• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 27

என் வீட்டு முற்றத்தில் நிலவொன்று

வானில் உலா வரும் பெண்ணே..

இன்றோ எனதருகே அமர்ந்து

என் முகம் பார்க்கும்

நிலவு பெண்ணின் மனமோ

எனது வசமானதடி துளிர்நிலவே...!

திருமண மண்டபத்தில் எல்லோரும் திகைப்பில் ஆழ்ந்திருந்தாலும் எல்லோரையும் யோசனையுடன் பார்த்த சுகுமாறன், “அதுதான் அம்மா கிளம்பி போயிட்டாங்க இல்ல.. அண்ணா, அண்ணி நீங்க இருவரும் முதல்ல கிளம்புங்க.. அவங்களுக்கு மற்றசடங்கு எல்லாம் செய்யணும் இல்ல..” என்றவர் மற்றவர்களின் கவனத்தை எல்லாம் திசை திருப்பினார் சுகுமாறன்..

அவர் திசை திருப்பியதும் எல்லோரின் கவனமும் பானுமாவிடம் இருந்து மணமக்களின் பக்கம் திரும்ப, “ஆமா அவங்க இந்நேரம் முன்னாடி போயிருப்பாங்களே..” என்று கூறிய சக்தி, “சரிங்க அக்க நீங்க முன்னாடி கிளம்புங்க..” என்று நடக்க இருக்கும் அடுத்தடுத்த காரியத்தில் அவர்களை ஈடுபடுத்த, “அப்பா அம்மாவை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது..” என்று வருத்ததுடன் கூறினார்..

லட்சுமியின் முகத்திலும் அந்த கவலை இருப்பதைக் கண்ட பெரியவர், “அதுதான் எது சரியாக நடக்கணுமோ அது சரியாக நடந்துவிட்டது இல்ல.. அப்புறம் எதுக்குடா இந்த கவலை.. போடா போய் மற்ற வேலைகளைக் கவனி.. உன்னோட அம்மாவை நாங்க பார்த்துக்கொள்கிறோம்..” என்று சொல்ல அவரின் முகத்திலும் தெளிவு பரவியது.. “சரிங்க அப்பா.. நான் கிளம்பறேன் மாறா.. மகனும், மருமகளும் வீட்டுக்கு போயிருப்பாங்க..” என்று சொல்லிவிட்டு வேகமாகக் காரில் ஏறினார்..

லட்சுமி எல்லோரின் முகத்தையும் பார்த்துவிட்டு, “சரிங்க மாமா நான் கிளம்பறேன்.. ராசாத்தி நான் போயிட்டு வரேன்..” என்று சொல்ல, “என்னோட மகளை நல்ல பார்த்துக்கோ ஜெயா.. என்னோட மகள் கொஞ்சம் குறும்பு செய்வாள்.. அதை எல்லாம் பெருசாக எடுத்துக்காதே..” என்று தவிப்புடன் கூறியதும் ஜெயாவின் முகத்தின் புன்னகை மலர, “என்னோட மகளைப் பார்த்துக்கொள்வது போல பார்த்துக் கொள்கிறேன் போதுமா.. அப்புறம் அவள் குறும்பு செய்தாலும் நான் கவலைப்படவே மாட்டேன்..” என்றவளும் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு வேகமாகக் காரில் ஏறினார்..

சிவசங்கரன் எல்லோரையும் பார்த்து தலையசைத்துவிட்டு டைவரிடம் காரை எடுக்க சொன்னார்.. அவரின் கார் சென்ற திசையைப் பார்த்த சிவராமன், “மாறா இங்கேயே இருந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வாப்பா.. நான் வீட்டுக்கு போகிறேன்..” என்று சொல்ல, “நீங்க போங்கப்பா நான் மற்றதைப் பார்த்துக் கொள்கிறேன்..” என்றார் சுகுமாறன்.. பொன்னுத்தாய், மாரிமுத்து இருவரும் அங்கிருந்து வந்தவர்களை உபசரித்தனர்.. அவருக்கு துணையாக சக்தியும் மண்டபத்தில் தங்கிவிட சிவராமன் வீட்டுக்கு சென்றார்..

