கு.. இப்போவே கணக்குப்படி ஆயிரத்தி ஐநூறு பொய் சொல்லியாச்சு..” என்று முணுமுணுக்க, “அம்மா யாரிடம் தனியாக பேசறீங்க..?” என்று கேட்ட மிதிலனின் குறும்பு முகம் கண்ட ஜெயா, “மகனே உனக்கு இன்னைக்கு நேரம் சரியில்லடா..” என்று பூரி கட்டையை கையில் வைத்துக்கொண்டு சொன்ன அம்மாவின் முகத்தைப் பார்த்த மிதிலன், “ஹி.. ஹி..” என்று அசடு வழிய சிரித்தான்..
அவனின் முகத்தைப் பார்த்தவர், “பயம் இருக்கில்ல..” என்று கேட்டதும், ‘ம்ம்’ என்று தலையசைத்தவன் போனை எடுத்துக்கொண்டு அவனின் அறைக்குள் சென்று, “பாட்டி அண்ணா அங்கே படிப்பை முடிச்சிட்டு சீக்கிரம் வந்திருவான்..” என்று சொல்லி சமாளித்தவன் போனை வைத்தான்.. அவன் சொன்னதைக் கேட்ட பானுமாவின் மனமும் கொஞ்சம் நிம்மதியடைந்தது..
தன்னுடைய படுக்கையில் அமர்ந்த மிதிலன், “அண்ணா இன்னும் ஏன் பாட்டிக்கிட்ட உண்மையைச் சொல்லாமல் இருக்கான்.. பாட்டி பாவம் இல்ல..” என்று தனக்குதானே கேள்வி கேட்டுக்கொண்டு கோபத்தில் அண்ணனுக்கு அழைத்தான்.. அவனின் அழைப்பைப் பார்த்த மகிழனின், “மிதிலா எப்படி இருக்கிற..?” என்று விசாரித்தான்.. அவனின் விசாரிப்பு மிதிலனுக்கு கோபத்தை தர, “டேய் அண்ணா உனக்கு என்ன பைத்தியமா..? பாட்டியிடம் இன்னும் ஏண்டா உண்மையைச் சொல்லாமல் இருக்கிற..?” என்று கேட்டான்..
அவனின் கோபத்தை உணர்ந்த மகிழன், “இல்ல மிதிலா.. நான் உண்மையைச் சொல்லும் நிலையில் இல்ல..” என்று சொன்னவன் சுவற்றில் சாய்ந்தபடி தோட்டத்தை நோட்டம் விட்டான்.. ‘இவன் எஎன்ன இப்படி சொல்றான்..?’ என்று யோசித்த மிதிலனுக்கு பொறிதட்டியது.. “அண்ணா நீ வளர்மதியைக் காதலிக்கிறீயா..?” என்று மனதில் நினைத்ததைக் கேட்டே விட்டான்..
“ஆமா மிதிலா..” என்று சொன்னவனின் பார்வை தோட்டத்திற்குள் நுழைந்த வளரின் மீது இருக்க, “மிதிலா நான் அப்புறம் பேசறேன்..” என்று சொல்லிவிட்டு அவனின் அனுமதி இல்லாமல் அழைப்பைத் துண்டித்ததும், ‘இவங்களிடம் மாட்டிட்டு நான் முழிக்கிறேன்..’ என்று நினைத்தவன் எழுந்து எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆரம்பித்தான்..
காலையில் தோட்டத்தில் இவன் பார்க்கும் பொழுது எல்லாம் மகிழம்பூ மரத்துக்கு தண்ணீர் விடாதவள் கிட்டத்தட்ட பத்து மணிக்கு மேல் வந்து மரத்துக்கு தண்ணீர் விடுவதை மேலிருந்த வண்ணம் பார்த்தான் மகிழன்.. ‘இவ எதுக்கு இந்த நேரத்துக்கு வந்து செடிக்கு தண்ணீர் விடறா..?’ என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்தது.. நேற்றே அந்த மரத்தை வெட்ட பானுமாவின் மூலம் ஏற்பாடு செய்தவனுக்கு இந்த விஷயம் மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது..
அவள் மரத்துக்கு தண்ணீர் விட்டுவிட்டு திரும்பி வரவும் எப்பொழுதும் போல வேலைக்கு கிளம்பிய மகிழன் வேலைக்கு செல்ல கீழே வரவும் வீட்டின் உள்ளே நுழைந்தாள் வளர்மதி.. அவளைப் பார்த்தும் மகிழன் மனதில் ஒரு யோசனை தோன்றியது.. அவன் அந்த யோசனையுடனே அவளைப் பார்த்தபடியே கீழிறங்கி வந்தான்.. அவனைக் கவனிக்காத வளர்மதி பானுமாவின் அருகில் சென்று அமர்ந்தாள்..
