அத்தியாயம் – 27
திருமண மண்டபத்தில் எல்லோரும் திகைப்பில் ஆழ்ந்திருந்தாலும் எல்லோரையும் யோசனையுடன் பார்த்த சுகுமாறன், “அதுதான் அம்மா கிளம்பி போயிட்டாங்க இல்ல.. அண்ணா, அண்ணி நீங்க இருவரும் முதல்ல கிளம்புங்க.. அவங்களுக்கு மற்றசடங்கு எல்லாம் செய்யணும் இல்ல..” என்றவர் மற்றவர்களின் கவனத்தை எல்லாம் திசை திருப்பினார் சுகுமாறன்..
அவர் திசை திருப்பியதும் எல்லோரின் கவனமும் பானுமாவிடம் இருந்து மணமக்களின் பக்கம் திரும்ப, “ஆமா அவங்க இந்நேரம் முன்னாடி போயிருப்பாங்களே..” என்று கூறிய சக்தி, “சரிங்க அக்க நீங்க முன்னாடி கிளம்புங்க..” என்று நடக்க இருக்கும் அடுத்தடுத்த காரியத்தில் அவர்களை ஈடுபடுத்த, “அப்பா அம்மாவை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது..” என்று வருத்ததுடன் கூறினார்..
லட்சுமியின் முகத்திலும் அந்த கவலை இருப்பதைக் கண்ட பெரியவர், “அதுதான் எது சரியாக நடக்கணுமோ அது சரியாக நடந்துவிட்டது இல்ல.. அப்புறம் எதுக்குடா இந்த கவலை.. போடா போய் மற்ற வேலைகளைக் கவனி.. உன்னோட அம்மாவை நாங்க பார்த்துக்கொள்கிறோம்..” என்று சொல்ல அவரின் முகத்திலும் தெளிவு பரவியது.. “சரிங்க அப்பா.. நான் கிளம்பறேன் மாறா.. மகனும், மருமகளும் வீட்டுக்கு போயிருப்பாங்க..” என்று சொல்லிவிட்டு வேகமாகக் காரில் ஏறினார்..
லட்சுமி எல்லோரின் முகத்தையும் பார்த்துவிட்டு, “சரிங்க மாமா நான் கிளம்பறேன்.. ராசாத்தி நான் போயிட்டு வரேன்..” என்று சொல்ல, “என்னோட மகளை நல்ல பார்த்துக்கோ ஜெயா.. என்னோட மகள் கொஞ்சம் குறும்பு செய்வாள்.. அதை எல்லாம் பெருசாக எடுத்துக்காதே..” என்று தவிப்புடன் கூறியதும் ஜெயாவின் முகத்தின் புன்னகை மலர, “என்னோட மகளைப் பார்த்துக்கொள்வது போல பார்த்துக் கொள்கிறேன் போதுமா.. அப்புறம் அவள் குறும்பு செய்தாலும் நான் கவலைப்படவே மாட்டேன்..” என்றவளும் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு வேகமாகக் காரில் ஏறினார்..
சிவசங்கரன் எல்லோரையும் பார்த்து தலையசைத்துவிட்டு டைவரிடம் காரை எடுக்க சொன்னார்.. அவரின் கார் சென்ற திசையைப் பார்த்த சிவராமன், “மாறா இங்கேயே இருந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வாப்பா.. நான் வீட்டுக்கு போகிறேன்..” என்று சொல்ல, “நீங்க போங்கப்பா நான் மற்றதைப் பார்த்துக் கொள்கிறேன்..” என்றார் சுகுமாறன்.. பொன்னுத்தாய், மாரிமுத்து இருவரும் அங்கிருந்து வந்தவர்களை உபசரித்தனர்.. அவருக்கு துணையாக சக்தியும் மண்டபத்தில் தங்கிவிட சிவராமன் வீட்டுக்கு சென்றார்..
முதல் ஆளாக வீட்டிற்கு சென்ற சிவராமன் காரைவிட்டு இறங்கியதும், “பானு.. பானு..” என்று அழைத்தபடியே வீட்டின் உள்ளே சென்றார்.. பானுமாவோ அவரின் குரலுக்கு பதில் கொடுக்காமல் தன்னுடைய அறையில் அமைதியாக படுக்கையில் அமர்ந்திருந்தார்.. வீட்டின் உள்ளே இருந்த அமைதியைக் கவனித்தவர், ‘எங்கே இருக்கிறா..?’ என்ற கேள்வியுடன் படுக்கை அறைக்குள் நுழைய அங்கே அமர்ந்திருந்த பானுமாவைப் பார்த்தும், “பானு நீ என்ன சொல்லிட்டு வந்த சங்கரனுக்கு பார்த்த பொண்ணு நம்ம லட்சுமியா..? மகிழன் தான் நம் பேரன் என்ற உண்மை உனக்கு எப்படி தெரியும்..” என்று கேள்விகளை வேகமாக அடிக்கினார்..