முதல் ஆளாக வீட்டிற்கு சென்ற சிவராமன் காரைவிட்டு இறங்கியதும், “பானு.. பானு..” என்று அழைத்தபடியே வீட்டின் உள்ளே சென்றார்.. பானுமாவோ அவரின் குரலுக்கு பதில் கொடுக்காமல் தன்னுடைய அறையில் அமைதியாக படுக்கையில் அமர்ந்திருந்தார்.. வீட்டின் உள்ளே இருந்த அமைதியைக் கவனித்தவர், ‘எங்கே இருக்கிறா..?’ என்ற கேள்வியுடன் படுக்கை அறைக்குள் நுழைய அங்கே அமர்ந்திருந்த பானுமாவைப் பார்த்தும், “பானு நீ என்ன சொல்லிட்டு வந்த சங்கரனுக்கு பார்த்த பொண்ணு நம்ம லட்சுமியா..? மகிழன் தான் நம் பேரன் என்ற உண்மை உனக்கு எப்படி தெரியும்..” என்று கேள்விகளை வேகமாக அடிக்கினார்..

அவரின் கேள்விகளில் கணவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த பானுமா, “என்னிடம் ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லவே இல்ல.. மகிழன் என்னோட பேரன் என்ற விஷயம் எனக்கு இப்போ இல்ல அவன் வீட்டுக்கு வந்துவிட்டு மாறன் அழைச்சுட்டு போன போதே தெரியும்.. சரியாக சொல்ல போனால் அவன் சென்ற இரண்டு மூன்று நாளில் எனக்கு உண்மை தெரியும்..” என்று சொல்லி கணவரை வியப்பில் ஆழ்த்தினார்..

சிவராமன் ஒன்றும் புரியாமல் விழிப்பதைப் பார்த்தவரின் முகத்தைப் பார்த்தவர், “குழந்தைகள் என்றும் பொய் மட்டும் சொல்லாதுங்க.. சிலநேரத்தில் உண்மையையும் சொல்லும்..” என்று கூறியதும் மனைவியின் அருகில் சென்று அவரின் கரத்தை பற்றிய கணவனின் கைவிரலைப் பற்றிக்கொண்ட பானுமா, “என்ன கேட்டீங்க..? சங்கரனுக்கு பார்த்த பொண்ணு லட்சுமியான்னா..?” என்று கேட்டதும் பானுமாவின் கண்கள் கலங்கிவிட, “பானு என்ன இது.. உன்னோட வயசுக்கு நீ எவ்வளவு பார்த்துட்ட.. இதுக்கு எல்லாம் கண்ணு கலங்கலாமா..?” என்று கேட்டு மனைவியைத் தோளோடு சாய்த்துக் கொண்டார் சிவராமன்..!

“என்னோட மகனுக்கு நான் கெடுதல் செய்வேன் என்று அவன்தான் நினைத்துவிட்டான்.. பெரிய மகனுக்கும் சின்ன மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்ய நினைத்துதான் அவனுக்கு லட்சுமியையும், சின்னவனுக்கு சக்தியையும் பெண்பார்த்தேன்..” என்று மனதில் இருப்பதை எல்லாம் கணவரிடம் கொட்ட ஆரம்பித்தார்..

பானுமாவின் குணம் என்னவென்று அவருடன் இத்தனை நாளாக வாழ்ந்த சிவராமனுக்கு தெரியுமே.. அவள் பெண் பார்த்துவிட்டு வந்த அன்று சந்தோஷத்தில் இருந்த பானுவின் முகம் இன்றும் அவரின் மனக்கண்ணைவிட்டு நீங்காமல் இருந்தது..

சிவராமன் அமைதியாக இருக்க பானுமாவே தொடந்தார்.. “அவனோ உண்மைத் தெரியாமல் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னாலே லட்சுமியை கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிட்டு வந்துவிட்டான்.. ஊரில் எல்லோரின் முன்னிலையிலும் என்னோட மானத்தையே வாங்கிட்டாங்க.. அம்மா பார்த்த பொண்ணைக் கட்டிக்க அவனுக்கு பிடிக்கல போல.. அதன் ஓடிபோய் கல்யாணம் பண்ணிட்டான் என்று சொல்லும் பொழுது என்னோட மனசு என்ன பாடுப்பட்டிருக்கும்..” என்று கேட்டுக் கணவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார் பானுமா..

