அத்தியாயம் – 28
வானில் நிலவு உலா வருவதைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்த வளரின் மனமோ அவனின் வீட்டைக்கண்டு அதிர்ந்திருந்தது.. அவனின் வீட்டைப் பார்த்ததும் அவளின் மனதில் தோன்றிய விஷயம், ‘இவ்வளவு சொத்துக்கு சொந்தகாரனாக இருக்கும் இவன் எதுக்கு மேனேஜர் வேலைக்கு வரணும்.. அதுவும் பானுமா வீட்டிற்கு ஏன் வரணும்..’ என்று தனக்குள் கேள்வி கேட்டபடியே அமைதியாக அமர்ந்திருந்தாள்..
அவளின் மனம் சிந்தனையில் இருக்க அதில் சந்தேகத்தின் விதைகள் துளிர்விட ஆரம்பிக்க தன்னைச் சுற்றிலும் இருக்கும் பசுமை அவளின் மனதில் பதியவே இல்லை.. ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவளின் புருவங்கள் இரண்டும் முடிச்சிட அமைதியாக அமர்ந்திருந்தவளின் அமைதியை உணர்ந்த மகிழனோ, “வளரு என்ன அமைதியாக இருக்கிற.. இந்த வீடு உனக்கு பிடிச்சிருக்கா..?” என்று கேட்டபடியே அவளின் முகத்தைப் பார்த்தான்..
“என்ன ரொம்ப அமைதியாக இருக்கிற..?” என்று கேட்டபடியே அவளின் அருகில் அமர்ந்தான் மகிழன்.. அவளோ யோசித்தபடியே திரும்பிப் பார்க்க அங்கே இருந்த மகிழம்பூ மரத்தைப் பார்த்தவளின் மனதில் ஏதேதோ நினைவுகள் வந்து சென்றது.. அவனை சந்தித்த நாள் முதலாக நடந்த விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தாள்.. அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்த வளரின் முகத்தையே பார்த்தவன், ‘இந்த நேரத்தில இவளுக்கு என்ன சிந்தனை..?’ என்று நினைத்தவனின் கைகள் அவளின் இடையோடு பதிய திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் துளிர்நிலா..
அவளின் விழிகளை அவன் இமைக்காமல் பார்க்க அவனின் பார்வைத் தாங்கியபடியே அவனை இமைக்காமல் பார்த்தாள் வளர்மதி.. அங்கே வார்த்தை பரிமாறலுக்கு இடம் இல்லாமல் போகவே அவளின் விழியில் இருந்தே அவளின் மனதைப்படித்த மகிழன், “என்னடா இவனோட வீடு பானுமாவின் வீடு போலவே இருக்கு என்று யோசிச்சிட்டு இருக்கிற..??” என்றவன் கேட்டதும் இல்லையென தலையசைத்தவள், “இத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசான நீங்க எதுக்கு அந்த வீட்டுக்கு மேனேஜராக வந்தீங்க என்று யோசிச்சிட்டு இருக்கேன்..” என்று நிதானமாக அவனின் முகம் பார்த்து கூறியவள் இடையில் இருந்த அவனின் கரத்தை எடுத்துவிட்டு எழுந்து நின்றாள்..
அவளிடம் இருந்து இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காத மகிழன், “உனக்கு என்னடி ஆச்சு.. எதுக்கு இப்படி எல்லாம் பேசற..?” என்று கேட்டதும், “நான் என்ன வேண்டும் என்ற பேசறேன்.. இங்க என்னை சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியாமல் இத்தனை நாளும் பைத்தியமாக இருந்த என்னோட முட்டாள் தனத்தை எண்ணி பேசிட்டு இருக்கேன்..” என்றவள் சொல்ல அவளின் பேச்சில் இருந்த மாற்றம் உணர்ந்த மகிழனின் முகம் கோபத்தில் செந்தணலாக மாறியது..
“இந்த சந்தேகம் மட்டும் இருக்குதா..? இல்ல இன்னும் வேற எதாவது சந்தேகம் லிஸ்ட்ல வருமா..?” என்று கோபத்துடனே கேட்டான்.. அவனின் குரலில் இருந்த எரிச்சலை உணர்ந்த வளர்மதி ஏதோபேச வாயெடுத்த வளர்மதி வாசலில் யாரோ வந்து நிற்க யாரென்று திரும்பிப் பார்த்தாள்.. மகிழனுக்கு அதுவரை இருந்த இதம் போன இடம் தெரியாமல் ஓடிமறைய தன்னுடைய கோபத்தை அடைக்கியபடியே அமைதியாக இருக்க முயற்சி செய்துக்கொண்டிருக்க “மகிழா..” என்றழைக்கும் சத்தம் கேட்டதும் வாயிலின் பக்கம் திரும்பிப் பார்த்தான் மகிழன்..