அவரின் கேள்விகளில் கணவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த பானுமா, “என்னிடம் ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லவே இல்ல.. மகிழன் என்னோட பேரன் என்ற விஷயம் எனக்கு இப்போ இல்ல அவன் வீட்டுக்கு வந்துவிட்டு மாறன் அழைச்சுட்டு போன போதே தெரியும்.. சரியாக சொல்ல போனால் அவன் சென்ற இரண்டு மூன்று நாளில் எனக்கு உண்மை தெரியும்..” என்று சொல்லி கணவரை வியப்பில் ஆழ்த்தினார்..
சிவராமன் ஒன்றும் புரியாமல் விழிப்பதைப் பார்த்தவரின் முகத்தைப் பார்த்தவர், “குழந்தைகள் என்றும் பொய் மட்டும் சொல்லாதுங்க.. சிலநேரத்தில் உண்மையையும் சொல்லும்..” என்று கூறியதும் மனைவியின் அருகில் சென்று அவரின் கரத்தை பற்றிய கணவனின் கைவிரலைப் பற்றிக்கொண்ட பானுமா, “என்ன கேட்டீங்க..? சங்கரனுக்கு பார்த்த பொண்ணு லட்சுமியான்னா..?” என்று கேட்டதும் பானுமாவின் கண்கள் கலங்கிவிட, “பானு என்ன இது.. உன்னோட வயசுக்கு நீ எவ்வளவு பார்த்துட்ட.. இதுக்கு எல்லாம் கண்ணு கலங்கலாமா..?” என்று கேட்டு மனைவியைத் தோளோடு சாய்த்துக் கொண்டார் சிவராமன்..!
“என்னோட மகனுக்கு நான் கெடுதல் செய்வேன் என்று அவன்தான் நினைத்துவிட்டான்.. பெரிய மகனுக்கும் சின்ன மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்ய நினைத்துதான் அவனுக்கு லட்சுமியையும், சின்னவனுக்கு சக்தியையும் பெண்பார்த்தேன்..” என்று மனதில் இருப்பதை எல்லாம் கணவரிடம் கொட்ட ஆரம்பித்தார்..
பானுமாவின் குணம் என்னவென்று அவருடன் இத்தனை நாளாக வாழ்ந்த சிவராமனுக்கு தெரியுமே.. அவள் பெண் பார்த்துவிட்டு வந்த அன்று சந்தோஷத்தில் இருந்த பானுவின் முகம் இன்றும் அவரின் மனக்கண்ணைவிட்டு நீங்காமல் இருந்தது..
சிவராமன் அமைதியாக இருக்க பானுமாவே தொடந்தார்.. “அவனோ உண்மைத் தெரியாமல் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னாலே லட்சுமியை கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிட்டு வந்துவிட்டான்.. ஊரில் எல்லோரின் முன்னிலையிலும் என்னோட மானத்தையே வாங்கிட்டாங்க.. அம்மா பார்த்த பொண்ணைக் கட்டிக்க அவனுக்கு பிடிக்கல போல.. அதன் ஓடிபோய் கல்யாணம் பண்ணிட்டான் என்று சொல்லும் பொழுது என்னோட மனசு என்ன பாடுப்பட்டிருக்கும்..” என்று கேட்டுக் கணவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார் பானுமா..
அவரின் மனதில் இருக்கும் விஷயங்களை மனதிற்குள் அடைத்து வைத்து அடைத்து வைத்து அது இன்று கணவரின் கனிவில் வெளியே வர ஆரம்பிக்க கேள்வி கேட்டு முகம் பார்க்கும் மனைவியின் தலையை வருடிவிட்டவர், “ரொம்பவே கஷ்டபட்டிருக்கும்.. அதுக்கு மகனோட முகத்தைக்கூட பார்க்காமல் ஊருவிட்டு ஊரு வரணுமா பானு..” என்று கேட்டார்..