அவள் வந்தது கூட தெரியாத வண்ணம் யோசனையில் இருந்த பானுமாவின் முகம் பார்த்த வளர்மதி, ‘இவங்க என்ன யோசனையில இருக்காக..?’ என்று நினைத்தபடியே அவரின் அருகில் அமர்ந்து பானுமாவின் முகத்தையே பார்த்தாள்.. கொஞ்ச நேரத்தில் எதர்ச்சியாக நிமிர்ந்து வளரின் முகம் பார்த்த பானுமா, “வாடியாத்தா என்ன ஊரு சுத்தமா இங்க வந்திருக்கிறவ..?” என்றவளை பானுமா வம்பிழுத்தார்..
‘இந்நேரம் வர ஒருத்தி பக்கத்தில குத்து கல்லாட்டம் உட்காந்திருக்கேன்.. அது தெரியல.. ஆன வம்பிழுப்பது மட்டும் சரியா பண்றாங்க இந்த பானுமா..’ என்று நினைத்தபடியே அவரைப் பார்த்து முறைத்த வளரு, “நீங்கதான் என்னை வரச்சொன்னதா இந்த பேச்சி சொன்னா..?” என்று கேட்டாள்.. அவளின் கேள்வியில் அதுவரை இருந்த சிந்தனை எல்லாம் மறந்துவிட சிரித்துவிட்டார் பானுமா..
அப்பொழுது வீட்டைவிட்டு வெளியே வந்த மகிழன், “பாட்டி..” என்று அழைக்க அவனின் குரல் கேட்டு நிமிர்ந்த பானுமா, “என்ன ராசா ஆலைக்கு கெளம்பிட்டியா..?” என்று பாசத்தோடு கேட்டார்.. அவனின் பார்வையோ வளரின் மீது இருக்க அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் அமர்ந்திருந்தாள்..
மகிழனோடு எப்பொழுது விளையாட்டாகப் பேசி வம்பிழுக்கும் வளர்மதிக்கு இன்று ஏனோ அவனோடு வம்பு இழுக்கும் மனம் வரவில்லை.. அவன் தன்னையே சுற்றி வருவதை தெரிந்தும் அவனைக் கண்டும் காணாமல் அவன் சொல்ல வருவது புரிந்தும் புரியாதபடி இருக்க ஆரம்பித்தாள்.. அவன் தன்னைப் பார்ப்பது உணர்ந்தும் கூட நிமிராமல் அமர்ந்திருந்தாள்..
அவளின் முகத்தை சிந்தனையோடு பார்த்த மகிழன், ‘இவ ஏன் என்னிடம் பேசாம இருக்கா..?’ என்ற கேள்வியோடு, “ஆமா பாட்டி நானும் ஆலைக்கு கிளம்பிட்டேன்..” என்று முகம் மாறாமல் கூறியவன், “பாட்டி தோட்டத்தில இருக்கிற அந்த மகிழம்பூ மரத்தை வெட்ட ஆளுங்க வருவாங்க.. அவங்க வந்தால் அந்த மரத்தை வெட்டி எடுத்துட்டு போக சொல்லுங்க..” என்றவன் சொல்லவும் வெடுக்கென்று நிமிர்ந்த வளர்மதி முகம் கோபத்தில் சிவந்திருந்தது..
‘என்ன தைரியம் இருந்த மகிழம்பூமரத்தை வெட்ட சொல்லி சொல்வான்..’ என்ற எண்ணத்தோடு அவனை முறைக்க ஆரம்பித்தாள்.. அவளின் முகத்தை கவனிக்காத பானுமா, “சரிப்பா வந்தா வெட்ட சொல்றேன்.. என்ன அந்த மரத்தை என் பேரம் அறியாத வயசுல நட்டுவெச்சது.. இப்போ அதை வெட்றதுக்கு மனசு இல்ல.. அதன் யோசனையா இருக்கு..” என்று அவரும் வருத்ததுடன் கூறினார்..