அவரின் மனதில் இருக்கும் விஷயங்களை மனதிற்குள் அடைத்து வைத்து அடைத்து வைத்து அது இன்று கணவரின் கனிவில் வெளியே வர ஆரம்பிக்க கேள்வி கேட்டு முகம் பார்க்கும் மனைவியின் தலையை வருடிவிட்டவர், “ரொம்பவே கஷ்டபட்டிருக்கும்.. அதுக்கு மகனோட முகத்தைக்கூட பார்க்காமல் ஊருவிட்டு ஊரு வரணுமா பானு..” என்று கேட்டார்..

“இப்பவும் எனக்கு அவன் மேல எந்த கோபமும் இல்லங்க.. நீங்க நினைக்கிற மாதிரி எனக்கு ஒன்னும் கல் நெஞ்சில்லை.. அவனுக்கு விருப்பப்பட்ட வாழ்க்கையை அவன் அங்கேயே வாழட்டும் என்றுதானே அந்த ஊரைவிட்டு இந்த ஊருக்கு வந்தேன்.. நான் அந்த ஊரின் மண்ணைக்கூட மிதிக்காமல் இருக்கிறேன்னு நீங்கலும் மாறனும் நினைச்சிட்டு இருக்கீங்க...” என்று சொல்ல மனைவியின் முகத்தைக் கேள்வியாகவும், குழப்பத்துடனும் பார்த்த சிவராமன், “அதுதானே உண்மை..?” என்று திகைப்புடன் கேட்டார்..

“இல்லைங்க அது உண்மை இல்ல.. நான் வருஷத்துக்கு இரண்டுமுறை பாரியூர் போவேன்.. அவனைப் பற்றிய எல்லா தகவலையும் அவர்தான் எனக்கு சொல்வாரு.. எனக்கு பேரன் பிறந்தும் எனக்கு தகவல் வந்துச்சு.. அப்புறம் அவன்தான் மாறன் மூலமாக வீட்டுக்கு வந்த விஷயமும் எனக்கு தெரியும்..” என்று தெளிவாக கூறிய பானுமாவின் முகத்தை அதிர்ச்சியுடன் பார்த்தார் சிவராமன்..

“அப்புறம் எதுக்கு பானு இந்த நாடகம்..?” என்று புரியாமல் கேட்டதும் அவரின் முகத்தில் புன்னகை அரும்ப, “என்னைப் பார்க்கும் பொழுது அவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும் இல்ல.. அதுதான் நான் அங்கிருந்து இங்கே வந்தேன்.. ஆனால் அம்மாவோட மனசு என்னன்னு இன்னும் அவனுக்கு புரியவே இல்லையே..” என்று வருத்ததுடன் கூறிய பானுமா பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்..

“மகிழனை இங்கே தூக்கிட்டு வந்து, ‘அம்மா இந்தாங்க உங்களோட பேரனை பாருங்க..’ என்றவன் சொல்லவே இல்லையே.. என்னை என்ன கொடுமைக்காரி என்றே நினைத்துவிடானா..?” என்று கேட்டதும் சிவராமனுக்கு இருந்த குழப்பங்கக் அதிகமாக ஆகிவிட, “அப்போ மகிழன் உன்னிடம் உண்மையைச் சொன்னானா..?” என்று குழப்பத்துடன் கேட்டார்..

அவரின் குழப்பத்தைக் கண்ட பானுமா, “அவனோட அம்மா, அப்பா பற்றிதான் அவன் அதிகமாக என்னிடம் சொல்வான்.. அவங்களோட மனசில என்ன இருக்கு..எதுக்காக நான் இங்கே வந்தேன்னு எல்லா உண்மையையும் சொல்வான்.. விவரம் தெரியாத வயசியில்லையா..? அதனால அவன் சொல்வதை எல்லாம் அமைதியாக கேட்டுடே இருப்பேன்..” என்று சொல்லிவிட்டு எதையோ நினைத்து சிரித்த பானுமாவின் உணர்வுகளைப் பார்த்தவர், “அந்த கடிதம்..?” என்று சந்தேகமாகக் கேட்டார்..