“இப்பவும் எனக்கு அவன் மேல எந்த கோபமும் இல்லங்க.. நீங்க நினைக்கிற மாதிரி எனக்கு ஒன்னும் கல் நெஞ்சில்லை.. அவனுக்கு விருப்பப்பட்ட வாழ்க்கையை அவன் அங்கேயே வாழட்டும் என்றுதானே அந்த ஊரைவிட்டு இந்த ஊருக்கு வந்தேன்.. நான் அந்த ஊரின் மண்ணைக்கூட மிதிக்காமல் இருக்கிறேன்னு நீங்கலும் மாறனும் நினைச்சிட்டு இருக்கீங்க...” என்று சொல்ல மனைவியின் முகத்தைக் கேள்வியாகவும், குழப்பத்துடனும் பார்த்த சிவராமன், “அதுதானே உண்மை..?” என்று திகைப்புடன் கேட்டார்..
“இல்லைங்க அது உண்மை இல்ல.. நான் வருஷத்துக்கு இரண்டுமுறை பாரியூர் போவேன்.. அவனைப் பற்றிய எல்லா தகவலையும் அவர்தான் எனக்கு சொல்வாரு.. எனக்கு பேரன் பிறந்தும் எனக்கு தகவல் வந்துச்சு.. அப்புறம் அவன்தான் மாறன் மூலமாக வீட்டுக்கு வந்த விஷயமும் எனக்கு தெரியும்..” என்று தெளிவாக கூறிய பானுமாவின் முகத்தை அதிர்ச்சியுடன் பார்த்தார் சிவராமன்..
“அப்புறம் எதுக்கு பானு இந்த நாடகம்..?” என்று புரியாமல் கேட்டதும் அவரின் முகத்தில் புன்னகை அரும்ப, “என்னைப் பார்க்கும் பொழுது அவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும் இல்ல.. அதுதான் நான் அங்கிருந்து இங்கே வந்தேன்.. ஆனால் அம்மாவோட மனசு என்னன்னு இன்னும் அவனுக்கு புரியவே இல்லையே..” என்று வருத்ததுடன் கூறிய பானுமா பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்..
“மகிழனை இங்கே தூக்கிட்டு வந்து, ‘அம்மா இந்தாங்க உங்களோட பேரனை பாருங்க..’ என்றவன் சொல்லவே இல்லையே.. என்னை என்ன கொடுமைக்காரி என்றே நினைத்துவிடானா..?” என்று கேட்டதும் சிவராமனுக்கு இருந்த குழப்பங்கக் அதிகமாக ஆகிவிட, “அப்போ மகிழன் உன்னிடம் உண்மையைச் சொன்னானா..?” என்று குழப்பத்துடன் கேட்டார்..
அவரின் குழப்பத்தைக் கண்ட பானுமா, “அவனோட அம்மா, அப்பா பற்றிதான் அவன் அதிகமாக என்னிடம் சொல்வான்.. அவங்களோட மனசில என்ன இருக்கு..எதுக்காக நான் இங்கே வந்தேன்னு எல்லா உண்மையையும் சொல்வான்.. விவரம் தெரியாத வயசியில்லையா..? அதனால அவன் சொல்வதை எல்லாம் அமைதியாக கேட்டுடே இருப்பேன்..” என்று சொல்லிவிட்டு எதையோ நினைத்து சிரித்த பானுமாவின் உணர்வுகளைப் பார்த்தவர், “அந்த கடிதம்..?” என்று சந்தேகமாகக் கேட்டார்..
“அந்த கடிதம் உங்களை எல்லாம் கண்காணிக்க நானே எனக்கு எழுதியது எப்படி..?” என்று சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரித்த பானுவைப் பார்த்த சிவராமனுக்கு இருந்த சந்தேகம் எல்லாம் மாறிவிட வாய்விட்டுச் சிரித்தவர், “இந்த வயசிலும் உன்னோட குறும்புத்தனம் மாறவே இல்ல.. எங்களை எல்லாம் சுத்தலில் விட்டுவிட்டு மேடம் இங்கே நிம்மதியாக வளருகூட விளையாட்டிட்டு ரொம்ப சந்தோசமாக இருந்திருக்கிற..” என்று கூறியவருக்கு மீண்டும் சந்தேகம் துளிர்க்க மனைவியின் முகத்தை கேள்வியுடன் பார்த்தார்..
என் வீட்டு முற்றத்தில் நிலவொன்று
வானில் உலா வரும் பெண்ணே..