வீட்டின் முன்வாசலில் நின்றிருந்த சிவசங்கரனையும், ஜெயலட்சுமியையும் பார்த்த வளர்மதி, ‘இவங்களை எங்கோ பார்த்த மாதிரியே இருக்கே..’ என்று யோசித்தபடியே தன்னுடைய சிந்தனையை ஓடவிட, “அம்மா, அப்பா உள்ளே வாங்க.. ஏன் வாசலில் நிற்கிறீங்க..?” என்றுகேட்டு வளரை அதிர்ச்சியில் ஆழ்த்தினான் மகிழன்.. அவன் சொன்னதைக்கேட்ட வளர்மதி, ‘இவனுக்கு அப்பா, அம்மா இருக்காங்களா..? இவர் என்னிடம் எதையுமே சொல்லல..’ என்று நினைத்தவள் அதிர்ச்சியில் மயங்கிச்சரிய வீட்டின் உள்ளே நுழைந்த லட்சுமி அதை பார்த்துவிட்டார்..
“டேய் வளரு மயக்கம்போட்டு விழுகிறாள் பாருடா..” என்று சொல்ல வேகமாகத் திரும்பிய மகிழன் எழுந்து அவள் மயங்கிச்சரியும் முன்னே அவளைத் தாங்கிப்பிடித்து, “துளிரு.. ஏய் துளிரு..” என்று கன்னத்தைத் தட்டினான்.. அவள் விழிக்களைத் திறக்காமல் இருக்க அவனின் கோபம் எல்லாம் மறந்து போக தன்னுடைய முட்டாள்தனத்தை என்னை தனக்குள் நொந்து போனவன் அவளை இருக்கரத்திலும் தூக்கிக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்ததும் சிவசங்கரன், “அவளுக்கு அதிர்ச்சி தருகிற மாதிரி அவளிடம் என்ன சொன்னா..?” என்று கேட்டதுக்கு எல்லாம் அவனிடம் பதில் இல்லாமல் போகவே வீட்டின் உள்ளே சென்னு தண்ணீரை எடுத்து வந்தார் லட்சுமி..
‘ஐயோ வந்த முதல் நாளில் இருந்தா எங்க பிரச்சனை ஆரம்பமிக்கணும்..’ என்று மனதிற்குள் புலம்பியபடியே அவளைத் தூக்கிச்சென்று தன்னுடைய அறையில் படுக்கவைத்தான்..அவளின் முகத்தைப் பார்த்துக்கொண்டே அவளின் அருகில் அமர்ந்திருந்த மகனின் முகத்தில் இருந்தே, ‘இருவருக்குள் ஏதோ சண்டை என்று உணர்ந்த லட்சுமி கணவனிடம், ‘அவனிடம் பேசுங்க..’ என்று சைகை செய்தார்..
“அவளிடம் உண்மைச் சொல்லிட்டியா மகிழா..” என்று சந்தேகமாகக் கேட்டதும் இல்லையென தலையசைத்தவன், “நான் எதுவுமே சொல்லலப்பா.. சும்மா பேசிட்டு இருந்தோம்.. அதுக்குள்ள ஏதோ அதிர்ச்சியில் மயக்கம்போட்டு விழுந்துட்டாப்பா..” என்று பெற்றோரை சமாளித்தான்.. அவன் சொல்வது பொய் என்று தெரிந்தும் அவனை மேலும் கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்தார்..
அதற்குள் வளரின் அருகில் வந்த லட்சுமி அவளின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து கண்கள் இரண்டையும் துடைத்துவிட மெல்ல கண்விழித்தவள் சுற்றிலும் பார்வையைச் சுழலவிட்டாள்.. அவனின் பார்வை முழுவதும் அவளின் மீதிருக்க வளர்மதியோ மகிழனின் முகத்தை ஆழ்ந்துப் பார்க்க அது கலையிளைந்து போயிருந்தது.. அதில் அவளின் மனதிலும் கொஞ்சம் வலி ஏற்பட உதட்டைக் கடித்துக்கொண்டு தலையைக்குனிந்தாள்..