“அந்த கடிதம் உங்களை எல்லாம் கண்காணிக்க நானே எனக்கு எழுதியது எப்படி..?” என்று சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரித்த பானுவைப் பார்த்த சிவராமனுக்கு இருந்த சந்தேகம் எல்லாம் மாறிவிட வாய்விட்டுச் சிரித்தவர், “இந்த வயசிலும் உன்னோட குறும்புத்தனம் மாறவே இல்ல.. எங்களை எல்லாம் சுத்தலில் விட்டுவிட்டு மேடம் இங்கே நிம்மதியாக வளருகூட விளையாட்டிட்டு ரொம்ப சந்தோசமாக இருந்திருக்கிற..” என்று கூறியவருக்கு மீண்டும் சந்தேகம் துளிர்க்க மனைவியின் முகத்தை கேள்வியுடன் பார்த்தார்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“இப்போ என்ன சந்தேகம்..” என்று கேட்ட பானுமா அவரைவிட்டு விலகி நின்றதும் சிரித்த சிவராமன், “பொன்னுத்தாய் பற்றிய விஷயம்.. லட்சுமியும், பொன்னுத்தாயும் தோழிகள் என்ற விஷயம் உனக்கு எப்படி தெரியும்..?” என்று கேட்டதும், “மகிழன் ஊருக்கு போனதும் ஜெயா கூட பேசிட்டு இருந்தப்போ பொன்னுத்தாய் ஓடி வந்தாள்.. அதில் எனக்கு சந்தேகம் வந்தது.. முத்துவிடம் கேட்டேன் எல்லாமே தெளிவாகிவிட்டது..” என்று சாதாரணமாகக் கூறினார்..

“நாங்க எல்லாம் உன்னை ஏமாற்றலாம் என்று நினைத்து பிளான் பண்ணி பண்ணினோம்... கடைசில நீ எங்க எல்லோருக்கும் கூட இருந்தே தண்ணீ காட்டிக்க.. சரியான ஆளுடி நீ..” என்று சொல்லி வாய்விட்டுக் கூறியவரின் மனதில் இருந்த பாரம் மெல்ல இறங்கியது.. கணவனின் முகத்தில் இருந்த நிம்மதியைப் பார்த்த பானுமா, “அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று மாறன் சொன்னப்போ நான் நம்புவது போல நடித்தேன்.. என்னோட மகன்தான் என்னோட மானத்தைக் காப்பாற்றல.. என்னோட பேரன் என்னுடைய முடிவுக்கு கட்டுப்படுவான் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே இருந்தது..” என்று பேரனைப் பற்றி தெளிவாகக் கூறினார் பானுமா..

“மகிழனுக்கு இங்கே வந்துமே வளரைப் பிடித்துவிட்டது.. என்னை சம்மதிக்க வைக்க அவன் போட்ட திட்டங்கள் எல்லாமே எனக்கு பிடித்தது.. ஆனால் அவனோட அப்பா செய்ய ஒரு காரியத்தை அவன் செய்தான்.. என்னிடமே தைரியமாக வளரை எனக்கு கட்டி வைங்க என்று கேட்டான்.. ஆன சங்கரன் அப்படி என்னிடம் கேட்கவே இல்ல.. இந்த ஒரு விஷயத்தால் என்னோட மனம் நிறைந்தது..” என்று நடந்த அனைத்தும் வெளிப்படையாகவே பேசினார்..

அவர் சொன்னதை எல்லாம் கேட்ட சிவராமன், “அப்புறம் எதுக்கு வளரிடம் என்னோட பேரனுக்கு உன்னை கட்டிவைப்பேன்னு சொல்லிட்டு இருந்த.. அப்புறம் மகிழன் நம்முடைய பேரன்னு சொல்லி அவளுக்கு கட்டிவெச்ச..?” என்று சந்தேகமாகக் கேட்ட கணவரின் முகத்தைப் பார்த்த பானுமா, “திடீரென்று மகிழன் ஒரு பெண்ணுடன் வெளிநாட்டில் இருந்து வந்தால் அவள் மனசுடைந்து போக மாட்டாளா..?” என்று கூறிய மனைவியின் அறிவு திறமையைக் கண்டு வியக்காமல் சிவராமனால் இருக்கவே முடியவில்லை..