இன்றோ எனதருகே அமர்ந்து
என் முகம் பார்க்கும்
நிலவு பெண்ணின் மனமோ
எனது வசமானதடி துளிர்நிலவே...!
திருமண மண்டபத்தில் எல்லோரும் திகைப்பில் ஆழ்ந்திருந்தாலும் எல்லோரையும் யோசனையுடன் பார்த்த சுகுமாறன், “அதுதான் அம்மா கிளம்பி போயிட்டாங்க இல்ல.. அண்ணா, அண்ணி நீங்க இருவரும் முதல்ல கிளம்புங்க.. அவங்களுக்கு மற்றசடங்கு எல்லாம் செய்யணும் இல்ல..” என்றவர் மற்றவர்களின் கவனத்தை எல்லாம் திசை திருப்பினார் சுகுமாறன்..
அவர் திசை திருப்பியதும் எல்லோரின் கவனமும் பானுமாவிடம் இருந்து மணமக்களின் பக்கம் திரும்ப, “ஆமா அவங்க இந்நேரம் முன்னாடி போயிருப்பாங்களே..” என்று கூறிய சக்தி, “சரிங்க அக்க நீங்க முன்னாடி கிளம்புங்க..” என்று நடக்க இருக்கும் அடுத்தடுத்த காரியத்தில் அவர்களை ஈடுபடுத்த, “அப்பா அம்மாவை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது..” என்று வருத்ததுடன் கூறினார்..
லட்சுமியின் முகத்திலும் அந்த கவலை இருப்பதைக் கண்ட பெரியவர், “அதுதான் எது சரியாக நடக்கணுமோ அது சரியாக நடந்துவிட்டது இல்ல.. அப்புறம் எதுக்குடா இந்த கவலை.. போடா போய் மற்ற வேலைகளைக் கவனி.. உன்னோட அம்மாவை நாங்க பார்த்துக்கொள்கிறோம்..” என்று சொல்ல அவரின் முகத்திலும் தெளிவு பரவியது.. “சரிங்க அப்பா.. நான் கிளம்பறேன் மாறா.. மகனும், மருமகளும் வீட்டுக்கு போயிருப்பாங்க..” என்று சொல்லிவிட்டு வேகமாகக் காரில் ஏறினார்..
லட்சுமி எல்லோரின் முகத்தையும் பார்த்துவிட்டு, “சரிங்க மாமா நான் கிளம்பறேன்.. ராசாத்தி நான் போயிட்டு வரேன்..” என்று சொல்ல, “என்னோட மகளை நல்ல பார்த்துக்கோ ஜெயா.. என்னோட மகள் கொஞ்சம் குறும்பு செய்வாள்.. அதை எல்லாம் பெருசாக எடுத்துக்காதே..” என்று தவிப்புடன் கூறியதும் ஜெயாவின் முகத்தின் புன்னகை மலர, “என்னோட மகளைப் பார்த்துக்கொள்வது போல பார்த்துக் கொள்கிறேன் போதுமா.. அப்புறம் அவள் குறும்பு செய்தாலும் நான் கவலைப்படவே மாட்டேன்..” என்றவளும் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு வேகமாகக் காரில் ஏறினார்..
சிவசங்கரன் எல்லோரையும் பார்த்து தலையசைத்துவிட்டு டைவரிடம் காரை எடுக்க சொன்னார்.. அவரின் கார் சென்ற திசையைப் பார்த்த சிவராமன், “மாறா இங்கேயே இருந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வாப்பா.. நான் வீட்டுக்கு போகிறேன்..” என்று சொல்ல, “நீங்க போங்கப்பா நான் மற்றதைப் பார்த்துக் கொள்கிறேன்..” என்றார் சுகுமாறன்.. பொன்னுத்தாய், மாரிமுத்து இருவரும் அங்கிருந்து வந்தவர்களை உபசரித்தனர்.. அவருக்கு துணையாக சக்தியும் மண்டபத்தில் தங்கிவிட சிவராமன் வீட்டுக்கு சென்றார்..