அதை கேட்டதும் மகிழனுக்கு ஒரு விஷயம் புரிந்தது.. ‘நான் நட்டு வெச்ச செடி இன்னைக்கு மரமாக நிற்கிறது.. நான் கருவில் பேரு வெச்ச பொண்ணு இன்னைக்கு வெளஞ்சி நிற்கிற.. ஆன ஏன் என்னிடம் நேத்து பொய் சொன்னா..? இவ அந்த மரத்துக்கு தண்ணீர் விடாமல் இருந்ததுக்கும், இப்போ தண்ணீர் விடுவதற்கும் என்ன காரணம்.. புரிந்தது போல இருந்த ஒரு விஷயம் புரியாதது போல இருந்தது..’ அவன் குழப்பத்தில் நிற்பதைப் பார்த்த வளரின் முகத்தில் புன்னகை அரும்பியது.. அவளின் முகப்பாவனைகளைக் கவனித்த வண்ணம் நின்றிருந்தான் மகிழன்..
நான் செல்லும் திசை எங்கும்
உன்பாதம் வழியானால்
உன்னைத் தொடர்ந்து வரவே
மனம் ஏங்குகிறது பெண்ணே..!
உன் மனதின் எண்ணம் என்னவோ
சொல்லடி எனது துளிர்நிலவே..
வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த பானுமாவின் மனம் மருமகள் சொன்ன விஷயத்திலேயே இருந்தது.. காலையில் எழுந்ததும் மருமகளுக்கு அழைத்த பானுமா, “ஜெயா எப்படிம்மா இருக்கிற..?” என்று கேட்டார்.. அவரின் பாசம் அவளின் மனதை நெகிழ வைக்க, “ரொம்ப நல்ல இருக்கேன் அத்தை.. மாமா எப்படி இருக்காங்க..?” என்று கேட்டதும், “அவரும் நல்ல இருக்காரு கண்ணு.. ஆமா சின்னவன் எங்க ஜெயா..?” என்று மிதிலனை விசாரித்தார்..
அதற்குள் அம்மாவிடம் இருந்து போனை வாங்கியவன், “பாட்டிம்மா எப்படி இருக்கீங்க..?” என்று பாசத்தோடு விசாரிக்க, “எனக்கு என்ன நான் நல்லாவே இருக்கேன்.. அண்ணனும், தம்பியும் தான் ஊருப்பக்கம் வரவே மாட்டேன்னு இருக்கீங்களே..” என்று அவரும் வருத்தமாக கூறினார்.. அவரின் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்த மிதிலன், “பாட்டிமா இதுக்கு எல்லாம் வருத்தப்பட்ட.. அப்புறம் எப்படி உடம்பு நல்ல இருக்கும்..?” என்று கேட்டவன், “பாட்டி நானும் வெளிநாட்டுக்கு படிக்க போறேன்..” என்று சொன்னதும் பானுமாவின் முகம் மாறிவிட்டது..
“என்ன ராசா சொல்ற நீ..? உன்னோட அண்ணனே இன்னும் இங்க வராமல் வெளிநாடே கெதின்னு இருக்கான்.. இதில நீயும் அங்க போனா என்ன ஆகிறது..?” என்று கேட்டவரின் கண்கள் இரண்டும் கலங்கிவ அவரின் குரலில் வருத்தம் வெளிப்படையாக தெரிவதை உணர்ந்த ஜெயா மகனை முறைத்தார்.. அவனோ, “பாட்டிம்மா இதுக்கு வருத்தப்படக்கூடாது..” என்று மெல்லிய குரலில் கூறினான்
“நான் அங்கே போனதும் அண்ணனை பார்சல் பண்ணி அனுப்பி விடுகிறேன்..” என்று சிரித்துக்கொண்டே கூறினான் மிதிலன்.. அவனின் சிரிப்பு சத்தம் கேட்டதும் பானுமாவின் துயரம் எல்லாம் மாறிவிட, “மகிழனை அனுப்பு வைப்பா.. பாட்டி அவன் மேல சரியான கோபத்தில இருக்கிறேன்னு சொல்லு..” என்று பேரனிடம் பேசிய மாமியாரை நினைத்த ஜெயாவின் மனம் தான் வலித்தது..
அவரோ, “இந்த மாமா பண்ற வேலையல.. இன்னும் எத்தனை பொய் சொல்ல வேண்டி இருக்கு.. இப்போவே கணக்குப்படி ஆயிரத்தி ஐநூறு பொய் சொல்லியாச்சு..” என்று முணுமுணுக்க, “அம்மா யாரிடம் தனியாக பேசறீங்க..?” என்று கேட்ட மிதிலனின் குறும்பு முகம் கண்ட ஜெயா, “மகனே உனக்கு இன்னைக்கு நேரம் சரியில்லடா..” என்று பூரி கட்டையை கையில் வைத்துக்கொண்டு சொன்ன அம்மாவின் முகத்தைப் பார்த்த மிதிலன், “ஹி.. ஹி..” என்று அசடு வழிய சிரித்தான்..