‘எனக்கு எதுக்கு இந்த சந்தேகம் வந்துச்சு..’ என்று தனக்குதானே கேட்டவள் திரும்பிப் பார்க்க அங்கே லட்சுமியும், சங்கரனும் இருப்பதைப் பார்த்தவள் மற்ற விஷங்களை ஒதுக்கிவிட்டு எழுந்து அமர்ந்தவளின் முகத்தைப் பார்த்த மகிழன், “வளரு இப்போ பரவல்லையா..?” என்று கேட்டதும் புன்னகையுடன் தலையசைத்தாள்.. அவளின் மலர்ந்த முகம் பார்த்த மகிழன் மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது..
“வாங்க மாமா.. வாங்க அத்தை..” என்று சொல்ல அவர்களின் முகத்திலும் நிம்மதி பரவுவதை உணர்ந்த வளர்மதி, “என்ன அத்தை ரொம்ப பயந்துட்டீங்களா.. வெளியே மகிழம்பூ மரம் இருக்கில்ல.. அதை பார்த்ததும் எனக்கு எங்க வீட்டு நினைவு வந்திருச்சு.. பானுமா வீட்டில் அந்த மரத்துக்கு நான்தான் தண்ணீர் விடுவேன்..” என்றவள் இயல்பாக இருவரிடமும் பேசியதும் அவர்களின் முகத்தில் தெளிவு வருவதைக் கவனித்த மகிழன், ‘இவளோட மனசில இருந்த சந்தேகம் எல்லாம் இப்போ எங்க போச்சு.. இவ இயல்பாக பேசறாளே..’ என்றவன் யோசித்தபடியே அவளை இமைக்காமல் பார்த்தான்..
“என்னையே ஏமாற்றி நீங்க சொன்னதுபோல ஊருவிட்டு ஊரு கடத்திட்டு வந்துட்ட இல்ல..” என்றவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவனின் முகத்தில் இருந்த குறும்பு புன்னகையைப் பார்த்தவன் ஏதோ சொல்லும் முன்னே, “நீங்க பேசிட்டு இருங்க.. நான் சாப்பாட்டை எடுத்துவெச்சிட்டு வரேன்..” என்று சொல்லிய லட்சுமி கணவனுக்கு சைகை செய்துவிட்டு வெளியே சென்றனர்.. அவரும் லட்சுமியின் பின்னோடு அறையைவிட்டு வெளியே சென்றார்..
எனது துளிரும் நிலவே
உன் மனதில் சந்தேகத்தின் துளிரா..?
சந்தேகம் வந்தால் என்னிடம்
வாய்விட்டு கேளடி பெண்ணே..
இதுவரை இருந்த சந்தோஷம்
எல்லாம் நொடியில் மறைவதைப்
போல ஒரு எண்ணமடி!
இது நிஜம்தானா சொல்லடி..
வானில் நிலவு உலா வருவதைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்த வளரின் மனமோ அவனின் வீட்டைக்கண்டு அதிர்ந்திருந்தது.. அவனின் வீட்டைப் பார்த்ததும் அவளின் மனதில் தோன்றிய விஷயம், ‘இவ்வளவு சொத்துக்கு சொந்தகாரனாக இருக்கும் இவன் எதுக்கு மேனேஜர் வேலைக்கு வரணும்.. அதுவும் பானுமா வீட்டிற்கு ஏன் வரணும்..’ என்று தனக்குள் கேள்வி கேட்டபடியே அமைதியாக அமர்ந்திருந்தாள்..
அவளின் மனம் சிந்தனையில் இருக்க அதில் சந்தேகத்தின் விதைகள் துளிர்விட ஆரம்பிக்க தன்னைச் சுற்றிலும் இருக்கும் பசுமை அவளின் மனதில் பதியவே இல்லை.. ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவளின் புருவங்கள் இரண்டும் முடிச்சிட அமைதியாக அமர்ந்திருந்தவளின் அமைதியை உணர்ந்த மகிழனோ, “வளரு என்ன அமைதியாக இருக்கிற.. இந்த வீடு உனக்கு பிடிச்சிருக்கா..?” என்று கேட்டபடியே அவளின் முகத்தைப் பார்த்தான்..
“என்ன ரொம்ப அமைதியாக இருக்கிற..?” என்று கேட்டபடியே அவளின் அருகில் அமர்ந்தான் மகிழன்.. அவளோ யோசித்தபடியே திரும்பிப் பார்க்க அங்கே இருந்த மகிழம்பூ மரத்தைப் பார்த்தவளின் மனதில் ஏதேதோ நினைவுகள் வந்து சென்றது.. அவனை சந்தித்த நாள் முதலாக நடந்த விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தாள்.. அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்த வளரின் முகத்தையே பார்த்தவன், ‘இந்த நேரத்தில இவளுக்கு என்ன சிந்தனை..?’ என்று நினைத்தவனின் கைகள் அவளின் இடையோடு பதிய திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் துளிர்நிலா..