“நான் மகிழனுக்கு கட்டிவைக்கிறேன்னு சொன்னால்தான் அவளோட மனம் அவளிடம் இருந்தது.. ஒரு விஷயத்தை நம்ம கட்டாயமாக திணிக்கும் பொழுது அந்த விஷயம் அவங்களுக்கு பிடிக்காமல் போகும்.. என்னோட பேரன்தான் வந்ததும் உன்னைக் கட்டிவைக்கிறேன்னு சொல்ல சொல்ல அவன்மீது அவளுக்கே வெறுப்பும், நடக்காத விஷயம் இது என்ற உண்மையும் அவளுக்கு புரிந்து அவளே விலகி நின்றாள்..” என்று கூறியவர்,

“அப்போ நான் யாரை கைகாட்டி இருந்தாலும் வளரு மறுக்காமல் கழுத்தை நீட்டி இருப்பாள்.. மகிழனுக்கு பிடிக்கும்.. அவன் அவளைக் காதலிப்பான் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு இருந்தது.. ஆனால் அது இவ்வளவு சீக்கிரமே நடக்கும் என்ற உண்மை மட்டும் எனக்கு தெரியவே தெரியாது..” என்று கூறியவர் முகம் சந்தோஷத்தில் இருப்பதைப் பார்த்த சிவராமனும் நிம்மதியுடன் மனைவியின் முகம் பார்த்தார்..

மகிழன் காரை ஓட்டியடியே தன்னருகே அமர்ந்திருந்த துளிர்நிலாவின் முகம் பார்க்க அவளோ வெக்கத்துடன் தலையைக்குனிந்தபடியே வந்ததும் அவளின் சிவந்த முகம் பார்த்த மகிழன், “என்ன என்னோட வாயாடி பொண்டாட்டி பதுமை போல அமைதியாக வர..?” என்று அவளை வம்புக்கு இழுக்க அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த துளிர்நிலா, “என்னங்க நீங்க என்னை வம்புக்கு இழுக்கிறீங்க..” என்று சிணுங்கலுடன் கேட்டாள்..

அவளின் செல்ல சிணுங்களில் மனம் தொலைந்து போக, “நீதானே என்னோட பொண்டாட்டி.. அப்போ உன்னைத்தான் நான் வம்பிழுக்கணும்..” என்று சொல்லி ஸ்டேரிங்கில் இருந்த இடது கரத்தை எடுத்து அவளின் வலது கரத்தின் மீது வைக்க அவளின் உடல் சிலிர்த்தது அடங்க அதை உணர்ந்தவனின் முகத்தில் மர்மப்புன்னகை மலர்ந்தது.. அதை கவனித்தவள் வெளியே வேடிக்கைப் பார்ப்பது போல முகத்தைத் திருப்பிக்கொண்டதும், “அடியே இது எல்லாம் அநியாயம்..” என்று சிணுங்கினான் மகிழன்..

“என்ன அநியாயம்..?” என்று வெளியே வேடிக்கைப் பார்த்தபடியே கேட்ட வளரின் குரலில் இருந்த குறும்பை உணர்ந்த மகிழன், “எதுக்குடி இப்போ முகத்தைத் திருப்பின..?” என்று குற்றம் சாட்டும் குரலில் கேட்ட கணவனின் முகத்தைத் திரும்பிப் பார்க்க அவனோ வேண்டும் என்றே அவளைக் கவனிக்காமல் சாலைமீது கவனம் செலுத்தியபடியே காரை ஓட்டினான்..

“எதுக்கு இப்போ மூஞ்சியை இஞ்சி தின்ன குரங்கு மாதியே வெச்சிருக்கீங்க..” என்று கேட்டதும், “என்னோட பேச பிடிக்காமல்தானே வெளியே வேடிக்கை பார்ப்பது போல திரும்பிக்கிட்ட.. நான் பேசவே இல்ல..” கூறியவனின் அவளின் தோளைப்பிடித்து அருகில் இழுத்து, “முகத்தைய திருப்பற.. வீட்டுக்கு போனதும் இதுக்கு வட்டியும் முதலும் சேர்த்து நான் கொடுக்கல..” என்று கூறிய மகிழனின் முகம் பார்த்தவளுக்கு அவன் சொல்ல வரும் விஷயம் புரியாமல் விழித்தாள்..