அவனின் முகத்தைப் பார்த்தவர், “பயம் இருக்கில்ல..” என்று கேட்டதும், ‘ம்ம்’ என்று தலையசைத்தவன் போனை எடுத்துக்கொண்டு அவனின் அறைக்குள் சென்று, “பாட்டி அண்ணா அங்கே படிப்பை முடிச்சிட்டு சீக்கிரம் வந்திருவான்..” என்று சொல்லி சமாளித்தவன் போனை வைத்தான்.. அவன் சொன்னதைக் கேட்ட பானுமாவின் மனமும் கொஞ்சம் நிம்மதியடைந்தது..
தன்னுடைய படுக்கையில் அமர்ந்த மிதிலன், “அண்ணா இன்னும் ஏன் பாட்டிக்கிட்ட உண்மையைச் சொல்லாமல் இருக்கான்.. பாட்டி பாவம் இல்ல..” என்று தனக்குதானே கேள்வி கேட்டுக்கொண்டு கோபத்தில் அண்ணனுக்கு அழைத்தான்.. அவனின் அழைப்பைப் பார்த்த மகிழனின், “மிதிலா எப்படி இருக்கிற..?” என்று விசாரித்தான்.. அவனின் விசாரிப்பு மிதிலனுக்கு கோபத்தை தர, “டேய் அண்ணா உனக்கு என்ன பைத்தியமா..? பாட்டியிடம் இன்னும் ஏண்டா உண்மையைச் சொல்லாமல் இருக்கிற..?” என்று கேட்டான்..
அவனின் கோபத்தை உணர்ந்த மகிழன், “இல்ல மிதிலா.. நான் உண்மையைச் சொல்லும் நிலையில் இல்ல..” என்று சொன்னவன் சுவற்றில் சாய்ந்தபடி தோட்டத்தை நோட்டம் விட்டான்.. ‘இவன் எஎன்ன இப்படி சொல்றான்..?’ என்று யோசித்த மிதிலனுக்கு பொறிதட்டியது.. “அண்ணா நீ வளர்மதியைக் காதலிக்கிறீயா..?” என்று மனதில் நினைத்ததைக் கேட்டே விட்டான்..
“ஆமா மிதிலா..” என்று சொன்னவனின் பார்வை தோட்டத்திற்குள் நுழைந்த வளரின் மீது இருக்க, “மிதிலா நான் அப்புறம் பேசறேன்..” என்று சொல்லிவிட்டு அவனின் அனுமதி இல்லாமல் அழைப்பைத் துண்டித்ததும், ‘இவங்களிடம் மாட்டிட்டு நான் முழிக்கிறேன்..’ என்று நினைத்தவன் எழுந்து எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆரம்பித்தான்..
காலையில் தோட்டத்தில் இவன் பார்க்கும் பொழுது எல்லாம் மகிழம்பூ மரத்துக்கு தண்ணீர் விடாதவள் கிட்டத்தட்ட பத்து மணிக்கு மேல் வந்து மரத்துக்கு தண்ணீர் விடுவதை மேலிருந்த வண்ணம் பார்த்தான் மகிழன்.. ‘இவ எதுக்கு இந்த நேரத்துக்கு வந்து செடிக்கு தண்ணீர் விடறா..?’ என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்தது.. நேற்றே அந்த மரத்தை வெட்ட பானுமாவின் மூலம் ஏற்பாடு செய்தவனுக்கு இந்த விஷயம் மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது..
அவள் மரத்துக்கு தண்ணீர் விட்டுவிட்டு திரும்பி வரவும் எப்பொழுதும் போல வேலைக்கு கிளம்பிய மகிழன் வேலைக்கு செல்ல கீழே வரவும் வீட்டின் உள்ளே நுழைந்தாள் வளர்மதி.. அவளைப் பார்த்தும் மகிழன் மனதில் ஒரு யோசனை தோன்றியது.. அவன் அந்த யோசனையுடனே அவளைப் பார்த்தபடியே கீழிறங்கி வந்தான்.. அவனைக் கவனிக்காத வளர்மதி பானுமாவின் அருகில் சென்று அமர்ந்தாள்..
அவள் வந்தது கூட தெரியாத வண்ணம் யோசனையில் இருந்த பானுமாவின் முகம் பார்த்த வளர்மதி, ‘இவங்க என்ன யோசனையில இருக்காக..?’ என்று நினைத்தபடியே அவரின் அருகில் அமர்ந்து பானுமாவின் முகத்தையே பார்த்தாள்.. கொஞ்ச நேரத்தில் எதர்ச்சியாக நிமிர்ந்து வளரின் முகம் பார்த்த பானுமா, “வாடியாத்தா என்ன ஊரு சுத்தமா இங்க வந்திருக்கிறவ..?” என்றவளை பானுமா வம்பிழுத்தார்..