அவளின் விழிகளை அவன் இமைக்காமல் பார்க்க அவனின் பார்வைத் தாங்கியபடியே அவனை இமைக்காமல் பார்த்தாள் வளர்மதி.. அங்கே வார்த்தை பரிமாறலுக்கு இடம் இல்லாமல் போகவே அவளின் விழியில் இருந்தே அவளின் மனதைப்படித்த மகிழன், “என்னடா இவனோட வீடு பானுமாவின் வீடு போலவே இருக்கு என்று யோசிச்சிட்டு இருக்கிற..??” என்றவன் கேட்டதும் இல்லையென தலையசைத்தவள், “இத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசான நீங்க எதுக்கு அந்த வீட்டுக்கு மேனேஜராக வந்தீங்க என்று யோசிச்சிட்டு இருக்கேன்..” என்று நிதானமாக அவனின் முகம் பார்த்து கூறியவள் இடையில் இருந்த அவனின் கரத்தை எடுத்துவிட்டு எழுந்து நின்றாள்..
அவளிடம் இருந்து இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காத மகிழன், “உனக்கு என்னடி ஆச்சு.. எதுக்கு இப்படி எல்லாம் பேசற..?” என்று கேட்டதும், “நான் என்ன வேண்டும் என்ற பேசறேன்.. இங்க என்னை சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியாமல் இத்தனை நாளும் பைத்தியமாக இருந்த என்னோட முட்டாள் தனத்தை எண்ணி பேசிட்டு இருக்கேன்..” என்றவள் சொல்ல அவளின் பேச்சில் இருந்த மாற்றம் உணர்ந்த மகிழனின் முகம் கோபத்தில் செந்தணலாக மாறியது..
“இந்த சந்தேகம் மட்டும் இருக்குதா..? இல்ல இன்னும் வேற எதாவது சந்தேகம் லிஸ்ட்ல வருமா..?” என்று கோபத்துடனே கேட்டான்.. அவனின் குரலில் இருந்த எரிச்சலை உணர்ந்த வளர்மதி ஏதோபேச வாயெடுத்த வளர்மதி வாசலில் யாரோ வந்து நிற்க யாரென்று திரும்பிப் பார்த்தாள்.. மகிழனுக்கு அதுவரை இருந்த இதம் போன இடம் தெரியாமல் ஓடிமறைய தன்னுடைய கோபத்தை அடைக்கியபடியே அமைதியாக இருக்க முயற்சி செய்துக்கொண்டிருக்க “மகிழா..” என்றழைக்கும் சத்தம் கேட்டதும் வாயிலின் பக்கம் திரும்பிப் பார்த்தான் மகிழன்..
வீட்டின் முன்வாசலில் நின்றிருந்த சிவசங்கரனையும், ஜெயலட்சுமியையும் பார்த்த வளர்மதி, ‘இவங்களை எங்கோ பார்த்த மாதிரியே இருக்கே..’ என்று யோசித்தபடியே தன்னுடைய சிந்தனையை ஓடவிட, “அம்மா, அப்பா உள்ளே வாங்க.. ஏன் வாசலில் நிற்கிறீங்க..?” என்றுகேட்டு வளரை அதிர்ச்சியில் ஆழ்த்தினான் மகிழன்.. அவன் சொன்னதைக்கேட்ட வளர்மதி, ‘இவனுக்கு அப்பா, அம்மா இருக்காங்களா..? இவர் என்னிடம் எதையுமே சொல்லல..’ என்று நினைத்தவள் அதிர்ச்சியில் மயங்கிச்சரிய வீட்டின் உள்ளே நுழைந்த லட்சுமி அதை பார்த்துவிட்டார்..
“டேய் வளரு மயக்கம்போட்டு விழுகிறாள் பாருடா..” என்று சொல்ல வேகமாகத் திரும்பிய மகிழன் எழுந்து அவள் மயங்கிச்சரியும் முன்னே அவளைத் தாங்கிப்பிடித்து, “துளிரு.. ஏய் துளிரு..” என்று கன்னத்தைத் தட்டினான்.. அவள் விழிக்களைத் திறக்காமல் இருக்க அவனின் கோபம் எல்லாம் மறந்து போக தன்னுடைய முட்டாள்தனத்தை என்னை தனக்குள் நொந்து போனவன் அவளை இருக்கரத்திலும் தூக்கிக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்ததும் சிவசங்கரன், “அவளுக்கு அதிர்ச்சி தருகிற மாதிரி அவளிடம் என்ன சொன்னா..?” என்று கேட்டதுக்கு எல்லாம் அவனிடம் பதில் இல்லாமல் போகவே வீட்டின் உள்ளே சென்னு தண்ணீரை எடுத்து வந்தார் லட்சுமி..