அவளின் இந்த திகைப்பை பார்த்த மகிழனுக்கு சிரிப்பு வர, “உனக்கு அர்த்தம் புரியாத வரையில் நான் தப்பித்தேன்..” என்று சொல்லி அவளின் கன்னத்தில் இதழ்பதித்தவன் காரை வேகமாக செலுத்தினான்.. திடீரென அவன் முத்தமிட்டதும் திகைப்பில் சிலைபோல அமர்ந்த துளிர்நிலாவின் முகம் அவனின் மனதில் ஆழமாக பதிந்தது.. அவனின் கார் ஊருக்குள் நுழையும் முன்னாடியே அவனைக் கடந்து சென்ற இன்னொரு காரைப் பார்த்த மகிழன், ‘அப்பா, அம்மா நம்மைவிட சீக்கிரமே வந்துட்டாங்க..’ என்று நினைத்தவன் வீட்டின் முன்னாடி சென்று காரை நிறுத்தியவன், “நிலா..” என்று அழைத்தான்..

அப்பொழுதுதான் திகைப்பில் இருந்து வெளியே வந்த வளர்மதி, “நம்ம எங்கே இருக்கோம்..” என்று கேட்டதும், “எங்க வீட்ல..” என்று சொல்ல வேகமாகக் காரைவிட்டு இறங்கி நின்றாள்.. அவளின் அழகைப் பார்த்த எல்லா பெண்களுமே வாயடைத்துப்போய் நிற்க காரின் மறுப்பக்கத்தில் இருந்து இறங்கிய மகிழன் அவளின் அருகில் வந்து நிற்க அவர்களை ஆரத்தி எடுத்து வீட்டின் உள்ளே அழைத்து சென்று பூஜை அறையில் இருந்த விளக்கை ஏற்ற சொல்ல பதுமை போலவே செய்த மனைவியைப் பார்த்த மகிழனின் முகத்தில் புன்னகையின் சாயல் இருந்தது..

பிறகு பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து இருவருக்கும் பாலும், பழமும் கொடுத்து இருவரையும் தனித்தனி அறையில் தங்க வைக்க வளரின் மனம் அங்கிருந்தவர்கள் யார் யார் என்ன என்ன உறவு, எந்த வகையில் தங்களுக்கு சொந்தம் என்று ஒருவர் அருகே ஒருவர் வந்து பேச பேச அறிந்துக் கொண்டாள்.. மாலைநேரத்தில் அவளின் அறைக்குள் வந்த மஞ்சரி, “உங்களுக்கு இந்த வீடு பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டதும் அப்பொழுதுதான் வீட்டை சுற்றி பார்வையைச் சுழற்ற அது கிட்டத்தட்ட பானுமாவின் வீட்டைபோலவே இருக்க, “இந்த அறை மகிழன் மாமாவின் அறையா..?” என்று மாடியில் இருந்த முதல் அறையைக் காட்டி கேட்டாள்..

அவள் கேட்ட கேள்வியில் மஞ்சரி, “அது எப்படி உனக்கு தெரியும்..” என்று திகைப்புடன் கேட்டதும், “இது எங்க பானுமாவின் வீடு மாதிரியே இருக்கு..” என்று கூறியவளின் மனமோ, ‘இந்த வீடு மகிழனோட சொந்த வீடா..? அப்போ இவன் மேனேஜர் வேலைக்கு ஏன் வந்தான்..?’ என்றவள் யோசிக்க, “என்ன யோசனை வளர்..” என்று கேட்டதும், “ஒண்ணுமில்ல..” என்று சொல்லிவிட்டு மெல்ல தலையைக்குனிந்து கொள்ள அவளிடம் பேச்சுகொடுத்தபடியே அவளுக்கு தலையைபின்னிவிட்டாள் மஞ்சரி..