முதல் ஆளாக வீட்டிற்கு சென்ற சிவராமன் காரைவிட்டு இறங்கியதும், “பானு.. பானு..” என்று அழைத்தபடியே வீட்டின் உள்ளே சென்றார்.. பானுமாவோ அவரின் குரலுக்கு பதில் கொடுக்காமல் தன்னுடைய அறையில் அமைதியாக படுக்கையில் அமர்ந்திருந்தார்.. வீட்டின் உள்ளே இருந்த அமைதியைக் கவனித்தவர், ‘எங்கே இருக்கிறா..?’ என்ற கேள்வியுடன் படுக்கை அறைக்குள் நுழைய அங்கே அமர்ந்திருந்த பானுமாவைப் பார்த்தும், “பானு நீ என்ன சொல்லிட்டு வந்த சங்கரனுக்கு பார்த்த பொண்ணு நம்ம லட்சுமியா..? மகிழன் தான் நம் பேரன் என்ற உண்மை உனக்கு எப்படி தெரியும்..” என்று கேள்விகளை வேகமாக அடிக்கினார்..
அவரின் கேள்விகளில் கணவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த பானுமா, “என்னிடம் ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லவே இல்ல.. மகிழன் என்னோட பேரன் என்ற விஷயம் எனக்கு இப்போ இல்ல அவன் வீட்டுக்கு வந்துவிட்டு மாறன் அழைச்சுட்டு போன போதே தெரியும்.. சரியாக சொல்ல போனால் அவன் சென்ற இரண்டு மூன்று நாளில் எனக்கு உண்மை தெரியும்..” என்று சொல்லி கணவரை வியப்பில் ஆழ்த்தினார்..
சிவராமன் ஒன்றும் புரியாமல் விழிப்பதைப் பார்த்தவரின் முகத்தைப் பார்த்தவர், “குழந்தைகள் என்றும் பொய் மட்டும் சொல்லாதுங்க.. சிலநேரத்தில் உண்மையையும் சொல்லும்..” என்று கூறியதும் மனைவியின் அருகில் சென்று அவரின் கரத்தை பற்றிய கணவனின் கைவிரலைப் பற்றிக்கொண்ட பானுமா, “என்ன கேட்டீங்க..? சங்கரனுக்கு பார்த்த பொண்ணு லட்சுமியான்னா..?” என்று கேட்டதும் பானுமாவின் கண்கள் கலங்கிவிட, “பானு என்ன இது.. உன்னோட வயசுக்கு நீ எவ்வளவு பார்த்துட்ட.. இதுக்கு எல்லாம் கண்ணு கலங்கலாமா..?” என்று கேட்டு மனைவியைத் தோளோடு சாய்த்துக் கொண்டார் சிவராமன்..!
“என்னோட மகனுக்கு நான் கெடுதல் செய்வேன் என்று அவன்தான் நினைத்துவிட்டான்.. பெரிய மகனுக்கும் சின்ன மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்ய நினைத்துதான் அவனுக்கு லட்சுமியையும், சின்னவனுக்கு சக்தியையும் பெண்பார்த்தேன்..” என்று மனதில் இருப்பதை எல்லாம் கணவரிடம் கொட்ட ஆரம்பித்தார்..
பானுமாவின் குணம் என்னவென்று அவருடன் இத்தனை நாளாக வாழ்ந்த சிவராமனுக்கு தெரியுமே.. அவள் பெண் பார்த்துவிட்டு வந்த அன்று சந்தோஷத்தில் இருந்த பானுவின் முகம் இன்றும் அவரின் மனக்கண்ணைவிட்டு நீங்காமல் இருந்தது..
சிவராமன் அமைதியாக இருக்க பானுமாவே தொடந்தார்.. “அவனோ உண்மைத் தெரியாமல் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னாலே லட்சுமியை கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிட்டு வந்துவிட்டான்.. ஊரில் எல்லோரின் முன்னிலையிலும் என்னோட மானத்தையே வாங்கிட்டாங்க.. அம்மா பார்த்த பொண்ணைக் கட்டிக்க அவனுக்கு பிடிக்கல போல.. அதன் ஓடிபோய் கல்யாணம் பண்ணிட்டான் என்று சொல்லும் பொழுது என்னோட மனசு என்ன பாடுப்பட்டிருக்கும்..” என்று கேட்டுக் கணவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார் பானுமா..
அவரின் மனதில் இருக்கும் விஷயங்களை மனதிற்குள் அடைத்து வைத்து அடைத்து வைத்து அது இன்று கணவரின் கனிவில் வெளியே வர ஆரம்பிக்க கேள்வி கேட்டு முகம் பார்க்கும் மனைவியின் தலையை வருடிவிட்டவர், “ரொம்பவே கஷ்டபட்டிருக்கும்.. அதுக்கு மகனோட முகத்தைக்கூட பார்க்காமல் ஊருவிட்டு ஊரு வரணுமா பானு..” என்று கேட்டார்..