‘ஐயோ வந்த முதல் நாளில் இருந்தா எங்க பிரச்சனை ஆரம்பமிக்கணும்..’ என்று மனதிற்குள் புலம்பியபடியே அவளைத் தூக்கிச்சென்று தன்னுடைய அறையில் படுக்கவைத்தான்..அவளின் முகத்தைப் பார்த்துக்கொண்டே அவளின் அருகில் அமர்ந்திருந்த மகனின் முகத்தில் இருந்தே, ‘இருவருக்குள் ஏதோ சண்டை என்று உணர்ந்த லட்சுமி கணவனிடம், ‘அவனிடம் பேசுங்க..’ என்று சைகை செய்தார்..
“அவளிடம் உண்மைச் சொல்லிட்டியா மகிழா..” என்று சந்தேகமாகக் கேட்டதும் இல்லையென தலையசைத்தவன், “நான் எதுவுமே சொல்லலப்பா.. சும்மா பேசிட்டு இருந்தோம்.. அதுக்குள்ள ஏதோ அதிர்ச்சியில் மயக்கம்போட்டு விழுந்துட்டாப்பா..” என்று பெற்றோரை சமாளித்தான்.. அவன் சொல்வது பொய் என்று தெரிந்தும் அவனை மேலும் கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்தார்..
அதற்குள் வளரின் அருகில் வந்த லட்சுமி அவளின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து கண்கள் இரண்டையும் துடைத்துவிட மெல்ல கண்விழித்தவள் சுற்றிலும் பார்வையைச் சுழலவிட்டாள்.. அவனின் பார்வை முழுவதும் அவளின் மீதிருக்க வளர்மதியோ மகிழனின் முகத்தை ஆழ்ந்துப் பார்க்க அது கலையிளைந்து போயிருந்தது.. அதில் அவளின் மனதிலும் கொஞ்சம் வலி ஏற்பட உதட்டைக் கடித்துக்கொண்டு தலையைக்குனிந்தாள்..
‘எனக்கு எதுக்கு இந்த சந்தேகம் வந்துச்சு..’ என்று தனக்குதானே கேட்டவள் திரும்பிப் பார்க்க அங்கே லட்சுமியும், சங்கரனும் இருப்பதைப் பார்த்தவள் மற்ற விஷங்களை ஒதுக்கிவிட்டு எழுந்து அமர்ந்தவளின் முகத்தைப் பார்த்த மகிழன், “வளரு இப்போ பரவல்லையா..?” என்று கேட்டதும் புன்னகையுடன் தலையசைத்தாள்.. அவளின் மலர்ந்த முகம் பார்த்த மகிழன் மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது..
“வாங்க மாமா.. வாங்க அத்தை..” என்று சொல்ல அவர்களின் முகத்திலும் நிம்மதி பரவுவதை உணர்ந்த வளர்மதி, “என்ன அத்தை ரொம்ப பயந்துட்டீங்களா.. வெளியே மகிழம்பூ மரம் இருக்கில்ல.. அதை பார்த்ததும் எனக்கு எங்க வீட்டு நினைவு வந்திருச்சு.. பானுமா வீட்டில் அந்த மரத்துக்கு நான்தான் தண்ணீர் விடுவேன்..” என்றவள் இயல்பாக இருவரிடமும் பேசியதும் அவர்களின் முகத்தில் தெளிவு வருவதைக் கவனித்த மகிழன், ‘இவளோட மனசில இருந்த சந்தேகம் எல்லாம் இப்போ எங்க போச்சு.. இவ இயல்பாக பேசறாளே..’ என்றவன் யோசித்தபடியே அவளை இமைக்காமல் பார்த்தான்..
“என்னையே ஏமாற்றி நீங்க சொன்னதுபோல ஊருவிட்டு ஊரு கடத்திட்டு வந்துட்ட இல்ல..” என்றவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவனின் முகத்தில் இருந்த குறும்பு புன்னகையைப் பார்த்தவன் ஏதோ சொல்லும் முன்னே, “நீங்க பேசிட்டு இருங்க.. நான் சாப்பாட்டை எடுத்துவெச்சிட்டு வரேன்..” என்று சொல்லிய லட்சுமி கணவனுக்கு சைகை செய்துவிட்டு வெளியே சென்றனர்.. அவரும் லட்சுமியின் பின்னோடு அறையைவிட்டு வெளியே சென்றார்..