“ஓரிஜினல் முடியா..? நான் கூட ஜவுரி என்று நினைத்தேன்..” என்று ஆச்சர்யத்துடன் கூறிய மஞ்சரியைப் பார்த்து மெல்ல சிரித்தாள்.. அவளுக்கு தலைபின்னிவிட்டு வெளியே வந்த மஞ்சரியைப் பாத்தா மகிழன், “என்னடி மாமன் மகளே என்னோட பொண்டாட்டியிடம் என்ன சொல்லி வெச்ச..?” என்று அவளை வம்புக்கு இழுத்தான்..

“நீ சொன்ன மாதிரியே அவளிடம் நல்ல போட்டு கொடுத்துட்டுதான் மாமா வந்திருக்கேன்.. இன்னைக்கு இருக்கு உனக்கு கச்சேரி..” என்று கிண்டலாகக் கூறியவளின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாமல் வளரின் அறைக்குள் சென்ற மகிழன், “துளிரு.. வா நம்ம ஒரு இடத்துக்கு போயிட்டு வரலாம்..” என்றவளை அழைத்துக்கொண்டு சென்ற மகிழன் காரை எடுக்க வளரின் முகம் சிந்தனையில் இருந்தது..

அவன் காரை வீட்டின் முன்னே சென்று நிறுத்த காரைவிட்டு இறங்கிய வளர், “இது யாரோட வீடு..” என்று மகிழனிடம் கேட்டதும், “நம்ம வாழபோகிற வீடு துளிரு..” என்று சொன்னவன் அவளின் கையைபிடித்து வீட்டின் உள்ளே அழைத்து செல்ல அவளின் பார்வை அந்த வீட்டை சுற்று வந்தது..

அவன் ஓவ்வொரு இடத்தையும் காட்டி சொல்ல சொல்ல சொல்ல அவளின் பார்வை எல்லா இடங்களை சுற்றி வந்தது.. வாசலில் பெரிய திண்ணைகளும் அதை தாங்கி நிற்கும் தேக்கு மரத்தின் தூண்களும் வீட்டின் உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் இருக்கும் சமையல் அறையும் அதற்கு அதன் எதிரே அந்த காலத்தின் பூஜை அறையும், இருக்கும் இரண்டு விருந்தினர் அறையும் வீட்டின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தாமரை குளமும் பார்க்க பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.. அதுவும் மழை காலங்களில் வீட்டின் ஓட்டில் விழுகும் நீர் நேராக அந்த குளத்திற்கு விழுகும் பொழுது மனம் நிறைந்து போகும்..

“நான் மேலே போய் பார்க்கவா..” என்று கேட்டதும் அவளின் கரத்தை விட்டான் மகிழன்.. அடுத்த நொடியே மாடியேறிய வளர்மதி வீட்டின் முன் வாசலுக்கு நேர் எதிரே பின் வாசலுக்கு செல்லும் வழி அதற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு ஊஞ்சல் பின் வாசல் வழியாக சென்றால் இடதுபுறம் மாடிக்கு செல்லும் வழியும் மாடியில் மூன்று அறைகள் இருப்பது எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தாள்.. அதற்கு மேல் சென்றால் அந்த ஊரின் எழில் அழகு மொத்தமும் தெரியும் வண்ணம் மொட்டை மாடி..

அவள் கீழே வந்தும், “எனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது..” என்று சொலிவிட்டு பின் வாசலுக்கு சென்று அங்கிருந்த படிகளில் அமர அவளின் பின்னோடு சென்ற மகிழன் அவளுக்கு அடுத்த மேல்படியில் அமர வானில் நிலவு தன்னுடைய பயணத்தைத் தொடங்கி இருக்க அருகே அமர்ந்திருந்த மகிழனின் மனம் அந்த நினைவுகளை மனதில் சேமித்தது..

பின் வாசலில் மனைவியுடன் அமர்ந்திருந்த மகிழனைப் பார்த்த வானத்து நிலவு கூட மேகங்களின் இடையே மறைய தென்றல் அவர்களைத் தீண்டிச்செல்ல தன்னையும் மறந்து அந்த நிகழ்வை ரசித்தவனுக்கு வளரின் முகம் கூட நிலவு போலவே தெரிந்தது.. அவளின் முகத்தை இமைக்காமல் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் மகிழன்..!

நேசம் துளிர்விடும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top