“இப்பவும் எனக்கு அவன் மேல எந்த கோபமும் இல்லங்க.. நீங்க நினைக்கிற மாதிரி எனக்கு ஒன்னும் கல் நெஞ்சில்லை.. அவனுக்கு விருப்பப்பட்ட வாழ்க்கையை அவன் அங்கேயே வாழட்டும் என்றுதானே அந்த ஊரைவிட்டு இந்த ஊருக்கு வந்தேன்.. நான் அந்த ஊரின் மண்ணைக்கூட மிதிக்காமல் இருக்கிறேன்னு நீங்கலும் மாறனும் நினைச்சிட்டு இருக்கீங்க...” என்று சொல்ல மனைவியின் முகத்தைக் கேள்வியாகவும், குழப்பத்துடனும் பார்த்த சிவராமன், “அதுதானே உண்மை..?” என்று திகைப்புடன் கேட்டார்..
“இல்லைங்க அது உண்மை இல்ல.. நான் வருஷத்துக்கு இரண்டுமுறை பாரியூர் போவேன்.. அவனைப் பற்றிய எல்லா தகவலையும் அவர்தான் எனக்கு சொல்வாரு.. எனக்கு பேரன் பிறந்தும் எனக்கு தகவல் வந்துச்சு.. அப்புறம் அவன்தான் மாறன் மூலமாக வீட்டுக்கு வந்த விஷயமும் எனக்கு தெரியும்..” என்று தெளிவாக கூறிய பானுமாவின் முகத்தை அதிர்ச்சியுடன் பார்த்தார் சிவராமன்..
“அப்புறம் எதுக்கு பானு இந்த நாடகம்..?” என்று புரியாமல் கேட்டதும் அவரின் முகத்தில் புன்னகை அரும்ப, “என்னைப் பார்க்கும் பொழுது அவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும் இல்ல.. அதுதான் நான் அங்கிருந்து இங்கே வந்தேன்.. ஆனால் அம்மாவோட மனசு என்னன்னு இன்னும் அவனுக்கு புரியவே இல்லையே..” என்று வருத்ததுடன் கூறிய பானுமா பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்..
“மகிழனை இங்கே தூக்கிட்டு வந்து, ‘அம்மா இந்தாங்க உங்களோட பேரனை பாருங்க..’ என்றவன் சொல்லவே இல்லையே.. என்னை என்ன கொடுமைக்காரி என்றே நினைத்துவிடானா..?” என்று கேட்டதும் சிவராமனுக்கு இருந்த குழப்பங்கக் அதிகமாக ஆகிவிட, “அப்போ மகிழன் உன்னிடம் உண்மையைச் சொன்னானா..?” என்று குழப்பத்துடன் கேட்டார்..
அவரின் குழப்பத்தைக் கண்ட பானுமா, “அவனோட அம்மா, அப்பா பற்றிதான் அவன் அதிகமாக என்னிடம் சொல்வான்.. அவங்களோட மனசில என்ன இருக்கு..எதுக்காக நான் இங்கே வந்தேன்னு எல்லா உண்மையையும் சொல்வான்.. விவரம் தெரியாத வயசியில்லையா..? அதனால அவன் சொல்வதை எல்லாம் அமைதியாக கேட்டுடே இருப்பேன்..” என்று சொல்லிவிட்டு எதையோ நினைத்து சிரித்த பானுமாவின் உணர்வுகளைப் பார்த்தவர், “அந்த கடிதம்..?” என்று சந்தேகமாகக் கேட்டார்..
“அந்த கடிதம் உங்களை எல்லாம் கண்காணிக்க நானே எனக்கு எழுதியது எப்படி..?” என்று சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரித்த பானுவைப் பார்த்த சிவராமனுக்கு இருந்த சந்தேகம் எல்லாம் மாறிவிட வாய்விட்டுச் சிரித்தவர், “இந்த வயசிலும் உன்னோட குறும்புத்தனம் மாறவே இல்ல.. எங்களை எல்லாம் சுத்தலில் விட்டுவிட்டு மேடம் இங்கே நிம்மதியாக வளருகூட விளையாட்டிட்டு ரொம்ப சந்தோசமாக இருந்திருக்கிற..” என்று கூறியவருக்கு மீண்டும் சந்தேகம் துளிர்க்க மனைவியின் முகத்தை கேள்வியுடன் பார்த்தார்..