‘இந்நேரம் வர ஒருத்தி பக்கத்தில குத்து கல்லாட்டம் உட்காந்திருக்கேன்.. அது தெரியல.. ஆன வம்பிழுப்பது மட்டும் சரியா பண்றாங்க இந்த பானுமா..’ என்று நினைத்தபடியே அவரைப் பார்த்து முறைத்த வளரு, “நீங்கதான் என்னை வரச்சொன்னதா இந்த பேச்சி சொன்னா..?” என்று கேட்டாள்.. அவளின் கேள்வியில் அதுவரை இருந்த சிந்தனை எல்லாம் மறந்துவிட சிரித்துவிட்டார் பானுமா..
அப்பொழுது வீட்டைவிட்டு வெளியே வந்த மகிழன், “பாட்டி..” என்று அழைக்க அவனின் குரல் கேட்டு நிமிர்ந்த பானுமா, “என்ன ராசா ஆலைக்கு கெளம்பிட்டியா..?” என்று பாசத்தோடு கேட்டார்.. அவனின் பார்வையோ வளரின் மீது இருக்க அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் அமர்ந்திருந்தாள்..
மகிழனோடு எப்பொழுது விளையாட்டாகப் பேசி வம்பிழுக்கும் வளர்மதிக்கு இன்று ஏனோ அவனோடு வம்பு இழுக்கும் மனம் வரவில்லை.. அவன் தன்னையே சுற்றி வருவதை தெரிந்தும் அவனைக் கண்டும் காணாமல் அவன் சொல்ல வருவது புரிந்தும் புரியாதபடி இருக்க ஆரம்பித்தாள்.. அவன் தன்னைப் பார்ப்பது உணர்ந்தும் கூட நிமிராமல் அமர்ந்திருந்தாள்..
அவளின் முகத்தை சிந்தனையோடு பார்த்த மகிழன், ‘இவ ஏன் என்னிடம் பேசாம இருக்கா..?’ என்ற கேள்வியோடு, “ஆமா பாட்டி நானும் ஆலைக்கு கிளம்பிட்டேன்..” என்று முகம் மாறாமல் கூறியவன், “பாட்டி தோட்டத்தில இருக்கிற அந்த மகிழம்பூ மரத்தை வெட்ட ஆளுங்க வருவாங்க.. அவங்க வந்தால் அந்த மரத்தை வெட்டி எடுத்துட்டு போக சொல்லுங்க..” என்றவன் சொல்லவும் வெடுக்கென்று நிமிர்ந்த வளர்மதி முகம் கோபத்தில் சிவந்திருந்தது..
‘என்ன தைரியம் இருந்த மகிழம்பூமரத்தை வெட்ட சொல்லி சொல்வான்..’ என்ற எண்ணத்தோடு அவனை முறைக்க ஆரம்பித்தாள்.. அவளின் முகத்தை கவனிக்காத பானுமா, “சரிப்பா வந்தா வெட்ட சொல்றேன்.. என்ன அந்த மரத்தை என் பேரம் அறியாத வயசுல நட்டுவெச்சது.. இப்போ அதை வெட்றதுக்கு மனசு இல்ல.. அதன் யோசனையா இருக்கு..” என்று அவரும் வருத்ததுடன் கூறினார்..
அதை கேட்டதும் மகிழனுக்கு ஒரு விஷயம் புரிந்தது.. ‘நான் நட்டு வெச்ச செடி இன்னைக்கு மரமாக நிற்கிறது.. நான் கருவில் பேரு வெச்ச பொண்ணு இன்னைக்கு வெளஞ்சி நிற்கிற.. ஆன ஏன் என்னிடம் நேத்து பொய் சொன்னா..? இவ அந்த மரத்துக்கு தண்ணீர் விடாமல் இருந்ததுக்கும், இப்போ தண்ணீர் விடுவதற்கும் என்ன காரணம்.. புரிந்தது போல இருந்த ஒரு விஷயம் புரியாதது போல இருந்தது..’ அவன் குழப்பத்தில் நிற்பதைப் பார்த்த வளரின் முகத்தில் புன்னகை அரும்பியது.. அவளின் முகப்பாவனைகளைக் கவனித்த வண்ணம் நின்றிருந்தான் மகிழன்..